Showing posts with label thirikadugam. Show all posts
Showing posts with label thirikadugam. Show all posts

Wednesday, February 14, 2024

திரிகடுகம் - முன் செய்த வினை

 திரிகடுகம் - முன் செய்த வினை 


சில சமயம் நம்மால் தீர்க்க முடியாத சில துன்பத்தில் மாட்டிக் கொள்வோம். என்ன செய்தாலும், அதை தீர்க்க முடியாது. அப்போது நினைத்துக் கொள்ள வேண்டும், இந்தத் துன்பம் முன் செய்த வினையால் வந்தது என்று. 


அப்படிப்பட்ட மூன்று துன்பங்களை பட்டியலிடுகிறது திரிகடுகம்.


"எதிர்த்துப் பேசும் மனைவி, ஒழுக்கம் இல்லாத வேலையாள், பகைக் கொண்ட சுற்றம். இந்த மூன்றும் முன் செய்த வினையால் வந்து நின்று ஒருவனது இறுதிக் காலம் வரை வந்து துன்பம் தரும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது"


பாடல் 


எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்

செயிர்நிற்கும் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப

முந்தை பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்

நொந்தார் செயக்கிடந்தது இல். . .


பொருள் 


எதிர்நிற்கும் பெண்ணும் = என்ன சொன்னாலும், எதிர் வாதம் செய்யும் மனைவியும். எதிர்த்துப் பேசும் மனைவியும். 



இயல்பில் தொழும்பும் = இயல்பு + இல் + தொழும்பும் = ஒழுக்கம் இல்லாத வேலையாட்களும் 


செயிர்நிற்கும் சுற்றமும்  ஆகி = எப்போதும் பகை கொண்டு இருக்கும் சுற்றத்தாரும் 



 மயிர்நரைப்ப = முடி நரைக்கும் வயதான காலம் வரை 



முந்தை = முன்பு செய்த 


பழவினையாய்த் = பழைய வினைகளாக வந்து 


தின்னும் = ஒருவனது இன்பத்தை தின்றுவிடும், கொன்று விடும் 


இவைமூன்றும் = இந்த மூன்றும் 


நொந்தார்  = நினைத்துத் துன்பப் படுபவர்கள் 


செயக்கிடந்தது இல் = செய்யக் கூடியது ஒன்றும் இல்லை 


இனி வரும் பிறவிகளில் நல்ல அன்பான மனைவி, ஒழுங்காக வேலை செய்யும் பணியாள், அன்பு பாராட்டும் சுற்றத்தார் இவை வேண்டுமானால், நல்ல வினைகளை இப்போதே செய்ய வேண்டும். 




Friday, October 27, 2023

திரிகடுகம் - அறியாமையால் வரும் கேடு

 திரிகடுகம் - அறியாமையால் வரும் கேடு 


திரிகடுகம் என்பது மூன்று மூலிகைகளின் தொகுதி. 


திரிகடுகம் என்ற நூலில், ஒவ்வொரு செய்யுளும் மூன்று செய்திகளை எடுத்துக் கொண்டு அவை நல்லதா, கெட்டதா என்று கூறும். 


அதன் மூலம், எதை நாம் செய்யலாம், செய்யக் கூடாது என்று அறிந்து கொள்ளலாம். 


வாழ்க்கைக்கு, நடைமுறைக்கு மிகத் தேவையான, உபயோகப் படும் நூல். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


"கல்வி அறிவில்லாதவர்களோடு பழகுவதும், கற்புடைய மனைவியை அடிப்பதும், வீட்டுக்குள் ஒழுக்கம் இல்லாதவர்களை அனுமதிப்பதும், இந்த மூன்றும் அறியாமையால் வரும் கேடுகளாகும்."


பாடல் 


கல்லார்க் கினனாய் ஒழுகலும் காழ்கொண்ட

இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லம்

சிறியாரைக் கொண்டு புகழுமிம் மூன்றும்

அறியாமை யான்வருங் கேடு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_27.html


(please click the above link to continue reading)



கல்லார்க் கினனாய் = கல்லார்க்கு + இனனாய் = கல்லாதவர்களோடு  சேர்ந்து நட்பாய்  


ஒழுகலும்  = இருப்பதும் 


காழ்கொண்ட = உறுதி கொண்ட, கற்புள்ள 


இல்லாளைக்  = மனைவியை 


கோலாற்  = கம்பால் 


புடைத்தலும் = அடிப்பதும் 


இல்லம் = வீட்டில் 


சிறியாரைக் = ஒழுக்கமில்லா சிறியாரை 


கொண்டு  = கொண்டு வருவதும் 


புகழுமிம் மூன்றும் = முக்கியமான இந்த மூன்றும்  


அறியாமை யான்வருங் கேடு. = அறியாமையால் வரும் கேடு 


அதாவது, அறிவு இருந்தால் இந்த தவறுகளை செய்ய மாட்டோம். 


ஒருவேளை ஒருவன் மற்றவற்றை படிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, இது போன்ற நூல்களைப் படித்தால், சரி எது, தவறு எது என்று அறிந்து கொள்ள முடியும். 


இப்படி நூறு பாடல்கள் இருக்கின்றன.


ஒரு நாளைக்கு ஒன்று என்று வைத்துக் கொண்டால் கூட, மூன்று மாதத்தில் படித்து முடித்து விடலாம். 




Tuesday, May 15, 2012

திரி கடுகம் - சிறந்த செல்வங்கள்


திரி கடுகம் - சிறந்த செல்வங்கள்


திரி கடுகம் என்ற பதினெண் கீழ்கணக்கு நூல்,வாழ்க்கைக்கு உபயோகமான கருத்துக்களை சொல்கிறது.

ஒவ்வொரு பாட்டிலும் மூன்று விஷயங்கள் இருக்கும்.

திரி கடுகம் என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்ற ஆயுர்வேதப் பொருள்கள். 

எப்படி அவை உடலுக்கு நன்மை செய்கின்றதோ, அதுபோல, இந்தப் பாடல்களில் இடம் பெரும் மூன்று செய்திகள் நம் வாழ்க்கைக்கு உதவி செய்யும். 

சிறந்த செல்வங்கள் மூன்று என திரிகடுகம் கீழ் கண்டவற்றை கூறுகிறது....