Showing posts with label raaman. Show all posts
Showing posts with label raaman. Show all posts

Tuesday, May 8, 2012

கம்ப இராமாயணம் - இனி துன்பம் இல்லை


கம்ப இராமாயணம் - இனி துன்பம் இல்லை


இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது. 

சூரியன் வந்த பின், இருள் இருந்த இடம் தெரிவதில்லை. 

அது போல

இராமா, 

இதுவரை எப்படியோ தெரியாது, 

ஆனால் நீ வந்த பின், இந்த உலகில் துன்பம் என்று ஒன்று இருக்க முடியாது என்கிறான் விஸ்வாமித்திரன்.

எங்கே ?

இராமன் பாதத் துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்.
மிக மிக அருமையான பாடல், ஆழமான பாடலும் கூட....

Monday, May 7, 2012

சிலப்பதிகாரம் - இராமன் ஏன் கானகம் போனான்?


சிலப்பதிகாரம் - இராமன் ஏன் கானகம் போனான்?


அசதி ஆடல் என்று தமிழ் பக்தி இலக்கியத்தில் ஒரு பகுதி.

இறைவன் மேல் அதீத அன்பின் காரணமாக அவனை கிண்டல் செய்வது, கேலி செய்வது, நண்பன் போல் நினைத்து பாடுவது என்று உண்டு.

சுந்தரர் அப்படி பாடியவர்.

காளமேகம் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.

இரட்டை புலவர்கள் பாடி இருக்கிறார்கள் ('கூறு சங்கு கொட்டோசை அல்லாமால் சோறு கண்ட மூளி யார் சொல்' என்று சிவன் கோவிலில் கொட்டு சப்தம் தான் இருக்கிறது, சோறு இல்லை என்று கேலி செய்து பாடி இருக்கிறார்கள்).

இராமன் கானகம் போனது மிக மிக துக்ககரமான ஒரு நிகழ்ச்சி. 

உலகமே அழுதது என்பான் கம்பன். 

தாயின் வயிற்றில் இருந்த கரு அழுதது என்பான்.

அந்த நிகழ்ச்சியை ஒரு கேலிப் பாட்டாக பாடுகிறார் இளங்கோ அடிகள். 

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், சிலப்பதிகாரம் கம்ப இராமாயணத்திற்கு முன்னால் எழுதப்பட்ட காப்பியம்.

"இராமா, நீ ஏன் காட்டிலும் மேட்டிலும் கல்லும் முள்ளும் குத்த கானகம் போனாய் தெரியுமா ?

அன்று, மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, அவனை ஏமாற்றி, ஓரடியால் பூவுலகும், மற்றோரடியால் மேலுலகும் அளந்து பின் மூன்றாவது அடி அவன் தலை மேலேயே வைத்து, உன்னை நம்பி நீயே அளந்து எடுத்துக்கொள் என்றவனை நீ ஏமாற்றினாய்..அந்த பாவம் இன்று நீ, இந்த மண் எல்லாம் கால் நோவ நடக்கிறாய்" என்று இளங்கோ அடிகள் பாடுகிறார். 

(ஏன் கல்லும் முள்ளும் குத்திற்று? 

ரதன் பாதுகையை வாங்கி கொண்டு சென்று விட்டான். 

காலணி இல்லை.)


அந்தப் பாடல் 

Saturday, May 5, 2012

கம்ப இராமாயணம் - மனத்தால் அளந்தவள்


கம்ப இராமாயணம் - மனத்தால் அளந்தவள்


இராமனை கானகம் அனுப்பிவிட்டு திரும்பி வந்த குகன் ஒருபுறம் நிற்கிறான்.

மறுபுறம் பரதன், கோசலை, சுமித்தரை, கைகேயி நிற்கிறார்கள். 

முதலில் பரதன் மேல் சந்தேகப் பட்ட குகன் பின் அவனை "ஆயிரம் இராமர் நின் கேழ்வர் ஆவரோ" என்று பரதனை பாராட்டுகிறான்.

விதவை கோலத்தில் மூன்று பெண்கள், அன்பே உருவான மகன் பரதன், குகன்...எல்லோரும் ஒரு புள்ளியில். 

உணர்ச்சிகளின் குவியலான இடம்.

குகன் கைகேயியை பார்த்து "ஆர் இவர்" என்று கேட்கிறான்.

எப்படி ?

Saturday, April 28, 2012

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?


சீதையை பிரிந்து இராமன் இருக்கிறான். உடலும், உள்ளமும் சோர்ந்து போய் இருக்கிறான். அப்படி சோர்ந்து போன சமயம்,

இராமனைப் பார்த்தால் ஏதோ உயிர் இல்லாதாவன் மாதிரி தோன்றுகிறது.

அத்தனை அயர்ச்சி. சுக்ரீவன் இராமனை தேற்றுகிறான்.

கொஞ்சம் தேறுதல் அடைகிறான். உயிர் வந்த மாதிரி இருக்கிறது. சற்று நேரம் கழித்து மீண்டும் சோர்வு...ஏதோ இராமன் ஒவ்வொருமுறையும் உயிர் இழந்து மீண்டும் பெற்றது மாதிரி தோன்றுகிறது...

