இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு மிக நுணுக்கமானது.
அதை அருகில் இருப்பவர்கள் கூட அறிந்து கொள்ள முடியாது.
பக்தன் இறைவனை அறிவான்.
இறைவன் பக்தனை அறிவான்.
இதை பக்தன் வெளியே சொன்னாலும் மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
பக்தனை விடுங்கள். இறைவனே சொன்னாலும் புரியாது.
இராமயணத்தில் ஒரு இடம். அனுமன் இராமனைப் பார்க்கிறான். அனுமனுக்கு இராமன் யார் என்று தெரிகிறது. இராமனுக்கும் அனுமனைப் புரிகிறது. ஆனால் அவர்கள் இடையே இருந்த லக்ஷ்மணனுக்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.
அந்த இடம்.....