Showing posts with label Kandhar Anupoodhi. Show all posts
Showing posts with label Kandhar Anupoodhi. Show all posts

Tuesday, August 15, 2023

கந்தரனுபூதி - பாழ் வாழ்வு

 கந்தரனுபூதி - பாழ் வாழ்வு 


நமக்கு கிடைத்த இந்த வாழ்வு எவ்வளவு உயர்ந்தது என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போம்.


ஆரோக்கியமான உடல், படிப்பு, செல்வம், குழந்தைகள், அமைதியான நாடு, ஒரு சில துன்பங்கள், சிக்கல்கள் இருந்தாலும், பெரும்பாலும் வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டு இருக்கிறது. 


எத்தனையோ குறைகள், துன்பங்கள் வந்து இருக்கலாம். உடல் ஊனத்தோடு பிறந்து இருக்கலாம். சண்டை சச்சரவு நிறைந்த ஒரு நாட்டில் பிறந்து அகதியாக ஓட வேண்டி இருந்திருக்கலாம். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் ஒரு கொடுங்கோல் ஆட்சியில் அகப்பட்டு இருக்கலாம், வாழ தகுதியில்லாத தட்ப வெப்பம் உள்ள நாட்டில் பிறந்து அவதிப் பட்டு இருக்கலாம். 


இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்வு நமக்கு கிடைத்து இருக்கிறது. 


நாம் அவ்வளவு நல்லவர்களா?  இதற்கு முன்னால் நாம் நல்லவர்களாக இருந்து இருப்போமா? வாய்ப்பு குறைவு. 


இருந்தும் நமக்கு இவ்வளவு நல்லது கிடைத்து இருக்கிறது. 


இப்போது என்ன செய்ய வேண்டும். இந்தப் பிறவியை பயன்படுத்தி, நல்லது செய்து இனி வரும் பிறவிகளில் துன்பம் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் அல்லவா?


இவ்வளவு இருந்தும், இந்த மாயை என்பது பிடிபட மாட்டேன் என்கிறது. எது சரி, எது தவறு, எது நிரந்தரம், எது அநித்தியம் என்று புரிவதில்லை.


இந்த அருமையான வாழ்வை சரி தவறு தெரியாமல் வீணடித்துக் கொண்டு இருக்கிறோம். காரணம் - அறியாமை. 


அதற்கு காரணம் முன் வினை. விதி. 


நாம் முன்பு செய்த பாவங்கள். 


அருணகிரி புலம்புகிறார் 


"இந்த பாழான வாழ்வை உண்மை என்று நம்பி மாயையில் கிடந்து உழலும் படி என்னை செய்து விட்டாயே. காரணம், நான் முன் செய்த வினைகளோ ? மாயையில் கிடந்து உழலும்படி செய்தாலும், இந்த அறிவைக் கொடுத்தாயே, நீ வாழ்க"  என்று. 


பாடல் 


பாழ் வாழ்வெனு மிப்படு மாயையிலே 

வீழ் வாயென என்னை விதித்தனையே 

தாழ் வானவை செய்தன தாமுளவோ 

வாழ் வாயினி நீ மயில் வாகனனே . 


சீர் பிரித்த பின் 


பாழ் வாழ்வு எனும் இப் படு மாயையிலே 

வீழ்வாய் என  என்னை விதித்தனையே 

தாழ்வானவை செய்தன தாம் உளவோ 

வாழ்வாய் இனி  நீ மயில் வாகனனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_15.html


(pl click the above link to continue reading)


பாழ் வாழ்வு = பாழான வாழக்கை 


எனும் = என்று சொல்லப்படும் 


இப் = இந்த 


படு மாயையிலே = பெரிய மாயையில் 


வீழ்வாய் என = நீ விழுந்து கிடப்பாய் என்று 


என்னை = என்னை 


விதித்தனையே  = விதியின் பலனாய் விட்டாய் 

 

தாழ்வானவை = தவறானவற்றை 


செய்தன தாம் = நான் செய்தது 


 உளவோ = இருக்குமோ 

 

வாழ்வாய் = வாழ்வாயாக 


இனி  நீ மயில் வாகனனே = இனி மயில் மேல் வருபவனே 


நான் பல வினைகள் செய்து இருக்கலாம். அதனால் இந்த பாழான வாழ்வை இனிமையானது என்று நம்பி அதில் விழுந்து கிடக்கிறேன். இருந்தும், இது பாழானது என்று அறியும் அறிவை நீ கொடுத்தாய். எனவே, இதில் இருந்து வெளிவர நான் முயற்சி செய்வேன். அந்த ஞானத்தை கொடுத்த முருகா, மயில் வாகனனே, நீ வாழ்க என்கிறார். 


அநுபூதி பெற்ற பின் பாடிய பாடல். அவருக்கு அந்த ஞானம் கிட்டியது. 


நமக்கும் கிட்டட்டும்.




 


Thursday, August 3, 2023

கந்தரனுபூதி - எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே

  

கந்தரனுபூதி -   எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


உண்மை, மெய் ஞானம் என்று சொல்கிறீர்களே அது  என்ன?  அது என்ன என்று தெளிவாகச் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்ள முடியுமே? அதை சரி பார்க்க முடியுமே என்று பகுத்தறிவாளர்கள் கேட்கலாம். சொல்ல முடியாது என்றால் அது என்ன ஞானம் என்று கேலி செய்யலாம். 


பல விடயங்களை நம்மால் விவரித்துச் சொல்ல முடியாது. 


ரொம்ப தூரம் போவானேன். 


கற்கண்டின் சுவை எப்படி இருக்கும் ? எனக்கு விளக்கிச் சொல் என்றால் எப்படி சொல்லுவது?  கற்கண்டு இருக்கிறது. வாயில் போட்டால் இனிக்கிறது. அது உண்மைதான். சரி, சுவைத்தாய் அல்லவா, அது என்ன சுவை என்று சொல் என்றால் எப்படி சொல்லுவது. 


மல்லிகையின் மணம் எப்படி இருக்கும் சொல். அது ரோஜாவின் வாசனையில் இருந்து எவ்வாறு வேறுபட்டது சொல் என்றால் எப்படிச் சொல்லுவது?


கற்கண்டு எப்படி இருக்கும் என்றால் ஒரு துண்டு வாயில் போட்டால் தெரிந்து விடும். அனுபவம் இருந்தால் புரியும். சொல்லி விளங்க வைக்க முடியாது. 


அது போல இறை அனுபவமும், மெய் ஞானமும் அனுபவ பூர்வமாக அறிய முடியுமே அல்லாமல் படித்து அறிய முடியாது. 


அருணகிரிநாதர் சொல்கிறார்....


"இந்த உலக வாழ்க்கையில் அகப்பட்டு நான் செய்கின்ற செயல்கள் எல்லாம் ஆன்ம முன்னேற்றத்திற்கு உகந்தது அல்ல என்று முருகா நீ என்னை தடுதாட்கொண்டாய். அது மட்டும் அல்ல எனக்கு மெய்பொருளை உணர்வித்தாய். அப்படி குருவின் மூலம் அறிய வேண்டிய ஒன்றை மற்றவர்களுக்கு எப்படி விளங்கிச் சொல்ல முடியும்?" என்று


பாடல் 


செவ்வான்  உருவிற் றிகழ் வேலவன் அன் ( று ) 

ஒவ்வாததென உணர்வித்ததுதான் 

அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் 

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_3.html


(pl click the above link to continue reading)



செவ்வான் = சிவந்த வானம், மாலை நேர வான போல்


உருவிற் = சிவந்த உருவம் 


றிகழ் = கொண்டு திகழ்கின்ற 


வேலவன் = வேலை உடைய முருகப் பெருமான் 


அன் ( று ) = அன்று ஒரு நாள் 

 

ஒவ்வாததென = ஒவ்வாது, சரி வராது என்று 


 உணர்வித்ததுதான் = உணர்வித்தான் 

 

அவ்வாறு = அவ்வாறு குருவால் உணர்விக்கப்பட்டால் 


அறிவார் = அறிந்து கொள்வார் 


 அறிகின்றதலால் = அறிய முடியுமே அல்லாது 

 

எவ்வாறு = வேறு எப்படி 


ஒருவர்க்கு = வேறு ஒருவருக்கு 


இசைவிப்பதுவே = விளங்க வைப்பது ?


இறைவன் அருணகிரிநாதற்கு "உணர்வித்தான்". சொல்லிக் கொடுக்கவில்லை.  உணரும் படி செய்தான். 


எனவேதான் ஆன்ம தேடல் என்பது தனி மனித அனுபவமாகவே இருக்கிறது. ஒருவர் போன வழியில் இன்னொருவர் போக முடியாது. 


திருநாவுக்கரசர் போன வழியில் மணிவாசகர் போகவில்லை.  அவரவர் அனுபவம் தனி. 


அருணகிரிநாதர் மலைக்கிறார். 


தனக்கு முருகன் உணர்வித்தான். அதை மற்றவர்களுக்கு எப்படி சொல்லுவது என்று தெரியாமல் திகைக்கிறார். 


கணிதத்தில் முனைவர் (Dr ) பட்டம் பெற்ற பெரிய அறிஞர் ஒருவர் இருக்கிறார். இரண்டாம் வகுப்பு பிள்ளைக்கு அவர் அறிந்த கணிதத்தை சொல்லிக் கொடுக்க முடியுமா?  அவருக்குத் தெரியும். அந்தக் குழந்தையால் புரிந்து கொள்ள முடியாது. 


அது வளர்ந்து, பக்குவப் பட வேண்டும். 


அதற்கு முன்னால் அது எவ்வளவு விருமினாலும், அதற்கு எவ்வளவு சொன்னாலும் ஒன்றும் புரியாது. 


ஆன்மா பக்குவப் படவேண்டும். இறைவன் அருள் வேண்டும். இரண்டும் நிகழ்ந்தால்தான் அந்த அனுபவம் கிட்டும். 


திருமூலர் அதை வேறு விதமாக சொல்லிக் காட்டுவார். 


தாய், தன் கணவனோடு அனுபவித்த சுகத்தை தன் சிறுவயது மகளுக்கு எப்படி சொல்லி விளங்கப் பண்ண முடியும்? அந்த சிறுபெண் வயதுக்கு வந்து, மனமும், உடலும் பக்குவப்பட்டால் அவளுக்கே அது என்ன என்று புரியும். 


முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமாறு எங்ஙனே? (திருமந்திரம் 2944)




 [


மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/1.html

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_24.html

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html

கருதா மறவா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_23.html

வள்ளிபதம் பணியும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html

அடியைக் குறியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html

அருள் சேரவும் எண்ணுமதோ 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

அலையத் தகுமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post.html

நினைந்திலையோ  

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

மின்னே நிகர்வாழ்வை

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html

யானாகிய என்னை விழுங்கி 

]

Tuesday, July 18, 2023

கந்தரனுபூதி - அறியாமை பொறுத்திலை

 

கந்தரனுபூதி -   அறியாமை பொறுத்திலை 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பிள்ளை ஏதோ தவறு செய்து விடுகிறது. தாய் கண்டிக்கிறாள். அழுது கொண்டு போய் மூலையில் உட்கார்ந்து விடுகிறது. அழுது கொண்டே இருந்து, சாப்பிடாமல் அப்படியே சோர்ந்து தூங்கி விடுகிறது.


தாய் என்ன செய்வாள் ? போனா போகிறது என்று விடுவாளா? அல்லது, பிள்ளையை எழுப்பி, "வாப்பா, வந்து ஒரு வாய் சாப்பிட்டிட்டு போய் படு" என்று பிள்ளைக்கு ஊட்டுவாளா?


அது போல ஆண்டவனும், நாம் தவறு செய்தால் நம்மை மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கிறான். அதே சமயம், ஐயோ பாவம் என்று நம் மேல் அருள் கொண்டு, நம்மை பிறவித் துயரில் இருந்து விடுவிக்கவும் செய்கிறான். 


அருணகிரிநாதர் சொல்கிறார் 


"இந்த இல்லறம் என்ற மாயையில் நான் கிடந்து துன்பப் படுகிறேன். அதைக் கண்டு நீ பொறுக்கமாட்டாமல் வந்து எனக்கு உதவி செய்தாய். என்னே உன் கருணை" 


என்று. 


பாடல்  


இல்லே யெனு மாயையி லிட்டனை நீ 

பொல்லே னறியாமை பொறுத்திலையே 

மல்லே புரி பன்னிரு வாகுவிலென் 

சொல்லே புனையும் சுடர் வேலவனே 


பொருள் 



(pl click the above link to continue reading)



இல்லே யெனு = "இல்"லம் என்ற 


மாயையி லிட்டனை நீ = மாயையில் என்னை நீ இட்டாய். 
 

பொல்லே னறியாமை = போல்லாதவனாகிய என் அறியாமையை கண்டு 


பொறுத்திலையே = நீ கண்டு பொறுக்கமாட்டாமல், எனக்கு அருள் புரிந்தாய். 
 

மல்லே புரி  = மல்யுத்தம், சண்டை புரியும் 


பன்னிரு  = பன்னிரண்டு 


வாகுவிலென்  = பாகு என்றால் தோள். (பாகுபலி, பலமான தோள்களை உடையவன். ஆஜானுபாகு என்றால் கை தோளில் இருந்து முழங்கால் வரை நீண்டு இருக்கிறது என்று அர்த்தம். ஜானு என்றால் முழங்கால்). 


இங்கே 'பாகுவில் என்' என்றால் உன்னுடைய தோள்களில் 


சொல்லே புனையும் = என்னுடைய சொற்களை, அதாவது கவிதைகளை மலர் மாலை போல் சூடிக் கொள்ளும் 


சுடர் வேலவனே = ஒளி பொருந்திய வேலை உடையவனே 

 

 [


மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/1.html

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_24.html

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html

கருதா மறவா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_23.html

வள்ளிபதம் பணியும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html

அடியைக் குறியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html

அருள் சேரவும் எண்ணுமதோ 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

அலையத் தகுமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post.html

நினைந்திலையோ  

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

மின்னே நிகர்வாழ்வை

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html

யானாகிய என்னை விழுங்கி 

]

Thursday, February 23, 2023

கந்தரனுபூதி - கருதா மறவா

                      

 கந்தரனுபூதி - கருதா மறவா 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நாம் வாழ்வை முழுவதுமாக ஏற்றுக் கொள்வது இல்லை. 


வாழ்வின் பெரும் பகுதியை நாம் வேண்டாம் என்று விலக்கி விடுகிறோம். நமது இன்னல்களுக்கு அதுதான் காரணம். 


இனிப்பு பிடிக்கும். நிறைய வேண்டும். கசப்பு பிடிக்காது. வேண்டவே வேண்டாம். 


இன்பம் வேண்டும். துன்பம் வேண்டாம். 


இப்படி வாழ்வை கூறு போட்டு, அது வேண்டும், அது விரும்பத் தக்கது, அது வேண்டாம், அது வெறுக்கத் தக்கது என்று நாம் விலக்கி வைக்கிறோம். 

இதனால் என்ன ஆகிறது?


விரும்பியது வேண்டும் என்ற ஆசை எழுகிறது. ஒன்று கிடைத்தால் அதை விட மேலே வேண்டும் ஆசை நிரந்தரமாக நம்மை தள்ளிக் கொண்டே இருக்கிறது. 


விரும்பியதை அடைய முடியாதோ என்ற பயம் வருகிறது. யாரும் தடுத்து விடுவார்களோ என்ற ஐயம் வருகிறது. விரும்பியது கிடைத்தாலும் அதை பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை வருகிறது. 

அது ஒரு புறம் இருக்க, 


விரும்பாதது வந்து விடுமோ என்ற கவலை. வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். அதில் இருந்து எப்படி தப்புவது என்ற தவிப்பு. 


இப்படி வாழ்வை இரண்டாகப் பிரித்து வைத்துக் கொண்டு நாம் அன்றாடம் அல்லாடுகிறோம். 


சரி, அதுக்காக இன்பமும், துன்பமும் ஒன்றாக முடியுமா? பண வரவும், பணம் தொலைந்து போவதும் ஒன்றாக முடியுமா? என்று கேட்டால்....முடியாது. கடினம்தான். 


இறைவன் அருள் இல்லாவிட்டால் இந்த சம நோக்கு வராது. 


இதை "இருவினை ஒப்பு" என்பார்கள். 


அருணகிரிநாதருக்கு தெரிகிறது. இந்த இரு நிலை தான் துன்பத்துக்குக் காரணம் என்று. ஆனாலும், விட முடியவில்லை. தவிக்கிறார். 


முருகா, எனக்கு அருள் செய்ய மாட்டாயா? இந்த இரு வித நோக்கங்கள் போய், ஒன்றாகக் காணும் காட்சியை எனக்கு எப்போது அருள்வாய் என்று கேட்கிறார். 


பாடல் 


கருதா மறவா நெறிகாண வெனக் 

கிருதாள் வனசந்தர வென் றிசைவாய் 

வரதா முருகா மயில் வாகனனே 

விரதா சுரசூர விபாடணனே . 


பொருள் 




(pl click the above link to continue reading)



கருதா  = நினைப்பது 


மறவா  = மறப்பது 


நெறிகாண = இப்படி நினைப்பு, மறுப்பு என்ற இரு நிலை இல்லாத வழியை நான் காண 


வெனக்  = எனக்கு 


கிருதாள் = உன்னுடைய இரண்டு திருவடிகளை 


வனசந்தர வென் றிசைவாய்  = வனசம் தர என்று இசைவாய்? வனசம் என்றால் தாமரை மலர் என்று பொருள். உன் திருவடித் தாமரைகளை தர என்று இசைவாய்?


வரதா = வரம் தருபவனே, அல்லது வரை இல்லாமல் கொடுப்பவனே 


முருகா = முருகா 


மயில் வாகனனே  = மயிலை வாகனமாகக் கொண்டவனே 


விரதா = விரதங்களினால் அடையப் படுபவனே 

சுர = தேவர்களின் அதிபதி (சுர எதிர்மறை அசுர) 


சூர = சூரபத்மனின் 


 விபாடணனே . = பாடாணம் என்றால் கல், பாறை. ஆதியில் உயிர் பாடாண நிலையில் இருந்தது என்று சொல்லுவார்கள். அதாவது, கல் போலக் கிடந்தது என்று பொருள்.  பாறை போல் உறுதியான, ஈரம் இல்லாத சூர பத்மனை அழித்தவனே 


இன்ப துன்பங்களை ஒன்றாக ஏற்றுக் கொள்வது என்பது நீண்ட பயிற்சிக்குப் பின் வருவது. 


முதல் படியாக, துன்பமே வேண்டாம், துன்பம் வரவே கூடாது, வலியே கூடாது என்று விறைப்பாக இல்லாமல், வாழ்க்கை என்றால் இன்ப துன்பம் இரண்டும் கலந்ததுதான். வரட்டும் பார்ப்போம் என்று இருக்க வேண்டும். சரி, இன்று இந்தத் துன்பம் வந்து விட்டது. சரி, இதை ஏற்றுக் கொள்வோம் என்று பக்குவப் பட வேண்டும். அதற்காக துன்பத்தைக் கண்டு துவண்டு விடக் கூடாது. 


வரட்டுமே, வந்தால் என்ன. சமாளிப்போம் என்று இருக்க பழக வேண்டும். துன்பம் கட்டாயம் வரும். நாம் எவ்வளவுதான் வேண்டி விரும்பினாலும், அது நம்மை விடாது. எனவே, அதைக் கண்டு ஓடுவது ஒரு பயனும் தராது. 



துன்பமும் வாழ்வின் ஒரு பகுதி என்ற எண்ணம் வந்து விட்டால், வாழ்க்கை சமனப்படும். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




Sunday, January 8, 2023

கந்தரனுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

              

 கந்தரனுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ 



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


இறைவனை அடைய பல மார்கங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்று பல இருக்கின்றன. எது சிறந்தது, எது எளிதானது, எது யாருக்குச் ஏற்றது என்று அறிந்து கொள்வது சிக்கலாகவே இருக்கிறது. 


ஞான மார்க்கதின் உச்சம் தொட்ட மணிவாசகரும் 


"அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து 

சிந்தை மகிழ சிவா புராணம் தன்னை..."


என்பார். 


அது ஒருபுறம் இருக்கட்டும். 


