Showing posts with label அகலிகை. Show all posts
Showing posts with label அகலிகை. Show all posts

Tuesday, July 31, 2012

கம்ப இராமாயணம் - இராமன் இன்னொரு பெண்ணை தீண்டினானா ?


கம்ப இராமாயணம் - இராமன்  இன்னொரு பெண்ணை தீண்டினானா  ?


இராமன் ஏக பத்தினி விரதம் பூண்டவன். 

'இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்" என்ற விரதம் பூண்டவன். 

அவன் இன்னொரு பெண்ணை தீண்டி இருப்பானா ? அதுவும் காலால் ?

அகலிகை சாப விமோசனம் பெற்றது இராமன் திருவடி தீண்டியதால் என்று வால்மீகி குறிப்பிடுகிறார். 

ஆனால், கம்பன் அப்படி சொல்லவில்லை. இராமனின் கால் இன்னொரு பெண்ணின் மேல் படுவதை அவனால் ஒப்பு கொள்ள முடியவில்லை. 

அவன் காலில் இருந்த ஒரு துகள் (தூசு) பட்டதால் அகலிகை சாப விமோசனம் பெற்றாள் என்று கூறுகிறான். 

கௌதமன் சாப விமோசனம் பெற அகலிகைக்கு சொன்ன பாடல் ...

Saturday, May 12, 2012

கம்ப இராமாயணம் - அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்


கம்ப இராமாயணம் - அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.

இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.

இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.

முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்...

"இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்" என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.
அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.

கம்ப இராமாயணம் - அகலிகை அறிந்து தவறு செய்தாளா ?

கம்ப இராமாயணம் - அகலிகை அறிந்து தவறு செய்தாளா ?


கம்பன் மொத்தம் 25 பாடல்கள் எழுதி உள்ளான்.

பயங்கர கில்லாடி.

அகலிகை அறிந்து செய்தாளா இல்லையா என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியாதபடி பாடல் வரிகள் வார்த்தைகள் அமைந்து இருக்கின்றன.

வாசகனின் முடிவுக்கே விட்டு விடுகிறான் கம்பன்.

கீழே உள்ள பாடல், இந்த படலத்தில் உள்ள ஒரு முக்கியமான பாடல். எப்படி எல்லாம் அதற்க்கு அர்த்தம் சொல்லலாம் என்று பாருங்கள்.

Tuesday, May 8, 2012

கம்ப இராமாயணம் - இனி துன்பம் இல்லை


கம்ப இராமாயணம் - இனி துன்பம் இல்லை


இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது. 

சூரியன் வந்த பின், இருள் இருந்த இடம் தெரிவதில்லை. 

அது போல

இராமா, 

இதுவரை எப்படியோ தெரியாது, 

ஆனால் நீ வந்த பின், இந்த உலகில் துன்பம் என்று ஒன்று இருக்க முடியாது என்கிறான் விஸ்வாமித்திரன்.

எங்கே ?

இராமன் பாதத் துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்.
மிக மிக அருமையான பாடல், ஆழமான பாடலும் கூட....