Friday, November 30, 2012

இராமாயணம் - மனக்கூனி


இராமாயணம் - மனக்கூனி 


கூன் உடலில் இருந்தால் பரவாயில்லை. அது இயற்கையாக அமைந்தது. நாமாக வரவழைத்துக் கொண்டது அல்ல, தானாக வந்தது.

இவளோ, மனத்தில் கூன் விழுந்தவள். மன விகாரம் நாமே வரவழைத்துக் கொள்வது. 

இராமன் மணி முடி சூடப் போகிறான் என்று அறிந்தவுடன் அயோத்தி மாநகரமே அலங்காரம் கொண்டது, வானவர் வாழும் இந்திர உலகம் போல ஜொலிக்கும் வேளையில், மற்றவர்களுக்கு துன்பம் செய்யும் இராவணனின் தீமையே உரு பெற்று வந்தது போல வந்தால் மனதில் கூன் உள்ள கூனி....

அவளை மனக் கூனி என்றான் கம்பன். மனதில் கூன் விழுந்தவள்.

பாடல்: 

ஆத்திசூடி - இயல்வது கரவேல்


ஆத்திசூடி - இயல்வது கரவேல் 


எது முடியுமோ, அதை மறைக்காமல் செய்ய வேண்டும்.  ஆங்கிலத்தில் சொல்லுவார்களே Realising one's potential என்று, அது போல. 

எவ்வளவு படிக்க முடியுமோ, அவ்வளவு படிக்க வேண்டும்.


எவ்வளவு வேலை பார்க்க முடியுமோ, அவ்வளவு வேலை பார்க்க வேண்டும். 

எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு 

எவ்வளவு தானம் பண்ண முடியுமோ, அவ்வளவு. 

இயல்வது என்றால் முடிந்த வரை. 

கரவேல் என்றால் மறைக்காமல் என்று பொருள்

.......................
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

என்பார் மணிவாசகர் ...

செய்கிறோமா ? எட்டு மணிநேரம் வேலை செய்ய முடியும் என்றால், ஆறு மணி நேரம் செய்கிறோம். நம்மால் பிறர்க்கு உதவ முடியும், ஆனால் செய்வது இல்லை. 

சாலையில் அடி பட்டு கிடக்கும் மனிதனை பார்த்து விட்டு பார்க்காத மாதிரி போகிறோம். 

பசி என்று கை ஏந்துபவர்களுக்கு பத்து பைசா தர்மம் பண்ணுவது இல்லை. 

முடியாததை செய் என்று சொல்லவில்லை அவ்வை பாட்டி. முடிந்ததையாவது மறைக்காமல் செய் என்கிறாள். 

முடிந்த வரை செய்து கொண்டு இருந்தால், அந்த முடிந்தவற்றின் எல்லை கோடுகள் தானே விரியும். 

நாம் ஏன் முடிந்ததை செய்வது இல்லை ? 

என்னால் நிறைய செய்ய முடியும், செய்யவும் ஆசை இருக்கிறது...ஆனால் வாய்ப்பு இல்லையே, நான் என்ன செய்வது என்று கேட்போருக்கு அவ்வை பதில் சொல்கிறாள்...அடுத்த ப்ளாக்-இல் 


இராமாயணம் - கூனி பெற்ற பரிசு


இராமாயணம் - கூனி பெற்ற பரிசு 


நம்ம வீட்டில் எல்லாம் தரைக்கு மொசைக் போடுவோம், மார்பிள் போடுவோம், கிரானைட் போடுவோம். தசரதனின் அரண்மனையில் அப்படி ஏதாவது உயர்ந்த கற்களை கொண்டு தளம் போட்டுத்தானே இருப்பார்கள் ?

கூனிக்கு கைகேயி முத்து மணிமாலை பரிசாக கொடுத்தாள். அதை வாங்கிய கூனி அதை தரையில் ஓங்கி எறிந்தாள். ஆனால் கம்பன் அப்படி சொல்லவில்லை. அடையும் கவி நயத்தோடு சொல்கிறான்...எப்படி தெரியுமா ?

அப் பொன்மாலையால் குழித்தனள் நிலத்தை என்றான்.

அதாவது நிலத்தை குழி ஆக்கினாளாம்...அவள் எறிந்த வேகத்தில் மாளிகையின் தரை பிளந்து குழி ஆனது என்கிறான் கம்பன்.....எவ்வளவு கோவம்...எவ்வளவு கற்பனை...
 
பாடல் 

Thursday, November 29, 2012

பிரபந்தம் - பல்லாண்டு கூற வாருங்கள்


பிரபந்தம் - பல்லாண்டு கூற வாருங்கள்


தான் மட்டும் இறைவனை வாழ்த்தினால் போதாது, எல்லோரும் வாழ்த்த வேண்டும், அந்த மகிழ்ச்சியையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். எவ்வளவு கருணை. 

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று 

என்பார் திருவள்ளுவர். அமிழ்தமே ஆயினும், விருந்தினர் காத்திருக்க தான் மட்டும் உண்ண மாட்டார்கள் உத்தமர்கள். 

இறைவனை வாழ்த்துவதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். 

நீங்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டுமா, வாருங்கள், வந்து எங்கள் குழுவில் சேர்ந்து கொள்ளுங்கள். சேர்ந்தவர்களுக்கு எல்லாம் மண்ணும் மணமும் தருகிறார். (அது என்ன மண்ணும் மணமும் ? பின்னால் பார்ப்போம்). 

சில பேர் வாழ்க்கை என்பதே உண்பதும் உறங்குவதும் என்று இருப்பார்கள். அவர்களுக்கு இறைவன் மேல் பக்தி கிடையாது. உடல் வளர்பதே முழு முதல் வேலையாக இருப்பார்கள். அவர்களை, நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து கவனியுங்கள். இந்த கூட்டத்தில் நீங்கள் சேர வேண்டாம் என்கிறார். 

இந்த ஜன்மம் மட்டும் அல்ல, முன்னால் உள்ள ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் எந்த பழியும் செய்யாதவர்கள்.

வாருங்கள், நாம் எல்லோரும் சென்று அரக்கர்கள் வாழும் இலங்கயையை பாழாக்க போர் புரிந்தவனை நாம் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம் என்று அழைக்கிறார். 

பாடல் 

இராமாயணம் - வசையா? புகழா ?


இராமாயணம் - வசையா? புகழா ?


கைகேகிக்கு இராமன் மேல் அளவு கடந்த பாசம். கைகேயின் மனதை மாற்ற வந்த கூனி ஆரம்பிக்கிறாள் "ஆடவர்கள் நகைக்க, ஆண்மை மாசுற, தாடகை என்ற பெண்ணை கொன்ற, குற்றமுள்ள வில்லை கொண்ட  இராமனுக்கா முடி " என்று இராமன் ஒரு பெண்ணை கொன்றதை பெரிய குற்றமாக கூறி ஆரம்பிக்கிறாள். 

ஆனால், இராமன் மேல் பாசம் கொண்ட கைகேகிக்கு கூனி சொல்வது குற்றமாகவே படவில்லை. எப்படி ?

கூனி சொல்வதை எல்லாம் கைகேகி இராமனின் பெருமையாகவே நினைக்கிறாள். நமக்கு வேண்டியவர்கள், நாம் அன்பு செய்பவர்களைப் பற்றி யாரவது தவறாகச் சொன்னால் கூட நமக்கு அது பெரிதாகப் படாது அல்லவா, அது போல 

கூனி சொன்ன பாடல் இது தான் ...
 

