Showing posts with label நள வெண்பா. Show all posts
Showing posts with label நள வெண்பா. Show all posts

Thursday, September 28, 2023

நள வெண்பா - முன்செல் அடி

நள வெண்பா - முன்செல் அடி 


இறைவன் எப்படா, யாருடா நம்மை உதவிக்கு கூப்பிடுவார்கள் என்று காத்து இருப்பானாம். 


கூப்பிட்டவுடன் ஓடிச் சென்று உதவி செய்ய வேண்டுமே என்று. 


கூப்பிட்ட பின், இதோ வருகிறேன் என்று எழுந்து, முகம் கை கால் கழுவி, உடை மாற்றி, வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்புவதற்குள் ஆபத்து பெரிதாகி துன்பம் அதிகரித்து விடலாம் அல்லவா?  


தீயணைக்கும் படை எந்நேரமும் தயாராக இருப்பது போல, இறைவன் தயாராக இருப்பானாம். 


புகழேந்தி இன்னும் ஒரு படி மேலே போகிறார். 


கூப்பிட பின் சென்று உதவி செய்வது என்ன பெரிய காரியம். சாதாரண மனிதர்கள் கூடச் செய்வார்கள். அவர்களுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் இல்லையா?


கூப்பிடுவதற்கு முன்னே செல்வானாம். 


முதலிலேயே கிளம்பி விடுவான். இன்னாருக்கு, இந்த இடத்தில் உதவி தேவை என்று அங்கே செல்ல ஆரம்பித்து விடுவான். அவர்களுகுக் கூடத் தெரியாது, உதவி தேவைப்படும் என்று. 


ஆபத்து,உதவி என்று கூப்பிட்டவுடன், உடனே அங்கு வந்து நிப்பான். 


முதலை காலைக் கவ்வியபோது, கஜேந்திரன் என்ற யானை ஆதிமூலமே என்று அலறியபோது, பெருமாள் அங்கு வந்து அதைக் காப்பாற்றினார். யானை கூப்பிட்டபின் வைகுந்தத்தில் இருந்து கிளம்பினால், என்று வந்து சேர்வது? அதற்குள் முதலை அந்த யானையை கொன்றுவிடாதா?


பாடல் 


 முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்

செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்

புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்

அழைக்கைக்கு முன்செல் அடி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post_28.html


(pl click the above link to continue reading)


முந்தை = முந்தைய, பழைய 


மறைநூல் =  வேத நூல்களின் 


முடியெனலாம் = முடிவான அர்த்தம் என்று சொல்லலாம் 


 தண் = தண்மையான , குளிர்ச்சியான 


குருகூர்ச் = திருக்குருகூர் என்ற தலத்தில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச்செய்த 

 

செந்தமிழ் = செந்தமிழ் 


வேத  = வேதமான பிரபந்தத்தின் 


சிரமெனலாம் = தலை என்று கூறலாம் 


 நந்தும் = துன்பத்தில் ஆட்பட்ட, ஆபத்தில் இருந்த 


புழைக்கைக்கும்  = யானைக்கும் (புழை = குழாய், குழாய் போன்ற கையை உடைய) 


நேயப் = அன்பு கொண்ட 


பொதுவர் = ஆயர் குல 


மகளிர்க்கும் = பெண்களுக்கும் 


அழைக்கைக்கு = அழைப்பதற்கு 


 முன் = முன் 


செல் அடி = சென்ற திருவடிகள் 


திருமாலின் திருவடிகளை நான்கு விதமாக சிறப்பிக்கிறார்.


வேதத்தின் முடிவு 

பிரபபந்தத்தின் தலை 

யானைக்கும் 

ஆயர் குல பெண்களுக்கும் அழைப்பதற்கு முன்சென்ற 


திருவடி என்று. 


மறை நூல் = மறைவாக இருக்கும் நூல். மிக நுண்ணிய பொருள் கொண்டது. எளிதில் விளங்காது. பொருள் மறைந்து இருக்கும். எனவே மறை நூல். 


அவ்வளவு உயர்ந்த திருவடி யானைக்கும், ஆயர் குல பெண்களுக்கும் கூப்பிடு முன்னே ஓடிச் சென்றது. 


"ஏழை பங்காளனை பாடுதும் காண் அம்மானாய் "


என்பார் மணிவாசகர். 


அவ்வளவு பெரிய இறைவன், இவ்வளவு எளிமையாக இருக்கிறான் என்றவாறு. 


இனிமையான அர்த்தம். அழகான பாடல் வடிவம். 


பால் பாயாசம் சாப்பிடும் போது  வாயில் சிக்கும்  நெய்யில் வறுத்த முந்திரி மாதிரி அப்படி ஒரு சுவை. 


 

Tuesday, June 1, 2021

நள வெண்பா - பெண்மை அரசு

நள வெண்பா - பெண்மை அரசு 


இனி வரும் நாட்களில் பெண்மை என்று ஒரு குணம் இருந்ததாகவும், அந்தக் குணம் பெண்களிடம் இருந்ததாகவும் வரலாற்று புத்தகங்களில் காணலாம்.  பெண்மை என்றால் ஏதோ அடிமைத்தனம் என்ற எண்ணம் பெண்களுக்கு வந்து விட்டது. எப்படியாது இந்தப் பெண் தன்மையை விட்டு ஒழிக்க வேண்டும் என்று பாடு படுகிறார்கள். 


ஆண்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ அவற்றை தாங்களும் செய்வோம் என்று பெண்கள் ஆண்மையை ஏற்றுக் கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். 


நாங்களும் தண்டால், குஸ்தி போடுவோம், பளு தூக்குவோம், படையில், போலீஸ் வேலையில் சேர்வோம், பிள்ளைகளை பார்க்க மாட்டோம் என்று ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டு இருக்கிறது. 


அது தவறா, சரியா என்று காலம்தான் சொல்ல வேண்டும். 


அந்தக் காலத்தில், 


தமயந்தி இருந்தாள். அவள் எப்படி இருந்தாள் என்று ஒரு அன்னப் பறவை நள  மன்னனிடம் கூறுகிறது. 


"பெண்மை" என்ற அரசை ஆண்டாளாம்.


அது என்ன அரசு?


"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் நான்கு படைப் பிரிவுகளாக, ஐந்து புலன்களும் அமைச்சர்களாக இருந்து அறிவு புகட்ட, காலில் அணிந்த சிலம்பு முரசாக ஒலிக்க, கண்கள் இரண்டும் வேல் மற்றும் வாள் என்ற ஆயுதமாக இருக்க, நிலவு போன்ற குளிர்ந்த முகம் வெண் கொற்றக் குடையாக இருக்க, பெண்மை என்ற அரசை அவள் ஆண்டாள்" என்கிறார் புகழேந்தி. 


