Showing posts with label புற நானூறு. Show all posts
Showing posts with label புற நானூறு. Show all posts

Friday, July 12, 2013

புற நானூறு - உயர்ந்ததும் இழிந்ததும்

புற நானூறு - உயர்ந்ததும் இழிந்ததும் 



உலகிலேயே மிக அற்பமான செயல் ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பது. அதை விட அற்பமானது ஒன்று இருக்கிறது. இலட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு, பசிக்கிறது என்று யாசகம் கேட்டு வருபவனுக்கு ஒன்றும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுவது, பிச்சை எடுப்பதை விட கேவலமானது. சில்லறை இல்லை அந்தப் பக்கம் போய் கேளு என்று வயதான பாட்டியை, கை இல்லாத பிச்சை காரனை விரட்டுவது, அந்த பிச்சை எடுப்பதை விட கேவலம்.

உண்மைதானே. அவனிடம் இல்லை. உதவி கேட்க்கிறான். வைத்துக் கொண்டு பொய் சொல்லுவது உயர்ந்ததா தாழ்ந்ததா ?

கேட்காமலே ஒருவருக்கு வலிய சென்று உதவி செய்வது உயர்ந்தது. அதைவிட உயர்ந்தது எது என்றால், அப்படி தந்த உதவியை வேண்டாம் என்று சொல்லுவது.

அப்படிச் சொன்னவர் திருநாவுக்கரசர்.

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறவின் விளங்கினார்

அப்படி எல்லாம் வாழ்ந்த பரம்பரை நம் பரம்பரை.



ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

என்பது புறநானூற்றுப் பாடல்.

இதைப் பாடியவர் கழை தின் யானையார் என்ற புலவர்


Friday, April 19, 2013

புற நானூறு - பரிசு கிடைக்காத சோகம்


புற நானூறு - பரிசு கிடைக்காத சோகம்

அந்த காலத்தில் புலவர்கள் ரொம்ப துன்பப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வரும் ஒரே வருமானம் அரசர்கள் தரும் பரிசு தான். அரசனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நிர்வாகம், போர், வரி வசூல், வாரிசு சண்டைகள், உள்நாட்டு குழப்பங்கள் என்று. இதற்க்கு நடுவில் நேரம் ஒதுக்கி, புலவர் பாடும் பாடல்களை கேட்டு, அதற்க்கு பொருள் புரிந்து, பாராட்டி பரிசு தரவேண்டும்.

இங்கு ஒரு புலவர்....

புலவருக்கு கையில் காசு இல்லை. வறுமை. இதில் இவர் திருமணம் வேறு செய்து கொண்டு, பிள்ளை வேறு. இவரை நம்பி யார் பொண்ணு குடுப்பார்களோ தெரியவில்லை. பாவம் அந்த பெண். பிள்ளை பாலுக்கு அழுகிறது.. அவளிடம் பால் இல்லை தருவதற்கு. புலவர் பரிசு பெற்று வந்தால், உணவு சமைக்கலாம் என்று காத்து இருக்கிறாள். வீட்டில் சாப்பிட ஒன்றும் இல்லை. உணவை தேடி தேடி வீட்டில் உள்ள எலிகள் கூட இறந்து போய்விட்டன. 

அரசன் பரிசு தருவாதாய் இல்லை. பாட்டை மட்டும் கேட்டு இரசித்து விட்டு, கடைசி வரை பரிசு தரவே இல்லை. ஏன் என்று தெரியவில்லை. பரிசை கட்டி இருக்கிறான், ஆனால் தரவில்லை.  அவனுக்கு என்ன பொருளாதார நெருக்கடியோ. அல்லது, வேறு எதுவும் பிரச்சனையில் அவன் மனம் கிடந்து உழன்றதோ தெரியாது.

புலவர் புறப்பட்டுவிட்டார். ...எனக்கு பரிசு தரவில்லையே, உனக்கு வெட்கமே இல்லை என்று போகும் போது நாசுக்காக திட்டிவிட்டு போகிறார்.

பாடல்:


அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
குன்றுதூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்!நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்எனக்
கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்
கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை யானே; வைகலும்
வல்சி இன்மையின், வயின்வயின் மாறி
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே.


பொருள்:

Sunday, February 10, 2013

புற நானூறு - இலையின் கீழ் நத்தை


புற நானூறு - இலையின் கீழ் நத்தை 

எங்கு பார்த்தாலும் பயங்கர வெயில்.  சுட்டு எரிக்கிறது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு கிளை பரப்பி நிற்பதைப் பார்த்தால் மழை வேண்டி வான் நோக்கி கை விரித்து வேண்டுவது போல இருக்கிறது. கோடை மழை வந்த பாடில்லை. 

குளம் குட்டைகளில் நீர் வற்றி சேறும்  சகதியுமாய் இருக்கிறது. அந்த சகதியும் சூடாக இருக்கிறது. 

ஒதுங்க இடம் இல்லை. அந்த குளத்தில் ஒரு நத்தை வசித்து வந்தது வெயில் அதையும் வாட்டியது. வெயிலுக்கு பயந்து அதால் ஓட முடியாது. வெப்பம் தாங்கமால் தவித்தது. 

