Friday, August 31, 2012

பெரிய புராணம் - பிறவாமையும் மறவாமையும்


பெரிய புராணம் - பிறவாமையும் மறவாமையும்


காரைக்கால் அம்மையார் இறைவனிடம் வேண்டுகிறார்.

நாமா இருந்தால் இறைவனிடம் என்ன கேட்போம் ?

சொத்து, சுகம், நல்ல மனைவி/கணவன், ஆரோக்கியமான பிள்ளைகள், பதவி என்று கேட்போம். பக்தி maangal முக்தி, வீடு பேறு என்று கேட்பார்கள். 

காரைக்கால் அம்மையார் கேட்கிறார்...

இறவாத அன்பு வேண்டும் என்று முதலில் கேட்கிறார்.
அப்புறம், பிறவாமை
அப்புறம், மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை 
கடைசியில், இறைவா உன் திருவடிக்கீழ் இருக்கும் முக்தி வேண்டும் என்று கேட்கிறார்.

Thursday, August 30, 2012

பெரிய புராணம் - முதல் பாடல்

பெரிய புராணம் - முதல் பாடல்

நீங்கள் எப்பவாவது கவிதை எழுத நினைத்ததுண்டா?

ஏதேதோ எழுத வேண்டும் என்று தோன்றும்...இதை எழுதலாமா, அதை எழுதலாமா ? இப்படி எழுதலாமா ? அப்படி எழுதலாமா ? என்று மனம் கிடந்து அலை பாயும்...ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது.

பெரிய பெரிய ஞானிகளுக்கே இந்த கஷ்டம் இருந்திருக்கிறது. 

இறைவனே நேரில் வந்து முதல் அடி எடுத்து தந்து இருக்கிறான்...

அருணகிரி நாதருக்கு "முத்தை தரு" என்று முதல் அடி எடுத்துத் தந்தான்.

குமர குருபரருக்கு "திகடசக்கரம்"என்று எடுத்துக் கொடுத்தான் முருகன். 

சேக்கிழாரும் முதல் அடி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். 

இறைவனே "உலகெல்லாம்" என்று அடி எடுத்துக் கொடுத்தான்.

சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின் முதல் பாடல்  

Wednesday, August 29, 2012

தனிப்பாடல் - விதி


தனிப்பாடல் - விதி


நம்முடைய சாதனைகள் என்ன ? 

நம்முடைய பெற்றோருக்கு நாம் பிறந்தது, நம் உடன் பிறப்புகள், சுற்றம், நாம் பிறந்த ஊர், நம் தாய்மொழி இப்படி எவ்வளவோ விஷயங்கள் நமக்கு அதுவாக அமைந்தவை. நாம் கேட்டு பெற்றது அல்ல.

குணங்குடி மஸ்தான் சாகிபு பாடுகிறார்...

Tuesday, August 28, 2012

தனிப்பாடல் - வறுமையின் கொடுமை


தனிப்பாடல் - வறுமையின் கொடுமை


குமண வள்ளலை பற்றிய பாடல்.

 குமணன் ஒரு நாட்டின் அரசன். சிறந்த தமிழ் பற்று உள்ளவன். கொடை வள்ளல். 

குமணனின் தம்பி குமணனை நாட்டை விட்டே துரத்தி விட்டான். 

நாடில்லாமல், கையில் காசில்லாமல், காட்டில் மறைந்து வாழ்கிறான் குமணன்.

குமணனின் தலையை கொண்டு வருவோர்க்கு பரிசு தருவதாக அறிவித்து இருக்கிறான் பாசாக்கார தம்பி. 

இந்த நிலைமையில், வறுமையால் வாடும் புலவன் குமணனிடம் வருகிறான். 

என்வீட்டு அடுப்பில் நெருப்புக்கு பதில் ஆம்பல் பூ பூத்து இருக்கிறது. 

என் கை குழந்தை, என் மனைவியின் பால் இல்லாத மார்பை முட்டி முட்டி பசி போகாமல் அவளுடைய முகத்தைப் பார்கிறது.

அவள் என்னை பார்க்கிறாள்.

நான் உன்னை பார்க்க வந்தேன் என்கிறான். 

எவ்வளவு வறுமை. எவ்வளவு அன்யோன்யம் ஒரு புலவனுக்கு அரசனிடம். 

பசியால் அழும் குழந்தை. 

அதற்கு பால் தர முடியாமல் தவிக்கும் தாய்

கையாலாகாத புலவனாகிய தந்தை

அவனுக்கு உதவ முடியாத நிலையில் அரசனான குமணன்...

குமணன் எப்படியாவது தனக்கு உதவுவான் என்ற நம்பிக்கை ஊடாடும் அந்தப் பாடல் 

Sunday, August 26, 2012

கம்ப இராமாயணம் - எம்மையும் தருவன


கம்ப இராமாயணம் - எம்மையும் தருவன 


இராமாயணத்தில், பரதனும் இராமனும் கங்கை ஆற்றின் கரையில் சந்திக்கும் இடம் உணர்ச்சிகளின் உச்சகட்டங்களில் ஒன்று. 

ஒரு புறம் நைந்து, நெகிழ்ந்து, உருகி நிற்கும் பரதன்

மறுபுறம், முதலில் வெகுண்டு, பின் பரதன் மேல் கொண்ட பாசத்தால் கண்ணீர் வார்த்து நிற்கும் இலக்குவன்

இன்னொரு  புறம், தீராத காதலன் குகன்

இவர்களோடு வசிட்டன், மந்திரிகள், மக்கள் எல்லாம் இராமனை அந்த கோலத்தில் கண்டு வருந்தி, எப்படியாவது அவனை தங்களோடு கூட்டிக் கொண்டு செல்ல விரும்பும் கூட்டம்

பரதன் எவ்வளவோ சொல்கிறான், "வா, வந்து அரசாட்சியை ஏற்றுக் கொள் "என்று. வசிட்டனும் அது தான் சரி என்கிறான். 

