Showing posts with label naaladiyaar. Show all posts
Showing posts with label naaladiyaar. Show all posts

Friday, January 5, 2024

நாலடியார் - புல்லறிவாண்மை - எதுக்குச் சண்டை?

 நாலடியார் - புல்லறிவாண்மை - எதுக்குச்  சண்டை?



புல் எவ்வளவு சிறியது. அதில் சிறப்பித்துக் கூற ஒன்றும் இல்லை. புல்லறிவு என்றால் புல் போன்ற சிறிய அறிவு. சிற்றறிவு. கொசு மூளை என்று சொல்லுவார்களே அது. புல்லறிவாண்மை என்றால் அந்த சிறிய அறிவை பெரிய அறிவு என்று நினைத்துக் கொண்டு  பெருமிதம் கொண்டு அலைவது. 


சிலருக்கு படிப்பறிவு, பட்டறிவு எல்லாம் மிகக் கொஞ்சமாக இருக்கும். ஆனால், அவர்கள் பேசுவதைக் கேட்டால் ஏதோ எல்லாம் படித்த மேதாவிகள் மாதிரி பேசுவார்கள். 


அப்படிப்பட்ட அறிவுள்ளவர்களைப் பற்றி நாலடியார் பேசுகிறது. 


"இருக்கப் போகிற நாள் கொஞ்சம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதில் பலர் பேசும் பழிச் சொற்களை வேறு கேட்க வேண்டும். இருக்கின்ற கொஞ்ச நாளில், எல்லோரிடமும் சிரித்து பேசி மகழ்ந்து இருக்காமல், எல்லோரிடமும் எதற்கு சண்டை போட வேண்டும் ?"


அப்படி சண்டை போடுபவன், புல்லறிவாளன்.


பாடல் 

 


உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,

பலர்மன்னுந் தூற்றும் பழியால், -பலருள்ளும்

கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்

தண்டித் தனிப்பகை கோள்.


பொருள் 


உளநாள் = உயிரோடு இருக்கப் போகும் நாட்கள் 


சிலவால் = சில நாட்களே 


உயிர்க்கேமம் = உயிர்க்கு ஏமம் = உயிருக்கு துணை 


இன்றால் = யாரும் இல்லை 


பலர்மன்னுந் = பலரும் 


தூற்றும் பழியால் = பழிச் சொல்லை கேட்டு 


பலருள்ளும் = பலரிடத்தில், உள்ள பலரிடத்தில்   


கண்டரோ டெல்லாம் = காண்கின்ற பேர்களை எல்லாம் 


நகாஅ தெவனொருவன் = நகாது எவனொருவன் = சிரித்து மகிழாமல் எவன் ஒருவன் 


தண்டித் = வெறுத்து, ஒதுக்கி 


தனிப் = தனித்து 


பகை கோள் = பகை கொள்வது ஏன் ?


இருக்கிற கொஞ்ச நாளில் எல்லாரிடமும் சிரித்து பேசி மகிழாமல், எல்லாரிடமும் சண்டை போட்டுக் கொண்டு, பேச்சு வாங்கிக் கொண்டு, தனித்து இருப்பது புல்லறிவாண்மை என்கிறது நாலடியார். 


சண்டியர் மாதிரி எல்லாரிடமும் சண்டை போடுவதும் ஒரு சுகம் என்று நினைப்பது silly mind...













Wednesday, November 29, 2023

நாலடியார் - வயதான காலத்தில்

 நாலடியார் - வயதான காலத்தில் 


ஒருவன் அல்லது ஒருத்தி எவ்வளவு பாடுபட்டு உழைத்து கணவன்/மனைவி/பெற்றோர், பிள்ளைகள், உறவு, நட்பு என்று எல்லோரையும் அரவணைத்துச் சென்றாலும், வயதான காலத்தில், அவர்களுக்கு மதிப்பு குறைவது என்பது இயல்பு. 


"கிழத்துக்கு வேற வேலை இல்லை, எதையாவது பிதற்றிக் கொண்டே இருக்கும்"


"காதும் கேக்குறது இல்ல, சும்மா இருன்னு சொன்னாலும் இருக்கிறது இல்ல"


"உனக்கு ஒண்ணும் தெரியாது, பேசாம வாய மூடிகிட்டு சிவனேன்னு இறேன்"


இது போன்றவற்றை கேட்க வேண்டி இருக்கும். நேரடியாக முகத்துக்கு நேரே சொல்லாவிட்டாலும், பின் புறம் பேசுவார்கள். 


என்ன செய்யலாம்?


வயதாகி, படுக்கையில் விழும் முன், நமக்கு எது நல்லதோ, அதைச் செய்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நல்லது செய்கிறேன், எனக்கு வேண்டியதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், அந்த அப்புறம் வரும் போது உடலில் வலு இருக்காது. 


அப்போது வருந்திப் பயன் இல்லை. என்ன செய்தாலும், முதுமை வந்தே தீரும். உடலும், மனமும், மூளையும் செயல் குறையும். அதெல்லாம் இப்ப வராது, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது அறிவீனம். 


பாடல் 


மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை

ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப்

புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்

தொழுத்தையாற் கூறப் படும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_29.html


(pl click the above link to continue reading)


மூப்பு = வயதாகுதல் 


மேல் வாராமை = மேல் வரும் நாட்களில் வருவதை, அல்லது உண்டது வாய் வழியும், மூக்கு வழியும் வருவது. வயதான காலத்தில் வாயில் நீர் வழிவது இயற்கை. 


முன்னே = அதற்கு முன்னே 


அறவினையை = அறம் சார்ந்த செயல்களை 


ஊக்கி = முயன்று செய்து 


அதன்கண் = அச்செயல்களை 


முயலாதான் = செய்ய முயற்சி செய்யாதவன் 


நூக்கிப் = தள்ளி வைத்து, நீக்கி வைத்து 

 

புறத்திரு = புறத்து இரு. வெளிய போய் இரு 


போ = இருந்து என்ன செய்யப் போற. போ(ய் தொலையேன்) 


கென்னும் = என்று சொல்லும் 


இன்னாச்சொல் = கொடிய சொற்களை 


 இல்லுள் = சொந்த வீட்டில் 


தொழுத்தையாற் = வேலைக்காரர்களால்  


கூறப் படும். = கூறப் படுவீர்கள் 


வீட்டில் உள்ள மனைவி, மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் அல்ல, வீட்டில் வேலை செய்பவர்கள் கூட வயதானவர்களை  மதிக்க மாட்டார்கள். 


அப்படிச்செய்து இருக்கலாம், இப்படிச் செய்து இருக்கலாம் என்று வயதான காலத்தில் வருத்தப் பட்டு பலன் இல்லை. 


இப்போதே அறவினைகளை செய்யத் தொடங்க வேண்டும். 




Monday, November 6, 2023

நாலடியார் - புல்லின் மேல் பனி

 நாலடியார் - புல்லின் மேல் பனி 


சிறு வயதில், ஏன் சில பேருக்கு வயதான பின் கூட, சில அறிவற்றவர்களிடம் பழக்கம் இருக்கும். சின்ன வயசில் இருந்தே பழக்கம். நீண்ட நாள் நட்பு, உறவு என்று அறிவு இல்லா மூடர்களோடு சேர்ந்து திரிவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் இருக்காது, நோக்கம் இருக்காது. நாம் நல்லது செய்ய முயற்சி செய்தாலும், ஏதாவது சொல்லி குழப்பி விடுவார்கள். 


அவர்களோடு சேர்ந்து நமக்கும் சில கெட்ட பழக்கங்கள் தொற்றிக் கொள்ளும். புகை பிடிப்பது, சூதாடுவது, வெட்டிப் பேச்சு பேசுவது, அரட்டை அடிப்பது போன்ற பழக்கங்கள்.


இதில் இருந்து எப்படி விடுபடுவது?


எப்படி நம் வாழக்கையை சிறப்பாக ஆக்கிக் கொள்வது?


நாலடியார் சொல்கிறது 


"அறியாத சிறுவயதில் அடக்கம் இல்லாதவர்களோடு சேர்ந்து தவறான பாதையில் போனாலும், நல் வழி செல்லும் சான்றோரோடு சேர்ந்துவிட்டால், புல்லின் மேல் உள்ள பனி எப்படி சூரியன் வந்தவுடன் ஆவியாகிப் போகிறதோ, அது போல பழைய கெட்ட பழக்கங்கள் எல்லாம் போய் விடும்" 


என்று. 


