Showing posts with label Siva Puraanam. Show all posts
Showing posts with label Siva Puraanam. Show all posts

Wednesday, January 7, 2015

சிவபுராணம் - சிரம் குவிவார் ஓங்குவிக்கும்

சிவபுராணம் - சிரம் குவிவார் ஓங்குவிக்கும் 




வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

கிரிகெட் விளையாட்டைப் பார்த்து இருக்கிறீர்களா ? ஒருவன் அவுட் ஆனவுடன் அவனுக்கு பந்தைப் போட்டவன் என்னவெல்லாம் கோஷ்டி காண்பிப்பான் ? கையை மடக்குவதும், கத்துவதும் என்று ஏறக்குறைய எல்லோருமே அப்படித்தான் செய்கிறார்கள்.

கால்பந்து விளையாட்டில் கோல் அடித்தவன் செய்யும் அங்க சேஷ்டைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கும்.

ஏன் அந்த மாதிரி செய்கிறார்கள் ?

வெற்றி அடையும் போது  உடல் அதை வெளிப் படுத்துகிறது.

கோபம் வந்தால் பல்லைக் கடிக்கிறோம்.

பயம் வந்தால் சுருண்டு கொள்கிறோம்.

மன நிலைக்கு தங்குந்தவாறு உடல் நிலை மாறு படுகிறது.

சந்தோஷமாக இருப்பவனையும்,  சோகமாக இருப்பவனையும் அவன் நடக்கும்  விதம், உட்காரும் விதம், அவன் பேசும் பேச்சு இவற்றைக் கொண்டு நாம்  தெரிந்து கொள்ள முடியும்.

யோக சாஸ்திரம் கண்டு சொன்ன மகத்தான உண்மை என்னவென்றால் எப்படி மன நிலை உடலை பாதிக்கிறதோ, அதே போல உடல் நிலை மனதைப் பாதிக்கும் என்று.

உதாரணமாக,

நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம் முதுகு நேராக இருக்கும், நம் மூச்சு வேகமாக இருக்கும்...

நாம் சோகமாக இருந்தால், முதுகு கூன் போடும், மூச்சு நீண்டதாக இருக்கும்.

இப்போது சற்று மாற்றிப் பார்ப்போம்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது சற்று கூன் போட்டு அமருங்கள், நீண்ட மூச்சு விட்டுப்  பாருங்கள்.....சிறிது நேரத்தில் உங்கள் மகிழ்ச்சி பறந்து போய்விடும்....சோகம் வந்து ஒட்டிக் கொள்ளும்.

அதே போல் சோகமாக இருக்கும் போது நேராக அமர்ந்து, வேக வேக மாக மூச்சு விட்டுப் பாருங்கள் ... சோகமாக இருக்க முடியாது.

ஒவ்வொரு மன நிலையம், ஒரு உடலின் நிலையைப் பொறுத்து அமைகிறது.

ஒவ்வொரு உடல் நிலையும், ஒரு மன நிலையைப் பொறுத்து அமைகிறது.

உடலும் மனமும்  ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

மனதை மாற்ற வேண்டுமா ? எப்போதும் மிகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா ? உடல்  நிலையை மாற்றுங்கள்...நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது எப்படி இருக்கிறீர்கள்  என்று கவனித்துப் பாருங்கள். அப்படி செய்தால் நீங்கள் தானகவே  மகழ்ச்சி அடைவீர்கள்.

யோகம் சொல்வது இதைத்தான்.

உடலையும், உள்ளத்தையும் இணைப்பது யோகம். இவற்றை ஒன்று படுத்துவது  யோகம்.

சரி , அதற்கும் இந்த சிவ புராண பாடலுக்கும் என்ன சம்பந்தம் ?



Thursday, January 1, 2015

சிவ புராணம் - சொல்லற் கரியானைச் சொல்லி

சிவ புராணம் - சொல்லற் கரியானைச் சொல்லி




தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

சிவ புராணத்தின் கடைசிப் பகுதி.

தில்லையுள் கூத்தனே = இந்த உலகம் அலைந்து கொண்டே இருக்கிறது. கூத்தாடிக் கொண்டிருக்கிறது. சலனம் இல்லாத ஒன்று இல்லவே இல்லை. எலெக்ட்ரான், ப்ரோடான் என்று அனைத்து துகள்களும் சுழன்று கொண்டே இருக்கின்றன. கிரகங்கள், பால் வெளி, கலக்சி (galaxy ) என்று அனைத்தும் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.

சிவனின் வடிவைப் பார்த்தால்  தெரியும். சுழன்று ஆடும் போது ஒரு புகைப் படம் பிடித்த  மாதிரி இருக்கும். ஒரு frame அப்படியே உறைந்த மாதிரியான தோற்றம்.

ஏன் இந்த  உலகம் சுழன்று கொண்டே  இருக்கிறது ? ஏன் இந்த துகள்கள் சுழன்று கொண்டே  இருக்கின்றன. ஒரு இடத்தில் நிலையாய் நின்றால் என்ன ?

இதயம் துடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நுரையீரல் சுருங்கி விரிந்து கொண்டே இருக்க வேண்டும்.

நின்று போனால் உயிர்ப்பு நின்று போகும்.

உயிராய், இயக்கமாய் இருப்பவன் அவன்.

சுழற்சி, இயக்கம் இறை தத்துவம்.

தென் பாண்டி நாட்டானே .

தில்லையுள் கூத்தனே என்றார் முதலில். அடுத்து தென் பாண்டி நாட்டானே. பாண்டிய  நாட்டில் உள்ளவனே என்கிறார்.

அங்கும் இருப்பான். இங்கும் இருப்பான்.

அல்லல் பிறவி அறுப்பானே = இந்தப் பிறவி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது....துன்பம் நிறைந்த பிறவி இது.  சங்கிலித் தொடர் போல. அந்தத் தொடரை அறுப்பவன் அவன்.

ஓம் என்று சொல்லுவதற்கு அரியவன்.

சொல்லி = சொல்ல முடியாவிட்டாலும், எப்படியாவது சொல்லி.

திருவடிக்கீழ்ச் = அவனுடைய திருவடியின் கீழ்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் = இதுவரை  சொல்லிய பாட்டின் பொருள் அறிந்து சொல்லுவார் என்று சொல்ல வில்லை. பொருள் உணர்ந்து சொல்லுவார்.

செல்வர் = செல்வார்கள். பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் ஒரு இடத்திற்கு செல்வார்கள். அது எந்த இடம் தெரியுமா ?

சிவபுரத்தி னுள்ளார் = சிவ புரம் செல்வார்கள். சிவன் இருக்கும் இடத்திற்கே செல்வார்கள். 

சிவனடிக்கீழ்ப் = அங்கே சென்று, அவனின் திருவடியின் கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. = எல்லோரும் போற்றும் படி இருப்பார்கள்.

எல்லோரும் போற்றும் படி, சிவபுரம் சென்று, சிவனின் அடியின் கீழ் இருப்பார்கள்.

