கம்ப இராமாயணம் - கற்பு என்றால் கல்வியா ?
முந்திய Blog இல் "கற்பழிக்க திருவுள்ளமே" என்ற திரு ஞானசம்பந்தரின் பாடல் வரிகளில் கற்பு என்பதற்கு கல்வி என்று ஒரு பொருளும் உண்டு என்று பார்த்தோம்.
அந்த பொருளில் வேறு எங்காவது அதை உபயோகப் படுத்தி இருக்கிறார்களா ?
கம்ப இராமாயணத்தில் ஒரு இடம்.
இராமனும், இலக்குவனும் கிட்கிந்தா மலை மேல் வருகிறார்கள்.
தூரத்தில் இருந்து அனுமன் பார்க்கிறான்.
இவர்களைப் பார்த்தால் போர் செய்வதை தொழிலாகக் கொண்டவர் போல் இருக்கிறது, ஆனால் அவர்கள் மேனியோ தவ புரியும் முனிவர்கள் போல் இருக்கிறது, கையிலோ வில் இருக்கிறது, என்று மனம் குழம்பி, மறைந்து நின்று, தன் அறிவால் ஆராய்ந்து பார்த்தான்.
இங்கு கற்பு என்பது "கல்வி", "அறிவு", "ஞானம்" என்ற பொருளில் வருகிறது.
பாடல்