Showing posts with label sithar paadalgal. Show all posts
Showing posts with label sithar paadalgal. Show all posts

Friday, May 22, 2020

சித்தர் பாடல் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி

சித்தர் பாடல் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி


நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற தலைப்பில் திரு. ஜெயகாந்தன் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது நான் படிக்கும் போது 12 வகுப்பு, பாட திட்டத்தில் இருந்தது.

பாடல் என்னமோ எளிய பாடல் தான்.

பாடல்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

பொருள்

தோண்டி என்றால் மண் அல்லது தண்ணீர் கொண்டு வரும் ஒரு சிறு மண் பாத்திரம். பொதுவாக அதில் தண்ணீர் கொண்டு வருவார்கள்.

கஷ்ட்டப்பட்டு ஒரு மண் கலயத்தை பெற்று, அதை சரியாக கையாளாமல் கீழே போட்டு உடைத்து விட்டான் அந்த ஆண்டி.

கடுவெளி சித்தரின் பாடல்.

ஆண்டி என்பது நம் உயிர். ஆன்மா.

குயவன், இறைவன்.

தோண்டி, இந்த உடம்பு.

இந்த உடம்பை பெற்று என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?

சாப்பிடுகிறோம். தூங்குகிறோம். பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறோம். அவர்களை வளர்க்கிறோம். டிவி பார்க்கிறோம். என்று ஒரே ஆட்டமும், பாட்டமுமாக இ இருக்கிறது.

இப்படி கொஞ்ச நாள் போனால், இந்த உடம்பு விழுந்து விடும். அதாவது, மண் பாண்டம் உடைந்து விடும்.

இந்த உடம்பை பெற்றதன் நோக்கம் என்ன என்று அறிந்தோமா?

அல்லது, அப்படி எல்லாம் ஒரு நோக்கமும் இல்லை. இருக்குற வரை ஆண்டு அனுபவித்துவிட்டு போவதுதான்  அதன் நோக்கமா?

இந்த பிளாக் வாசிப்பது, whatsapp படிப்பது, அதை அப்படியே forward செய்வது, டிவி,  போன்றவற்றிற்கு மேலாக ஏதாவது உருப்படியாக செய்ய முடியுமா?

இந்த உடம்பை இன்னும் கொஞ்ச உயர்ந்த வழியில் ஈடுபடுத்த முடியுமா? அல்லது இவ்வளவுதானா?

கடைசியில் போட்டு உடைத்துவிட்டுப் போக வேண்டியதுதானா?

போட்டு உடைத்தால் கூட பரவாயில்லை ..கூத்தாடும் போது கை தவறி விழுந்து  உடைந்து விட்டால்?

அகாலத்தில் உடைந்து போனால்?

யோசிப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_22.html

Thursday, April 18, 2013

சித்தர் பாடல் - அறம் செய்ய


சித்தர் பாடல் - அறம் செய்ய 


அறம் செய்வது, பசித்தவருக்கு அன்னம் இடுவது, ஏற்பவருக்கு இடுவது என்பது தமிழ் இலக்கியத்தில் எங்கும் பரவிக் கிடக்கிறது.

எங்காயினும் வரும் ஏற்பவருக்கு இட்டது என்பார் அருணைகிரி

பொருள் கொடுக்க முடியாவிட்டால் நாலு நல்ல சொல்லாவது தாருங்கள் என்பார் திருமூலர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் பற்றி வள்ளுவரும் கூறுகிறார்

நாம் ஏன் தானம் செய்வது இல்லை ? அல்லது தான தர்மம் செய்வது ஏன் கடினமாக இருக்கிறது ?

இந்த பொருள் எல்லாம் என்னுடையது, நான் சம்பாதித்தது என்ற எண்ணம் இருக்கும் போது கொடுக்கும் மனம் வராது.

இவை எனக்கு என்னை விட ஒரு பெரிய சக்தியால் தரப் பட்டது என்று நினைத்தால் கொடுப்பது எளிதாகும்.

இருந்த சொத்தை எல்லாம் ஒரே இரவில் தானம் செய்த பட்டினத்தார் சொல்கிறார் ....

பாடல்


பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை  பிறந்துமண்மேல் 
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில் 
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது 
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.