இராமன் மறுத்து விடுகிறான். 

சரி, இனிமேல் இராமனை வற்புறத்த முடியாது என்று தெரிந்து கொண்டு, பரதன் நாட்டை ஆள சம்மதிக்கிறான். 

போகும் போது, இராமனின் பாதுகைகளை கேட்கிறான். 

இராமனும் தந்தான்...எதை ?

Thursday, August 23, 2012

கலிங்கத்துப் பரணி - கடல் அளவு அமுதம்


கலிங்கத்துப் பரணி - கடல் அளவு அமுதம்


கொஞ்சம்போல அமுதம் கிடைத்தாலே எவ்வளவு இனிமையாக இருக்கும்..?
அதுவே கடல் அளவு கிடைத்தால் எப்படி இருக்கும் ?

அவள் கடல் அளவு அமுதம் போன்றவள்...அள்ள அள்ள குறையாத இன்பம்..
வற்றாத இன்பக் கடல்...

உடுக்கை போல் சிறுத்த இடை, காது வரை நீண்ட விழி, இளமையான அவள் மார்பு ...

ஒரு நாள் அவர்களுக்குள் ஊடல்...பாக்க மாட்டேன் என்று கதவை சாத்திக் கொண்டாள்...

அவளிடம் கெஞ்சுகிறான்..."கதவை திற"என்று கொஞ்சுகிறான்...அவள் மிஞ்சுகிறாள்..

அவர்கள் இடையே ஊடல் நாடகம் ஊடாடிக் கொண்டு இருக்கிறது....

பிரபந்தம் - அவன் வராவிட்டால், உயிர் காப்பார் யார்


பிரபந்தம் - அவன் வராவிட்டால், உயிர் காப்பார் யார் 


அவன் நினைவாகவே இருக்கிறது அவளுக்கு.

தூக்கம் வரவில்லை. இரவு ஏறி விட்டது. ஊரே உறங்குகிறது.
உலகம் எல்லாம் தண்ணீரில் மூழ்கி விட்டது மாதிரி ஒரே அமைதி.
இரவு நகர மாட்டேன் என்கிறது...நீண்டு கொண்டே போகிறது....
அவன் வராவிட்டால்,அவள் எப்படி உயிர் தரிப்பாள்...

Wednesday, August 22, 2012

கம்ப இராமயாணம் - பிழைகள்?


கம்ப இராமயாணம் - பிழைகள்?


நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.

இந்த பாட்டில் என்ன பிழைகள் இருக்க முடியும் ?

நாடிய பொருள் கை கூடும் என்று சொல்லி விட்டால் அதில் ஞானம் , புகழ் எல்லாம் அடங்கும். ஞானமும் புகழும் உண்டாம் என்று அவற்றை மீண்டும் சொல்வது, "கூறியது கூறல்"என்ற பிழை. திருப்பி திருப்பி சொல்ற நீ.....

வேரியன் கமலை நோக்கு - தேன் இல்லாத தாமரையே கிடையாது என்பதால் இது தேவையற்ற அடை மொழி. 

நீடிய வரக்கர் சேனை - அரக்கர் சேனை அழிந்தது என்று கூறுவது சிறந்தது அல்ல. அரக்கர்கள் அழிந்தார்கள் என்று சொல்வது சிறப்பு. சேனை போனால் என்ன, இன்னொரு சேனை உண்டாக்கினால் போகுது ....

நீறுபட் டழிய - அமங்கல சொற்களை கூறுவது இலக்கிய மரபு அல்ல அதிலும் குறிப்பாக இறைவனை பற்றி புகழும் போது அமங்கல சொற்களை கூறுவது தவறு. 

தோள் வலி கூறுவோற்கே - இராமனுக்கு பல விசேஷ குணங்கள் உள்ளபோது , தோள் வலியை மட்டும் கூறுவது அவன் சிறப்பை குறைப்பது ஆகும்

இப்படி பலப் பல குற்றம் கண்டோர் உண்டு. 

குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருந்து இருக்கிறார்கள்....


நாலாயிர திவ்ய பிரபந்தம் - தழுவினால் உருகுமோ ?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - தழுவினால் உருகுமோ ?


வெண்கலம், இரும்பு போன்ற உலோகத்தில் பாத்திரம் செய்ய, முதலில் ஒரு mould செய்வார்கள். 

முதலில் அந்த பாத்திரம் மாதிரி களி மண்ணில் ஒரு வடிவம் செய்வார்கள்.

அந்த வடிவத்தின் மேல் மெழுகை ஊற்றுவார்கள்.

அந்த மெழுகின் மேல் மீண்டும் களி மண்ணை பூசுவார்கள்.

நன்றாக, காய்ந்த பின், இரண்டு களிமண்ணுக்கு இடையே உள்ள மெழுகை 

உருக்கி வெளியே கொண்டு வந்து விடுவார்கள்.

மெழுகு இருந்த இடம் வெற்றிடமாய் இருக்கும்.

அந்த வெற்றிடத்தில், உருகிய உலோக குழம்பை ஊற்றுவார்கள்....

பின், அந்த களி மண்ணை தண்ணீர் விட்டு கரைத்து விடுவார்கள்....

அருமையான உலோக பாண்டம் கிடைத்து விடும். 
 
இந்த சட்டி பானை செய்வதற்கும், நாலாயிர திவ்ய பிரபந்தத்திர்க்கும் என்ன சம்பந்தம்....?

ஆண்டாள், மழை மேகத்தை பார்த்து கூறுகிறாள்...

