Showing posts with label எதைப் படிப்பது. Show all posts
Showing posts with label எதைப் படிப்பது. Show all posts

Saturday, June 30, 2012

நாலடியார் - எதைப் படிப்பது?


நாலடியார் - எதைப் படிப்பது?


எதைப் படிப்பது, எவ்வளவு படிப்பது, எதை படிக்காமல் விடுவது, 

எல்லாவற்றையும் படிக்க முடியுமா ? போன்ற குழப்பங்கள் நமக்கு இருக்கும்.
எத்தனை ஆயிரம் புத்தகங்கள், வலை தளங்கள்...அனைத்தையும் படித்து மாளுமா ?

இந்த குழப்பம் இன்று வந்ததில்லை, நாலடியார் எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது. 

"படிக்க வேண்டியதோ கடல் போல் இருக்கிறது. படிக்க கிடைத்த நாட்களோ கொஞ்சம் தான். அந்த குறைந்த நாட்களிலும் ஆயிரம் தடங்கல்கள்.

எனவே, படிக்க வேண்டியதை ஆராய்ந்து, தெரிந்து எடுத்து படிக்க வேண்டும், நீரில் இருந்து பாலை பிரித்து உண்ணும் அன்னம் போல்"