கைநிலை - ஆசையில் தேம்பும் நெஞ்சு


கைநிலை - ஆசையில் தேம்பும் நெஞ்சு 


ஒரு பெரிய மலை. அந்த   மலையையை சுற்றி உள்ள சிறு சிறு பள்ளங்களில் நீர் நிறைந்து இருக்கிறது. அந்த மலையின் அடிவாரத்தில் அடர்ந்த காடு. காட்டில் நிறைய பழ மரங்கள். பழ மரங்களில் பழங்களை பறித்து தின்று தாவி விளையாடும் குரங்குகள்.   அந்த மலையில் இருந்து விழும் அருவி. விழுந்த அருவியில் இருந்து வரும் புது நீர், அங்குள்ள பள்ளங்களில், சுனைகளில் தேங்கி இருக்கும் பழைய நீரோடு கலந்து வெளியேறும். அருவியில் இருந்து நீர் விழும் போது அதோடு சில கனிகளும் சேர்ந்து விழும். இந்த குரங்குகள் அந்த கனிகளை உண்ண ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்ளும். பின் சினம் ஆறி அந்த கனிகளை உண்ணும். அருவி வரும் அந்த ஊரைச் சேர்ந்தவன் என் காதலன். அவனைக் காண என் மனம் ஆசையில் தேம்புகிறது. 

பாடல் 

Wednesday, November 28, 2012

இராமாயணம் - இராமன் வாங்கிய வசவுகள்


இராமாயணம் - இராமன் வாங்கிய வசவுகள்


இராம காதையில், இராமன் பல இடங்களில் வசை பாடப் படுகிறான். முதலில் ஆரம்பித்தவள் கூனி. 

இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தியை கைகேயி சொன்னவுடன் கூனி கூறுகிறாள் 

ஆடவர்கள் நகைக்க, ஆண்மை மாசு அடைய, தாடகை என்ற பெண்ணை கொன்ற, குற்றம் உள்ள வில்லை கொண்ட இராமனுக்கா மணி முடி சூட்டப் போகிறார்கள் நாளை, இதுவும் ஒரு வாழ்வா என்று அமில வாரத்தைகளை வீசுகிறாள். 

பாடல் 

சித்தர் பாடல்கள் - சலிப்பு


சித்தர் பாடல்கள் - சலிப்பு


பட்டினத்தார் பாடல்கள் நிலையாமையின் உச்சம். பாடல்களின் ஆற்றொழுக்கான நடை, ஒரு தரம் படித்தாலே மனதில் ஒட்டிக்கொள்ளும் அதன் எளிமை, வாழ்க்கை இவ்வளவுதானா, இதற்குத்தானா இத்தனை அடி தடி, சண்டை சச்சரவு என்று நம் ஆணவத்தின் தலையில் குட்டும் பாடல்கள்...

இருப்பையூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன் ? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால் சலித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். போதுமப்பா...மீண்டும் ஒரு கருப்பையில் வரமால் என்னை காப்பாற்று....

பாடல் 

Tuesday, November 27, 2012

பிரபந்தம் - பல்லாண்டு


பிரபந்தம் - பல்லாண்டு 


இறைவனை எதற்கு வாழ்த்த வேண்டும் ? நாம் வாழ்த்தி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ? நாம் வாழ்த்தியா அவன் வாழப் போகிறான் ? பின் ஏன் பெரியவர்கள் எல்லோரும் அவனை வாழ்த்துகிறார்கள் ?

நமச்சிவாய வாழ்க என்று ஆரம்பிக்கிறார் மாணிக்க வாசகர் சிவ புராணத்தில்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்கிறார் சேக்கிழார் பெரிய புராணத்தில்

எதற்கு இறைவனை வாழ்த்த வேண்டும் ?

ஒரு மணி மாலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் உள்ள மணிகளை அசைக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மணியாக அசைக்கலாம் அல்லது அனைத்து மணிகளின் ஊடே செல்லும் அந்த நூலை அசைக்கலாம். நூலை அசைத்தால் மாலை அசைவதைப் போல, அனைத்து உயிர்களுக்குள்ளும் ஊடாடும் இறைவனை வாழ்த்தினால் அனைத்து உயிர்களையும் வாழ்த்தியது போலத்தான். 

இராமசாமி வாழ்க, குப்புசாமி வாழ்க, பீட்டர் வாழ்க, அக்பர் வாழ்க, மரம் வாழ்க, மீன் வாழ்க என்று சொல்லிக் கொண்டே போவதை விட , "நமச்சிவாய வாழ்க" என்று இரண்டு வார்த்தைகளில் சொல்லி வாழ்த்துவது எளிது. 

இன்னொரு குறிப்பு. 

நமக்கு யாரவது நன்மை செய்தால் நாம் அவர்களை வாழ்த்துவோம்....நல்லா இருக்கணும்..என்று வாழ்த்துவோம்...இறைவன் நமக்கு எவ்வளவோ தந்து இருக்கிறான்...அவனை வாழ்த்துவது தானே முறை...

பெரியாழ்வார்  வாழ்த்துகிறார்....திருமாலே நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார். பின்னும் பார்க்கிறார்...அவன் மார்பில் வாழும் லக்ஷ்மி தெரிகிறாள்...அவளையும் வாழ்த்துகிறார்...பின்னும் பார்க்கிறார் அவன் கையில் உள்ள சங்கும் சக்கரமும் தெரிகிறது...அவற்றையும் வாழ்த்துகிறார்...சரி அவன் வாழ வேண்டும், அவன் மனைவி, அவன் சங்கு, அவனுடைய சக்கரம் எல்லாம் வாழ்தியாகிவிட்டது...அவனுக்கும் தனக்கும் உள்ள பந்தம் பிரிந்து விடக் கூடாது...அந்த பந்தமும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்....

பாடல்

Monday, November 26, 2012

நல்வழி - இட்டு, உண்டு, இரும்


நல்வழி - இட்டு, உண்டு, இரும் 


அவ்வையார் எழுதிய இன்னொரு நூல் "நல் வழி". அதில் உள்ள பாடல்கள் பொதுவாக எல்லாம் விதிப்படி நடக்கும், நம்மால் ஆவது ஒன்றும் இல்லை, நடப்பது நடக்கட்டும் என்ற ரீதியில் இருக்கும். அதிலிருந்து சற்று வேறுபட்ட பாடல்களைப் பார்ப்போம்....

நாம் மிகுந்த அன்பு வைத்தவர்கள் யாரவது இறந்து விட்டால் நாம் மிக வருந்தி அழுவோம். எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்தவர் திரும்பி வரப் போவது இல்லை. அது மட்டும் அல்ல, நாமும் ஒரு நாள் அந்த வழியே போகத்தான் போகிறோம். அந்த நாள் வரும் வரை, வேண்டியவர்களுக்கு உணவளித்து, நீங்களும் உண்டு, அமைதியாய் இருங்கள்.....

பாடல் 

பிரபந்தம் - அவ்வளவு பெரிய வாயா ?


பிரபந்தம் - அவ்வளவு பெரிய வாயா ?


பொய்கை ஆழ்வாரின் முதல் திரு அந்தாதியில் சில பாசுரங்கள் ஆச்சரியமானவை. மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் இறைவனின் குணங்களைப் பாடும் பொழுது, இவர் மட்டும், இறைவனின் குணங்களை நம்பாதவர் மாதிரி, நீ உலகை அளந்தாயாமே ? அவ்வளவு பெரிய திருவடியா உனக்கு ? உலகை எல்லாம் உண்டாயாமே ? அவ்வளவு பெரிய வாயா உனக்கு ? நீ எப்போ அப்படி எல்லாம் செய்தாய் என்று எனக்குத் தெரியாது என்று கூறி சந்தேகப்படுவதுபோல்  புகழ்கிறார்...

இனிமையான சந்த நயம் மிக்க பாசுரங்கள்...

பாடல்

சிலப்பதிகாரம் - கண்ணகி முறையீடு


சிலப்பதிகாரம் - கண்ணகி முறையீடு


கண்ணகி, காப்பியம் முழுவதும் அமைதியாகத்தான் இருந்தாள். தன் கணவன் கொலையுண்டான் என்று அறிந்தவுடன் புயலாக புறப்படுகிறாள். 

ஒரு புது பெண்ணை பார்க்கிறோம். கோபம். ருத்திரம். ஞாயம் வேண்டி போராடும் குணம். வெடிப்புற பேசும் ஆற்றல். இத்தனை நாள் இவை எல்லாம் எங்கிருந்ததோ என்று வியக்க வைக்கும் மாறுதல்கள். 

கையில் சிலம்போடு பாண்டியன் அரண்மனை வாசல் அடைகிறாள். அவள் கோவம் வாயில் காப்போனிடம் இருந்து வெடிக்கிறது. 