அந்த வேங்கடத்து அழகன் என்னைத் தழுவி என் உள்ளம் புகுந்து என் உள்ளிருந்த அழுக்கை எல்லாம் நீக்கி விட்டான்....மழையே நீ என் மேல் பொழிந்து என் வெளி அழுக்கை எல்லாம் நீக்குவாயா என்று கேட்கிறாள்...அவன் என்னோடு கலந்து நிற்பதால், உள் அழுக்கும் வெளி அழுக்கும் போன பின் நானும் அவனும் ஒன்றாய் கலந்து நிற்ப்போம்...

படித்துப் பாருங்கள்...மழைச் சாரல் உங்களை நனைக்கும், மனம் மெல்ல உருகும், கரையும்...

Tuesday, August 21, 2012

கம்ப இராமாயணம் - இராம நாமம்


கம்ப இராமாயணம் - இராம நாமம்


இராம நாமம் எவ்வளவு சிறந்தது ? அதை கூறுவோருக்கு என்ன என்ன பலன் கிடைக்கும் ?

கம்பர் சொல்கிறார்...

Monday, August 20, 2012

இராமானுஜர் நூற்றந்தாதி - பன்னப் பணித்த இராமானுசன்


இராமானுஜர் நூற்றந்தாதி - பன்னப் பணித்த இராமானுசன்


திருவரங்கத்து அமுதனார் எழுதியது இராமனுசர் நூற்று அந்தாதி.

பாடல்களை படிக்கும் போது, ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் மேல் இத்தனை மதிப்பும் மரியாதையும் தோன்றுமா என்று வியப்பு தோன்றுகிறது. 
இன்னோர் ஆச்சரியம் சில வரிகள் திருவாசகத்தில் இருந்து நேரே வந்த மாதிரி இருப்பது.

தனிப் பாடல் - சொல்லின் செல்வி


தனிப் பாடல் - சொல்லின் செல்வி


காதலித்தது ஒரு பெண்ணை. மணந்தது இன்னொருத்தியை. 
அவன் காதலியோ மிக மிக அழகானவள். மனைவி அவ்வளவு அழகில்லை.
அவளை நினைத்து ஏங்குகிறான் காதலன்....

தனிப் பாடல் - நெஞ்சை விட்டு போகாதவள்


தனிப் பாடல் - நெஞ்சை விட்டு போகாதவள் 


அவர்கள் காதலர்கள். இன்னும் பேசிக் கொள்ளவில்லை. எல்லாம் கண் ஜாடை தான்.

அவள் போகும் இடம் எல்லாம் அவனும் போகிறான். அவள் கண் படும்படி நிற்கிறான்.
 
அவளுக்குத் தெரியாமல் இல்லை. அவள் மனத்திலும் அவன் மேல் சினாதாய் ஒரு காதல் துளிர் விடுகிறது. 

ஒரு நாள் அவள் கோவிலுக்குப் போகிறாள். அவனும் வழக்கம் போல் அவளை தொடர்ந்து போகிறான்.
 
கோவில் வாசல் வந்து விட்டது.

அவனுக்கு கண் காட்டுகிறாள்....""இங்கேயே இரு, வந்து விடுகிறேன்" என்று கண் ஜாடை காட்டி விட்டுப் போகிறாள்.

அவள் கண்ணை விட்டுப் போய் விட்டாள்...நெஞ்சை விட்டுப் போகவில்லை....
 

Saturday, August 18, 2012

நள வெண்பா - பெண்மை அரசு


நள வெண்பா - பெண்மை அரசு 


பெண்மை அரசாளுகிறது. 

ரத, கஜ, துரக, பதாதி என்ற நால் வகை படை இருப்பது போல அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால் வகை படைகளோடு,

தன்னுடைய ஐந்து புலன்களும் அமைச்சர்கள் போல் வழி நடத்த,

காலில் அணிந்த கொலுசே முரசாக ஒலிக்க (அவள் வருவதை அறிவிக்கும்),

பத்தாதற்கு அவளுடைய கண்ணே வேல் படையாகவும், வாள் படையாகவும், 

அவள் நிலவு போன்ற முகமே வெண் கொற்ற குடையாகவும் 

அவள் ஆட்சி செய்கிறாள்...

Friday, August 17, 2012

ஆதிநாதன் வளமடல் - யார் கடவுள்?


ஆதிநாதன் வளமடல் - யார் கடவுள்?


ஆதிநாதன் வளமடல் என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப்பட்டது. கலிங்கத்துப் பரணி எழுதிய அதே ஜெயங்கொண்டார்தான்.

மிக மிக இனிமையான பாடல்களை கொண்டது. கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காதல் எல்லாம் கலந்தது. 

அதில் இருந்து ஒரு பாடல்...

காதல் வயப்பட்டர்வர்களுக்கு, தங்கள் காதலனையோ, காதலியையோ பார்க்க வேண்டும், அவர்களோடு பேச வேண்டும் என்ற ஆவல் இருக்கத்தான் செய்யும். நேரில் பார்க்க முடியாவிட்டால் phone , sms , chat என்று எப்படியாவது தொடர்பு கொள்ளத் துடிப்பார்கள். அந்த காலத்தில் இது எல்லாம் இல்லை. மேகத்தையும், புறாவையும், நிலவையும் தூது விட்டு கொண்டு இருந்தார்கள். 

அப்படி தூது விடுபவர்களுக்கு, யார் தூது கொண்டு செல்கிறார்களோ அவர்கள் தான் கடவுள் மாதிரி தெரிவார்கள். 

Thursday, August 16, 2012

வில்லி பாரதம் - விரல் எனும் சாளரம்


வில்லி பாரதம் - விரல் எனும் சாளரம்


அவளுக்கு அவன் மேல் மிகுந்த காதல். அவனை பார்க்க வேண்டும் என்று தீராத ஆசை.

பார்க்கவும் வெட்கம். 