இந்த உலகில் எவ்வளவோ துன்பங்கள் நிகழ்கின்றன. உயிருக்கு உயிரானவர்கள் அகாலத்தில் பிரிந்து போய் விடுகிறார்கள், நோய், வறுமை, வலி, பாலியல் வன் கொடுமைகள், போர், பெற்றோரை இழப்பது, பசி, உடல் ஊனம், ...இத்தனை துன்பதுக்கும் இறைவன்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்?  நல்லதுக்கும் மட்டும் அவன் அருள் என்று சொன்னால், துன்பதுக்கு யார் பொறுப்பு ஏற்பது?  துன்பதுக்கு அவன் பொறுப்பு இல்லை என்றால், இன்பதுக்கும் அவன் பொறுப்பு ஏற்க முடியாது அல்லவா? 


இதை எப்படி விளங்கிக் கொள்வது ?


இன்பம், துன்பம், 

பாவம், புண்ணியம்,

வறுமை, செல்வம்,

இரவு, பகல், 

என்ற இருமைகள் எல்லாம் நம் அறிவின் ஆக்கம். இறைவனுக்கு எல்லாம் ஒன்றுதான். 


நம்மிடம் பணம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் அவனுக்கு என்ன?


நம்மிடம் ஓரிரு பட்டங்கள் இருந்தால் என்ன, அல்லது நாம் கை நாட்டாக இருந்தால் அவனுக்கு என்ன? 


இந்தப் பிரிவுகள் எல்லாம் அவனை ஒன்றும் செய்வது இல்லை. 


இன்பமும், துன்பமும் நாம் செய்த வினையால் வருகிறது. அதில் இறைவனின் பங்கு ஒன்றும் இல்லை. 


இந்த இருவினை பிரிவுகள் கடந்த இடத்தில் அவன் இருக்கிறான். 


இறைவனை அறிந்தவர்கள், அவன் இந்த பிரிவுகளை கடந்தவன் என்று சொல்கிறார்கள். 


"தனிச் சிறப்பு கொண்ட வேலை  கையில் கொண்ட முருகன், முனிவன், நமது ஞான குரு, என்று அவன் அருள் அன்றி அவனை அறிய முடியுமா? (முடியாது). அவன் உருவம் உள்ளவன் அல்ல, உருவம் இல்லாமலும் இல்லை, இருப்பவன் அல்ல, இல்லாமல் இருப்பவன் அல்ல, அவன் இருள் அல்ல, ஒளி அல்ல, என்று இருப்பவன்"


பாடல் 


முருகன் தனி வேல் முனிநங் குருவென் 

றருள் கொண்டறியா ரறியும் தரமோ 

வுருவன் றருவன் றுளதன்று இலதன்று 

இருளன்று ஒளியன்று என நின்றதுவே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


(pl click the above link to continue reading)


முருகன் = முருகன் 


தனி = தனிச் சிறப்பு வாய்ந்த 


வேல் = வேலாயுதத்தை கொண்ட அவன் 


முனி = முனிவன் 


நங்  = நம், நமது 


குருவென் றருள்  = குரு வென்று அருள் 


கொண்டறியா ரறியும்  = கொண்டு  அறியார், அறியும் 


தரமோ  = தரமோ? முடியுமா? 


வுருவன் றருவன் றுளதன்று இலதன்று  = உருவன்று, அருவன்று, உளதன்று, இலதன்று 


இருளன்று = இருள் அன்று 


ஒளியன்று = ஒளியும் அன்று 


என நின்றதுவே .  = என்று நின்றதுவே 


நாம் இந்த உலகை நமது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி பிரித்து வைத்துக் கொண்டு துன்பப்படுகிறோம்.


அழகானது (பிடிக்கும்), அழகற்றது (பிடிக்காது), அறிவு, அறிவீனம், செல்வம், ஏழ்மை, வெள்ளை, கறுப்பு, உயரம், குட்டை,பருமன், மெலிந்து இருப்பது, என்று உலகை பிரித்துப் போட்டுவிட்டு, அல்லாடுகிறோம். 


இந்த இருமைகள் மறையும் போது, இறை உணர்வு மேலிடும். 


"ஒன்றாக காண்பதுவே காட்சி"  என்பார் ஔவையார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. 


என்பார் வள்ளல் பெருமான். 


சிந்திப்போம். 




 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html





]




Friday, December 30, 2022

கந்தரனுபூதி - சும்மா இரு

             

 கந்தரனுபூதி - சும்மா இரு 



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


கந்தரனுபூதியில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட பாடல் என்று இன்று நாம் காண இருக்கும் பாடலைச் சொல்லலாம். 


அருணகிரிநாதர் அழகில், பெண்கள் பால் நாட்டம் உள்ளவர். பல பெண்களின் தொடர்பு இருந்தது. அதனால் உடலில் நோய் வந்து சேர்ந்தது. அழகு அழிந்தது. 

அழகும் போனதால், பெண்கள் அவரை வெறுக்கத் தொடங்கினார்கள். நோய் செய்யும் வருத்தம் ஒரு புறம். வாழ்க்கை வெறுத்துப் போய், தற்கொலை செய்ய நினைத்து, திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் ஏறி குதித்து விட்டார். 


விழும் போது, முருகன் அவரை கையில் ஏந்திக் கொண்டான்.


"முருகா, என்னை காத்தாய். எனக்கு உபதேசம் தந்தருள்வாய்" என்று வேண்டினார்.


முருகனும் உபதேசம் செய்தான். 


நாம் நினைப்போம், ஒரு நாலைந்து நாள் செய்திருப்பார் என்று. எவ்வளவு இருக்கிறது சொல்ல.


வேதம், இதிகாசம், புராணம், ஆகமம், என்று எவ்வளவு இருக்கிறது.


அதெல்லாம் இல்லை. 


முருகன் இரண்டே இரண்டு வரி உபதேசம் செய்தான். 


"சும்மா இரு"

"சொல் அற"


அவ்வளவுதான். 


மிக எளிதாக இருக்கிறதே என்று நினைப்போம். 


சும்மா இருக்கணும். அவ்வளவு தானே. இது என்ன பெரிய விடயமா என்று நினைப்போம். 


உடம்பு சும்மா இருந்தால் கூட, எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். என்னணம் என்றால் வார்த்தைகள். நம் சிந்தனை எல்லாம் வார்த்தைகள் தான். 


வார்தைகள் இல்லாமல் சிந்திக்க முடியுமா?


சும்மா இரு. சொல் அற என்றால் சொல்லை அறவே விட்டு விட வேண்டும். மனதில் கூட சொல் ஓடக் கூடாது.


தனக்கு தானேயும் பேசிக் கொள்ள கூடாது. 


நடக்கிற காரியமா?


ஒரு நாள் WA பார்க்காமல் இருக்க முடியுமா? அரட்டை அடிக்காமல் இருக்க முடியுமா? 


பாடல் 


செம்மான் மகளைத் திருடுந் திருடன் 

பெம்மான் முருகன் பிறவான் இறவான் 

சும்மா இரு சொல்லற வென்றலுமே 

அம்மா பொரு ளொன்று மறிந்திலனே


பொருள் 



(pl click the above link to continue reading)



செம்மான் மகளைத் = சிவந்த மானின் வயிற்றில் இருந்து பிறந்த மகளான வள்ளியை 


 திருடுந் திருடன்  = அவளுடைய தாய் தந்தைக்குத் தெரியாமல் திருடிய திருடன் 


பெம்மான் = பெரியவனான 


முருகன் = முருகன் 


பிறவான் இறவான்  = பிறப்பும், இறப்பும் இல்லாதவன். முருக ஜெயந்தி உண்டா? 


சும்மா இரு = சும்மா இரு 


சொல்லற = சொல் அற 


வென்றலுமே  = என்று சொன்னவுடன் 


அம்மா = வியப்பு. இது எப்படி முடியும் என்ற வியப்பு 


பொரு ளொன்று மறிந்திலனே = அதன் பொருள் ஒன்றும் அறியாமல் இருக்கிறேனே 


அம் + மா + பொருள் = அந்தப் பெரிய பொருள் என்று உரை செய்வாரும் உண்டு. 


ஆன்மீக பாதையின் முதல் அடி பேச்சைக் குறைப்பது. எதற்கு எடுத்தாலும் ஒரு தர்க்கம், மறு பேச்சு, எதிர்ப்பு, என்று மனம் சதா காலமும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தால், அது எங்கே வளவது. 


சத்தத்தை, இரைச்சலை குறைக்க வேண்டும். 


செயல் மாண்டு அடங்க வேண்டும். 


பின்னால் ஒரு பாடலில் "செயல் மாண்டு அடங்க" என்று சொல்ல இருக்கிறார்: 


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்

தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


மனதை, வாக்கை சலனம் அற்று இருக்க பழக்குங்கள். 



"சித்த விருத நிரோதம்" - சித்ததில் வரும் சலனங்களை நிறுத்துவது தான் யோகாவின் நோக்கம் என்பார் பதஞ்சலி 









 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


]




Sunday, December 11, 2022

கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா

            

 கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பிறந்தான், இருந்தான், இறந்தான் என்று பெரும்பாலோனோர் வாழ்க்கை முடிந்து விடுகிறது. 


இறந்தான், எல்லோரும் ஓரிரு நாள் அழுவார்கள், பின் மறந்து போவார்கள். அவ்வளவுதானா வாழ்க்கை ?


மாறாக, பிறந்தான், இருந்தான், வாழ்வின் அர்த்தத்தை, உண்மைகளை அறிந்தான் என்று உலகம் போற்றும் வண்ணம் வாழ வேண்டாமா? அந்த உண்மைப் பொருளை எனக்கு உபதேசம் செய்த ஞான குருவே என்று முருகனை போற்றுகிறார். 



பாடல் 


கூகா வென வென் கிளை கூடியழப் 

போகா வகை மெய்ப் பொருள் பேசியவா 

நாகாசல வேலவ நாலுகவித் 

தியாகா சுரலோக சிகாமணியே . 


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


(pl click the above link to continue reading)


கூகா வென  = "கூ" என்றும் "கா" என்றும் (அய்யோ அம்மா என்று அரற்றுவதை)


வென் = என்னுடைய 


கிளை  = உறவினர்கள் 


கூடியழப் = ஒன்று கூடி அழது பின் 


போகா வகை = சென்று விடும் படி  செய்யாமல் 


மெய்ப் பொருள்  = வாழ்வின் உண்மையான பொருளை 


பேசியவா  = உபதேசம் செய்தவனே 


நாகாசல வேலவ = நாகாசாலம் என்ற தலத்தில் உறையும் வேலவரே 


 நாலுகவித் தியாகா = நாலு விதமான கவிதைகளை இயற்றும் ஆற்றலை அடியவர்களுக்கு அருளும் 


சுரலோக  = தேவர் உலகின் 


சிகாமணியே .  = தலைவனே 


பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இருக்காமல், உண்மையை அறிய வேண்டும் என்பது பொருள் 







 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html



]




Monday, November 7, 2022

கந்தரனுபூதி - பரிசென் றொழிவேன்

          

 கந்தரனுபூதி -  பரிசென் றொழிவேன் 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


காமம் ஆண்களை  இறுதி வரை விடுவது இல்லை. பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கிறது. உடல் தளர்ந்தாலும், உள்ளத்தில் காம உணர்வுகள் இருந்து கொண்டே இருக்கிறது. காமம் மிகும் போது அறிவு தன் நிலை இழக்கிறது. மனம் தடுமாறுகிறது. 


