Showing posts with label kainilai. Show all posts
Showing posts with label kainilai. Show all posts

Wednesday, February 20, 2019

கைந்நிலை - நீந்தும் நெஞ்சு

கைந்நிலை - நீந்தும் நெஞ்சு 


அது ஒரு பெரிய காடு.

அந்த காட்டில் உள்ள மரங்களில் உள்ள பொந்துகளில் ஆந்தைகள் வசிக்கும். அவை இரவில் இரை தேடும். பகலில் , மர பொந்துகளில் வசிக்கும். வெயில் ஏற ஏற சூடு தாங்காது. கொஞ்சம் கொஞ்சமாய் பொந்தின் உள்ளே போகும். எவ்வளவு தான் போக முடியும். ஓரளவுக்கு மேல போகவும் வழி இருக்காது. மேலே வந்தால் சூடு வேற. பொந்துக்குள் இருந்து கொண்டு சத்தம் எழுப்பும். அது ஏதோ அந்த மரம் அனத்துவதைப் போல இருக்கும்.  டொக் டொக் என்று மரத்தை தன் அலகால் கொட்டி சத்தம் எழுப்பும்.

அந்த வழியாக போனால், கொஞ்சம் பயமா இருக்கும் அல்லவா ?

அது இருக்கட்டும் ஒரு பக்கம். பின்னால் வருவோம்.

வீட்டில், கணவனோ பிள்ளையோ வெளியூர் போய் இருப்பார்கள். இல்லத்தரசியின் மனம் பூராவும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கும். உடம்பு மட்டும் தான் இங்கே இருக்கும்.

இப்ப எந்திரிச்சிப்பாரு. இப்ப காப்பி குடிச்சிருப்பாரு. காலையில அந்த மாத்திரை சாப்பிடணும். ஞாபகம் இருக்குமோ இல்லையோ....

பிள்ளை காலையில தானே எழுந்திருக்க மாட்டானே. அவனை எழுப்பணுமே....

இந்த பொண்ணு தனியா அங்க போய் என்ன பண்ணுதோ....

என்று மனம் பூராவும் அங்கேயே இருக்கும்.

அது போல, இந்தப் பாட்டில், ஒரு தலைவி இருக்கிறாள். அவள் கணவன் பொருள் தேடி வெளியூர் போய் இருக்கிறான். அவன் போகிற வழியில் ஆந்தைகள் வாழும் காடு இருக்கிறது.

இவள் மனம் அவன் பின்னேயே போகிறது....


பாடல்



ஆந்தை குறுங்கலி கொள்ள நம் மாடவர்
காய்ந்து கதிர்தெறூஉங் கானங் கடந்தார்பின்
னேந்த லிளமுலை யீரெயிற்றா யென்னெஞ்சு
நீந்து நெடுவிடைச் சென்று.


பொருள்


ஆந்தை = ஆந்தை

குறுங்கலி கொள்ள = சிறிய ஒலி எழுப்ப

நம் மாடவர் = நம் ஆடவர் = நம்ம ஆளு (தோழியிடம் சொல்லுகிறாள் )

காய்ந்து = தீய்க்கும்

கதிர்தெறூஉங் கானங் = சூரிய கதிர்கள் தெறிக்கும் கானகம்

கடந்தார் = கடந்து செல்லுவார்

பின் = அவர் பின்

னேந்த லிளமுலை = ஏந்தல் இள முலை கொண்ட

யீரெயிற்றா  = எயிறு என்றால் பற்கள்.  இளமையான பற்களை கொண்டவளே

யென்னெஞ்சு = என் நெஞ்சு

நீந்து = நீந்துகின்றது

நெடுவிடைச் சென்று = நீண்ட அந்த வழியில்  சென்று


மனம் , நடந்து போகவில்லையாம். நீந்தி சென்றதாம். தவிப்பை மேலும் அடிக் கோடிட்டு காட்டுகிறது. நடந்து போனால், வழியில் எங்காவது நின்று இளைப்பாறிப் போகலாம்.  நீந்தும் போது எங்கே இளைப்பாறுவது.

தோழியை புகழ்கிறாள். அழகான பற்கள், இளமையான மார்பு என்று. "நீயும் என்னைப் போல சின்ன பெண் தானே. இந்தத் தவிப்பு உனக்கும் புரியும் தானே" என்று கேட்காமல் கேட்கிறாள்.

அந்தக் காலத்தில் இருந்து பெண்கள் இந்த பாடு தான் படுகிறார்கள்.

கணவனையும் பிள்ளைகளையும் அனுப்பி வைத்து விட்டு, உடல் இங்கும், மனம் அங்குமாய்  மருகுகிறார்கள்.

அந்தக் காலத்தில் , தோழிகளிடம் இவ்வளவு வெளிப்படையாக பேசினார்கள். இப்ப, அதெல்லாம் இருக்கிறதா என்ன ? இவ்வளவு அன்யோன்யமாக பெண்கள் தங்கள் தோழிகளிடம் பேசிக் கொள்கிறார்களா ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_20.html

Thursday, January 12, 2017

கைந்நிலை - வடுவிடை மெல்கின கண்

கைந்நிலை - வடுவிடை மெல்கின கண்


கணவன் வெளியூருக்குப் போகிறான் என்றால், மனைவிக்கு ஒரு இனம் தெரியாத கவலையும் பயமும் வந்து விடும்.