அவள், அவனை பார்க்கும் போது, அவளை வேறு யாரவது பார்த்து விட்டால் ?...ஐயோ எவ்வளவு வெட்கக்கேடு என்று உள்ளாடும் பயம்..

அவனை பார்க்கும் போது கையால் தன் முகத்தை மூடிக் கொள்வாள்...பின்னும் ஆசை யாரை விட்டது ?

தன் விரல்களை மெல்ல விலக்கி, விரலிடுக்கின் வழியே அவனைப் பார்ப்பாள். 
அது ஏதோ ஜன்னல் (சாளரம்) கம்பிகளின் பின்னே இருந்து "சைட்"அடிப்பது மாதிரி இருக்கிறது....
 

Wednesday, August 15, 2012

அபிராமி அந்தாதி - துடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம்


அபிராமி அந்தாதி - துடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம்


நம் நெஞ்சம்தான் எத்தனை அழுக்குகளை கொண்டு இருக்கிறது. ஆணவம், பொறாமை, பயம், அறியாமை என்று எத்தனை எத்தனையோ அழுக்கு. 

பிள்ளைகள் அழுக்காய் இருந்தால் எந்த தாய் தான் பொறுப்பாள் ? தன குழந்தை குளித்து சுத்தமாக அழகாக இருக்க வேண்டும் என்று தானே எந்த தாயும் விரும்புவாள். 

அபிராமியும், நம் நெஞ்சத்து அழுக்கை எல்லாம் தன் அருள் என்ற வெள்ளத்தால் கழுவி சுத்தம் செய்கிறாள்.

பிரபஞ்சம் என்னும் சேற்றை கழிய வழி விட்டவா என்பார் அருணகிரி 

இந்த பிறவி, பாவ புண்ணியம் என்ற இரு வினையால் மீண்டும் மீண்டும் நாம் அறியாமலேயே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. தெரியாமலேயே நடப்பதால், இது "வஞ்சப் பிறவி". அபிராமி இந்த பிறவி சக்கரத்தை உடைக்கிறாள்.

நம் மனம் கல் போன்றது. எளிதில் இளகாது. மற்றவர்கள் துன்பத்தை கண்டு உருகுகின்றதா? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுகிறதா ? இல்லையே. 

பிறர் துன்பம் கண்டு உருகும் இளகிய மனதை அபிராமி தருகிறாள்.  அவள் திருவடி நம் மனதில் படிய வேண்டுமானால், மனம் கல் போல இருந்தால் எப்படி முடியும். வைரத்தை தங்கத்தில் பொருத்த வேண்டுமானால், தங்கத்தை கொஞ்சம் இளக்க வேண்டும். உருகிய தங்கத்தில்தான் வைரத்தை பதிக்க முடியும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரி

வஞ்சப் பிறவியை உடைத்து, நெகிழ்ந்து உருகும் மனதை கொடுத்து, அந்த மனதில் உள்ள அழுக்கை எல்லாம் தன் அருளால் கழுவிய அவளின் கருணையை என்ன என்று சொல்லுவது

கம்ப இராமாயணம் - உறையிட்ட தயிர் என பரந்த காதல்


கம்ப இராமாயணம் - உறையிட்ட தயிர் என பரந்த காதல்


இராமனை பார்த்த பின், சீதையை காதல் நோய் வாட்டுகிறது.

காதல், கண் வழி நுழைந்து உடல் எங்கும் பரவி நோய் செய்கிறது.

அது எப்படி என்றால்

பாலில் ஒரு துளி தயிரை உரை விட்டால் எப்படி அது எப்படி அந்த பால் முழுவதும் பரவி, அந்த பாலை எப்படி அடியோடு மாற்றி விடுகிறதோ அது போல.

தயிர் பரவுவது மட்டும் அல்ல...பாலின் குணத்தை மாற்றி விடுகிறது. அது 
போல் காதலும் மனதில் துளி விழுந்தாலும் நம்மை அடியோடு மாற்றி விடுகிறது.

அந்த அருமையான பாடல்...

Monday, August 13, 2012

இலக்கியத்தில் நகைச்சுவை - வால் எங்கே, வயிறு எங்கே ?


இலக்கியத்தில் நகைச்சுவை - வால் எங்கே, வயிறு எங்கே ?


கவி என்ற தமிழ் சொல்லுக்கு கவிஞர் என்றும், குரங்கு என்றும் இரண்டு அர்த்தம் உண்டு.

ராயர் சபையில் சில பேர் தங்களை "கவிகள்" என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர். அவர்களை பார்த்து காளமேகப் புலவர் கேட்கிறார் 

"நீங்கள் கவிகள் என்றால், உங்கள் வால் எங்கே, நீண்ட வயிறு எங்கே, முன்னால் இருக்கும் இரண்டு கால்கள் எங்கே, குழிந்த கண்கள் எங்கே..." என்று  கிண்டலாகக் கேட்கிறார்...



வால் எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன் இரண்டு
கால் எங்கே? உள்குழிந்த கண் எங்கே? சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்று இருந்தக்கால்

திருஅருட்பா - பாடவா, உன் பாடலை


திருஅருட்பா - பாடவா, உன் பாடலை 


எல்லோரும் சொல்கிறார்கள், நான் மிக இனிமையான பாடல்களை பாடுகிறேன் என்று.

அதை கேட்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. 

நானா பாடினேன் ? 

இறைவா, நீ என்பால் மகிழ்ந்து உன் அருளை என்மேல் சுரந்து, என் மூலம் இனிய பாடல்களையும், உயர்ந்த கருத்துகளையும் வெளி படுத்துகிறாய். 

அதை எல்லாம் இவர்கள் மறந்து விட்டார்கள்....

என்கிறார் வள்ளாலார்...

