Showing posts with label திரு மந்திரம். Show all posts
Showing posts with label திரு மந்திரம். Show all posts

Tuesday, May 11, 2021

திருமந்திரம் - இடிகரை நிற்குமோ

திருமந்திரம் - இடிகரை நிற்குமோ 


ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருக்கும் போது பார்க்க மிக அழகாக இருக்கும். சுளுத்திக் கொண்டு ஓடும் நீர், அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கும் இலை தளைகள், கொஞ்சம் நுரை அங்கே, கொஞ்சம் சுழி இங்கே என்று ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கும் ஆற்று நீரின் ஓட்டம். 


ஆறு அப்படி ஓடிக் கொண்டிருக்கும் போது, அதன் இரண்டு கரையிலும், ஆற்றின் நீர் அந்த கரையை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டே இருக்கும். 


சட்டென்று ஒரு கட்டி மண் விழும், ஒரு கல் மெல்ல புரண்டு ஆற்றோட்டத்தில் அடித்துக் கொண்டு போகும். 


ஆற்றின் கரைக்கு இடி கரை என்று பெயர். இடிந்து கொண்டே இருக்கும் கரை. வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும் இடியும் கரை. 


அது போல, நம் வாழ்வும். 


ஒரு நாள் சந்தோஷம், ஒரு நாள் உற்றார் உறவினர் கூட கொண்டாட்டாம், ஒரு நாள் பிரிவு, புது உறவுகள் வரவு,  பழைய உறவுகள் விட்டுப் போதல், ஆரோக்கியம் பல நாள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நோய் சில நாள் என்று ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில், அதன் மொத்த நாளையும் இந்த கால வெள்ளம் அரித்துக் கொண்டே இருக்கும். 


ஒவ்வொரு நாளும் கொஞ்சம் அரித்து எடுக்கும். 


இளமை போகும். ஞாபகம் போகும்.  அழகு போகும். கொஞ்சம் கொஞ்சமாக. 


நமக்கு முன் வந்தவர்கள் எத்தனையோ பேர். எல்லோரும் முடிந்து போய் விட்டார்கள். இன்று இருப்பவர்களுக்கும், இனி வரப் போகிறவர்களும் நிரந்தரமாய் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒன்றும் இல்லை. எத்தனை மாத்திரை, மருந்து, சிகிச்சை, சோதனை செய்தாலும் என்ன? இடிகரை நிற்காதது போல, நம் வாழ்வும் நிலைக்காது என்கிறார் திருமூலர். 


பாடல் 

 

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் 

பின்னை வந்தவர்கென்ன பிரமாணம் 

முந்நூறு கோடி உறுகதி பேசிடில் 

என்ன மாயம் இடிகரை நிற்குமோ 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_11.html


(please click the above link to continue reading)




முன்னம் வந்தனர் = நமக்கு முன்னால் வந்தவர்கள் 


எல்லாம் முடிந்தனர்  = எல்லோரும் இறந்து போய் விட்டார்கள் 


பின்னை வந்தவர்கென்ன பிரமாணம் = பின்னால் வரப் போகிறவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?


முந்நூறு கோடி  =  முந்நூறு கோடி


உறுகதி பேசிடில்  = பிழைக்கின்ற வழி பற்றி சிந்தித்தாலும் 


என்ன மாயம் = என்ன மாயம் 


இடிகரை நிற்குமோ  = இடி கரை நிற்குமோ? (நிற்காது என்பது பொருள்) 


அலோபதி, ஹோமியோபதி, அன்குபஞ்சர், ஆயுர்வேதம், கபசுர குடிநீர், நோய் தடுப்பு ஊசி என்று ஆயிரம் இருந்தாலும், இடிகரை இடிவதை தடுத்து நிறுத்த முடியாது. 


இருக்கின்ற வரை, அதை நல்ல வழியில் பயன் படுத்த வேண்டும். 






Thursday, June 11, 2020

திரு மந்திரம் - ஆய்ந்தறி வாரில்லை

திரு மந்திரம் - ஆய்ந்தறி வாரில்லை


நமக்கு முடி திருத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? முடி திருத்தும் இடத்துக்குப் போக வேண்டும்.

நீச்சல் அடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நீச்சல் குளமோ, அல்லது வேறு ஏதாவது நீர் நிலைக்கோ போக வேண்டும் அல்லவா?

வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு, நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா?  வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டப் பழக முடியுமா?

அற்ப காரியங்களான முடி திருத்துவது, நீந்துவது, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றிற்கே அந்தந்த இடத்துக்குப் போக வேண்டி இருக்கிறது.

நாம் வீட்டில் இருந்து கொண்டே இறைவனை அறிய வேண்டும், முக்தி , வீடு பேறு, பர லோகம், உண்மை, மறு பிறப்பு, ஆத்மா என்று எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறோம்.

முடியுமா?

அததற்கு அங்கங்கே போனால் தானே முடியும்.

கொங்கு நாட்டில் வாணிபம் செய்வார்கள். அவர்கள் எப்படி செய்கிறார்கள், எப்படி பேரம் பேசுகிறார்கள், எப்படி கொள் முதல் செய்கிறார்கள் என்று அறிய வேண்டும் என்றால் அங்கே போனால்தான் முடியும். இங்கு இருந்து கொண்டே அதை அறிய முடியாது.

வெளிச்சம் என்றால் எப்படி இருக்கும் என்று இருளில் அமர்ந்து கொண்டு யோசித்தால், எவ்வளவு யோசித்தாலும் அது பிடிபடாது. ஆனால், நிலவு வந்துவிட்டால், அப்புறம் வெளிச்சம் என்றால் என்ன என்று யோசிக்க என்ன இருக்கிறது. அது தான் தெரிகிறதே. யோசனை என்ன வேண்டி இருக்கிறது. உண்மை அறியும் வரைதான் வாதம், பிரதிவாதம் எல்லாம். உண்மை தெரிந்து விட்டால்  பேச்சு நின்று விடும்.

