Showing posts with label நாலாயிர திவ்ய பிரபந்தம். Show all posts
Showing posts with label நாலாயிர திவ்ய பிரபந்தம். Show all posts

Monday, January 8, 2024

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_35.html

நமக்கு ஏன் துன்பங்கள் வருகின்றது என்று கேட்டால், நாம் செய்த வினை. முன்பு செய்த வினை, இந்தப் பிறவி எடுத்த பின் செய்த வினைகள் என்று எல்லாம் சேர்ந்து கொண்டு நமக்கு துன்பம் தருகின்றன. 


அவற்றை எப்படி போக்குவது?  இனி துன்பங்கள் வராமல் எப்படி காத்துக் கொள்வது?


நம்மாழ்வார் கூறுகிறார் 


"கேசவா என்று சொல்லு. உன் எல்லா துன்பங்களும் ஓடிப் போய் விடும். அது மட்டும் அல்ல இனி ஒரு துன்பமும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எமன் கூட உன் அருகில் வராத ஒரு தலம் இருக்கிறது. அங்கு போய் விட்டால் மரண பயம் கூட இருக்காது. அந்தத் தலம் "திருவனந்தபுரம்" என்ற தலம்"


பாடல்  


கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 

கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*

விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 

தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே 

(திருவாய் மொழி - 10-2-1, நம்மாழ்வார்) 


பொருள் 


கெடும் = முடிந்து போகும் 


இடர்ஆயஎல்லாம் = அனைத்துவிதமான துன்பங்களும் 


 கேசவா என்ன = 'கேசவா' என்று சொன்னால் 


நாளும் = ஒவ்வொரு நாளும் 

 

கொடுவினை செய்யும் = கொடிய செயல்களைச் செய்யும் 


கூற்றின் = எமனின் 


தமர்களும்  = கூட்டாளிகளும், கூட உள்ளவர்களும் 


குறுககில்லார் = கிட்ட கூட வர மாட்டார்கள் 


விடம்உடை = நஞ்சை உடைய 


அரவில் = பாம்பின் மேல் 


பள்ளி = அனந்த சயனம் 


விரும்பினான் = விரும்பி சயனிக்கும் 


சுரும்பலற்றும் = வண்டுகள் ரீங்காரம் செய்யும் 

 

தடம்உடை = அடையாளம் உள்ள 


வயல் = வயல்கள் நிறைந்த 


அனந்தபுரநகர் = திருவனந்தபுரம் என்ற தலம் 


புகுதும்இன்றே = இப்பவே போவோம் 


கேசவா என்ற சொல் வந்த வினைகளை தீர்க்கும். 


திருவனந்தபுரம் இனி வர இருக்கும் இன்னல்களை போக்கும். 


புகுதும் இன்றே....





 



Saturday, November 25, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இத்தனை நாளா இது தெரியாம போச்சே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - இத்தனை நாளா இது தெரியாம போச்சே 


அயல்நாட்டுக்கோ அல்லது ஒரு அழகிய மலை பாங்கான இடத்துக்கோ, அல்லது ஒரு அழகிய கடற்கரைக்கோ சுற்றுலா போகிறோம். அந்த இடம் மிக அழகாக இருக்கிறது. இரசிக்கிறோம். 


"அடடா, இப்படி ஒரு இடம் இருப்பது இத்தனை நாளா தெரியாம போச்சே...தெரிஞ்சுருந்தா முன்னாலேயே வந்திருக்கலாமே ..." என்று மனம் நினைக்கும் அல்லவா?  


"இத்தனை நாளா இதை miss பண்ணிவிட்டோமே" என்று மனம் வருந்தும் அல்லவா?


அது போல,


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் "பெருமாளே உன் திருவடிகளை வந்து அடைந்து விட்டேன். இது தெரியாமல் இத்தனை நாள், இந்த பெண்கள், உலக இன்பங்கள் என்று அலைந்து திருந்தி என் வாழ் நாளை வீணடித்து விட்டேனே" என்று  வருந்துகிறார். 


பாடல் 



சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,

புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,

அலம்புரிதடக்கையாயனே மாயா!  வானவர்க்கரசனே!, வானோர்

நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


சீர் பிரித்த பின் 


சிலம்பு அடி உருவில் கரு நெடுங் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து,

புலம் படிந்து உண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா,

அலம் புரி தடக்கையாயனே மாயா!  வானவர்க்கு அரசனே!, வானோர்

நலம் புரிந்து இறைஞ்சு உன் திருவடி அடைந்தேன்  நைமிசாரணியத்து உள் எந்தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_25.html


(pl click the above link to continue reading)


சிலம்பு அடி = கொலுசு அணிந்த கால்கள் 


உருவில் = அவர்கள் மேல் 


கரு  = கருமையான 


நெடுங்  = நீண்ட 


கண்ணார் = கண்களை உடைய பெண்கள் 


திறத்தனாய் = அவர்கள் பின்னே போய் 


அறத்தையே மறந்து = அற நெறிகளை மறந்து 


புலம் படிந்து = புலன்களின் பின்னால் 


 உண்ணும் போகமே  = போகத்தை அனுபவித்து 


பெருக்கிப் = அவற்றையே பெரிது என்று எண்ணி 


போக்கினேன் = வீணாக போக்கினேன் 


பொழுதினை வாளா = என் வாழ்நாளை வீணாக 


அலம் புரி = பக்தர்கள் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு அள்ளி அள்ளித் தரும் 


தடக்கையாயனே  = நீண்ட  கைகளை உடையவனே 


மாயா!  = மாயவனே 


வானவர்க்கு அரசனே!, = தேவர்களுக்கு அரசனே 


வானோர் = வானவர்களுக்கு 


நலம் புரிந்து = நன்மை பல புரிந்து 


இறைஞ்சு = வேண்டும் 


உன் திருவடி அடைந்தேன் = உன் திருவடிகளை அடைந்தேன் 


 நைமிசாரணியத்து = நைமிசாரண்யத்தில் 


உள் எந்தாய் = உள்ள என் தந்தையே 


ஒரு வழியாக உன் திருவடிகளை அடைந்து விட்டேன். இதற்கு முன் பெண்கள், புலன் இன்பங்கள் பின்னால் அலைந்து கொண்டிருந்தேன். இறுதியில் உன் திருவடிகளை அடைந்து விட்டேன்.


எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம் உண்டு. 


ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஒரு இயற்கையான விடயம்தானே. அதை ஏன் இவ்வளவு பெரிய விடயமாக்க வேண்டும். ஆன்மீகத்தில் உள்ள எல்லா பெரியவர்களும் மனைவி, பெண் ஆசை என்பதை ஏதோ பஞ்ச மா பாதகம் போல் ஏன் சித்தரிக்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்க,


இந்தப் பாடல்களை படிக்கும் பெண்கள் மனநிலை எப்படி இருக்கும். 


நான், என் கணவரின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறேனா ? என்ற எண்ணம் ஒரு பெண்ணின் மனதை பாதிக்காதா?


ஒரு பெண், ஆணின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறாள் என்றால் ஒரு ஆண், பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்க மாட்டானா?  


இது பற்றி யாரும் பேசுவதே கிடையாது. 


ஏன் ?







 



Tuesday, November 21, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவடி அடைந்தேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவடி அடைந்தேன் 


நைமிசாரண்யம் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமாள் மேல் திருமங்கை ஆழ்வார் பத்துப் பாசுரங்கள் மங்களாசாசனம் செய்து இருக்கிறார். 


அற்புதமான பாடல்கள். 


இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று நினைப்பது நம் அறிவின் குறைபாடு. உருவம் இல்லா ஒன்றை நம்மால் சிந்திக்க முடியாது. ஏதோ ஒரு உருவத்தைப் பற்றிக் கொள்கிறோம். சிக்கல் என்ன என்றால், அதை விடுத்து மேலே போவது இல்லை. அதுவே சதம் என்று இருந்து விடுகிறோம். 


நம் மதம், அதில் இருந்து விடுபட பல வழிகளைச் சொல்லித் தருகிறது. 


பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன், விக்ரகத்தை கடலில் கரைத்து விடுகிறார்கள். ஏன்?  வேலை மெனக்கெட்டு செய்வானேன், பின் அதைக் கொண்டு கடலில் போடுவானேன்?


காரணம் என்ன என்றால்,


உருவமாய் இருந்தது, இப்போது அருவமாகி விட்டது. பிள்ளையார் வடிவில் இருந்த அந்த உருவம், இப்போது கடலில் கரைந்து விட்டது. இப்போது கடலைப் பார்த்தால், அதில் அந்த உருவம் இருக்கிறது என்று தெரியும். ஆனால், அதை காண முடியாது. அடுத்த கட்டம், கடலையும் தாண்டி, இந்த உலகம் பூராவும் அந்த சக்தி நிறைத்து கரைந்து நிற்கிறது என்று உணர்வது. 


இதை ஏன் சொல்கிறேன் என்றால், 


நைமிசாரண்யம் என்பது ஒரு காடு. அந்த காட்டையே இறைவானாகக் கண்டார்கள். திருவண்ணாமலையில், அந்த மலையே சிவன் என்று கொண்டாடுவார்கள். 


நைமிசாரன்யத்துள் உறை பெருமாளே, உன்னிடம் சரண் அடைந்தேன் என்று உருகுகிறார் திருமங்கை.


"இந்த பெண்ணாசையில் கிடந்து நீண்ட நாள் உழன்று விட்டேன். அது தவறு என்று உணர்ந்து கொண்டேன். இந்த பிறவி என்ற நோயில் இருந்து விடுபட எண்ணம் இல்லாமல், இந்த உலக இன்பங்களில் மூழ்கிக் கிடந்தேன். இப்போது அதையெல்லாம் அறிந்து வெட்கப் படுகிறேன். உன் திருவடியே சரணம் என்று வந்துவிட்டேன் " என்று உருகுகிறார். 


பாடல்   


வாணிலா முறுவல் சிறுனுதல் பெருந்தோள் மாதரார் வனமுலைப் பயனே


பேணினேன் அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயறுப்பான்,


ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க் கலவியிந் திறத்தை


நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_21.html


(please click the above link to continue reading)



வாணிலாமுறுவல் = வான் + நிலா + முறுவல் = வானில் உள்ள நிலவைப் போல ஒரு புன்முறுவல்  


சிறுனுதல் = சிறிய நெற்றி 


பெருந்தோள் = பெரிய தோள்கள் 


மாதரார் = பெண்கள் 


வனமுலைப் = வனப்பான மார்பகங்களே 


பயனே = அதுதான் இன்பம் என்று 



பேணினேன்  = போற்றினேன் 


அதனைப் = அப்படி போற்றியதை 


பிழையெனக்கருதிப் = தவறு என்று உணர்ந்து 


பேதையேன் =  அறிவில்லா பேதையான நான் 


பிறவிநோயறுப்பான் = பிறவி என்ற நோயை நீக்கும் ,


ஏணிலேனிருந்தேன் = ஏண் இலேன் இருந்தேன் = ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்தேன் 

 


னெண்ணினேன் = எண்ணினேன் (யோசித்துப் பார்த்தேன்)  


னெண்ணி = எண்ணிய பின் 


இளையவர்க் = அறிவில் சிறியவர்களின் 


கலவியிந்திறத்தை = கலவியின் திறத்தை = அவர்களோடு சேர்ந்து இருப்பதை 



நாணினேன் = வெட்கப்பட்டேன் 


வந்துந் = உன்னிடம் வந்து 


திருவடியடைந்தேன் = உன்னுடைய திருவடிகளை அடைந்தேன் 


 நைமிசாரணியத்துளெந்தாய் = நைமிசாரண்யம் என்ற இடத்தில் எழுந்து அருளி இருக்கும் என் தந்தை போன்றவனே 


ஒரு தவறில் இருந்து மீள வேண்டும் என்றால், முதலில் தவறை ஒத்துக் கொள்ள வேண்டும். 