வில்லி பாரதம் - யார் அறிவார், ஆதி மூர்த்தி


வில்லி பாரதம் - யார் அறிவார், ஆதி மூர்த்தி


எல்லாம் அவன் செயல் என்று எல்லோரும் சொல்கிறோம்.
 நம்புரோமா ?

 நாம் தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைப்பு நமக்கு.

வனவாசம் முடிந்து, அஞ்ஞாத வாசமும் முடிந்து விட்டது. 

துரியோதனன் ஆட்சியை தருவதாய் இல்லை.

கிருஷ்ணன் தூது போவதாய் ஏற்பாடு. 

துரியோதனனிடம் என்ன கேட்க வேண்டும் என்று சர்ச்சை.

தர்மன் உட்பட எல்லோரும் ஒவ்வொன்று சொன்னார்கள்.

கடைசியில் சகாதேவன் முறை.

எல்லாம் கிருஷ்ணன் செயல் என்று உண்மையாக அறிந்தவன் அவன்தான்.

அவன் கிருஷ்ணனிடம் சொல்கிறான்....

"நீ தூது போனால் என்ன ? போகாவிட்டால் என்ன ?
துரியோதனன் நிலம் தந்தால் என்ன ? தராவிட்டால் என்ன ?
பாஞ்சாலி குழல் முடித்தால் என்ன ? முடியாவிட்டால் என்ன ?
என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு என்ன தெரியும்...எல்லாம் உனக்குத் தான் தெரியும்...தூது போவது என்று நீ முடிவு பண்ணி விட்டாய்...என்னிடம் ஏன் கேட்கிறாய்"

Sunday, August 12, 2012

நள வெண்பா - எரியம் இரவு


நள வெண்பா - எரியம் இரவு


அவள் தனித்து இருக்கிறாள். இரவு சுடுகிறது.

ஏன் என்று யோசிக்கிறாள்.

பகல் எல்லாம் இந்த சூரியன் இருக்கிறது. இராத்திரி எங்கே போகிறது ? இந்த இரவு சூரியனை விழுங்கி இருக்குமோ ? அதுனால தான் இப்படி இந்த இரவு கொதிக்கிறதோ?

இல்லைனா, என் மார்பில் இருந்து கிளம்பிய சூடு காரணமாய் இருக்குமோ ? 

ஒரு வேளை, இந்த நிலவு குளிர்ச்சிக்கு பதில் வெப்பத்தை தர ஆரம்பித்து விட்டதோ?

ஏன்னே தெரியலையே..இந்த இரவு இப்படி எரிகிறதே....

புற நானூறு - நாளாயினும் மாறாத விருந்தோம்பல்


புற நானூறு - நாளாயினும் மாறாத விருந்தோம்பல்


நாம் ஒரு வீட்டிற்கு விருந்தினராய் சென்றால், அவர்கள் உபசரிப்பு முதல் நாள் மாதிரி பின் வரும் நாட்களில் இருக்காது. 

நாள் ஆக ஆக உபசரிப்பின் அளவு குறைந்து கொண்டே வருவது இயற்கை.

அதுவும் நம்மோடு கூட நம் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்.

ஆனால், அதியமான் அரண்மனையில் முதல் நாள் உபசரிப்பு எப்படி இருந்ததோ அப்படியே எல்லா நாளும் இருக்குமாம்.

நாள் ஆக ஆக, பரிசு வாங்க சென்ற புலவர்களுக்கோ கொஞ்சம் பயம்.

எங்கே உபசரிப்போடு அனுப்பிவிடுவானோ ? பரிசு ஒண்ணும் கிடைக்காதோ என்ற சந்தேகம் வருகிறது. 

ஔவையார் சொல்கிறார், "ஒண்ணும் பயப்படாதீங்க...யானை தன் தும்பிக்கையில் எடுத்த உணவு அதன் வாய்க்கு போவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதி நீங்கள் அதியமானிடம் பரிசு பெறுவது..."

Saturday, August 11, 2012

அபிராமி அந்தாதி - நின் திருநாமங்கள் தோத்திரமே


அபிராமி அந்தாதி - நின் திருநாமங்கள் தோத்திரமே


எனக்கு என்ன தெரியும்?

சிவந்த உன் மலர் போன்ற திருவடியையை தவிர ஒன்றும் தெரியாது.

நான் பாடியாது எல்லாம் ஒரு ஒரு பாட்டா ?

இருந்தாலும், என் பாடல்களுக்கு நடுவில் அங்கங்கே உன் பெயரை இட்டு நிரப்பி இருப்பதால், அவையும் தோத்திரப் பாடல்கள் என்று பெயர் பெற்று விட்டன.

என்று 

எவ்வளவு அடக்கத்தோடு சொல்கிறார் அபிராமி பட்டர். 

குறுந்தொகை - பூ உதிரும் ஓசை


குறுந்தொகை - பூ உதிரும் ஓசை


அவளுக்குத் தூக்கம் வரவில்லை.

இரவெல்லாம் விழித்துக்கொண்டிருந்தாள்.

ஊரெல்லாம் தூங்கி விட்டது. 
எங்கும் நிசப்தம். 

அவன் இரவு வருவதாய் சொல்லி இருந்தான்.

அவள் மிக மிக உன்னிப்பாக அவன் வரும் காலடி சப்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டு இருந்தாள். 

அவள் வீட்டுக்கு வெளியே சின்ன தோட்டம்.

அந்தத் தோட்டத்தில் உள்ள செடியில் இருந்து மலர் உதிர்கிறது.

அந்த சப்தம் கூட அவளுக்கு கேட்கிறது. 

அவ்வளவு ஆர்வம். 

Friday, August 10, 2012

சித்தர் பாடல்கள் - எதைத்தான் இழுக்கிறார்களோ ?


சித்தர் பாடல்கள் - எதைத்தான்  இழுக்கிறார்களோ ?


