முத்தொள்ளாயிரம் - வரியா ? திருட்டா?
முத்தொள்ளாயிரத்தில் உள்ள பாடல்கள் எல்லாம் மிக மிக இனிமையான பாடல்கள்.
காதலை மிக அழகாக சொல்லும் பாடல்கள்.
இங்கே ஒரு பெண் தன் தோழியிடம் கூறுகிறாள்....
அரசன் என்பவன் தன் குடி மக்களிடம் ஆறில் ஒரு பங்கைத்தானே வரியாக வாங்க வேண்டும்...
ஆனால் இந்த மன்னனோ என் மனமும், என் நாணத்தையும், என் பெண் நலன்கள் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டானே..இது எந்த விதத்தில் தர்மம் என்று கேட்கிறாள்.