பாடல் 


 நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா

ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்

வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்

ஆளுமே பெண்மை அரசு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post.html


(Please click the above link to continue reading)


நாற்குணமும்  = அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் 


நாற்படையா  = நான்கு படைகளாக (இரதம், யானை, குதிரை, காலாட் படை) 


ஐம்புலனும் = ஐந்து புலன்களும் 


நல்லமைச்சா = நல்ல அமைச்சர்களாக இருந்து வழி காட்ட 


ஆர்க்கும் சிலம்பே = ஒலிக்கும் சிலம்பே  (கொலுசு) 


அணிமுரசா = முரசமாக ஒலிக்க 


வேற்படையும் = வேல் படையும் 


வாளுமே  = வாள் படையும் 


கண்ணா  = இரண்டு கண்களாக 


வதன = முகம் 


மதிக் = சந்திரன், நிலவு 


குடைக்கீழ் = வெண் கொற்றக் குடைக் கீழ் 


ஆளுமே பெண்மை அரசு. = பெண்மை என்ற அரசை ஆண்டு கொண்டிருந்தாள் 


நல்ல காலம் புகழேந்தி எழுதி வைத்தார். 


Friday, May 1, 2020

நள வெண்பா - நெஞ்சும் போயிற்று

நள வெண்பா - நெஞ்சும் போயிற்று 


பிள்ளை உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும். தாய் வெளியே யாரிடமோ பேசிக் கொண்டிருப்பாள், அல்லது தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருப்பாள். அந்த சமயத்தில் பிள்ளைக்கு ஏதோ உபாதையில் குழந்தை லேசாக நெளியும், அல்லது இருமும் அல்லது தும்மும்...உடனே தாய் ஓடிப் போய் பார்ப்பாள். அது எப்படித்தான் தெரியுமோ? அவள் எங்கே இருந்தாலும், அவள் மனம் பிள்ளையின் பக்கத்திலேயே இருக்கும்.

கணவன் வெளியூர் போயிருப்பான். போன இடத்தில் ஏதோ கொஞ்சம் உடல் நிலை சரி இல்லாமல் போயிருக்கும். இங்கு, மனைவிக்கு மனசு என்னமோ செய்யும். அவருக்கு என்னமோ என்று கிடந்து தவிப்பாள். அங்கே அவருக்கு ஒன்று என்றால், இங்கே இவளுக்கு எப்படித் தெரியும். உடல் இங்கே இருக்கிறது. மனம் அவன் கூடவே போகிறது.

இது காதலில் மட்டும் அல்ல, கணவன் மேல், பிள்ளையின் மேல் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். அன்பு கூடி நிற்கும் போது, அன்பு கொண்டவர் கூடவே மனம் போய் விடும்.

இதை, புகழேந்தி, நளவெண்பாவில் காட்டுகிறார்.

தமயந்தியை காண நளன் வந்தான். அவளோடு பேசி சந்தோஷமாக இருந்த பின், பிரிந்து சென்றான். அவன் கூடவே, தமயந்தியின் மனமும் சென்று விட்டது. தன் மனம் அவன் பால் சென்ற பின், பாவம் அவள் தான் என்ன செய்வாள்?

பாடல்

தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணிவதனம் எல்லாம்
வியர்த்தாள் உரைமறந்தாள் வீழ்ந்து.

பொருள்

தூதுவந்த காதலனைச்  = தேவர்களுக்காக தன்னிடம் தூது வந்த காதலனை (நளனை )

சொல்லிச் = பேசி

செலவிடுத்த = செல்லும் படி விட்ட

மாது = மாது, தமயந்தி

வந்து பின்போன = தன்னிடம் வந்து பின் போன

வன்னெஞ்சால் = வன்மையான நெஞ்சால். இத்தனை நாள் தன்னோடு இருந்து விட்டு, அவனைக் கண்டவுடன், அவன் கூடவே போனதால், அதை வன்நெஞ்சு என்கிறாள்.

யாதும் = அனைத்தும்

அயிர்த்தாள் = =பதறினாள்

உயிர்த்தாள் = உயிர் பிரிந்து போன மாதிரி தவித்தாள்

அணிவதனம் = ஆபரணம் அணிந்த முகம்

எல்லாம் = எல்லாம்

வியர்த்தாள் = வியர்த்தாள்

உரைமறந்தாள் = பேச மறந்தாள்

வீழ்ந்து = கால்கள் தள்ளாடி தரையில் வீழ்ந்தாள்


காதலன் போன பின், அவன் கூடவே அவள் மனமும் போய் விட்டது.

என்ன செய்ய? உடல் ஒரு பக்கமும், மனம் வேறு பக்கமும் அல்லாடுவதே அன்பு கொண்ட உள்ளங்களின்  வாடிக்கையாகிப் போனது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post.html

Sunday, July 28, 2019

நள வெண்பா - எரிகின்ற தென்னோ இரா

நள வெண்பா - எரிகின்ற தென்னோ இரா


நடைமுறை வாழ்கை ஒரு நேரம் இல்லையென்றால் மற்றொரு நேரம் சலிப்பு தருவதாய் அமைந்து விடுகிறது. துன்பமும், குறையும், வருத்தமும் , வலியும் அவ்வப்போது வந்து போகாமால் இருக்காது.

அப்படி அலுப்பும், சலிப்பும் வரும்போது, இலக்கியத்துக்குள் புகுந்து விட வேண்டும்.

அது ஒரு தனி உலகம்.

எப்படி அந்த உலகத்துக்குள் போவது?

மனோ இரதம் என்று ஒன்று இருக்கிறது. அதில் ஏறினால் உடனே போய் விடலாம்.

"அட இப்படியும் கூட இருக்குமா" என்று ஆச்சரியப்பட வைக்கும்.

"அடடா , நமக்கு இப்படி தோன்றவில்லையே" என்று  நம் அறிவின் எல்லைகளை விரிவாக்கும்.

"ஹ்ம்ம்...எனக்கு எப்படி ஒரு எண்ணம் , உணர்ச்சி தோன்றி இருக்கிறது " என்று நம் வாழ்வை உரசி விட்டுச் செல்லும்.

பிரிவு.

