Showing posts with label Thiru Navukkarasar. Show all posts
Showing posts with label Thiru Navukkarasar. Show all posts

Thursday, September 20, 2012

தேவாரம் - மலரும் காதல்


தேவாரம் - மலரும் காதல் 


பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல் என்றெல்லாம் கேட்டு இருப்பீர்கள்...சில திரைப் படங்கள் கூட வந்து இருக்கின்றன.

இதற்கெல்லாம் முன்னோடி நாவுக்கரசர். 

அவள், அவனைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறாள். "அவன் பேரு என்னடி"என்று அவளுடைய நண்பிகளிடம் கேட்டு தெரிந்து கொள்கிறாள்.

"அவன் எப்படி இருப்பான், கருப்பா சிவப்பா, உயரமா, குள்ளமா" என்று அவனைப் பற்றி மேலும் விசாரிக்கிறாள்.

" அவன் இருக்கும் ஊரு, சொந்த ஊரு" எல்லாம் கேட்டு அறிந்து கொள்கிறாள்

கொஞ்சம் கொஞ்சமாய் அவன் மேல் காதல் வயப்படுகிறாள் 

அவள் சொந்த வீடே அவளுக்கு அந்நியமானது.

அப்பா அம்மா கூட யாரோ மூன்றாம் மனிதர்கள் போல நீங்கிப் போனார்கள்

அவளுடைய பழக்க வழக்கங்கள் மாறின. எந்நேரமும்  அவன் நினைப்பு தான். 

தன்னை தானே மறந்தாள்.

தன் பெயரையே மறந்தாள்

அவனுக்கே எல்லாம் என்று ஆனாள்

Tuesday, June 19, 2012

தேவாரம் - சொர்க்கம் இருப்பது இங்கே


தேவாரம் - சொர்க்கம் இருப்பது இங்கே


சொர்க்கம் எங்கே இருக்கிறது ? மேலே எங்கேயோ இருக்கிறதா ? அது வேறு உலகமா ?

ஒரு சமயம் நாவுக்கரசர் கைலாய மலைக்கு செல்ல விரும்பினார்.

நடந்தே சென்றார். வயதான காலத்தில் அவரால் முடியவில்லை.

சோர்ந்து விழுந்து விட்டார்.

அப்போது, ஒரு அடியவர் அவரிடம் "ஐயா, நீங்க ஏன் இப்படி கஷ்டப் படுகிறீர்கள்...இதோ இந்த குளத்தில் நீராடி வாருங்கள், உங்களுக்கு கைலாயத்தை நான் காட்டுகிறேன் என்றார்.

நாவுக்கரசரும் அந்த குளத்தில் மூழ்கி எழுந்தார். மூழ்கியது வட நாட்டில் ஏதோ ஒரு இடம்.

எழுந்தது திருவையாறு என்ற இடத்தில்.

நாவுக்கரசருக்கு மிகுந்த ஆச்சரியம்.

எப்படி ஒரு சுவடும் இல்லாமல் இங்கு வந்தோம் என்று.

குளத்தை விட்டு வெளியே வந்து பார்க்கிறார்.

அங்கே எல்லா உயிர்களும் ஆணும் பெண்ணுமாய் வருவதை பார்த்தார். 

அவருக்குள் ஏதோ நிகழ்ந்தது.

அனைத்தும் இறைவனும் இறைவியும் போல அவருக்கு தோன்றியது. 

இதுவரை காணாத ஒன்றை கண்டதாக அவரே கூறுகிறார்.

தேவாரத்தில், இந்த பத்து பாடல்கள் மிக முக்கியமான பாடல்களாக கருதப்படுகிறது. 

அதில் இருந்து ஒரு பாடல்

Thursday, June 14, 2012

தேவாரம் - பிறவா நாள்


தேவாரம் - பிறவா நாள் 


திரு பாதிரிப் புலியூர்.

கடலூர் மாவட்டத்தின் தலை நகர்.

புலிக்கால் முனிவர் பூஜை செய்த தலம்.

திரு நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் போட்ட இடம்.

"சொற்றுணை வேதியன்" என்ற நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல் தெப்பமாக மாற, அதில் மிதந்து கரை ஏறி வந்தார்.