சிவவாக்கியார் மூட பழக்க வழக்கங்களையும், அர்த்தமற்ற சமய சம்பிரதாயங்களையும் சாடியவர்.

அவர் தெய்வம் இல்லை என்று சொல்லவில்லை. தெய்வம் கல்லிலும், செம்பிலும் இல்லை, நமக்குள்ளேயே இருக்கிறது என்றார்.

ஊரில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றாய் கூடி, இருக்கிற வேலை எல்லாம் விட்டு விட்டு, ஒரு சின்ன செப்புச் சிலையை தேரில் வைத்து இழுத்துக் கொண்டு போகிறார்களே...இது எவ்வளவு அபத்தம்.

வேண்டுமானால் அந்த சிலையை இரண்டு மூணு பேர் மட்டும் எளிதாக தூக்கி கொண்டு போகலாமே...இது என்ன வெட்டி வேலை...இத்தூனுண்டு சிலையை அவ்வளவு பெரிய தேரில் வைத்து இழுத்துக் கொண்டு, எவ்வளவு நேரமும், முயற்சியும் வீணாகப் போகிறது. 

அதை விட்டு விட்டு இறைவனை உங்களுக்குள் தேடி காணுங்கள் என்கிறார். 


ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே 
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர் 
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை 
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே


Thursday, August 9, 2012

முத்தொள்ளாயிரம் - கூடு காத்த அன்னை


முத்தொள்ளாயிரம் - கூடு காத்த அன்னை


ஒரு வேடன் காடை என்ற பறவையை பிடிக்க அதனை துரத்தி சென்றான்.

அந்தப் பறவை அங்கு எங்கு அவனை அலைக்கழித்து கடைசியில் ஒரு மரப் பொந்தில் நுழைந்து கொண்டது.

வேடன் விடவில்லை. எப்படியும் வெளியே தானே வரணும்..வரும் போது பிடித்துக் கொள்ளாலாம் என்று இருந்தான்.

ஆனால் அந்தப் பறவையோ வேறு வழியில் சென்று விட்டது. அது போல....

அவளுக்கு அவன் மேல் ரொம்ப காதல். அவனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறாள்.

ஆனால் அவளுடைய தாயோ அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைக்கிறாள். 

அவளுக்குத் தெரியாது, அவள் பூட்டி வைத்தது வெறும் உடம்பை மட்டும் தான், மனம் எப்பவோ அவனிடம் சென்று விட்டது.

Wednesday, August 8, 2012

தேவாரம் - மருண்ட குரங்கு


தேவாரம் - மருண்ட குரங்கு 


திரு ஞானசம்மந்தர் சிறு வயதிலேயே ஞானம் பெற்று இறைவன் மேல் பாடத் தொடங்கியதாக வரலாறு.

சிறு வயதில் பாடினார் என்றால், அவர் பாடிய பாடலுக்கும் மாணிக்க வாசகர், நாவுக்கரசர் போன்றவர்கள் வயதான காலத்தில் பாடியதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?

இருக்கிறது.

அது ஒரு அழகிய கோயில்.

மாலை நேரம். 

வானெங்கும் மழை மேகங்கள்.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவன் மேல் பாடல்களை பாடிக் கொண்டே போகிறார்கள்.

கோவிலில் மாலை பூஜை தொடங்கும் நேரம்.

மணி அடிக்கிறது. தம  தம மத்தளம் முழங்குகிறது.

கோவிலில் நந்தவனத்தில் நிறைய மரங்கள் இருக்கின்றன.
குரங்கில்லாத மரமா ?

மணி சத்தையும், மத்தள சத்தத்தையும் கேட்ட குரங்குகள் இடி இடித்து மழை வரப் போகிறதோ என்று மரங்களில் உச்சியில் ஏறி பார்க்கின்றன.

ஞான சம்பந்தர் சின்ன பையன். இந்த குரங்குகள் இப்படி மரமேறி முகில் பார்ப்பது அந்த பாலகனின் மனதை கொள்ளை கொள்கிறது.

பாடல் பிறக்கிறது. கொஞ்சு தமிழ்...அருவி போல் சல சலக்கும் வார்த்தைகள்...

படித்துப் பாருங்கள், உங்கள் மனத்திலும் மழை அடிக்கலாம்....


சிலப்பதிகாரம் - காத்திருத்தலின் சுகம்


சிலப்பதிகாரம் - காத்திருத்தலின் சுகம்


அவனுக்காக அவள் காத்து இருக்கிறாள். இன்று அவன் வரும் நேரம்.

தலைக் குளித்து, விரித்த கூந்தலுக்கு அகில் புகை போடுகிறாள்.

அப்படி விரிந்த கூந்தல் புகையோடு கூடிய பின்னணியில் அவள் முகம் கரிய மேகங்களுக்கு பின்னே உள்ள நிலவு போல் தெரிகிறது.

அலை பாயும் கூந்தல், புகை சூழ்ந்த நேரம்...புன்னகை கொண்ட அவள் முகம்...குளிர் நிலவு போல் இருக்கிறது...

அந்த குளிர் முகத்தில் வில் போல இரண்டு புருவங்கள்...

அந்த புருவங்களுக்கு கீழே...அவன் பிரிவால் உறங்காமல் சிவந்த இரு விழிகள்...

அந்த விழிகள் மீன் கொடி கொண்ட மன்மதனின் வில்லை துறந்த அம்பு போல் என்னிடம் தூது வந்து என் பிரிவின் வேதனையை அதிகப் படுத்தியது.

அதே கண்கள் என்று அந்த வேதனைக்கு மருந்தாவும் உள்ளது .



அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகரும் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதர் அரி பரந்த செழும்கடைத் தூதும்
மருந்தும் ஆயது இம்மாலை…

அகில் உண விரித்த = அகில் புகை சூழ விரிந்த


அம் மென் கூந்தல் = அந்த மென்மையான கூந்தல்

முகில்நுழை = மேகத்தின் உள்ளே நுழையும்

மதியத்து = நிலவு போல

முரி = தோற்கச் செய்யும்

கரும் = கரிய

சிலைக்கீழ் = வில்லின் கீழ் (வில் போன்ற புருவம்)

மகரக் கொடியோன் = மீன் கொடி கொண்ட மன்மதன்

மலர்க்கணை = மலர் அம்புகள்

துரந்து = துரத்த

சிதர்  = சிதற, அலைபாயும் கண்கள்

அரி பரந்த = செவ்வரி ஓடிய (சிவந்த கண்கள், தூங்காத கண்களோ ?)

செழும்கடைத் தூதும் = என்னிடம் தூது வந்து என்னை துயர் படுத்தின

மருந்தும் ஆயது இம்மாலை…= அதே கண்கள் இப்போது, இந்த மாலை நேரத்தில் அந்த நோய்க்கு மருந்தாக உள்ளன

Tuesday, August 7, 2012

அபிராமி அந்தாதி - நெகிழும் புடவை


அபிராமி அந்தாதி - நெகிழும் புடவை



அபிராமி அந்தாதியை படிக்க வெறும் பக்தி மட்டும் போதாது. கொஞ்சம் காதல், கொஞ்சம் அன்பு, கொஞ்சம் நட்பு, எல்லாம் வேண்டும்.

அபிராமி கட்டிய புடவை தளர்ந்து, நெகிழ்ந்து இருக்கிறது. அவள் இடை மெலிந்தது. அதில் கட்டிய புடவை தளர்ந்து அசைகிறது.

நூல் போன்ற இடையாளை; சிவனின் இடையாளை...வஞ்சகர் நெஞ்சம் அடையாளை....

என்ன ஒரு அருமையான பாடல்...படித்து படித்து இரசிக்கும் படியான பாடல்....


நாலடியார் - அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்தவைகள்


நாலடியார் - அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்தவைகள்


அறியாத தெரியாத பருவத்தில் கண்டவர்களோடு சேர்ந்து நாம் சில நல்லது அல்லாத காரியங்களை செய்து இருக்கலாம்.

அந்த கெட்ட பழக்கங்கள் நம்மை விடாமல் தொடர்ந்தும் வரலாம். 

அவற்றில் இருந்து எப்படி விடு படுவது ?

எப்படி கெட்டவர்களோடு சேர்ந்த போது கெட்ட பழக்கம் வந்ததோ, அது போல் நல்லவர்களோடு சேர்ந்தால் நல்ல பழக்கம் தானே வரும்...அப்படி நல்ல பழக்கம் வரும்போது கெட்ட பழக்கங்கள் மறைந்து போகும்.

இரவில், புல்லின் மேல் பனி படர்ந்து இருக்கும். அதுவே காலையில் சூரியன் வந்தவுடன், மறைந்து போய் விடும். அது போல கெட்ட பழக்கங்கள் நல்லவர்கள் தொடர்பால் நீங்கி விடும். 

Monday, August 6, 2012

ஐங்குறுநூறு - அலையும், அலையும் மனதும்


ஐங்குறுநூறு - அலையும், அலையும் மனதும் 


இரவு நிசப்தமாக இருக்கிறது...குளிர்ந்த காற்று சிலு சிலுவென்று தலை கலைத்துப் போகிறது....தூரத்தில் கடல் அலையின் சப்தம்...

ஒருவேளை இந்த கடலுக்கும் என்னை போல் தூக்கம் வரவில்லையோ ? அந்த கடலின் இதயத்தையும் யாரவது கொண்டு போய் இருப்பார்களோ, என் இதயத்தை அவள் கொண்டு போன மாதிரி...

Sunday, August 5, 2012

அபிராமி அந்தாதி - எல்லா துன்பங்களும் விலக


அபிராமி அந்தாதி - எல்லா துன்பங்களும் விலக


அபிராமி பட்டருக்கு அபிராமியின் மேல் உள்ளது பக்தியா  காதலா என்று இனம் பிரித்து சொல்வது கடினம்.

அபிராமி ஒரு கடவுள் என்பதை மறந்து, ஏதோ ஒரு காதலியிடம் பேசுவது போல் இருக்கிறது அவரின் பாடல்கள்.

"நான் பார்க்கும் இடம் எல்லாம், அபிராமி, உன் பாசாங்குசமும், உன் மேனியில்உள்ள புது மலர்களும், உன் கையில் உள்ள கரும்பும், என் துன்பம் எல்லாம் தீர்க்கும் உன் அழகிய மேனியும், உன் சிறிய இடையும், குங்குமம் தாதன் உன் மார்பும், அதன் மேல் தவழும் முத்து மாலையுமே" என்று பார்க்கும் இடம் தோறும் அவளையே பார்த்தார் அபிராமி பட்டர்.

இந்த அளவுக்கு ஒரு பெண் தெய்வத்தை யாரும் இரசித்து இரசித்து தமிழில் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு அன்யோன்யியம்....

கம்ப இராமாயணம் - தீமையா ? நன்மையா ?


கம்ப இராமாயணம் - தீமையா ? நன்மையா ?


கூனியின் போதனையால் கைகேயி மனம் மாறினாள். அவள் மனம் மாறியதற்கு காரணம் கூனியின் போதனை மட்டும் காரணம் அல்ல...

"அரக்கர்களின் பாவமும், தேவர்களின் தவமும் ஒன்று சேர, தன் அருள் மனம் மாறி, இந்த உலகம், வரும் காலம் எல்லாம் இராமனின் புகழ் என்னும் அமுதினை பருக" வழி செய்தாள் என்கிறான் கம்பன். 