ஞானிகள் இருக்கும் போய் விட்டால், ஞானம் தானே வந்து விடும். நிலவு இருக்கும் இடத்தில் இருள் இல்லாமல் போவது போல, ஞானிகள் இருக்கும் இடத்தில் அறியாமை இருக்காது.


பாடல்



கொங்குபுக் காரொடு வாணிபஞ் செய்ததுஅங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லைதிங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமன்றே




பொருள்


கொங்கு = கொங்கு தேசம்

புக் காரொடு = அங்கு உள்ளவர்களோடு

வாணிபஞ் செய்தது = எப்படி வாணிபம் செய்வது என்று

அங்குபுக் காலன்றி  = அங்கு சென்று புகுந்தால் அன்றி

ஆய்ந்தறி வாரில்லை = இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஆராய்ந்து அறிய முடியாது

திங்கள்புக் கால் = நிலவு புகுந்து விட்டால்

இரு ளாவ தறிந்திலர் = இருள் என்றால் என்ன என்று தெரியாது

தங்குபுக் கார்சிலர் = தன்னுளே சென்ற சிலர்

தாபதர் தாமன்றே. = தாபதர் என்றால் முனிவர்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_11.html

Thursday, April 30, 2020

திருமந்திரம் - எப்படி அப்படி

திருமந்திரம் - எப்படி அப்படி 


ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பை பலவிதமாக பல பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

த்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு. ஆனால், முயன்றால் ஜீவ ஆத்மா , பரமாத்மாவுடன் சேரலாம் என்று.

அ-த்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்கிறது. வேறு மாதிரி தெரிவது மாயை.

விசிஷ்டாத்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு என்று. இரண்டும் கலக்கவே முடியாது என்கிறது.

இதில் எதை நம்புவது. மூன்றும் , வெவ்வேறு திசையில் இழுக்கின்றன.

திருமூலர் இதை எளிதாக விளக்குகிறார்.

ஒரு படி நீரில், ஒரு பிடி உப்பைப் போட்டால், நீரின் அளவு மாறாது. அது அதே ஒரு படிதான் இருக்கும். அப்படி ஆனால் உப்பு எங்கே போனது? தண்ணீருக்குள்தான் இருக்கிறது. ஆனால், அது தனியாக தெரிவது இல்லை. தண்ணீரை வற்றக் காய்ச்சினால், அந்த உப்பு மீண்டும் வரும்.

இரண்டும் ஒன்றாக கலந்ததா என்றால், ஆம்.

கலந்த பின் உப்புக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லாமல் போயிற்றா என்றால், ஆம்.

மீண்டும் அதை பிரித்து எடுக்க முடியுமா என்றால் , ஆம்.

அது போலத்தான் சீவனும், சிவனும் என்கிறார் திருமூலர்.

ஜீவாத்மா , பரமாத்மாவோடு இரண்டு அற கலந்து விடும். ஒரு வித்தியாசமும் தெரியாது. ஆனால், உள்ளே தனியாக இருக்கும். வேண்டும் என்றால் மீண்டும் பிரித்துக் கொண்டு வந்து விடலாம்.

இதை எப்படி விளக்குவது? அது போலத்தான் ஜீவனும், சிவனும் என்று கொள்ள வேண்டும் என்கிறார்.


பாடல்



அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே.


பொருள்

அப்பினில்  = நீரினில்

உப்பென  = உப்பைப் போல

அத்தன் = இறைவன்

அணைந்திட்டுச் = சேர்ந்துக் கொண்டு

செப்பு பராபரம் = சொல்லும் பராபரம்

சேர் = சேர்ந்து

பர மும் விட்டுக் = பரத்தை விட்டு விட்டு

கப்புறு = உறுதியான

சொற்பதம் = திருவடிகளை

மாயக் கலந்தமை = மறையும்படி கலந்தது

எப்படி = எப்படி என்றால்

அப்படி என்னும் அவ்வாறே. = அப்படி நடந்ததே அதே மாதிரி

உப்பும் தண்ணீரும் கலந்த மாதிரி என்று சொல்லலாம் என்கிறார்.

எளிய உதாரணம். உயர்ந்த கருத்து.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_30.html

Tuesday, April 28, 2020

திருமந்திரம் - சொல் கேட்டு காமம் வந்தது போல

திருமந்திரம் - சொல் கேட்டு காமம் வந்தது போல 


"ஏய் இங்க வாயேன்" என்று கணவன் ஆசையோடு  கூப்பிடுவான். அவன் கூப்பிட்ட குரலை கேட்டதுமே மனைவிக்குத் தெரியும். அவள் மனத்திலும் ஆசை பிறக்கும்.

அதே சொற்களை வேறே யாராவது சொல்லி இருந்தால், அந்த காதலும் காமமும் பிறக்காது.

அன்பு கொண்ட இருவரில் ஒருவர் ஒரு சொல் சொன்னால் போதும், மற்றவர் மனதில் அது பத்திக் கொள்ளும்.

அது போல, பக்தியால் உள்ளம் கனிந்தவர்கள் ஒரு சொல் சொன்னாலும் போதும், இறைவன் இசைந்து அவர்களுக்கு அருள் புரிவான் என்கிறார் திருமூலர்.

பாடல்


அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.


பொருள்


அதுக்கென்று = அதற்காகவென்றே

இருவர் = இருக்கும் இருவர்

அமர்ந்த = ஓரிடத்தில் இருந்து

சொற் கேட்டும் = அவர்கள் ஒரு சொன்ன ஒரு சொல்லை கேட்டதும்

பொதுக்கெனக் = பொசுக் என்று

காமம் புலப்படு மாபோல் = காமம் வெளிப்படுவது போல

சதுக்கென்று = சது என்றால் அமைதி. மனம் அமைதி பெற்றவர்கள்

வேறே சமைந்தாரைக்  = பக்குவப் பட்டவர்களை

காண = காண்பதற்கு

மதுக் = தேன் நிறைந்த

கொன்றைத் = கொன்றை மலர்களை கொண்டு செய்த

தாரான் = மாலையை அணிந்த சிவன்

வளந்தரும் அன்றே. = நல்லனவற்றை தருவான் அப்போதே

திருஞான சம்பந்தர் குழந்தையாக இருந்த போது, அழுதார். சிவகாமி பால் தந்தாள்.