காதலன்/காதலி பிரிவு. கணவன்/மனைவி பிரிவு, பெற்றோர் பிள்ளைகள் பிரிவு,  நண்பர்கள் பிரிவு ...என்று பிரிவு என்பது நம் வாழ்வின் நிகழும் அடிக்கடி நிகழும் சம்பவம்.

பிரிவு துன்பம் தரும்.

அதிலும் காதலன் காதலி பிரிவு ஒரு ஏக்கம், காமம், காதல், பாசம் என்று எல்லாம் கலந்து ரொம்பவும் படுத்தும் .

நளனை பிரிந்த தமயந்தி தனிமையில் வருந்துகிறாள்.

இரவுப் பொழுது. குளிர்ந்த நிலா. இருந்தும் அவளுக்கு அது சூடாக இருக்கிறது. காமம்.

"இந்த இரவு ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறது? ஒரு வேளை இந்த நிலவு சூரியனை விழுங்கி விட்டதா? அதனால் தான் இவ்வளவு சூடாக இருக்கிறதா? இல்லை, என் மார்பகத்தில் இருந்து எழுந்த சூட்டால் இந்த உலகம் இவ்வளவு சூடாகி விட்டதா? அல்லது இந்த நிலவின் கதிர் வெப்பத்தை பரப்புகிறதா ? ஒன்றும் தெரியவில்லையே " என்று பிரிவில் தவிக்கிறாள்.

பாடல்


வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலில் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா.

பொருள்


வெங்கதிரோன் = வெம்மையான கதிர்களை உடைய சூரியன்

தன்னை = அவனை

விழுங்கிப் புழுங்கியோ = விழுங்கியதால் இந்த இரவு இப்படி புழுங்குகிறதா ?

கொங்கை = என் மார்பகத்தின்

அனலில் = சூட்டில்

கொளுந்தியோ = கொளுத்தப்பட்டா ?

திங்கள் = நிலவு

விரிகின்ற = பரந்து

வெண்ணிலவால் = வெண்மையான இந்த நிலவால்

வேகின்ற தேயோ = வேகின்றதோ

எரிகின்ற தென்னோ இரா. = ஏன் இந்த  இரவு எரிகிறது

நாமும்தான் தினமும் இரவையும் பகலையும் பார்க்கிறோம்.

நமக்கு என்றாவது தோன்றியது உண்டா, இரவு சூரியனை விழுங்கி இருக்கும் என்று.

கற்பனை விரிய விரிய மனம் விரியும்.

மனம் விரியும் போது, வானம் வசப்படும்.

பலவித வேலைகளுக்கு நடுவில், நல்ல இலக்கியத்துக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

அது உங்கள் மன வளர்சிக்கு வித்திடும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_43.html

Sunday, July 21, 2019

நள வெண்பா - பெண்ணிடம் பணியாதார் யார்?

நள வெண்பா - பெண்ணிடம் பணியாதார் யார்?


பெண்ணின் கை தீண்டலுக்கு பணியாதவர் யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறார் நளவெண்பா எழுதிய புகழேந்தி.

பெண் தொட்டால் போதும், அந்த தொடுகைக்கு அவ்வளவு சக்தி உண்டு. அது தொடுபவரை, அந்த அன்பில், கருணையில் பணிய வைக்கும்.

அதுதான் பெண்ணின் சக்தி. பெருமை.

அது பெண், பெண்ணாக இருக்கும் வரை. ஆனால், கால மாற்றத்தில் பெண்கள், நாங்களும் ஆண்கள் போல ஆக வேண்டும் என்று மாறி வருகிறார்கள்.

நாங்களும் குஸ்தி போடுவோம், கமாண்டோ படையில் சேர்வோம், என்று ஆணுக்கு நிகராக, ஆணாகவே ஆக விரும்புகிறார்கள்.

அப்படித்தான் வேண்டும் என்றால், இயற்கை ஏன் ஆண் , பெண் என்று இரண்டு இனத்தைப் படைக்க வேண்டும்?  எல்லாம் ஆணாகவே படைத்து விட்டுப் போய் விடலாமே.

ஆண் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், பல சாலியாக இருந்தாலும், பெண்ணின் கை பட்ட மாத்திரத்தில் அவள் காலில் விழுவான் என்கிறார்.

அது படைப்பின் நோக்கம்.

வலிமையான ஆணை, மென்மையான பெண்ணின் முன் மண்டியிட வைத்தது இயற்கையின் பேராற்றல்.

இதை அறிந்து கொள்ளாமல், பெண்கள் அந்த பேராற்றலை விட தங்களுக்கு நிறைய தெரியும் என்று ஏதேதோ செய்து வருகிறார்கள்.


சரியா தவறா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நளனும் தமயந்தியும் தேரில் வந்து கொண்டு இருக்கிறார்கள். வரும் வழியில் உள்ள சோலைகளில், பெண்கள் பூ பறித்துக் கொண்டிருக்கிறார்கள். கிளையின் மேலே உள்ள பூக்களைப் பறிக்க அவர்கள் அந்த கொம்பை சற்றே இழுத்து வளைக்கிறார்கள். அதை கண்ட புலவனின் மனதில் கற்பனை பிறக்கிறது.

பெண்களின் கை பட்டதால், அந்த மரமே தாழ்ந்து அவர்களின் காலில் விழுந்த மாதிரி இருந்தது என்கிறான். பெண்ணின் கை பட்டால் யார் தான் பணிய மாட்டார்கள், இந்த பூ மரம் மட்டும் என்ன விதி விலக்கா என்று கேட்கிறான்.

பாடல்

‘பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே?
பூவையர்கை தீண்டலும்ப் பூங்கொம்பு – மேவியவர்
பொன்னடியில் தாழ்ந்தனவே பூங்குழலாய்!காண்! என்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து.


பொருள்

‘பாவையர்கை = பெண்களின் கை

தீண்டப் = தீண்டினால்

பணியாதார் யாவரே? = அதற்கு பணியாதவர் யார்? (ஒருவரும் இல்லை)

பூவையர்கை = பெண்களின் கை

தீண்டலும்ப் = தீண்டப் பட்டவுடன்

பூங்கொம்பு  = மரத்தில் உள்ள பூங்கொம்பு

மேவியவர் = அந்த பெண்களின்

பொன்னடியில் = பொன் போன்ற அடிகளில்

தாழ்ந்தனவே = தாழ்ந்து வந்தது

பூங்குழலாய்!காண்!  = பூங்குழலாய் (தமயந்தியே ) கான்

என்றான் = என்று கூறினான் (நளன் )

மின்னெடு = மின்னல் போன்ற

வேற் கையான் = வேலை கையில் கொண்டவன்

விரைந்து. = வேகமாக

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_21.html

Wednesday, June 24, 2015

நள வெண்பா - மனம் விரியட்டும்

 நள வெண்பா - மனம் விரியட்டும் 


இலக்கியங்கள் நம் மனதை விரிவடையச் செய்கின்றன.