Alcoholic Anonyms என்று ஒரு இயக்கம் இருக்கிறது. மது, போன்ற போதை பொருள்களுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள நினைப்பவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பு.  அந்த அமைப்பில் உள்ளவர்கள் முதலில் சொல்லுவது...


"I am so-and-so and I am an addict"


என்று ஆரம்பிப்பார்கள். 


காரணம், எது தவறு என்று தெரிந்தால் தானே அதில் இருந்து விடுபட முடியும். 


தவறு செய்து பழகி விட்டால், அதைச் செய்வதற்கு ஒரு ஞாயம் கற்பிக்கத் தொடங்கி விடுவோம். 


முதலில் ஆழ்வார், இதெல்லாம் நான் செய்த தவறுகள் என்று பட்டியலிடுகிறார். 


- பெண்ணாசையில் மூழ்கிக் கிடந்தது 

- சிறியோர் தொடர்பு 

- பிறவி பற்றி எண்ணம் இல்லாமல் இருந்தது 


அது மட்டும் அல்ல , அதை ஏன் செய்தேன் தெரியுமா என்று அதை நியாயப் படுத்த முயலவில்லை. 


"நாணினேன்", வெட்கப் படுகிறேன் என்கிறார். 


சரி, இதெல்லாம் தவறு என்று தெரிகிறது. திருத்தி என்ன செய்வது?


"அதெல்லாம் எனக்குத் தெரியாது...உன்னிடம் வந்து விட்டேன்...இனி உன்பாடு' என்று பெருமாளிடம் விட்டு விடுகிறார்.   


பாசுரத்தை மீண்டும் படித்துப் பாருங்கள். ஏதோ பெருமாளிடம் நேரில் பேசுவது போல இருக்கும். 



Monday, November 6, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் நிலையைப் போய் சொல்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் நிலையைப் போய் சொல் 


பெண்கள் மனதை புரிந்து  கொள்வது சாதாரண காரியம் அல்ல. 


அவர்களுக்கு ஒரு பொருளின் மேல் உள்ள ஆசையை விட, அந்தப் பொருளை கணவனோ, காதலனோ தங்களுக்காக கஷ்டப்பட்டு பெற்றுத் தர வேண்டும் என்பதில் ஆசை அதிகம். எனக்காக அவன் அதைச் செய்தான் என்பதில் அவர்கள் மனம் நெகிழும். 


உனக்கு வேண்டியது பொருள்தானே, அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னால் முடியாது. நீ வாங்கிக் கொண்டு வந்து, என்னிடம் தர வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். 


சில உதாரணங்கள் பார்ப்போம். 


சீதை பொன் மானை விரும்புகிறாள். இலக்குவன் தான் போய் பிடித்துக் கொண்டு வருகிறேன் என்கிறான். யார் கொண்டுவந்தால் என்ன? அவளுக்கு வேண்டியது பொன் மான் தானே. 


இல்லை, அவளுக்கு இராமன் பிடித்துத் தர வேண்டும். 


"நீங்க எனக்கு அதை பிடித்துத் தர மாட்டீங்களா" என்று கொஞ்சுகிறாள். இராமனால் மறுக்க முடியவில்லை. மான் பிடிக்கப் போகிறான். 


"நாயக, நீயே பற்றி நல்கலை போலும்"  என்று கொஞ்சுகிறாள். 


ஆயிடை, அன்னம் அன்னாள், அமுது உகுத்து அனைய செய்ய

வாயிடை மழலை இன்சொல் கிளியினில் குழறி மாழ்கி,‘

நாயக! நீயே பற்றி நல்கலை போலும் ‘என்னாச்

சேய் அரிக் குவளை முத்தம் சிந்துபு, சீறிப் போனாள்.



கணவன் அன்போடு பூ வாங்கிக் கொண்டு வருகிறான். அதை அவள் கையில் கொடுத்தால் எப்படி, "இங்க வா, கொஞ்சம் திரும்பு என்று அவளை தொட்டுத் திருப்பி அவள் தலையில் அவனே பூ வைத்து விட்டால் எப்படி". ஒரு மனைவிக்கு எது பிடிக்கும்?  


ஆண்டாள் சொல்கிறாள் 


"மலரிட்டு நாம் முடியோம்" என்று. நாங்களே எதுக்கு எங்க தலைமேல பூ வச்சுக்கணும். கண்ணன் வந்து வச்சுவிடணும் என்று அவள் ஆசை. 


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத்துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


காதலின் ஒரு படி மேலே சென்று....


கண்ணுக்கு நான் மை வைத்துக் கொள்ள மாட்டேன். அவன் வந்து மை தீட்டி விடட்டுமே என்று அவள் இருக்கிறாள். 


அவனுக்கு மை தீட்டி பழக்கம் இல்லை. அவள் கண் இமையை மெல்ல கீழே இறக்கி, கண் மையை தொட்டு அவள் கண்களில் பட்டும் படாமல் மெல்லமாக இடுகிறான். அவ்வளவு நெருக்கம். கையில் நடுக்கம். கண்ணில் பட்டு விடுமோ என்று. அவளின் நெருக்கம், இதயம் பட பட வென்று அடிக்கிறது. 


அனுமன் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான். எல்லாம் பேசிய பின், "இன்னும் ஒரு  மாதம் உயிரோடு இருப்பேன். அதுக்குள்ள வந்து இராமன் கூட்டிக் கொண்டு போகா விட்டால், உயிரை விட்டு விடுவேன்" என்று போய் சொல் என்கிறாள். 


இன்னும் ஈண்டு ஒரு   திங்கள் இருப்பல் யான்

நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்

பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த

மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ.


அனுமன் பார்த்தான். இது என்னடா புது வம்பா இருக்கு. இனி நான் போய் இராமனிடம் சொல்லி, அவன் இங்கு வந்து, சண்டை போட்டு, இராவணனை வென்று....அதெல்லாம் ஒரு மாதத்தில் நடக்கிற காரியமா என்று நினைத்து, 


சீதையிடம் சொல்கிறான்...


ஒரு மாசம் எல்லாம் வேண்டாம். இப்பவே என் தோளில் ஏறிக் கொள். இப்பவே உன்னை கொண்டு போய் இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்.மத்ததை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று. 


'வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப்

பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய்

ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்

ஏறு, கடிது' என்று, தொழுது இன் அடி பணிந்தான். 


"அடியன் தோள் ஏறு கடிது"  என்றான்.


அப்போது சீதை சொல்கிறாள்,


"இந்த இலங்கை மட்டும் அல்ல, இந்த உலகம் அனைத்தையும் என் சொல்லினால் சுடுவேன். அது இராமனின் வில்லுக்கு இழுக்கு என்று செய்யாமல் இருக்கிறேன்" 


அதாவது, என்னால் இந்த சிறையில் இருந்து மீள முடியும். ஆனால், அவன் வந்து சிறை மீட்க வேண்டும். 


அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.


திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு காதலியாக வரித்துக் கொண்டு, வண்டை பெருமாளிடம் தூது விடுகிறார். 


"மலரில் உன் துணையோடு மதுவை அருந்தும் வண்டே, என் நிலையை அவனுக்குச் சொல்" 


என்று. 


அதாவது, அவனை வரச் சொல் என்று சொல்லவில்லை. அவனை கூட்டிக் கொண்டு வா என்று சொல்லவில்லை. என் நிலையைச் சொல். என் நிலை உணர்ந்து அவனே என்னைத் தேடி வருவான். வர வேண்டும். அப்போதுதான் அவளுக்கு மகிழ்ச்சி. 


பாடல் 


தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,

பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,

தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,

ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_57.html


(pl click the above link to continue reading)



தூவிரிய = உன்னுடைய சிறகுகள் விரியும்படி 


மலருழக்கித் = மலர்களை போட்டு உழக்கி எடுத்து 


துணையோடும் = உன்னுடைய துணையோடு (ஜோடி) 


பிரியாதே = பிரியாமல் 


பூவிரிய = பூவின் இதழ்களை விரித்து 


மதுநுகரும் = தேனை உருசிக்கும் 


பொறிவரிய சிறுவண்டே = வரிகளை மேலே கொண்ட வண்டே 


தீவிரிய = தீ மேலே எழுபடி 


மறைவளர்க்கும் = வேதம் ஓதி அவற்றை வளர்க்கும் 


புகழாளர் = சிறந்தவர்கள் 


திருவாலி = (வாழும்) திருவாலி என்ற திருத்தலத்தில் 


ஏவரி = எதிரிகள் அஞ்சும்படி 


வெஞ் சிலையானுக் = கொடிய வில்லை கையில் ஏந்தியவனிடம்


கென்னிலைமை = என்னுடைய நிலையை 


யுரையாயே = சொல்வாயாக 


அவன் வீரன் தான். அவனைப் பார்த்தால் எதிரிகள் நடுங்குவார்கள். ஆனால், என்னிடம் அன்பாக இருப்பான். நீ போய் சொல்லு. அவன் வர்ரானா இல்லையா பாரு என்பது போலச் சொல்கிறாள். 


அவளுக்கு கார் கதவை திறந்து உள்ளே ஏறத் தெரியும். இருந்தும், கணவன் கார் கதவை திறந்து விட்டால், அதில் அவளுக்கு ஒரு பெருமை. 


அவளுக்கு நாற்காலியை இழுத்துப் போட்டு அமரத் தெரியும். இருந்தும், கணவன் அந்த நாற்காலியை அவள் அமர வசதியாக நகர்த்திக் கொடுத்தால், அதில் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி. 


பெண்ணின் மனம். 



Tuesday, July 25, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நினது உருவா

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நினது உருவா 


கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ ஒரு விடயத்தில் வாக்குவாதம் நிகழும். அப்போது குழந்தை அழுதால், இருவரும் தங்கள் சண்டையை மறந்து விட்டு, பிள்ளையை தூக்க ஓடுவார்கள் இல்லையா? 


அது போல 


ஒரு சமயம் ஆதி சேடனுக்கும், கருடாழ்வாருக்கும் ஒரு வாக்குவாதம் வந்தது...பெருமாளுக்கு சேவை செய்வதில் யார் உயர்ந்தவர் என்று. இரண்டு அடியவர்களுக்கு இடையில் போட்டி என்றால், ஆண்டவன் என்ன செய்வான் பாவம். இருவரையும் சமாதனம் செய்ய தான் ஒரு குழந்தை வடிவம் எடுத்தாராம். அந்த குழந்தை வடிவைப் பார்த்ததும், இருவரும், தங்கள் போட்டியை மறந்து, அந்தக் குழந்தையை எடுத்து கொஞ்ச ஆரம்பித்து விட்டார்களாம். இப்படி ஒரு கதை கருட புராணத்தில் இருக்கிறது. குழந்தை வடிவம் கொண்ட பெருமாள் "பால சயன" வடிவில் திருச் சிறுபுலியூர் என்ற இடத்தில் சேவை சாதிக்கிறார். 


திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசத்தின் மேல் பத்து பாசுரங்கள் பாடி இருக்கிறார். 


இறைவன் எந்த வடிவம் கொண்டவன்?  அவனுக்கு என்று ஒரு உருவம் இருக்கிறதா?  அப்படி என்றால் நம் சிற்றறிவால் அவனை கண்டு கொள்ள முடியுமா?  முடியாது என்பது சமய முடிவு. 


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் ...


"பெருமாளே நீ எந்த வடிவு உள்ளவன்?  மேகம் போன்றவனா? தீ போன்றவனா? நீரா? மலையா ? அல்லது வேறு ஏதாவது உருவமா?  உன் உருவம் உன் உருவம் தான். அதற்கு இணையாக எதைச் சொல்வது? திருமகள் விரும்பும் அருள் நிறைந்தவனே, உன் திருவடிகளே சரணம்" 


என்று. 