அந்த குளத்தில் முளைத்து இருந்த ஆம்பல் செடியின் இலையின் கீழ் மெல்ல ஊர்ந்து சென்று வெயிலின் இருந்து தன்னை காத்துக் கொண்டது. 

மன்னா, வறுமை என்னும் வெயில் என்னை வாடுகிறது. என்னால் வேறு எங்கும் செல்லவும் முடியாது. வீட்டுக்கு யாராவது வந்து விட்டால் அவர்களை  எப்படி உபசரிப்பது என்று தெரியாமல் நான் ஒளிந்து கொள்கிறேன் .

உன்னிடம் வந்து என் வறுமையை சொல்கிறேன். நீ என்னை ஆதரிப்பாய் என்று நினைக்கிறேன் 

பாடல்  


பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம்
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசாகு என்னும் பூசல்போல
வல்லே களைமதி அத்தை; உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே.


பொருள் 

பயங்கெழு மாமழை பெய்யாது = பயன் தரும் பெரிய மழை பெய்யாது 

மாறிக் = மாறி 

கயங் = குளம்

களி = குளத்தில் உள்ள சேறு களி  போல் ஆகி 

முளியும் = வேகும் 

கோடை ஆயினும் = கோடை ஆனாலும் 
,
புழற்கால் ஆம்பல் = துளையை உள்ள ஆம்பல் செடியின் 

அகலடை நீழல் =அகன்ற இலையின் நிழலில் 

கதிர் = சூரிய ஒளி 

கோட்டு = கொம்பு உள்ள 

நந்தின் = நத்தையின் 

சுரிமுக ஏற்றை = வளைந்து நெளிந்து செல்லும் ஆண்  நத்தை 

 நாகுஇள வளையொடு = பெண் சங்கொடு பகலில் கூடும் 

நீர்திகழ் கழனி = நீர் உள்ள  கழனிகளை , வயல்களை   

நாடுகெழு = உள்ள நாட்டை கொண்ட 

பெருவிறல் = பெரிய வெற்றிகளை கொண்ட 

வான்தோய் நீள்குடை = வான் வரை நீண்ட அதிகாரம் உள்ள 
,
வயமான் சென்னி = ஆற்றல் உள்ள சென்னி (அரசன் 

சான்றோர் இருந்த அவையத்து = சான்றோ உள்ள அவையில் 

உற்றோன் = உதவி வேண்டி வந்தவன் 

ஆசாகு = பற்றுதல் வேண்டி, உதவி என்று கேட்டு 
 
என்னும் பூசல்போல = பூசல் என்றால் அறிவித்தல். உதவி என்று அவையில் கேட்ட பின் 

வல்லே களை = விரைவாக அவன் துன்பத்தை களைய 

மதி அத்தை = அசை சொற்கள் 

உள்ளிய = நினைத்த 

விருந்துகண்டு = விருந்து வருவதை கண்டு 

ஒளிக்கும் = ஒளிந்து 

திருந்தா வாழ்க்கைப் = தவறு தான் என்றாலும் திருத்த முடியாமல் வாழும் வாழ்க்கை 

பொறிப்புணர் உடம்பில் தோன்றி = என்னுடைய மற்ற அவயங்கள் (பொறி) தோன்றி ஒழுங்காக இருந்தாலும் 
 
என் = என்னுடைய 

அறிவுகெட நின்ற = அறிவு மட்டும் தடுமாறுகிறது 

நல்கூர் மையே = காரணம் என் வறுமையே  (நல்  கூர்மை = வறுமை )

.
பாடல் எழதும் களம் எவ்வளவு முக்கியம் என்று இந்த பாடலில் இருந்து அறிய முடிகிறது.

வெயில் = வறுமை 

நத்தை = போராட வலிமை இல்லாத புலவன் 


ஆம்பல் இலை = அரசனின் இரக்கம் 

கொதிக்கும் குளம் = சுற்றமும் நட்பும்..நீர் இருந்தாலும் உதவி செய்ய முடியாத அவர்களின் வறுமை 

விருந்துக்கு ஒளிந்து கொள்ளுதல் = தமிழ் கலாசாரம். விருந்துக்கே ஒளிந்து கொள்வது என்றால் கடன் காரன் வந்தால் ?

அறிவு கெடுக்கும் வறுமை = யாசகம் கேட்பது தவறு என்று தெரிந்தாலும் அதை செய்ய தூண்டும் வரும் .

கொஞ்சம் கடினமாக இருந்தாலும் - வறட்சி, வறுமை, இவற்றை துல்லியமாக படம் பிடித்து காட்டும் பாடல். 

Tuesday, January 15, 2013

புற நானூறு - இன்றும் வரும் கொல் ?


புற நானூறு - இன்றும் வரும் கொல் ?

இன்னைக்கும் வருவார்களா ?

