கம்ப இராமாயணம் - இராமனின் சகோதர சோகம்
இந்திரஜித்தின் அம்பினால் இலக்குவன் அடிபட்டு மூர்ச்சையாகிக் கிடக்கிறான்.
அவன் இறந்து விட்டானோ என்று எண்ணி, இராமன் புலம்புகிறான்.
"என் தந்தை தசரதன் இறந்தான்,
இந்த உலகம் எல்லாம் ஆளும் அரசுரிமையை தந்தேன்,
அப்போது எல்லாம் நீ என்னுடன் இருக்கிறாய் என்ற தைரியத்தில் இருந்தேன்.
இப்போது நீ போய் விட்டாய்.
என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.
நான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன்...நானும் உன்னோடு வந்து விடுகிறேன்" என்று கதறுகிறான் இராமன்.
நெஞ்சை உருக்கும் சோகம்.