Showing posts with label Khandar Alangaaram. Show all posts
Showing posts with label Khandar Alangaaram. Show all posts

Wednesday, April 10, 2013

கந்தர் அலங்காரம் - இறை தேடல்


கந்தர் அலங்காரம் - இறை தேடல் 


இறைவனை தேடுவது ரொம்ப கடினமா ? இல்லவே இல்லை என்கிறார் அருணகிரிநாதர். இன்னும் சொல்லப் போனால் உள்ளதிர்க்குள் மிக எளிமையான வேலை என்கிறார்.

ரொம்ப ஒண்ணும் செய்ய வேண்டாம்...."கந்தா" என்று சொன்னால் போதும். உங்களுக்கு கந்தன் வேண்டாம் என்றால் உங்கள் கடவுளை சொல்லுங்கள். அவ்வளவுதான்.

ஹா...அது எப்படி...அருணகிரி வேறு என்னவெல்லாமோ தவம் செய்து இருப்பார், பூஜை செய்து இருப்பார்....இல்லாவிட்டால் சும்மா கந்தா என்றால் பலன் கிடைக்குமா ?

அவரே சொல்கிறார் .... இப்படி கந்தா என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் அறியேன் என்கிறார்.

சரி, கந்தா என்று அவன் நாமம் ஜெபிப்போம்....எப்ப பலன் கிடைக்கும் ?

உடனே...கை மேல் பலன் என்கிறார் அருணகிரி. பிற்காலத்தில், அடுத்த பிறவியில் என்று காத்திருக்க வேண்டாம்....கை மேல் பலன்.

உடனடி பலன் மட்டும் அல்ல....நீண்ட நாள் பலனும். நீண்ட நாள் என்றால் எவ்வளவு நாள் ?  ஒரு ஒரு வாரம்,, மாதம் , வருடம் ? எவ்வளவு நாள் ?

நீங்கள் எப்போது சொல்கிறீர்களோ அப்போதில் இருந்து நீங்கள் மரணம் அடையும் வரை அதன் பலன் இருக்கும்.

நீங்கள் கற்ற கல்வி மறந்து போய் விடும். பத்தாம் வகுப்பில் படித்த குரல் ஞாபகம் இருக்கிறதா ? கல்லூரியில் படித்த பாடங்கள் நினைவு இருக்கிறதா ? கல்வி  மறந்து கொண்டே வரும். மரணத் தருவாயில் ஒன்றும் ஞாபகம் இருக்காது.

உங்கள் சுற்றம், ஊர் பொது மக்கள் யாரவது உங்களை மரணத்தில் இருந்து காக்க முடியுமா ? கிட்ட இருந்து அழலாம்...வேறு என்ன செய்ய முடியும் ?

கல்வியை விடுங்கள், சுற்றமும் நட்பையும் விடுங்கள்....உங்கள் புலன்கள் உங்களுக்கு துணை செய்யுமா ?

நாக்கு குழறும், கண் பஞ்சடையும், காது கேக்காது...இப்படி உங்கள் புலன்களே உங்களை வஞ்சனை செய்யும். எவ்வளவு செய்து இருப்பீர்கள் இந்த புலன்களுக்கு....கடைசி நேரத்தில் உங்களை கை விட்டு விடும்.

எல்லாம் உங்களை விட்டு விட்டு போய் விடும். எதுவும் உதவி செய்யாது...ஒன்றே ஒன்றைத் தவிர...அவன் நாமத்தை தவிர.

பாடல்  

மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப்
பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே.

சீர் பிரித்த பின்

மை வரும் கண்டத்தர் மைந்தா கந்தா என்று வாழ்த்தும் இந்த 
கை வரும் தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய் 
பை வரும் கேளும் பதியும் கதற பழகி நிற்கும் 
ஐவரும் கை விட்டு மெய் விடும் போது உன் அடைக்கலமே 



பொருள்


Friday, May 4, 2012

கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கோயில்கள் காலப் பெட்டகங்கள்.

அதன் பிரகாரங்களில் எத்தனையோ பேர் கொட்டிய கவலைகள், கனவுகள், பாவ மன்னிப்புகள் சிதறிக் கிடக்கின்றன.

அங்குள்ள சிற்பங்கள் எத்தனை பேரை பார்த்திருக்கும்.