இந்த காமம் என்ற சிக்கல் எப்போது என்னை விட்டுப் போகும் என்று கேட்கிறார் அருணகிரி. அப்படி கேட்பது நம் பொருட்டு. நம் நிலையை அவர் தன் மேல் ஏற்றிக் கூறுகிறார் என்று கொள்ள வேண்டும். 


"முருகா, நீ பெரிய கிரௌஞ்ச மலையை உன் வேலால் உடைத்து எறிந்தவன். பயம் இல்லாதவன். என்னை இந்த காமம் படாத பாடு படுத்துகிறது. அதில் இருந்து மீள நீ தான் உதவி செய்ய வேண்டும்" என்று வேண்டுகிறார். 



பாடல் 



மட்டூர் குழன் மங்கையர் மையல் வலைப் 

பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் 

தட்டூடற வேல் சையிலத் தெறியும் 

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே



சீர் பிரித்த பின் 



மட்டு ஊறும் குழல்  மங்கையர் மையல் வலைப் 

பட்டு ஊசல்  படும் பரிசு என்று ஒழிவேன்  

தட்டு ஊடு அற  வேல் சையிலத்து எறியும்  

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html


(pl click the above link to continue reading)



மட்டு = தேன், கள் 


ஊறும் = ஊறும், சுரக்கும் 


குழல் = குழல், சிகை கொண்ட 


மங்கையர் = பெண்களின் 


மையல் வலைப் = காம வலையில் 

 

பட்டு = அகப்பட்டு 


ஊசல்  படும்  = அங்கும் இங்கும் என்று ஊசலாடும் 


பரிசு = நிலையை 


என்று ஒழிவேன்   = விட்டு என்று விடுபடுவேன் 


தட்டு = அடுக்க அடுக்காக உள்ள மலை 


ஊடு அற =அவற்றின் ஊடே சென்று அவற்றை அறுத்த, பொடி செய்த 


வேல் = வேலை 


சையிலத்து எறியும்   = மலை மேல் எறியும் 


நிட்டூர = கோபம் கொண்ட 


நிராகுல = நிர் + ஆகுலம் = துன்பம் இல்லாத 


நிர்ப்பயனே = நிர் + பயம் = பயம் இல்லாதவனே 



விரிவுரை 


மட்டு என்றால் தேன்.


"ஊறு மட்டே" என்பார் மணிவாசகர். (நீத்தல் விண்ணப்பம்).இறைவன் உள்ளத்தில் ஊறும் தேன் போன்றவன். 


மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன் மணிமலர்த்தாள்

வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை யேன்மனத்தே

ஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங்கைக்கரசே

நீறுபட் டேஒளி காட்டும்பொன் மேனி நெடுந்தகையே. 



தேன் சொரியும் பூக்கள் அணிந்த குழலை உடைய மங்கையர்கள் என்றாலும் சரி. 


வாயில் தேன் ஊறும் குழல் உள்ள பெண்கள் என்றாலும் சரி. 


இங்கே அவர் குறிப்பது, விலை மகளிரை. மனைவியை அல்ல என்று கொள்ள வேண்டும். "மையல் வலை" என்று குறிப்பிடுகிறார். 


காமம் மலை போல் பெரியது. அனுபவித்து எல்லாம் கடந்து விட முடியாது. இராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது காமம். இரத்த ஆறு ஓட விட்டிருக்கிறது காமம். சரித்திரத்தின் போக்கை மாற்றி இருக்கிறது காமம். 


ஞானம் ஒன்று தான் காமத்தை அழிக்கும். முருகனின் வேல் ஞானத்தின் குறியீடு. அந்த வேல் கிரௌஞ்ச மலையை அழித்தது. ஞானம் தான் ஆணவம், கன்மம், மாயை , காமம், குரோதம், மதம் மாச்சரியம் போன்ற தீய குணங்களை அழிக்கும். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html




]




Friday, October 14, 2022

கந்தரனுபூதி - நின்று தயங்குவதே

       

 கந்தரனுபூதி - நின்று தயங்குவதே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


இந்தப் பாடலுக்குத்தான் அவ்வளவு பெரிய முன்னுரை. அந்த முன்னுரை இன்னும் வர இருக்கும் பாடல்களுக்கும் தேவைப்படும்.


இரண்டுவிதமான மாயைகள் பற்றி சிந்தித்தோம். ஏதோ வாசித்து விட்டதால் புரிந்து விட்டது என்றோ, அல்லது எழுதிய எனக்கு புரிந்து எழுதினேன் என்று கொள்ளக் கூடாது. 


புராணங்கள் சொல்கின்றன அந்த மாயை என்பது நாரதருக்கும் புரியவில்லை என்றும், அவர் அதை திருமாலிடம் கேட்டார் என்றும்.. அந்தக் கதை பற்றி பின்னொருநாள் சிந்திப்போம். 


ஒன்று சுத்த மாயை, இன்னொன்று அசுத்த மாயை.


இந்த சுத்தம், அசுத்தம் என்பதெலாம் ஏதோ அழுக்கு, குப்பை என்று நினைக்கக் கூடாது. சுத்தம் என்றால் துன்பக் கலப்பு இல்லாதது. அசுத்தம் என்றால் அதில் இன்பமும் துன்பமும் கலந்து இருக்கும். 


இறைவன் இரண்டுவிதமான மாயைகளால் உயிர்கள் பாசத்தில் இருந்து விடுபட்டு தன்னைச் சேர வழி செய்வான். 


மகா மாயை, சுத்த மாயை, பிரகிருதி மாயை, சக மாயை என்றெல்லாம் அவற்றிற்கு பெயர் சொல்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


என்னதான் படித்தாலும், எவ்வளவுதான் படித்தாலும் மனம் அதன் பாட்டுக்குப் போகிறதே தவிர படித்ததால் ஒரு பயனும் விளைவது இல்லை. 


நிறைய தூரம் போக வேண்டாம்....தினம் உடற் பயிற்சி செய்வது, கண்டதையும் உண்ணாமல் இருப்பது என்று எத்தனை தரம் முடிவு செய்து இருப்போம். செய்கிறோமா?  மனம் சோம்புகிறது, இனிப்பை நாடுகிறது. அறிவு வேலை செய்வது இல்லை. 


இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  படித்துக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை. 


உடற் பயிற்சி செய்வது எப்படி, அதனால் விளையும் நன்மைகள் பற்றி ஆயிரம் நூல் படித்து என்ன பலன், உடற் பயிற்சி செய்யாவிட்டால்? 


ஆஹா என்னமா சொல்லி இருக்கிறார்கள், என்ன ஒரு ஆராய்ச்சி என்று வியந்து மகிழலாமே தவிர ஒரு பலனும் இருக்காது. 


இதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். 


இந்தச் சிக்கல் நமக்கு மட்டும் அல்ல.


"மகா மாயையை களைந்திட வல்ல முருகன், தன் ஆறு முகங்களாலும் உபதேசம் செய்தும், இந்த உடல், ஆடை, பெண்கள் என்று இந்த உலக மாயையில் இருந்து வெளி வர முடியாமல் தயக்கம் அடைகிறேனே" என்கிறார் அருணகிரிநாதர். 


பாடல் 


மகமாயை களைந்திட வல்லபிரான் 

முகமாறு மொழிந்து மொழிந்திலனே 

அகமாடை மடந்தைய ரென்றயரும் 

சகமாயை யுணின்று தயங்குவதே



சீர் பிரித்த பின் 


மகமாயை களைந்திட வல்ல பிரான் 

முகம் ஆறும் மொழிந்தும்  ஒழிந்திலனே 

அகம் ஆடை மடந்தையர் என்று அயரும்  

சகமாயையுள் நின்று தயங்குவதே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


(pl click the above link to continue reading)



மகமாயை = மகா மாயையை 


களைந்திட = விலக்க 


வல்ல பிரான்  = வலிமையுள்ள முருகன் 


முகம் ஆறும் = ஆறு முகங்களாலும் 


மொழிந்தும் = உததேசம் செய்தும் 


ஒழிந்திலனே  = விட முடியவில்லையே 


அகம் = உடம்பு 


ஆடை  = ஆடை, அணிகலன்கள் 


மடந்தையர் = பெண்கள் 


என்று அயரும்   = என்று அயரும், தளரும், தவிக்கும் 


சகமாயையுள் = இந்த உலக மாயையில் 


நின்று = மூழ்கி 


தயங்குவதே = தயங்கி நிற்கிறேனே 


விட வேண்டும் என்று தெரிகிறது. விடவும் மனம் வர மாட்டேன் என்கிறது. 


உபதேசம் அறிவுக்கு எட்டுகிறது. பாசம் மனதைப் பற்றிக் கொண்டு உலக பந்தங்களை விட முடியாமல் தவிக்கிறது. 


விட்டு விடலாமா என்று ஒரு என்னணம்.


இவ்வளவு இன்பத்தை எப்படி விடுவது என்று ஒரு தயக்கம். 


"சக மாயையுள் நின்று தயங்குவதே" என்கிறார். 


இறைவனே வந்து சொன்னாலும் மனித மனம் (பசு) பாசத்தில் இருந்து எளிதில் விடுபடுவது இல்லை. 


சிவ பெருமான் நேரில் வந்து உபதேசம் செய்தும், மணிவாசகர் புரிந்து கொள்ளவில்லை. 


கண்ணபிரான் நேரில் உபதேசம் செய்தும், அர்ஜுனன் புரிந்து கொள்ளவில்லை. 


இதுதான் மாயையின் வலை. 


உண்மையை மறைக்கும். பொய்யை, உண்மை போல் காட்டும். 


"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி"


என்பார் மணிவாசகர். 


பொய்யை மெய் என்று நம்பி அதன் பின் போய்க் கொண்டிருக்கிறோம். 