" வாயில் காப்போனே, இந்த மாதிரி முறை தப்பிய மன்னனிடம் வேலை செய்யும் வாயில் காப்போனே, போய் சொல் உன் மன்னனிடம், பரல் கொண்ட சிலம்பை கையில் ஏந்திய படி, கணவனை இழந்த பெண் வாசலில் நிற்கிறாள் என்று போய் சொல் " 

என்று குமுறுகிறாள். 

பாடல் 

Thursday, November 22, 2012

சிலப்பதிகாரம் - கோவலனின் மன்னிப்பு


சிலப்பதிகாரம் - கோவலனின் மன்னிப்பு 


கண்ணகியை விட்டு விட்டு மாதவி பின் போனான் கோவலன். பொருள் எல்லாம் இழந்தான். பின் கண்ணகியிடம் வந்தான். புது வாழ்க்கை தொடங்க வேண்டி இருவரும் மதுரை நோக்கிச் செல்கிறார்கள்.

போகும் வழியில் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் ?

கண்ணகி என்ன நினைப்பாள் ? கோவலன் என்ன நினைப்பான் ?

கோவலன் கண்ணகியிடம் மன்னிப்பு கேட்டானா ? கண்ணகி அதற்க்கு என்ன மறுமொழி கூறினாள்? 

கோவலன் தவறு என்று உணர்ந்தான். "உனக்கு சிறுமை செய்தேன்" என்று ஒரே ஒரு வாக்கியம் சொல்கிறான். "மன்னித்துக் கொள்" என்று சொல்லவில்லை. வருந்துகிறேன் என்று சொல்லவில்லை. 

"நான் வா என்று சொன்னவுடன் வந்து விட்டாய், நீ தான் எவ்வளவு நல்லவள்" என்ற தொனியில் சொல்கிறான். 

வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென

பொருள் 

வறு மொழியாளரோடு = வறுமையான  மொழி பேசுபவர்கள், அர்த்தம் இல்லாமல் பேசுபவர்கள் 

வம்ப பரத்தரோடும் = வம்பு அளக்கும் பரத்தை தன்மை உள்ளவர்களிடமும்

குறுமொழி கோட்டி = சிறு சொற்கள் பேசி

நெடு நகைபுக்கு = பெரிய நகைப்புக்கு ஆட்பட்டு 

பொச்சாபுண்டு = மறதியும் கொண்டு 

பொருள் உரையாளர் = பொருள் பொதிந்த சொற்களை பேசும்  

நச்சுக் கொன்றேர்க்கு =நல்ல நெறிகளை கொன்றோர்க்கு

நன்னெறி உண்டோ ? = நல்ல கதி உண்டா (கிடையாது)

இரு முது குரவர் = வயதான பெற்றோர் (குரவர் = தலைவன், இங்கு பெற்றோர்)

ஏவலும் பிழைத்தேன் = அவர்கள் சொன்ன கட்டளைகளையும் தவறி 
நடந்தேன் (பெற்றோர் சொற்படி கேட்கவில்லை) 

சிறு முதுக் குறைவிக்கு = சிறு வயதான உனக்கும்

சிறுமையும் செய்தேன் = சிறுமை செய்தேன்

வழுவெனும் பாரேன் = தவறு என்றும் நினைக்கவில்லை 

மாநகர் மருங்கி ஈண்டு = நமது பெரிய நகரத்தை விட்டு நீங்கி

எழுக என எழுந்தாய் = என்னோடு வா என்று சொன்னவுடன் வந்து விட்டாய்

என் செய்தனை என  = எனக்காக நீ எவ்வளவு பெரிய காரியம் செய்தாய் 

கண்ணகி கோபக்காரிதான். மன்னனையே, சட்டையை பிடித்து உலுக்கி நீதி கேட்டவள் தான், தன் கோபத்தால் மதுரை மாநகரையே எரித்தவள் தான், துக்கமும், கோபமும் தாங்காமல் தன் மார்பில் ஒன்றை திருகி எறிந்தவள் தான்...

இருந்தாலும் கோவலனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. 

ஒரு வேளை கோவலன் மேல் இருந்த கோபத்தையெல்லாம் பாண்டியனிடமும், மதுரையிடமும் காட்டினாளோ  ? சேர்த்து வைத்திருந்த கோபம் எல்லாம் பொங்கி வந்து விட்டதோ ?


ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்


ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்


தானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது பற்றி தமிழ் இலக்கியம் குறிப்பாக பக்தி இலக்கியம் பக்கம் பக்கமாக சொல்கிறது. 

உடைந்த அரிசிக்கு நொய் அரிசி என்று பெயர். சமைக்க ருசியாக இருக்காது. வேண்டுமானால் கஞ்சி வைக்கலாம். சட்டென்று குழைந்து விடும். அந்த நொய் அரிசியில் ஒரு துணுக்காவது ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று கெஞ்சுகிறார் அருணகிரிநாதர். "நொயிர் பிள அளவேனும் பகிர்மின்கள் " என்று கூறுகிறார். 

(முழுப் பாடல் கீழே 

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

)

தானம் பற்றி சொல்லவந்த வள்ளுவர் 

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்த வற்றுள் எல்லாம் தலை 

என்றார்.

அதாவது நமக்கு கிடைத்த உணவை பகிர்ந்து உண்டு வாழுதல் சிறந்த அறம் என்றார். 

ஔவையார் அதை இன்னும் சுருக்கமாக சொல்ல vizhaikiraar. 

ஏழு  வார்த்தை  எல்லாம் அனாவசியம்  ... மூணே மூன்று வார்த்தையில் சொல்கிறார். 

Wednesday, November 21, 2012

சிலப்பதிகாரம் - நம்மை மறந்தாரை


சிலப்பதிகாரம் - நம்மை மறந்தாரை 


அவர்கள் இளம் காதலர்கள். 

அவன் வேலை நிமித்தமாய் வெளியூர் போய் விட்டான். வேலை மும்முரத்தில் அவளை கூப்பிட்டு பேச மறந்து விட்டான். அவளுக்கு ஒரே தவிப்பு...பத்திராமாய் போய் சேர்ந்தானா, சாபிட்டானா, தூங்கினானா, அந்த ஊர் தட்ப வெப்பம் எப்படி இருக்கிறதோ என்று ஆயிரம் கவலை அவளுக்கு....ஒரு வேளை என்னை மறந்தே விட்டானோ ? இனிமேல் என்னை பற்றி நினைக்கவே மாட்டானோ ?

போனா போகட்டுமே...எனக்கு என்ன...அவன் என்னை மறந்தாலும் என்னால் அவனை மறக்க முடியாது...என்று அருகில் உள்ள பறவைகளிடம் சொல்லி கவல்கிறாள்.....

சிலப்பதிகாரத்தில் வரும் அந்த காதலும் கவலையும் சேர்ந்த வரிகள்...

பாடல்

ஆத்திசூடி - ஆறுவது சினம்

ஆத்திசூடி - ஆறுவது சினம் 

ஆத்திசூடி நாம் ஒன்றாம் வகுப்பிலோ இரண்டாம் வகுப்பிலோ படித்தது.

ஔவையார் எழுதியது. பெண் என்பதாலோ என்னவோ, அவள் எழுதிய பாடல்களுக்கு பெரிய சிறப்பு கிடைக்கவில்லை. 

திருவள்ளுவர் ஏழு வார்த்தைகளில் எழுதியதை இவள் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில் எழுதி விடுகிறாள். ஏழு வார்த்தைகளை பார்த்தே நாம் பிரமித்து போய் இருக்கிறோம். இரண்டு வார்த்தைகளை என்னவென்று சொல்லுவது ?

ஆத்திசூடியில் இருந்து சில விஷயங்களைப் பார்ப்போம்.

ஆறுவது சினம்.

சினம் என்றால் அது ஆறுவது. மணிக் கணக்கில், நாள் கணக்கில், மாதக் கணக்கில் இருக்காது. ஆறிவிடும். ஆறுவது தான் சினம்.