எத்தனை முறை தான் அவனுக்கு உயிர் போய் வருமோ ?

Sunday, April 22, 2012

கம்ப இராமாயணம் - ஐயோ ! என்னே இவன் அழகு !


கம்ப இராமாயணம் - ஐயோ ! என்னே இவன் அழகு !


இராமனின் அழகை வருணிக்க முடியாமல் திணறுகிறான் கம்பன். 

Wednesday, April 18, 2012

கம்ப இராமாயணம் - இன்று போய் நாளை வா


கம்ப இராமாயணம் - இன்று போய் நாளை வா


யுத்தத்தில் நிராயுதபாணியாக நிற்கிறான் இராவணன்.

இராமன் நினைத்திருந்தால் அவனை கொன்றிருக்கலாம். அவனுக்கு அறிவுரை சொல்கிறான்.

அறத்தின் துணை இன்றி வெறும் படை பலத்தால் யாரும் வெல்ல முடியாது என்று பலப் பல அறிவுரைகள் கூறுகிறான்.

கடைசியில், "இதை எல்லாம் நீ கேட்கவில்லை என்றால், இன்று போய் போருக்கு நாளை வா" என்றான்...

Sunday, April 15, 2012

கம்ப இராமாயணம் - திகைக்காத இராமன்


கம்ப இராமாயணம் - திகைக்காத இராமன்


இராமன் முடி சூட வருகிறான்.

பட்டத்து இளவரசன்.

அயோத்தி மாநகரமே விழாக் கோலம் பூண்டு இருக்கிறது.

எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.

கைகேயியை பார்க்கிறான்.

அவள் அவனை கானகம் போகச் சொல்லுகிறாள்.

சொன்ன அந்த கணத்தில் இராமனுக்கு எப்படி இருந்திருக்கும் ?

ஒரு வினாடி திகைதிருப்பானா ? பின் சுதாரித்து இருப்பானோ ?

ஒரு துளியாவது வருத்தம் இருந்திருக்குமா ? நான் ஏன் காட்டுக்குப் போக வேண்டும் என்று கேட்டு இருப்பானா ?

ஒரு வினாடி இராமனின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கம்பனைத் தவிர யாராலும் அந்த இடத்தை இவ்வளவு அழகாக சொல்லி இருக்க முடியாது.
.
இராமனின் முகம் அவள் சொன்னதை கேட்பதற்கு முன்னும், கேட்ட பின்னும் தாமரை மலர் மாதிரி இருந்ததாம், கேட்ட அந்த ஒரு வினாடி தாமரை அந்த நொடியில் மலர்ந்த மாதிரி இருந்ததாம்.


-----------------------------------------------
இப் பொழுது, எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்டஅப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!

---------------------------------------------------

இப் பொழுது = இப்போது, அது நடந்து முடிந்த எத்தனையோ ஆண்டுகளுக்கு பின், ஆற அமர யோசித்து இப்போது

எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? = எம் போன்ற கவின்ஞர்களுக்கு சொல்லுவது எளிதா ? இல்லவே இல்லை.

யாரும் செப்ப அருங் குணத்து இராமன் = யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு சிறந்த குணங்களை கொண்ட இராமனின்

திருமுகச் செவ்வி நோக்கின் = செம்மையான திரு முகத்தை நோக்கினால்

ஒப்பதே முன்பு பின்பு = அந்த வாசகத்தை கேட்பதற்கு முன்னும் பின்னும் தாமரையை ஒத்து இருந்தது

அவ் வாசகம் உணரக் கேட்ட அப் பொழுது = ஆனால் அந்த வாசகத்தை கேட்ட அந்த ஒரு கணத்தில்


அலர்ந்த செந்தா மரையினை வென்றது அம்மா! = அப்போது தான் மலர்ந்த செந்தாமரையை மிஞ்சி நின்றது அவன் முகம்



அந்த வாசகத்தை கேட்ட உடனே, முகம் மலர்ந்ததாம். மலர்ந்த செந்தாமரையை விட இன்னும் சிறப்பாக இருந்ததாம்.


Thursday, April 12, 2012

கம்ப இராமயாணம் - இறைவனும் பக்தனும்





இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு மிக நுணுக்கமானது.

அதை அருகில் இருப்பவர்கள் கூட அறிந்து கொள்ள முடியாது. 

பக்தன் இறைவனை அறிவான்.

இறைவன் பக்தனை அறிவான்.

இதை பக்தன் வெளியே சொன்னாலும் மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பக்தனை விடுங்கள். இறைவனே சொன்னாலும் புரியாது.
 
இராமயணத்தில் ஒரு இடம். அனுமன் இராமனைப் பார்க்கிறான். அனுமனுக்கு இராமன் யார் என்று தெரிகிறது. இராமனுக்கும் அனுமனைப் புரிகிறது. ஆனால் அவர்கள் இடையே இருந்த லக்ஷ்மணனுக்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.

அந்த இடம்.....