எத்தனையோ பிள்ளைகள் அழுகின்றன. எல்லோருக்குமா அருள் கிடைக்கிறது.

மனம் பக்குவப் பட வேண்டும்.

மனம் பக்குவப்பட்டால், அமைதி அடைந்தால், இறைவனை தேட வேண்டாம். அவனே வருவான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_79.html

Friday, October 18, 2019

திருமந்திரம் - குறியாத தொன்றைக் குறியாதார்

திருமந்திரம் - குறியாத தொன்றைக் குறியாதார்


சிறு பிள்ளைகள், மணலில் விளையாடும். அதில் அவர்கள் சோறு, கறி எல்லாம் செய்வார்கள். செய்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பார்கள். சாப்பிடுவது போல பாவனை செய்து, ஏப்பமும் விடுவார்கள்.

அது சிறு பிள்ளை விளையாட்டு. அது சோறும் இல்லை. அது பசியையும் தீர்க்காது.

அது போல, நாம் இந்த உலகியல் அனுபவங்களில் திளைத்து இருந்து கொண்டு, அதுவே சுகம், அதுவே வீடு பேறு , முக்தி இவற்றை தரும் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்கிறார் திருமூலர்.

பாடல்

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே .

பொருள்

சிறியார் = சிறுவர்கள்

மணற்சோற்றில் = மணலால் செய்த சோற்றில்

தேக்கிடு மாபோல் = உண்டு ஏப்பம் விடுவது போல (தேக்கு = ஏப்பம்)

செறிவால் = கூடி இருப்பதால் (கணவன், மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவு)

அனுபோகஞ் சித்திக்கும் என்னில் = உயர்ந்த போகம் கிடைக்கும் என்று எண்ணுவது

குறியாத தொன்றைக்  = குறிப்பாக சொல்ல முடியாத ஒன்றை

குறியாதார் = குறித்துக் கொள்ளாதவர்கள்

தம்மை = தங்களை

அறியா திருந்தார் = அறிய மாட்டார்கள்

அவராவர் = அவர் என்ற தலைவரை

அன்றே = அப்போதே

உலக இன்பங்களில் திளைத்து இருப்பவர்கள் தங்களையும் அறிய மாட்டார்கள், "அவரையும்" அறிய மாட்டார்கள்.

வீடு, வாசல், பணம், நகை,நட்டு, உறவு என்று  அலைந்து கொண்டு இருப்பவர்கள், பிள்ளைகள் மணல் சோறு செய்வது போல சிறு பிள்ளைகளாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

மணல் சோறு பசியை எப்படி போக்காதோ, அப்படியே இவையும் என்று அறிக.

interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_37.html



Wednesday, March 11, 2015

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - தேனீ

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - தேனீ 


அரும்பாடு பட்டு செல்வம் சேர்க்கிறோம்.

சேர்த்த எல்லாவற்றையும் நம்மால் அனுபவிக்க முடிகிறதா ? நாம் இறக்கும் போது எல்லாவற்றையும் செலவழித்து விட்டா போகிறோம் ? இந்த வீடு எங்கே இருக்கிறது, அதை நீ எடுத்துக் கொள், அந்த பெட்டகத்தில் உள்ள நகைகளை நீ எடுத்துக் கொள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் கொடுத்து விட்டு வெறுங் கையோடு செல்கிறோம்.

சரி, அதற்காக செல்வமே சேர்க்காமல் இருந்தால் சரி வருமா ? அப்படியே கொடுத்தாலும் யாருக்கு கொடுக்கிறோம் ... பெண்டாட்டி பிள்ளைகளுக்குத் தானே கொடுக்கிறோம்...அதில் என்ன தவறு.

தவறு செல்வம் சேர்பதில் அல்ல...

செல்வம் சேர்க்கும் முனைப்பில் உண்மை எது, வாழ்கை என்றால் என்ன, இதன் நோக்கம் என்ன, என்று  தன்னை அறியாமல் செக்கு மாடு போல சுத்தி சுத்தி வருவதுதான்....

செல்வம்  சேர்ப்பது மட்டும்தான் வாழ்க்கையா ?

கடைசி நேரத்தில் "அடடா வாழ் நாள் எல்லாம் வீணாக்கி விட்டோமே" என்று வருந்தி சாகக் கூடாது.

தேனீக்கள் அரும்பாடு பட்டு ஆயிரக்கணக்கான பூக்களில் இருந்து தேனை சேகரிக்கும். அது சேர்த்து வைத்த பின், அதனால் அதை முழுவதும் அனுபவிக்க முடியாது. வலிமையான மனிதர்கள் வந்து அந்த தேனை கொண்டு செல்வார்கள்.

பாடல்

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஒட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்1
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

பொருள்


ஈட்டிய = சேர்த்த

தேன் = தேன்

பூ மணங்கண் = பூவின் மணமும்

 இரதமும் கூட்டிக் = தன் உமிழ் நீரையும் சேர்த்து  


கொணர்ந்தொரு = கொண்டு வந்து ஒரு

கொம்பிடை வைத்திடும் = மரக் கிளையில் வைத்திடும்

ஒட்டித்  துரந்திட் டது = பல விதங்களில் அந்த தேனீக்களை துரத்தி விட்டு

வலி யார்கொளக் = வலிமையானவர்கள் கொள்ள

காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே = காட்டி கொடுத்து அது கை விட்டவாறே

இயற்கை பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது.

விழித்துக் கொண்டால்  படிக்கலாம்.



Sunday, March 8, 2015

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - என்னது எது ?

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - என்னது எது ?


எது நம்முடையது ?

செல்வம் நம்முடையதா ? நேற்று வரை யாரிடமோ இருந்தது ...இன்று நம்மிடம் இருக்கிறது...நாளை யாரிடம் இருக்குமோ ?