நீண்ட, ஆழமான முயற்சி வேண்டும். 







[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html




]




Friday, August 5, 2022

கந்தரனுபூதி - பணியாய் அருள்வாய்

 

 கந்தரனுபூதி -  பணியாய் அருள்வாய் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html




)

வருமான வரி கணக்கை எல்லோரும் தாக்கல் செய்ய வேண்டும். எப்போது முடியுமோ அப்போது செய்தால் போதும் என்று சொன்னால், எத்தனை பேர் தாக்கல் செய்வார்கள்?


தாக்கல் செய்யக் கூடாது என்று அல்ல. அல்லது ஏதோ வருமான வரியில் குழப்பம், தவறு இருக்கும் என்பதால் அல்ல. "அப்புறம் செய்வோம்", "நாளைக்கு செய்வோம்" என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். இல்லையா?


மாறாக  வருமான வரி கணக்கை 31 Jul 22 தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டால்,  ஏறக்குறைய எல்லோரும் தாக்கல் செய்து விடுவார்கள். 


அது மனித இயல்பு. 


நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமா, அதை உங்களுக்கு நெருங்கியவர்களிடம் சொல்லி விடுங்கள். 


"நான் இன்றில் இருந்து புகை பிடிப்பது இல்லை"


"மது அருந்துவது இல்லை"


"வாரத்துக்கு நாலு தடவையாவது உடற் பயிற்சி செய்வேன்"


அது எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். வெளியில் சொல்லுங்கள். உங்களை நீங்களே ஒரு பொறுப்புக்குள் கொண்டுவருவது மாதிரி. யாரிடமும் சொல்லாவிட்டால், "நாம் தானே நினைத்தோம், மாற்றிவிட்டால் போகிறது" என்று அதைச் செய்ய மாட்டோம். 


அது சரி, அதுக்கும், இந்த கந்தரனுபூதிக்கும் என்ன சம்பந்தம்? 


இறைவனை வணங்க வேண்டும் என்று எல்லாம் தெரியும். ஆனாலும் செய்வது இல்லை. ஏதாவது நடுவில் வந்து விடுகிறது. 


அருணகிரிநாதர் முருகனிடம் சொல்கிறார் 



"முருகா, நானா நினைத்து இதை எல்லாம் செய்யமாட்டேன். ஒண்ணு செய், நீ எனக்கு ஒரு கட்டளை போடு. இப்படி பாடு, இப்படி வழிபாடு செய் நு. நீ சொல்லிட்டா, முருகன் கட்டளை என்று நான் அதை ஒழுங்காகச் செய்து விடுவேன். உன் கட்டளையை மீற முடியுமா? " என்கிறார்.ர் 



பாடல் 


ஆடும் பரிவேலணி சேவ லெனப் 

பாடும் பணியே பணியா வருள்வாய் 

தேடும் கயமா முகனைச் செருவிற் 

சாடும் தனியானை சகோ தரனே .. 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


(Pl click the above link to continue reading) 


ஆடும்  = ஆடுகின்ற 


பரி = பரி என்றால் குதிரை. இங்கே வாகனம், ஆடுகின்ற வாகனம் அதாவது மயில் 


வேலணி சேவ லெனப்  = வேல் + அணி சேவல் என = வேல், சேவல் என்று 


பாடும் பணியே = பாடுகின்ற வேலையை 


பணியா வருள்வாய்  = எனக்கு விதித்த வேலையாக நீ எனக்கு அருள் செய்வாய் 


தேடும் = தேடிச் செல்லும் 


கயமா முகனைச் = கயமாமுகன் என்ற அரக்கனை 


செருவிற்  = போரில் 


சாடும் = வெல்லும் 


தனியானை சகோ தரனே = தனித்துவம் மிக்க விநாயகப் பெருமானின் சகோதரனே 


இது காப்புச் செய்யுள். 


"பாடும் பணியே பணியாய் அருள்வாய்"


அதை எனக்கு ஒரு வேலையாக நீ சொல்லு. நீ சொன்னா நான் மறுக்கமாட்டேன். எனக்கு நானே சொல்லிக் கொண்டால் நான் சில சமயம் மீறி விடுவேன். எனவே, நீயே சொல்லு என்கிறார். 


உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்றாலும், நீங்கள் எடுத்த முடிவை உங்களுக்கு நெருங்கியவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் மதிப்பில் நீங்கள் தாழ விரும்பாதவர்களாக இருக்க வேண்டும். 


"ஆமா, நீ இப்படித் தான் சொல்லுவ..பின்ன ஒண்ணும் செய்ய மாட்ட" என்று அவர்கள் உங்களை சொல்லுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்க வேண்டும். அவர்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கை உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். 


மயில், வேல், சேவல் என்று பாடுகிரீர்களோ இல்லையோ, மேலே சொன்னதைச் செய்து பாருங்கள். 


இன்று ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டு அதை உங்களுக்கு நெருங்கியவர்களிடம் சொல்லிவிட்டு செய்து பாருங்கள். உங்களால் அது முடியும். 


"இன்று ஒரு நாள் whatsapp பார்பதில்லை" என்று சொல்லி விடுங்கள். கட்டாயம் செய்வீர்கள். 


நான் இதை என் அனுபவ பூர்வமாக் உணர்ந்து இருக்கிறேன். 


கந்தரநுபூதி நம்மை மேம்படுத்த உதவும் ஒரு கருவி. 


இன்று ஏதோ ஒரு வேலையில் ஆரம்பித்து, படிப்படியாக முன்னேறி பெரிய நோக்கங்களை அடைய அது வழி வகுக்கும். 




Thursday, May 21, 2020

கந்தர் அநுபூதி - மனைவி மக்கள் என்னும் விலங்கு

கந்தர் அநுபூதி - மனைவி மக்கள் என்னும் விலங்கு 


கந்தர் அநுபூதியை சிறுவயதில் வீட்டில் உள்ள பெரியவர்கள் பாராயணம் பண்ணுவார்கள். அவர்கள் பாட்டுக்கு கட கட என்று சொல்லிக் கொண்டே போவார்கள். கேட்டு கேட்டு மனப்பாடம் ஆகிப் போனது.

பல பாடல்களுக்கு அர்த்தமும் விளங்கியது என்றே நினைத்தேன்.

நாள் ஆக ஆகத்தான், நான் அர்த்தம் என்று நினைத்துக் கொண்டிருந்தது சரி அல்ல என்று புலப்படத் தோன்றியது.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று தான் கீழே உள்ளது.

பாடல்

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

பொருள்


வளை பட்ட = வளையல் அணிந்த

கை (ம்)  = கைகளை உடைய

மாதொடு = மாது என்றால் பெண். அதாவது மனைவியுடன்

மக்கள் எனும் = பிள்ளைகள் என்ற

தளைபட்டு = விலங்கில் அகப்பட்டு

அழியத் தகுமோ? தகுமோ? = நான் அழிய தகுமோ தகுமோ ? (தகாது)

கிளைபட்டு = உறவினர்களோடு

எழு = போருக்கு எழுந்த

சூர்  = சூரனும்

உரமும் = அவன் வீரமும், மார்பும்

கிரியும், = கிரௌஞ்ச மலையும்

தொளைபட்டு = துளைத்துக் கொண்டு செல்லும்படி

உருவத்  = உருவிக் கொண்டு செல்லும்படி

தொடு வேலவனே. = வேலைத் தொட்டவனே

மனைவி மக்கள் என்ற குடும்ப சிக்கலில் மாட்டி நான் அதிலேயே அழுந்திப் போவது சரிதானா ?  நான் அப்படி அழிந்து போகாமல் இருக்க அருள் செய்வாய் என்று வேண்டுகிறார்.

ஆசைப் பட்டு திருமணம் செய்து கொண்டு, பின் பிள்ளைகளை பெற்று, அவர்களை  வளர்க்கிறோம். அவர்கள் எப்படி விலங்காக முடியும்?

ஏதோ மனைவியும், பிள்ளைகளும் நம் ஆன்ம முன்னேற்றத்திற்கு ஒரு தடைக் கல் போல சொல்கிறாரே...ஒரு வேளை அப்படித்தானோ?

திருமணம் செய்து இருக்கக் கூடாதோ? அப்படியே திருமணம் செய்து இருந்தாலும், பிள்ளைகள் பெற்று இருக்கக் கூடாதோ? அப்படியே பெற்றாலும், ஒரு அளவுக்கு மேல் அவர்களை கழட்டி விட்டு விட வேண்டுமோ? என்றெல்லாம் தோன்றியது உண்டு.

"மாதொடு மக்கள் எனும் தளை " என்று சொல்கிறாரே. தளை என்றால் விலங்கு. கையில் விலங்கை மாட்டிக் கொண்டு அலைய யாருக்கு ஆசையாக இருக்கும்? விடுதலை அடையத்தானே எல்லோரும் விரும்புவார்கள்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஆண்களுக்கு , வளை பட்ட கை மாது ஒரு விலங்கு சரி.

பெண்களுக்கு?

மனைவிக்கு, கணவன் விலங்கா? அப்படியென்றால் ஏன் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை?

யாருமே திருமணம் செய்து கொள்ளக் கூடாதா? அதுவா உபதேசம்?

இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது பற்றி மேலும் சிந்திப்போம்.....

(தொடரும்)

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_21.html

Wednesday, May 20, 2020

கந்தர் அநுபூதி - குருவாய் வருவாய்

கந்தர் அநுபூதி - குருவாய் வருவாய் 



பாடல்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


இந்தப் பாடலை என் சிறுவயது முதல் எனக்குத் தெரியும். படித்து இருக்கிறேன். பல முறை கேட்டும் இருக்கிறேன். அடடா என்னமா எழுதி இருக்கிறார், ஒவ்வொரு சொல்லும் "வாய்" என்று முடியும்படி என்று வியந்தும் இருக்கிறேன்.

இத்தனை வருடம் ஆனது அதன் உள்ளே பொதிந்து கிடக்கும் அர்த்தம் தட்டுப்பட.

முதலில் அருஞ்சொற் பொருளை பார்த்து விடுவோம். அப்புறம் அர்த்தத்துக்குப் போவோம்.


