Showing posts with label சுக்ரீவன். Show all posts
Showing posts with label சுக்ரீவன். Show all posts

Saturday, April 28, 2012

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?


சீதையை பிரிந்து இராமன் இருக்கிறான். உடலும், உள்ளமும் சோர்ந்து போய் இருக்கிறான். அப்படி சோர்ந்து போன சமயம்,

இராமனைப் பார்த்தால் ஏதோ உயிர் இல்லாதாவன் மாதிரி தோன்றுகிறது.

அத்தனை அயர்ச்சி. சுக்ரீவன் இராமனை தேற்றுகிறான்.

கொஞ்சம் தேறுதல் அடைகிறான். உயிர் வந்த மாதிரி இருக்கிறது. சற்று நேரம் கழித்து மீண்டும் சோர்வு...ஏதோ இராமன் ஒவ்வொருமுறையும் உயிர் இழந்து மீண்டும் பெற்றது மாதிரி தோன்றுகிறது...

எத்தனை முறை தான் அவனுக்கு உயிர் போய் வருமோ ?