பாடல் 


கருமாமுகி லுருவா! கனலுருவா! புனலுருவா,


பெருமால்வரை யுருவா! பிறவுருவா! நினதுருவா,


திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,


அருமாகட லமுதே! உன தடியேசர ணாமே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_25.html


(pl click the above link to continue reading)


கருமாமுகி லுருவா! = கரு + மா + முகில் + உருவா = கருமையான பெரிய மேக உருவமா? 


கனலுருவா! = கனல் + உருவா = தீயின் உருவமா? 


புனலுருவா = புனல் + உருவா = நீரின் உருவமா? 


பெருமால்வரை யுருவா! = பெரு + மால் + வரை + உருவா? = பெரிய மலை போன்ற உருவமா? 


பிறவுருவா! = வேறு ஏதேனும் உருவமா?  


நினதுருவா = உன்னுடைய உருவமா ?



திருமாமகள் = அழகிய திருமகள் 


மருவும் = சேரும் 


சிறு புலியூர்ச் = சிறு புலியூர் 


சல சயனத்து = சயனித்து இருப்பவனே 



அருமாகட லமுதே! = அமுதம் நிறைந்த கடல் போன்றவனே 


உன தடியே = உனது அடிகளே 


சர ணாமே. = சரண் நாமே 


மேகத்தை நாம் பார்த்தால், நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அது போல காட்சி அளிக்கும். மான் போல, மயில் போல என்று எப்படி வேண்டுமானாலும் அது தோன்றும். அது மட்டும் அல்ல, பார்த்துக் கொண்டு இருக்கும் போதே உருவம் மாறும். 


அதற்கென்று ஒரு உருவம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. அது என்ன என்று கேட்டால் சொல்ல முடியாது. 


அது போல இறைவனும். இருக்கு, ஆனால் இல்லை. 


தீச் சுடரும், நீரும் அப்படித்தான். உருவம் இருப்பது போலத் தோன்றும். ஆனால் இது இன்ன வடிவம் என்று கூற முடியாது. 


மலையும் அப்படித்தான். நாம் அதை பார்த்துக் கொண்டு நகர்ந்து கொண்டே இருந்தால், அதன் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். இங்கிருந்து பார்த்தால் ஒரு வடிவம், கொஞ்ச தூரம் போய் அங்கிருந்து பார்த்தால் வேறு வடிவம். 


நான் சொல்லும் வடிவம் தான் சரி என்று ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை பிடித்துக் கொள்கிறார்கள். 


அங்கிருந்து பார்த்தால் அப்படி. இங்கிருந்து பார்த்தால் இப்படி. நேற்று பார்த்தால் ஒரு மாதிரி. இன்று வேறு மாதிரி. 


இதை நம்மால் பற்ற முடியாது. 


அறிவினால் இதை ஆராய்ந்து அறிய முடியாது. 


அன்பினால் திருமகள் அவனைப் பற்றி விட்டாள் என்கிறார் ஆழ்வார். எனவே, நமக்கும் அதுதான் வழி என்று அவன் திருவடிகளை சரண் அடைகிறார் அவர். 


அன்பினாலும், பக்தியாலும் உணர முடியும் என்று கூறுகிறாரோ?



Sunday, November 6, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦33 - குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே

 

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦33 - குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே


(இதன் முந்தைய பதிவுகளை இந்த வலை தளத்தின் இறுதியில் காணலாம்) 


நாம் ஒருவரை நினைக்கிறோம்  என்றால் எதை நினைப்போம்? அவருடைய உடை, உருவம் ஒரு புறம் நினைவு வந்தாலும், பெரும்பாலும் அவருடைய குணங்களே நம் நினைவில் நிற்கும். நல்லவர், பொல்லாதவர், கோபக்காரர், சிரிக்க சிரிக்க பேசுவார், அறிவாளி என்றெலாம் அவரின் குண நலன்களே பெரும்பாலும் நம் மனதில் வந்து போகும். 


உடல் தோற்றம் மாறக் கூடியது. நம் இள வயது புகைப் படத்தை பார்த்தால் நமக்கே சில சமயம் ஆச்சரியமாக இருக்கும். "நானா அது, அப்படியா இருந்தேன்"  என்ற எண்ணம் வரும். உடல் மாறும். குறுகிய காலத்தில் பெரிய அளவில் மாறும். 


குணம் மாறுவது இல்லை. 


நாம் இறைவன் என்று நினைப்பது அவரின் அவதாரங்களையே. நீல வண்ணம், ,கறுப்பு வண்ணம், குள்ள உருவம், சிங்கத் தலை, என்றெல்லாம் நினைக்கிறோம். 


இறை என்பது நம் சிந்தனையில் சிக்காத ஒன்று என்பது சமயக் கருத்து. 


உருவம்

அரு உருவம் 

அருவம்

பின் அதையும் தாண்டிய ஒன்று. அது என்ன என்று நம் சிற்றறிவு அறியாது. 


"சிந்தையும் செல்லா சேச்சியன் காண்க" என்பார் மணிவாசகர். 


இங்கே, ஆழ்வார் சொல்கிறார், 


"நீ அவனை எப்படி எல்லாம் நினைக்கிறாயோ நினை. ஒரு தவறும் இல்லை. உருவங்களைத் தாண்டி, அவன் குணம் ஒன்று இருக்கிறது. அதையும் நினை" என்கிறார். 


பாடல் 


காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற


ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப


ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட


கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/11/233.html


(Please click the above link to continue reading)



காற்றினைப் = காற்றினை 


புனலைத் = நதியை, நீரை 


தீயைக் = தீயை 


கடிமதி ளிலங்கை  = காவல் பொருந்திய மதில்களை உடைய 


இலங்கைசெற்ற = இலங்கையை போரில் வென்ற 



ஏற்றினை = ஏறு போன்றவனை 


இமயம் மேய = இமயம் போல் 


எழில்மணித் திரளை = அழகிய மணி போன்றவனை 


இன்ப ஆற்றினை = பேரின்ப வெள்ளத்தினை 


அமுதந் தன்னை = அமுதத்தை 


அவுணனா ருயிரை யுண்ட = அரக்கர்களின் அருமையான உயிரை மாய்த்த 


கூற்றினை = கூற்றுவனை 


குணங்கொண் டு  = குணங்களைக் கொண்டு 


உள்ளம் = உள்ளமே 


கூறுநீ  = நீ சொல் 


கூறு மாறே. = கூறும் + ஆறு = கூறுகின்ற வழி அதுதான் 


வழிபடும், நினைக்கும் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியில் வழிபடு என்கிறார். 


இந்த பாசுரத்தை விரித்து பொருள் சொல்லுவார்கள்.


சீதை என்ற ஜீவ ஆத்மா பிறவி என்ற பெருங்கடலால் சூழப் பட்டு ஞானேந்த்ரியங்கள், கன்மேந்த்ரியங்கள் என்ற பத்துத் தலை அரக்கனால் சிறை வைக்கப் பட்டு இருந்தது. இராம நாமத்தின் மூலம் அது விடுபட்டு இறைவனை அடைந்தது என்று விரித்தும் பொருள் சொல்லுவார்கள். 



ஆத்மா எவ்வளவுதான் முயன்றாலும், குரு/ஆச்சாரியன் (அனுமன்) அருள் இன்றியும், இறை நாமம் இன்றியும், அவன் அருள் இன்றியும் கடைந்தேற முடியாது என்றும் விரித்துச் சொல்லலாம். 


நம் அறிவும், அனுபவமும் விரிய விரிய இவற்றின் உட் பொருளும் விரிந்து கொண்டே போகும். 





 








2032 - நெறிமையால் நினைய வல்லார்



https://interestingtamilpoems.blogspot.com/2022/11/232.html








Tuesday, November 1, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦32 - நெறிமையால் நினைய வல்லார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦32 - நெறிமையால் நினைய வல்லார்


தாண்டகம் என்று ஒரு செய்யுள் வடிவம். அது பற்றிய சர்ச்சைகள் நிறைய இருக்கின்றன. அது எத்தனை சீர், எத்தனை எழுத்து என்றெல்லாம் விவாதங்கள் நடந்தபடி இருக்கின்றன. 


தாண்டுதல் என்பதால் தாண்டகம் என்று பெயர் வந்தது என்று ஒரு ஒரு குறிப்பு உண்டு. பாடல், முடியாமல் தொடர்ந்து கொண்டே போய், இறுதிச் சொல்லில் முடியும். 


திருமங்கையாழ்வார் இருபது பாடல்கள் அருளி இருக்கிறார். 


அவற்றைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


கற்கண்டு பற்றி எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் அது புரியாது. ஒரு கட்டியை எடுத்து வாயில் போட்டால் பின் விளக்கம் ஒன்றும் தேவையில்லை. எல்லாம் தானே விளங்கி விடும்.


அது போல, முதலில் பாசுரத்தைப் படித்து விடுவோம். பின் சிந்திப்போம். .



பாடல் 


 நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும்,

மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,

விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே!



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/232.html


(Please click the above link to continue reading)


நிதியினைப் = செல்வத்தை 


பவளத் தூணை = பவள பாறையால் ஆன தூணை 


நெறிமையால் = ஒழுக்க நெறியில் நின்று 


நினைய வல்லார், = நினைக்க முடிந்தவர்களின் 


கதியினைக் = விதியினை 


கஞ்சன் = கம்சன் 


மாளக் கண்டு = இறந்த பின் 


முன் ஆண்ட மாளும், = அண்டத்தை ஆளும் 


மதியினை  = நிலவு போன்றவனை 


மாலை = திருமாலை 


வாழ்த்தி = வாழ்த்தி 


வணங்கி = வணங்கி 


யென் = என்னுடைய 


மனத்து வந்த = மனதில் வந்து அமர்ந்த 


விதியினைக் = விதியினை 


கண்டு கொண்ட  = கண்டு கொண்ட 


தொண்டனேன் = தொண்டனாகிய நான் 


விடுகி லேனே! = விட மாட்டேன் 


பாசுரம் எப்படி போகிறது என்று பாருங்கள். 


 நிதியினை

பவளத் தூணை

நெறிமையால் நினைய வல்லார், கதியினைக் 

ஆண்ட மாளும் மதியினை

மாலை 

மனத்து வந்த  விதியினைக்


என்று நீண்டு கொண்டே போய், இறுதியில் விடுகிலேனே என்று முடிகிறது. 



இரண்டாவது, 


"நிதியினைப்" - நிதியை என்ன செய்வோம்? முன்பெல்லாம் புதைத்து வைப்பார்கள். அது போல இறை நினைவை மனதுக்குள் புதைத்து வைக்க வேண்டும். வெளியே தெரியும்படி காட்டிக் கொண்டு திரியக் கூடாது. மனதின் ஆழத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பக்தி செய்வதே பெரிய விளம்பரமாகப் போய் விட்டது. 


"பவளத் தூணை": தூண் என்ன செய்யும். பெரிய பாரத்தை தான் தாங்கிக் கொண்டு, தனக்கு அருகில் இருப்பவர்களுக்கு நிழல் தரும், பாதுகாப்பு தரும். அது போல இறைவன் தன்னை அண்டியவர்களை காப்பான். 


"நெறிமையால் நினைய வல்லார்" =  சும்மா நினைய வல்லார் என்று சொல்லி இருக்கலாம். நெறிமையால் என்றால் ஒரு வழி, முறைப் படி வழிபட வேண்டும் என்கிறார். மனம் ஒப்பி, மனம் ஒன்றி நினைக்க வேண்டும். அது கடினம் என்பதால், "வல்லார்" என்றார். 



கதியினைக் = கதி என்றால் வழி. அவன் தான் சென்று சேரும் இடம். சேர்க்கும் வழியும் அவன் தான். 



மனத்து வந்த விதியினைக் = அவன் மனதுக்குள் வர வேண்டும் என்பது விதி. நெறிமையால் நினைக்க வல்லார் மனத்துள் அவன் வந்தே தீர்வான். சந்தேகம் வேண்டாம். அதுதான் விதி. 


 கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே! = கண்டு கொண்டேன், விட மாட்டேன் என்கிறார். நல்ல விடயங்களைக் கூட, நாம் விட்டு விடுகிறோம். முதலில் தொடங்குவோம். பின் விட்டு விடுவோம். "விட மாட்டேன்" என்கிறார் ஆழ்வார். அப்படி ஒரு உறுதி வேண்டும். வைராக்கியம் வேண்டும் 


மேலும் சிந்திப்போம். 








Monday, October 24, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வென்றி தரும்பத்தும்

         

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   வென்றி தரும்பத்தும் 


உங்களுக்கு இனி வெற்றிதான் போங்கள். நீங்கள் எடுத்த காரியம் எல்லாவற்றிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். 


நான் சொல்லவில்லை. நம்மாழ்வார் சொல்கிறார். 



ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்....



அந்தக் காலத்தில்..கண்ணன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்று...அதே ஆயர்பாடியில், மற்ற ஆயர் குல மக்களோடு கண்ணன் கூட ஆடிப் பாடி இருந்திருந்தால் எப்படி இருக்கும்? 



நம்மால் அதை நினைத்து பெருமூச்சுதான் விட முடியும். 


நம்மாழ்வாருக்கு அந்தப் பிரச்னை இல்லை. அவர் நினைத்துப் பார்ப்பது மட்டும் அல்ல. அங்கேயே போய்விட்டார். நான் அங்கே இருந்தேன் என்கிறார். அந்த ஆயர் குல மக்களோடு ஒன்றாக இருந்தேன் என்கிறார். 


அவர்களோடு இருந்த இந்த சடகோபன் சொல்லிய பத்துப் பாட்டையும் கற்பவர்கள் என்றும் வெற்றி அடைவார்கள் என்று இந்த நூலின் பயனை கூறுகிறார். 


பாடல் 




குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,

ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,

நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை

வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே.



சீர் பிரித்த பின் 


குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் 

ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் 

நன்றி புனைந்த ஓராயிரத்துள் இவை 

வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே



பொருள் 



(pl click the above link to continue reading)



குன்றம் எடுத்த  = மலையை கையில் எடுத்த 


பிரான்  = பிரியாதவன் (அன்பர்களை விட்டு)  


அடியாரோடும்  = அடியார்களோடு 


ஒன்றி நின்ற  = ஒன்றாக நின்ற 


சடகோபன்  = சடகோபன் 


உரை செயல்  = உரைத்த 


நன்றி புனைந்த = சிறந்த பாடல்களுள் 


ஓராயிரத்துள் இவை  = ஆயிரம் பாடல்களில் இந்த 


வென்றி தரும்  = வெற்றியைத் தரும் 


பத்தும் = பத்துப் பாடல்களையும் 


மேவிக் கற்பார்க்கே = விரும்பி கற்பவர்க்கே 



இதுவரை விருப்பமாக இந்த வெற்றி பாசுரங்களை படித்து வந்தீர்கள்தானே ? இந்த ப்ளாக்கின் முதல் பத்தியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 



(முந்தைய பதிவுகள்


பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 



பாசுரம் 3600  -  நீறு பட இலங்கை 



பாசுரம் 3602 - அன்று செய்தது 



பாசுரம் 3603 - குன்ற மெடுத் தானே


)


Wednesday, October 19, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - குன்ற மெடுத் தானே

        

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   குன்ற மெடுத் தானே


ஆயர்பாடியில் உள்ள ஆயர்கள் இந்திரன் முதலிய சிறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். கண்ணன் அவர்களிடம் "சிறு தெய்வங்களை வழிபட வேண்டாம், இனி என்னை வழிபடுங்கள்" என்றான். அவர்களும் இந்திர வழிபாட்டை நிறுத்தினார்கள். அதனால் கோபம் கொண்ட இந்திரன் ஆயர்பாடியின் மேல் பெரு மழை பெய்ய வைத்தான். அப்போது கண்ணன் கோவர்தணகிரி என்ற மலையை குடை போல் பிடித்து அந்த மழையில் இருந்து ஆயர்பாடி மக்களை காத்தான். 


இது கதை. 



கேட்டிருக்கிறோம். வண்ண ஓவியமாக பார்த்தும் இருக்கிறோம். 



அந்தக் காட்சியை நம்மாழ்வார் போல் நம்மால் சிந்திக்கக் கூட முடியாது. 


அவர் காட்டும் அந்த பிரமாண்ட காட்சியைக் காண்போம். 


இப்போது நாம் ஆயர்பாடியில் இருக்கிறோம். 



மழை அடித்து ஊத்துகிறது. நிற்காத மழை. எங்கும் வெள்ளம். மக்கள் தவிக்கிறார்கள். ஒண்ட இடம் இல்லை. குளிர் நடுங்குகிறது. ஆடு மாடுகள் எல்லாம் நீரில் நடுங்குகின்றன. தின்ன புல் பூண்டு இல்லை. முன்பு தின்றதை அசை போடுகின்றன. 



கண்ணன் வருகிறான்.கோவர்தன மலையை தன் கைகளால் தூக்குகிறான். 



மலையை தூக்குவது என்றால் சாதரணமா?


தூக்கும் போது ஒரு பக்கம் உயர்கிறது. மறுபக்கம் தாழ்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கையை உள்ளே தள்ளி மேலும் தூக்குகிறான். மலை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று அசைகிறது. 



அப்போது அந்த மலையில் உள்ள குளங்களில் உள்ள நீர் வழிந்து ஓடுகிறது. மலையை விட்டு கீழே அருவி போல் கொட்டுகிறது. அது மலை நீரை உமிழ்வது போல இருக்கிறது. 


அந்த மலையில் உள்ள விலங்குகள் தட்டு தடுமாறி விழுந்து புரள்கின்றன. 



மலையை தூக்கிய பின், அதன் அடியில் ஆடு மாடுகள் ஓடி வந்து தங்கிக் கொள்கின்றன. 


பின் மக்களும் வந்து அதன் கீழ் நின்று கொள்கிறார்கள்.




பாடல் 




மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை

வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன

ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்

தீமழை காத்துக் குன்ற மெடுத் தானே.



பொருள் 




(pl click the above link to continue reading)




மேய் நிரை கீழ்புக = ஆடு மாடுகள் கீழே புகுந்து கொள்ள 


மாபுரள  = மலையில் உள்ள விலங்குகள் தட்டுத் தடுமாறி புரண்டு விழ 


சுனை = குளம் 


வாய் நிறை நீர்பிளிறிச் சொரிய = வாயில் நீரை கொண்டு யானை பிளிறி உமிழ்வது போல நீரை அருவி போல் கொட்ட 



இன ஆநிரை  = பசுக்களை மேய்க்கும் இனமான ஆயர்கள் 


பாடியங் கேயொடுங்க  = பாடி அங்கே ஒடுங்க 


அப்பன் = திருமால் 


தீமழை காத்துக் = தீமை தரும் பெருமழையில் இருந்து காக்க 


குன்ற மெடுத் தானே. = குன்றை கையில் எடுத்த்தானே 


வைணவர்கள் "பெருமாளை அனுபவிப்பது" என்பார்கள். 


அப்படி அணு அணுவாக இரசித்து அனுபவிக்கிறார்கள். 


தாங்கள் அனுபவித்ததை பாசுரமாக நமக்கு தந்துவிட்டு போய் இருக்கிறார்கள். 


படித்தால் புரிய வேண்டும். புரிந்த பின் அந்தக் காட்சி மனதில் ஓட வேண்டும். பின், அதை இலயித்து இரசிக்க வேண்டும். 


முடியும் என்றே நினைக்கிறேன். 




(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 



பாசுரம் 3600  -  நீறு பட இலங்கை 



பாசுரம் 3602 - அன்று செய்தது 




)


Thursday, October 13, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - 3602 - அன்று செய்தது

       

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   3602 - அன்று செய்தது 



திருமாலின் மிகப் பெரிய செயல்களை சொல்லிக் கொண்டே வருகிறார் நம்மாழ்வார். 


பாற்கடல் கடைந்தது, இராவணனை அழித்தது,  ஈரடியால் உலகம் அளந்தது, குருஷேத்திர யுத்தம் நடத்தியது என்று சொல்லிக் கொண்டு வந்த அவர், இதெல்லாம் என்ன பெரிய விடயம், அரக்கர்களை அழிப்பது, மனிதர்களோடு (கௌரவர்கள் ) சண்டை போட்டு வெல்வது இதெல்லாம் ஒரு பெரிய காரியமா? 

மிகப் பெரிய காரியம் என்று எதைச் சொல்லலாம் என்று யோசிக்கிறார். 


இந்த உலகை எல்லாம் படைப்பது என்பது சாதாரண காரியமா? இந்த உலகம் எவ்வளவு பெரியது என்று நம்மால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய உலகை படைப்பது என்றால்?


" அன்று மண், நீர், தீ, காற்று, விண்வெளி , மலைகள் சூரியன், சந்திரன் போன்ற நட்சத்திரங்களும், கோள்களும், மழை, போன்றவற்றின் தேவர்களும், மீதி உள்ள உலகம் அனைத்தும் செய்த போது"



பாடல் 



அன்று மண்நீரெரி கால்விண் மலைமுதல்,

அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்

அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்

அன்று முதலுல கம்செய் ததுமே.



சீர் பிரித்த பின் 


அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்,

அன்று சுடர் இரண்டும் பிறவும், பின்னும்

அன்று மழை உயிர்  தேவும் மற்றும், அப்பன்

அன்று முதல் உலகம் செய்ததுமே.




பொருள் 



(pl click the above link to continue reading)




அன்று = முன்பொருநாள் 

மண் = மண் 

நீர்  = நீர் 


எரி = தீ 

கால்  = காற்று 


விண் = விண்வெளி 


மலை = மலைகள் 

முதல் = முதலியவற்றைப் படைத்ததுவும் 


அன்று  = முன்பொருநாள் 


சுடர் = வெளிச்சம் தரும் 


இரண்டும் = சூரியன், சந்திரன் என்ற இரண்டையும் 


பிறவும் = மற்ற நட்சத்திரங்களையும், கோள்களையும் படைத்ததுவும் 


பின்னும் = மேலும் 


அன்று = முன்பொருநாள் 


மழை = மழையையும் 


உயிர்  = அனைத்து உயிர்களையும் 


தேவும் = அவற்றிற்கு உரிய தேவர்களையும்  


மற்றும் = மேலும் 


அப்பன் = திருமால் 


அன்று = முன்பொருநாள் 


முதல் உலகம் செய்ததுமே. = முதன் முதலாக உலகம் செய்ததுதும் 



இந்த உலகம் எப்படி தோன்றியது, என்று தோன்றியது என்று அறிவியல் விளக்கம் சொல்லிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு நாளும் அறிவியலின் பரப்பு விரிந்து கொண்டே போகிறது. 


அது ஒரு புறம் இருக்க, உலகத்தை இறைவன் தோற்றிவித்தான் என்று பக்தி இலக்கியங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. 


இவற்றை எப்படி பார்ப்பது? அறிவியலின் கூற்றுப் படி பக்தி இலக்கியங்கள் சொல்வது எல்லாம் தவறு. 


பக்திமான்களை கேட்டால் "அதெல்லாம் நம்பிக்கையின் பாற்பட்டது. கேள்வி கேட்கக் கூடாது"  என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். 


தெரியாதவற்றை நம்பலாம். தெரிந்தவற்றை எப்படி நம்புவது? இரண்டும் இரண்டும் ஐந்து என்று நம்ப முடியுமா?


இந்தச் சிக்கல் தொடர்கிறது. 


எதற்காக இவற்றைப் படிக்க வேண்டும்?


எனக்குத் தெரிந்து சில காரணங்கள்:


முதலாவது, மனம் விரியும். கற்பனை விரியும். அப்படி ஒரு பிரமாண்டமான ஒரு விடயத்தை மனம் பற்றும். ஒவ்வொரு நாளும் அது பற்றி சிந்திக்க சிந்திக்க மனம் அதை உள்வாங்கும். அப்படி ஒரு பிரமாண்டத்தை சிந்திக்க சிந்திக்க நாம் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, நம் துன்பங்கள் ஒன்றும் பெரிய துன்பம் இல்லை, நம் சிக்கல்கள், பிரச்சனைகள் பெரிய விடயம் அல்ல, அதற்காக சண்டை போட்டுக் கொள்வது, போட்டி போடுவது, பொறாமை கொள்வது என்பதெல்லாம் நகைப்பு இடமானது என்ற விரிந்த நோக்கம் வரும். 


இரண்டாவது,  இந்த உலகை ஒருவன் படைத்தான் என்று நம்பும் போது, அந்த நம்பிக்கை ஒரு பலம் தரும். அப்படி ஒருவன் இருக்கிறான், அவன் நமக்கு துணை செய்வான் என்ற நம்பிக்கை ஒரு தைரியம் தரும், அதனால் பதற்றம் குறையும், மன அழுத்தம் குறையும், பயம் விலகும். "எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்" என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வேலையை பார்க்க போது, மனம் லேசாகிவிடும். அது உண்மையோ பொய்யோ, அந்த நம்பிக்கை ஒரு நன்மை தருகிறது.  அதை ஏன் மறுக்க வேண்டும்


மூன்றாவது, அழகான தமிழ். கவிதை. சொற் சுருக்கம். சொல்லும் விதம். அதனையும் அள்ளிக் கொண்டு போய் விடுகிறது நம் மனதை. 


இறுதியாக, எவ்வளவோ இலயித்து, அனுபவித்து எழுதி இருக்கிறார்கள். அது பொய்யாக இருக்குமா? அந்தப் பாடல்களில் ஏதேனும் உண்மை இருக்குமா? இருக்கும் என்றால் அது என்ன என்ற தேடல் தொடர்கிறது. அதுவும் ஒரு சுவாரசியம்தான். 


படிப்போம். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 


Friday, October 7, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீறு பட இலங்கை

      

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   நீறு பட இலங்கை 



குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் பற்றிக் கூறினார். 


பின்னர் நரசிம்ம அவதாரம் பற்றிக் கூறினார். 


அடுத்து இராம அவதாரம் பற்றி கூற இருக்கிறார். 



இலங்கையில் போர் நடக்கிறது.  நாம் இப்போது அங்கே போய் விட வேண்டும். தொலைவில், ஒரு மலை மேல் நின்று அந்தப் போரைப் பார்க்கிறோம். 



இரண்டு பக்கமும் மிக உக்கிரமாக போர் புரிகிறார்கள். 



ஆயிரக்கணக்கான அம்புகள் பறக்கின்றன. அந்த அம்புகள்சில சமயம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன. அப்படி அவைஇடை விடாமல் மோதிக் கொள்ளும் ஒலி பயங்கரமாக ஒலிக்கிறது. 


இராம இலக்குவனர் அம்புகளால் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக மடிகிறார்கள். அவர்கள் உடலில் இருந்து இரத்தம் பீறிட்டு எழுகிறது. அந்த இரத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறு ஓடையாகி, பின் அந்த ஓடைகள் ஒன்று சேர்ந்து பெரிய ஆறாகி கடலில் சென்று சேர்கிறது. 



ஏற்கனவே உள்ள ஆற்று நீரோடு, இந்த இரத்த ஆறும் கலப்பதால் கடல் நீர் பொங்கி எதிர் வருகிறது. 


சாதாரண ஆற்று நீரும் இரத்தம் கலந்து நிறைகிறது. 


பாடல் 



மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன

நூறு பிணம்மலை போல்புர ள,கடல்

ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்

நீறு படவிலங் கைசெற்ற நேரே.



சீர் பிரித்தபின் 



மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள், இன

நூறு பிணம் மலை போல் புரள, கடல்

ஆறு மடுத்து உ திரப்புனலால்,  அப்பன்

நீறுபட இலங்கை செற்ற நேரே.


பொருள் 




(pl click the above link to continue reading)







மாறு  = இரு புறமும் மாறி மாறி 

நிரைத்து =  வான் வெளியே நிறைந்து போகும் படி 

இரைக்கும் = இரைச்சல் உண்டாக்கும் 

சரங்கள் = அம்புகள் 


இன = இனம் இனமாய், கொத்து கொத்தாக 


நூறு = நூற்றுக் கணக்கில் 


பிணம் மலை போல் புரள = பிணங்கள் மலை போல் புரண்டு கிடக்க 


கடல் = கடலானது 


ஆறு மடுத்து = ஆற்று நீர் எதிர்த்து வர 


உ திரப்புனலால் = இரத்த ஆற்றால் 


அப்பன் = இராம பிரான் 


நீறுபட = சாம்பலாகும்படி  


இலங்கை  = இலங்கையை 


செற்ற நேரே  = போர் செய்த போது 




இராவணன் எவ்வளவு பெரிய பலம் பொருந்தியவன். 



முக்கோடி வாழ் நாள், எக்கோடி யாராலும் வெல்லப்படாய் என்ற வரம், திக்கோடு உலகு அனைத்தும் வென்று அடக்கிய புய வலம், சங்கரன் கொடுத்த வாள், என்று மிகுந்த பராகிரமம் உடையவன். 


அப்பேற்பட்ட இராவணனின் படைகளை கொன்று குவித்து இரத்த ஆறு ஓட விட்டவன் இராமன். 


நம் துன்பம் எல்லாம் அவனுக்கு என்ன பெரிய விடயமா?  அவனைப் பற்றினால் வெற்றி நிச்சயம் என்று இந்த வெற்றிப் பாசுரத்தில் நம்மாழ்வார் கூறுகிறார். 










பொருள் 



(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 


Thursday, September 29, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெலிந்த பொழுது

     

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   மெலிந்த பொழுது 


இந்த வெற்றிப் பாசுரங்களில் நம்மாழ்வார் மிகப் பிரமாண்டமான நிகழ்வுகளை பற்றி கூறுகிறார். பாற்கடலை கடைந்தது, குருக்ஷேத்திர போர்,ஊழிக் காலம் என்று நம் கற்பனைக்கு எட்டாத மிகப் பிரமாண்டமான விடயங்களை கூறிக் கொண்டு வருகிறார். 


அடுத்தது,



அந்தி நேரம். இரத்தத்தை அள்ளி விசிறி அடித்த மாதிரி வானம் சிவந்து இருக்கிறது. தூரத்தில் ஒரு மலை. அந்த மலை மேல் ஒரு பெரிய சிங்கம் அமர்ந்து இருக்கிறது. மலை உச்சியில் உள்ள சிங்கம் கீழே தெளிவாகத் தெரிவது என்றால் அது எவ்வளவு பெரிய சிங்கமாக இருக்க வேண்டும். அது அமர்ந்து இருப்பதைப் பார்த்தால் ஏதோ அது அந்த மலையை அடக்கி அதன் மேல் அமர்ந்து இருப்பது போல இருக்கிறது. ஒரு கம்பீரம், ஒரு வசீகரம். 



பாடல் 



போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை

சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை

கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்

ஆழ்துய ர் செய்தசு ரரைக்கொல்லு மாறே.


பொருள் 




(pl click the above link to continue reading)




போழ்து = பொழுது 


மெலிந்த = மெலிந்து, உக்கிரம் குறைந்து, மாலை வேளை 


புன் = குறைந்த, அதாவது ஒளி குறைந்த 


செக்கரில் = சிவந்த 


வான்திசை = வானத்தின் திசைகள்


சூழு = சூழ 


மெழுந்து = எழுந்து 

உதிரப்புனலால் = இரத்த ஆறு ஓடியது போல 


மலை கீழ்து  = மலையை கீழே கொண்டு  


பிளந்த = அதை பிளந்த 


சிங்கம் = சிங்கம் 


ஒத்த தால் = போல் ஒத்து இருந்து 


அப்பன் = திருமால் 


ஆழ் = நீண்ட பெரிய 


துயர் செய்த  = துன்பங்களை செய்த 


அசுரரைக்கொல்லு மாறே. = அசுரர்களை கொல்வதைப் போல் 




நரசிம்ம அவதாரம் கொண்டு , இரணியனை மாலை வேளையில், படியில், மடியில் கிடத்தி, அவன் உடலைப் பிளந்து, இரத்தம் பீறிட்டு எழ அமர்ந்து இருந்த கோலம் நினைவுக்கு வருகிறது நம்மாழ்வாருக்கு. 


மாலையில், சிவந்த வானத்தின் அடியில், மலை மேல் அமர்ந்து இருக்கும் சிங்கம் போல இருந்தது அந்தக் காட்சி என்கிறார். 


இரணியன் எவ்வளவு பெரிய பலம் கொண்டவன். பிரகலாதனுக்கு எவ்வளவோ துன்பங்கள் தந்தான். பிர்கலாதான் தானே போராடி இரணியனை வெல்ல முடியாது. அதற்காக அவன் சோர்ந்து விடவில்லை. திருமாலை நம்பினான். 



அவ்வளவு பலம் பொருந்திய, இரணியனை தன் வெறும் கையால் கொன்றார். 


அதைப் பார்க்கும் போது நம் துன்பம் எல்லாம் பெரிய துன்பமா? நம் துன்பங்களை துடைக்க அவனுக்கு ஒரு நொடி கூட ஆகாது என்பது அவர் கருத்து. துயர் துடைத்து வெற்றிகளைத் தருவான் என்கிறார். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்

)


Wednesday, September 21, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - (3598) - ஒலிகள்

    

நாலாயிர திவ்ய பிரபந்தம் -  (3598) - ஒலிகள் 



ஒரு பக்கம் பாண்டவர் சேனை. 


இன்னொரு பக்கம் கௌரவர் சேனை. 


கடல் போல் படைகள் இருபுறமும். பெரிய பெரிய ஆண்மை  வீரர்கள் இரண்டு புறமும்.


பெரிய மாமிச மலை போன்ற வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்கிறார்கள். அந்த ஒலி.


யானைப் படைகள். குதிரைப் படைகள். காலாட் படைகள். ஆயுந்தங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஒலி. வீரர்கள் எழுப்பும் ஒலி. யானைகளும், குதிரைகளும் எழுப்பும் ஒலி. எவ்வளவு பேரிரைச்சலாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். 


அது மட்டும் அல்ல,  


இந்த போரின் நாயகன் கண்ணன்தான். அவன் தான் யுத்தத்துக்கு முதல் சங்கை ஊதினான். அவன் நேரடியாக சண்டை செய்யா விட்டாலும் அவன் அறிவும், அருளும் தான் அந்த யுத்தத்தை வழி நடத்தியது. 


கண்ணனே போர்க் களத்தில் நிற்கிறான் என்றதும் அதைக் காண விண்ணில் தேவர்கள் எல்லோரும் கூடி விட்டார்கள். கண்ணன் நகர்த்தும் காய்களை கண்டு அவர்கள் வியந்து ஆஹா ஓஹோ என்று ஒலி எழுப்புகிறார்கள். 


மண்ணும் விண்ணும் அதிர்கிறது. 


நம்மாழ்வார் அதை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். 


பாடல் 


ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்

ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்

ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்

காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே.


பொருள் 


(pl click the above link to continue reading)




ஊணுடை = பெரிய உடலை உடைய 

மல்லர் = மல்லர்கள் 

ததர்ந்த வொலி = சண்டையிடும் ஒலி 


மன்னர்  = மன்னர்கள் 


ஆணுடை = ஆண்மை உடைய, அதாவது வீரம் நிரம்பிய 


சேனை = சேனைகள் 


நடுங்கு மொலி = நடுங்கும் ஒலி. கண்ணன் எதிர்புறம் நிற்கிறான். நாம் எங்கே பிழைக்கப் போகிறோம் என்று கௌரவ சேனைகள் நடுங்குகின்றனவாம். 



விண்ணுள் = வானில் 



ஏணுடைத் = உயர்ந்தவர்களாக எண்ணப்படும்  


தேவர் = தேவர்கள் 


வெளிப்பட்ட வொலி = வெளிப்பட்டு உண்டாக்கிய ஒலி 


அப்பன் = திருமால், கண்ணன் 


காணுடைப்  = காண்பதற்கு உரிய 


பாரதம் = பாரதப் போரை 


கையரைப் = அறைகூவி அழைத்த 


போழ்தே. = அந்த நேரத்தில் 


அர்ஜுனனோ, தர்மனோ, பீமனோ, பீஷ்மரோ, துரோனாச்சரியரோ அல்ல பாரதப் போரை நடத்தியது. அது பூபாரம் தீர்க்க கண்ணன் நடத்திய மாபாரதப் போர் என்பர் ஆன்றோர். 


அத்தனை ஒலியையும் நமக்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நம்மாழ்வார். 


ஏன்?


அவ்வளவு பெரிய போரை நடத்தி வெற்றி பெற்றவன். நம் துன்பங்களை துடைத்து நமக்கு வெற்றியைத் தரமாட்டானா? இதெல்லாம் அவனுக்கு ஒரு சிறு வேலை. கட்டாயம் செய்வான். 



வெற்றிப் பாசுரத்தில் ஐந்தாவது பாசுரம் இது. 


மேலும் பயணிப்போம். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


)


Monday, September 12, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உலகம் உண்ட ஊண் (3596)

   

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உலகம் உண்ட ஊண் (3596)



காலம் என்றால் என்ன?


மிகக் கடினமான கேள்வி. 


காலம் என்றால் வருடம், மாதம், வாரம், நாள், பகல், இரவு, மணி, நிமிடம், நொடி என்று சொல்லலாம். அவை காலங்கள் அல்ல. அவை கால இடைவெளிகள். இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே உள்ள அளவைகள் அவை. சூரியன் உதித்து, மறைந்து மீண்டும் உதிக்கும் அந்த இரண்டு உதயங்களுக்கு இடைப்பட்ட இடைவெளி ஒரு நாள். நாளின் பகுதி பகல், இரவு. பகல் இரவின் பிரிப்பு மணி, நிமிடம் என்பது எல்லாம். 


நமக்கு ஒரு நாள் என்பது இருபத்தி நாலு மணி நேரம். ஆனால், செவ்வாயிலோ, வியாழன் கிரகத்திலோ இருபத்தி நான்கு மணியைவிட அதிகம் இருக்கும். அது, அந்தந்த கிரகங்கள் சுற்றும் வேகத்தைப் பொறுத்தது. 


யோசித்துப் பாருங்கள், சூரியன் இல்லாவிட்டால் நம் நாள் கணக்கு என்ன ஆகும். நாளும் இல்லை, பகலும் இல்லை. கோடை, குளிர் போன்ற காலங்கள் இல்லை. இராகுகாலம், எமகண்டம் போன்றவை இல்லை.


காலம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இல்லை என்று ஆகும். ஜோதிடம் கணிக்க முடியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் வாழும் இந்த பூமி வெகு வேகமாக சுற்றுகிறது. அது தன்னைத் தானே சுற்றுவது மட்டும் அல்ல, சூரியனையும் சுற்றுகிறது. பூமியும் சூரியனும் சேர்ந்து சுற்றுகின்றன. இப்படி எத்தனை சுற்றுகள் இருக்கிறதோ தெரியாது. ஆனால், நமக்கு ஏதாவது தெரிகிறதா? 


இவ்வளவு பெரிய பூமி, இவ்வளவு வேகமாக சுற்றினாலும், ஒன்றும் இடத்தை விட்டு அசைவது இல்லை. 


நம் வீடு அதே இடத்தில் தான் இருக்கிறது.நம் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில், தபால் நிலையம், கடைகள் எல்லாம் அந்தந்த இடத்தில் அப்படியே இருக்கின்றன. 



யோசித்துப் பாருங்கள், காலையில் எழுந்தவுடன் உங்கள் வீடு ஒரு ஐநூறு கிலோமீட்டர் வடக்கே நகர்ந்து போய் விடுகிறது, உங்கள் ஊருக்கு வெளியே இருந்த மலையைக் காணோம், புதிதாக உங்கள் வீட்டு வாசலில் ஒரு நதி ஓடுகிறது. எப்படி இருக்கும்?


சரி, அதுவும் ஒரு புறம் இருக்கட்டும். 


அது மட்டும் அல்ல, கடல் பொங்குகிறது, சூரியன் கொஞ்சம் நெருங்கி வந்ததில் பூமி பயங்கர சூடாகி எல்லாம் தீ பற்றி எரிகின்றன, கடல் நீர் உலை நீர் போல் கொதிக்கிறது...இதெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும். 


விண்மீன்கள் இடம் மாறிப் போகின்றன. அண்ட வெளியில் பூமிப் பந்து எங்கோ பறந்து கொண்டிருக்கிறது. 


அந்த பிரமாண்டத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? கண் மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 


உலகமே கலங்குவதை உங்கள் கற்பனையில் நினையுங்கள். 


நம்மாழ்வார் சொல்கிறார் 


"காலம் என்ற ஒன்று மாறிப் போனது. கடல் நீர் இடம் மாறிப் போனது. ஊரெல்லாம் கடல் நீர். விண்ணில் கோள்கள் இடம் மாறிப் போயின. காற்று புயலாக அடிக்கிறது.  மலைகள் அடியோடு புரள்கின்றன. சூரிய, நட்சத்திரம் போன்றவை திசை கெட்டுத் திரிகின்றன."

"இது எப்போ ?" என்று கேட்டால்


ஊழிக் காலத்தில், இந்த உலகம் அனைத்தையும் திருமால் உண்டு தன் வயிற்றில் அடக்கிய அந்த நாளில். 



பாடல் 


நாளு மெழநில நீரு மெழவிண்ணும்

கோளு மெழேரி காலு மெழ,மலை

தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்

ஊளி யெழவுல கமுண்ட வூணே.



சீர் பிரித்த பின் 


நாளும் எழ நில நீரும் எழ விண்ணும்

கோளும்  எழ காலும் எழ  மலை

தாளும் எழ சுடர் தானும் எழ  அப்பன்

ஊளி எழ உலகம் உண்ட ஊண் 


பொருள் 





(pl click the above link to continue reading)




நாளும் எழ  = நாள், வாரம், மாதம் போன்ற காலங்கள் கலங்கி எழ 


நில நீரும் எழ  = நிலமும், நீரும் கலங்கி எழ 


விண்ணும், கோளும்  எழ = அண்ட வெளியும், அதில் உள்ள கோள்களும் எழ 


காலும் எழ = காற்று எழ 


மலை தாளும் எழ = மலைகளின் அடிவாரங்கள் (தாள் = அடி) பெயர்ந்து எழ 


 சுடர் தானும்  எழ  = சூரியன், நட்சத்திரம் போன்றவை எழ 


அப்பன் = என் தந்தை திருமால் 


ஊளி எழ = ஊழிக் காலத்தில்  


உலகம் உண்ட ஊண்  = இந்த உலகம் அனைத்தையும் ஒரு உணவாக வாயில் போட்டு விழுங்கிய போது 



உண்மையோ, பொய்யோ, அது ஒரு புறம் இருக்கட்டும். 



எவ்வளவு பெரிய, விரிந்த, பிரமாண்டமான கற்பனை. 




அவர் காட்டும் அந்த நிகழ்வை மனதில் ஓட விட வேண்டும். 


இல்லாத ஒன்றை நினைக்க முடிகிறது அல்லவா?


நிகழாத ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது அல்லவா?


ஒரு பாடகர் கல்யாணி இராகத்தில் ஒரு பாடல் பாடுகிறார். எனக்கு இசை அறிவு இல்லை. எனக்கு அது கல்யாணி என்று தெரியாது. இசை தெரிந்தவருக்கு அது கல்யாணி என்று புரியும். 


எனக்குத் தெரியவில்லை என்பதற்காக, அது கல்யாணி இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். 


காதில் ஒலி விழுகிறது. காது நன்றாகக் கேட்கிறது. இருந்தும் கல்யாணி புரியவில்லை. 


இசை அறிவு பெருகினால், அது புரியும். 


அவர் ஏதோ சொல்கிறார். எனக்குப் புரியவில்லை.  


உங்களுக்கு?


(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html



)


Thursday, September 8, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான்றில (3596)

  

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான்றில  (3596)


(வெற்றிப் பாசுரத்தின் முந்தைய பாசுரங்கள் பற்றிய பதிவுகள் இந்த பதிவின் முடிவில் இருக்கிறது. அதை வாசிக்க விரும்புபவர்கள் அந்த வலை தலங்களுக்கு சென்று அவற்றை வாசிக்கலாம்). 


எந்த வேலை செய்தாலும் ஏதாவது சப்தம் வரத்தானே செய்யும். நடந்தால் கூட கால் தரையில் பட்டு எழும் போது ஒரு சின்ன சப்தமாவது வரும். பெரிய வேலை என்றால் எவ்வளவு சத்தம் வரும்?


சின்ன பைக், ஸ்கூட்டர் ஓடுவதற்கும் ஒரு இரயில் வண்டி ஓடுவதற்கும் எவ்வளவு சத்தம், ஆட்டம், அதிர்வு எல்லாம் இருக்கிறது? 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


பிரளய காலத்தில், இந்த உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி விடுமாம். 


உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா என்று பாருங்கள். 


இந்த பூமியின் மேற் பரப்பு மட்டும் அல்ல,  மலைகள், கடல்கள் என்று அனைத்தும் நீரில் மூழ்கி விடுமாம். அப்படி மூழ்கிய இந்த பூமியை, திருமால் பன்றி உருவம் எடுத்து, தன் கோரைப் பற்களால் தூக்கி நிறுத்தினாராம். 


அவர் அப்படி தூக்கி நிறுத்தியது ஒன்றும் பெரிய காரியமாகப் படவில்லை நம்பாழ்வாருக்கு. 


அப்படி தூக்கி நிறுத்திய போது, மலைகளும், கடல்களும், இந்த பூமி பரப்பும் கொஞ்சம் கூட அசையவில்லையாம். அது மட்டும் அல்ல, ஒன்றும் கொஞ்சம் கூட இடம் மாறவில்லையாம். இருந்தது இருந்த படி, அப்படியே ஒரு மாற்றமும் இல்லாமல் கொண்டுவந்தாராம். 


எப்படி முடியும்?


உங்களை ஒரு சின்ன காகிதத்தை எடுத்து, பின் எடுத்த இடத்திலேயே வைக்கச் சொன்னால் எளிதாக செய்து விடுவீர்கள். ஒரு gas cylinder அல்லது grinder போன்ற கனமான சாமானை தூக்கி, பின் அதே இடத்தில் அப்படியே வைக்கச் சொன்னால் முடியுமா? முடியும் என்று ஒரு வாதத்துக்கு சொல்லலாம். எங்கே பீரோவை தூக்கி வையுங்கள், கட்டிலை தூக்கி வையுங்கள் என்றால் முடியுமா? 


சைக்கிளை தூக்கி வைக்க முடியும். காரை தூக்கி வைக்கச் சொன்னால் முடியுமா? 


இந்த பூமியை அப்படியே தூக்கி, கொஞ்சம் கூட ஒரு சின்ன அதிர்வு கூட இல்லாமல், ஆடாமல் அசையாமல் வைப்பது என்றால் எவ்வளவு பலம் வேண்டும்? சக்தி வேண்டும்?



பாடல் 


நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்

நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்

நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்

ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


(pl click the above link to continue reading)


நான்றில = நகரவில்லை 


வேழ்மண்ணும் = ஏழ் உலகும் 


தானத்தவே, = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


பின்னும் = மேலும் 


நான்றில = நகரவில்லை 


வேழ்மலை  = ஏழு மலைகளும் 


தானத்தவே = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


பின்னும் = மேலும் 


நான்றில = நகரவில்லை 


வேழ்கடல் = ஏழு கடலும் 


தானத்தவே  = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


அப்பன் = என் அப்பன் திருமால் 


ஊன்றி = காலை ஊன்றி 


யிடந் = கிண்டி எடுத்து 


தெயிற் றில் = பற்கள் மேல் 


கொண்ட நாளே. = தூக்கி வந்த அந்த நாளில் 


நாம் ஒரு வேலையை செய்ய எப்போது தயங்குவோம்? 


அந்த வேலையை நம்மால் செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் வரும் போது. அந்த வேலையை செய்து முடிக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் போது. 


என் தந்தை எவ்வளவு பெரிய பலசாலி. அவர் பிள்ளை நான், அதில் கொஞ்சம் பலமாவது என்னிடம் இருக்காதா? ஒரு வேளை என்னால் முடியாவிட்டால், அவர் உதவி செய்ய மாட்டாரா? பிள்ளைக்காக இந்த பெற்றோர் உதவி செய்யாமல் இருப்பார்கள்?


எனவே, எந்த வேலையைக் கண்டும் மயங்க வேண்டாம். உங்களால் கண்டிப்பாக செய்து வெற்றி பெற முடியும் என்று உற்சாகம் தருகிறார் நம்மாழ்வார். 




(முந்தைய பதிவுகள்

பாசுரம் 1 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 2 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html



)


Saturday, September 3, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒலிகள்

 

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒலிகள் 


(வெற்றிப் பாசுரத்தின் முந்தைய பாசுரங்கள் பற்றிய பதிவுகள் இந்த பதிவின் முடிவில் இருக்கிறது. அதை வாசிக்க விரும்புபவர்கள் அந்த வலை தலங்களுக்கு சென்று அவற்றை வாசிக்கலாம்). 


தமிழிலே ஓதம் என்று ஒரு சொல் இருக்கிறது. கடற்கரை ஓரம் உள்ளவர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டு இருப்பார்கள். 


மழை நீர் ஆற்றின் வழியாக ஓடி கடலில் சேரும். அம்மாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் கடல் நீர் பொங்கும். நீர் மட்டம் உயரும். அப்போது, கடல் நீர் ஆற்று நீரை எதிர்த்துச் செல்லும். அதாவது கடல் நீர் மலை நோக்கிச் செல்லும். 


ஒரு பக்கம் மலையில் இருந்து வரும் நீர் கடல் நோக்கி வரும். இன்னொரு புறம் அதை எதிர்த்து கடல் நீர் மலை நோக்கிச் செல்லும். இரண்டு நீரும் ஆற்றில் கலந்து, சுழித்துக் கொண்டு பெரும் ஓசை எழும். 


இதை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 


இப்போதஅடுத்த பாசுரதுக்குள் போவோம். 


அமுதம் வேண்டி அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மேரு மலையை நட்டு, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு, ஒரு புறம் தேவர்கள், மறு புறம் அசுரர்கள். 


கடல் நீர் கலங்கும் அல்லவா? கடலைக் கடைந்தால் எவ்வளவு சத்தம் வரும். நம் வீட்டில் ஒரு சிறு பாத்திரத்தில் தயிரைக் கடைந்தாலே எத்தனை சப்தம் வருகிறது. ஒரு mixie , grinder போட்டால் எவ்வளவு சத்தம் வருகிறது. கடலைக் கடைந்தால் எவ்வளவு சத்தம் வரும்.  அது ஒரு சத்தம். 


அந்த கடல் நீர் சுழித்துக் கொண்டு ஆறுகளில் எதிர்த்து ஓடி மலை நோக்கிச் செல்லும் அல்லவா. இரண்டு நீரும் ஒன்றோடு ஒன்று மோதி அதனால் உண்டாகும் ஒலி. அது இரண்டாவது ஒலி. 


மலையை கடலுக்குள் நிறுத்தி கடைந்தால், அந்த மலையும் நீரும் உரசும் ஒலி. அது மூன்றாவது ஒலி. 


அப்படி கடையும் போது கடல் நீர் வலம் இடமாக சுழலும் போது உண்டாகும் ஒலி. இது நான்காவது ஒலி. 


இத்தனை ஒலியும் ஒரு சேர எழுந்ததாம்....எப்போது தெரியுமா?


"என் அப்பன் தேவர்கள் மகிழ அமுதத்தை அவர்களுக்கு வழங்கிய போது" என்கிறார் நம்மாழ்வார். 



பாடல் 


ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர


வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்


மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்


சாறு படவமு தங்கொண்ட நான்றே.



கொஞ்சம் சீர் பிரிப்போம் 


ஆறு மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி 


அர ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி 


கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி 


அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html

(pl click the above link to continue reading)



ஆறு = ஆற்று நீர் 


மலைக்கு = மலையை நோக்கி 


எதிர்த்து ஓடும் ஒலி  = எதிர்த்து ஓடும் ஒலி 


அர = அரவு என்றால் பாம்பு. வாசுகி என்ற பாம்பு 


ஊறு = துன்பம், வலியால் 


சுலாய் = சுழன்று 


மலை தேய்க்கும் ஒலி = மலை (மேரு மலை) தேயும் ஒலி 


கடல் மாறு சுழன்று  = கடல் (பாற்கடல்) மாறி மாறி சுழன்று 


அழைக்கின்ற ஒலி  = எழுப்புகின்ற ஒலி 


அப்பன் = எனது தந்தை (திருமால்) 


சாறுபட = (தேவர்கள்) மகிழும்படி


 அமுதம் கொண்ட நான்றே. = அமுதத்தை வழங்கிய நாளில் 


பாற்கடல் என்று ஒன்று உள்ளதா? வாசுகி, மேரு மலை இதெல்லாம் உண்மையா? கடலை கடைய முடியுமா ? அமுதம் என்பது உண்மையா ?


என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். 


கற்பனை செய்து பார்க்கலாமே?


எவ்வளவு பிரமாண்டம்.  இத்தனையையும் ஒருவன் மேற் பார்வை செய்து, அமுதத்தை எடுத்து கொடுப்பது என்றால் எவ்வளவு பெரிய வேலை? அதை வெற்றிகரமாக ஒருவன் செய்து முடித்தான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். 


இப்போது உங்கள் வாழ்வில் உள்ள சவால்களை, பிரச்சனகைளை, சிக்கல்களை பாருங்கள். "ஹா...இதெல்லாம் ஒரு பெரிய வேலையா..." என்று தோன்றும். செய்து முடித்து விடலாம் என்று தோன்றும். நம் பிரச்னை ஒன்று பெரிது அல்ல என்று தோன்றும். 


இல்லை என்றால் நாம் ஒரு சின்ன பிரச்சனையை எடுத்து வைத்துக் கொண்டு, "ஐயோ, எனக்கு இப்படி ஒரு பிரச்னை வந்து விட்டதே, என்ன செய்வேன்" என்று களைத்துப் போவோம். கற்பனை விரிய விரிய, மனம் விரியும். மனம் விரியும் போது, அறிவு விரியும். 


பிரச்சனைகளின் பெரிது, சிறிது தன்மை புரியும். அவற்றைக் கையாளும் மனப் பக்குவம் வரும். தெம்பும் உற்சாகமும் வரும்.  வெற்றி தானே வரும். 


இது போன்ற பாசுரங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். ஒரு முறை படித்துவிட்டு, "நல்லா இருக்கு" என்று சொல்லிவிட்டு "அடுத்த பாசுரம் எப்போது வரும்" என்று கேட்க்கக் கூடாது. 


சரியா?








(முந்தைய பதிவுகள்

பாசுரம் 1 - ஆழி எழ 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


)


Tuesday, August 30, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வெற்றிப் பாசுரம்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வெற்றிப் பாசுரம் 


நாம் எதைப் பற்றி அதிகம் நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அதை அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும். 


எதை நினைக்கிறோமோ, அதைச் செய்வோம். எதைச் செய்கிறோமோ, அதில் பலன் கிடைக்கும். எவ்வளவு பலன் என்பது எவ்வளவு முயற்சி, காலம், இடம் அவற்றைப் பொறுத்தது.


வெற்றி அடைய வேண்டுமா?  வெற்றி பற்றி சிந்திக்க வேண்டும். வெற்றி அடைந்தவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்கள் எப்படி வென்றார்கள் என்று ஆராய வேண்டும். அவர்களின் வெற்றி நமக்கு ஒரு தூண்டு கோல், அது ஒரு ஊக்கம் தரும். 


உள்ளதிற்குள் பெரிய வெற்றி யாருடைய வெற்றியாக இருக்கும்? மிகப் பெரிய காரியத்தை யார் செய்திருப்பார்கள்? 


மிகப் பெரியவன் கடவுள் என்று கொண்டால், அவனுடைய வெற்றிதானே மிகப் பெரிய வெற்றியாக இருக்க முடியும். 


பிரமாண்டமான வெற்றி. நினைத்துக் கூட பார்க்க முடியாத வெற்றி அதுவாகத் தானே இருக்க முடியும்? 


இறைவன் அடைந்த வெற்றிகளைப் பற்றி சிந்திக்கிறார் நம்மாழ்வார். 


பிரமிப்பு ஊட்டுகிறது. சிலிர்த்துப் போய் விடுகிறது. 


நாம் எத்தனையோ ஆங்கிலப் படங்கள் பார்த்து வியந்திருப்போம். அதன் பிரமாண்டம், மித மிஞ்சிய கற்பனை, அதை எப்படி திரையில் கொண்டு வந்தார்கள் என்று வியந்திருப்போம்.


வேற்றுக் கிரகங்கள், இராட்சச திமிங்கலம், டினோசர், இயந்திர மனிதன், பறக்கும் மனிதன், என்று பெரிய கற்பனைகளை நாம் கண்டு வியந்து இருக்கிறோம். 


நம்மாழ்வார் பாடல்களைப் படித்துப் பாருங்கள். அவர் காட்டும் பிரமாண்டம், அவர் அதை ஒரு பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை, படிக்க படிக்க புல்லரிக்கும். படித்த பின் அவற்றை நம்மால் சரியாக கற்பனை கூட பண்ண முடியாது. 


முயன்று பாருங்கள். 


வாமன அவதாரமாக திருமால் வந்து மூன்றடி தானம் கேட்கிறார். மாவலியும் தருகிறேன் என்று ஒத்துக் கொள்கிறார். அதுவரை நம்மால் கற்பனை பண்ண முடியும். 


அடுத்தது என்ன நிகழ்ந்தது என்பதை நாம் கற்பனை பண்ணவும் முடியாது. .


திருமாலின் உருவம் எங்கோ பாதாளம் வரை போயிற்று. அங்கிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. 


நீங்கள் ஒரு கடற்கரையில் நிற்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். கடலின் நீண்ட பெரும் பரப்பை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். 


தூரத்தில் ஒரு சக்கரமும், சங்கும் கடலின் பரப்பின் மேல் எழுகிறது. என்ன இது என்று பார்கிறீர்கள். அது மிக பிரமண்டாமாக வளர்ந்து கொண்டே போகிறது. நீங்கள் பயந்து சற்று பின் வாங்கி என்ன அது என்று பார்கிறீர்கள். சங்கு, சக்கரத்தைத் தொடர்ந்து ஒரு வில் வருகிறது. எல்லோரும் அலறுகிறார்கள். பயத்தில் ஓடுகிறார்கள். அது மேலே போய்க் கொண்டே இருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஒரு பெரிய வாள் வருகிறது. இவற்றை தாங்கி இருந்த உருவத்தின் தலை இந்த  அண்ட சராசரத்தின் உச்சியை முட்டுகிறது. முட்டியது மட்டும் அல்ல, அதன் கூரையை கிழிக்கிறது. 


இந்த பிரபஞ்சம் நீரால் சூழப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். பிரபஞ்சத்தின் கூரையில் ஓட்டை போட்டால், அந்த தண்ணீர் கொட்டும் என்கிறார். அதற்கு ஆவரண ஜலம் என்று பெயர். 


இதுவரை கண்டது திருமாலின் ஒரு அடி. அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். அந்தத் திருவடியை உயர்த்துகிறார், அது அவர் தலை வரை போகிறது. 


கற்பனை செய்து பாருங்கள். ஓர் காலை ஊன்றிக் கொண்டு, இன்னொரு காலை தலைவரை உயர்த்தி. உயர்த்திய காலை ஊன்றி, கீழே உள்ள காலை அடுத்து தலைவரை உயர்த்த வேண்டும். அது ஒரு அடி என்ற கணக்கு. 


இந்த உலகம் அனைத்தையும் இரண்டே அடியில் அளக்க வேண்டும் என்றால் அந்தப் பாதம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும், அவ்வளவு பெரிய பாதம் என்றால் கால் எப்படி இருக்கும், மொத்த உருவமும் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ண முடிகிறதா? 


இவ்வளவு பெரிய உருவம், இரண்டு அடியில் அத்தனை உலகையும் அளக்க வேண்டும் அதுவும் மிகக் குறைந்த நேரத்தில். மாவலி நின்று கொண்டிருக்கிறான். மூன்றாவது அடி எங்கே என்று கேட்க வேண்டும். அப்படி என்றால் அந்த உருவம் இந்த உலகை எவ்வளவு வேகமாக அளந்திருக்கும் ?


பாடல் 



ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை

வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்

மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்

ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. (3594)




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


(pl click the above link to continue reading)




ஆழி யெழச் = சக்கரம் எழ 


சங்கும் = சங்கும் 


வில்லு மெழ = வில்லும் எழ 


திசை வாழி யெழத் = திசைகள் தோறும் உள்ள மக்கள் அதைக் கண்டு ஒரு புறம் பயந்து, மறுபுறம் பிரமித்தது, வாழ்க வாழ்க என்று கோஷம் இடுகிறார்கள். பிரமாண்டமான சப்த்தம். உலகமே நடுங்குகிறது. 



தண்டும் = கதை ஆயுதமும் 


வாளு மெழ, = வாளும் எழ 


அண்டம் மோழை யெழ = அண்டத்தின் உச்சி பிளந்து, ஆவரண நீர் பொங்கி எழ 


முடி = திருமுடி, தலை 


பாத மெழ = பாதம் அதுவரை செல்ல 


அப்பன் = திருமால் 


ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. = மாவலியால் (விதியின் காரணமாக) பட்ட துன்பங்கள் நீங்கி உலகம் நன்மை அடைய 


இது உண்மையா, இல்லையா என்ற தர்க்கம் ஒரு புறம் இருக்கட்டும். 


எவ்வளவு பெரிய பிரமாண்டம் என்று மனமும், சிந்தனையும் விரிகிறது அல்லவா? 


அதை நினைக்கும் போது நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் ஒரு தூசு என்று தெரிகிறது அல்லவா? இதைச் செய்யவா இந்தப் பாடு படுகிறேன்...இப்ப செய்து முடிக்கிறேன் என்று நமக்குள் ஒரு உத்வேகம் வருகிறது அல்லவா. அந்த முயற்சி, ஊக்கம், உந்து சக்தி வெற்றியைத் தேடித் தரும். 


இப்படி பத்துப் பாடல்களை அருளிச் செய்து இருக்கிறார் நம்மாழ்வார். 


இதரப் பாசுரங்களும் இதே மாதிரித்தான். 




Tuesday, May 3, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - காண வாராயே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - காண வாராயே 


வெளியில் விளையாடி விட்டு பையன் தளர்ந்து வருகிறான். 


அம்மாவுக்குத் தெரியும். பையன் பசியோடு வந்திருப்பான் என்று. 


"கொஞ்சம் இரு, சூடா உனக்கு சாப்பிட கொண்டு வருகிறேன்" என்று சமையல் அறைக்குள் செல்கிறாள். 


பையன் , சோபாவின் மேலே காலை நீட்டி படுத்துக் கொள்கிறான். கையில் செல் போன். எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறான். 


கொஞ்ச நேரம் ஆச்சு. சாப்பாடு ஒண்ணும் வர்ற வழியா தெரியல...எழுந்து உட்கார்ந்து கொள்கிறான், பசி, சாப்பாடு வரப் போகிறது என்ற ஆர்வம் ..."என்னம்மா ஆச்சு...எவ்வளவு நேரம்...". 


"இதோ முடிஞ்சிருச்சு...இரண்டே நிமிடம்" என்று அம்மா குரல் கொடுக்கிறாள். 


நேரம் போனது. இன்னும் சாப்பாடு வந்த பாடில்லை. பையனுக்கு பொறுமை போய் விட்டது...எழுந்து நேரே சமையல் அறைக்கே போய் விடுகிறான். "என்னதான் செய்ற...இவ்வளவு நேரமா" என்று. அவன் அவசரம் அவனுக்கு. 


இதுக்கும் நாலாயிர திவ்ய பிரபந்ததுக்கும் என்ன சம்பந்தம்?


இருக்கு. சொல்கிறேன். 


பாடல் 




புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று

தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி

நளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப

புளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே.


படிக்க சற்று கடினமாய் இருக்கும். சீர் பிரித்தால் எளிதாக விளங்கும். 


சீர் பிரித்த பின் 


புளிங்குடிக் கிடந்து வாகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று


தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னையாள்வாய் எனக்கு அருளி 


நளிர்ந்த சீருலகம்  மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப 


பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப அரி காண வாராயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_3.html


(pl click the above link to continue reading)


புளிங்குடிக் கிடந்து = திருப் புளிக் குடியில் பள்ளி கொண்டு 


வாகுணமங்கை இருந்து  = வாகுர மங்கை என்ற தலத்தில் வீற்று இருந்து 


 வைகுந்தத்துள் நின்று = வைகுந்தத்துள் நின்று 


தெளிந்த என் சிந்தை  = என் சிந்தையை தெளிவித்து 


அகம் கழியாதே = என்னை விட்டு நீங்காமல் 


என்னையாள்வாய் = என்னை ஆள்பவனே 


எனக்கு அருளி  = எனக்கு அருளிச் செய்து 


நளிர்ந்த சீருலகம்  =   குளிர்ந்த இந்த சீரிய உலகம் 


மூன்றுடன் வியப்ப = மூன்று உலகோடு வியப்ப 


நாங்கள் = நாங்கள் 


கூத்தாடி = கூத்து ஆடி 


நின்று ஆர்ப்ப  = நின்று ஆர்பரிக்க 


பளிங்கு = பளிங்கு போன்ற 


நீர் முகிலின் = நீரைக் கொண்ட மேகத்தின் 


பவளம் போல் = பவளம் போன்ற 


கனிவாய் சிவப்ப = அதரங்கள் சிவந்து இருக்க 


அரி காண வாராயே. = என்னைக் காண வா 


இதற்கு வைணவ பெரியவர்கள் எழுதிய உரை மெய் சிலிர்க்க வைக்கும். அவர்கள் சொன்னதை நான் எளிமைப் படுத்திச் சொல்கிறேன். 


நமக்கு இறைவன் அருள் வேண்டும். 


அதற்காக முயற்சி செய்கிறோம். ஆனால், நமக்கு அதுவே முழு நேர வேலை இல்லை. அதற்கு நடுவில் பல வேலைகள் இருக்கிறது. 


இறைவனுக்கு நமக்கு அருள் செய்ய வேண்டும்.


இறைவனுக்கு வேறு வேலை என்ன? அப்படியே இருந்தாலும், அவனுக்கு அதெல்லாம் ஒரு பெரிய விடயம் இல்லை. நமக்கு அருள் செய்வது ஒன்றுதான் அவனுக்கு ஒரே வேலை. 


எப்படா இவனுக்கு அருள் செய்வோம் என்று இறைவன் தவித்துக் கொண்டு இருப்பானாம்.


முதலில் சயனித்துக் கொண்டு இருந்தானாம். ஒண்ணும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. இந்த பக்தனோ நம்மிடம் வரவே மாட்டேன் என்கிறான்.  பொறுமை இழந்து, பெருமாள் எழுந்து உட்கார்ந்து விட்டார். பக்தன் வருகிறானா, எங்கே வருகிறான் என்று பார்பதற்கு. 


பக்தன் வருவதாகக் காணோம். பெருமாளுக்கு இன்னும் பொறுமை போய் விட்டது. எழுந்து நின்று கொண்டாராம். ஒருவேளை அவன் வந்தால் நாம் ஓடிப் போய் அவனுக்கு அருள் செய்யலாம் என்று. 


புளிங்குடிக் கிடந்து

 வாகுணமங்கை இருந்து

 வைகுந்தத்துள் நின்று


கிடந்து, இருந்து, நின்று பகவான் தவிக்கிறான். எப்படியாவது அடியவனுக்கு அருள் செய்து விடமாட்டோமா என்று. 


பக்தனுக்கு ஒரு கவலையும் இல்லை. 


அவன் பாட்டுக்கு netflix, whatsapp என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். 


பத்தா குறைக்கு அவன் இறைவனிடம் சொல்கிறான் 


"இங்க பாரு...நீ பெரிய ஆள். இந்த உலகமே உன்னைப் பார்த்து வியக்கிறது. இப்ப உனக்கு என்ன பிரச்சனை? எனக்கு அருள் செய்யணும். அது தானே? நான் வரணுமுன்னு ஏன் நீ எதிர்பாக்குற...நீயே வந்து அருள் செய்துட்டுப் போயேன். மழை யார் கேட்டுமா பெய்கிறது. அது பாட்டுக்கு பெய்கிறது. உன்னைப் பார்த்தாலும் அந்த நீர் கொண்ட கரு முகில் போலத் தான் இருக்கிறது. நீ பாட்டுக்கு அருள் செய்யேன்" 


" காண வாராயே"


"நான் உன் கிட்ட வரல. ..எனக்கு அறிவு இல்லை. நீ என் கிட்ட வரலாம்ல...என்னைப் பார்க்க நீ வரலாம்ல...அதுக்கு என்ன தடை ?"


என்கிறான். .


இதெல்லாம் ஒரு அன்யோன்யம். கடவுளிடம் ஒரு அன்பு, நேசம், பாசம், உரிமை. 


இறைவனை அனுபவித்தல் என்பார்கள் வைணவர்கள். அது ஒரு அனுபவம். 


சொன்னால் புரியாது. அனுபவிக்க வேண்டும்.


கற்கண்டு எப்படி இருக்கும் என்று எத்தனை ஆயிரம் பக்கம் எழுதி விளக்கினாலும் புரியாது. ஒரு துண்டு கற்கண்டை வாயில் போட்டால் புரிந்து விடும். அதுதான் அனுபவம். .


"நீ சொல்லு. எனக்கு பிடித்து இருந்தால் நான் வாயில் போடுகிறேன்" என்றால் நடக்காது. சொல்லிப் புரியாது. அனுபவம் ஒன்றேதான் வழி. 


பிரபந்தம் போன்ற நூல்கள் நம்மை அந்த அனுபவத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகள். அதில் சொல்லுக்கு பொருள் தேடக் கூடாது. அனுபவங்களை, உணர்சிகளை பிடித்துக் கொள்ள வேண்டும். 


அந்த அனுபவம் வாய்க்க குருவருள் துணை செய்யட்டும்.