அபிராமி அம்மை பதிகம் - நம்மை துரத்துபவை
பிறந்தது முதல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்று நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது.
அபிராமி பட்டர் பட்டியல் போடுகிறார்....
பாடல்
மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி
ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த,
மிகு வேதனைகளும் துரத்தப்,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும்
துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப்,
பல காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த,
வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை
நமனும் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே! (11)
பொருள்