மனம் ஏன் விரிய வேண்டும் ? மனம் பரந்து விரிவதால் என்ன பயன் ?

இரண்டு பயன்கள்

முதலாவது, துன்பங்கள் குறையும். பொதுவாகவே துன்பங்கள் நான், எனது, என் வீடு, என் கணவன், என் மனைவி, என் மக்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தினால் வருகிறது.

தரையிலே செல்பவனுக்கு மேடு பள்ளம் தெரியும். ஆகாய விமானத்தில் செல்பவனுக்கு மேடு பள்ளம் தெரியாது. மனம் உயர உயர, விரிய விரிய மேடு பள்ளம் மறைந்து சம நோக்கு வரும்.

இரண்டாவது, இறை அனுபவம் பெறலாம். நாம் தெரிந்ததில் இருந்து தெரியாததை அறிந்து கொள்கிறோம். புலி எப்படி இருக்கும் என்றால் பூனை போல இருக்கும், ஆனால் கொஞ்சம் பெரிதாக இருக்கும் இன்று பிள்ளைகளுக்கு சொல்லித்தருவோம். இப்படி தெரிந்த பூனையில் இருந்து தெரியாத புலியை நம்மால் யூகம் பண்ண முடியும்.

எதைச் சொல்லி இறைவனை யூகம் பண்ண முடியும் ? இறைவன் யாரைப் போல இருப்பான் ? எதைப் போல இருப்பான் ? தெரியாது.  மனம் விரிந்து கொண்டே போனால் , எல்லாவற்றிலும் பெரியவன், உயர்ந்தவன், சிறந்தவன் என்று சொல்லப்படும்   இறைவனை அறிய முடியும்.

அதீத கற்பனைகளினால், இலக்கியங்கள் நம் மனதை பெரிதும் விரிவடையச் செய்கின்றன.

நிடத நாடு.

அங்குள்ள மாளிகைகள் எல்லாம் உயரமாக இருக்கின்றன. எவ்வளவு உயரம் என்று கேட்டால், அந்த மேகம் வரை உயரமாக இருக்கின்றன. அந்த மாளிகைகளில் மேகம் முன் வாசல் வழி வந்து பின் வாசல் வழி போகும். அவ்வளவு உயரம்.

அந்த மாளிகைகளில், பெண்கள் குளித்து முடித்து தங்கள் கூந்தலில் உள்ள ஈரம் போக  அகில், சாம்பிரானி புகை காட்டுகிறார்கள். அந்த புகை , அங்கு வரும் மேகங்களோடு  கலந்து விடுகிறது.  பின், அந்த மேகங்கள் மழை பொழிகிற பொழுது, இந்த நறுமண வாசனைகளும் கலந்து பொழிகின்றன. அதனால்  அந்த ஊரில் பெய்யும் மழை எல்லாம் பன்னீர் தெளிப்பது போல வாசமாக இருக்கிறது.

பாடல்

நின்றுபுயல் வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல்
அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.

பொருள்

நின்று = (வானில்)  நின்று

புயல் = மேகம்

வானம் = வானம்

பொழிந்த நெடுந்தாரை = பொழிந்த நீண்ட மழை

என்றும் = எப்போதும்

அகில் கமழும் என்பரால் = அகில் (சந்தனம் போல ஒரு நறுமண மரம்) வாசம் வீசும் என்று கூறுவார்கள்

தென்றல் = தென்றல் மெல்ல வந்து

அலர்த்தும் = வருடிப் போகும்

கொடிமாடத் = கொடிகள் உள்ள மாடத்தில்

தாயிழையார் = ஆயிழையார் = ஆராய்ந்து எடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்கள்

ஐம்பால் = ஐந்து பிரிவு எடுத்து பின்னப்பட்ட கூந்தல். இப்போதெல்லாம் மூன்று பிரிவு எடுத்து பின்னுகிறார்கள். அந்தக் காலத்தில் அவ்வளவு அடர்த்தியான முடி. ஐந்து பிரிவாக கூந்தலைப் பிரித்து பின்னுவார்களாம். எனவே பெண்களுக்கு ஐம்பால் என்று ஒரு அடை மொழியும் உண்டு.

புலர்த்தும் = புகை போடும்

புகை = புகை

வான் புகுந்து = வானில் உள்ள மேகங்களின் ஊடே புகுந்து

சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கற்பனை விரியும். காணாத  ஒன்றை உங்கள் கற்பனையில் காண முடியும். 

இப்படியே பழகுங்கள்...ஒரு நாள், காணாத ஒன்றை, கடவுளைக் கூட காண இது உதவலாம்.

Sunday, June 21, 2015

நள வெண்பா - சேற்றில் வழுக்கிய யானைகள்

நள வெண்பா -  சேற்றில் வழுக்கிய யானைகள் 


இலக்கியங்கள் நமக்கு அழகாக எழுத பேசக் கற்றுத் தருகின்றன.

நிடத நாட்டின் வளம் பற்றி கூற வருகிறார் புகழேந்தி.

ஒரு நாட்டின் வளம் பற்றி நாலு வரியில் கூற வேண்டும்.

அந்த ஊர் செல்வச் செழிப்போடு இருந்தது.

பெண்கள் எல்லாம் அழாக இருந்தார்கள்.

படை பலம் பொருந்தி இருந்தது.

மக்கள் எல்லாம் நன்றாக கல்வி கற்று இருந்தார்கள்.

கலை செழித்து இருந்தது.

கலை செழிக்க வேண்டும் என்றால், அதை பார்த்து இரசிக்க மக்கள் வேண்டும்.  மக்கள் கலை இரசனையோடு இருந்தார்கள்.

ஊரில் சண்டையும் சச்சரவும் இருந்தால் கலையை இரசிக்க நேரம் இருக்காது. ஊர் அமைதியாக இருந்தது.

என்று இத்தனையும் நாலு வரியில் சொல்ல வேண்டும். அதுவும் அழகாக சொல்ல வேண்டும்.

சொல்கிறார் புகழேந்தி....

பாடல்

கோதை மடவார்தம் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீதக் களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்தம்  என்றுளதோர்

ஞானக் கலைவாழ் நகர்.