இன்றும் "கரை ஏற விட்ட குப்பம்" என்ற இடம் கடலுருக்கு அருகில் உள்ள தேவனாம்பட்டினம் என்ற கடற் கரையில் உள்ளது.

அங்கே நாவுக்கரசருக்கு ஒரு கோயில் இருக்கிறது.


நாவுக்கரசர் சொல்கிறார்....இறைவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவாத நாள் என்கிறார்.



Wednesday, June 13, 2012

தேவாரம் - கப்பல் கவிழும் நேரம்


தேவாரம் - கப்பல் கவிழும் நேரம்


அது ஒரு அழகிய கப்பல்.

கடலின் மேல் ஆடி ஆடி சென்று கொண்டு இருக்கிறது.

திடீரென்று ஒரு பெரிய பாறையில் மோதி உடைந்து விடுகிறது.

அந்த கப்பலில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளிக்கிறார்கள்.

நீந்தி கரை சேர முடியுமா ?

இன்னொரு கப்பல் வந்து அவர்களை காப்பாற்றுமா ?

அதுவரை உயிர் வாழ முடியுமா ?

அது என்ன கப்பல் ? மனம் என்ற கப்பல்.

எப்படி அது சென்றது ? நம் புத்தி என்ற துடுப்பால் துழாவி அதை செலுத்துகின்றோம்.

அதில் என்ன இருக்கிறது ? சினம் என்ற சரக்கு இருக்கிறது.

அது எங்கே போகிறது ? வாழ்கை என்ற அடர்ந்த கடலில் செல்கிறது

அப்ப என்ன ஆச்சு ? - காமம் என்ற பாறை தாக்கியது

அப்புறம் ? - ஒண்ணும் தெரியாமல் தத்தளிக்கிறோம்

அந்த நேரத்திலாவது, ஒற்றியூர் என்ற ஊரின் தலைவனாகிய சிவனே, உன்னை நினைக்கும் புத்தியை தருவாய் என்று வேண்டுகிறார் நாவுக்கரசர்.


Monday, June 11, 2012

தேவாரம் - கெடில நதிக் கரை ஓரம்

தேவாரம் - கெடில நதிக் கரை ஓரம்



கெடிலம் ஆறு.

கடலூரை சுற்றி ஓடும் ஆறு.

ஊரை எந்தப் பக்கம் இருந்து கடந்தாலும் இந்த ஆற்றை தாண்டித்தான் செல்ல வேண்டும்.

நான் படித்த பள்ளிக்கு மிக அருகில் இந்த ஆறு இருக்கிறது.

பள்ளி முடிந்ததும் இந்த ஆற்று மணலில் பட்டம் விட்டது, கபடி விளையாடியது எல்லாம் ஞாபகம் இருக்கிறது.

பள்ளியில் இருந்து போகும் வழியில் ஒரு சர்ச் இருந்தது.

அதை தாண்டி ஒரு சுடுகாடு.

சுடுகாட்டை தாண்டி கொஞ்சம் அடர்ந்த காட்டுச் செடிகள்.

அதை தாண்டி இந்த ஆறு.

இந்த ஆறு போகும் வழியெல்லாம் நிறைய கோவில்கள் இருக்கின்றன.

திரு வீரட்டாணம் அதில் ஒரு தலம்.

நாவுக்கரசர் வயற்று வழியால் மிகவும் அவதிப் பட்டார். அப்போது அவர் சமண சமயத்தில் இருந்தார். 

சமண மத தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் நாவுக்கரசரின் வயற்று வலி போகவில்லை.

அவருடைய தமக்கையார் திலகவதியார் சிவ நாமத்தை சொல்லி திரு நீறு தந்தார். வயற்று வலி போய் விட்டது.

அப்போது நாவுக்கரசர் பாடிய பாடல் இது.

Tuesday, April 17, 2012

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர


திரு நாவுக்கரசர் சைவ சமயத்திற்கு மாறியதால், சமணர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அவர்கள், அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு தாங்கொண்ணா துன்பங்களை தந்தனர்.

அதில் ஒன்று நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எரியச் செய்தது.

