Showing posts with label திருஞானசம்மந்தர். Show all posts
Showing posts with label திருஞானசம்மந்தர். Show all posts

Wednesday, August 8, 2012

தேவாரம் - மருண்ட குரங்கு


தேவாரம் - மருண்ட குரங்கு 


திரு ஞானசம்மந்தர் சிறு வயதிலேயே ஞானம் பெற்று இறைவன் மேல் பாடத் தொடங்கியதாக வரலாறு.

சிறு வயதில் பாடினார் என்றால், அவர் பாடிய பாடலுக்கும் மாணிக்க வாசகர், நாவுக்கரசர் போன்றவர்கள் வயதான காலத்தில் பாடியதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?

இருக்கிறது.

அது ஒரு அழகிய கோயில்.

மாலை நேரம். 

வானெங்கும் மழை மேகங்கள்.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவன் மேல் பாடல்களை பாடிக் கொண்டே போகிறார்கள்.

கோவிலில் மாலை பூஜை தொடங்கும் நேரம்.

மணி அடிக்கிறது. தம  தம மத்தளம் முழங்குகிறது.

கோவிலில் நந்தவனத்தில் நிறைய மரங்கள் இருக்கின்றன.
குரங்கில்லாத மரமா ?

மணி சத்தையும், மத்தள சத்தத்தையும் கேட்ட குரங்குகள் இடி இடித்து மழை வரப் போகிறதோ என்று மரங்களில் உச்சியில் ஏறி பார்க்கின்றன.

ஞான சம்பந்தர் சின்ன பையன். இந்த குரங்குகள் இப்படி மரமேறி முகில் பார்ப்பது அந்த பாலகனின் மனதை கொள்ளை கொள்கிறது.

பாடல் பிறக்கிறது. கொஞ்சு தமிழ்...அருவி போல் சல சலக்கும் வார்த்தைகள்...

படித்துப் பாருங்கள், உங்கள் மனத்திலும் மழை அடிக்கலாம்....