பொருள்

பெண்கள் குளிக்கும் போது குங்குமம், சந்தனம் போன்ற வாசனைப் பொருள்களை  நீரில் சேர்த்துக் குளிப்பார்கள். அப்படி குளித்து விட்டு, உடை மாற்றி, அணிகலன்களை அணிந்து கொண்டு தெருவில் செல்கிறார்கள். அவர்கள் அப்படி செல்லும் போது அவர்களின் கூந்தலில் உள்ள நீர்  சொட்டு சொட்டாக வடிகிறது. அப்படி வடிந்த நீர், தெருவில் உள்ள மணலோடு சேர்ந்து அதை சேறாகச் செய்கிறது. அந்தச் சேற்றில் நடந்து வந்த பெரிய கரிய யானைகள் தொப் தொப்பென்று வழுக்கி வழுக்கி விழுகின்றன. அந்த ஊரில் ஞானமும், கலையும் செழிந்து வாழ்ந்தது.

கோதை = பூ மாலை அணிந்த

மடவார் = பெண்கள்

தம் = தங்களுடைய

கொங்கை = மார்பின் மேல்

மிசைத் = அசைச் சொல்

திமிர்ந்த = பூசிய, தடவிய

சீதக் = குளிர்ந்த

களபச் = கலவை

செழுஞ்சேற்றால் = செம்மையான சேற்றால்

வீதிவாய் = வீதியின் வழியே

மானக் = பெரிய

கரி = யானைகள்

வழுக்கும் = வழுக்கி விழும்

மாவிந்தம் = மாவிந்தம்

என்றுளதோர் = என்று உள்ள


ஞானக் = ஞானம்

கலை = கலைகள்

வாழ் நகர் = வாழுகின்ற நகரம்.

யானைகள் நிறைந்த ஊர் என்பதால் ஊரின் பலம் புலப்படும்.

ஞானமும், கலையும் வாழும் ஊர்.



பிரபந்தமும் , இன்னொரு சேறு செய்வதைப் பற்றி கூறுகிறது.

திருமாலின் பெருமைகளை எண்ணி எண்ணி பக்தர்கள் கண்ணில் இருந்து ஆறாக ஓடிய நீர் திருவரங்கத்து பிரகாரங்களை நனைத்து சேறாகச் செய்து விடுமாம். அந்த சேறே என் என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் திருமண் என்று உருகுகிறார் ஆழ்வார்.

பாடல்

ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே







Friday, June 19, 2015

நள வெண்பா - நிடத நாட்டுச் சிறப்பு

நள வெண்பா - நிடத நாட்டுச் சிறப்பு


எதையும் இரசிக்க எங்கே நேரம் இருக்கிறது நமக்கு.

மழையை, மனைவியின் புன்னகையை, காதோரம் கவிதை பேசும் காற்றை, பிள்ளைகளின் வெகுளித்தனத்தை, புது ஆடையின் மணத்தை , குளிர் காற்று தரும் உற்சாகத்தை, ஜன்னலோரம் கசியும் சூரிய ஒளியை...இப்படி எதையுமே ஒரு நிமிடம் நின்று பார்த்து இரசிக்க நேரம் இல்லை.

இயந்திர கதியாக வாழ்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

புது இடத்துக்கு சுற்றுலா போனால் கூட, அங்குள்ள இடங்களை புகைப்படம் பிடிக்கவும், facebook ல்  போடுவதிலும்தான் எண்ணம் போகிறதே தவிர அவற்றை இரசிக்க நேரம் இல்லை.

இலக்கியங்கள் , வாழ்வை இரசிக்கக் கற்றுத் தருகின்றன.

இலக்கியங்கள் இல்லாவிட்டால் வாழ்கை வெறிச்சோடிப் போய் விடும்.

நளனின் நாடான நிடதை நாட்டை புகழேந்தி வர்ணிக்கிறார்....அடடா என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு சொல் வளம், கவிதையின் ஓட்டம்...

வாருங்கள் இரசிப்போம்....

பாடல்

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.


பொருள்

காமர் = அழகான, விருப்பமான. என்ன ஒரு அருமையான சொல். அழகும் விருப்பமும் ஒரே சொல்லில். அழகில்லாத ஒன்றின் மேல் விருப்பம் வருமா ?

கயல் = மீன்கள்

புரளக் = புரள

காவி = சிவந்த

முகை = மொட்டு, அரும்பு

நெகிழத் = மலர

தாமரையின் = தாமரை மலரின்

செந்தேன் = சிறந்த தேன்

தளையவிழப் = மலரில் இருந்து வழிய

பூமடந்தை = திருமகள்

தன் = அவளுடைய

நாட்டம் = பார்வை, இங்கு கண் என்று கொள்ளலாம் 

போலும் = போல

தகைமைத்தே = சிறப்பு உடையதே

சாகரஞ் சூழ் = கடல் சூழ்ந்த

நன்னாட்டின் = நல்ல நாடுகளில்

முன்னாட்டும் நாடு = முன்னால் நிற்கும் நாடு

சரி, இதில் என்ன அப்படி சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா ...பொறுமை, பொறுமை....இது ஒரு முன்னுரைப் பாடல்...இனி வரும் பாடல்களைப் பாருங்கள்...

வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி என்று தெரியாமலா சொன்னார்கள் !

Tuesday, June 16, 2015

நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?

நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?


நமக்கு ஒரு துன்பம் வரும்போது, "ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நிகழ்கிறது...நான் என்ன பாவம் செய்தேன்...யார் குடியையும் கெடுத்தேனா, பொய் சொன்னேனா, கொலை களவு செய்தேனா...எல்லாருக்கும் நல்லது தானே செய்தேன்...எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை " என்று மனம் சோர்ந்து வாடிப் போவோம்.

அந்த மாதிரி சமயங்களில் இலக்கியங்கள் ஆறுதலும் தேறுதலும் தருகின்றன.

எப்படி ?

முதலாவது, நமக்கு வந்த துன்பங்கள் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. நம்மை விடவும் அதிகமான, மிக அதிகமான துன்பங்கள் அடைந்தோர் இருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அதைப் பார்க்கும் போது நம் துன்பம் அப்படி ஒன்றும் தாங்க முடியாத ஒன்று அல்ல என்று தோன்றும்.

இரண்டாவது, அப்படி துன்பம் வந்தபோது அதை அந்த இலக்கியத்தில் வந்த கதா பாத்திரங்கள் எப்படி சமாளித்தன என்று கூறி நம்மை வழி நடத்தும்.

இப்படி நம் மனதுக்கு இலக்கியங்கள் இதம் தரும்.

மகா பாரதம்.