சில உணர்ச்சிகள் ஆறாது. பொறாமை, துவேஷம், காதல், காமம் போன்ற உணர்ச்சிகள் ஆறாது. மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியும்.

சரி. ஆறுவது சினம் ... அதனால் என்ன ?

பாலோ காபியோ சூடாக இருந்தால் என்ன செய்வோம் ? அதை இன்னொரு கிளாசிலோ பாத்திரத்திலோ மாற்றி மாற்றி ஊத்துவோம். அதை ஆத்துவோம் அல்லவா ? அது போல், சினம் வந்தால் இடத்தை மாற்றினால் போதும். சினம் மாறி விடும். 

யார் மீதாவது கோவம் வந்தால், முதலில் அந்த இடத்தை விட்டு நீங்கி விடுங்கள். கோவம் ஆறும். 

இரண்டாவது, பால் பாத்திரம் சூடாக இருந்தால், அதை குளிர்ந்த நீரில் உள்ள பாத்திரத்தில் வைத்தால் அதன் சூடு குறைந்து விடும். அது போல், கோவம் வரும் போது இடத்தை மாற்றி அமைதியான சூழ்நிலைக்கு சென்று விட்டால், கோவம் ஆறி விடும். 

கோபமாய் இருக்கும் போது பேசாதீர்கள், சண்டை போடாதீர்கள். அமைதியாய் இருங்கள்...ஏனென்றால் ...ஆறுவது சினம்....



Tuesday, November 20, 2012

அபிராமி அந்தாதி - உதிக்கின்றதே


அபிராமி அந்தாதி - உதிக்கின்றதே 

அந்தாதி என்றால் ஒரு பாடலின் இறுதி வார்த்தையயை  கொண்டு அடுத்த பாடலின் முதல் வார்த்தை தொடங்க வேண்டும். தமிழில் நிறைய அந்தாதிகள் உண்டு. அபிராமி அந்தாதியின் சிறப்பு முதல் பாடலின் முதல் வார்த்தையும் நூறாவது பாடலின் கடைசி வார்த்தையும் ஒன்றாக இருப்பது. 

உதிக்கின்ற செங்கதிர் என்று முதல் பாடல் ஆரம்பிக்கிறது. 

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே என்று நூறாவது பாடல் முடிகிறது.

பூ சரத்தை தொடுத்துக்கொண்டே போய் கடைசியில் இறுதிக் கண்ணியையை முதல் வார்த்தையோடு சேர்த்து அந்த பூ சரத்தை மாலையாக செய்து விட்டார் பட்டர். 

முதல் பாடல் 

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை 
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

நூறாவது பாடல்

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி 
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும் 
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும் 
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!






இராமாயணம் - அழகிய எமன்


இராமாயணம் - அழகிய எமன் 


எமன் எப்படி இருப்பான் ? கருப்பா, குண்டா, சிவந்த கண்கள், பெரிய பெரிய பற்கள், கலைந்த தலை, கையில் பாசக் கயறு, இன்னொரு கையில் கதை என்று பார்க்கவே பயங்கரமாக இருப்பான் அல்லவா ?

அப்படித்தான் நானும் நினைத்து கொண்டிருந்தேன்...ஆனால் அப்படி அல்ல, எமன் ரொம்ப அழகாக இருக்கிறான்....சொல்லப் போனால் எமன் ஆண் கூட அல்ல ஒரு பெண்...அழகிய மேகலை உடுத்துக்கொண்டு, தேர் தட்டு போன்ற இடுப்பு, கூறிய வாள் போன்ற நெடிய கண்கள் இரண்டு, ஒளி வீசும் இரண்டு மார்பகங்கள், அடக்கமான ஒரு புன்னகை என்று இத்தனயும் கொண்டு வந்தது அந்த கூற்றம். 

ஆமா, அந்த கூற்றுவனுக்கு இத்தனையும் வேண்டுமா...இதுல ஒண்ணு இருந்தா கூட போதுமே , உயிரை எடுக்க ....

என்று சீதையையை பார்த்து விட்டு வந்த இராமன் காதல் வேதனையில் புலம்புகிறான்....

பாடல் 

Friday, November 16, 2012

அபிராமி அந்தாதி - கரை காணா இன்பம்


அபிராமி அந்தாதி - கரை காணா இன்பம்


அவள் இன்னைக்கு வருவாளா ? வர்றேன்னு சொன்னாளே ? ஒரு வேளை அது நாளைக்கோ ? நான் தான் சரியாக கேட்கலையோ ? வர்றேன்னு சொன்னா வந்துருவா ? இல்ல வர்ற வழியில என்ன பிரச்சனையோ பாவம்....

அது யாரு அவ தான ? அவளை மாதிரி தான் இருக்கு. 

அந்த உருவம், அந்த நடை, அவள் தான்னு நினைக்கிறேன். ஆமா, அவளே தான்....அப்பாட, ஒரு வழியா வந்துட்டாள்...அவ கிட்ட வர வர இதய துடிப்பு ஏறுகிறது...இன்னும் கிட்ட வந்துட்டாள்...லேசா வேர்க்குது...நிமிந்து பார்க்கிறாள்...மனதுக்குள் ஆளுயர அலை...அவள் கிட்ட வர வர மனதுக்கு சந்தோஷ ஊற்று குமிழியிட்டு கிளம்புகிறது...அருகில் வந்து விட்டாள்...தொடும் தூரம் தான்...அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து வந்த மாதிரி ஒரே மகிழ்ச்சி மனதுக்குள்ளே...எங்கு பார்த்தாலும் வெள்ளம்...கரை காணா முடியாத வெள்ளப் பெருக்கு ..தத்தளிக்கிறேன் அந்த சந்தோஷ சாகரத்தில்...

மிகுந்த சந்தோஷம் வரும் போது அறிவு விடை வாங்கிக் கொண்டு போய் விடும்...ஆனால் அவளைப் பார்க்கும் போது உண்டாகும் அளவு கடந்த மகிழ்ச்சியிலும் அறிவு விடை பெற்று போகவில்லை...

அவள் அறிவையும் ஆனந்தத்தையும் ஒன்றே தருகிறாள்....


பாடல் 

ராமாயணம் - அறிவின் பயன்


ராமாயணம் - அறிவின் பயன்


சீதை உப்பரிகையில் இருந்து இராமனைப் பார்த்தாள். பார்த்தவுடன் காதல் கொண்டாள். பின்னால் சிவ தனுசை இராமன் வளைத்தான். வில்லை வளைத்தவனுக்கு மாலை இட வருகிறாள் சீதை. 

வில்லை வளைத்தவன் அவள் பார்த்த அதே வாலிபன் தானா என்று அவளுக்குத் தெரியாது. 

அவள் மனம் பட பட வென்று அடித்துக் கொள்கிறது. அவனாய் இருக்குமோ ? அவனாய் இருக்கணுமே ...அவனாய் இல்லாட்டி என்ன செய்வது என்று குழம்புகிறாள். 

திருமண மண்டபம் வருகிறாள். இராமனைப் பார்க்கிறாள். மனதில் ஒரு நிம்மதி. அப்பாட...இவன் தான் அவன் என்று அமைதி கொள்கிறாள்....

இது என்ன பெரிய விஷயம் ?

அறிவுள்ளவர்கள் இறைவனை தேடுவார்கள். அவனை அறிந்து கொள்ள முயல்வார்கள். அவன் திருவடி அடைய முயற்சி செய்வார்கள். நிறைய புத்தகம் படிப்பார்கள்...பெரியவர்கள் சொல்வதை கேட்பார்கள்....இறைவன் இதுவா, இறைவன் அதுவா...இதுவாக இருக்குமா ? அதுவாக இருக்குமா என்று கிடந்து குழம்புவார்கள். இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இவ்வளவு துன்பமும் துயரமும் என்று குழம்பி கிடப்பார்கள். 

முடிவில் அவனை அவர்கள் அறியாலாம். அப்படி அவர்கள் கடைசியில் இறைவனை அறியும்போது அவர்கள் மனதில் எப்படி ஒரு நிம்மதியும், அமைதியும், மகிழ்ச்சியும் பிறக்குமோ அது போல் கடைசியில் இராமனை கண்ட சீதைக்கு மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பிறந்தது...