சிவ புராணம்  முற்றும்....அதாவது என் உரை முற்றும். சிவ புராணத்திற்கு உரை சொல்லி  முடியாது.

திருவாசகத்திற்கு  பொருள் என்ன என்று மாணிக்க வாசகரிடமே கேட்டார்கள்.

இதுதான் பொருள் என்று இறைவனின் திருவடியைக் காட்டிவிட்டு  அதில் அவர் மறைந்து விட்டார்   என்று ஒரு வரலாறு உண்டு.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் .....உணர்ந்து பாருங்கள்....
நாவில் தித்திக்கும்  திருவாசகம்.

திருவாசகம் எனும் தேன் என்பார் வள்ளலார்.

நன்றி . வணக்கம்.

Tuesday, October 21, 2014

சிவ புராணம் - மாற்றமாம் வையகத்தே 


பாடல்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் 
தேற்றனே தேற்றத் தெளிவே  என் சிந்தையுள்
ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே

பொருள்

மாற்றமாம் = மாறுதலை உள்ள

வையகத்தின் = உலகில்

வெவ்வேறே = வேறு வேறானவற்றை

வந்தறிவாம் = வந்து அறிவாம்

தேற்றனே = தெளிவானவனே

தேற்றத் தெளிவே = தெளிவின் தெளிவே

என் சிந்தையுள் = என் சிந்தனையுள்

ஊற்றான = ஊற்றான

வுண்ணா ரமுதே = உண்பதற்கு அருமையான அமுதம் போன்றவனே 

உடையானே  = எல்லாவற்றையும் உடையவனே

மிக மிக எளிமையாகத் தோன்றும் பாடல் வரிகள்...ஆழமான அர்த்தம் கொண்டவை 

இந்த உலகில் மாறாதது எது ? எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. தத்துவங்களும், அறிவியல் உண்மைகளும் கூட மாறிக் கொண்டே இருக்கின்றன.

ஒன்று மற்றொன்றாக மாறி மாறி வருகிறது.எதுவும் நிரந்தரம் இல்லை.

இது பிடிக்கும், இது பிடிக்கும்,
இவர் நல்லவர், இவர் கெட்டவர்,
அவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர்

என்று நினைப்பது எல்லாம் மாறிக் கொண்டே வரும்.

இன்று பிடிப்பது நாளை பிடிக்காமல் போகும்.

இன்று விரும்புவதை நாளை நாமே வெறுப்போம்.

"மாற்றமாம் வையகத்தே" என்றார்.

நாளும் மாறும் வையகம் இது.

"வெவ்வேறே வந்தறிவாம் "

வேறு வேறாக தெரிவது எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.


இப்படி எல்லாம் மாறிக் கொண்டே இருந்தால், எப்படி இந்த உலகை நாம் எப்படித்தான்  புரிந்து கொள்வது.

இந்த குழப்பத்திற்கு எல்லாம் தெளிவு அவன்.

"தேற்றேனே , தேற்றத் தெளிவே"

இந்தத் தெளிவு அவருக்கு சிந்தனயில் வந்தது . எப்படி வந்தது ?

படித்துத் தெரிந்து கொண்டாரா ? யாரும் சொல்லித் தந்தார்களா ? பின் எப்படி அறிந்தார் ?

அவரே சொல்கிறார்


Wednesday, October 15, 2014

சிவ புராணம் - சொல்லாத நுண் உணர்வாய்

சிவ புராணம் - சொல்லாத நுண் உணர்வாய் 


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே


சொல்லாத நுண் உணர்வாய்

இறைவன் என்றால் யார் ? அவன் எப்படி இருப்பான் ? எங்கே இருப்பான் ? என்ற கேள்விகள்   ஒரு புறம்  இருக்கட்டும்.

இந்த உலகத்திற்கு வருவோம். 

லட்டு, ஜிலேபி போன்ற பல இனிப்புகளை நாம்  சுவைக்கிறோம். இனிப்பு என்றால் ? அந்த இனிப்பு எப்படி  இருக்கும் ? 

தாய் , தந்தை, அண்ணன் ,  தம்பி, அக்கா,தங்கை, கணவன் , மனைவி என்ற பல உறவுகளை  நாம் அனுபவிக்கிறோம். தாய்மை என்றால் என்ன ? மனைவியின் பாசம்  என்றால் என்ன? குழந்தையின் அன்பு என்றால் என்ன ? 

இவற்றை நம்மால் விளக்க முடியுமா ?

முடியாது.

உணர்வுகளை அனுபவிக்க  முடியும்.  உணர முடியும். ஆனால் விளக்க முடியாது. 

அன்றாடம் அனுபவிக்கும் உணர்வுகளுக்கே இந்த மாதிரி என்றால், இறை உணர்வை  என்ன என்று சொல்லுவது. 

அது இவற்றை எல்லாம் விட மிக நுண்மையானது. 

ஆழ்ந்து உணர வேண்டிய ஒன்று. 

எனவே 

"சொல்லாத நுண் உணர்வு "  என்றார்.

இது வரை யாரும் சொல்லாதது. சொல்லவும் முடியாது. 


உணர்வு அறிய மெய் ஞானம் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்
தவம் முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்பார் பிறிதொரு இடத்தில் 

அது சிந்தனை அற்ற இடம். 

Saturday, October 11, 2014

சிவ புராணம் - ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

சிவ புராணம் - ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற   


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 


-------------------------------------------------/பாகம் 2 /-----------------------------------------------------------

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

காக்கும் என்னுடைய காவலனே. 
காண்பதற்கு அரிதான பேரொளியே. 

இதில் அர்த்தம் சொல்ல என்ன இருக்கிறது ?

நாம் நம் பிள்ளைகளை வெளியே அனுப்பும் போது "பாத்து போ, சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்த்து அப்புறம் கடந்தால் போதும்" என்று சில  பல புத்தி மதிகளைச் சொல்லி அனுப்புவோம்.

நாம் நம் பிள்ளைகளை காப்பது நம் வீட்டு வாசல் வரைதான். அதைத்தாண்டி நம்மால் அவர்கள் பின்னாலேயே போய் எல்லா இடத்திலும் அவர்களை பாதுகாக்க முடியாது. 

ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது ?

அங்கங்கே போலீஸ் நிலையம் வைத்து நாட்டுக்குள் அதன் மக்களை காக்கிறது. 

இராணுவத்தின் துணை கொண்டு வெளி நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கிறது. 

நீதி மன்றங்களை நிறுவி கெட்டவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது. 

எச்சரிக்கை பலகைகளை வைத்து நமக்குத் துன்பம் வராமல் காக்கிறது. 

ஒரு அரசாங்கம் அவ்வளவுதான் செய்ய முடியும். 

ஒரு அரசாங்கத்தின் எல்லை அதன் அரசு உள்ள வரைதான். வெளி நாட்டுக்குப்போய் விட்டால் உள் நாட்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. 

பிறப்புக்கு முன், இறப்புக்கு பின் அது ஒன்றும் செய்ய முடியாது. 