இதிகாசங்கள் மூன்று.

இராமாயணம், மகா பாரதம், சிவ இரகசியம்.

இதில் மகா பாரதத்துக்கு மட்டும் தான் மகா என்ற அடை மொழி உண்டு.

ஏன் என்றால் அதில் இல்லாத தர்மம் இல்லை.

தர்மன் சூதாடி, நாடு நகரம் எல்லாம் இழந்து, அவமானப் பட்டு, காட்டில் வந்து இருக்கிறான்.

ஒன்றல்ல, இரண்டல்ல பன்னிரண்டு வருடங்கள்.

யோசித்துப் பாருங்கள், ஒரு சக்ரவர்த்தி, அத்தனையும் இழந்து, காட்டில் வாழ்வது என்றால் எப்படி இருக்கும்.

அதிலும் ஒரு நன்மை விழைந்தது. பலப் பல முனிவர்களும், சான்றோர்களும் தருமனை  சந்தித்து அவனுக்கு ஆறுதலும், தேறுதலும் , உபதேசமும் செய்தார்கள்.

12 வருடங்கள். மிகப் பெரிய ஞானிகள் தந்த அரிய பெரிய அறிவுரைகள். யாருக்குக் கிடைக்கும்.

அப்படி கிடைத்த ஒன்று தான் நளவெண்பா.

தருமன், வியாச முனிவரிடம் கேட்கிறான்....

"கண்ணை இழந்து, மாய சூது ஆடி, மண்ணை இழந்து, காட்டுக்குப் போய் , என்னை போல துன்பப் பட்டவர்கள் யாரும் உண்டா "

என்று வருந்தி வினவுகிறான்.

அப்போது , தருமனுக்கு அவனை விட துன்பப் பட்ட நள மன்னனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.

நள வெண்பா....படிக்கப் படிக்கப் திகட்டாத பாடல்கள்.

மிக எளிமையான, இனிமையான, மனித உணர்வுகளை அழகாகச் சொல்லும் வெண்பாக்கள்.

படிக்கும் போது நம்மை மிக மகிழச் செய்யும் பாடல்கள். அருமையான உதாரணங்கள், அற்புதமான சொற் தெரிவுகள்....

காதல், ஊடல், கூடல், வெட்கம், நாணம், பரிவு, பிரிவு, துயரம், ஏக்கம் என்று கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் அத்தனை நுணக்கமான உணர்வுகளை படம் பிடிக்கும் நூல்.

அதிலிருந்து சில பாடல்கள் இன்னும் வரும் ப்ளாகில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.

பொருள்

கண்ணிழந்து = கண்ணை இழந்து. இங்கே கண் என்று கூறியது அறிவை. அறிவுக் கண்ணை. கண் பார்க்க உதவுகிறது. அது போல அறிவும் உண்மையைக் காண உதவுகிறது.

 மாயக்  = மாயமான

கவறாடிக் = கறவு + ஆடி = சூது ஆடி

காவலர் தாம் = அரசர்கள் தான்

மண்ணிழந்து = மண்ணை இழந்து

போந்து = போய்

வனம் = காட்டை

நண்ணி  = சேர்ந்து

விண்ணிழந்த = வானில் இருந்து விழும்

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூல் = பூனூலை அணிந்த

மார்ப  = மார்பனே (வியாசனே )

மேதினியில் = உலகில்

வேறுண்டோ = வேறு யாராவது இருக்கிறார்களா

என்போல் = என்னைபோல

உழந்தார் இடர்.= துன்பத்தில் உழன்றவர்கள் ?

என்னமோ தனக்கு மட்டும் தான் துன்பம் வந்தது போல் நம்மை போலவே தருமனும் நினைக்கிறான்.

வியாசன் சொல்லத் தொடங்குகிறான்.

என்னவென்று மேலும் சிந்திப்போம்



Monday, May 26, 2014

நள வெண்பா - கன்னி மனக்கோயில் கைக்கொள்ள

நள வெண்பா - கன்னி மனக்கோயில் கைக்கொள்ள


அன்னப் பறவை வந்து நள மகாராஜாவிடம் தமயந்தியின் அழகைப் பற்றி சொல்லத் தொடங்கியது. அந்த சொல் அவனின் காதில் சென்று விழுவதற்குள் தமயந்தி அவன் மனம் என்ற கோவிலில் சென்று அதை கைப் பற்றிக் கொண்டாள் . அந்த நேரத்தில், நளன் "அவள் யாருடைய பெண் " என்று அன்னத்திடம் கேட்டான்.  அதே சமயம் மன்மதன் தன் கரும்பு வில்லை வளைத்து நளன் மேல் மலர் அம்புகளைத் செலுத்தத் தொடங்கினான். நளனும் அதனால் உடலும் உள்ளமும் பதைத்தான்.

பாடல்

அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயில்
ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்ப
பார்மடந்தை கோமான் பதைத்து.

பொருள்

அன்னம் = அன்னப் பறவை

மொழிந்த = சொன்ன

மொழிபுகா முன்புக்குக் = சொல் அவன் காதில் நுழைவதற்கு முன்

கன்னி = கன்னியாகிய தமயந்தி

மனக்கோயில் = நளனின்  மனமாகிய கோவிலை

கைக்கொள்ளச் = கைப்பற்றிக் கொள்ள

சொன்னமயில் = "நீ சொன்ன அந்த மயில்"

ஆர்மடந்தை = யார் பெற்ற பெண்

என்றான் = என்று நளன்  கேட்டான்

அனங்கன் = மன்மதன்

சிலைவளைப்ப = வில்லை வளைக்க (சிலை = வில்)

பார்மடந்தை = பூலோகத்தின்

கோமான் = அரசன்

பதைத்து = உடல் பதைத்துக் கேட்டான்

இவளுக்க சும்மா இருக்கிறது இல்ல. மனசுக்குள்ள ஏறி உக்காந்துகிட்டு படுத்தறது. பதறாம என்ன செய்யும் ?


Thursday, May 22, 2014

நள வெண்பா - புலம்பும் சிலம்பும்

நள வெண்பா - புலம்பும் சிலம்பும்  


தமயந்தி நடந்து வருகிறாள். அவள் காலில் கொலுசு ஒலிக்கிறது. அந்த கொலுசு என்ன சொல்லுகிறது தெரியுமா ?

இந்த தமயந்தியின் தனங்களை இவளின் சிறிய இடை தாங்காது என்று அவளின் கொலுசுகள் அவளின் காலைப் பிடித்துக் கொண்டு புலம்பியதாம்.

பாடல்

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.