எத்தனை பிரார்த்தனைகளை, முணுமுணுப்புகளை கேட்டிருக்கும், எத்தனை சந்தோஷங்களை, துக்கங்களை கண்டிருக்கும்.

மனிதனின் கடைசி நம்பிக்கை கோயில்.

'உன் பற்று அன்றி ஒரு பற்றிலேன் இறைவா கச்சியேகம்பனே' என்று எல்லாம் விட்டு அவனே சரண் என்று அடையும் இடம் கோயில்.

திருசெந்தூர் கோயில்.

கடல் அலை தாலாட்டும் கோயில்.

கோயிலுக்கு இரண்டு கிலோ மீட்டர் வரை இங்கே ஒரு கோயில் வரப் போகிறது என்று சொன்னால் நம்ப முடியாது.

அருணகிரி நாதர் திரு செந்தூர் கோயிலில் உள்ள முருகனைப் பார்க்கிறார்.

அழகு அப்படியே அவரை கொள்ளை கொள்கிறது. வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.

அப்படி ஒரு அழகு. பார்த்து கொண்டே இருக்கலாம்.

எவ்வளவு பார்த்தாலும் போதவில்லை.

அடடா , இந்த அழகைப் பார்க்க இரண்டு கண்ணுதானே இருக்கு...

இன்னும் கொஞ்சம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஆதங்கப் படுகிறார்...

Sunday, April 29, 2012

கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


இருக்கப் போறதே கொஞ்ச நாள். அதில் படிக்க ஒதுக்கும் நேரம் மிக மிக அற்பமான நேரம். அதிலும் கவிதை படிக்க கிடைக்கும் நேரம் அரிதிலும் அரிது. அந்த சிறிய நேரத்திலாவது நல்ல கவிதை படியுங்கள் என்கிறார் அருணகிரி நாதர்....போகும் வழிக்கு புண்ணியம் தேடுங்கள் என்கிறார் இந்தப் பாடலில்....

Tuesday, April 10, 2012

கந்தர் அலங்காரம் - தலை எழுத்தை அழிக்க



 
இந்த தலை எழுத்து அப்படின்னு சொல்றாங்களே அத அழிக்க எதாவது eraser இருக்கா?

அதை எப்படி அழிப்பது ?
 
இருக்கே ... அதுக்கும் ஒரு eraser இருக்கு அப்படின்னு அருணகிரிநாதர் சொல்றார்

அது .....

கந்தர் அலங்காரம் - Quality Stamp


முருகனுக்கு பல பெயர்கள் உண்டு.

அதில் கந்தன் என்று பெயர் மிகச் சிறப்பு வாய்ந்தது.

ஏறக் குறைய அனைத்து முருகன் பற்றிய இலக்கியங்களும் கந்தன் பெயரிலே அமைந்துள்ளன.

கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் கலி வெண்பா, கந்த புராணம், கந்தர் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், என்று பல நூல்கள் கந்தன் என்ற பெயரிலேயே அமைந்துள்ளன.

கந்தர் அலங்காரம்.

கந்தனை அலங்காரம் பண்ணிப் பார்க்கும் பாடல்கள். அதில் இருந்து ஒரு இனிய பாடல் .....

கந்தர் அலங்காரம் - சேற்றில் ஆடிய குழந்தைகள்


 

நம் குழந்தைகள் எங்காவது விளையாடச் செல்லும்.

சில சமயம் கீழே விழுந்து சேற்றை வாரி பூசிக்கொண்டு வந்து நிற்கும்.

அப்போ, தாய் என்ன செய்வாள்?

நிறைய தண்ணிய விட்டு குளிக்க வைப்பாள்.

அந்த சேறு போக வேண்டும் அல்லவா ?
 
 
ஒரு குழந்தையாய் இருந்தால் பக்கெட்டில் தண்ணி பிடித்து குளிபாட்டிவிடலாம்.

நிறைய இருந்தால் ?
 
இறைவனுக்கு எத்தனை குழந்தைகள் ?

ஒண்ணு மாத்தி ஒண்ணு இப்படி அழுக்கா வந்து நிக்குது.

எனவே அவன் தலையின் மேலேயே ஆற்றை வைத்து கொண்டு இருக்கிறான். நம் சேற்றை கழுவ அவன் ஆற்றை வைத்து கொண்டு இருக்கிறன்.
 
அது என்ன சேறு ? அருணகிரி நாதர் சொல்லுகிறார்....