Showing posts with label கோவில் திருவெண்பா. Show all posts
Showing posts with label கோவில் திருவெண்பா. Show all posts

Friday, November 22, 2013

கோவில் திருவெண்பா - ஐயாறு வாயாறு

கோவில் திருவெண்பா - ஐயாறு வாயாறு


மூப்பு.

மனிதனை மாற்றி  போடும் காலத்தின்  கணக்கு.எல்லாம் என்னால் முடியும், என்னால் முடியாதது என்ன என்று இறுமார்த்திருக்கும் மனிதனை பார்த்து சிரிக்கும் காலத்தின் சிரிப்பு மூப்பு....

நரை வந்து, இருமி, உடல் வளைந்து, தோல் சுருங்கி, பல் விழுந்து, கண் பார்வை மங்கி....

மனிதனின் ஆணவம் வடியும் இடம்....

மனிதனின் ஆற்றலை வரையறுக்கும் இடம் ...முதுமை.


குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.


குந்தி நடந்து = நாலு அடி தொடர்ந்து நடக்க முடியாது. மூச்சு வாங்கும். கொஞ்சம்  தரையில் அமர்ந்து (குந்தி) பின் நடந்து , பின் அமர்ந்து...

குனிந்தொருகை கோலூன்றி = நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் போய்  உடல் வழிந்து, ஒரு கை கோலைப் பற்றி


நொந்திருமி = நொந்து, இருமி....நெஞ்சு வலிக்கும் இருமி இருமி

ஏங்கி = மூச்சு விடக் கூட கஷ்டப் பட்டு ....

நுரைத்தேறி = நுரை ஏறி


வந்துந்தி = வந்து உந்தி. உந்துதல் என்றால் தள்ளுதல். எது உந்தி வரும் ?


ஐயாறு = "ஐ" என்றால் வாந்தி. அல்லது எச்சில் 

வாயாறு = வாயில் இருந்து ஆறாகப்

பாயாமுன் = பாயும்முன்

நெஞ்சமே

ஐயாறு =  ஐயாறு என்றால் திருவையாறு . அந்த ஊரில் உள்ள சிவனை அல்லது அந்த ஊரின் பெயரையே

வாயால் அழை.= வாயால் அழை

வாயில் வாந்தி வரும், எச்சில் ஒழுகும்...அப்போது நாக்கு குழறும்...சொல்ல வேண்டும்  என்று நினைத்தால் கூட வார்த்தை வராது....


ஐயாரா  என்று அழைத்து வையுங்கள்...ஐயாறு வாயாறு பாயும்முன்