பொருள்

மோட்டிளங் கொங்கை = உயர்ந்த இளமையான கொங்கைகள்

முடியச் = வாழ்நாள் முடிய , எப்போதும். இப்போது இளமையாக  இருக்கிறது.இவை இன்னும் வளர்ந்து முடிய நாள்  ஆகும். இப்பவே இதன் பாரம் தாங்க முடியவில்லை. இன்னும் வளர்ந்தால், இந்த இடை என்ன ஆகுமோ என்று கொலுசுக்குத் தவிப்பு.


சுமந்தேற = சுமக்க

மாட்டா திடையென்று = மாட்டாது இடை என்று

வாய்விட்டு = வாய் திறந்து

நாட்டேன் = நாள் + தேன்

அலம்புவார் = அலம்பும் பூக்களை சூடிய. பதமயந்தி சூடிய பூக்களில் தேன் ததும்புகிறது.

கோதை = தமயந்தி

அடியிணையில் = இரண்டு பாதங்களிலும்

வீழ்ந்து = விழுந்து

புலம்புமாம் = புலம்பின

நூபுரங்கள் = கொலுசுகள்

பூண்டு = அணிந்து

காலில் அணிந்துள்ள கொலுசுகள், அவள் காலைப் பற்றிக் கொண்டு புலம்பின.

ஹ்ம் .....

Wednesday, May 21, 2014

நள வெண்பா - பெண்மை அரசு

நள வெண்பா - பெண்மை அரசு 



எல்லா பெண்களும் அரசிகள்தான்.

அவர்கள் எந்த நாட்டுக்கு அரசிகள் ? அவர்களின் படைகள் என்ன, அவர்களின் வெண் கொற்ற குடை எது ?

நள வெண்பா பாடிய புகழேந்திப் புலவர் கூறுகிறார்....

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு வித குணங்களே நான்கு விதமான படைகள் (இரதப் படை, யானைப் படை, குதிரைப்படை , காலாட்படை) , ஐந்து புலன்களும் அவர்களை வழி நடத்தும் அமைச்சர்களாக, இரண்டு கண்களும் வில்  படையும்,வேல் படியுமாக, அவர்களின் அழகிய முகமே வெண்கொற்றக் குடியாக பெண்மை அரசு செய்கிறது....


பாடல்

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.

பொருள்

நாற்குணமும் = நான்கு குணங்களும்

நாற்படையா = நான்கு படைகளாக

ஐம்புலனும் = ஐந்து புலன்களும்

நல்லமைச்சா = நல்ல அமைச்சர்களாக

ஆர்க்கும் சிலம்பே = ஒலி எழுப்பும் சிலம்பே

அணிமுரசா = அழகிய முரசாக

வேற்படையும் = வேல் படையும்

வாளுமே = வாள்  படையும்

கண்ணா = கண்களாக

வதன = முகம்

மதிக் =  நிலவு

குடைக்கீழ் = குடையின் கீழ்

ஆளுமே = ஆட்சி செய்யுமே

பெண்மை அரசு = பெண் என்ற அரசு

அவர் சொன்னது தமயந்திக்குத் தான் என்றாலும், எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும்.

படுத்துராளுக !



Monday, May 12, 2014

நள வெண்பா - காமம் என்ற நெருப்பு

நள வெண்பா - காமம் என்ற நெருப்பு 


முதலிலேயே சொல்லி விடுகிறேன், இந்த பாடல் வயது வந்தவர்களுக்கு மட்டும்.  வயது வராதவர்கள், அல்லது ஆண் பெண் உடல் கூறு சம்பந்தப் பட்ட வார்த்தைகளால் சங்கப்படுபவர்கள் இதை மேலும் படிக்காமல் இருப்பது நல்லது.

தமயந்தியின் நினைவால் நளன்  .வாடுகிறான். காமம் அவனை சுட்டு எரிக்கிறது.

அந்த சூட்டை தணிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான்.

சூட்டுக்கு இதமாக ஏதாவது இளநீர் பருகலாம், கரும்புச் சாறு நல்லது, குளிர்ந்த நீர் குளத்தில் நீராடலாம், நல்ல நிழலில் போய் நிற்கலாம்....இவற்றால் இந்த காமம் என்ற சூட்டினால் விளைந்த தாகம் தீரலாம்....

பாடல்

கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளம் சொல்கரும்பால்
பொங்குசுழி என்னும் பூந்தடத்தில் - மங்கைநறும்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ

வெய்தாமக் காம விடாய்.


பொருள்

கொங்கை இளநீரால் = (தமயந்தியின்) மார்புகள் என்ற இள நீரால்

குளிர்ந்த = குளிர்ச்சியான

இளம் = இளமையான

சொல்கரும்பால் = அவளுடைய சொல் என்ற கரும்பால்

பொங்கு = பொங்கி

சுழி = சுழித்து ஓடும்

என்னும் = என்ற

பூந்தடத்தில் = அவளுடைய தொப்பூழ் (வயறு)

மங்கை = பெண்

நறும் = வாசம் வீசும்

கொய் = கொய்த

தாம = மலர் சூடிய

வாசக் = வாசம் வீசும்

குழல் = குழல், தலை முடி

நிழற் கீழ்= நிழலின் கீழே. குழல் நிழல் தரலாம்....நிழல் போல குழலும் கருமையாக இருக்கும்.

ஆறேனோ = குளிர்வேனோ ?


வெய் = கொடுமையான

ஆம் = ஆன

காம விடாய். = காமத்தினால் வந்த தாகம்

அவள் மேல் எத்தனை ஆசை அவனுக்கு. உருகுகிறான்.




Friday, June 21, 2013

நள வெண்பா - நாணம் என்னும் தறி

நள வெண்பா - நாணம் என்னும் தறி 


தமயந்திக்கு, நளன் மேல் அவ்வளவு காதல். அவனை அப்படியே இறுக கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை.

இறுக என்றால் எவ்வளவு இறுக?

தன் மார்பும், அதில் தவழும் பொன் ஆரமும் நளனின் மார்பில் அழுந்தி மறைந்து போகும் அளவுக்கு இறுக கட்டி அணைக்க ஆசை.

ஆசை என்றால் எவ்வளவு ஆசை ?

யானை அளவுக்கு பெரிய ஆசை.

ஆனால், இந்த பாழாய் போன நாணம் இருக்கிறதே, இத்துணுண்டு தான் இருக்கு, இருந்தாலும் அந்த நாணம் பெரிய யானையை கட்டி அடக்கும் அங்குசம் போல என் ஆசைகளை எல்லாம் கட்டிப் போட்டு விடுகிறதே என்று நொந்து கொள்கிறாள் தமயந்தி....