நம் மனைவி, கணவன், மக்கள் நம்முடையதா  ? இல்லை, அவர்களுக்கென்று ஒரு மனம் இருக்கிறது. அவர்களுக்கென்று ஆசாபாசம் இருக்கிறது,  கனவுகள்,கற்பனைகள் என்று அவர்கள் வாழ்க்கை தனி.

அவர்கள் நம் சொத்து அல்ல.

சரி நம் நிழலாவது நமக்குச் சொந்தமா என்றால் அதுவும் இல்லை.

வெயிலில் நடந்து  போகிறோம்.கால் சுடுகிறது. நம் நிழல் நமக்கு உதவுமா ? உதவாது.

சரி, நம் உடம்பாவது நமக்குச் சொந்தமா என்றால் இல்லை. நாம் சொல்கிறபடி நம் உடல் கேட்குமா ? நரைக்காதே என்றால் கேட்கிறதா ? உதிராதே என்றால் உதிராமல் இருக்கிறதா ?

இந்த உயிர் நம் சொந்தமா ?

போகாதே என்றால் இருக்குமா ? அது பாட்டுக்கு போய் விடுகிறது.

பின் எதுதான் நம் சொந்தம் ?

பாடல்


தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்3
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

பொருள்

தன்னது சாயை = தன்னுடைய நிழல்

தனக்குத வாதுகண்டு = தனக்கு உதவாதது கண்டு

என்னது = என்னுடையது

மாடென் றிருப்பர்கள் = செல்வம் என்று இருப்பார்கள்

ஏழைகள் = ஏழைகள்

உன்னுயிர் போம் = உயிர் ஒரு நாள் போய் விடும்

உடல் ஒக்கப் பிறந்தது = உடலோடு கூடவே பிறந்தாலும், உயிர் போய் விடுகிறது.

கண்ணது காணொளி கண்டுகொ ளீரே = கண்ணால் பார்த்து கண்டு கொள்ளுங்கள்



Saturday, March 7, 2015

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - நிலவு போன்ற செல்வம்

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - நிலவு போன்ற செல்வம் 


நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது. குளிர்ச்சியாக இருக்கிறது. பால் போல ஒளி தருகிறது.

நாளும் அது வளரும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. முழு பௌர்ணமி அன்று மிக மிக அழகாக இருக்கும். கடற்கரையில், முழு நிலவின் அழகை இரசித்துக் கொண்டே இருக்கலாம்.

அந்த முழு நிலவு அப்படியே இருக்குமா ?

கொஞ்சம் கொஞ்சமாக தேயும். ஒளி மங்கும். ஒரு நாள் ஒன்றும் இல்லாத அம்மாவாசையாகி விடும். முற்றும் இருண்டு விடும்.

செல்வமும் அது போலத்தான். கொஞ்சம் கொஞ்சமாக வரும். வரும் போது சந்தோஷமாக இருக்கும்.

வாடகை வரும், வட்டி வரும், போட்ட முதல் நாளும் பெருகும் போது மனம் சந்தோஷப் படும்.

அது அப்படியே இருக்கும் என்று நினைக்காதே.

செல்வம் என்றால் "செல்வோம்" என்று தான் அர்த்தம் என்கிறார்  திருமூலர்.

வரும் போகும் செல்வத்தை விட்டு, அவனை நாடுங்கள். பெரு மழை போல அவன் கருணை பெருக்கெடுத்து வரும் என்கிறார்.

பாடல்

இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்குந்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே

 பொருள்

இயக்குறு திங்கள்  = உலவும் திங்கள்

இருட்பிழம் பொக்குந் = இருண்ட பகுதியை ஒக்கும்

துயக்குறு செல்வத்தைச்  = துன்பத்தைத் தரும் செல்வத்தை. துயங்குதல் என்ற சொல்லுக்கு தளர்வைத் தரும், ஆயாசத்தைத் தரும் என்று பொருள்  சொல்லலாம்.செல்வம் தேடித் தேடி தளர்ந்து போவோம்.

அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்பநீ அடியனேன் தன்னை விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன் விடுதியோ விட்டிடு வாயேல் உடாத வெற்றரை நேர்ந் துயங்குவேன் ஐயோ உன்னருள் அடையநான் இங்கே படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப் பாடெலாம் நீ அறியாயோ

என்பார்  வள்ளலார்.

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 

சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.

என்பார் மணிவாசகர்.

சொல்லவும் வேண்டா = அதைப் பற்றி சொல்லவும் வேண்டாம். பார்த்தாலே தெரியும்

மயக்கற நாடுமின் = மயக்கம் இல்லாமல் நாடுங்கள்

வானவர் கோனைப் = வானவர்களின் அரசனை

பெயற்கொண்டல் போலப் = பெய்யும் முகில் போல

பெருஞ்செல்வ மாமே = பெரும் செல்வம் அதுவே



Friday, March 6, 2015

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை 


எவ்வளவு செல்வம் நமக்கு வேண்டும் ?

நாம் எதற்கு செல்வம்  சேர்கிறோம்.முதலில் தேவைக்கு சேர்கிறோம். பின் எதிர்காலத்திற்கு வேண்டும் என்று சேர்கிறோம்.

எவ்வளவு வேண்டும் எதிர் காலத்திற்கு ? சேர்த்துக் கொண்டே  போகிறோம்.

எவ்வளவு பணம் சேர்த்து வைத்தால் நம் எதிர் காலம் கவலை இன்றி கழியும் ?

நம் செல்வத்தை விடுங்கள்....ஒரு அரசனின் செல்வம் ஒன்றும் இல்லாமல் போகும் என்றால் நம் செல்வம் எந்த மூலை ?

சேர்த்த பொருளை அனுபவிக்கிறோமா என்றால் இல்லை. யார் யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறோம்.  கொஞ்சம்  பிள்ளைகளுக்கு,கொஞ்சம் அரசாங்கத்திற்கு, கொஞ்சம் தான தர்மம் என்று யார் யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறோம்.

இதற்கா இந்தப்  பாடு ? இதற்கா இத்தனை காலம் செலவழித்தோம் ?