Friday, August 3, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ள மனம் தவிர்த்தே


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ள மனம் தவிர்த்தே 


சில சமயம் சிறந்த பக்தர்களுக்குக் கூட இறைவன் மேல் சந்தேகம் வரும்..."கடவுள் என்று ஒருவன் இருந்தால் எனக்கு ஏன் இவ்வளவு துன்பம் வருகிறது...நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்..ஒருவேளை இந்த கடவுள், வேதம் எல்லாம் பொய் தானோ" என்று சந்தேகம் வரும். 

கடவுளை நம்பாத நாத்திக வாதிகள் கூட சில சமயம் "ஒரு வேளை கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரோ" என்ற சந்தேகம் வரலாம்.

சந்தேகம் யாருக்கு வந்தாலும், அவனை. வள்ளலே, மணி வண்ணனே என்று வெளிக்கு சொல்லி வைத்துக் கொள்வார்கள். இது எல்லாம் கடவுளுக்குத் தெரியாதா என்ன ?

"நானும் அப்படித்தான் இருந்தேன்...உன்னை உள்ளன்போடு புகழாமல், வெளிக்கு புகழ்ந்து உன்னையும் ஏமாற்றினேன்...பின், என் கள்ள மனம் தவிர்த்து, உன்னை கண்டு கொண்டேன், இனி உன்னை விடமாட்டேன்" என்கிறார் நம்மாழ்வார்...


கம்ப இராமாயணம் - மனக் குயிலா ? மாடக் குயிலா ?


கம்ப இராமாயணம் - மனக் குயிலா ? மாடக் குயிலா ?


முதன் முதலாக காதலனையோ காதலியையோ பார்த்து காதல் வயப்படவர்களுக்குத் தெரியும்..."அட இந்த பெண்ணை (ஆணை) தான் இத்தனை நாளாய் நான் மனத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன்...இவளுக்காகத்தான் (இவனுக்காத்தான்) இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்" என்ற உணர்வு...

சீதையை அருகில் நேரில் பார்க்கிறான் இராமன். 

அவனால் நம்ப முடியவில்லை. 

உப்பரிகையில் பார்த்த சீதை ஏதோ கனவு மாதிரி இருந்தது அவனுக்கு. 

நேரில் அவளைப் பார்த்தவுடன், "அட, இவள் என் மனதில் மட்டும் தான் இருந்தாள் என்று நினைத்தேன், மனதுக்கும் வெளியேவும், நிஜத்திலும் இருக்கிறாளா" என்று வியக்கிறான்...


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கடவுளைக் கண்டேன்


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கடவுளைக் கண்டேன்


கடவுள் இருக்கிறா அல்லது அது வெறும் ஒரு கற்பனையா என்ற வாதம் இருந்து கொண்டே இருக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்றால், அவரை யாரவது பார்த்து இருக்கிறார்களா ? பார்த்தால் என்ன பார்த்தார்கள் ?

பார்த்தவர்கள் கூட, தைர்யமாக 'நான் கடவுளை பார்த்தேன்' என்று சொல்வார்களா ?

பேயாழ்வார் சொல்கிறார்..ஒரு முறை அல்ல ஐந்து முறை...

Thursday, August 2, 2012

கம்ப இராமாயணம் - கைகேயி எதனால் மனம் மாறினாள் ?


கம்ப இராமாயணம் - கைகேயி எதனால் மனம் மாறினாள் ?


கூனி ஏதேதோ சொல்லி கைகேயியின் மனத்தை மாற்ற முயற்சி செய்தாள். ஒன்றும் பலிக்கவில்லை.

கடைசியில் அவள் ஒன்று சொன்னாள். அதனால கைகேயி மனம் மாறினாள்.

அது என்ன ஒன்று ?

"இராமன் பட்டம் சூட்டிய பின், உன்னிடம் இல்லை என்று வருபவர்களுக்கு நீ எப்படி உதவி செய்வாய் ?

கோசலையிடம் கேட்டு வாங்கித் தருவாயா ?
இல்லையென்றால், அவர்களுக்கு உதவி செய்யாமல் வெறும் கையேடு அனுப்பி விடுவாயா ?

இல்லை உதவி செய்ய முடியவில்லையே என்று வெட்கப்பட்டு உன் உயிரை விட்டு விடுவாயா ?"

என்று கூனி கைகேயியை கேட்டாள்.

தன்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போய் விடுமோ என்ற நினைப்பு கைகேயியை மனம் மாறச் செய்தது.....

Wednesday, August 1, 2012

கம்ப இராமாயணம் - கூனி அறிமுகம்


கம்ப இராமாயணம் - கூனி அறிமுகம்


முதன் முதலில் கூனி அறிமுகம் ஆகும் இடம்.

அவள் எப்படி தோன்றினாள் ?

இன்னல் செய்யும் இராவணன் இழைத்த தீமை போல் அவள் தோன்றினாள் என்பான் கம்பன்.

இராவணன் என்ற பாத்திரம் அவள் கூனி தோன்றும் இந்த இடம் வரை காப்பியத்தில் அறிமுகபடுத்த படவில்லை.

நேரடியாக சொல்லாவிட்டாலும், கம்பன் ஏதோ சூசகமாக சொல்வதாகப் படுகிறது. 

அவன் செய்த தீமைகளுக்கு இணையாக இன்னொரு தீமை புறப்பட்டு விட்டது என்பது போல் ஒரு அர்த்தம் தொனிக்கிறது.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல், தீமையை தீமையால் எடுக்க கம்பன் ஒரு அச்சாரம் தருவது போல இருக்கிறது.

அவள் எவ்வளவு கொடுமைக்காரி  என்பதை நினைத்துக் கூட பார்க்க 
முடியாதாம்...அவளளவு கொடுமைகளை மனத்தில் கொண்டவள்...