ஜொள் வடியும் அந்த பாடல்


மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்ப புல்லுவனென் - றுன்னா
எடுத்தபே ரன்பை இடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி.

சீர் பிரித்த பின்


மன்னன் அகத்துள் அழுந்தி  வார் அணிந்த மென்முலையும்
பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவென் என்று உன்னா 
எடுத்த பேரன்பை இடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி.

பொருள்


Tuesday, April 23, 2013

நள வெண்பா - எங்கட்கு இறை


நள  வெண்பா - எங்கட்கு இறை 


வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி என்பார்கள். வெண்பா என்ற பா வடிவம் புகழேந்தியிடம் அப்படி விளையாடுகிறது

புகழேந்தி பாடிய நளவெண்பாவில் இருந்து சில பாடல்கள் ....

முதலில் யாரும் அழைக்காமலே தானே பன்றியாக வந்து  அவதரித்தான்.

பிரகலாதன் என்ற சிறுவன் அழைத்ததற்காக தூணில் நரசிம்மமாகத் தோன்றினான்

அவ்வளவு ஏன், ஒரு யானை ஆதி மூலமே என்று கூப்பிட்ட உடன் ஏன் என்று கேட்டான் எங்கள் இறைவன் என்று திருமாலை கொண்டாடுகிறார் புகழேந்தி. யானை கூப்பிட்டபோது வந்தவன், நீங்கள் கூப்பிட்டால் வரமாட்டானா ?



பாடல்


ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை.

பொருள்


Tuesday, October 16, 2012

நள வெண்பா - நீண்ட இரவு


நள வெண்பா - நீண்ட இரவு


இந்த இரவு ஏன் இப்படி நீண்டு கொண்டே போகிறது. எவ்வளவு நேரம் ஆகிறது பொழுது விடிய. நகரவே மாட்டேன் என்கிறதே இந்த இரவு. இந்த சேவல் கோழிகளுக்கு எல்லாம் என்ன ஆகிவிட்டது ? ஏன் அவை கொக்கரிக்க மாட்டேன் என்கிறது. இந்த இரவு விடியவே விடியாதா ? இந்த கடல் ஏன் இப்படி அலை அடித்துக்கொண்டே இருக்கிறது. தூங்கவே தூங்காதா ? இந்த நிலவு ஏன் இப்படி வெயிலாய் காய்கிறது ? ஏன்  இப்படி சுடுகிறது ? இந்த சூட்டில் என் உடலே உருகி விடும் போல் இருக்கிறதே...என்று புலம்புகிறாள் தமயந்தி...காதல் பிரிவு அவளை வாட்டுகிறது ....


பாடல் 

Sunday, September 23, 2012

நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை


நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை


எருமை.

மந்த புத்தி மகிஷம்.

வெயில் என்றாலும் விலகாது.

மழை வந்தாலும் மயங்காது.

என் வழி தனி வழி என்று அதன் வழி செல்லும்.

அவந்தி நாட்டில் அப்படி ஒரு எருமை. 

அதற்கு ஒரு நாள் ரொம்ப பசி. மாட்டிற்கும் யானைக்கும் உடல் எல்லாம் வயிறு தானே.

எதை தின்னலாம் என்று சுற்றிலும் பார்த்தது. எதிரிலே ஒரு குளம். அதிலே 
ஒரு குவளை மலர்.

அந்த மலரை பறித்து உண்ணலாம் என்று குளத்தில் இறங்கி மலரை வாயில் கவ்வியது.

அப்போது அந்த மலரில் இருந்த வண்டுகள் வெளியே தப்பி வந்து ரீங்காரமிட்டன.

அந்த இசையில் மயங்கி மலரை உண்ணாமல் விட்டது அந்த எருமை.

அப்படி எருமைக்குக் கூட இசை ஞானம் இருக்கும் ஊர் அவந்தி.

அந்த நாட்டின் தலைவன் இந்த மன்னன்...பெரிய யானையின் வலிமையையை கொண்டவன் இவன் என்று அவந்தி நாட்டின் மன்னனை தமயந்திக்கு அறிமுகப் படுத்துகிறாள் அவளுடைய தோழி...

பாடல் 

Saturday, August 18, 2012

நள வெண்பா - பெண்மை அரசு


நள வெண்பா - பெண்மை அரசு 


பெண்மை அரசாளுகிறது. 

ரத, கஜ, துரக, பதாதி என்ற நால் வகை படை இருப்பது போல அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால் வகை படைகளோடு,

தன்னுடைய ஐந்து புலன்களும் அமைச்சர்கள் போல் வழி நடத்த,

காலில் அணிந்த கொலுசே முரசாக ஒலிக்க (அவள் வருவதை அறிவிக்கும்),

பத்தாதற்கு அவளுடைய கண்ணே வேல் படையாகவும், வாள் படையாகவும், 

அவள் நிலவு போன்ற முகமே வெண் கொற்ற குடையாகவும் 

அவள் ஆட்சி செய்கிறாள்...

Sunday, August 12, 2012

நள வெண்பா - எரியம் இரவு


நள வெண்பா - எரியம் இரவு


அவள் தனித்து இருக்கிறாள். இரவு சுடுகிறது.

ஏன் என்று யோசிக்கிறாள்.

பகல் எல்லாம் இந்த சூரியன் இருக்கிறது. இராத்திரி எங்கே போகிறது ? இந்த இரவு சூரியனை விழுங்கி இருக்குமோ ? அதுனால தான் இப்படி இந்த இரவு கொதிக்கிறதோ?

இல்லைனா, என் மார்பில் இருந்து கிளம்பிய சூடு காரணமாய் இருக்குமோ ? 

ஒரு வேளை, இந்த நிலவு குளிர்ச்சிக்கு பதில் வெப்பத்தை தர ஆரம்பித்து விட்டதோ?

ஏன்னே தெரியலையே..இந்த இரவு இப்படி எரிகிறதே....

Saturday, June 23, 2012

நளவெண்பா - காமனை எரித்தது பொய்


நளவெண்பா - காமனை எரித்தது பொய்


புராணகள் எல்லாம் சிவன் காமனை எரித்ததாக சொல்கிறது.

தமயந்தி அதை நம்பவில்லை. காமன் எரிந்து போனது உண்மையானால், தான் இப்படி காதலில் கஷ்டப் பட வேண்டியது இருக்காதே என்று நினைக்கிறாள்.