திருமந்திரத்தில், திருமூலர் செல்வத்தின் நிலையாமை பற்றி  சொல்லுகிறார்.


அரச  பதவியும்,அதிகாரமும், ஆனையும் தேரும் பொருளும், பிறர் கொள்ளப் போவதற்கு முன், உயிரைத் தொடும் செல்வனை (இறைவனை ) அடையாமல் போனால் அது நல்ல தவமாகாது


பாடல்

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்1
தெருளும் உயிதொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.

பொருள்

அருளும் = அரச ஆணையும்

அரசனும் = அரசனும்

ஆனையுந் தேரும் = யானையும் தேரும்

பொருளும் = செல்வமும்

பிறர்கொள்ளப் போவதன் முன்னந் = பிறர் கொண்டு போவதன் முன்

தெருளும் = அறிவின் தெளிவோடு

உயிதொடுஞ்  = உயிரைத் தொடும்

செல்வனைச் சேரின் = செல்வனாகிய இறைவனை சேர்ந்தால்

மருளும் = மயங்கி 

பினையவன் = பிணைந்தால்

மாதவ மன்றே.= மாதவமாகாது


 

Thursday, January 29, 2015

திருமந்திரம் - புலன்களைப் போற்றுவோம்

திருமந்திரம் - புலன்களைப் போற்றுவோம் 


பொதுவாக நம் தமிழ் இலக்கியமும் , குறிப்பாக அற நூல்களும் மற்றும் சமய இலக்கியங்களும் புலன்களை அடக்க வேண்டும், புலன்கள் போன வழியில் போகக் கூடாது, புலன்கள் வஞ்சனையை செய்யும், புலன்கள் நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் என்றெல்லாம் தான் சொல்கின்றன.

திருமூலர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புலன்கள் இல்லாமல் எப்படி எதையும் அறிந்து கொள்வது ? இந்த உடல் முக்கியம், இந்த புலன்கள் முக்கியம் என்று சொல்கிறார்.

புலன்கள் மூலம் தான் அறியமுடியாத இறைவனை அறிய முடியும். எனவே புலன்களை போற்றுங்கள்  என்கிறார்.

உடம்பை  போற்றுகிறார்.

பாடல்


உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

மிக எளிய பாடல். மிக மிக ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.

பொருள்


உள்ளம் பெருங்கோயில் = உள்ளம் ஒரு பெரிய கோவில்

 ஊன் உடம்பு ஆலயம் = இந்த மாமிச உடம்பு ஒரு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் = வாய் தான் அந்த கோபுரத்தின் வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் = சந்தேகம் இல்லாமல் தெளிந்த மனம் உடையவர்களுக்கு

சீவன் சிவலிங்கம் = சீவனே சிவன். சிவன் வேறு எங்கும் இல்லை

கள்ளப் புலன் ஐந்தும் = கள்ளமான புலன்கள் ஐந்தும்

காளா மணிவிளக்கு = இருட்டைப் போக்கும் விளக்கு

புலன்கள் கள்ளம் செய்யும் இயல்பு உடையனதான். இருந்தாலும், அறியாமை என்ற இருளைப் போக்கி அறிவு ஒளி பெற உதவுவது இந்த புலன்கள்தான்.

கண் இல்லாமல் எப்படி படிப்பது ?

காது இல்லாமல் எப்படி கேட்டு அறிந்து கொள்வது ?

புலன்கள் இல்லாமல் நம்மால் அறிவைப் பெற முடியாது. 

அறிவைத்தரும் புலன்கள் இந்த உடலோடு சேர்ந்தவை என்பதால், இந்த  உடலும் புனிதமான  கோவிலுக்குச் சமமானது.

உடலுக்குக்குள் இருக்கும்  சீவனை சிவனாக அறிய வேண்டும் என்றால், உடலை முதலில்  கோவிலாக நாம் கருத நடத்த வேண்டும். 

எங்கே செய்கிறோம் ?

 புகை பிடிப்பது, தண்ணி அடிப்பது, அளவுக்கு அதிகமாக உணவை அடைப்பது, கண்ட நேரம் தூங்குவது, தூய்மையாக வைத்துக் கொள்வது கிடையாது, அதை  சரியாக பராமரிப்பது கிடையாது. 

பாழடைந்த கோவில் போல வைத்திருக்கிறோம். 

எங்கே இறைவனைக் காண்பது  இதில்.

புலன்களை கூர்மைப் படுத்திக் கொண்டால், நுண்ணிய விஷயங்களை அறிய முடியும். 

இறை என்பது நுணுக்கமான விஷயம். அதை அறிய வேண்டும் என்றால் நம் புலன்கள் கூர்மையாக , மென்மையாக  இருக்க வேண்டும். 

புலன்கள் எப்படி போகத்திற்கு உதவுகிறதோ , அப்படியே யோகத்திற்கும் அது   உதவும் என்கிறார் கம்பரும்.

அதை நாளை பார்ப்போம்....

அதற்கு முன், எப்படி உடலையும், புலன்களையும் போற்றுவது என்று சிந்திப்போம். 


 

Friday, June 6, 2014

திருமந்திரம் - சீர்காழி வாருங்கள்

திருமந்திரம் - சீர்காழி வாருங்கள்


 வயது ஆகும். மூப்பு வரும். காலும் கையும் தளரும். ஆசையின் பின்னால் ஓடி ஓடி உடல் களைக்கும் , சலிக்கும்.

அன்போடு நம்மை கவனித்த மனைவி கூட நம்மை வெறுப்பாள். "கிழத்துக்கு வேற வேலை இல்லை...கொல்லு கொல்லு  என்று இருமிக் கொண்டு உயிரை வாங்குகிறது " என்று அவளும் சலிக்கும் நாள் வரும். மனைவின் அன்பு நிரந்தரம் அல்ல. மூப்பு வரும்போது வெறுப்பும் கூடவே வரும்.

மனைவியே அப்படி என்றால் பிள்ளைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்....

அந்த நாள் வரும் முன்னம் சீர்காழி வந்து சேருங்கள்...என்று வரவேற்கிறார்  திருமூலர்.