பொருள் 

உருவாய் = உருவத்துடன்

அருவாய் = உருவம் இல்லாமல்

உளதாய் = இருக்கக் கூடியதாய்

இலதாய் = இல்லாததாய்

மருவாய்  = மலரின் வாசமாக

மலராய் = மலராக

மணியாய் = மணியாக

ஒளியாய்க் = மணியில் இருந்து வரும் ஒளியாக

கருவாய்  = கருவாக

உயிராய்க்  =உயிராக

கதியாய் =  வழியாக 

விதியாய்க் = விதியாக

குருவாய் = குரு வடிவில்

வருவாய் = வருவாய்

அருள்வாய் = அருள் செய்வாய்

குகனே. = முருகா

கடினமான சொல் ஒன்றும் இல்லை.

இதில் என்ன புதிதாக கண்டுவிட்டேன் என்று கேட்கிறீர்களா?

"குருவாய் வருவாய்"

நாம் இறைவனை, உண்மையை தேடி அலைகிறோம். நிறைய புத்தகங்கள் வாசிக்கிறோம். பலர் சொல்வதைக் கேட்கிறோம். நமக்கு இவர் தான் குரு, ஆச்சாரியார்  என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு அவர் சொல்கிற படி கேட்கிறோம். துறவிகள், சாமியார்கள், உபன்யாசம் செய்பவர்கள் என்று எவ்வளவோ பேர்.  இப்போதெல்லாம், youtube வந்து விட்டது. வீட்டில் இருந்த படியே  அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்ள முடியும்.

இருந்தும் ஒன்றும் ஆன மாதிரி தெரியவில்லை. அது ஒரு பாட்டுக்கு போகிறது. வாழ்க்கை இன்னொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

"நீ குருவை தேடி அலையாதே.  குரு உன்னைத் தேடி வருவார். நீ எப்போது பக்குவப் படுகிறாயோ அப்போது  குரு உன்னைத் தேடி வருவார்" என்று.

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள், "The teacher will appear when the student is ready" என்று.

நீங்கள் தேடி கண்டுபிடிக்கும் யாரும் உங்கள் குரு அல்ல. உங்களுக்கு எப்படித் தெரியும், அவர் தான் குரு என்று?

"வருவாய்" அவனே வருவான்.

வருவான் என்று எப்படி சொல்ல முடியும்? என்ன உத்தரவாதம் இருக்கிறது?

'கதியாய் விதியாய்"

"உன் விதிப்படி அவன் வருவான். உனக்கு எப்போது விதித்து இருக்கிறதோ, அப்போது வருவான். வந்து உன்னை நல்ல கதிக்கு கொண்டு செல்வான். "


சரி, எப்படி வருவான்?  எந்த வடிவில் வருவான் ?

எனக்கு எத்தனையோ குரு மார்கள். பாடம் சொல்லித் தந்தவர்கள் சிலர். வாழக்கையை சொல்லித் தந்தவர்கள் சிலர்.  வழி கட்டியவர்கள் சிலர். அவன் எப்படி  வேண்டுமானாலும் வருவான்.

புரியலையே !

"உருவாய்"

அவன் மானிட உருவில் வருவான்.

"அருவாய்"

உருவம் இல்லாமல் வருவான். அது எப்படி உருவம் இல்லாமல் வருவான்? அப்படி வந்தால்  நாம் எப்படி அவனை அறிய முடியும்?

ஒரு உயர்ந்த புத்தகத்தை வாசிக்கிறீர்கள், நல்ல சொற்பொழிவை கேட்கிறீர்கள், நாள் எழுத்தை வாசிக்கிறீர்கள்...உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்கிறது. 'சே, இது தெரியாமல் இத்தனை நாள் வாழ்ந்து விட்டேனே..இனியாவது  கொஞ்சம் மாற வேண்டும் " என்று நினைக்கிறீர்கள் அல்லவா....அந்த எழுத்துதான் உங்கள் குரு. அதற்கு மானுட வடிவம் இல்லை. ஒளி வடிவம், ஒலி வடிவில் வந்து அருள் தருவான்.

mp3 file, youtube வீடியோ, dvd , vcd என்று ஏதோ ஒரு வழியில். அருவமாக வந்து அருள் தருவான்.

மருவாய், மலராய்

மலர் தெரியும், அதன் வாசம் தெரியுமா? சில சமயம் வாசம் மட்டும் வரும், எங்கிருந்தோ.  அது போல, ஆள் தெரியாது, எங்கிருந்து, எப்படி வருகிறது என்று தெரியாது.  அவன் அருள் வந்து சேரும்.

மணியாய் ஒளியாய்

மணி தெரியும். அதன் உள்ளே ஆடும் அதன் நா தெரியும். அது ஆடுவது தெரியும். ஒலி தெரியுமா?  காதில் வந்து விழும்.  ஒரு வார்த்தை. ஒரு சொல். ஒரு வாக்கியம் ,

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே"

என்று ஒரு வாக்கியம், பட்டினத்தாரை மாற்றிப் போட்டது.

அந்த வாக்கியம் தான் அவருக்கு குரு.

அந்த வாக்கியம் நமக்கு கிடைத்து இருந்தால், "சரி, வராட்டி போகட்டும், அதனால் என்ன" என்று ஓலையை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வேலையை பார்க்க போய் விடுவோம்.   பட்டினத்தாரின் மனம் பக்குவப் பட்டிருந்தது. ஒரு வாக்கியம், அருள் செய்தது.

"அருள்வாய் குகனே"

அது அருள்தான்.  காசு கொடுத்து வாங்க முடியாது. வண்டி வண்டியாக புத்தகங்களை படித்து  அறிய முடியாது. அந்த அருள், grace, வர வேண்டும்.

அவனே அருள்வான்.

ஞான சம்பந்தருக்கு மூன்று வயதில் வந்தான்.

திருநாவுக்கரசருக்கு 80 வயதில் வந்து அருள் தந்தான்.

என்ன சொல்லுவது?

யார் குரு என்று எப்படி அறிவது?

ஆதி சங்கரருக்கு புலையனாக வந்தான்.

சங்கரர் அறிந்தார் இல்லை.

அவர் பாடு அப்படி என்றால், நாம் எம்மாத்திரம்?

மாணிக்க வாசகருக்கு அருள் புரிய வந்தான், மணிவாசகர் அறிந்தார் இல்லை. விட்டு விட்டார்.

அவன் உருவாய், அருவாய், உளதாய், இலதாய் , மருவாய், மலராய், மணியாய், ஒளியாய் எப்படி வேண்டுமானாலும் வருவான்.

அவன் வந்தால்தான் உண்டு. நாம் போய் கண்டு பிடிக்க முடியாது.

மனம் பக்குவப் பட வேண்டும்.

நீங்கள் தேடிப் பிடித்த எந்த குருவும் உங்கள் உண்மையான குரு அல்ல என்று தெரிகிறது அல்லவா? அவர் வேண்டுமானால் வழி காட்டலாம், அவர் ஒரு படியாக இருந்து உதவி செய்யலாம்....உண்மையான குரு, அவர் உங்களைத் தேடி வருவார்.

இப்படி எத்தனை பாடல்களை, "இதில் என்ன இருக்குறது" என்று அறியாமல் தள்ளி விட்டு வந்தேனோ?


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_20.html

Wednesday, December 25, 2019

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி 


கரத்தல் என்றால் மறைத்தல் என்று பொருள்.

காக்கை கரவா கரைந்துண்ணும் என்பார் வள்ளுவர்.

"காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி" என்பார் மணிவாசகர். இறைவன் படைத்து, காத்து, கரந்து விளையாடுகிறான்.




ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். (திருவெம்பாவை)


சிலர் படிப்பார்கள். நல்ல விஷயங்களை அறிந்து கொள்வார்கள். ஆனால் அதை பிறருக்கு சொல்ல மாட்டார்கள். எங்கே தெரிந்து கொண்டால் அவனும் நம்மை மாதிரி ஆகி விடுவானோ, நம் பெருமை குறைந்து விடுமோ என்ற பயம்.


நாம் மட்டும் நல்லா இருக்க வேண்டும். தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு சொல்லக் கூடாது. யார் எப்படிப்  போனால் என்ன, நாம் நல்லா இருக்க வேண்டும்  என்ற சுயநலம் கூட காரணமாக இருக்கலாம்.


தான் கற்ற மந்திரத்தை உலகில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ள கோவில் கோபுரத்தில் மேல் ஏறி சொன்னார் இராமானுஜர். அவருக்கு அந்த உபதேசத்தை சொன்னவர்கள் அந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக் கூடாது  (மறைத்து வை) என்று  சொல்லித்தான் அனுப்பினார்கள். இராமானுஜரின்  தாயுள்ளம், எல்லோரும் உய்ய வேண்டும் என்று தான் நரகம் போனாலும் பரவாயில்லை என்று எல்லோருக்கும் சொன்னார்.


அப்படி அல்லாமல், தனக்கு மட்டும் என்று அறிவை வைத்துக் கொள்ளும் அறிவுக் கருமிகளின்  வீட்டு வாசலில் சென்று நிற்கும் படி என்னை வைத்து விடாதே என்று முருகனிடம் வேண்டுகிறார்.



பாடல்

கரவா கியகல்வி யுளார் கடைசென்
 றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசா யுதகுஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

படிக்க கொஞ்சம் கடினம் தான். சீர் பிரிப்போம்.


கரவாகிய கல்வியுளார் கடை சென்று 
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசாயுத குஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

பொருள்


கரவாகிய  = மறைத்து வைக்கக் கூடிய

கல்வியுளார் = கல்வியை உடையவர்கள்

கடை சென்று  = வாசலில் சென்று

இரவா வகை  = கை  ஏந்தும் படி செய்யாமல்

மெய்ப்பொருள் ஈகுவையோ = உண்மையான பொருளை தருவாயாக

 குரவா = தலைவா. குரவன் என்றால் தலைவன்

குமரா = குமரா

குலிசாயுத =குலிசாயுதம் என்ற ஆயுதத்தை கையில் கொண்டவனே

குஞ்சரவா  = குஞ்சரவா

சிவயோக  = சிவ யோகத்தில் நிற்பவனே

தயாபரனே! = தயை நிறைந்தவனே

கல்வியை கற்றால் அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இதற்கு இன்னொரு விளக்கமும் தரலாம்...மறைத்து வைக்கக் கூடிய கல்வி.

கல்வி, உண்மையை நம்மிடம் இருந்து மறைத்து விடும்.

"கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்"  என்றார் மணிவாசகர்.

கல்விக்குள் போகக் கூடாது. போனால், அதைத் தாண்டி போக வேண்டும். எல்லை கடக்க வேண்டும்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாழ் தொழாஅர் எனின் 

என்பார் வள்ளுவப்  பேராசான்.