இறைவனுக்கு அப்படி ஒன்றும் எல்லை கிடையாது. அவன் எப்போதும் , எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும் நம்மை காக்கிறான். 

எனவே, காக்கும் என் காவலனே என்றார். 

எல்லா நேரமும் அவன் நம்மை காக்கிறான் என்றால் எங்கே அவன் ? அவனை நாம் கண்டதே இல்லையே 

"காண்பரிய"வன் அவன். காண்பதற்கு அரியவன் அவன். 

ஒரு வேளை காண முடியாத படி ஒரே இருள் வடிவாக இருப்பானோ என்றால் 

"பேரொளி" அவன்.

காண்பரிய பேரொளியே 

அது எப்படி, பேரொளி என்றால் காண முடியாமல் எப்படி இருக்கும் ? 

எவ்வளவு பெரிய ஒளி என்றாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டால் ஒன்றும் தெரியாது. 

விழித்தால் தானே சூரிய சூரிய ஒளியே தெரியும்.

தூங்குபவனுக்கு பகல் என்ன இரவு என்ன.

கண்ணை மூடிக் கொண்டு சூரியன் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லுபவர்களை என்ன சொல்ல ?

அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்

திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!


என்பார் மணிவாசகர் திருப்பள்ளி எழுச்சியில்

இறைவன் கருணை சூரிய ஒளி போல் எங்கும் பரவி இருப்பதை அடிகள் காண்கிறார்.


உதிக்கின்ற செங்கதிர் என்று அபிராமியின் முகத்தை கூறுவார் அபிராமி பட்டர்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

கண் விழித்துப் பார்த்தால் தெரியும்.

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்....

மேலும் சிந்திப்போம்



------------------------------------//பாகம் 3 //----------------------------------------------------------------------

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற


ஆற்றில் நீர் வரும்போது இரண்டு கரைகளுக்கு உட்பட்டுத் தான் வரும். அதுவே  கரையை உடைக்கும் போது வெள்ளமாகி வரும். 

புலன்கள் மூலம் கிடைக்கும் இன்பம் ஒரு எல்லைக்கு உட்பட்டது. சில நாள் இருக்கலாம், சில மணி நேரம் இருக்கலாம், சில நிமிடம் நிலைக்கலாம். எப்படியாயினும்  அதற்கு ஒரு முடிவு, எல்லை உண்டு. 

இறைவனை அறிந்து அதன் மூலம் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை. 

இதையே அபிராமி பட்டரும் , களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை  என்றார்.

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.


வெள்ளம் உயர்ந்த இடத்தில் இருந்து தாழ்ந்த இடம் நோக்கிப் பாயும். நாம்  மனதை  ஆணவம், பொறாமை, கோபம், காமம் போன்றவற்றை இட்டு நிரப்பி வைக்காமல்  காலியாக வைத்து இருந்தால் இறை அருள் என்ற வெள்ளம் தானாகவே  ஓடி வந்து நம் உள்ளத்தை நிரப்பும். 

இதையே அடிகள் பின்னொரு இடத்தில் கூறுவார் 

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் 
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் 
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப் 
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு 
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் 
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா 
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் 
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே.

அவன் தலையில் ஆகாய கங்கை இருக்கிறது. அது மேலிருந்து கீழே விழுந்து ஓடி வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்து இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த அருள் புனல் நம்மை நோக்கி ஓடி வரும். 

அவன் தலையில் கங்கையை வைத்து இருக்கிறான் என்றால் ஏதோ ஆற்றை தலையில் வைத்து இருக்கிறான் என்று கொள்ளக் கூடாது. அது ஒரு குறியீடு. 

வெள்ளம் சரி. ஆனால் வெள்ளம் வந்தால் அது எப்போதும் நாசத்தையே விளைவிக்கும். வீடு வாசல்களை அடித்துக் கொண்டு போய் விடும். பயிர் பச்சைகளை  அழிக்கும். இறைவனின் அருள் வெள்ளமும் அப்படித்தானோ என்று  கேட்டால் , இல்லை. இது வேறு விதமான வெள்ளம். 

"இன்ப வெள்ளம்" என்றார் மணிவாசகர். 

இன்பத்தை மட்டுமே தரும் வெள்ளம். 


அடுத்த சொல் "அத்தா". 

அத்தா என்ற சொல்லுக்கு அப்பா, தந்தை என்று பொருள். 

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா 
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
 வைத்தாய்பெண் ணைத்தென்பால் வெண்ணைய்நல்லூர் அருள்துறையுள் அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே!

என்பார் சுந்தரர்.

அடுத்த சொல் "மிக்காய்"

மிகுதியாய்.

அனைத்திலும் அவன் இருக்கிறான். அவற்றைத் தாண்டி மிகுதியாகவும் இருக்கிறான். 



 


Tuesday, October 7, 2014

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 2

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 2


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 


-------------------------------------------------/பாகம் 2 /-----------------------------------------------------------

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

காக்கும் என்னுடைய காவலனே. 
காண்பதற்கு அரிதான பேரொளியே. 

இதில் அர்த்தம் சொல்ல என்ன இருக்கிறது ?

நாம் நம் பிள்ளைகளை வெளியே அனுப்பும் போது "பாத்து போ, சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்த்து அப்புறம் கடந்தால் போதும்" என்று சில  பல புத்தி மதிகளைச் சொல்லி அனுப்புவோம்.

நாம் நம் பிள்ளைகளை காப்பது நம் வீட்டு வாசல் வரைதான். அதைத்தாண்டி நம்மால் அவர்கள் பின்னாலேயே போய் எல்லா இடத்திலும் அவர்களை பாதுகாக்க முடியாது. 

ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது ?

அங்கங்கே போலீஸ் நிலையம் வைத்து நாட்டுக்குள் அதன் மக்களை காக்கிறது. 

இராணுவத்தின் துணை கொண்டு வெளி நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கிறது. 

நீதி மன்றங்களை நிறுவி கெட்டவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது. 

எச்சரிக்கை பலகைகளை வைத்து நமக்குத் துன்பம் வராமல் காக்கிறது. 

ஒரு அரசாங்கம் அவ்வளவுதான் செய்ய முடியும். 

ஒரு அரசாங்கத்தின் எல்லை அதன் அரசு உள்ள வரைதான். வெளி நாட்டுக்குப்போய் விட்டால் உள் நாட்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. 

பிறப்புக்கு முன், இறப்புக்கு பின் அது ஒன்றும் செய்ய முடியாது. 

இறைவனுக்கு அப்படி ஒன்றும் எல்லை கிடையாது. அவன் எப்போதும் , எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும் நம்மை காக்கிறான். 

எனவே, காக்கும் என் காவலனே என்றார். 

எல்லா நேரமும் அவன் நம்மை காக்கிறான் என்றால் எங்கே அவன் ? அவனை நாம் கண்டதே இல்லையே 

"காண்பரிய"வன் அவன். காண்பதற்கு அரியவன் அவன். 

