Showing posts with label அருணகிரிநாதர். Show all posts
Showing posts with label அருணகிரிநாதர். Show all posts

Friday, May 4, 2012

கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கோயில்கள் காலப் பெட்டகங்கள்.

அதன் பிரகாரங்களில் எத்தனையோ பேர் கொட்டிய கவலைகள், கனவுகள், பாவ மன்னிப்புகள் சிதறிக் கிடக்கின்றன.

அங்குள்ள சிற்பங்கள் எத்தனை பேரை பார்த்திருக்கும்.

எத்தனை பிரார்த்தனைகளை, முணுமுணுப்புகளை கேட்டிருக்கும், எத்தனை சந்தோஷங்களை, துக்கங்களை கண்டிருக்கும்.

மனிதனின் கடைசி நம்பிக்கை கோயில்.

'உன் பற்று அன்றி ஒரு பற்றிலேன் இறைவா கச்சியேகம்பனே' என்று எல்லாம் விட்டு அவனே சரண் என்று அடையும் இடம் கோயில்.

திருசெந்தூர் கோயில்.

கடல் அலை தாலாட்டும் கோயில்.

கோயிலுக்கு இரண்டு கிலோ மீட்டர் வரை இங்கே ஒரு கோயில் வரப் போகிறது என்று சொன்னால் நம்ப முடியாது.

அருணகிரி நாதர் திரு செந்தூர் கோயிலில் உள்ள முருகனைப் பார்க்கிறார்.

அழகு அப்படியே அவரை கொள்ளை கொள்கிறது. வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.

அப்படி ஒரு அழகு. பார்த்து கொண்டே இருக்கலாம்.

எவ்வளவு பார்த்தாலும் போதவில்லை.

அடடா , இந்த அழகைப் பார்க்க இரண்டு கண்ணுதானே இருக்கு...

இன்னும் கொஞ்சம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஆதங்கப் படுகிறார்...

Tuesday, May 1, 2012

திருப்புகழ் - காலன் முதுகில் ஒரு அறை



திருப்புகழ் - காலன் முதுகில் ஒரு அறை

முருகனின் பக்தர்களை காலன் அணுகும் போது, முருகன் அவன் முதுகில் ஒரு அறை வைப்பாராம்.

அதில் அவன் முதுகு இரண்டா விரிந்த மாதிரி ஆயிருமாம்...என்ன ஒரு அழகான கற்பனை.




பாண மலரது தைக்கும் ...... படியாலே
 பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே
 நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே
 நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான்
 சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா
 தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா
 காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா
 காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.


பதம் பிரிக்காமல் அருணகிரிநாதரின் பாடல்களை புரிந்து கொள்ளவது எளிதல்ல....


பாண மலர் அது தைக்கும் படியாலே
பாவி இளமதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே
நானும் மையலில் இளைக்கும் தரமேதான்
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா
தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே




பாண மலர் = மன்மதனின் மலர் அம்புகள் (பாணம் = அம்பு)


அது தைக்கும் படியாலே = அது என் மார்பில் தைக்கும் படியாகவும்


பாவி இளமதி = இரக்கமிலாத அந்த இளைய நிலா

கக்கும் கனலாலே = பொழியும் கனலாலே (வெப்பத்தாலே)

நாணம் அழிய = வெட்கம் போக

உரைக்கும் குயிலாலே = கூவும் குயிலாலே

நானும் = அருணகிரியான நான் (தன்னை ஒரு பெண்ணாக நினைத்து எழுதுகிறார்)

மையலில் இளைக்கும் தரமேதான் =காதலில் இளைக்கும் படியாக

சேணில் அரிவை = சேய்மையில் (விண்ணுலகில்) உள்ள பெண்ணை (தெய்வ நாயகியை) 

அணைக்கும் திரு மார்பா = கட்டி அணைக்கும் திரு மார்பனே

தேவர் மகுடம் = தேவர்களின் மகுடம்

மணக்கும் கழல் வீரா = அவர்கள் எப்போதும் முர்கனின் காலில் விழுந்து வணங்குவதால், 
அவர்கள் மகுடத்தில் உள்ள மணம் (பூ, சந்தனம் போன்ற பொருள்களின் மணம்) முருகனின் காலில் மணக்கிறது

காண = காணக்கூடிய

அருணையில் நிற்கும் கதிர் வேலா = திருவண்ணாமலையில் நிற்கும் கதிர்வேலா

காலன் = காலனின்

முதுகை விரிக்கும் பெருமாளே = முதுகை விரிக்கும் பெருமாளே


Saturday, April 28, 2012

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

கடைசிக் காலத்தில் எமன் வந்து தன்னை இழுத்துக்கொண்டு போகும் போது, நம்முடைய அம்மா, அப்பா, மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்து அழுவார்கள், அப்போது, முருகா, நீ எமனிடம் "பாத்துப்பா, இவர் நம்ம ஆளு, நமது அன்பன்" னு நீ வந்து சொல்லனும்னு அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகோள் வைக்கிறார் இந்தப் பாடலில்.....

Saturday, April 7, 2012

கந்தர் அநுபூதி - வள்ளியின் பின் சென்ற வேலன்

பசங்களுக்கு பொண்ணு மேல ஒரு "கிக்" வந்துருச்சுனா அந்த பொண்ணுங்க பின்னாலேயே சுத்துவாங்க.
அந்த பொண்ணு எங்க போனாலும் அது பின்னாடியே போக வேண்டியது.
இவன் வீடு எங்கேயோ இருக்கும், அந்த பொண்ணு வீடு வேற எங்கேயோ இருக்கும்.
அந்த பொண்ணுக்காக வழிய மாத்தி அவ வீட்டு வழியா போவானுங்க.
அவ நிக்கிற பஸ் ஸ்டாண்ட்ல போய் நிப்பாணுக.
லைப்ரரிக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு அந்த பொண்ணு வீட்டுல போய் தண்ணி கேக்குறது....
இப்படி நிறைய நடக்கும்ல ... நாம கேள்வி பட்டு இருக்கோம்ல...
இப்படி தான் முருகன் வள்ளி பின்னால சுத்தினாராம்...கந்தர் அனுபூதியில் அருணகிரி நாதர் சொல்கிறார்