Showing posts with label பொம்மலாட்டம். Show all posts
Showing posts with label பொம்மலாட்டம். Show all posts

Sunday, June 3, 2012

திருவாசகம் - பொம்மலாட்டம்


திருவாசகம் - பொம்மலாட்டம்


இந்த உலகம், வான், மண், காற்று, ஒளி எல்லாவற்றையும் பார்க்கும் போது இதை எல்லாம் யாரோ படைத்து இருப்பார்களோ என்று மனதிற்கு தோன்றுகிறது.

ஆனால், அறிவை கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் அப்படி யாரும் இருப்பதாய் தோன்றவில்லை.

என்ன தான் செய்வது? அவன் உண்மையா? அல்லது உண்மை இல்லாதவனா? 

இரண்டும் தான் என்கிறார் மணி வாசகர்.

பொம்மலாட்டம் நடக்கிறது. அறியாத குழந்தைகளுக்கு ஏதோ அந்த பொம்மைகள் தானே எல்லாம் செய்வது போல தோன்றும்.

அறிந்த பெரியவர்களுக்குத் தெரியும் அந்த பொம்மைகளை ஆட்டுவிப்பது வேறு யாரோ என்று.

சில சமயம் பொம்மைகளே நாம் தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்....

இது என் சொத்து, என் மனைவி, என் பிள்ளைகள் என்று மனிதர்கள் நினைப்பது அப்படிதான் என்கிறார் மணி வாசகர்...