ஒரு வேளை காண முடியாத படி ஒரே இருள் வடிவாக இருப்பானோ என்றால் 

"பேரொளி" அவன்.

காண்பரிய பேரொளியே 

அது எப்படி, பேரொளி என்றால் காண முடியாமல் எப்படி இருக்கும் ? 

எவ்வளவு பெரிய ஒளி என்றாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டால் ஒன்றும் தெரியாது. 

விழித்தால் தானே சூரிய சூரிய ஒளியே தெரியும்.

தூங்குபவனுக்கு பகல் என்ன இரவு என்ன.

கண்ணை மூடிக் கொண்டு சூரியன் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லுபவர்களை என்ன சொல்ல ?

அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்

திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!


என்பார் மணிவாசகர் திருப்பள்ளி எழுச்சியில்

இறைவன் கருணை சூரிய ஒளி போல் எங்கும் பரவி இருப்பதை அடிகள் காண்கிறார்.


உதிக்கின்ற செங்கதிர் என்று அபிராமியின் முகத்தை கூறுவார் அபிராமி பட்டர்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

கண் விழித்துப் பார்த்தால் தெரியும்.

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்....

மேலும் சிந்திப்போம்




Sunday, October 5, 2014

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 1

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 1 


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே 

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 




Wednesday, October 1, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 7

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 7


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே



என்பார் திருஞானசம்பந்தர்.


----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------

யாவையுமாய் அல்லையுமாம்


இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய் 

அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.

எது என்ன  புதுக் குழப்பம் ?

எல்லாம் அவன் என்பது புரிகிறது. 

அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?

ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?

சிந்திப்போம்.

அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப்  பார்ப்போம். 

 ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற 
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'

அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும்  உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன். 

தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.

இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை. 

தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண்  இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.


அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.

அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.

சிலையில், படத்தில் அவனை வணங்கலாம். 

ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி  இருக்கிறான். 

இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.  

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.

அவை அன்றியும் அவனை நினைப்பது.

யாவையுமாய் அல்லையுமாய்

மேலும் சிந்திப்போம்

-------------------------------------------------/ பாகம் 3 /----------------------------------------------------------

சோதியனே துன் இருளே 

ஜோதி தன்னையும் விளக்கும். மற்ற பொருள்களையும் விளங்க வைக்கும். ஒளி  உண்மையை அறிய உதவும். 

ஜோதி சரி, அது எப்படி இறைவன் இருளாக இருக்க முடியும் ? அதுவும் அடர்ந்த  இருள் (துன் இருள்) 

ஜோதி அறிவு , ஞானம் என்றால் 

இருள் என்பது அஞ்ஞானம் என்று  ஆகும். இறைவன் எப்படி அஞ்ஞானம் ஆவான் ? 

மற்ற மதங்களில் ஒரு சிக்கல் உண்டு. 

இறைவன் என்றும் , சாத்தான் என்றும் இரண்டு கூறுகளாக உலகை பிரிக்கிறார்கள். நல்லது எல்லாம் இறைவன் செய்வது. கெடுதல் எல்லாம் சாத்தான்  செய்வது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு சிக்கல் உண்டு. 

அப்படி என்றால் சாத்தான் இறைவனுக்கு நிகரானவானா என்று ஒரு சிக்கல்.

சாத்தானை படைத்தது யார் என்று இன்னொரு சிக்கல். 

இறைவன் தான்  சாத்தானைப் படைத்தான் என்றால் , ஏன் இறைவனே அந்த சாத்தானை அழிக்கக்  கூடாது ? 

இதற்கு சரியான விடை இல்லை. 

நம் மதம் இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. 

நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது. 

இன்னும் சொல்லப் போனால் நல்லது கெட்டது எல்லாம் நாம் தரும் பெயர்கள். செயல்கள் நடக்கின்றன. நாம் அவற்றிற்கு நல்லது , கெட்டது என்று பெயர் தருகிறோம். 


பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மணிவாசகர்  சொல்லுவார்.

இருட்டில் ஒன்றும் தெரியாது. தொட்டுத் தடவி ஒரு மாதிரி உணரமுடியும். ஆனால் முழுமையாக விளங்காது. அது போல இறைவனையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.  சில பல நிகழ்வுகளில், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர முடியுமே அன்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

இதையே சொல்ல வந்த வள்ளுவர் ...

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்      
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)                


இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

 என்றார்.

இருள் சேரும், இரு வினையும் சேராது. 

அது ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் ஜோதி. அதை நாம் எங்கே முழுமையாக  அறிந்து கொள்வது ? 

அந்த ஜோதியை நம் அறியாமை என்ற இருள் , கரி, மூடி இருக்கிறது. அறியாமை விலகும் போது ஜோதியின் ஒளி  வெளிப்படும்.

மேலும் சிந்திப்போம் 


------------------------------------/பாகம் 4/----------------------------------------------------------------------

தோன்றாப் பெருமையனே

கிருஷ்ண ஜெயந்தி உண்டு.

விநாயக சதுர்த்தி உண்டு.

சிவ ஜெயந்தி, சிவ சதுர்த்தி கிடையாது.

ஏன் ?

சிவன் தோன்றியது என்று ஒரு நாள் கிடையாது.

அவன் தோன்றியவன் இல்லை.

எப்போதும் இருப்பவன்.

அது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், அவனுடைய பெருமைகள் நமக்குத் தோன்றாது.

"அடடா இது எனக்கு தோணாம போச்சே " என்று சொல்லுவது இல்லையா அது போல.

அப்படி என்ன பெருமை ?

சிந்திப்போம்....

--------------------------------------பாகம் 5 -----------------------------------------------------------------------

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே


தொடக்கம், நடு , முடிவு என்று மூன்றுமாக இருப்பவன். இவை இல்லாமலும் இருப்பவன். 

அது எப்படி ? 

அவனே தொடக்கம், நடு முடிவு என்று இருக்கிறான், இவை இல்லாமலும் இருக்கிறான் என்பது எப்படி சாத்தியமாகும் ?


தொடக்கம், நடு , முடிவு என்பது காலத்தின் பரிணாமம். அவன் காலத்தை கடந்தவன். காலம் இல்லாத ஒன்றுக்கு தொடக்கம், நடு , முடிவு எப்படி இருக்கும். 

குழப்பமாக இருக்கிறது அல்லவா ?

சற்று நிதானமாக சிந்திப்போம். 

காலம் என்பது என்ன ? காலம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறதா ? 

காதலிக்காக காத்து இருக்கும் போது ஒரு நிமிடம் கூட யுகம் போல இருக்கிறது. 

காதலியுடன் இருக்கும் போது யுகம் கூட நிமிடம் போல பறந்து விடுகிறது. 

எப்படி ? இது எதனால் நிகழ்கிறது ?

மனம் ஒன்றிப் போகும் போது காலம் நின்று  போகிறது. யுகம் கூட  நொடியாக உறைந்து போகிறது. 