அப்படி கடலில் போட்டவுடன், அவர் இறைவனை நினைத்து உள்ளம் உருகி நமச்சிவாயப் பதிகம் பாடினார். 

அவரை கட்டியிருந்த கல் தெப்பமாய் மிதந்தது. அதில் ஏறி கரை சேர்ந்தார். 

இது நடந்தது கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினம் என்ற கடற்கரையில். 

இன்றும் அங்கு "கரையேற விட்ட குப்பம்" என்று ஒரு இடம் உண்டு. அப்பர் கரையேறிய இடம்.

நமச்சிவாய பதிகத்தில் முதல் பாடல்...


------------------------------------------------------------
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச்சி வாயவே.
---------------------------------------------------------------


பொருள்:




சொற்றுணை = சொல் + துணை = சொல்லுக்கு துணையான


வேதியன் = வேதங்களுக்கு தலைவனான 


சோதி = சோதி வடிவாய் உள்ளவன்


வானவன் = வானத்தில் உள்ளவன்


பொற்றுணைத் = பொன் போன்ற துணை உள்ள
திருந்தடி = திருவடி


பொருந்தக் கைதொழக் = மனமும், கையும் அவன் திருவடியில் பொருந்துமாறு கை தொழ

கற்றுணைப் பூட்டியோர் = கல்லைக் கட்டி


கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கி போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது


 நமச்சி வாயவே. = நமச்சிவாய என்ற அந்த நாமமே



கல்லை கட்டிப் போட்டாலும் அவன் நாமம் துணையாய் இருக்கும். அவ்வளவுதானா? எழுதியது நாவுக்கரசர்.

சற்று ஆழ்ந்து சிந்தித்தால் சில பொருள் விளங்கும்:

கடல் என்றால் இந்தப் பிறவி பெருங்கடல். 

இந்த பிறவி கடலை சும்மா நீந்தி கடப்பதே கடினம், இதில் கல்லை வேறு கட்டிக்கொண்டு எப்படி எப்படி நீந்துவது. 

கல்லுனா எது ? உறவுகள், பந்த பாசங்கள், ஆசைகள், கோபம், தாபம் போன்ற மன மாசுகள் ... இத்தனை கல்லை கட்டி கொண்டு இந்த பிறவிப் பெருங்கடலை எப்படி நீந்தி கரை சேருவது?

இறைவனின் திரு நாமம் இருந்தால், அந்த கற்கள் கூட தெப்பமாய் மாறி சுகமாக கரை சேர முடியும். 

எழுதியது நாவுக்கரசர் !




தேவாரம் - மனித பிறவியும் வேண்டும்

தேவாரம் - ஒரு முன்னோட்டம்

தேவாரம் எழுதியது யார் என்று கேட்டால் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மற்றும் மாணிக்க வாசகர் என்று பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள். 

அது பிழை.

திரு நாவுக்கரசர் பாடியது மட்டும் தான் தேவாரம். 

சைவ சிந்தாந்தத்தில் திரு முறைகள் பன்னிரண்டு. 

1 -2- 3 - திரு முறைகள் திரு ஞான சம்பந்தர் பாடியது. அதற்க்கு திருக் கடை காப்பு என்று பெயர்.

3,- 4,- 5 - திரு முறைகள் திரு நாவுக்கரசர் பாடியது - தேவாரம் என்று பெயர்

தே + ஆரம் = தேவாரம் = இறைவனுக்கு மாலை. சாதாரண பூ மாலை காலையில் போட்டால் மாலைக்குள் வாடிவிடும். நாவுக்கரசர் பாடிய தேவாரம் 1400 ஆண்டுகள் (இவர் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர். நாம் இருப்பது 21 ஆம் நூற்றாண்டு. 14 நூற்றாண்டுகள் இடையில்) கழித்தும் வாடாமல் இன்றும் மணம் வீசிக் கொண்டு இருக்கிறது.

இவர் சைவ சமயத்தில் பிறந்து, சமண மதத்திற்கு சென்று, பின் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தவர். 

இவர் பாடல்கள் மிகுந்த ஆழமும், அழகும் கொண்டவை. 

அந்த தேவரத்தில் இருந்து சில பாடல்கள்.....