பாடல் 


அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த

நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_6.html


(pl click the above link to continue reading)


அறியாப் பருவத்து = அறியாத பருவத்தில் 


அடங்காரோடு = அடக்கம் இல்லாமல் திரிபவர்களோடு 


ஒன்றி = சேர்ந்து இருந்து 


நெறியல்ல = நெரியலாதவற்றை , தவறானவற்றை 


செய்தொழுகி யவ்வும் = செய்து வந்ததும் 


நெறியறிந்த = நல் வழி அறிந்த 


நற்சார்வு  = நல்லவர்களோடு கொண்ட  தொடர்பு 


சாரக்கெடுமே = சேர்ந்திருக்க அந்த பழைய பழக்கங்கள் நம்மை விட்டுப் போய் விடும். எப்படி என்றால் 


வெயில்முறுகப் = வெயில் ஏற ஏற 


புற்பனிப் = புல்லின் மேல் பனி 


பற்று = பிடித்து இருந்த பற்று  


விட் டாங்கு. = விட்டதைப் போல 


புல் ஒன்றும் செய்ய வேண்டாம். சூரியன் வந்தால், பனி தானே விலகிவிடும். அது போல், பெரியவர்கள் நட்பு, தொடர்பு கிடைத்தால், நம் பழைய தீய எண்ணங்கள், பழக்கங்கள் தானே நம்மை விட்டுப் போய் விடும். 


கவனிக்க வேண்டியது என்ன என்றால்:


நம் நல்ல பழக்கங்களும், தீய பழக்கங்களும் நம்மை சேர்த்தவர்களைப் பொறுத்தே அமைகிறது. யாரோடு சேர்கிறோமோ, அவர்களின் குணம் நம்மை சேரும். 


இரண்டாவது, பாடல் "இளம் வயதில்" என்று கூறவில்லை. அறியா பருவத்தில் என்று கூறுகிறது. சிலருக்கு அறியாப் பருவம் என்பது நீண்ட நாள் தொடரும். அவர்கள் கெட்டவர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று அவர்கள் அறிய மாட்டார்கள். 


உங்கள் பணத்தை ஒருவன் திருடிக் கொண்டு போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனோடு தொடர்பில் இருப்பீர்களா?


திருடவில்லை, உங்களை ஏமாற்றி உங்கள் பொருளை ஒருவன் பறித்துக் கொள்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனோடு நட்பில் இருப்பீர்களா?


ஒருவன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனை?  நாம் நேரத்தை பெரிதாக நினைப்பது இல்லை. உங்களிடம் தேவையில்லாதவற்றை பேசுபவர்கள், அரட்டை அடிப்பவர்கள், புறம் சொல்லுபவர்கள், என்று உங்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் உங்கள் வாழ்கையை வீணடிப்பவர்கள்.  அந்த நேரம் இருந்தால் அதை நல்ல வழியில் செலவழிக்க முடியும்.  


அதே சமயம் உங்கள் நேரத்தை பயனுள்ளதாக ஆக்குபவர்கள், அவற்றின் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் வரும்படி செய்பவர்கள், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்கோளோடு இருந்தால், நாளடைவில், முன் சொன்னவர்களின் தொடர்பு தானே கழலும். 


சுற்றி முற்றி பாருங்கள். 


உங்கள் சுற்றம் மற்றும் நட்பில், உங்களை நாளும் உயர்த்துபவர்கள் யார், உங்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் யார் என்று. 


Sunday, October 15, 2023

நாலடியார் - தன் போல் ஒருவன் முகம் நோக்கி

நாலடியார் - தன் போல் ஒருவன் முகம் நோக்கி 


படித்தவர்கள், அறிஞர்கள் சொல்வதைக் கேட்பது கடினம். அவர்கள் சொல்வதை கேட்டுப் புரிந்து கொள்ள புத்தியை செலவிட வேண்டும். 


யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது அதை விட கடினம். 


"அதெல்லாம் நடை முறை சாத்தியம் அல்ல" என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டி கழிக்க வேண்டும். 


எதுக்கு இவ்வளவு சிக்கல்?


நம்ம அளவுக்கு அறிவு (குறைந்த) ஒருவனை கண்டு பிடித்து அல்லது அது போல ஆட்கள் உள்ள ஒரு whatsapp குழுவில் சேர்ந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் செய்திகள், துணுக்குகள், போன்றவற்றை பரிமாறி மகிழலாம். 


புத்திசாலிகள் ஒரு குழு வைத்து இருப்பதைப் போல, அறிவு குறைந்தவர்களும் ஒரு குழு வைத்து அவர்களுக்குள் மகிழ்ந்து கொள்வார்கள் என்கிறது இந்தப் பாடல்:


பாடல் 


 கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி

பற்றாது தன்னெஞ் சுதைத்தலால், - மற்றுமோர்

தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்

புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_15.html


(please click the above link to continue reading)



 கற்றா ருரைக்குங் = கற்றார் உரைக்கும் (சொல்லும், கூறும்) 


கசடறு = கசடு + அறு = குற்றம் இல்லாத 


நுண்கேள்வி = நுண்மையான செய்திகள் 


பற்றாது = பற்றிக் கொள்ளமால், கேட்காமல், படிக்காமல் 


தன்னெஞ் சுதைத்தலால் = தன் + நெஞ்சு + உதைத்ததால் = தன்னுடைய மனம் அதை உதைத்து தள்ளி விடுவதால் 



மற்றுமோர் = வேற ஒரு 


தன்போ லொருவன் = தன்னை போன்ற ஒருவன் (முட்டாள்) 


முகநோக்கித் = முகத்தைப் பார்த்து, அவனுடன் சேர்ந்து 


தானுமோர் = தானும் ஓர் 


புன்கோட்டி = புல்லிய அவையை, குழுவை 


கொள்ளுமாம் கீழ் = கீழ் மக்கள் கொள்வார்கள் 


கீழ் மக்கள், அவர்கள் நிலையில் உள்ளவர்களிடமே சேர்ந்து கொள்வார்கள். 


அந்த நிலையை விட்டு மேலே வர வேண்டும் என்றால், தன்னை விட அறிவில் உயர்ந்தவர்களிடம் பழக வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவற்றை புரிந்து கொள்ள முயல வேண்டும். முடிந்தால் அதன் படி நடக்க வேண்டும். 


மாறாக, முட்டாள்களிடம் சேர்ந்து பொழுதைக் கழித்தால், அந்த நிலையிலேயே இருக்க வேண்டியதுதான். 


உயரும் வழி சொல்லித் தருகிறது இந்தப் பாடல். 



Tuesday, October 3, 2023

நாலடியார் - பீடிலார் செல்வம்

 நாலடியார் - பீடிலார் செல்வம்


நமக்கு  அவசரமாக கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. யாரிடமாவது கைமாற்று வாங்க வேண்டிய சூழ்நிலை. ஒரு வாரத்தில் திருப்பி கொடுத்து விட முடியு. யாரிடம் கேட்கலாம்?


நாம் இருக்கும் இடத்துக்கு அருகில் ஒரு ரௌடி இருக்கிறான். கொலை, கொள்ளை, என்று பல முறை சிறை சென்று வந்தவன். அவனிடம் கேட்போமா? 


அவ்வளவு ஏன், நமக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். நல்லவர்தான். ஆனாலும், யாருக்கும் ஒரு உதவியும் செய்ய மாட்டார். யார் என்ன கேட்டாலும், ஏதாவது சொல்லி தட்டிக் கழித்து விடுவார். நாம் போய் கேட்டாலும், தரமால் வெறும் கையோடு அனுப்பி விடலாம்.


அவரிடம் கேட்போமா?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


விழாம்பழம் பார்த்து இருக்கிறீர்களா?  வெளியே கடினமான ஓடு இருக்கும். கொஞ்சம் முள் இருக்கும். உள்ளே மெதுவான, இனிப்பான பழம் இருக்கும். அந்த பழத்தை வௌவால் நாடி வராது. காரணம், வௌவாலால் அந்த பழத்தை உண்ண முடியாது. 


தகுதி, சிறப்பு இல்லாதவரிடம் உள்ள செல்வம் அது போன்றது. யாருக்கும் பயன்படாது. 


பாடல்  


அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்

பொரிதாள் விளவினை வாவல் குறுகா;

பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்

கருதுங் கடப்பாட்ட தன்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_3.html


(please click the above link to continue reading)



அருகல தாகிப் = அருக முடியாமல், அருகில் செல்ல முடியாமல் 


பலபழுத்தக் கண்ணும் = பல பழங்களை பழுத்த பின்னும் 


பொரிதாள் = பெரிய பட்டையை உடைய 


விளவினை = விளா மரத்தை (விளாம் பழம் உள்ள மரத்தை) 


வாவல் =வௌவால் 


குறுகா = அணுகாது, அதனிடம் செல்லாது 


பெரிதணிய ராயினும் = பெரிய செல்வம் உடையவர் ஆயினும் 


 பீடிலார் = பெருமை இல்லாதவர் 


செல்வம் = செல்வம் 


கருதுங் = பிறருக்கு பயன் படும் என்று நினைக்கும் 


கடப்பாட்ட தன்று = தன்மை உடையது அல்ல .


விளாம் பழத்தை சுவைக்க வேண்டும் என்றால், அதை வீட்டுக்கு கொண்டு வந்து சுத்தியலால் அதன் தலையில் இரண்டு போட வேண்டும். போட்டால்,ஓடு உடையும். பின் உள்ளே உள்ளதை எடுத்து உண்ண முடியும். 