சீர் பிரித்த பின்

பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை பிறந்து மண் மேல் 
இறக்கும் போது கொண்டு போவது இல்லை இடை நடுவில் 
குறிக்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது 
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே 

(குலாமர்  = உலோபி, கஞ்சன்)



Saturday, December 8, 2012

பட்டினத்தார் - கரை அறியா ஆற்றில்


பட்டினத்தார் - கரை அறியா ஆற்றில்


பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்க்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆற்றில் விழுந்து விட்டோம். அடித்துச் செல்லப் படுகிறோம். இருந்தும் கரை எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று பட்டினத்தார் நம்மைப் பார்த்து பரிதாபப் படுகிறார். 

இப்படி, எதற்காகச் செய்கிறோம் என்று அறியாமல் அலையும் மக்களைப் பார்த்து பாடுகிறார்....

பாடல்

Friday, December 7, 2012

பட்டினத்தார் - பகலை இரவென்பார்


பட்டினத்தார் - பகலை இரவென்பார் 


படித்தால் புரிகிறது. ஆனால் உணர முடிவதில்லை. 

வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், தேவாரம், திருவாசகம், பிரபந்தம் என்று பெரிது பெரிதாய் புத்தகங்கள். கக்கத்தில் வைத்து தூக்கிக் கொண்டு போகலாம். மனம் அதை வாங்கி உண்மையை அறிந்து கொள்ள முடிவதில்லை. 

அது மட்டும் அல்ல, ஒரு சில புத்தகங்களை படித்துவிட்டு ஏதோ எல்லா உண்மையும் அறிந்தவர்கள் போல் அடித்துப் பேசும் ஆட்களைப் பார்த்து சொல்கிறார் பட்டினத்துப் பிள்ளை...பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாத பாதகர்கள் என்று.....

அந்த திருவருட் பிரகாசம் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது...பார்த்தால்தானே?...கவனம் எல்லாம் புத்தகத்திற்குள்.... 

பாடல் 

Wednesday, November 28, 2012

சித்தர் பாடல்கள் - சலிப்பு


சித்தர் பாடல்கள் - சலிப்பு


பட்டினத்தார் பாடல்கள் நிலையாமையின் உச்சம். பாடல்களின் ஆற்றொழுக்கான நடை, ஒரு தரம் படித்தாலே மனதில் ஒட்டிக்கொள்ளும் அதன் எளிமை, வாழ்க்கை இவ்வளவுதானா, இதற்குத்தானா இத்தனை அடி தடி, சண்டை சச்சரவு என்று நம் ஆணவத்தின் தலையில் குட்டும் பாடல்கள்...

இருப்பையூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன் ? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால் சலித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். போதுமப்பா...மீண்டும் ஒரு கருப்பையில் வரமால் என்னை காப்பாற்று....

பாடல் 

Friday, August 10, 2012

சித்தர் பாடல்கள் - எதைத்தான் இழுக்கிறார்களோ ?


சித்தர் பாடல்கள் - எதைத்தான்  இழுக்கிறார்களோ ?


சிவவாக்கியார் மூட பழக்க வழக்கங்களையும், அர்த்தமற்ற சமய சம்பிரதாயங்களையும் சாடியவர்.

அவர் தெய்வம் இல்லை என்று சொல்லவில்லை. தெய்வம் கல்லிலும், செம்பிலும் இல்லை, நமக்குள்ளேயே இருக்கிறது என்றார்.

ஊரில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றாய் கூடி, இருக்கிற வேலை எல்லாம் விட்டு விட்டு, ஒரு சின்ன செப்புச் சிலையை தேரில் வைத்து இழுத்துக் கொண்டு போகிறார்களே...இது எவ்வளவு அபத்தம்.

வேண்டுமானால் அந்த சிலையை இரண்டு மூணு பேர் மட்டும் எளிதாக தூக்கி கொண்டு போகலாமே...இது என்ன வெட்டி வேலை...இத்தூனுண்டு சிலையை அவ்வளவு பெரிய தேரில் வைத்து இழுத்துக் கொண்டு, எவ்வளவு நேரமும், முயற்சியும் வீணாகப் போகிறது. 

அதை விட்டு விட்டு இறைவனை உங்களுக்குள் தேடி காணுங்கள் என்கிறார். 


ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே 
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர் 
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை 
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே