Saturday, November 25, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இத்தனை நாளா இது தெரியாம போச்சே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - இத்தனை நாளா இது தெரியாம போச்சே 


அயல்நாட்டுக்கோ அல்லது ஒரு அழகிய மலை பாங்கான இடத்துக்கோ, அல்லது ஒரு அழகிய கடற்கரைக்கோ சுற்றுலா போகிறோம். அந்த இடம் மிக அழகாக இருக்கிறது. இரசிக்கிறோம். 


"அடடா, இப்படி ஒரு இடம் இருப்பது இத்தனை நாளா தெரியாம போச்சே...தெரிஞ்சுருந்தா முன்னாலேயே வந்திருக்கலாமே ..." என்று மனம் நினைக்கும் அல்லவா?  


"இத்தனை நாளா இதை miss பண்ணிவிட்டோமே" என்று மனம் வருந்தும் அல்லவா?


அது போல,


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் "பெருமாளே உன் திருவடிகளை வந்து அடைந்து விட்டேன். இது தெரியாமல் இத்தனை நாள், இந்த பெண்கள், உலக இன்பங்கள் என்று அலைந்து திருந்தி என் வாழ் நாளை வீணடித்து விட்டேனே" என்று  வருந்துகிறார். 


பாடல் 



சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,

புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,

அலம்புரிதடக்கையாயனே மாயா!  வானவர்க்கரசனே!, வானோர்

நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


சீர் பிரித்த பின் 


சிலம்பு அடி உருவில் கரு நெடுங் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து,

புலம் படிந்து உண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா,

அலம் புரி தடக்கையாயனே மாயா!  வானவர்க்கு அரசனே!, வானோர்

நலம் புரிந்து இறைஞ்சு உன் திருவடி அடைந்தேன்  நைமிசாரணியத்து உள் எந்தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_25.html


(pl click the above link to continue reading)


சிலம்பு அடி = கொலுசு அணிந்த கால்கள் 


உருவில் = அவர்கள் மேல் 


கரு  = கருமையான 


நெடுங்  = நீண்ட 


கண்ணார் = கண்களை உடைய பெண்கள் 


திறத்தனாய் = அவர்கள் பின்னே போய் 


அறத்தையே மறந்து = அற நெறிகளை மறந்து 


புலம் படிந்து = புலன்களின் பின்னால் 


 உண்ணும் போகமே  = போகத்தை அனுபவித்து 


பெருக்கிப் = அவற்றையே பெரிது என்று எண்ணி 


போக்கினேன் = வீணாக போக்கினேன் 


பொழுதினை வாளா = என் வாழ்நாளை வீணாக 


அலம் புரி = பக்தர்கள் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு அள்ளி அள்ளித் தரும் 


தடக்கையாயனே  = நீண்ட  கைகளை உடையவனே 


மாயா!  = மாயவனே 


வானவர்க்கு அரசனே!, = தேவர்களுக்கு அரசனே 


வானோர் = வானவர்களுக்கு 


நலம் புரிந்து = நன்மை பல புரிந்து 


இறைஞ்சு = வேண்டும் 


உன் திருவடி அடைந்தேன் = உன் திருவடிகளை அடைந்தேன் 


 நைமிசாரணியத்து = நைமிசாரண்யத்தில் 


உள் எந்தாய் = உள்ள என் தந்தையே 


ஒரு வழியாக உன் திருவடிகளை அடைந்து விட்டேன். இதற்கு முன் பெண்கள், புலன் இன்பங்கள் பின்னால் அலைந்து கொண்டிருந்தேன். இறுதியில் உன் திருவடிகளை அடைந்து விட்டேன்.


எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம் உண்டு. 


ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஒரு இயற்கையான விடயம்தானே. அதை ஏன் இவ்வளவு பெரிய விடயமாக்க வேண்டும். ஆன்மீகத்தில் உள்ள எல்லா பெரியவர்களும் மனைவி, பெண் ஆசை என்பதை ஏதோ பஞ்ச மா பாதகம் போல் ஏன் சித்தரிக்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்க,


இந்தப் பாடல்களை படிக்கும் பெண்கள் மனநிலை எப்படி இருக்கும். 


நான், என் கணவரின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறேனா ? என்ற எண்ணம் ஒரு பெண்ணின் மனதை பாதிக்காதா?


ஒரு பெண், ஆணின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறாள் என்றால் ஒரு ஆண், பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்க மாட்டானா?  


இது பற்றி யாரும் பேசுவதே கிடையாது. 


ஏன் ?







 



1 comment:

  1. Interesting question you asked, may be they refer other women (not wife) ...I agree on the other view as well, men also (or the family they're into) is a blocker for ladies in their spiritual life too. Need to balance it and move forward . For that guru and god blessing should be there

    ReplyDelete