பாடல்

காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினா ரிகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.


பொருள்

காலினோடு =    கால்களோடு

கைகளும் =  கைகளும்

தளர்ந்து = தளர்ந்து

காம நோய்தனால் =  காம நோயினால்

ஏல = ஏலம் மணம் வீசும்

வார் = அழகாக வாரிய

குழலினார் = குழலினை உடைய பெண்கள் (மனைவி )

இகழ்ந்து = கேவலமாக திட்டி

உரைப்ப தன் முனம் = சொல்லவதற்கு முன்

மாலினோடு = திருமாலோடு

 நான்முகன் = பிரமனும்

மதித்தவர்கள் =  மதித்து அவர்கள்

காண்கிலா = காண முடியாத

நீலமேவு கண்டனார் = கழுத்தில் நீலம் கொண்ட அவர் (சிவன்)

நிகழ்ந்த = வாழும் , இருக்கும்

காழி = சீர்காழி

சேர்மினே = சேருங்கள்

உடல் அழகும், வனப்பும், வலிவும் நிரந்தரம் இல்லை.

மனைவி மக்கள் அன்பும் நிரந்தரம் இல்லை.

இவை எல்லாம் என்றும் இருக்கும் என்று நினைக்காதே என்று சொல்லி வைக்கிறார் திருமூலர்

Saturday, January 25, 2014

திரு மந்திரம் - நிலையாமை

திரு மந்திரம் - நிலையாமை 


மரணம் என்பது நிச்சயம் என்று தெரிந்தாலும் , அது என்னோவோ இப்போதைக்கு இல்லை, என்றோ வரப் போகிறது என்று மனிதன் நினைக்கிறான். என்றோ என்றால் நாளையோ, நாளை மறுதினமோ, அடுத்த வாரமோ இல்லை...பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் இருக்கிறது ஒவ்வொருவனும் நினைக்கிறான்.

ஏறக்குறைய நமக்கு இல்லை என்றே நினைக்கிறான்.

இருப்பது பொய் போவது மெய் என்ற நினைப்பிருந்தால் மனிதன் இவ்வளவு ஆட்டம் போடுவானா ?

நல்ல காரியங்களை அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறான்.

அன்றென்று எண்ணாமல் அறம் செய்க என்றார்  வள்ளுவர்.

நாம் சுற்றி முற்றி பார்த்தால் நம் நண்பர்களோ உறவினர்களோ அடிக்கடி இறப்பது போலத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக எப்போதோ நடப்பதால் நமக்கு மரணம் என்பதின் நினைப்பு அடிக்கடி வருவது இல்லை.

திருமூலர் சொல்கிறார்....நீ மற்றவர்களை பார்க்காதே...

நாள் தோறும் சூரியன் காலையில் எழுந்து மாலையில் மறைகிறது...ஒவ்வொரு நாளும்  அது பிறக்கிறது இறக்கிறது.

ஹா...சூரியன் என்பது பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை என்று சொன்னால் ... உங்கள் வீட்டு கன்றுக் குட்டியை பாருங்கள். கன்று பிறக்கிறது, தாய் பசு மறைகிறது....உங்களை சுத்தி பாருங்கள்....இயற்கை உயிர்களை நாளும் உண்டாக்குகிறது, மறைய வைக்கிறது....அவற்றை கண்டாவது  ....

வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்று உணர வேண்டும்.

நெருங்கியவர்கள் மறைந்தால் அது இயற்கையான ஒன்று என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்

நமக்கும் அதுதான் என்று எண்ணி இருக்கும் வரை நல்ல படியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்....

பாடல்

 
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.


சீர் பிரித்த பின்

கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே 
விழக் கண்டும்  தேறார் விழியிலா மாந்தர்
குழக் கன்று  முத்து எருதை சில நாளில்
விழக் கண்டும்  தேறார் வியனுல கோரே.


பொருள்

கிழக்கு  = கிழக்கில்
எழுந்து = உதித்து
ஓடிய = மேல் நோக்கி எழுந்து
ஞாயிறு = சூரியன்
மேற்கே = மேற்கு திசையில் 
விழக் கண்டும் = மறைவது கண்டும்
தேறார் = அறிய மாட்டார்கள்
விழியிலா மாந்தர் = கண்ணிலாத மாந்தர்கள். சூரியன் எவ்வளவு பிரகாசமானவன், நாளும் இது நடக்கிறது. ஆனால் காண்பது இல்லை நாம்.
குழக் கன்று = குழந்தையான கன்று
மூத்து = வயதாகி
எருதை = எருதாக மாறி
சில நாளில் = சிறிது நாட்களில்
விழக் கண்டும் = இறந்து விழக் கண்டும்
தேறார் = அறிய மாட்டார்
வியனுல கோரே = இந்த உலக மாந்தரே



பிறந்தோம். வளர்ந்தோம். உழைத்தோம். நாலு காசு சம்பாதித்தோம். இறந்தோம்.

இது தானா வாழக்கை ?

சிந்தியுங்கள் என்கிறார் திருமூலர்

சமயம் கிடைக்கும் போது சிந்தியுங்கள்.



Tuesday, January 29, 2013

திருமந்திரம் - உடம்பைத் தழுவி



திருமந்திரம் - உடம்பைத் தழுவி 

சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு மடங்கள் உண்டு. 

ஸ்ரீ மடம், காஞ்சி மடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் என்று நிறைய மடங்கள் உண்டு. 

இந்த மடங்களில் பொதுவாக சமயம் கோவில் நிர்வாகம், வரவு செலவு, சமய சொற்பொழிவுகள் முதலியவை நடக்கும். 

இங்கு மிகப் பெரிய நூலகங்கள் உண்டு. சமய சம்பந்தப் அறிய நூல்கள் இருக்கும். 

இந்த மடத்திற்குள் ஒரு நாய் புகுந்தால்  என்ன செய்யும்? 

நேரே நூலகத்திற்குப் போகும். படிக்கவா செய்யும்....அங்கும் இங்கும் சுத்தும்...முடிந்தால் இரண்டு குரை குரைக்கும்.