நேரா நேரத்துக்கு சாப்பிடணுமே , மறக்காம மருந்து சாப்பிடணுமே ,நல்ல சாப்பாடு கிடைக்குமா, அங்கு குளிருமா ? ரொம்ப சூடா இருக்குமா ? பத்திரமா போயிட்டு பத்திரமா வரணுமே என்று ஆயிரம் சஞ்சலம் மனதுக்குள்.

இந்தக் கவலை இன்று நேற்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டே பெண்ணுக்கு இந்தக் கவலை தான்.

பொருள் தேடி தலைவன் வெளியூர் செல்ல  வேண்டும். பிரிவு அவளை வருத்துகிறது.

பிரிவு  மட்டும் அல்ல, அவன் படப் போகும் துன்பங்களும் அவளை நெகிழ வைக்கிறது. என்னால் தானே அவன் இவ்வளவு துன்பப் படுகிறான் என்று நினைத்து அவள் உருகுகிறாள்.

அவள் அதிகம் வெளிய போனவள் அல்ல.  உலகம் எப்படி இருக்கும் என்று  தெரியாது.எல்லாம் கேள்விப் பட்டதுதான்.

அவன் போகப் போகும் பாலைவனத்தைப் பற்றி அவள் மிரள்கிறாள்.

அந்தப் பாலைவனம் அவள் கண் முன்னே விரிகிறது.

அது ஒரு சுட்டெரிக்கும் மணல் வெளி. மருத்துத்துக் கூட ஒரு மரம் கிடையாது.

அங்கங்கே பெரிய பாறைகள்  இருக்கிறது. பாறைகளுக்குப் பின்னால் கள்ளர்கள்,  வழிப்பறி செய்பவர்கள் ஒளிந்து இருப்பார்கள்.

யாராவது அந்த வழியே போனால், உடனே ஒரு விசில் அடிப்பார்கள். அந்த விசில் சத்தத்தை கேட்டு  அங்கே அலைந்து கொண்டிருக்கும் சில காட்டு விலங்குகள் வெருண்டு  ஓடும். விசில் சத்தம் கேட்டு மற்ற கள்வர்களும் வந்து விடுவார்கள். எல்லோரும்  ஒன்று சேர்ந்து வழிப்போக்கர்களை மிரட்டி அவர்களிடம் உள்ள பொருளை பறித்துக்  கொள்வார்கள்.

அப்படிப் பட்ட கொடிய பாலைவனத்தின் வழியே அவன் போக வேண்டியது இருக்கும் என்று கேட்ட உடனையே  கண்களில் நீர் ததும்பி  விட்டது.

பாடல்

கடுகி யதரலைக்குங் கல்சூழ் பதுக்கை
விடுவி லெயினர்தம் வீளையோர்த் தோடும்
நெடுவிடை யத்தஞ் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்.

பொருள்

கடுகி = விரைந்து

அதரலைக்குங் = அதர் என்றால் வழி.  வழியில் வருவோரை

கல்சூழ் = கற்கள் சூழ்ந்த

பதுக்கை = பதுங்கும் இடங்களைக் கொண்ட

விடுவி லெயினர்தம் =  விடு + வில் + எயினர் + தம் = வில்லில் இருந்து அமபை விடுகின்ற எயினர்களுடைய

 வீளையோர்த் தோடும் = வீளை  + ஓரத்து + ஓடும் = விசில் சப்தத்தை கேட்டு ஓடும்

நெடுவிடை = நெடு + விடை. விடை என்றால் காளை  மாடு. அஞ்சி நீண்ட தூரம் ஓடும் காளை மாடுகளைக் கொண்ட

அந்தம் = கடைசிவரை

செலவுரைப்பக் கேட்டே = செல்லப் போகிறாய் என்பதைக் கேட்ட உடனேயே

வடுவிடை = வடு மாங்காய் போன்ற கண்களை உடைய அவளின்

மெல்கின கண் = மெண்மையாக, மெளனமாக நீரை வெடித்தன . மெல்கின கண் என்றால் , கண்கள் மென்மையாகின என்று பொருள். எப்படி மென்மையாகும் ?

நாலு வரிக்குள் ஒரு உணர்ச்சிப் போராட்டம். 

Thursday, November 29, 2012

கைநிலை - ஆசையில் தேம்பும் நெஞ்சு


கைநிலை - ஆசையில் தேம்பும் நெஞ்சு 


ஒரு பெரிய மலை. அந்த   மலையையை சுற்றி உள்ள சிறு சிறு பள்ளங்களில் நீர் நிறைந்து இருக்கிறது. அந்த மலையின் அடிவாரத்தில் அடர்ந்த காடு. காட்டில் நிறைய பழ மரங்கள். பழ மரங்களில் பழங்களை பறித்து தின்று தாவி விளையாடும் குரங்குகள்.   அந்த மலையில் இருந்து விழும் அருவி. விழுந்த அருவியில் இருந்து வரும் புது நீர், அங்குள்ள பள்ளங்களில், சுனைகளில் தேங்கி இருக்கும் பழைய நீரோடு கலந்து வெளியேறும். அருவியில் இருந்து நீர் விழும் போது அதோடு சில கனிகளும் சேர்ந்து விழும். இந்த குரங்குகள் அந்த கனிகளை உண்ண ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்ளும். பின் சினம் ஆறி அந்த கனிகளை உண்ணும். அருவி வரும் அந்த ஊரைச் சேர்ந்தவன் என் காதலன். அவனைக் காண என் மனம் ஆசையில் தேம்புகிறது. 

பாடல்