மனம் ஒன்றாத போது காலம் நீண்டு கொண்டே போகிறது என்பது புரிகிறது அல்லவா ?

ஞானிகளுக்கு கடந்த காலம், எதிர் காலம் என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறார்கள். 

நாமோ, ஒன்று இறந்த காலத்தில் அல்லது எதிர் காலத்தில் வாழ்கிறோம். நாம் நிகழ் காலத்தில்  வாழ்வதே இல்லை. 

மனம் ஒன்று பட்டவர்களுக்கு அவன் ஆதி, அந்தம், நடு அல்லாதவன். 

மனம் ஒன்று படாதவர்களுக்கு அவன் ஆதி, அந்தம் நடுவாகி நின்றவன். 

மேலும் சிந்திப்போம் 

---------------------------------------------பாகம் 6 -----------------------------------------------------------------

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே


ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 

அது என்ன ஈர்த்து ?

காந்தம் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு இரும்புத் துண்டும் ஒரு மரகட்டையும் இருக்கிறது.  காந்தம் அந்த இரும்பை மெல்ல மெல்ல கவர்ந்து இழுக்கும். 

கிட்ட வர வர அதன் ஈர்ப்பு விசை அதிகமாகி சர்ரென்று வேகமாய் போய் ஒட்டிக் கொள்ளும். 

ஆனால், அந்த மரக் கட்டை இருக்கிறதே, அதை தூக்கி காந்தத்தின் மேல் வைத்தாலும்  ஒட்டாது. அது காந்தத்தின் பிழை அல்ல. மரத் துண்டின் பிழை. 

சில பேர் நாள் எல்லாம் பூஜை செய்வார்கள், கோவிலுக்குப் போவார்கள், பாராயாணம்  செய்வார்கள். ஒன்றும்  நடக்காது. 

மணிவாசகர், குதிரை வாங்க சென்று கொண்டிருந்தார். அவரை, குருவாக வந்து  ஆண்டவன் ஆட் கொண்டான். 

அவர் இரும்பாய் இருந்தார். காந்தம் இழுத்துக் கொண்டது. 

அது மட்டும் அல்ல, காந்தத்தோடு ஒட்டிய இரும்பு நாளடைவில் காந்தத் தன்மை பெறும் . அது போல, இறைவனோடு ஒட்டி இருக்கும் போது , நாமும் இறை தன்மை  அடைவோம். 

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

சரி, அது என்ன எந்தை ?

ஒரு தந்தை தன் மகன் நல்லவனாக , வல்லவனாக வர வேண்டும் என்று அவனுக்கு என்னவெல்லாம் செய்வான் ? ஒரு கைமாறும் கருதாமல் எப்படி தந்தை  மகனுக்கு உதவிகள் செய்வானோ அது போல இறைவனும்   தனக்கு அருள்  செய்தான் என்று  கூறுகிறார்.மணிவாசகர். 

மேலும் சிந்திப்போம்

--------------------------------------   பாகம் 7 ------------------------------------------------------------

கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்


கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தில் 

மெய் ஞானம் - உண்மையான ஞானம். அது என்ன  உண்மையான அறிவு, உண்மை இல்லாத அறிவு ?

உண்மையான பொருள் பற்றிய ஞானம். 

முந்தைய வரிகளில் "பொய்யாயினவெல்லாம் போய் அகல வந்தருளி " என்ற  வேண்டினார். 

மெய் ஞானம் கூட மேலோட்டமான ஞானம் அல்ல, கூர்மையான மெய் ஞானம். 

கூர்த்த மெய் ஞானத்தால் 

சிலருக்கு அறிவு நிறைய இருக்கும். நிறைய படித்து இருப்பார்கள். ஆனால் படித்தவற்றை உணர மாட்டார்கள். கிளிப்பிள்ளை போல புத்தகத்தில்  உள்ளவற்றை, மற்றவர்கள் சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்வார்கள். அறிவு இருக்கும். உணர்வு  இருக்காது.

மணிவாசகர் சொல்கிறார் 

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு " உணர்வார்" தம் கருத்தில் 

அறிவு உணரப் படவேண்டும். 

அணி கொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண்கிலார் என்றான் மகாகவி

கவிதை  புரியும்.  கவியின்  உள்ளம் புரியாது பலபேருக்கு 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றார் தெய்வப் புலவர் சேக்கிழார் 

இறைவனை உணர முடியும், ஓத முடியாது. 

அறிவும் இருக்க வேண்டும். உணர்வும் இருக்க வேண்டும். அவர்கள் கருத்தில் இறைவன் இருப்பான். 

ஞானம் இருக்க வேண்டும். 
மெய் ஞானம் இருக்க வேண்டும்.
கூர்த்த மெய் ஞானம் இருக்க வேண்டும் 
அந்த ஞானத்தோடு கூட உணர்வும் இருக்க வேண்டும் 

அப்படி அறிவும் உணர்வும் கொண்டவர்களின் கருத்தில் அவன் இருப்பான்.

எப்படி இருப்பான் தெரியுமா ?

மேலும் சிந்திப்போம் 




Monday, September 29, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 6

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 6


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே



என்பார் திருஞானசம்பந்தர்.


----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------

யாவையுமாய் அல்லையுமாம்


இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய் 

அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.

எது என்ன  புதுக் குழப்பம் ?

எல்லாம் அவன் என்பது புரிகிறது. 

அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?

ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?

சிந்திப்போம்.

அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப்  பார்ப்போம். 

 ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற 
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'

அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும்  உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன். 

தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.

இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை. 

தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண்  இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.


அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.

அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.

சிலையில், படத்தில் அவனை வணங்கலாம். 

ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி  இருக்கிறான். 

இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.  

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.

அவை அன்றியும் அவனை நினைப்பது.

யாவையுமாய் அல்லையுமாய்

மேலும் சிந்திப்போம்

-------------------------------------------------/ பாகம் 3 /----------------------------------------------------------

சோதியனே துன் இருளே 

ஜோதி தன்னையும் விளக்கும். மற்ற பொருள்களையும் விளங்க வைக்கும். ஒளி  உண்மையை அறிய உதவும். 

ஜோதி சரி, அது எப்படி இறைவன் இருளாக இருக்க முடியும் ? அதுவும் அடர்ந்த  இருள் (துன் இருள்) 

ஜோதி அறிவு , ஞானம் என்றால் 

இருள் என்பது அஞ்ஞானம் என்று  ஆகும். இறைவன் எப்படி அஞ்ஞானம் ஆவான் ? 

மற்ற மதங்களில் ஒரு சிக்கல் உண்டு. 

இறைவன் என்றும் , சாத்தான் என்றும் இரண்டு கூறுகளாக உலகை பிரிக்கிறார்கள். நல்லது எல்லாம் இறைவன் செய்வது. கெடுதல் எல்லாம் சாத்தான்  செய்வது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு சிக்கல் உண்டு. 

அப்படி என்றால் சாத்தான் இறைவனுக்கு நிகரானவானா என்று ஒரு சிக்கல்.