பின் அங்கிருந்து கணக்கு எழுதும் இடத்திற்கு போகும்...அங்கும் ஒரு குரை ..

இப்படி அங்கும் இங்கும் அலைந்த பின் வெளியே போகவும் வழி தெரியாமல்  அலைந்து கொண்டு இருக்கும்.

சிரிப்பாய் இருக்கிறது அல்லவா ? 

நீங்கள் மட்டும் என்ன ஒழுங்கு என்கிறார் திருமூலர், திரு மந்திரத்தில்

பிறக்கிறீர்கள், ஏதோ பள்ளிக் கூடம், கல்லூரி, வேலை, திருமணம், பிள்ளைகள், அது இது என்று திக்கு தெரியாமல் ஓடி கொண்டே இருக்கிறீர்கள்....

சாமாறே விரைகின்றேன் என்பார் மணிவாசகர் 

சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

என்பது பிரபந்தம். 

வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன ? எதற்கு வந்தோம் ? என்ன செய்கிறோம் ? என்று ஒன்றும் தெரியாமல் மடம் புகுந்த நாய் போல் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கிறோம். 

பாடல்:

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே

பொருள் 


உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி = உடம்பும் உடம்பும் ஒன்றை ஒன்று தழுவி 

உடம்பிடை நின்ற உயிரை அறியார் = அந்த உடம்புகளுக்குள் இருக்கும் உயிரை யாரும் அறிய மாட்டார்கள்

உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார் = உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள்

மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே = மடத்திற்குள் புகுந்த நாய் போல அங்கும் இங்கும் நோக்கம் போல மயங்கி உழலுவார்கள் 

திருமந்திரம் - உடம்பைத் தழுவி


திருமந்திரம் - உடம்பைத் தழுவி 

சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு மடங்கள் உண்டு. 

ஸ்ரீ மடம், காஞ்சி மடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் என்று நிறைய மடங்கள் உண்டு. 

இந்த மடங்களில் பொதுவாக சமயம் கோவில் நிர்வாகம், வரவு செலவு, சமய சொற்பொழிவுகள் முதலியவை நடக்கும். 

இங்கு மிகப் பெரிய நூலகங்கள் உண்டு. சமய சம்பந்தப் அறிய நூல்கள் இருக்கும். 

இந்த மடத்திற்குள் ஒரு நாய் புகுந்தால்  என்ன செய்யும்? 

நேரே நூலகத்திற்குப் போகும். படிக்கவா செய்யும்....அங்கும் இங்கும் சுத்தும்...முடிந்தால் இரண்டு குரை குரைக்கும்.

பின் அங்கிருந்து கணக்கு எழுதும் இடத்திற்கு போகும்...அங்கும் ஒரு குரை ..

இப்படி அங்கும் இங்கும் அலைந்த பின் வெளியே போகவும் வழி தெரியாமல்  அலைந்து கொண்டு இருக்கும்.

சிரிப்பாய் இருக்கிறது அல்லவா ? 

நீங்கள் மட்டும் என்ன ஒழுங்கு என்கிறார் திருமூலர், திரு மந்திரத்தில்

பிறக்கிறீர்கள், ஏதோ பள்ளிக் கூடம், கல்லூரி, வேலை, திருமணம், பிள்ளைகள், அது இது என்று திக்கு தெரியாமல் ஓடி கொண்டே இருக்கிறீர்கள்....

சாமாறே விரைகின்றேன் என்பார் மணிவாசகர் 

சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

என்பது பிரபந்தம். 

வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன ? எதற்கு வந்தோம் ? என்ன செய்கிறோம் ? என்று ஒன்றும் தெரியாமல் மடம் புகுந்த நாய் போல் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கிறோம். 

பாடல்:

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே

பொருள் 

Monday, January 14, 2013

திருமந்திரம் - புலன்களை அடக்காதீர்கள்


திரு மந்திரம் - புலன்களை அடக்காதீர்கள் 


மெய், வாய், விழி, நாசி, செவி என்ற ஐந்து புலன்களும் நம்மை படாத பாடு படுத்துகின்றன. 

பார்ப்பது எல்லாம் வேண்டும் என்கிறது மனம்.

ருசியானவற்றை கண்டால் ஜொள்ளு விடுகிறது நாக்கு,  

சினிமா பார்க்க வேண்டும், புதுப் புது இடங்களை பார்க்க வேண்டும் என்று கண் அலை பாய்கிறது

பாடலை, இசையையை கேட்க வேண்டும் என்று காது ஆசைப் படுகிறது....

ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்று எல்லா மதங்களும் போதிக்கின்றன. 

ஆனால், ஐம்புலன்களை அடக்க முடியுமா ? அடக்கியபின் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

திருமூலர் ரொம்ப ப்ராக்டிகலான ஆளு. 

பாடல் 

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்,
அஞ்சும் அடக்கும் அறிவறி வார்இல்லை,
அஞ்சும் அடக்கின் அசேதனமாம் என்றிட்(டு)
அஞ்சும் அடக்காத அறிவறிந்தேனே

பொருள்

Friday, January 4, 2013

திரு மந்திரம் - கொடுத்துப் பாருங்கள்


திரு மந்திரம் - கொடுத்துப் பாருங்கள்


எத்தனை இருந்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று அலைகிறோம். பணம் இல்லாதவன் பணத்திற்கு அலைகிறான். பணம் இருப்பவன் அன்புக்கு அலைகிறான். நிம்மதிக்கு அலைகிறான். வேண்டாதார் யார் ?

மனித மனம் அடியற்ற பாத்திரம். எவ்வளவு இட்டாலும் நிறையாது. எப்போதும் குறையுடனேயே அலையும். பார்ப்பது எல்லாம் வேண்டும். கண்ணில் படுவது கையில் வேண்டும்.  

