Showing posts with label Nammalwaar. Show all posts
Showing posts with label Nammalwaar. Show all posts

Friday, August 3, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ள மனம் தவிர்த்தே


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ள மனம் தவிர்த்தே 


சில சமயம் சிறந்த பக்தர்களுக்குக் கூட இறைவன் மேல் சந்தேகம் வரும்..."கடவுள் என்று ஒருவன் இருந்தால் எனக்கு ஏன் இவ்வளவு துன்பம் வருகிறது...நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்..ஒருவேளை இந்த கடவுள், வேதம் எல்லாம் பொய் தானோ" என்று சந்தேகம் வரும். 

கடவுளை நம்பாத நாத்திக வாதிகள் கூட சில சமயம் "ஒரு வேளை கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரோ" என்ற சந்தேகம் வரலாம்.

சந்தேகம் யாருக்கு வந்தாலும், அவனை. வள்ளலே, மணி வண்ணனே என்று வெளிக்கு சொல்லி வைத்துக் கொள்வார்கள். இது எல்லாம் கடவுளுக்குத் தெரியாதா என்ன ?

"நானும் அப்படித்தான் இருந்தேன்...உன்னை உள்ளன்போடு புகழாமல், வெளிக்கு புகழ்ந்து உன்னையும் ஏமாற்றினேன்...பின், என் கள்ள மனம் தவிர்த்து, உன்னை கண்டு கொண்டேன், இனி உன்னை விடமாட்டேன்" என்கிறார் நம்மாழ்வார்...


Thursday, July 19, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


வீட்டில் காவலுக்கு நாய் வைத்து இருப்பவர்கள் "நாய் ஜாக்கிரதை" என்று போர்டு மாட்டி இருப்பார்கள்.

"இங்கு காவலுக்கு நாய் இருக்கிறது. பார்த்து வாருங்கள். ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று வருபவர்களை எச்சரிக்கை விடுவார்கள்.

பேருந்து நிலையம், புகை வண்டி நிலையம் போன்ற பொது இடங்களில் "பிக் பாக்கெட் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்து இருப்பார்கள். 

நம்மாழ்வார் அது மாதிரி "பெருமாள் ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை விடுகிறார்.

இந்த பெருமாள் இருக்கிறாரே அவரிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.

உங்கள் மனதையும், உயிரையும் நீங்கள் அறியாமலே அவன் எடுத்துக் கொள்வான், சரியான கள்வன்.

மனதை திருடுவது மட்டும் அல்ல, திருடிய பின், அந்த இடத்தில் தன்னை இட்டு நிரப்பி விடுவான்.

உங்களுக்கு நீங்கள் இழந்தது கூட உங்களுக்குத் தெரியக் கூட தெரியாது....எனவே அவனிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். என்று அன்பாக எச்சரிக்கார்...

அந்தப் பாசுரம் 

Thursday, April 5, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - மரவடி பணையம்

நாம் ஒருவரிடம் ஒரு பொருளை கடன் வாங்கி இருந்தால், மறக்காமல் அதை திருப்பி கொடுபதற்காக எதையாவது அடமானம் வைப்போம்.

ஒரு செக்யூரிட்டி தான்.

பரதன், இராமனை நாட்டுக்கு திரும்பி வரச் சொல்லுகிறான்.

இராமன் மறுத்து பதினான்கு வருடம் கழித்து வருகிறேன் என்று சொல்கிறான்.

"சரி, அப்படியானால் மறக்காம இருக்க எதையாவது அடமானமாய் தா " என்று கேட்கிறான். இராமானும்

தன் பாதுகையை தருகிறான்.
------------------------------------------------------------------------------------------------------------------
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழசெருவுடைய திசைக்கருமம்திருத்திவந்து உலகாண்ட திருமால்கோயில்திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர்கண்ணும் காட்டி நின்றஉருவுடையமலர்நீலம் காற்றாட்ட ஓசலிக்கும் ஒளிய ரங்கமே
------------------------------------------------------------------------------------------------------

"மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்" ஏன் கானகம் போனான் ?

வானவர்கள் வாழ. இராவணன் அவர்களை பிடித்து அடித்து வைத்து படாத பாடு படுத்தினான். அவனிடம் இருந்து வானவர்களை காப்பாற்ற கானகம் போனான்.

"வானோர் வாழ செருவுடைய திசைக் கருமம் திருத்தி"

செரு = போர்.

தென் திசை சென்று, அங்கு செய்ய வேண்டிய கடமைகளை திருத்தமாக செய்து (கருமம் = கடமை ) அவற்றை செய்து முடித்து வந்து, இராமன் உலகை ஆண்டான்.

அவன் இருந்த கோயிலில் என்ன எல்லாம் பாக்கலாம் தெரியுமா ?

அவன் திருவடி

அவன் திரு உருவம்

தாயாரின் திரு உருவம் மற்றும்

அவளின் மலர் போன்ற கண்கள்

எந்த ஊர்ல இது எல்லாம் ?

நல்ல உருவமுடைய நீல மலர்கள் காற்றில் ஓளி வீசும் திருவரங்கம் பெரிய

ஆழ்வார் அருளிச் செய்த 412 ஆவது பாசுரம்.

Wednesday, April 4, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்

+ 2 படிக்கும் போது, நான் வாசித்து ரொம்ப உணர்ச்சி வசப் பட்ட பாசுரம் இது.

காதலுக்கு ஒரு பெண்ணின் மன நிலை ரொம்பவும் சௌகரியம் என்று தோன்றுகிறது. ஒரு ஆணால் இந்த அளவு உருக முடியுமா ?


இந்த பாடலுக்கு பின்னால் இருக்கும் மனம் புரியாவிட்டால், இந்த பாடல் புரியாது.

ஒரு தாய், காதல் வசப்பட்ட தன் மகளைப் பற்றி பாடுவதாக அமைந்த பாடல்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள், கண்ண நீர் கைகளால் இறைக்கும்

சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்., தாமரை கண் என்று தளரும்

எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும், இரு நிலம் கை துழாவி இருக்கும்

செங் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் ! இவள் திறத்து என் செய்கின்றாயே ?


---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சொற் பொருள்;

கங்குலும் = இரவும்

பகலும் = பகலும்

கண் துயில் அறியாள், = தூங்க மாட்டேன்கிறாள்

கண்ண நீர் கைகளால் இறைக்கும் = கண்ணில் இருந்து தாரை தாரை தாரையாய் கண்ணீர் வழிகிறது. அதை இரண்டு கைகளாலும் இறைக்கிறாள். அவ்வளவு தண்ணீர்.

சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்., = எப்போதும் சங்கு , சக்கரங்கள் என்று
கை கூப்புகிறாள்

தாமரை கண் என்று தளரும் = தாமரை கண்கள் என்று சொல்லி சொல்லி தளர்ந்து போகிறாள்

எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும், = உன்னை பிரிந்து எப்படி இருப்பேன்
என்று புலம்புகிறாள்

இரு நிலம் கை துழாவி இருக்கும் = தரை எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாமல், அதை தடவி தடவிப் பார்க்கிறாள்

செங் கயல் = நல்ல மீன்கள்

பாய் நீர் திருவரங்கத்தாய் ! = பாயும் நீர் நிலைகளை கொண்ட திருவரங்கத்தை
உடையவனே

இவள் திறத்து என் செய்கின்றாயே ? = இவளை நீ என்ன செய்யப் போகிறாய்