சில பேரிடம் உள்ள செல்வம் அப்படித்தான் இருக்கும். 


மாம்பழமா, கொய்யா பழம் போன்ற பழங்களை வௌவால் வந்து கொஞ்சம் உண்டு விட்டு போய் விடும். நம்மிடம் எவ்வளவோ இருக்கிறது. இந்த வௌவாலுக்கு, அணிலுக்கு கொஞ்சம் தந்தால் என்ன என்று அந்த மரங்கள் பெருந்தன்மையாக கொடுக்கும். ஒரு சில பழங்களை கொடுப்பதன் மூலம் நாம் ஒன்றும் குறைந்து விடப் போவது இல்லை என்று நினைக்கும். 


மேலும், அந்த பழங்களை கொத்தி தூக்கிச் செல்லும் வௌவால் , அதை உண்டு விட்டு, விதையை வேறு எங்கோ போட்டு விடும். அந்த மரம் அங்கே முளைக்கும். 


எளிய உவமை. சிறந்த கருத்து. 




Monday, August 28, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - நோதக்க என்னுண்டாம் ?

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - நோதக்க என்னுண்டாம் ?


நமக்கு முன்ன பின்ன பழக்கம் இல்லாதவர்கள் நமக்கு தீங்கு செய்வது இல்லையா? 


நாம் அவர்களை பார்த்து பழகி இருக்க மாட்டோம். அவர்களால் நமக்கு சில சமயம் தீமை வந்து சேரலாம். 


உதாரணமாக, தெருவில் நாம் சென்று கொண்டிருக்கும் போது, வேற வண்டியில் வரும் ஒருவர் நம் மீதோ, அல்லது நமக்கு வேண்டியவர்கள் மேலோ மோதி பெரும் பொருட் செலவும், மன வலியும் உண்டாக்கி விடலாம். நாம் அவர்களுக்கு என்ன தீமை செய்தோம். ஒன்றும் இல்லை. இருந்தும் அவர்களால் பெரும் தீமை நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது. 


யாருக்கோ, யார் மேலோ கோபம். தெருவை அடைத்து போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள் நமக்கு அவசரமாக போக வேண்டி இருக்கும். சங்கடம்தான். 


இதுக்கெல்லாம் என்ன காரணம் ?


ஊழ். விதி. வேறு என்ன சொல்லுவது. 


சம்பந்தம் இல்லாதவர்கள் மூலம் நமக்கு தீமை வந்தால் என்ன செய்ய முடியும். விதி என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. 


அப்படி இருக்க, நண்பர்கள் தீமை செய்தால், அதை ஏன் பெரிது படுத்த வேண்டும். அதுவும் விதி என்று ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என்கிறது நாலடியார். 


பாடல் 




ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்

நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்

கழுமியார் செய்த கறங்கருவி நாட!

விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_28.html


(please click the above link to continue reading)


ஏதிலார் = அறிமுகம் இல்லாதவர்கள் 


செய்த = செய்தது 


திறப்பவே தீதெனினும் = மிகப் பெரிய தீமை என்றாலும் 


நோதக்க = அதில் நொந்து கொள்ள 


 தென்னுண்டாம் = என்ன இருக்கிறது ?


 நோக்குங்கால்! = ஆராய்ந்து பார்த்தால் 


காதல் = அன்பு 


கழுமியார் = உடையவர்கள் (நண்பர்கள்) 


செய்த = செய்த 


கறங்கருவி = கறங்கு + அருவி = ஒலி எழுப்பும் அருவிகளை கொண்ட 


நாட! = நாட்டின் தலைவனே 


விழுமிதாம் = சிறப்பு உள்ளது 


நெஞ்சத்துள் நின்று = மனதில் வைத்துப் பார்க்கும் போது 


ஏதோ விதியினால் அவர்கள் நமக்கு தீங்கு செய்யும்படி நேர்ந்து விட்டது என்று எடுத்துக் கொண்டு போனால், அந்த அன்பின், நட்பின் பலம் மேலும் பெருகும். சிறப்பு உடையதாக இருக்கும். 



இந்த ஏதிலார் என்ற சொல்லை நம் வள்ளுவ ஆசான் காமத்துப் பாலில் கையாண்டு இருக்கிறார். (அறத்துப் பாலிலும் உண்டு. ஏதிலார் குற்றம் போல்) 


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.


அவர்கள் இருவரும் காதலர்கள். அது பிறருக்குத் தெரியாது. ஏதோ ஒரு பொது நண்பரின் வீட்டில் ஒரு நிகழ்வுக்குப் போய் இருக்கிறார்கள். 


அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வப்போது பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் பார்வையின் அர்த்தம் அவர்களுக்குப் புரியும். ஆனால், மற்றவர்கள் பார்த்கும் போது, ஏதோ முன்ன பின்ன தெரியாத இருவர் பார்த்துக் கொள்வது போல இருக்குமாம். 


ஏதிலார் போல பொது நோக்கு நூகுதல் காதலார் கண்ணே உள என்கிறார் வள்ளுவர். 


அவர்களால்தான் அது முடியும் என்கிறார். 


அவர்கள் பார்த்து இரசிப்பதை இவர் பார்த்து இரசித்து எழுதியதை நாம் இரசிக்கிறோம். 


தமிழ் இலக்கியம். 


 

Monday, August 21, 2023

நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - அவரின் கடை

 நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - அவரின் கடை 


நட்பு கொண்ட ஒருவர் ஏதோ தவறு செய்து விட்டார் என்ற காரணத்துக்காக அவரை விட்டு விலக நினைக்கலாம். 


அப்படி நண்பரை விட்டு விலகுவதும் ஒரு தவறு தானே? அவர் தவறு செய்தார் என்று நாம் விலக நினைப்பது, நாம் தவறு செய்வதாக முடியும் அல்லவா?


அவர் செய்தது ஒரு தவறு. 


நாம் செய்ய இருப்பதோ பல தவறுகள். 


ஒன்று, பழகிய நண்பரை விட்டு விலக நினைப்பது. 


இரண்டாவது, பொறுமை இல்லாமை. தவறு செய்தவரை பொறுக்கும் தன்மை இல்லாதது ஒரு சிறுமைதான். 


மூன்றாவது, நாம் தவறு செய்கிறோம் என்று அறியாமல் அது சரி என்று நினைப்பது. 


அவர் செய்தது ஒன்று. நாம் செய்ய இருப்பது மூன்று. 


எனவே, அவரைவிட நாம் அதிகம் குறை பட்டாவர்கள் அல்லவா?


பாடல் 




இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! இன்னா செயினும்,

கலந்து பழி காணார், சான்றோர்; கலந்தபின்,

தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார்-

தாமும், அவரின் கடை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_21.html



(pl click the above link to continue reading)



இலங்கு = விளங்கும், இருக்கும், 


நீர்த் = நீர் 


தண் = குளிர்ந்த 


சேர்ப்ப! = கரையை உடையவனே. குளிர்ந்த நீர் இருக்கும் கடற்கரைக்கு தலைவனே. 


இன்னா செயினும் = தவறானவற்றை செய்தாலும் 


கலந்து = நண்பரிடம் 


பழி காணார் = பழி காண மாட்டார்கள் 


சான்றோர் = பெரியோர் 


கலந்தபின் = நட்பு ஆன பின் 


தீமை = அவர் செய்த தீமைகளை 


எடுத்து உரைக்கும் = பிறரிடம் எடுத்து சொல்லும் 


திண் அறிவு இல்லாதார் = திடமான அறிவு இல்லாதவர்கள் 


தாமும் = அவர்களும் (தவறு கண்டு பிடிப்பவர்களும்)  


அவரின் கடை. = தவறு செய்தவர்களை விட குறை நிறைந்தவர்கள். கீழானவர்கள் 


நட்பு, உறவு என்றால் அப்படித்தான் இருக்கும். அதற்காக ஊரெல்லாம் போய் "அவன் எனக்கு இப்படி செய்து விட்டான்" என்று சொல்லிக் கொண்டு திரிவது அழகா? 




Friday, August 11, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - கண் குத்திய கை

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - கண் குத்திய கை 


நண்பர்களாக இருக்கும் சிலர், சில சமயம், நமக்கு துன்பம் தரும் ஒன்றைச் சொல்லியோ அல்லது செய்தோ விடலாம். 


என்ன செய்வது அப்போது?


அவர்கள் நட்பே வேண்டாம் என்று துண்டித்து விடலாமா? 


அல்லது 


நமக்கு எவ்வளவோ நன்மை செய்து இருக்கிறார்கள், இது ஒன்று சரி இல்லைதான் இருந்தாலும், அவர்களால் பின்னும் நன்மை வரக் கூடும் என்று நினைத்து பொறுத்துப் போவதா?


