கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன்
அனுமன் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான்.
அவனுக்கு துக்கம் தாங்கவில்லை.
"என் தோளின் மேல் ஏறிக்கொள், இப்போதே உன்னை இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்..மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்றான்.
சீதை பதில் சொல்கிறாள்....
"துன்பம் தரும் விலங்குகளைப் போல உள்ள இந்த இலங்கை எம்மாத்திரம் ?
எல்லையில்லா இந்த உலகம் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன்.
நான் அப்படி செய்தால், அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று நினைத்து அந்த எண்ணத்தை கூட குற்றம் என்று நினைத்து தூக்கி எரிந்து விட்டேன்" என்றாள்
நினைத்துப் பாருங்கள்.
ஒரு வேளை சீதை அவளே இராவணனை எரித்து விட்டு, நேரே இராமன் முன் வந்து நின்றால், எப்படி இருந்திருக்கும்?
இராமனை பற்றி இந்த உலகம் என்ன நினைக்கும் ?
கட்டிய மனைவியை எதிரியிடம் இருந்து காப்பாற்றத் தெரியாதாவன் என்று அல்லவா நினைக்கும்?
அந்த நினைப்புக்கு இடம் தரா வண்ணம் சீதை பொறுமை காத்தாள்.
அந்தப் பாடல்