அறிவு இறைவனிடம் இட்டுச் செல்ல வேண்டும்.

எங்கே இட்டுச் செல்கிறது?  ஆணவத்திடம் தான் இட்டுச் செல்கிறது.

படியுங்கள். படித்ததை மற்றவர்களுக்கும் தாருங்கள். படித்தத்தின் பலன் என்ன என்று சிந்தியுங்கள்.  பயன் என் கொல் என்று வள்ளுவர் கேட்கிறார்.


interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_25.html

Friday, October 18, 2019

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும்

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும் 


ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஏகப்பட்ட செல்வம். எல்லாவற்றையும் பல இரும்பு பெட்டிகளில் போட்டு அவனுக்கு சொந்தமான பல இடங்களில் மறைவாக புதைத்து வைத்து இருந்தான். அந்த பெட்டிகளின் சாவியை அவனுடைய மகனிடம் கொடுத்து "மகனே நான் இதுவரை சேர்த்த செல்வங்களை எல்லாம் பெட்டிகளில் போட்டு பல இடங்களில் புதைத்து வைத்து இருக்கிறேன். அந்தப் பெட்டிகளின் சாவிகள் இவை. பத்திரமாக வைத்துக் கொள் . எனக்குப் பின்னால் அவை அனைத்தும் உனக்குத்தான்" என்று கூறினான்.

மகனும் சாவியை வாங்கிக் கொண்டான். பெட்டிகள் எங்கே இருக்கிறது அந்தத் தந்தை மகனிடம் சொன்னான். அவன் சரியாக மனதில் வாங்கிக் கொள்ளவில்லை. சரி, அப்பறம் இன்னொரு நாள் கேட்டு சரியாக எழுதி வைத்துக் கொள்வோம் என்று இருந்து விட்டான்.  விதியின் விளையாட்டு. தந்தை ஒரு விபத்தில் இறந்து போனார்.

மகனிடம் சாவிகள் இருக்கின்றன. ஆனால், அந்த சாவிகள் எந்த பூட்டைத் திறக்கும் என்று அவனுக்குத் தெரியாது. பூட்டு தெரியாது. ஆனால், சாவி இருக்கிறது.

அவன் , அவனுடைய  மகனிடம் "மகனே, உன் தாத்தா பெரிய ஆள். நிறைய சம்பாதித்தார். அவற்றை எல்லாம் பல பெட்டிகளில் போட்டு பல இடங்களில் புதைத்து வைத்தார். அந்த பெட்டிகளின் சாவிகள் இவை.  நீ தான் அவற்றின் வாரிசு. சில பெட்டிகளின் இடம் எனக்குத் தெரியும். மற்றவை மறந்து  போய் விட்டது. நீ கண்டு பிடித்துக் கொள். ஆனால், அவற்றில் பல விலை மதிக்க முடியாத செல்வங்கள் இருக்கின்றன" என்று கூறி தன் மகனிடம் அந்த சாவிகளைக் கொடுத்தான்.

இப்படி தலை முறை தலை முறையாக அந்த சாவிக் கொத்து கை மாறிக் கொண்டே வந்தது.

பல தலைமுறைகளுக்குப் பின், தற்போதைய வாரிசுகள் "எங்க முன்னோர்கள்  பெரிய செல்வந்தர்கள். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்தார்கள். அந்த பெட்டிகளின் சாவிகள் இவை " என்று அந்த சாவிக் கொத்தை  கையில் ஸ்டைலாக சுத்திக் கொண்டு திரிகிறார்கள். பெட்டிகள் எங்கே இருக்கிறது என்று தெரியாது.

அது போலத்தான்  பலர் இன்று இருக்கிறார்கள்.

கோவில், பூஜை, நாள், கிழமை, உடம்பில் பல விதமாக கோடுகள் போட்டுக் கொள்வது, பல விதமாக உடை  அணிந்து கொள்வது, சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது  என்று பல வித காரியங்களை செய்கிறார்கள்.

ஏன் என்று கேட்டால் தெரியாது. முன்னோர்கள் செய்தார்கள். அவர்கள் மடையர்களா என்று  கேட்கிறார்கள். முன்னோர்கள் செய்ததற்கு காரணம் இருக்கலாம். நீ ஏன் செய்கிறாய் என்றால் தெரியாது.

இந்த சடங்களுகளின் பின்னால் காரணம் இருக்கலாம். ஆனால் அது என்ன என்று தெரியாது.

சாவி இருக்கிறது. பூட்டு எங்கே என்று தெரியாது.

குறியீடுகள் முக்கியமாக போய் விட்டது. சாவியே செல்வம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விரதம் என்றால் அது எதை சாதிக்க முற்படுகிறது என்று தெரிய வேண்டும்.

விளக்கு ஏற்றுகிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிய வேண்டும். .

ஏன் செவ்வாய், வெள்ளி பூஜைக்கு உகந்த நாள்? ஏன் மார்கழி உயர்ந்த மாதம்,  ஏன் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்,  ஏன் கோவிலுக்குப் போக வேண்டும் ?

கையில் சாவியை சுழற்றிக் கொண்டு திரிகிறார்கள். என்ன சொல்வது.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

குறிகளை, குறியீடுகளை தாண்டிச் செல்ல வேண்டும். அதுவே இறுதி அல்ல.  அது எதைக் குறிக்கிறதோ  அதை நோக்கிச் செல்ல வேண்டும்.

சாவியை எடுத்துக் கொண்டு போய் , பெட்டியை திறந்து செல்வங்களை எடுத்து அனுபவிக்க வேண்டும்.

பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள்

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல்

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு

அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது


அறிவு இல்லாமல் போகலாம். அறியாமை எப்படி இல்லாமல் போகும்?

செய்கின்ற செயல்களின் அர்த்தங்களை கண்டு பிடியுங்கள். சாவி முக்கியம் அல்ல.  செல்வம் முக்கியம்.

தேடுங்கள். காரணம் இல்லாமல் காரியம் செய்யக் கூடாது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_18.html

Monday, June 19, 2017

கந்தர் அநுபூதி - குறியை குறியாது

கந்தர் அநுபூதி  - குறியை குறியாது 


ஒரு ஊரில் இருந்து , இன்னொரு ஊருக்குப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் செல்லும் ஊர் தாங்கிய பெயர் பலகைகள் இருக்கும். சில சமயம் அந்த பெயருக்கு பக்கத்தில் அந்த ஊர் இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்றும் எழுதி இருக்கும்.

அதை காணும் போது , நாம் சரியான வழியில் தான் செல்கிறோம், வழி தவறி விடவில்லை என்று நமக்குத் தெரிய வரும்.

உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் "கன்னியாகுமாரி" என்று பெயர் பலகை இருக்கும்.

உடனே, "ஓ, இதுதான் கன்யாகுமாரியா " என்று அங்கேயே இறங்கி விடக் கூடாது. அப்படி இறங்கினால் அது எவ்வளவு நகைப்புக்கு உரிய ஒன்றாக இருக்கும். அப்படி இறங்கிய ஒருவரிடம், "இது கன்னியாகுமாரி இல்லை. இது விழுப்புரம். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும் " என்று கூறினால், "அப்ப ஏன் கன்னியாகுமாரி என்று இங்கே எழுதி இருக்கிறது " என்று சண்டை பிடித்தால், அந்த ஆளை நாம் என்னவென்று நினைப்போம்.

அவனை பித்தன், பேதை என்று சொல்வதற்கு முன்னால் , சற்று நிதானியுங்கள்.

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம்.

இறைவனை அடைய பல குறியீடுகள், இருக்கின்றன. பூஜை செய்வது, கோவிலுக்குப் போவது,  அவன் மேல் உள்ள பாடல்களை படிப்பது, திருநீறு, திருமண்  இட்டுக் கொள்வது, விரதம் இருப்பது என்று பல இருக்கின்றன. இவை ஒரு குறியீடுகள் மட்டுமே. "கன்னியாகுமாரி " என்று பெயர் பலகை இருப்பது போல.

குறியீடுகளை தாண்டி அவற்றின் ஆழ்ந்த அர்த்தங்களை புரிந்து கொண்டு , மேலே செல்ல வேண்டும். கோவில் என்றால் என்ன, சிலைகள் ஏன், பாடல்கள் எதற்கு, சமய சின்னங்கள் எதற்கு என்று அறிந்து, அவை நம்மை எங்கே செலுத்த  முனைகின்றன என்று அறிந்து அங்கே செல்ல வேண்டுமே ஒழிய , குறியீடுகளையே  பற்றிக் கொண்டு இதுதான் முடிவு என்று இருக்கக் கூடாது.

கன்னியாகுமரிக்கு போக வேண்டும் என்றால், அந்த பெயர் பலகை காட்டும் திசையில் செல்ல வேண்டும். அந்த பெயர் பலகையை கட்டிக் கொண்டு அங்கேயே இருந்து விடக் கூடாது.


மருத்துவர் ஒரு மருந்தை சீட்டில் எழுதி, "இதை மூன்று வேளை சாப்பிடுங்கள்" என்றால், அதில் உள்ள மருந்தை மூன்று வேளை சாப்பிட வேண்டும். எழுதிக் கொடுத்த  காகிதத்தை துண்டு துண்டாக்கி மூன்று வேளை சாப்பிடக் கூடாது.  மருந்து சீட்டு ஒரு குறியீடு. மருந்தை உண்டு, நோய் குணமாக வேண்டும் என்பது நோக்கம்.

பல பேர் மருந்து சீட்டை சாப்பிட்டு விட்டு, "டாக்டர்,  நீங்க சொன்னபடி சாப்பிட்டேன், நோய் குணமாகவில்லையே " என்று குறை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

இத்தனை கோவில், உற்சவம், குடமுழுக்கு, பூஜை, புனஸ்காரம், விரதம், என்றெல்லாம் இருந்தும் ஒருவரும் தன்னை உணர்ந்து ஞானியான மாதிரி தெரியவில்லை.

ஏன் ? குறியீடுகளை புரிந்து கொள்ளவில்லை.

இதைத்தான் அருணகிரி நாதர் கூறுகிறார்,

"குறியை குறியாது குறித்து அறியும்" என்று. குறிகளை விட்டு விட வேண்டும். அதை எதை குறிக்கிறதோ அங்கே போக வேண்டும்.

அறிவிப்பு பலகைகள் தேவை தான். அதை பார்த்து விட்டு, மேலே போய் கொண்டே இருக்க வேண்டும்.

பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள் 

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல் 

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு


அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது


குறியை குறியாது, அது எதை குறிக்கிறதோ அதை குறித்துக் கொள்ள வேண்டும். 

அது எவ்வாறு நிகழ்ந்தது என்றால் , "வேலினால்" நிகழ்ந்தது என்கிறார். 

அது எப்படி வேல் நிகழ்த்தும் ?

வேல் என்பது ஒரு குறியீடு. 

வேல் என்பது ஞானத்தை குறிக்கும் குறியீடு. 

எப்படி ?

வேல் எப்படி இருக்கிறது = நீண்டு இருக்கிறது, முகப்பு அகன்று இருக்கிறது, நுனி கூர்மையாக இருக்கிறது. அறிவும் அது போல ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாக இருக்க வேண்டும்.

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே " என்பார் மணிவாசகர் திருவாசகத்தில். 

அது நிகந்ழ்த பின் என்ன ஆகும் ?

உலகியல் பற்றுகள் நீங்கும். 

அப்புறம் ?

பேச்சும், சிந்தனையும் அற்றுப் போய் விடும். 

அப்புறம் ?

அறிவும், அறியாமையும் அற்றுப் போய் விடும். 

அறிவும் , அறியாமையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. 


செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

என்று கூறுகிறார்.

இங்கே கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 

'உம்' என்ற இடைச் சொல்லுக்கு பல வேலைகள் இருக்கிறது. 



" உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்."


எதிர்மறை 
சிறப்பு 
ஐயம் 
எச்சம் 
முற்றும் 
எண்ணும் 
தெரிநிலை 
ஆக்கம் 

என்ற எட்டு பொருளைத் தரும்.

உதாரணம் தந்தால் நன்கு விளங்கும். 

ஈன்றாள் பசி காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 

என்பது குறள்.

பெற்ற தாய் பசித்து இருப்பதைக் கண்டால் கூட, ஒருவன் சான்றோர் பழிக்கும் செயல்களை செய்யக் கூடாது. 

இங்கே, குறளை ஊன்றி கவனியுங்கள் 


காண்பானாயினும் என்று ஒரு உம் மை சேர்க்கிறார். 


ஈன்றாள் பசி காண்பாயின்  செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 

என்று சொல்லி இருக்கலாம்.

காண்பானாயினும் என்று சொல்வதன் மூலம், அப்போது கூட செய்யக் கூடாது என்ற எதிர் மறை பொருளைத் தருகிறது 


களவு செய்யினும் கொலை செய்யற்க என்று கூறும் போது , களவும் செய்யக் கூடாது என்ற பொருள் வரும். 

இங்கு உம்மை எதிர் மறை பொருளில் வந்தது. 

பாரதனைப் பற்றி இராமனிடம் கூறும் போது கோசலை கூறுவாள், 

"நின்னினும் நல்லன்"  என்று. 

நின்னின் நல்லன் என்று சொன்னாலும் அதே பொருள் தான். 

நின்னிலும் என்று சொல்லும் போது , "இராமா, நீ நல்லவன். பரதன் உன்னை விட நல்லவன் " என்ற பொருள் வரும்.

உயர்வு சிறப்பு உம்மை.

அடுத்தது ஐயம்.

இறுதிப் போட்டியில், இந்தியா வென்றாலும் வெல்லும் என்று சொல்லும் போது , வெல்லுமா, வெல்லாதா என்ற சந்தேகம் வருகிறது அல்லவா. இதில் உள்ள "உம் " மை நீக்கி விட்டுப் படித்துப் பாருங்கள். இந்த சந்தேகம் வராது. எனவே இது ஐயத்தை கொண்டு வரும் உம்மை.

அடுத்தது, எச்சம்.

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியரும் வந்திருந்தார் என்று கூறும் போது , மற்ற ஆசிரியர்கள் வந்திருந்தார்கள் என்பது தானாகவே புலப்படும். 

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் வந்திருந்தார் என்று சொன்னால் , மற்றவர்கள் வந்தார்களா இல்லையா என்று தெரியாது. 

தலைமை ஆசிரியரும் வந்திருந்தார் என்றால் மற்றவர்களும் வந்தார்கள் என்று புலப்படும். 

மற்றவர்கள் இங்கே எச்சம். மீதி. 

எனவே இது எச்ச உம்மை. 

அடுத்தது முற்றும்மை. 

இராமனும் பரதனும் வீட்டுக்கு வந்திருந்தார்கள் என்று கூறினால், வேறு யாரும் வரவில்லை, அவர்கள் இருவர் மட்டும் தான் வந்திருந்தார்கள் என்று ஒரு புரியும். வேறு யாரும் இல்லை. அவர்கள் மட்டும் தான் . முழு பட்டியலும் வந்து விட்டது என்பதால் இது முற்றும்மை.

ஐந்து புலன்களை அடக்க வேண்டும். 

ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும். 

இதில் , முதலாவதில், நிறைய புலன்கள் இருக்கிறது, அதில் ஐந்து புலன்களை அடக்க வேண்டும் என்று  சொல்லப்பட்டது போல தோன்றும். 

இரண்டாவதில், மொத்தமே ஐந்து புலன்கள் தான். அந்த ஐந்தையும் அடக்க வேண்டும் என்பது பெறப்படும். 

எனவே இது முற்றும்மை.

இங்கே அருணகிரி சொல்கிறார் 


"செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே."

உலகப் பற்று, சொல், சிந்தனை இந்த மூன்று தான் மொத்தமும். இதற்கு வெளியில் ஒன்றும் இல்லை. உலகியலில் பற்று விட்டாலும், உள்ளுக்குள் சொல் ஓடிக் கொண்டே இருக்கும். விட்டது சரிதானா, ஒரு வேளை சரி இல்லையோ என்ற வாதம் உள்ளுக்குள் நடந்து கொண்டே இருக்கும். அது நின்றாலும், வார்த்தை இல்லாமல் சிந்தனை மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும்.


சிந்தையும் அற்று என்று ஒரு முற்றும்மையை போடுவதின் மூலம் எல்லாம் அற்றது என்று தெரிய வருகிறது.

குறியை குறியாது, குறித்து அறிந்தால் அந்த ஞானத்தின் மூலம் உலகப் பற்று, சொல் மற்றும் சிந்தனை நிற்கும்.

அப்படி நிற்கும் போது அறிவும், அறியாமையும் அற்றுப் போய்விடும்.

பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

மிக ஆழ்ந்த பொருள் செறிவு கொண்ட பாடல்.

மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

Tuesday, January 17, 2017

கந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும்

கந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும் 


பணிவு இல்லாதது. ஆணவம் கொள்வது. தான் தான் உயர்ந்தவன் என்று எப்போதும் எண்ணிக் கொள்வது இறைவனின் குணம் என்று நேற்றுப் பார்த்தோம். அது ஒரு அரக்க குணம்.

அப்படியானால் பணிவது தெய்வ குணமா  என்ற கேள்வி எழும் அல்லவா ?

அதற்கு அருணகிரிநாதர் விடை தருகிறார்.

வள்ளியின் பாதங்களை பிடிக்கிறான் முருகன். அது மட்டும் அல்ல, "நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்கிறேன்" என்று கூறுகிறான். அவள் மீது கொண்ட மோகத்தால் அதுவும் தணியாத மோகத்தால் என்கிறார் அருணகிரிநாதர்.

பாடல்



 திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

பொருள்


திணியான = கடினமான
மனோ = மனம்
சிலை மீது = கல் மீது
உனதாள் = உனது தாள் = உனது பாதங்கள்
அணியார் = அழகான
அரவிந்தம்  = தாமரை
அரும்பு  மதோ = மொட்டு மலருமா ?
பணியா?  = எனக்கு இட்ட பணி  எது
என = என
வள்ளி பதம் பணியும் = வள்ளியின் பாதங்களை பணியும்
தணியா = தணியாத, எப்போதும் உள்ள
அதிமோக = அதிக மோகத்தை கொண்ட
 தயா பரனே.= கருணை கொண்டவனே

என் மனம் கடினமானது. கல் போன்றது. அதில் உன் திருவடித் தாமரை மலருமா ?

மலராது.

ஆனால், நீ நினைத்தால் முடியும் . ஏன் என்றால் நீ உன் அடியவர்களிடத்தில்  அன்பும்,  கருணையும் கொண்டவன். நீ நினைத்தால் உன் திருவடிகள் என் மனதில் பதியும் என்கிறார்.

வள்ளியின் பாதங்களை முருகன் பணிகிறான் . பணிந்து, நீ எனக்கு இட்ட வேலை என்ன  என்று கேட்கிறான்.

தனக்காக எவ்வளவு துன்பங்களை தாங்கி கொண்டவள் அவள் என்று நினைக்கிறான்.

காடு மேடெல்லாம் அலைந்து அவள் கால் வலிக்காதா ? கல்லும் முள்ளும் குத்தி  அவள் கால் நோகாதா என்று நினைத்தது அவள் பாதங்களை பிடிக்கிறான்.

நீ கஷ்டப் பட்டது எல்லாம் போதும். ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் சொல் என்று  அவளை வேண்டி நிற்கிறான்.

ஒவ்வொரு வீட்டிலும் இது நடந்தால் குடும்பம் எப்படி இருக்கும் ?

மனைவியின் தியாகங்களை, துன்பங்களை கணவன் அறிந்து அவள் மேல் கருணை கொண்டு, அவள் பாதங்களை பிடித்து , அவள் மேல் காதல் கொண்டால்  தாம்பத்தியம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.

மனைவியின் காலை நான் பிடிப்பதா என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கும், முந்தைய தலைமுறைக்கும் இனி வரும் தலை முறைகளுக்கும்  அருணகிரிநாதர் பாடம் சொல்கிறார்.

வள்ளியின் பாதங்களை முருகன் பணிந்தான். அவள் இட்ட கட்டளையை கேட்டான். அவள் மேல் தீராத மோகம் கொண்டான்.

ஒரு புறம்  இராவணன்....படுக்கை அறையிலும் வணங்கா முடி.

இன்னோரும் புறம் முருகன்...வள்ளியின் பாதம் பணியும் , அவளின் ஆணையை கேட்கும் முருகன்.

இலக்கியம் படிப்பதில் உள்ள இன்பம் இதுதான்.

பணிந்து பாருங்கள்.  சொர்கம் தெரியும்.