எப்படி  உதாரணம் ? 

அரை குறை அறிவு நம்மை குழப்புகிறது. இதுவா, அதுவா, இவனா, அவனா என்று மனம் பேதலிக்கிறது. அறிவு முதிர்ச்சி அடையும் போது இறைவனை அறிய முடிகிறது. அப்படி அறிவின் முதிர்ச்சி அடைந்தவர்களின் மன நிலையை ஒத்திருந்தது சீதையின் மன நிலை.

பாடல் 

Thursday, November 15, 2012

இராமாயணம் - நச்சுப் பொய்கை மீன்


இராமாயணம் - நச்சுப் பொய்கை மீன் 


மீன் வாழ்வது நீரில். நீரை விட்டு வெளியே வந்தால் அது இறந்து போகும். அப்படி அது வாழும் அந்த நீரில் நஞ்சைக் கலந்தால், அந்த மீன் என்ன செய்யும் ? தண்ணீரை விட்டு குதித்து வெளியேயும் செல்ல முடியாது, தண்ணீரிலும் இருக்க முடியாது ... அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை. 

அது போல் இருந்தது மாரீசனுக்கு. 

இராவணன் , மாரீசனை பொய் மான் வடிவில் போ என்றான். போனால் இராமன் கையால் சாவு உறுதி. போகா விட்டால் இராவணன் கையால் சாவு உறுதி. நச்சு பொய்கை மீன் போல் ஆனான் என்றான் கம்பன். என்ன ஒரு கற்பனை. கற்பனையில், கம்பனை மிஞ்ச ஆள் கிடையாது. 

பாடல்

தேவாரம் - யாதும் சுவடு படாமல்


தேவாரம் - யாதும் சுவடு படாமல்


கோவிலுக்கு செல்லும் போது அமைதியாக, பக்தி நிறைந்த மனதுடன் செல்ல வேண்டும்.

சில பெண்கள் கோவிலுக்குப் போவதே தங்களிடம் உள்ள பட்டு சேலையை காண்பிக்க, புதிதாக வாங்கிய நகைகளை மற்றவர்களுக்கு காண்பிக்கத்தான். 

கோவிலுக்கு வரும் சில பெண்களைப் பார்த்தால் தெரியும்...ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்ததவர்கள் மாதிரி இருப்பார்கள். 

சத்தம் போட்டு பேசிக் கொண்டு வருவது, இறைவன் திருநாமம் அல்லாமால் மற்ற விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வருவது...அது எல்லாம் சரி அல்ல. 

நாவுக்கரசர் கோவிலுக்குப் போகிறார். எப்படி ?

பக்தர்கள் முன்னால் போகிறார்கள். அவர், அவர்களின் பின்னால் போகிறார். அதுவும் யாது ஒரு சுவடும் படாமல்...சத்தம் இல்லாமல், தான் வந்ததே தெரியாமல் போகிறார்...அவ்வளவு பணிவு, அடக்கம்....

அப்படி போனதால் அவருக்கு இறை தரிசனம் கிடைத்தது...கண்டறியாதன கண்டேன் என்றார். இந்த உலகமே இறைவனும் இறைவியும் சேர்ந்த திருக் கோலமாய் தெரிந்தது அவருக்கு. 

 

Wednesday, November 14, 2012

இராமாயணம் - உணவுக் கட்டுப்பாடு


இராமாயணம் - உணவுக் கட்டுப்பாடு 


தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும். வீட்டில் நிறைய பலகாரம் செய்வார்கள். அக்கம் பக்கம் வீடுகளில் இருந்தும் தின் பண்டங்கள் வரும். 
வந்ததை தூரவா போடா முடியும் என்று எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் உண்டால் கூட உடம்புக்குத் தீமை தான். 

சாப்பிடாவிட்டால் கொடுத்தவர்கள் மனம் சங்கடப் படும்...என்ன செய்யலாம் ?

இராமாயணத்தில் ஒரு இடம். இராமன் குகனின் இருப்பிடத்தில் இருக்கிறான். குகன் தேனும், தினை மாவும், மீனும், பக்குவப் படுத்தி கொண்டு வந்து தருகிறான். 

இராமான் என்ன செய்தான் ? எல்லாவற்றையும் உண்டானா ? 

ஆஹா, அருமையான உணவு..இனிமேல் எப்ப கிடைக்குமோ என்று ஒரு பிடி பிடிக்கவில்லை. 

" நீ அன்போடு கொண்டு வந்த இந்த உணவு அமிழ்தை விட சிறந்தது ... நானும் இதனை இனிமையாக உண்டாதகக் கொள்" என்று சொன்னான். சாப்பிடவில்லை. 

இராமன் உணவு கட்டுப்பாட்டை நமக்கு காண்பிக்கிறான்.

பாடல்

Saturday, November 10, 2012

திருக்குறள் - பிறவிப் பெருங்கடல்


திருக்குறள் - பிறவிப் பெருங்கடல் 


பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா:    
ரிறைவ னடிசேரா தார்:                              .

பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

இந்த குறளுக்கு பொதுவாகப் பொருள் சொல்லும் போது பிறவியாகிய பெருங்கடலை நீந்துபவர்கள் இறைவனின் திருவடியை அடைவார்கள். மற்றவர்கள் அடைய மாட்டார்கள் என்று கூறுவார்கள்.

பரிமேல் அழகர் உரையும் அப்படித்தான் இருக்கிறது 

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் = இறைவன் அடி என்னும் புணையைச்சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் = அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போமே.

ஒரு பரிட்ச்சை இருக்கிறது. அதை எழுதினால் தேர்ச்சி பெறலாம் என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது. எழுதாவிட்டால் தேர்ச்சி பெற முடியாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ?

"நீந்தார் இறைவனடி சேராதார்" என்று சொல்லுவதன் மூலம் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் ?

நீந்தாதவர்கள் கட்டாயம் இறைவனடி சேர முடியாது. அதாவது பரீட்ச்சை எழுதாவிட்டால் கட்டாயாம் தேர்ச்சி பெற முடியாது. அதில் ஒண்ணும் சந்தேகம் இல்லை.  

சரி பரிட்ச்சை எழுதியவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெறுவார்களா என்றால், அதுவும் இல்லை. நன்றாகப் படித்து, ஒழுங்காக எழுதினால் ஒரு வேலை தேர்ச்சி பெறலாம். 

இந்த பிறவியான பெருங்கடல் ஆழமானது, அகலமானது, ஆபத்து நிறைந்தது, நிற்க இடம் இல்லாதது, ஒதுங்க நிழல் கிடையாது....எந்நேரமும் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். நிறுத்தினால் மூழ்கி விடுவோம். 

பிறவியை பெரிய மலை என்றோ, அடர்ந்த காடு என்றோ சொல்லி இருக்கலாம். நிலத்தில் நடந்து போனால், சற்று நேரம் நின்று இளைப்பாறிக் கொள்ளலாம். கடலில் இளைப்பாற முடியாது. 

எந்நேரமும் அவன் திருவடி நோக்கி நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். கை வலிக்கிறதே, கால் வலிக்கிறதே என்று நிறுத்தி விட்டால், உள்ளே போக வேண்டியதுதான். 

நீந்தார் இறைவனடி சேராதார். 

நீந்துங்கள்.

இராமாயணம் - நீ என்னை கட்டி அணை


இராமாயணம் - நீ என்னை கட்டி அணை 


இராமர் பட்டாபிஷேகம் முடிந்து விட்டது. இராமன் எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்து விடை கொடுத்து அனுப்புகிறான். அனுமன் முறை. 

என்ன கொடுப்பது என்று யோசிக்கிறான் ?

நீ என்னை கட்டி அணை என்கிறான். நமது பண்பாட்டில் , அணைப்பவன் ஒரு படி மேலே, அணைக்கப் படுபவன் ஒரு படி கீழே என்பது மரபு. கட்டி அணைத்து தட்டிக் கொடுத்தால் , அணைத்து தட்டிக் கொடுப்பவன் உயர்ந்தவன், தட்டி கொடுக்கபடுபவன் சிறியவன் என்பது முறை. 

