Showing posts with label iniyavai naarpadhu. Show all posts
Showing posts with label iniyavai naarpadhu. Show all posts

Monday, December 11, 2023

இனியவை நாற்பது - அலையாமை இனிது

 இனியவை நாற்பது - அலையாமை இனிது 


நாம் ஒரு இக்கட்டில் இருக்கிறோம். நமக்கு ஒரு உதவி தேவைப் படுகிறது. அதை செய்யும் நிலையில் ஒரு நட்போ உறவோ இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர்களாகவே முன் வந்து செய்திருக்கலாம். செய்யவில்லை. நாம் கேட்கிறோம். அப்போதும் செய்யவில்லை. ஒன்றுக்கு பல முறை கேட்டபின் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 


அப்படி, செய்யமாட்டேன் என்று இருப்பவரை, மீண்டும் மீண்டும் சென்று கேட்பதை விட கேட்காமலே இருப்பது இனிமையானது.


அடுத்ததாக,


இந்த உடல் நிலையானது அல்ல. மரணம் என்றோ ஒரு நாள் கட்டாயம் வரும். அது என்று என்று தெரியாது. அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமால் நல்ல காரியங்களை உடனடியாக செய்து விடுவது நல்லது. 


அடுத்தது, 


எவ்வளவு துன்பம் வந்தாலும், அறம் அற்ற செய்யலகளை செய்யாமல் இருப்பது நல்லது. 


பாடல் 


ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே

கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே

ஆக்க மழியினும் அல்லவை கூறாத

தேர்ச்சியின் தேர்வினியது இல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_11.html


(please click the above link to continue reading)


ஆற்றானை = செய்யாதவனை (ஆற்றுதல் = செயல் ஆற்றுதல் ) 


யாற்றென் றலையாமை = செய் என்று அவன் பின்னே அலையாமை (ஆற்று என்று அலையாமை என்று சீர் பிரித்துக் கொள்ள வேண்டும்) 


முன்இனிதே = மிக இனிதானது 


கூற்றம் = காலன், எமன் 


வரவுண்மை = வருகின்ற உண்மை 


சிந்தித்து = அறிந்து கொண்டு 


வாழ்வினிதே = வாழ்வது இனிது 


ஆக்க மழியினும் = சேர்த்து வைத்த அனைத்தும் அழிந்து போகும் என்றாலும் 


அல்லவை = அறம் அல்லாதவற்றை 


கூறாத = சொல்லாத 


தேர்ச்சியின் தேர்வினியது இல் = தெளிந்த தேர்வு செய்வது போன்றது ஒன்று இல்லை 


என்ன ஒழுக்கமாக இருந்து கண்ட பலன் என்ன?  அயோக்கியத்தனம் செய்கிறவன் எல்லாம் மேலே மேலே போய்க் கொண்டு இருக்கிறான். இந்த நீதி, நேர்மை என்று இவற்றைக் கட்டிக் கொண்டு கண்ட பலன் என்ன என்று மனம் தடுமாறாமல், அற வழியில் நிற்கும் நேர்மை நல்லது. இதுதான் சரி என்று தெளிவான சிந்தனையோடு, குழப்பம் இல்லாமல் அற வழியை தேர்ந்து எடுப்பது நல்லது. 


இனியவை நாற்பது என்ற நூலில் இருந்து இந்தப் பாடல். இப்படி நாற்பது பாடல்கள் இருக்கின்றன. 



Monday, July 28, 2014

இனியவை நாற்பது - கூற்றம் வரவு உண்மை

இனியவை நாற்பது - கூற்றம் வரவு உண்மை 


ஒருவனுக்கு ஒரு வேலை வரவில்லை என்றால் விட்டு விடவேண்டும். வரதா ஒன்றை செய் செய் என்று அவனை வற்புறுத்தக் கூடாது. அப்படி வற்புறுத்தாமல் இருப்பது இனிமையானது.

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் என்ற நினைவோடு வாழ்ந்தால் நல்லதே செய்யத் தோன்றும். எப்போது வேண்டுமானாலும் போய் விடுவோம். இருக்கும் வரை நாலு நல்லது செய்துவிட்டு போவோம். வாழ்வு ஒரு நாள் முடியும். கூற்றுவன் வருவது நிச்சயம் என்று எண்ணி வாழ்வது இனிமை.

இன்பமும், துன்பமும், உயர்வும் தாழ்வும், செல்வம் வருவதும், போவதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும். செல்வம் குறைந்த போது அறம் அல்லாதவற்றை கூறாமல் இருப்பது நலம்.

பாடல்

ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.


சீர் பிரித்த பின்

ஆற்றானை ஆற்று என்று அழியாமை முன்இனிதே
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.

பொருள்

ஆற்றானை = ஒரு செயலை செய்ய முடியாதவனை

ஆற்று என்று  = செய் என்று  கூறி

அழியாமை முன்இனிதே = துன்பப்படாமல் இருப்பது இனிது

கூற்றம் = எமன்

வரவு = வருவது

உண்மை = உண்மை என்று

சிந்தித்து வாழ்வினிதே = சிந்தித்து வாழ்வது இனிது

இருப்பது பொய் போவது மெய் என்று எண்ணி ஒருத்தருக்கும் தீவினை எண்ணாதே என்றார் பட்டினத்தார்

ஆக்கம் அழியினும் = செல்வம் அழிந்தாலும்

அல்லவை கூறாத = நல்லவை அல்லாதவற்றை கூறாமல் இருக்கும் 

தேர்ச்சியின் தேர்வினியது இல்.= தெளிந்த அறிவைப் போன்ற இனிமையானது  வேறு ஒன்றும் இல்லை. 

Sunday, June 10, 2012

இனியவை நாற்பது - கூற்றம் வரவை சிந்தித்து வாழ்தல் இனிது


இனியவை நாற்பது - கூற்றம் வரவை சிந்தித்து வாழ்தல் இனிது


இனியவை நாற்பது என்ற நூலில், வாழ்க்கைக்கு இனிமையான, நன்மை தரும் நாற்பது பாடல்கள் உள்ளன.

பொதுவாக எல்லா பாடல்களும் நாம் அறிந்த விஷயங்களை தான் சொல்கின்றன. 

இந்த ஒரு பாடல் சற்று வித்யாசமாய் இருந்தது.