அவன் பெரிய கொடையாளி. எல்லோருக்கும் இல்லாருக்கும் உதவி செய்பவன். நல்ல வீரனும் கூட. ஒரு நாள், அவன் ஊரில் உள்ள பசுக்களை பக்கத்து நாட்டு அரசனின் படைகள் கவர்ந்து சென்று விட்டன. அதை கேள்விப் பட்டு, இவன் சண்டைக்குப் போனான். சண்டையில் இவன் பக்கம் வெற்றி பெற்றாலும், அவன் சண்டையில் இறந்தான். அவனை அடக்கம் பண்ணி, அடக்கம் பண்ணிய இடத்தில் ஒரு கல்லை நட்டு வைத்தனர். அந்த கல்லை பூவாலும், மயில் சிறகாலும் தடவிக் கொடுத்தனர். அப்போது அங்கே வந்த புலவர் ஒருவர் நினைக்கிறார், இவன் இப்படி இறந்து போனது ஊருக்குள் தெரியுமோ தெரியாதோ...இவனிடம் உதவி பெற இன்னைக்கும் வருவார்களா என்று துக்கம் இதயத்தை நிறைக்க நினைத்துப் பார்க்கிறார்.....

பாடல்


பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே.

பொருள்


Sunday, January 6, 2013

புற நானூறு - வராத குதிரை


புற நானூறு - வராத குதிரை 


இலக்கியங்கள் பொதுவாக அரசர்களையும், அவர்களின் வீர தீர பிரதாபங்களையும், அவர்களின் உறவுகளையும் பற்றியே பேசுகின்றன. அப்படி எழுதுவதால், அரசர்களிடம் இருந்து பரிசு கிடைக்கலாம். அரசியல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாதாரண மக்களை பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள். சொல்லப் போனால், போர்களினால் அதிகம் பாதிக்கப் படுவது சாதாரண மக்கள் தான். குடும்பத் தலைவன் போரில் இறந்து போனால், அந்த குடும்பம் என்ன பாடு படும். இறந்தவனின் மனைவி, அவன் பிள்ளைகள் என்று அவர்களின் துக்கம் சொல்லி மாளாது. 

போரும், அதனால் எப்படி சாதாரண மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் புற நானூறு பேசுகிறது. 

போர் முடிந்து விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் அவர்கள் வீட்டு ஆண்கள் வீடு வந்து சேர்ந்து விட்டார்கள். என் கணவன் இன்னும் வரவில்லை. குட்டி பையன் வேறு அப்பா எங்கே , அப்பா எங்கே என்று கேட்கிறான். இரண்டு பெரிய ஆறுகள் ஒன்றோடு ஒன்று கலக்கும் இடத்தில் உள்ள பெரிய மரம் எப்படி விழுந்து விடுமோ அது போல் அவனும் விழுந்து விட்டானோ ?
 
பாடல் 

Sunday, August 12, 2012

புற நானூறு - நாளாயினும் மாறாத விருந்தோம்பல்


புற நானூறு - நாளாயினும் மாறாத விருந்தோம்பல்


நாம் ஒரு வீட்டிற்கு விருந்தினராய் சென்றால், அவர்கள் உபசரிப்பு முதல் நாள் மாதிரி பின் வரும் நாட்களில் இருக்காது. 

நாள் ஆக ஆக உபசரிப்பின் அளவு குறைந்து கொண்டே வருவது இயற்கை.

அதுவும் நம்மோடு கூட நம் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்.

ஆனால், அதியமான் அரண்மனையில் முதல் நாள் உபசரிப்பு எப்படி இருந்ததோ அப்படியே எல்லா நாளும் இருக்குமாம்.

நாள் ஆக ஆக, பரிசு வாங்க சென்ற புலவர்களுக்கோ கொஞ்சம் பயம்.

எங்கே உபசரிப்போடு அனுப்பிவிடுவானோ ? பரிசு ஒண்ணும் கிடைக்காதோ என்ற சந்தேகம் வருகிறது. 

ஔவையார் சொல்கிறார், "ஒண்ணும் பயப்படாதீங்க...யானை தன் தும்பிக்கையில் எடுத்த உணவு அதன் வாய்க்கு போவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதி நீங்கள் அதியமானிடம் பரிசு பெறுவது..."

Sunday, June 10, 2012

புற நானூறு - உடன் கட்டை ஏறுதல்


புற நானூறு - உடன் கட்டை ஏறுதல்


உடன் கட்டை ஏறுதல் என்ற ஒன்றை இன்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

கலாசாரத்தில், பண்பாட்டில் எவ்வளவோ உயர்ந்த ஒரு இனம் இது போன்ற ஒரு வழக்கத்தை கொண்டு இருந்தது என்று நினைத்து பார்க்கவே கடினமாக இருக்கிறது.

வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு விஷயம்.

பெண்களை ரொம்பவும் படுத்தி இருக்கிறார்கள், அந்த காலத்தில்.

உடன் கட்டை ஏறாத பெண்ணின் வாழ்க்கை ரொம்பவும் கடினமானதாய் இருந்து இருக்கிறது.

அந்த வாழ்க்கைக்கு, உடன் கட்டை எவ்வளவோ மேல் என்று ஒரு பெண்ணே சொல்வது, கொடுமையிலும் கொடுமை.