இங்கே இராமன் அவனே போய் அனுமனை கட்டி அணைக்கவில்லை. அனுமனைப் பார்த்து சொல்கிறான், நீ என்னை கட்டி அணை என்று. அனுமனுக்கு தன்னை விட ஒரு உயர்ந்த இடத்தை அளிக்கிறான் இராமன். வேறு யாருக்கும் அவன் தராத இடம். 

பக்தனை கடவுள் உயர்த்தும் இடம். 

அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்றார் வள்ளலார். 

யான் உன்னை தொடர்ந்து சிக்கன பிடித்தேன் என்றார் மணிவாசகர்.

பக்தனுக்குள் கடவுள் அடங்கிய இடம். 

பாடல்

Friday, November 9, 2012

முத்தொள்ளாயிரம் - மாலை வராமல் இருக்க


முத்தொள்ளாயிரம் - மாலை வராமல் இருக்க


யார் சொல்லி கேட்கிறது இந்த மாலை வேளை. வந்து பாடாய் படுத்துகிறது. வந்தால் சட்டென்று போகவும் மாட்டேன் என்கிறது. மாலை மட்டும் வந்தால் பரவாயில்லை, அதோடு கூட இந்த ஆயர்கள் வாசிக்கும் புல்லாங்குழல் ஒலியும் சேர்ந்து அல்லவா வருகிறது. 

இளவளவன் என்ற இந்த நாட்டு இராஜா இருந்து என்ன பிரயோஜனம். இந்த மாலை பொழுது வரக்கூடாது என்று ஒரு கட்டளை போட்டா என்னவாம். அப்படி ஒரு கட்டளை போட்டு , மாலை பொழுது வராமால் தடுத்து என் உயிரை காப்பாற்ற முடியலை, இவன் தான் இந்த உலகை எல்லாம் காப்பாற்றப் போறானாக்கும்...ஹும்.....

பாடல் 

Thursday, November 8, 2012

திருக்குறள் - நீண்ட நாள் வாழ


திருக்குறள் - நீண்ட நாள் வாழ 

நீண்ட நாள் வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது ? 

ஆனால் எப்படி நீண்ட நாள் வாழ்வது ? 

வள்ளுவர் அதற்க்கு வழி காட்டுகிறார்..

பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க     
நெறிநின்றார் நீடுவாழ் வார்                           

அதாவது,

பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்.

பொறி வாயில் ஐந்து அவித்தான் = மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் 

பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது;

பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் = மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார்;

நீடு வாழ்வார் = பிறப்பின்றி எக்காலத்தும் ஒருதன்மையராய் வாழ்வார்.

என்பது பரிமேலழகர் உரை. 

எனக்கென்னமோ திருவள்ளுவர் ஒரு உரைக்குள் அடங்குபவர் அல்ல என்று தோன்றுகிறது. 

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம்.

நாக்கை எடுத்துக் கொள்வோம். உடம்புக்கு சர்க்கரை வியாதி. இனிப்பு சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் சொல்லி விட்டார். எனவே இனிப்பு சாப்பிடுவது இல்லை.  இருந்தாலும் இனிப்பு வேண்டும் என்கிறது நாக்கு. அறிவு சொல்கிறது சாப்பிடாதே என்று. மனம் சொல்கிறது, "ஒரே ஒரு லட்டு தானே,சாப்பிடு பரவா இல்லை, மாத்திரை போட்டுக் கொள்ளலாம்...இதை எல்லாம் சாப்பிடாமல் இருந்து என்ன பயன் " என்று.

யாரும் பார்க்க வில்லை. ஒரு லட்டு சாப்பிட்டால் ஒண்ணும் குடி முழுகி போய் விடாது. இன்னைக்கு மட்டும் சாப்பிடலாம் என்று சாப்பிட்டு விடுகிறோம். 

ஒழுக்கமாகத்தான் இருக்கிறோம். இருந்தாலும், நடுவில் ஒரு கள்ளத்தனம். 

உன்னது அல்ல. தொடாதே என்று அறிவு  சொல்கிறது. ஒரு முறை தானே என்று மனம் உந்துகிறது. நமக்கு நாமே உண்மையாக இல்லை. பொய் கொஞ்சம் இருக்கிறது. பொய் தீர வேண்டும். 

அதைத் தான் வள்ளுவர் " பொய் தீர் ஒழுக்க நெறி" என்கிறார். 

அது என்ன பொறி வாயில் ஐந்து அவித்தான் ? கடலை பொரியா? இல்லை.

பொறி என்றால் கூண்டு. எலிப் பொறி என்கிறோம் அல்லவா. இந்த ஐந்து புலன்களும் நம்மை பொறியில் சிக்க வைக்கப் பார்க்கின்றன. எப்படி வடையின் வாசனையால் பொறியில் எலி அகப்பட்டுக் கொள்கிறதோ அது போல், இந்த ஐந்து புலன்களும் நம்மை சிக்கலில் மாட்டி விடுகின்றன. வாழ் நாளை குறைக்கின்றன.

வீட்டைப் பார்த்தால் வாங்க வேண்டும், நகையை பார்த்தால் வாங்க வேண்டும், புது கார், புது செல் போன் என்று அலைகிறது.

கடைத் தெருவில் உள்ள ஒவ்வொரு கடையும் ஒரு எலிப் பொறி மாதிரி..மனிதப் பொறிகள். மந்தை மந்தையாகப் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.

பொறி வாயில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். 

சரி அதுக்காக ஆசையே படமால் இருக்க முடியுமா ? ஒண்ணுமே வேண்டாம் என்றால் எப்படி உயிர் வாழ்வது ?

ஐந்து அவித்தான் என்றார். அவித்தல் என்றால் என்ன ? 

நீராவியால் வைத்து வேக வைப்பதற்கு அவித்தல் என்று பெயர். அவித்தால் பொருள் மென்மையாக மாறும். அவித்த பொருள் உடலுக்கு நன்மை செய்யும். அவிக்காத அரிசி, காய் கிழங்கு, மாமிசம் போன்றவை உடலுக்கு தீங்கு செய்யும். அவித்த பின் அதுவே உடலுக்கு உரம் செய்யும். 

மென்மையான ஆசைகள், தேவையான ஆசைகள், அளவான ஆசைகள் நமக்கு நன்மை செய்யும். 

ஐம்புலன்கள் வழியே செல்லும் ஆசைகளை அப்படியே பச்சையாக அனுப்பாமல் அவற்றை பிடித்து கொஞ்சம் அவித்து பக்குவப் படுத்தி அனுப்ப வேண்டும். 

நிற்றல் என்றால் நிலைத்து நிற்றல் என்று பொருள் . இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று தண்ணி அடிப்பது, புகை பிடிப்பது, இனிப்பு சாப்பிடுவது போன்றவை கூடாது. பொய் தீர் ஒழுக்க நெறியில் நிலைத்து நிற்க வேண்டும்.

அது நீண்ட நாள் வாழும் வழி. 

வள்ளுவர் வழி காட்டி விட்டார். போவது உங்கள் விருப்பம்.




திருவாசகம் - என் வேண்டுதல், உன் விருப்பம்


திருவாசகம் - என் வேண்டுதல், உன் விருப்பம்


ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான்.

அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்பு. பசி. தாகம். கொஞ்சம் பயம் வேறு.

சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் உட்கர்ந்து விட்டான்.

அது கற்பக மரம். நம் மனத்தில் நினைப்பதை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்தி கொண்டது. ஆனால் அது அந்த இளவரசனுக்குத் தெரியாது.

ரொம்ப தாகமா இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான். சற்றே திரும்பி பார்த்தால், அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி, அதில் குமிழியிட்டு நல்ல தண்ணீர் பொங்கி வந்து கொண்டு இருந்தது. தாகம் தீர குடித்தான்.

சற்று நேரத்தில் பசி வந்தது. ஏதாவது சாப்பிட கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான், அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன. அவனுக்கிருந்த பசியிலும், களைப்பிலும் என்ன ஏது என்று நினைக்க நேரமில்லை. அந்த பழங்களை உண்டு பசி ஆறினான். 