சாத்தானை படைத்தது யார் என்று இன்னொரு சிக்கல். 

இறைவன் தான்  சாத்தானைப் படைத்தான் என்றால் , ஏன் இறைவனே அந்த சாத்தானை அழிக்கக்  கூடாது ? 

இதற்கு சரியான விடை இல்லை. 

நம் மதம் இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. 

நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது. 

இன்னும் சொல்லப் போனால் நல்லது கெட்டது எல்லாம் நாம் தரும் பெயர்கள். செயல்கள் நடக்கின்றன. நாம் அவற்றிற்கு நல்லது , கெட்டது என்று பெயர் தருகிறோம். 


பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மணிவாசகர்  சொல்லுவார்.

இருட்டில் ஒன்றும் தெரியாது. தொட்டுத் தடவி ஒரு மாதிரி உணரமுடியும். ஆனால் முழுமையாக விளங்காது. அது போல இறைவனையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.  சில பல நிகழ்வுகளில், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர முடியுமே அன்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

இதையே சொல்ல வந்த வள்ளுவர் ...

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்      
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)                


இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

 என்றார்.

இருள் சேரும், இரு வினையும் சேராது. 

அது ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் ஜோதி. அதை நாம் எங்கே முழுமையாக  அறிந்து கொள்வது ? 

அந்த ஜோதியை நம் அறியாமை என்ற இருள் , கரி, மூடி இருக்கிறது. அறியாமை விலகும் போது ஜோதியின் ஒளி  வெளிப்படும்.

மேலும் சிந்திப்போம் 


------------------------------------/பாகம் 4/----------------------------------------------------------------------

தோன்றாப் பெருமையனே

கிருஷ்ண ஜெயந்தி உண்டு.

விநாயக சதுர்த்தி உண்டு.

சிவ ஜெயந்தி, சிவ சதுர்த்தி கிடையாது.

ஏன் ?

சிவன் தோன்றியது என்று ஒரு நாள் கிடையாது.

அவன் தோன்றியவன் இல்லை.

எப்போதும் இருப்பவன்.

அது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், அவனுடைய பெருமைகள் நமக்குத் தோன்றாது.

"அடடா இது எனக்கு தோணாம போச்சே " என்று சொல்லுவது இல்லையா அது போல.

அப்படி என்ன பெருமை ?

சிந்திப்போம்....

--------------------------------------பாகம் 5 -----------------------------------------------------------------------

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே


தொடக்கம், நடு , முடிவு என்று மூன்றுமாக இருப்பவன். இவை இல்லாமலும் இருப்பவன். 

அது எப்படி ? 

அவனே தொடக்கம், நடு முடிவு என்று இருக்கிறான், இவை இல்லாமலும் இருக்கிறான் என்பது எப்படி சாத்தியமாகும் ?


தொடக்கம், நடு , முடிவு என்பது காலத்தின் பரிணாமம். அவன் காலத்தை கடந்தவன். காலம் இல்லாத ஒன்றுக்கு தொடக்கம், நடு , முடிவு எப்படி இருக்கும். 

குழப்பமாக இருக்கிறது அல்லவா ?

சற்று நிதானமாக சிந்திப்போம். 

காலம் என்பது என்ன ? காலம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறதா ? 

காதலிக்காக காத்து இருக்கும் போது ஒரு நிமிடம் கூட யுகம் போல இருக்கிறது. 

காதலியுடன் இருக்கும் போது யுகம் கூட நிமிடம் போல பறந்து விடுகிறது. 

எப்படி ? இது எதனால் நிகழ்கிறது ?

மனம் ஒன்றிப் போகும் போது காலம் நின்று  போகிறது. யுகம் கூட  நொடியாக உறைந்து போகிறது. 

மனம் ஒன்றாத போது காலம் நீண்டு கொண்டே போகிறது என்பது புரிகிறது அல்லவா ?

ஞானிகளுக்கு கடந்த காலம், எதிர் காலம் என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறார்கள். 

நாமோ, ஒன்று இறந்த காலத்தில் அல்லது எதிர் காலத்தில் வாழ்கிறோம். நாம் நிகழ் காலத்தில்  வாழ்வதே இல்லை. 

மனம் ஒன்று பட்டவர்களுக்கு அவன் ஆதி, அந்தம், நடு அல்லாதவன். 

மனம் ஒன்று படாதவர்களுக்கு அவன் ஆதி, அந்தம் நடுவாகி நின்றவன். 

மேலும் சிந்திப்போம் 

---------------------------------------------பாகம் 6 -----------------------------------------------------------------

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே


ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 

அது என்ன ஈர்த்து ?

காந்தம் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு இரும்புத் துண்டும் ஒரு மரகட்டையும் இருக்கிறது.  காந்தம் அந்த இரும்பை மெல்ல மெல்ல கவர்ந்து இழுக்கும். 

கிட்ட வர வர அதன் ஈர்ப்பு விசை அதிகமாகி சர்ரென்று வேகமாய் போய் ஒட்டிக் கொள்ளும். 

ஆனால், அந்த மரக் கட்டை இருக்கிறதே, அதை தூக்கி காந்தத்தின் மேல் வைத்தாலும்  ஒட்டாது. அது காந்தத்தின் பிழை அல்ல. மரத் துண்டின் பிழை. 

சில பேர் நாள் எல்லாம் பூஜை செய்வார்கள், கோவிலுக்குப் போவார்கள், பாராயாணம்  செய்வார்கள். ஒன்றும்  நடக்காது. 

மணிவாசகர், குதிரை வாங்க சென்று கொண்டிருந்தார். அவரை, குருவாக வந்து  ஆண்டவன் ஆட் கொண்டான். 

அவர் இரும்பாய் இருந்தார். காந்தம் இழுத்துக் கொண்டது. 

அது மட்டும் அல்ல, காந்தத்தோடு ஒட்டிய இரும்பு நாளடைவில் காந்தத் தன்மை பெறும் . அது போல, இறைவனோடு ஒட்டி இருக்கும் போது , நாமும் இறை தன்மை  அடைவோம். 

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

சரி, அது என்ன எந்தை ?

ஒரு தந்தை தன் மகன் நல்லவனாக , வல்லவனாக வர வேண்டும் என்று அவனுக்கு என்னவெல்லாம் செய்வான் ? ஒரு கைமாறும் கருதாமல் எப்படி தந்தை  மகனுக்கு உதவிகள் செய்வானோ அது போல இறைவனும்   தனக்கு அருள்  செய்தான் என்று  கூறுகிறார்.மணிவாசகர். 

மேலும் சிந்திப்போம் 

Thursday, September 25, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 5

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 5


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே



என்பார் திருஞானசம்பந்தர்.


----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------

யாவையுமாய் அல்லையுமாம்


இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய் 

அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.

எது என்ன  புதுக் குழப்பம் ?

எல்லாம் அவன் என்பது புரிகிறது. 

அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?

ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?

சிந்திப்போம்.

அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப்  பார்ப்போம். 

 ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற 
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'

அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும்  உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன். 

தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.

இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை. 

தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண்  இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.


அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.

அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.

சிலையில், படத்தில் அவனை வணங்கலாம். 

ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி  இருக்கிறான். 

இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.  

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.

அவை அன்றியும் அவனை நினைப்பது.

யாவையுமாய் அல்லையுமாய்

மேலும் சிந்திப்போம்

-------------------------------------------------/ பாகம் 3 /----------------------------------------------------------

சோதியனே துன் இருளே 

ஜோதி தன்னையும் விளக்கும். மற்ற பொருள்களையும் விளங்க வைக்கும். ஒளி  உண்மையை அறிய உதவும். 

ஜோதி சரி, அது எப்படி இறைவன் இருளாக இருக்க முடியும் ? அதுவும் அடர்ந்த  இருள் (துன் இருள்) 

ஜோதி அறிவு , ஞானம் என்றால் 

இருள் என்பது அஞ்ஞானம் என்று  ஆகும். இறைவன் எப்படி அஞ்ஞானம் ஆவான் ? 

மற்ற மதங்களில் ஒரு சிக்கல் உண்டு. 

இறைவன் என்றும் , சாத்தான் என்றும் இரண்டு கூறுகளாக உலகை பிரிக்கிறார்கள். நல்லது எல்லாம் இறைவன் செய்வது. கெடுதல் எல்லாம் சாத்தான்  செய்வது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு சிக்கல் உண்டு. 

அப்படி என்றால் சாத்தான் இறைவனுக்கு நிகரானவானா என்று ஒரு சிக்கல்.

சாத்தானை படைத்தது யார் என்று இன்னொரு சிக்கல். 

இறைவன் தான்  சாத்தானைப் படைத்தான் என்றால் , ஏன் இறைவனே அந்த சாத்தானை அழிக்கக்  கூடாது ? 

இதற்கு சரியான விடை இல்லை. 

நம் மதம் இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. 

நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது. 

இன்னும் சொல்லப் போனால் நல்லது கெட்டது எல்லாம் நாம் தரும் பெயர்கள். செயல்கள் நடக்கின்றன. நாம் அவற்றிற்கு நல்லது , கெட்டது என்று பெயர் தருகிறோம். 


பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மணிவாசகர்  சொல்லுவார்.

இருட்டில் ஒன்றும் தெரியாது. தொட்டுத் தடவி ஒரு மாதிரி உணரமுடியும். ஆனால் முழுமையாக விளங்காது. அது போல இறைவனையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.  சில பல நிகழ்வுகளில், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர முடியுமே அன்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

இதையே சொல்ல வந்த வள்ளுவர் ...

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்      
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)                


இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

 என்றார்.

இருள் சேரும், இரு வினையும் சேராது. 

அது ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் ஜோதி. அதை நாம் எங்கே முழுமையாக  அறிந்து கொள்வது ? 

அந்த ஜோதியை நம் அறியாமை என்ற இருள் , கரி, மூடி இருக்கிறது. அறியாமை விலகும் போது ஜோதியின் ஒளி  வெளிப்படும்.

மேலும் சிந்திப்போம் 


------------------------------------/பாகம் 4/----------------------------------------------------------------------

தோன்றாப் பெருமையனே

கிருஷ்ண ஜெயந்தி உண்டு.

விநாயக சதுர்த்தி உண்டு.

சிவ ஜெயந்தி, சிவ சதுர்த்தி கிடையாது.

ஏன் ?

சிவன் தோன்றியது என்று ஒரு நாள் கிடையாது.

அவன் தோன்றியவன் இல்லை.

எப்போதும் இருப்பவன்.

அது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், அவனுடைய பெருமைகள் நமக்குத் தோன்றாது.

"அடடா இது எனக்கு தோணாம போச்சே " என்று சொல்லுவது இல்லையா அது போல.

அப்படி என்ன பெருமை ?

சிந்திப்போம்....

--------------------------------------பாகம் 5 -----------------------------------------------------------------------

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே


தொடக்கம், நடு , முடிவு என்று மூன்றுமாக இருப்பவன். இவை இல்லாமலும் இருப்பவன். 

அது எப்படி ? 

அவனே தொடக்கம், நடு முடிவு என்று இருக்கிறான், இவை இல்லாமலும் இருக்கிறான் என்பது எப்படி சாத்தியமாகும் ?


தொடக்கம், நடு , முடிவு என்பது காலத்தின் பரிணாமம். அவன் காலத்தை கடந்தவன். காலம் இல்லாத ஒன்றுக்கு தொடக்கம், நடு , முடிவு எப்படி இருக்கும். 

குழப்பமாக இருக்கிறது அல்லவா ?

சற்று நிதானமாக சிந்திப்போம். 

காலம் என்பது என்ன ? காலம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறதா ? 

காதலிக்காக காத்து இருக்கும் போது ஒரு நிமிடம் கூட யுகம் போல இருக்கிறது. 

காதலியுடன் இருக்கும் போது யுகம் கூட நிமிடம் போல பறந்து விடுகிறது. 

எப்படி ? இது எதனால் நிகழ்கிறது ?

மனம் ஒன்றிப் போகும் போது காலம் நின்று  போகிறது. யுகம் கூட  நொடியாக உறைந்து போகிறது. 

மனம் ஒன்றாத போது காலம் நீண்டு கொண்டே போகிறது என்பது புரிகிறது அல்லவா ?

ஞானிகளுக்கு கடந்த காலம், எதிர் காலம் என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறார்கள். 

நாமோ, ஒன்று இறந்த காலத்தில் அல்லது எதிர் காலத்தில் வாழ்கிறோம். நாம் நிகழ் காலத்தில்  வாழ்வதே இல்லை. 

மனம் ஒன்று பட்டவர்களுக்கு அவன் ஆதி, அந்தம், நடு அல்லாதவன். 

மனம் ஒன்று படாதவர்களுக்கு அவன் ஆதி, அந்தம் நடுவாகி நின்றவன். 

மேலும் சிந்திப்போம் 




Wednesday, September 24, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 4

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 4


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே



என்பார் திருஞானசம்பந்தர்.


----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------

யாவையுமாய் அல்லையுமாம்


இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய் 

அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.

எது என்ன  புதுக் குழப்பம் ?

எல்லாம் அவன் என்பது புரிகிறது. 

அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?

ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?

சிந்திப்போம்.

அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப்  பார்ப்போம். 

 ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற 
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'

அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும்  உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன். 

தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.

இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை. 

தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண்  இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.


அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.

அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.

சிலையில், படத்தில் அவனை வணங்கலாம். 

ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி  இருக்கிறான். 

இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.  

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.

அவை அன்றியும் அவனை நினைப்பது.