நாலடியார் சொல்கிறது, 


சில சமயம் நம் கை விரல் தெரியாமல் நம் கண்ணை குத்தி விடும். வலி உயிர் போகும். அதற்காக விரல் மேல் கோபித்து அதை வெட்டி எறிந்து விட முடியுமா? அப்படிச் செய்தால் அது புத்திசாலித்தனமா?  


என்று. 


பாடல்  


இன்னா செயினும், விடுதற்கு அரியாரைத்

துன்னாத் துறத்தல் தகுவதோ? துன்னு அருஞ்சீர்

விண் குத்தும் நீள் வரை வெற்ப!- களைபவோ,

கண் குத்திற்று என்று தம் கை?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_11.html


(pl click the above link to continue reading)


இன்னா செயினும் = (நமக்கு) துன்பம் தருவன செய்யினும் 


விடுதற்கு அரியாரைத் = விட முடியாதவரை, விடுவதற்கு கடினமானவரை 


துன்னாத் = கூடாமல், சேர்ந்து இருக்காமல் 


துறத்தல் = துறந்து விடுவது, விட்டு விடுவது 


 தகுவதோ? = சரியானதா?  (இல்லை) 


துன்னு  = நெருங்கிய, அடர்ந்த 


அருஞ்சீர் = அருமையான, அழகான, சிறப்பான 

விண் குத்தும் = வானத்தை குத்துவதைப் போல


நீள் = நீண்ட (மூங்கில் மரங்கள் நிறைந்த) 


வரை = மலை 


வெற்ப!- = தலைவனே 


களைபவோ = வெட்டி எடுத்து தூர எறிந்து விடுவோமா? 

,

கண் குத்திற்று = கண்ணை குத்திற்று 


என்று தம் கை? = என்று நம் கையை? 


சில சமயம் பல் நாக்கைக் கடித்து விடும். அதற்காக எல்லா பல்லையும் பிடுங்கி எறிந்து விட முடியுமா? 


நட்பு, உறவு என்றால் சில பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த பொறுமையில் பல நன்மைகள் உண்டு. 


கண்ணைக் குத்தியது என்று விரலை எடுத்து விடாமல் இருந்தால், அந்த விரலால் மேலும் பல பயன்கள் கிடைக்கும். நீக்கி விட்டால் நட்டம் நமக்குத்தான். 




Monday, August 7, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - தீ

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - தீ 


தவறு செய்யாதவர் யார்? 


குறை இல்லாதவர் யார்?  


குறை இருக்கிறது, தவறு செய்து விட்டார்கள் என்று ஒருவரை நம் நட்பில் இருந்து விலக்கி விட்டால், அதனால் நட்டம் அடையப் போவது நாம் தான் என்கிறது நாலடியார். 


தீ சில சமயம் வீட்டையே எரித்து விடுகிறது. அதற்காக தீ வேண்டாம் என்று வைத்தால், எப்படி உணவு சமைப்பது? உண்பது? உயிர் வாழ்வது?


என்ன செய்வது, சில சமயம் வரம்பு மீறிப் போய் துன்பம் தந்து விடுகிறது. அதற்காக அது வேண்டாம் என்று ஒதுக்க முடியாது. 


அது போல, நண்பர்கள் சில சமயம் நமக்கு இன்னல் விளைவித்து விடலாம். பொறுத்துக் கொள்வது நமக்கு நன்மையே பயக்கும். 



பாடல் 


இன்னா செயினும், விடற்பாலர் அல்லாரைப்

பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும்-பொன்னொடு

நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம்

இல்லத்தில் ஆக்குதலால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_7.html


(please click the above link to continue reading)


இன்னா செயினும் = துன்பம் செய்தாலும், இன்பம் அல்லாதவற்றைச் செய்தாலும் 


விடற்பாலர் = விட்டு விடுதற்கு உகந்தவர் 


அல்லாரைப் = அல்லாதவரை. அதாவது, விடக் கூடாதவர்களை 


பொன்னாகப் = தங்கத்தைப் போல் 


போற்றிக் = சிறப்பாக 


கொளல் வேண்டும் = கொள்ள வேண்டும். நட்புக் கொள்ள வேண்டும் 


பொன்னொடு = தங்கத்தோடு, மதிப்புள்ள பொருள்களோடு உள்ள 


நல் இல் = நல்ல வீட்டை 


சிதைத்த = நாசம் செய்த 


தீ = தீயானது 


நாள்தொறும் = ஒவ்வொரு நாளும் 


 நாடித் = விரும்பி 


தம் = நமது 


இல்லத்தில் = இல்லத்தில் 


ஆக்குதலால் = சோறு ஆக்குதலால் 


என்றோ ஒரு நாள், ஒரு விபத்து மூலமாக, ஒரு அசாதரண சூழ்நிலையில் தீ நமக்கு துன்பம் விளைவித்து விடலாம். அதனால் வரும் துன்பம் பெரியதுதான். இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், அப்படி ஒரு துன்பம் தந்த தீ இனிமேல் என் வீட்டில் இருக்கக் கூடாது என்று யாராவது சொல்லுவார்களா?  தீ இல்லாமல் உணவு சமைக்க முடியாது. 


அது போல நண்பர்களும், சில சமயம் நமக்கு பெரிய தீங்கு செய்துவிட்டாலும், அதை ஒரு விபத்து என்றே எடுத்துக் கொண்டு, அவர்களை விட்டு விடக் கூடாது. 


அதற்காக எல்லா நண்பர்களையும், எல்லா சமயத்திலும் என்று சொல்லவில்லை. 


சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் நமக்கு பல உதவிகள் செய்து இருப்பார்கள். நம் மேலும், நம் குடும்பத்தின் மேலும் மிகுந்த அக்கறை உள்ளாவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால், அவர்களின் ஒரு செயல் நமக்கு துன்பம் தந்து இருக்கலாம். அதற்காக அவர்களை விட்டு விடக் கூடாது. 


"விடற்பாலர் அல்லாரைப்"


விடற்பாலர் என்றால் விட்டு விட கூடியவர்கள் 


அல்லாரை என்றால் அப்படி விட முடியாதவர்களை.


நல்ல நண்பர்களை இழந்துவிடக் கூடாது, அவர்களால் ஏதேனும் சில சங்கடங்கள் வந்தாலும். 




Tuesday, August 1, 2023

நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - தாம் வேண்டிக் கொண்டார் நட்பு

 நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - தாம் வேண்டிக் கொண்டார் நட்பு


வயக்காட்டில் நீர் பாய்ச்சுவார்கள். ஓடை வழி வரும் அந்த நீர் சில சமயம் அந்த ஓடையின் கரையை உடைத்துக் கொண்டு வெளியே செல்லும்.  சில சமயம் வயலுக்கு பாய்ச்சிய நீர், வரப்பில் எங்கேனும் விரிசல் இருந்தால் அந்த வழியாக வெளியே ஓடிவிடும். 


நீர் இப்படி வெளியே போகிறதே என்று கோபித்துக் கொண்டு, யாரும் மீண்டும் கரையையோ, வரப்பையோ எடுத்துக் கட்டாமல் இருக்க மாட்டார்கள். அது எத்தனை தரம் உடைந்தாலும், அத்தனை தரமும் சரி செய்வார்கள். 


அது போல, ஆராய்ந்து நட்பு கொண்டவர்கள், நண்பர்கள் எத்தனை முறை பிழை செய்தாலும், அவர்களை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள். 


பாடல் 


செறுத்தோறு உடைப்பினும், செம் புனலோடு ஊடார்,

மறுத்தும் சிறைசெய்வர், நீர் நசைஇ வாழ்நர்;-

வெறுப்ப வெறுப்பச் செயினும், பொறுப்பரே,

தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post.html


(please click the above link to continue reading)



செறுத்தோறு = செறுத்தல் என்றால் அடக்குதல், தடுத்தல் என்று பொருள். இங்கே, ஒவ்வொரு முறையும் கரையை  


 உடைப்பினும் = உடைத்துக் கொண்டு வெளியே சென்றாலும் 


செம் புனலோடு = செம்மையான நீரோடு (சிறந்த நீரோடு) 


ஊடார் = யாரும் கோபம் கொள்ள மாட்டார்கள் 


மறுத்தும் = மீண்டும் 


 சிறைசெய்வர் = அணை கட்டுவார்கள் வரப்பை எடுத்துக் கட்டுவார்கள். 


நீர் = தண்ணீரை 


நசைஇ வாழ்நர் = விரும்பி, அண்டி வாழ்பவர்கள் 


வெறுப்ப வெறுப்பச் = மீண்டும் மீண்டும் வெறுக்கத் தக்க செயல்களை 


 செயினும் = செய்தாலும் 


பொறுப்பரே = பொறுத்துக் கொள்வார்களே 


தாம் = அவர்களே 


வேண்டிக்  = விரும்பி 


கொண்டார் தொடர்பு = கொண்டவர்களின் தொடர்பை 


நண்பர்கள் தவறு செய்வார்கள். நாம் விரும்பாத காரியங்களை செய்வார்கள்.  அதற்காக அவர்களை விட்டு விட முடியாது. 


இது உறவுக்கும் பொருந்தும். 


புதிதாக வரும் உறவுகள் சில சிக்கலாக இருக்கும். சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். வெட்டி விட முடியாது. 


நட்பு, உறவு என்றால் சில சமயம் அப்படித்தான் இருக்கும். சேர்த்து அணைத்துக் கொண்டு போக வேண்டும். 



Sunday, July 30, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல்

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் 


தமிழ் இலக்கியம் என்பது ஏதோ பொழுது போக்க, நேரத்தை செலவழிக்க என்று எழுதப்பட்ட இலக்கியம் அல்ல. வாழ்வைகூர்ந்து நோக்கி, அதை செம்மைப் படுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து, அதை அழகாக, எளிமையாக சொன்னவை நம் இலக்கியங்கள். 


அப்படிப்பட்ட ஒன்று தான் நாலடியார். நான்கே வரிகளில் வாழக்கைக்கு தேவையான நல்ல விடயங்களை எடுத்துச் சொல்லும் நூல். 


நண்பர்களை ஆராய்ந்து, தேர்ந்து எடுக்க வேண்டும். அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரியில், பக்கத்து வீட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக ஒருவரை நட்பாகக் கொள்ளக் கூடாது. 


சரி, ஒருவரை ஆராய்ந்து நட்பாகக் கொண்டுவிட்டோம் என்றால், பின்னாளில் அவர்களிடம் சில குறை வந்தாலும், அவர்கள் நமக்கு வேண்டாதவற்றை செய்தாலும், பொறுத்துக் கொள்ள வேண்டுமே அல்லாமல் வெட்டி விடக் கூடாது. அப்படி செய்து கொண்டே போனால், ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள். குறை எல்லோரிடமும் உண்டு என்கிறது இந்த முதல் பாடல். 


பாடல் 


நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,

அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-

நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;

புல் இதழ் பூவிற்கும் உண்டு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_30.html


(pl click the above link to continue reading)


நல்லார் = இவர் நல்லவர் 


எனத் = என்று 


தாம் = நாமே 


நனி  = மிகவும் 


விரும்பிக் = விருப்பத்துடன்  


கொண்டாரை = நட்பாக்கி கொண்டவர்களை 


அல்லார் எனினும் =  அவர்கள் அப்படிப்பட்டவர் என்றாலும் 


அடக்கிக் கொளல்வேண்டும் = அதை வெளியே காட்டாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும் 


நெல்லுக்கு உமி உண்டு = நெல்லுக்கு உமி உண்டு 


நீர்க்கு நுரை உண்டு = நீருக்கு நுரை உண்டு 


புல் இதழ் = புன்மையான பூ இதழ் 


பூவிற்கும் உண்டு = பூவிற்கும் உண்டு 


அதாவது,


நாம் விரும்பி உண்ணக் கூடிய து சாதம், சோறு. அது நெல்லில் இருந்து வருகிறது. அந்த நெல்லில் உமி இருக்கும். அரிசியின் மேல் இருக்கும் தோலுக்கு உமி என்று பெயர். அதை உரித்தால் உள்ளே நெல் இருக்கும். உரித்த பின், அந்த தோலை, உமியை தூர எறிந்து விட வேண்டியதுதான். அதனால் பயன் இல்லை. உமி இருக்கிறதே என்பதற்காக நெல்லை ஒதுக்கி விட முடியுமா? ஒதுக்கினால்,  அரிசி கிடைக்காது, சோறு கிடையாது. பட்டினிதான். 


அதே போல், தாகத்தைத் தணிக்கும் நீர். அதில் சில சமயம் நுரை இருக்கும். நுரையை குடிக்க முடியாது. அது கொஞ்சம் இடைஞ்சல்தான். நுரை இருக்கிறதே என்று நீரை வேண்டாம் என்று ஒதுக்க முடியுமா? 


ஆசையோடு நாம் தலையில் வைக்கும் பூவில் சில சமயம் சில இதழ்கள் வாடி, கருகிப் போய் இருக்கும். ஒரு இதழ் கருகிப் போய் இருக்கிறதே என்பதற்காக அந்த பூவையே வேண்டாம் என்று ஒதுக்க வேண்டும். 


எல்லா நல்லவற்றிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். 


அதற்காக அதை வேண்டாம் என்று ஒதுக்கி விடக் கூடாது. 


அதை போல் நண்பர்களிலும் சில குறைபாடுகள் இருக்கும். அதை வெளியே சொல்லாமல், அவர்களை பொறுத்து நட்பை விட்டு விடக் கூடாது. 



Wednesday, February 2, 2022

நாலடியார் - தவமும் பாவமும்

நாலடியார் - தவமும் பாவமும் 


இருள் இருந்தால் அதை எப்படி போக்குவது? 


அதை அடித்து விரட்ட முடியுமா? ஒரு பெட்டியில் போட்டு அடைத்து தூக்கி எறிந்து விட முடியுமா? இருளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நம்மால் ஒளியை கொண்டு வர முடியும். இருள் அது பாட்டுக்கு ஒரு புறம் இருக்கட்டும். நாம் ஒரு விளக்கை கொண்டுவந்து ஏற்றினால், இருள் தானே ஓடி விடும். இருளை பிடித்து தள்ள முடியாது. ஒளியைக் கொண்டு வந்தால் அது தானே ஓடிவிடும்.


அது போல,


நாம் முன் செய்த பாவத்தை ஒன்றும் செய்ய முடியாது. செய்த நல்வினையும், தீ வினையும் பாவ புண்ணியமாக மாறி இந்தப் பிறவியில் இன்ப துன்பங்களைத் தரும். 


முன் செய்த நல் வினை, தீவினை 

பாவ புண்ணியம் 

இப்பிறவியில் இன்பம் துன்பம் 


வந்து நிற்கும் பாவத்தை என்ன செய்வது? பிடித்துத் தள்ள முடியுமா? வேண்டாம் என்று பயந்து ஓட முடியுமா? முடியாது. 


நாலடியார் சொல்கிறது 


"எப்படி விளக்கின் முன்னால் இருள் நிற்காதோ அது போல தவத்தின் முன்னால் பாவம் நிற்காது"


என்று. 


நம்மால் பாவத்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், தவம் செய்ய முடியும். தவம் செய்தால், பாவம் ஓடி விடும். 


சரி, இருள் விலகி விட்டதே என்று விளக்கை அணைத்தால் என்ன ஆகும்? ஓடிய இருள் உடனே வந்து விடும். அது போல, தவம் செய்வதை நிறுத்தினால் பாவம் மீண்டும் வந்துவிடும். 


விளக்கில் ஒளி குறைந்தால் இருள் வருவது போல, தவம் குறைந்தால் பாவம் வரும். 


பாடல் 


 விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்

தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்

தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை

தீர்விடத்து நிற்குமாம் தீது.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post.html


(pl click the above link to continue reading)



விளக்குப் = ஒளி பொருந்திய விளக்கு 


புக = வந்தவுடன் 


இருள் மாய்ந்தாங் = இருள் மாய்ந்து ஆங்கு 


கொருவன் = ஒருவன் 


தவத்தின்முன் = தவத்தின் முன் 


நில்லாதாம் பாவம் = பாவம் நிற்காது 


விளக்குநெய் = விளக்கின் நெய் 


தேய்விடத்துச் = குறைந்த போது 


சென்றிருள் = சென்ற இருள் 


பாய்ந்தாங்கு = பாய்ந்து அங்கு 


நல்வினை = நல்லவினை 


தீர்விடத்து = தீரும் இடத்தில் 


நிற்குமாம் தீது. = நிற்குமாம் தீது 


அதாவது, தவம் என்ற நல்வினை தீரும் இடத்தில், மீண்டும் பாவம் என்ற தீவினை வந்து நிற்கும். 


தவம் செய்வதை ஒருகாலும் நிறுத்தக் கூடாது என்பது கருத்து. 


நல்ல காரியங்களை எப்போதோ ஒரு தரம், நம் வசதிக்கு செய்வதும், நிறுத்துவதும் கூடாது. 


தமிழில் "கடைபிடிக்க வேண்டும்" என்று ஒரு சொல் வழக்கம் உண்டு. 


கடைபிடித்தல் என்றால் கடைசிவரை பிடிக்க வேண்டும். விட்டுவிடக் கூடாது. 






Saturday, October 16, 2021

நாலடியார் - பாற்கூழை மூழை சுவையுணராது

நாலடியார் -  பாற்கூழை மூழை சுவையுணராது 


சிலருக்கு எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்மறையான ஒன்றைச் சொன்னால்தான் ஒரு திருப்தி. சொல்பவர் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய கருத்தாக இருந்தாலும், தங்கள் மேதா விலாசத்தை காட்டாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது.


"வள்ளுவர் தவறாக சொல்லி விட்டார்" 


"கம்பர் பாட்டில் பிழை"


என்று ஏதாவது இடக்கு மடக்காக சொன்னால்தான் தாங்கள் அறிவாளிகள் என்று மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது அவர்கள் எண்ணம். 


பெரியவர்கள், தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை தாங்களே வைத்துக் கொண்டிருக்கலாம். வருங்கால சந்ததிக்கு பயன் படட்டுமே என்று நம் மேல் உள்ள அன்பினால், அருளினால் அவர்கள் கண்ட அறங்களை நமக்குச் சொல்லி விட்டுப் போனார்கள். 


அதை நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்வதுதான் அவர்களுக்கு செய்யும் கைம்மாறு. 


சிலருக்கு அது புரிவதே இல்லை. 


அண்டா நிறைய பால் பாயசம் இருக்கும். பாலும், முந்திரி பருப்பும், நெய்யும்,  சர்க்கரையும் இட்டு சுவையாக செய்த பால் பாயசம். அதை முகந்து பரிமாற அந்த அண்டாவில் ஒரு கரண்டி போட்டு இருப்பார்கள். அந்தக் கரண்டி முழுக்க முழுக்க பால் பாயசதுக்குள்தான் மூழ்கிக் கிடக்கும். 


என்ன பயன். கரண்டிக்கு பாயசத்தின் சுவை தெரியுமா?


அது போல, சிலர் எவ்வளவு படித்தாலும், படித்தவை உணர்வில் ஒட்டாது. அது மட்டும் அல்ல, படித்ததை புரியாமல் இகழவும் செய்வார்கள். தங்கள் நிலைக்கு உயர்ந்த புத்தகங்களை கீழ் இறக்கி விடுவார்கள். 


பாடல் 



அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா

ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை

மூழை சுவையுணரா தாங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_29.html


(Pl click the above link to continue reading)


அருளின் = அருளினால் 


அறமுரைக்கும் = அறத்தினை எடுத்து உரைக்கும் 


 அன்புடையார் = அன்புடைய சான்றோர்களின் 


 வாய்ச்சொல் = வாயில் பிறந்த சொல்லை 


பொருளாகக் கொள்வர் புலவர்; = பெரிய மதிப்பு மிக்க பொருளாகக் கொள்வர் அறிவுடையோர் 


பொருளல்லா = பொருள் புரியாத


ஏழை = பேதை 


அதனை இகழ்ந்துரைக்கும் = அந்த அறங்களை பழித்துக் கூறும் 


பாற்கூழை = பால் பாயசத்தை 


மூழை = கரண்டி 


சுவையுணரா தாங்கு. = சுவை உணராதது போல 


பிறன் மனை நோக்கா பேராண்மை என்கிறார் வள்ளுவர். 


ஏன், மற்றவன் மனைவியைப் பார்த்தால் என்ன? அவளுக்கும் பிடித்து இருந்தால், பார்ப்பதில் என்ன தப்பு? ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் முட்டாள்தனம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். 


அப்படி இல்லை என்றால், "வள்ளுவருக்கு என்ன சொல்லுவாரு...அதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை. அவருக்கு அதெல்லாம் எங்க தெரியப் போகுது" என்று வள்ளுவரின் அறிவை இவர்கள் எடை போடுவார்கள். 


பாற்கூழை சுவை உணரா மூழைகள். 


பாரதியார் சொல்வார், தேன் குடத்தில் இட்ட அகப்பைகள் என்று. 




Monday, September 20, 2021

நாலடியார் - பெரியார் வாய்ச் சொல்

 நாலடியார் - பெரியார் வாய்ச் சொல் 


எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று தெரியமலேயே, ஏதோ மனதுக்கு சரி என்று பட்டதை செய்து கொண்டும், சரி அல்ல என்று பட்டதை முடிந்த வரை தவிர்த்தும் வாழ்கிறோம். ஆனால், நாம் செய்பவை சரி தானா, செய்யாமல் விட்டது உண்மையிலேயே தீமைதானா ? தெரியாது நமக்கு. 


அது போன்ற குழப்பங்கள் வரும் போது, நம் அற நூல்கள் வழி காட்டுகின்றன. அவை நம் சிக்கல்களை முழுவதுமாக தீர்த்து விடாது. வழி காட்டும். 


அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று நாலடியார். 


"எதை அறிய வேண்டும் ? எதற்கு அஞ்ச வேண்டும்? எப்போது பொறுமையாக இருக்க வேண்டும் ? எதில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் ? எதை வெறுக்க வேண்டும் ? எதை எப்போதும் கை விடக் கூடாது?"


இந்தக் கேள்விகளை கேட்டு, பதிலும் தருகிறது கீழே உள்ள நாலடியார் பாடல் . 


பாடல் 


அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:

பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;

வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_20.html


(Please click the above link to continue reading)


அறிமின் அறநெறி = அறம் எது என்று அறிந்து கொள்ள வேண்டும்


அஞ்சுமின் கூற்றம்: = எமனுக்கு அஞ்ச வேண்டும்.  மரணம் எப்போதும் வரும் என்ற பயத்தில் நல்லது செய்ய வேண்டும், நல்லவற்றை படிக்க வேண்டும், தீயவற்றில் இருந்து விலகி நடக்க வேண்டும். 

பொறுமின் பிறர்கடுஞ்சொல் = பிறர் சொல்லும் கடிய சொற்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். 


போற்றுமின் வஞ்சம் = வஞ்சம் மனதில் புகுந்து விடாதபடி மனதை போற்றி பாதுகாக்க வேண்டும். 


வெறுமின் வினைதீயார் கேண்மை = தீய செயல் செய்பவர்களின் நட்பை வெறுக்க வேண்டும் 


எஞ்ஞான்றும் = எப்போதும் 


பெறுமின் பெரியார்வாய்ச் சொல். = பெரியவர்கள் சொல்லும் சொற்களை 


மற்றவற்றில் சில சமயம் நாம் வழுவினாலும் வழுவுவோம். பெரியார் சொல்வதை கேட்பதில் இருந்து ஒரு காலும் வழுவக் கூடாது என்பதற்காக "எஞ்ஞான்றும்" என்ற சொல்லைப் போட்டு இருக்கிறார்.


ஒரு போதும் அவர்கள் சொல்வதை கேட்காமல் இருக்கக் கூடாது. 


அறிவிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்தவர்களை கண்டு பிடிப்பதுதான் சிரமமாக இருக்கிறது. 


இரண்டும் ஒரு சேர அமையப் பெற்றவர்கள் நாளும் அருகி வருகிறார்கள். 


தேடி கண்டு பிடிக்க வேண்டும். 


உயர்ந்த நூல் ஆசிரியர்கள்தான் எனக்குப் பெரியவர்கள். எப்போதும் உயர்ந்த விடயங்களை சொல்லித் தர தயாராக இருப்பார்கள். 


எடுக்கணும். படிக்கணும். அவ்வளவுதான். 




Wednesday, September 15, 2021

நாலடியார் - சொர்கமும் நரகமும்

 நாலடியார் - சொர்கமும் நரகமும் 


சொர்கமும் நரகமும் எப்படி இருக்கும்? அதுக்காக உயிரை விட்டு அங்கே போய்த்தான் அறிய வேண்டும் என்று இல்லை. இங்கேயே, இந்த உலகிலேயே அவற்றை நாம் அனுபவிக்கலாம். 


"நுண்ணிய உணர்வு உள்ளவர்களோடு கூடி அவர்களின் அறிவை, உணர்வை பகிர்ந்து கொள்ளுதல் சொர்க்கம் போன்றது. நுண்ணிய நூல்களின் உணர்வு இல்லாதவரோடு பழகுதல் நரகத்தில் இருப்பது போன்றது"


பாடல் 


நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் - நுண்ணூல்

உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்

புணர்தல் நிரயத்து ளொன்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_15.html


(Please click the above link to continue reading)



நுண்ணுணர்வி னாரொடு = நுட்பமான உணர்வினை உடையவர்களோடு 



கூடி = ஒன்று சேர்ந்து 



நுகர்வுடைமை = அவர்களின் அறிவை, உணர்வை பகிர்ந்து கொள்ளுதல் என்பது 



விண்ணுலகே யொக்கும் = சொர்க்கத்தைப் போன்று 



விழைவிற்றல் = விருப்படக் கூடியது 



நுண்ணூல் = நுட்பமான நூல்களை 



உணர்வில ராகிய = அறிந்து, உணரும் ஆற்றல் இல்லாதவர்களின் 



ஊதிய மில்லார்ப் =  பயன் இல்லாதவர்கள் 



புணர்தல் = சேர்ந்து இருத்தல் 



நிரயத்து ளொன்று. = நரகத்தில் இருப்பதற்கு சமம் 



முதலில் நுண்ணர்வு என்றார் பின் நுண்ணூல் உணர்வு என்றார். 