பிரயாணக் களைப்பு, உண்ட மயக்கம், தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது. அட டா இப்ப பஞ்சு மெத்தையோடு ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான், உடனே ஒரு கட்டில் வந்தது. 

ஏறி படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது. பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்....டங் என்று ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள். 

அசந்து தூங்கினான். திடீரென்று முழிப்பு வந்து விழித்துக் கொண்டான்.

என்னடா இது, நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே, ஒரு வேளை இது ஏதாவது பேய் பிசாசு வேலையா இருக்குமோ...அந்த பிசாசு இங்க வந்துட்டால் ? என்று நினைத்தான். டங் என்று ஒரு பெரிய பிசாசு வந்தது. கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே. 

ஐயோ, இந்த பிசாசு நம்மை கடித்து தின்று விடுமோ ? என்று நினைத்தான், அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது. 

இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம்.

நல்ல பெண் என்று தான் நினைத்து திருமணம் செய்து கொள்கிறான். இவள் தான் வேண்டும். இவள் இல்லாவிட்டால் வாழ்கையே இல்லை என்று நினைக்கிறான். திருமணம் முடிந்தவுடன், ஐயோ, இவளுக்கா ஆசைப் பட்டேன் என்று நொந்து கொள்ளுகிறான்.

ஆசை ஆசையாக வீட்டை வாங்குகிறான், கட்டுகிறான்...அக்கம் பக்கம் தொல்லை ... ஏண்டா இங்க வந்தோம் என்று ஆகி விடுகிறது...

பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள் திரும்பிப் பார்க்காமல் போய் விடுகின்றன ... மனம் கிடந்து கவல்கிறது...

இப்படி வேண்டும் வேண்டும் என்று கேட்டது எல்லாம் பின்னாளில் வேண்டாம் வேண்டாம் என்று மறுதலிக்கும் படி ஆகி விடுகிறது...
 

கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று. அவன் பார்த்து செய்யட்டும் என்று எல்லாவற்றையும் அவனிடமே விட்டு விட்டார் மணி வாசகர்...


பாடல் 

இராமயணம் - வாயெல்லாம் உலர்ந்தது


இராமயணம் - வாயெல்லாம் உலர்ந்தது

ஒரு ஆபத்து என்றால், நமக்கு இதயம் பட படவென்று அடித்துக் கொள்ளும், வியர்க்கும், வாயெல்லாம் உலர்ந்து போகும்.

கும்ப கர்ணன் போர் களத்திற்கு வந்திருக்கிறான். அவனை பார்க்க விபீடணன் செல்கிறான்.

விபீடணன் சென்றது கும்பகர்ணனை இராமன் பக்கம் இழுக்க. அப்படி கும்ப கர்ணன் வந்து  விட்டால் அவனுக்கு ஆபத்து வராது என்ற சகோதர பாசத்தில்

கும்ப கர்னணன் நினைத்தான், எங்கே விபீடணன் மீண்டும் இராவணன் பக்கம் வந்து விடுவானோ, அப்படி வந்து விட்டால் அவனுக்கு ஆபத்து ஆயிற்றே என்று பதறுகிறான் - சகோதர பாசத்தில்.

விபீடணனை பாரத்ததும் கும்பகர்ணன் சொல்கிறான்...

"....இராவணனால் நம் குலத்தின் இயல்பு அழிந்தது. ஆனால் உன்னால் அது சரி செய்யப்பட்டு புண்ணியம் பெற்றது. உன் தோள்களைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நீ என்னை பார்க்க இங்கு வந்தது எனக்கு மன உளைச்சலை தருகிறது. எங்கே உனக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று என் வாய் எல்லாம் உலர்கிறது..."

பாடல்

Wednesday, November 7, 2012

திருக்குறள் - வினையும் பயனும்


திருக்குறள் - வினையும் பயனும்


நல் வினை , தீ வினை என்று செயல்களை இரண்டாகப் பிரித்து வைத்து இருக்கிறோம். நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும். தீயது செய்தால் தீமை பிறக்கும் என்பது நம்பிக்கை.  செயல்களின் பலன்கள் இந்தப் பிறவியில் கிடைக்காவிட்டால் அடுத்து வரும் பிறவிகளில் கிடைக்கும் என்பது இன்னொரு நம்பிக்கை. 

நல்ல வினை செய்தால், அதன் பலன்களை அனுபவிக்க இன்னொரு பிறவி அடைய வேண்டி வரும். அந்தப் பிறவியில் நல்லதோ கெட்டதோ செய்ய நேரிடும். பின் அதன் பலனாக மீண்டும் ஒரு பிறவி என்று இது ஒரு முடிவில்லாமல் போய் கொண்டே அல்லவா இருக்கும். இதுக்கு ஒரு முடிவே கிடையாதா ?

பற்றித் தொடரும் இரு வினைகளை எப்படி நிறுத்துவது ? இதில் இருந்து எப்படி வெளி வருவது ?

இறை அருளால் இந்த வினை பயன்கள் நம்மை சேராது என்கிறார் வள்ளுவர். 

பாடல்

Tuesday, November 6, 2012

அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம்


அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம் 


அபிராமி, இரவும் பகலும் உன் நினைவாகவே இருக்கிறது. நான் எதை எழுதினாலும், உன்னைப் பற்றியே இருக்கிறது. நான் படிப்பது எல்லாம் உன் பெயரைத்தான். உன் பாதத்தை பார்க்கும் போது என் மனத்திலும் ஈரம் கசிகிறது. உன் அடியார்களுடன் தான் நான் எப்போதும் இருக்கிறேன். 

இதை எல்லாம் செய்ய நான் என்ன புண்ணியம் செய்தேனோ. இந்த பிறவி எடுத்த பின் பெரிதாய் ஒன்றும் புண்ணியம் செய்து விடவில்லை. இதற்க்கு முன்னால் இருந்த பிறவிகளில் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். 

ஒரு பூ மலர்வதைப் போல், இந்த ஏழு உலகங்களையும் மலரவைத்தவளே, என் தாயே என்று கரைகிறார் பட்டர்.

இந்த பிறவியில் புண்ணியம் ஏதும் செய்யவில்லை என்கிறார் பட்டர். அவருக்கே அப்படிஎன்றால் நாம் எல்லாம் எம் மாத்திரம் ?

அவருடைய மனம் கல் போல கடினமாக இருக்கிறதாம். பக்தி ஏறும் போது, அந்த கல்லும் லேசாக விரிசல் விட்டு, அதன் வழியே அன்பும் கருணையும் கசிந்து வெளி வருகிறதாம். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி பெருமான். இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால், மனம் நெகிழ வேண்டும். கல்லின் மேல் எப்படி திருவடி பதியும் ?

பாடல்:

Monday, November 5, 2012

அபிராமி அந்தாதி - அபிராமியின் பழைய இருப்பிடம்


அபிராமி அந்தாதி - அபிராமியின் பழைய இருப்பிடம்



நீங்கள் ஒரு திருமணம் ஆகாத வாலிபர். ஒரு நாள் உங்கள் வீட்டுக்கு உங்கள் வருங்கால மனைவி வருகிறாள். வீடு குப்பை மாதிரி கிடக்கிறது. பிரம்மச்சாரியின் வீடு பின் எப்படி இருக்கும். அவள் இறைந்து கிடந்த புத்தகங்களை எல்லாம் அழகாக அடுக்கி வைக்கிறாள், தினசரி தாள்களை மடித்து வைக்கிறாள், கண்ட படி கிடந் துணிகளை மடித்து அலமாரியில் வைக்கிறாள், இரைந்து கிடக்கும் CD போன்றவற்றை ஒழுங்கு படுத்தி வைக்கிறாள். எல்லாவற்றையும் சரி செய்து விட்டு, கோணல் மாணலாக கிடந்த நாற்காலி மேஜை எல்லாம் சரியாக வைத்து விட்டு, தனக்கு ஒரு நாற்காலியையை இழுத்துப் போட்டு கொண்டு ஜம்மென்று நடுவில் உட்கர்ந்து கொண்டு "இப்ப எப்படி இருக்கு " என்று கேட்கிறாள் ...என்னவோ ரொம்ப நாளாய் இந்த வீட்டை அவள் தான் பராமரித்தது போல...
 