யாவையுமாய் அல்லையுமாய்

மேலும் சிந்திப்போம்

-------------------------------------------------/ பாகம் 3 /----------------------------------------------------------

சோதியனே துன் இருளே 

ஜோதி தன்னையும் விளக்கும். மற்ற பொருள்களையும் விளங்க வைக்கும். ஒளி  உண்மையை அறிய உதவும். 

ஜோதி சரி, அது எப்படி இறைவன் இருளாக இருக்க முடியும் ? அதுவும் அடர்ந்த  இருள் (துன் இருள்) 

ஜோதி அறிவு , ஞானம் என்றால் 

இருள் என்பது அஞ்ஞானம் என்று  ஆகும். இறைவன் எப்படி அஞ்ஞானம் ஆவான் ? 

மற்ற மதங்களில் ஒரு சிக்கல் உண்டு. 

இறைவன் என்றும் , சாத்தான் என்றும் இரண்டு கூறுகளாக உலகை பிரிக்கிறார்கள். நல்லது எல்லாம் இறைவன் செய்வது. கெடுதல் எல்லாம் சாத்தான்  செய்வது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு சிக்கல் உண்டு. 

அப்படி என்றால் சாத்தான் இறைவனுக்கு நிகரானவானா என்று ஒரு சிக்கல்.

சாத்தானை படைத்தது யார் என்று இன்னொரு சிக்கல். 

இறைவன் தான்  சாத்தானைப் படைத்தான் என்றால் , ஏன் இறைவனே அந்த சாத்தானை அழிக்கக்  கூடாது ? 

இதற்கு சரியான விடை இல்லை. 

நம் மதம் இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. 

நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது. 

இன்னும் சொல்லப் போனால் நல்லது கெட்டது எல்லாம் நாம் தரும் பெயர்கள். செயல்கள் நடக்கின்றன. நாம் அவற்றிற்கு நல்லது , கெட்டது என்று பெயர் தருகிறோம். 


பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மணிவாசகர்  சொல்லுவார்.

இருட்டில் ஒன்றும் தெரியாது. தொட்டுத் தடவி ஒரு மாதிரி உணரமுடியும். ஆனால் முழுமையாக விளங்காது. அது போல இறைவனையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.  சில பல நிகழ்வுகளில், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர முடியுமே அன்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

இதையே சொல்ல வந்த வள்ளுவர் ...

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்      
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)                


இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

 என்றார்.

இருள் சேரும், இரு வினையும் சேராது. 

அது ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் ஜோதி. அதை நாம் எங்கே முழுமையாக  அறிந்து கொள்வது ? 

அந்த ஜோதியை நம் அறியாமை என்ற இருள் , கரி, மூடி இருக்கிறது. அறியாமை விலகும் போது ஜோதியின் ஒளி  வெளிப்படும்.

மேலும் சிந்திப்போம் 


------------------------------------/பாகம் 4/----------------------------------------------------------------------

தோன்றாப் பெருமையனே

கிருஷ்ண ஜெயந்தி உண்டு.

விநாயக சதுர்த்தி உண்டு.

சிவ ஜெயந்தி, சிவ சதுர்த்தி கிடையாது.

ஏன் ?

சிவன் தோன்றியது என்று ஒரு நாள் கிடையாது.

அவன் தோன்றியவன் இல்லை.

எப்போதும் இருப்பவன்.

அது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், அவனுடைய பெருமைகள் நமக்குத் தோன்றாது.

"அடடா இது எனக்கு தோணாம போச்சே " என்று சொல்லுவது இல்லையா அது போல.

அப்படி என்ன பெருமை ?

சிந்திப்போம்....





Tuesday, September 23, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 3

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 3


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே



என்பார் திருஞானசம்பந்தர்.


----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------

யாவையுமாய் அல்லையுமாம்


இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய் 

அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.

எது என்ன  புதுக் குழப்பம் ?

எல்லாம் அவன் என்பது புரிகிறது. 

அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?

ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?

சிந்திப்போம்.

அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப்  பார்ப்போம். 

 ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற 
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'

அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும்  உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன். 

தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.

இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை. 

தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண்  இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.


அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.

அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.

சிலையில், படத்தில் அவனை வணங்கலாம். 

ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி  இருக்கிறான். 

இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.  

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.

அவை அன்றியும் அவனை நினைப்பது.

யாவையுமாய் அல்லையுமாய்

மேலும் சிந்திப்போம்

-------------------------------------------------/ பாகம் 3 /----------------------------------------------------------

சோதியனே துன் இருளே 

ஜோதி தன்னையும் விளக்கும். மற்ற பொருள்களையும் விளங்க வைக்கும். ஒளி  உண்மையை அறிய உதவும். 

ஜோதி சரி, அது எப்படி இறைவன் இருளாக இருக்க முடியும் ? அதுவும் அடர்ந்த  இருள் (துன் இருள்) 

ஜோதி அறிவு , ஞானம் என்றால் 

இருள் என்பது அஞ்ஞானம் என்று  ஆகும். இறைவன் எப்படி அஞ்ஞானம் ஆவான் ? 

மற்ற மதங்களில் ஒரு சிக்கல் உண்டு. 

இறைவன் என்றும் , சாத்தான் என்றும் இரண்டு கூறுகளாக உலகை பிரிக்கிறார்கள். நல்லது எல்லாம் இறைவன் செய்வது. கெடுதல் எல்லாம் சாத்தான்  செய்வது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு சிக்கல் உண்டு. 

அப்படி என்றால் சாத்தான் இறைவனுக்கு நிகரானவானா என்று ஒரு சிக்கல்.

சாத்தானை படைத்தது யார் என்று இன்னொரு சிக்கல். 

இறைவன் தான்  சாத்தானைப் படைத்தான் என்றால் , ஏன் இறைவனே அந்த சாத்தானை அழிக்கக்  கூடாது ? 

இதற்கு சரியான விடை இல்லை. 

நம் மதம் இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. 

நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது. 

இன்னும் சொல்லப் போனால் நல்லது கெட்டது எல்லாம் நாம் தரும் பெயர்கள். செயல்கள் நடக்கின்றன. நாம் அவற்றிற்கு நல்லது , கெட்டது என்று பெயர் தருகிறோம். 


பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மணிவாசகர்  சொல்லுவார்.

இருட்டில் ஒன்றும் தெரியாது. தொட்டுத் தடவி ஒரு மாதிரி உணரமுடியும். ஆனால் முழுமையாக விளங்காது. அது போல இறைவனையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.  சில பல நிகழ்வுகளில், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர முடியுமே அன்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

இதையே சொல்ல வந்த வள்ளுவர் ...

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்      
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)                


இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

 என்றார்.

இருள் சேரும், இரு வினையும் சேராது. 

அது ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் ஜோதி. அதை நாம் எங்கே முழுமையாக  அறிந்து கொள்வது ? 

அந்த ஜோதியை நம் அறியாமை என்ற இருள் , கரி, மூடி இருக்கிறது. அறியாமை விலகும் போது ஜோதியின் ஒளி  வெளிப்படும்.

மேலும் சிந்திப்போம்