பெறுவதிலேயே கவனமாய் இருந்தோமே, கொடுப்பதை பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா ? கொடுக்கும் சுகம் அறிந்தால், பெறுவதில் உள்ள சுகம் மறையும். .அறம் செய்ய விரும்பு என்றால் அவ்வை. கொடுக்கும்போது திருப்தி வரும். நாம் ஒருவருக்கு உதவி செய்தோம் என்ற மன நிறைவு வரும். இன்னும் கூட செய்யலாமே என்ற எண்ணம் வரும். பிறருக்கு நன்மை செய்யும் இடத்தில் நம்மை வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும். அமைதியும், இன்பமும் பிறக்கும். 

கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லையே...தானம் செய்யும் அளவுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய பணக்காரான என்று கேட்பவர்களுக்கு திருமூலர் பதில் சொல்கிறார். 

நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர் தெரியமா ? நீங்கள் கடவுளுக்கே கொடுக்கக் கூடிய அளவுக்கு பெரியவர். கடவுள் நம்மிடம் என்ன கேட்க்கிறார்...ஒரே ஒரு பச்சிலை...ஒரு துளசி தளம். அவ்வளவு தான் அவனுக்கு வேண்டும். அன்போடு ஒரே பச்சை இலை கொடுத்தால் போதும் அவனுக்கு. அது முடியாதா ? 

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை. அப்படியே கடவுள் இருந்தாலும், அவருக்கு ஒரு பச்சிலை கொடுப்பதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்று வாதிப்பவர்களும் இருக்கலாம். 

வேண்டாம், நீங்கள் கோவிலுக்குப் போக வேண்டாம், சாமி கும்பிட வேண்டாம்...மற்ற உயிர்கள் மேல் அன்பு இருக்கிறதா உங்களுக்கு ? போகிற வழியில் நாலு புல்லை பிடுங்கி வழியில் நிற்கும் பசுவுக்கு வயிறார கொடுங்கள். செய்யலாம் தானே ?

எங்க அபார்ட்மெண்ட் பக்கம் புல்லும் இல்லை பசு மாடும் இல்லை. இதுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். தினம் சாபிடுவீர்கள் தானே ? அதுக்கு நேரம் கட்டாயம் இருக்குமே ? அப்படி சாப்பிடும் போது, ஒரு கை உணவை காக்கைகோ, குருவிக்கோ கொடுங்கள். 

என்னங்க நீங்க புரியாத ஆளா இருக்கீங்க...அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், பெரிய உணவகங்களில் சாப்பிடும் போது காக்காவையும் , குருவியையும் எங்க போய் தேடுவது என்று அலுத்துக் கொள்கிறீர்களா ?

ஒண்ணும் முடியாவிட்டால், மற்றவர்களுக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கள்..அதுவே பெரிய தர்மம்தான். பொய் இல்லாத, கபடம் இல்லாத, சுடு சொல் இல்லாத...இனிய வார்த்தை சொல்லுங்கள்...அது கூட ஒருவிதத்தில் தானம் தான்....

சொல்லித் தெரியாது காமம்
சொன்னாலும் புரியாது தர்மம்...

கொடுத்துப் பாருங்கள், அதன் சுகம் தெரியும்.....

வறிஞர்க்கு நொயிர் பிளவேனும் பகிர்மின்கள் என்பார் அருணகிரி....

பாடல் 

Monday, May 28, 2012

திரு மந்திரம் - எப்படி இறைவனை அறிவது?


திரு மந்திரம் - எப்படி இறைவனை அறிவது?


இறைவன் உண்டா ? உண்டு என்றால் அவனை எப்படி அறிவது ?

மனிதன் சிந்திக்க தொடங்கிய காலம் தொட்டு இந்த கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

புத்தகங்களை படித்து அவனை அறிந்து கொள்ள முடியுமா ?

அறிந்தவர்களை கேட்டால் சொல்லுவார்களா ?

அவர்களை எப்படிநம்புவது ?

நிறைய குழப்பம் இருக்கிறது.

திருமூலர் ஒரு வழி சொல்கிறார்.


இறைவனை முதலில் ஒருவர் அறிகிரா்...அவருடைய சொந்த முயற்ச்சியில்.

அறிந்த பின் அவர் அதை மற்றவர்களுக்குச் சொல்கிறார்.

சொல்வதை கேளுங்கள். சும்மா கேட்டால் மட்டும் போதாது, அதை அனுபவ பூர்வமாக உணருங்கள்.

உணர்ந்த பின், நீங்கள் அதை அப்படியே நம்பாதீர்கள். நீங்க போய் திரும்பவும் படியுங்கள்.

அப்படி படித்து, உணர்ந்த பின், நீங்கள் உயர்ந்த நிலை அடைவீர்கள் என்கிறார்.

Saturday, April 21, 2012

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்


ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முதலில் சொன்னவர் திரு மூலர். அவர் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு வாசகத்தை சொல்ல மிக பெரிய தைரியம் வேண்டும். 

சாதியும், மதமும், தீண்டாமையும் மலிந்து இருந்து காலத்தில் இப்படி ஒரு வரியை சிந்திப்பது கூட கடினமான காரியம். 

இப்படி சில புரட்சிகரமான கருத்துகளை சொன்னதால், திருமந்திரம் பல காலமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது. 

சரி, முதல் வரி தெரியும், மற்ற வரிகள் ?

திரு மந்திரம் - உடம்பு அழிந்தால் உயிர் அழியும்

திரு மந்திரம் - உடம்பு அழிந்தால் உயிர் அழியும்

சித்தர்கள் பொதுவாக இந்த ஊண் உடம்பை பெரிதாக மதித்ததில்லை. திரு மூலர் மட்டும் இதற்க்கு விதி விலக்காக இருக்கிறார். 

உடம்பை போற்றி பாது காக்க சொல்கிறார். உடம்பை வளர்பதன் மூலம் உயிரை வளர்க்க முடியும் என்கிறார் இந்தப் பாடலில்....



Thursday, April 19, 2012

திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்



நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம்.

ஆனால், பெரியவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள்.


தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்


தனக்கு கிடைத்த மந்திரத்தை உலகுக்கு எல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர்.


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இந்தப் பாடலில் கூறுகிறார் திருமூலர்.