நுண்ணிய நூல்களை படித்து, அறிந்து, உணர்ந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். 


அப்படி எல்லாம் ஒன்றும் தெரியவில்லையே. எல்லோரிடமும் பழகுகிறோம், ஒருவரிடம் பழகுவது சொர்க்கத்தில் இருப்பது போன்று சுகமாகவும், இன்னொருவரிடம் பழகுவது நரகம் போல் துன்பமாகவும் இல்லையே என்று சிலர் கருதலாம். 


அவர்கள் நுண்ணிய உணர்வுடையவர்களை இதுவரை காணவில்லை என்றே சொல்ல வேண்டும். சிறந்த அறிவுடையவர்களை கண்டு, அவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாலும் தெரியும் அதன் இனிமை. அப்படி ஒரு இனிமையான அனுபவம் வாய்க்கவில்லை என்றால், அவர்கள் அப்படிப் பட்ட மனிதர்களை இது வரை கண்டு பிடிக்கவில்லை என்றே அர்த்தம். 


சொர்க்கம் எது என்று தெரியாததால், நரகம் எது என்றும் தெரியவில்லை. 


எப்போதும் ஒரே விதமான காப்பியை குடித்துக் கொண்டு இருக்கிறோம். திடீரென்று ஒரு நாள் மிக சுவையான காப்பி ஒன்றை குடிக்கும் அனுபவம் நிகழ்கிறது. "ஆஹா, இதுவல்லவோ காப்பி" என்று இரசித்து குடிக்கிறோம். அதற்குப் பின், மறு நாள் பழைய காப்பியை குடிக்கும் போது "சே இது என்ன காப்பி ...நேத்து குடித்தேனே அதுவல்லவோ காப்பி" என்று தோன்றும் அல்லவா?


நுண்ணறிவாளர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும். 

Saturday, September 11, 2021

நாலடியார் - அப்புறம் செய்யலாம்

நாலடியார் - அப்புறம் செய்யலாம் 


ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று நினைக்கும் போது அதற்கு முன் செய்ய வேண்டிய பல காரியங்கள் மனதில் தோன்றும். அந்த மற்ற காரியங்களை எல்லாம் செய்து விட்டு பின் நல்ல காரியத்தை தொடங்கலாம் என்று நினைப்போம். 


காசிக்குப் போகணும், அம்பது திவ்ய தேசமாவது சேவித்து வர வேண்டும், ஒரு தர்ம நிலையத்துக்கு நன்கொடை கொடுக்க வேண்டும், துன்பத்தில் இருக்கும் ஒரு உறவினருக்கு உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று பல அறக் காரியங்கள் தோன்றும்...


ஆனால்,


அதற்கு முன்னால்....


பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா அப்புறம் எல்லாம் நிதானமா செய்யலாம்...


பையனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும்...அது மட்டும் அமைஞ்சுருச்சுனா அப்புறம், பத்தாயிரம் என்ன பெருசு, ஒரு இலட்சம் கூட நன்கொடை கொடுக்கலாம் 


என்று நினைப்போம். 


இல்லத்துக்கு வேண்டிய கடமைகளை எல்லாம் முடித்து விட்டு நல்ல காரியங்களை செய்யலாம் என்று நினைப்பது, அலை நின்ற பின் கடலில் குளிப்பது மாதிரி என்கிறது நாலடியார். 


அலை எப்ப ஓய தலை எப்ப முழுக....


பாடல் 


பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்

ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_11.html


(Please click the above link to continue reading)


பெருங் = பெரிய 


கட லாடிய = கடலில் நீராடச் 


சென்றார் = சென்றவர்கள் 


ஒருங்குடன் = ஒட்டு மொத்தமாக 


ஓசை அவிந்தபின் = அலை ஓசை எல்லாம் நின்ற பின் 


ஆடுது மென்றற்றால் = நீராடுவோம் என்று நினைத்தல் 


இற்செய்  = இல்லத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை 


குறைவினை நீக்கி  = குறை ஒன்றும் இல்லாமல் நீக்கிய பின் 


அறவினை = அறம் சார்ந்த வினைகளை 


மற்றறிவாம்  = மற்றபடி அறிவோம், (செய்வோம்) 


என்றிருப்பார் மாண்பு. = என்று இருப்பவர்களின் பண்பு 


அலை ஓயப் போவதும் இல்லை. தலை முழுகப் போவதும் இல்லை. 


இல்லறக் கடமைகள் முடியப் போவதும் இல்லை. நல்ல வினைகளை செய்யப் போவதும் இல்லை. 


அற வினைகள் செய்ய வேண்டும் என்று நினைத்தால், செய்து விட வேண்டும். அதுக்கு அப்புறம் இதைச் செய்யலாம் என்றால் செய்யவே மாட்டோம். 




Tuesday, August 17, 2021

நாலடியார் - வருந்தியும் கேட்பர்

 நாலடியார் - வருந்தியும் கேட்பர் 


வீட்டிலோ, அலுவலகத்திலோ நமக்கு வேண்டிய ஒருவர் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால் நாம் என்ன செய்வோம்?


உடனே, சுறுசுறுப்பாக அந்தத் தவற்றைச் சுட்டி காட்டுவோம். அப்படி காட்டினால் நமது புத்திசாலித்தனம் வெளிப்படும் என்று நாம் நினைக்கிறோம். 


"வள்ளுவர் சொன்னது தவறு" என்று சொல்லுவதன் மூலம், நாம் வள்ளுவரை விட பெரிய அறிஞர் என்று காட்டிக் கொள்ள முனைவோம். 


அது நாகரிகம் அல்ல. பண்பாடு அல்ல. 


ஒருவர் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால், ஒரு சபையில் வைத்து அவனை திருத்தக் கூடாது. படித்தவர்கள், பெரியவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். தனியாக கூப்பிட்டு, அதை சுட்டிக் காட்டுவார்கள். 


"கற்றறிந்தோர் சபையில் ஒரு கல்லாதவன் ஏதாவது உளறினால், அங்குள்ள பெரியவர்கள், கஷ்டப்பட்டாவது அவன் சொல்வதைக் கேட்பார்கள். ஏன் என்றால், அவன் பிழையை சுட்டிக் காட்டினால் அவன் பல பேர் முன்னிலையில் வெட்கப் பட வேண்டி வரும் என்று நினைத்து "



பாடல் 


புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவ னுரைப்பவுங் - கண்ணோடி|

நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்

பல்லாரு ணாணல் பரிந்து. 


பொருள் 



(please click the above link to continue reading)


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_17.html


புல்லா = பொருந்தாத, சரி இல்லாத 


வெழுத்திற் = எழுத்தை, 


பொருளில் = பொருள் இல்லாமல் 


வறுங் = வீணாகப் பேசி 


கோட்டி = கற்றறிந்தோர் சபையில் 


கல்லா = கல்வி அறிவு இல்லாத 


வொருவ னுரைப்பவுங்  = ஒருவன் உரைப்பவும் = ஒருவன் சொல்லக் கேட்டும் 


கண்ணோடி| = கருணையினால் 


நல்லார் = நல்லவர்கள் 


வருந்தியுங் கேட்பரே  = துன்பப் பட்டாவது கேட்பார்கள் 


மற்றவன் = அவன் 


பல்லாரு ணாணல் பரிந்து.  = பல பேர் முன் நாணப்படுதலை சிந்தித்து 


ஒருவன் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால், சொல்லிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட வேண்டும். 


முட்டாளோடு வாக்குவாதம் செய்து என்ன ஆகப் போகிறது. 


மேலும், அந்தக் கல்லாதவன் நமக்கு வேண்டியவனாகப் போய் விட்டால், அவனை திருத்தப் போய், அவன் உறவும் முறியும்.


அவன் பலரால் கேலி செய்யப் படுவானே என்று நினைந்து நல்லவவர்கள் வருந்தியும் கேட்பார்களாம். 


நாகரீகத்தின் உச்சம். 


"வருந்தியும் கேட்பர்"  என்ன ஒரு அழகான சொற் கையாளல். 




Wednesday, August 4, 2021

நாலடியார் - யாரிடம் தான் குறை இல்லை ?

 நாலடியார் - யாரிடம் தான் குறை இல்லை ?


யாரிடம் தான் குறை இல்லை? குறை இல்லாத மனிதனே இந்த உலகில் இல்லை. குறை உள்ளவர்களை விலக்கி நடந்தால், நாம் தனியாகத்தான் நடக்க வேண்டி வரும். நம்மிடம் குறை இல்லையா?


நட்பிலும், உறவிலும் குறை இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 


நட்பு மட்டும் அல்ல, வீட்டுக்கு வந்த மருமகள்/ன் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் பொறுத்துதான் போக வேண்டும். விலக்கி விட முடியாது. 


