Showing posts with label Moodhurai. Show all posts
Showing posts with label Moodhurai. Show all posts

Thursday, May 22, 2014

மூதுரை - காக்கை உகக்கும் பிணம்

மூதுரை - காக்கை உகக்கும் பிணம் 


நல்லதை படிக்க வேண்டும், நல்லவரக்ளோடு சேர வேண்டும் என்று சிலருக்கு விருப்பம் இருக்கும். வேறு சிலருக்கோ, ஊர் சுற்ற வேண்டும், தண்ணி அடிக்க வேண்டும், அப்படிப் பட்ட நண்பர்களை கண்டால்  பிடிக்கும்.

குளத்தில் தாமரை மலர் இருக்கும். அன்னப் பறவை  அந்த தாமரை மலரோடு ஒட்டி உறவாடும். காகம், சுடு காட்டில் உள்ள பிணங்களோடு ஒட்டி உறவாடும்.

யார் யாருக்கு எது பிடிக்கிறதோ அதனோடு சேர்ந்து இருப்பார்கள்.

பாடல்

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா [போல்
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
    காக்கை உகக்கும் பிணம்.

பொருள்

நற்றா மரைக்கயத்தில்= கயம் என்றால் குளம். நல்ல தாமரைக் குளத்தில்

 நல்லன்னஞ்சேர்ந்தாற்போல் = நல்ல அன்னம் சேர்ந்ததைப் போல

கற்றாரைக் = கல்வி அறிவு  உடையவர்களை

கற்றாரே = படித்தவர்களே

காமுறுவர் = அன்பு செய்வர். அவர்களோடு இருக்க ஆசைப் படுவார்கள்

கற்பிலா = கற்று அறிவு இல்லாத

மூர்க்கரை = முரடர்களை

மூர்க்கர் முகப்பர் = முரடர்களே விரும்புவார்கள்

முதுகாட்டிற் = பழைய காட்டில்

காக்கை = காக்கை

உகக்கும் = விரும்பும்

பிணம் = பிணம்



Saturday, September 28, 2013

மூதுரை - தீயார் உறவு

மூதுரை - தீயார் உறவு 


தீயவர்களைக் காண்பதும் தீதே - பார்த்தால் என்ன ஆகும் ? அட, இவன் இவ்வளவு தப்பு செய்கிறான், சட்டத்தை மீறுகிறான், அயோக்கியத்தனம் பண்ணுகிறான் இருந்தும் நல்லாதான் இருக்கான், ஒழுங்கா நேர்மையா இருந்து நாம என்னத கண்டோம், நல்லதுக்கு காலம் இல்லை...நாமும் கொஞ்சம் அப்படி செய்தால் என்ன என்று தோன்றும். கொஞ்சம் செய்வோம். மாட்டிக் கொள்ளவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் செய்யத் தோன்றும். இப்படிப்  போய் கடைசியில் பெரிதாக ஏதாவது செய்து மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே, தீயவர்களை காணாமல் இருப்பதே நல்லது.

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

தீயார் சொல்லை கேட்பதும் தீதே....தீயதைக் கூட நல்லது மாதிரி சொல்லி நம்மை தீய வழியில் செலுத்தி விடுவார்கள். ஒரு தடவைதானே சும்மா முயற்சி செய்து பாருங்கள், பிடிக்கலேனா விட்டுருங்க என்று கேட்ட பழங்கங்களை நமக்கு அறிமுக படுத்தி விடுவார்கள்.

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

தீயார் குணங்களை ஊரைப்பதும் தீதே ...தீயவர்களின் குணங்களைப் பற்றி பேசக் கூட கூடாது. இன்றைய தினம் தொலைக் காட்சிகளிலும், தினசரி இதழ்களிலும் கொலை செய்தவன், கொள்ளை அடித்தவன், கற்பழித்தவன் , வெடி குண்டு வைத்தவன் ....இவர்கள் பற்றிய செய்திகள்தான் அதிகம் வருகிறது. அது கூடாது என்கிறார் அவ்வையார்

அவரோடு இணங்கி இருப்பதும் தீதே .... அவர்களோடு ஒன்றாக இருப்பதும் தீதே

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

பாடல்

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

Friday, September 27, 2013

மூதுரை - பிளவு

மூதுரை - பிளவு 


உங்களுக்கு யாராவது தீமை செய்து இருக்கிறார்களா ? அவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததா ? வந்த கோபம் இன்னும் இருக்கிறதா ? அப்படி யாராவது இருக்கிறார்களா உங்கள் பட்டியலில் ? உங்களுக்கு முன்பு தீமை செய்தவர்கள், உங்களை ஏமாற்றியவர்கள், என்று யாராவது இருக்கிறார்களா ? யோசித்துப் பாருங்கள்....

அந்த பட்டியல் அப்படி ஒரு புறம் இருக்கட்டும்....

இந்த கல்லு இருக்கிறதே அது ஒரு முறை உடைந்து விட்டால் பின் ஒட்டவே ஒட்டாது. என்ன தான் செய்தாலும் விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும். 

பொன் இருக்கிறதே, அதில் கொஞ்சம் பிளவு வந்து விட்டால் உருக்கி ஒட்ட வைத்து விடலாம். ஒட்டும் ஆனால் கொஞ்சம் மெனக்கிடணும்

இந்த தண்ணீரின் மேல் அம்பை விட்டால், நீர் பிளக்கும் ஆனால் நொடிப் பொழுதில் மீண்டும் சேர்ந்து கொள்ளும். அம்பு பட்ட தடம் கூட இருக்காது. 

கயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால் வாழ் நாள் பூராவும் மறக்க மாட்டார்கள். நமக்கு எப்படி மறு தீங்கு செய்யலாம் என்று இருப்பார்கள். இராமனுக்கு கூனி செய்தது போல - கல்லின் மேல் பிளவு போல 

நல்லவர்களுக்கு நாம் ஒரு தவறு செய்துவிட்டால், கொஞ்ச நாள் மனதில் வைத்து இருப்பார்கள்....பின் மறந்து விடுவார்கள் - பொன் மேல் பிளவு போல 

ஆன்றோர் அல்லது பெரியோர் இருக்கிறார்களே, அவர்களுக்கு நாம் ஏதாவது  தீமை செய்து விட்டால் உடனடியாக மறந்து மன்னித்து விடுவார்கள்....நீர் மேல் பிளவு போல 

பாடல் 

கற்பிளவோ ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்

பொருள்

Tuesday, June 26, 2012

மூதுரை - மனைவியின் மகிமை


மூதுரை - மனைவியின் மகிமை


மனைவி வீட்டில் இருந்தால், இல்லாதது ஒன்றும் இல்லை. அவள் இருந்தால் எல்லாம் இருக்கும்.

அவள் வீட்டில் இல்லாவிட்டாலோ அல்லது அவள் கடுமையான சொற்களை பேசுபவளாய் இருந்தாலோ, அந்த வீடு புலி இருக்கும் குகை போல் ஆகிவிடும்.