அதில் உங்களுக்கு வருத்தம் ஒன்றும் இல்லையே ?

அனைத்து பொருள்களும் அதனதன் இடத்தில் பொருத்தமாக போய் உட்கார்ந்து கொண்டு விட்டன. 

பட்டரின் மனத்திலும் அபிராமி வந்து இருந்து கொண்டாளாம், ஏதோ பழகிய இடம் போல. 

பாடல் 

Sunday, November 4, 2012

திருக்குறள் - உப்பு உற்பத்தி

திருக்குறள் - உப்பு உற்பத்தி 

உப்பு எப்படி உற்பத்தி செய்வார்கள் தெரியுமா ? 

முதலில் பாத்தி கட்டி அதில் உப்பு தண்ணீரை (கடல் நீரை)  தேக்கி வைப்பார்கள். 

சூரிய வெப்பத்தில் அந்த உப்பு நீர் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகும். அதில் உள்ள உப்பு தங்கி விடும்.

முதலில் உப்பு நீரை இறைக்க வேண்டும். பின் அது ஆவியாகும் வரை காத்திருக்க வேண்டும். 

வள்ளுவர் இன்னொரு உப்பு உற்பத்தி முறையையை சொல்கிறார். 

அபிராமி அந்தாதி - மரணம் பிறவி இரண்டும் எய்தார்


அபிராமி அந்தாதி - மரணம் பிறவி இரண்டும் எய்தார் 


 தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் இருந்தார்கள். அவர்கள் பொன், வெள்ளி மற்றும் இரும்பிலான மூன்று உலகங்களை செய்து வைத்துக் கொண்டு எல்லோரையும் துன்புறுத்தி வந்தார்கள். அந்த உலகங்களுக்கு அரண் (தடுப்புச் சுவர்) இருந்தது....நாடுகளுக்கு கோட்டைச் சுவர் இருப்பது மாதிரி. 

அந்த அரணை பெரிய விஷயம் என்று எண்ணி மனதில் அருளே இல்லாமல் எல்லோரையும் துன்புறுத்திய அரக்கர்களின் கோட்டையை அழித்த சிவனும், திருமாலும் அபிராமி இடம் சரணம் சரணம் என்று வந்தனர். அவள், அவளுடைய அடியார்களின் மரணம் பிறவி இரண்டையும் வரமால் காப்பாள். 

"அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர்"

என்ன பொருள் ?

பொருட் செல்வம் பெரிது என்று நினைக்க நினைக்க அருள் நம்மை விட்டு விலகிப் போய் விடுகிறது. பணம் சேர்க்கும் குறிக்கோள் வந்தவுடன், மற்றவர்களுக்கு உதவ நேரமும் இருப்பது இல்லை, மனமும் இருப்பது இல்லை. பொருளே நிரந்தரம் என்று நினைத்து விடுகிறார்கள். மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஒரு அசுரத்தனம் வந்து விடுகிறது.  

அப்படிப் பட்ட அசுரர்கள் கடைசியில் அழிந்து போகிறார்கள். 

பிறவி என்று இருந்தால் பொருள் வேண்டும். நமக்கு, நம் குடும்பத்திற்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, நமது எதிர் காலத்திற்கு என்று பொருள் கட்டாயம் வேண்டும். எவ்வளவு பொருள் இருந்தாலும் பத்தாது என்றே தோன்றுகிறது. அதை செற்பதிலேயே காலம் முழுவதும் சென்று விடுகிறது. பின் என்ன தான் இதற்க்கு வழி ?

அபிராமி ஒன்றே இதற்க்கு வழி. அவளை வணங்கினால் பிறவியே வராது. பின் எங்கிருந்து பொருள் ஆசை வரும் ? 

மரணமும் இன்றி, பிறவியும் இன்றி ஆனந்த பெறு வாழ்வு வாய்க்கும். 

பாடல்

பிரபந்தம் - இந்த சொத்து எல்லாம் யாருடையது ?


பிரபந்தம் - இந்த சொத்து எல்லாம் யாருடையது ?


வேதங்களை படித்து அறிந்து கொள்வது மிகக் கடினமான காரியம். முதலில் அதற்க்கு சமஸ்க்ரிதம் தெரிய வேண்டும். அந்த மொழியின் உச்சரிப்பு புரிய வேண்டும். வேதங்கள் எழுதப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட சமஸ்க்ரித சொற்களுக்கு அர்த்தம் புரிய வேண்டும். கால வழக்கில் ஒரே வார்த்தை வேறு அர்த்தம் பெறுவதும் உண்டு. ஆத்மா என்ற சொல்லுக்கு ஐம்பத்து ஆறு அர்த்தங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். எது சரியான அர்த்தம் என்பதில் குழப்பம் வரலாம். வேதம் ஓத சில வரைமுறைகள், கட்டுப்பாடுகள், உண்டு.  

நமக்கு அந்த பிரச்சனை எல்லாம் இல்லை. வேதத்தின் சாரத்தை தமிழில் வடித்து மிக மிக இனிமையாக தந்து இருக்கிறார்கள். முன்னூறே பாசுரத்தில். 

பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற மூன்று ஆழ்வார்கள் நூறு பாசுரம் எழுதி இருக்கிறார்கள். மொத்தம் முந்நூறு பாசுரம்.  

இதை தமிழ் வேதம் என்று பெரியவர்கள் கூறுவார்கள்

தேமதுர தமிழில் படிக்க படிக்க திகட்டாத பாடல்கள். 

பொய்கை ஆழவார் எழுதிய நூறு பாடல்கள் முதல் திருவந்தாதி என்று அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில பாசுரங்களை பார்ப்போம்.

நாம் சொத்து சேர்த்து வைக்கிறோம். மனை, வீடு, தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் என்று சேர்த்து வைக்கிறோம். இவை எல்லாம் நம்மது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். 

நமக்கு முன்னால் இவற்றை எல்லாம் யார் யாரோ வைத்து இருந்தார்கள். நமக்கு பின்னால் இது யார் யாரிடமோ இருக்கப் போகிறது. இந்த பிரபஞ்சத்தின் கால அளவை வைத்து பார்க்கும் போது, நாம் இவற்றை வைத்து இருக்கும் கால அளவு ஒரு சிறு நேரத்துளி. அவ்வளவு தான். கொஞ்ச நேரம் வைத்து இருக்க இந்த சண்டை, சச்சரவு, அடி தடி, கோபம், தாபம், எல்லாம். 

இந்த சொத்துகளை இதற்க்கு முன்னால் நம் தந்தை, அதற்க்கு முன்னால் நம் தத்தா வைத்து இருந்திருக்கலாம். அல்லது நாம் யாரிடம் இருந்து வாங்கினோமோ அவர்களின் தந்தை அல்லது பாட்டன் வைத்து இருந்து இருக்கலாம்.

பொய்கை ஆழ்வார் மேலும் ஆழமாக நம்மை சிந்திக்கச் சொல்கிறார். 

இந்த உலகம் முழுவதும் அவன் உருவாகினான். 

சரி, அவன் உருவாக்கினால் என்ன. ஒரு தொழிற்ச்சாலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டால் அது அந்த தொழிற்ச்சாலையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு சொந்தம் இல்லையே என்று வாதிடலாம். 

அவன் உருவாகியது மட்டும் அல்ல, அவன் அதை பிரளய காலத்தில் தன் வயிற்றில் வைத்து காப்பாற்றினான். 

காப்பாற்றியது மட்டும் அல்ல மீண்டும் நாம் அனுபவிக்க அதை நமக்குத் தந்தான். 

இது அவனிடம் இருந்து வந்தது. மீண்டும் அவனிடம் போகும். இடையில் மிக மிக சிறிது காலம் நீங்கள் அதை வைத்து இருக்கிறீர்கள்.

பாடல்