மனிதர்களை விடுங்கள், "நெல்லில் உமி உண்டு, நீரில் நுரை உண்டு, மணம் மிக்க அழகான பூவில் கூட வாடி, நிறம் இல்லா ஓரிரு இதழ்கள் இருக்கலாம்...அதற்காக அவற்றை வெறுக்க முடியுமா? " ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறது நாலடியார். 


பாடல் 


நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,

அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-

நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;

புல் இதழ் பூவிற்கும் உண்டு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post.html


(Please click the above link to continue reading)


நல்லார் = நல்லவர் 


எனத் = என்று 


தாம் = நாம் 


நனி = மிக 


விரும்பிக் கொண்டாரை, = விரும்பி ஏற்றுக் கொண்டவரை 


அல்லார் எனினும் = அப்படி நல்லவர்கள் இல்லை என்றாலும் 


அடக்கிக் கொளல்வேண்டும்;- = வெளியே காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொள்ள வேண்டும் 


நெல்லுக்கு உமி உண்டு = நெல்லில் பயன் படாத உமி உண்டு 


நீர்க்கு நுரை உண்டு; = நீரிலே நுரை உண்டு 


புல் இதழ் பூவிற்கும் உண்டு. = பயன் தராத இதழ்கள் பூவிலும் உண்டு 



ஏதோ ஒரு கெட்ட குணம் இருக்கிறது என்பதற்காக நட்பை கை விட்டுக் விடக் கூடாது. 


எல்லாவற்றிலும் நிறை குறை இருக்கத்தான் செய்யும். 


சரி சரி என்று அணைத்துக் கொண்டு போக வேண்டியதுதான்...


என்ன, சரி தானே?



Tuesday, April 6, 2021

நாலடியார் - விடுக்கும் வினை உலந்தக் கால்

 நாலடியார் - விடுக்கும் வினை உலந்தக் கால் 


பிறர் துன்பம் கண்டு நாம் வருந்துகிறோம். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நினைப்போம். ஆனால் செய்ய மாட்டோம். என்ன காரணம்? 


இப்படி எல்லோருக்கும் உதவி செய்து , உதவி செய்து நமக்கு பிற்காலத்தில் செல்வம் இல்லாமல் போய் விட்டால் என்ன செய்வது? நமக்கு ஒரு தேவை என்றால் யார் வந்து உதவி செய்வார்கள்? என்ற பயத்தில், மனதில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், செய்யாமல் விட்டு விடுகிறோம். 


"தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்" என்று பேசாமல் இருந்து விடுகிறோம். 


அதாவது போகட்டும். சிலர், நிறைய செல்வம் இருந்தாலும், அதை அனுபவிக்க மாட்டார்கள். இப்பவே எல்லாவற்றையும் செலவழித்து விட்டால் என்ன பிற்காலத்தில் என்ன செய்யவது என்று மேலும் மேலும் சேமித்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். 


பிறருக்கும் கொடுக்க மாட்டார்கள்.  தானும் அனுபவிக்க மாட்டார்கள். செல்வத்தை எப்படியாவது சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். 


செல்வத்தை இறுகிப் பற்றிக் கொண்டால் அது நம்மிடம் நிற்குமா?


நம் தமிழில் உள்ள அற நூல்கள் அனைத்தும் செல்வத்தின் நிலையாமை பற்றி கூறுகின்றன. 


"நீ என்னத்தான் இறுக்கிப் பிடித்தாலும், போகிற காலத்தில் செல்வம் உன்னை விட்டுப் போய் விடும்"  


என்று அனைத்து அற நூல்களும் கூறுகின்றன.


எனவே, செல்வம் கையில் இருக்கும் போது அனுபவியுங்கள், அல்லது பிறர் துன்பம் துடைக்க பயன்படுத்துங்கள் என்கிறது கீழ் கண்ட நாலாடியார்:


பாடல் 



நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினையுலந்தக் கால்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_46.html


(click the above link to continue reading)



நடுக்குற்றுத் = நடுக்கம் அடைந்து 


தற்சேர்ந்தார் = தன்னைச் சேர்ந்தவர்கள் (உறவினர், நண்பர்) 


துன்பந் துடையார்; = துன்பத்தை துடைக்க மாட்டார்கள் 


கொடுத்துத் = பிறருக்கு கொடுத்து 


தான் துய்ப்பினும் = தான் அனுபவித்தாலும் (செலவழித்தாலும்) 


ஈண்டுங்கால் ஈண்டும்; = வரும் போது வரும் 


இடுக்குற்றுப் =  இறுக்கிப் 


பற்றினும் = பிடித்தாலும் 


நில்லாது செல்வம் = செல்வம் நிலைத்து நிற்காது 


விடுக்கும் = விட்டுப்  போய் விடும் 


வினையுலந்தக் கால். = நல் வினை தீர்ந்த பின் 


எவ்வளவுதான் தான தர்மம் செய்தாலும், செலவழித்தாலும் வரும் காலத்தில் வந்து கொண்டே இருக்கும்.  எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும், போகிற காலத்தில் செல்வம் போய் விடும். 



Friday, January 1, 2021

நாலடியார் - உரைப்பினும் நாய்குரைத் தற்று

நாலடியார் -  உரைப்பினும் நாய்குரைத் தற்று


பல பேருக்கு ஏதாவது கேள்வி கேட்க வேண்டும், வாதம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். அப்படி ஏதாவது கேள்வி கேட்டு, வாதம் பண்ணினால் தான் தங்கள் அறிவுத் திறன் வெளிப் படுவாதாக அவர்கள் நினைக்கிறார்கள். 


ஆனால் விளைவு என்னவோ அதற்கு நேர் எதிர் மாறாக இருக்கிறது. 


வாயைத் திறந்து ஏதாவது சொல்லி, தங்கள் அறியாமையை அவர்கள் வெளிப் படுத்துவார்கள். 

அவர் சொன்னது தப்பு, அது எப்படி சரியாக இருக்கும், இந்தக் காலத்துக்குப் பொருந்துமா, இது எல்லாம் நடை முறை சாத்தியம் அல்ல என்று தங்கள் மேதா விலாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுவார்கள். 


கேள்வி கேட்க வேண்டும். சிந்திக்க வேண்டும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. 


ஆனால், அந்தக் கேள்விகள் உள் நோக்கி இருக்க வேண்டும். எதிரில் இருப்பவனை மடக்கவோ, தன் அறிவை வெளிக் காட்டவோ இருக்கக் கூடாது. உண்மை தேடும் முயற்சியாக இருக்க வேண்டும். கேள்வியை வைத்துக் கொண்டு பதில் தேட வேண்டும். எல்லோரையும் கேள்வி கேட்டுக் கொண்டுத் திரியக் கூடாது. 


சிலருக்கு கேட்பதோடு அந்த தேவை நின்று விடும். பதில் பற்றி எந்தக் கவலையும் இல்லை. பதிலை அவர்கள் கேட்பது கூட கிடையாது. அல்லது என்ன பதில் சொன்னாலும்,  அவர்கள் கொண்ட எண்ணம் மாறவே மாறாது.  பின் எதற்கு கேட்பது. 


நாலாடியர் சொல்கிறது. 


ஒரு பெரிய அறிஞர்கள் கூடிய சபை. அதில் ஒரு ஓரத்தில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது. அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருந்தது. அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. என்னடா இது, நம்மை யாரும் கண்டு கொள்ளவே இல்லையே, ஏதாவது சொல்வோம், கேட்போம், அவர்களை மடக்குவோம், திணற அடிப்போம் என்று நினைத்து கேள்வி கேட்டது. 


"இந்த நாய் எங்கிருந்து வந்தது, அதை அடித்து விரட்டுங்கள் " என்று அடித்து விரட்டி விட்டார்கள். 


பேசாமல் வாய் மூடி இருந்தால், நிம்மதியாக இருந்து இருக்கலாம். குரைத்து , நான் நாய், இங்கே இருக்கிறேன் என்று தன்னைத் தானே காட்டிக் கொடுக்க வேண்டுமா?


பாடல் 


கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து

நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல

இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது

உரைப்பினும் நாய்குரைத் தற்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post.html

Please click the above link to continue reading



கல்லாது = படிக்காமலேயே 

நீண்ட ஒருவன் = வளர்ந்த ஒருவன் 

உலகத்து = உலகில் 

நல்லறி வாள ரிடைப்புக்கு = நல் + அறிவாளர் + இடை + புக்கு. அறிஞர்கள் மத்தியில் புகுந்து 

மெல்ல = மெல்ல 

இருப்பினும்  = இருந்தாலும் 

நாயிருந் தற்றே = நாய் இருந்தாற்போல 

இராஅது = இருக்க முடியாது 

உரைப்பினும் நாய்  = நாய் பேசினாலும் 

குரைத் தற்று. = அது நாய் குரைத்தது என்று தான் உலகம் கொள்ளும். 

அறிஞர்கள் முன் அமைதி காத்தல் நன்று. 


யார் அறிஞர் என்று தெரியாததால், எல்லோர் முன்னும், அமைதி காத்தல் நன்று.