Showing posts with label குமர குருபரர். Show all posts
Showing posts with label குமர குருபரர். Show all posts

Sunday, March 22, 2015

குமர குருபரர் பாடல் - எது பெருமை ?

குமர குருபரர் பாடல் - எது பெருமை ?


சில பேர் பெரிய இடங்களுக்கு எளிதாகப் போய் வருவார்கள். அமைச்சரைப் பார்த்தேன், கலெக்டரைப் பார்த்தேன், கம்பெனி சேர்மனை பார்த்தேன், என்று பெருமை பேசுவார்கள்.

மற்றவர்கள் எவ்வளவோ கடுமையாக உழைத்தாலும், அறிவில், திறமையில் உயர்ந்து இருந்தாலும் பெரிய இடங்களுக்கு போக முடியாது.

பெரிய இடங்களுக்கு போவது ஒரு பெருமையா ? அப்படி போக முடியாமல் இருப்பது ஒரு சிறுமையா ?

குமர குருபரர் சொல்கிறார்....

அரண்மனையில், பூனை அந்தப்புரம் வரை சர்வ சாதாரணமாகப் போய் வரும். பட்டத்து யானை வெளியே கொட்டகையில் கட்டி கிடக்கும்.

அந்தப்புரம் போனதால் பூனைக்கு பெருமையா ? அரண்மனைக்கு உள்ளே போக முடியவில்லை என்பதால் யானையின் பெருமை குறைந்து போய் விடுமா ?

பாடல்

வேத்தவை காவார் மிகன் மக்கள், வேறு சிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் -மாத்தகைய
அந்தபுரத்து பூஞை புறங்கடைய

கந்துகொல் பூட்கை களிறு.

சீர் பிரித்த பின்

வேந்து  அவைக்கு ஆவார் மிகன் மக்கள், வேறு சிலர் 
காத்து அது கொண்டு ஆங்கு உவப்பு எய்தார் - மாத்தகைய 
அந்தபுரத்து பூனை புறம் கடை 
கந்துக் கொல் புட்டிய கை களிறு 


பொருள்


வேந்து = அரசனின்

அவைக்கு = அவைக்கு

ஆவார் மிகன் மக்கள் = போனால் தான் பெரியவர் என்று எண்ணி இருக்க மாட்டார்கள் பெரியவர்கள்

வேறு சிலர் = வேறு சிலரோ

காத்து அது கொண்டு = காத்து கொண்டு

ஆங்கு உவப்பு எய்தார் = அதனால் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்

 மாத்தகைய = மா + தகைய = பெருமை மிக்க

அந்தபுரத்து பூனை = அந்தப் புரத்து பூனை

புறம் கடை = வெளியில்

கந்துக் கொல் = காவல் கொண்டு

புட்டிய = கட்டப்பட்ட

கை களிறு = கையை உடைய யானை

அந்தப் புரம் செல்வதால் பூனையின் மதிப்பு உயர்ந்து விடுவதில்லை

அரண்மனைக்கு வெளியே இருப்பதால் யானையின் பெருமை குறைந்து விடுவதில்லை.

குமர குருபரர் பல அருமையான நூல்களை எழுதி உள்ளார்.



கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்

நேரமிருப்பின், இவற்றைப் படித்துப் பாருங்கள்.

வாழ்நாள் முழுவதும் படிக்க தமிழில் ஆயிரம் நூல்கள் உள்ளன.

Friday, July 6, 2012

நீதி நெறி விளக்கம் - ஆணியே பிடுங்க வேண்டாம்


நீதி நெறி விளக்கம் - ஆணியே பிடுங்க வேண்டாம்


சில விஷயங்கள் தோன்றுவதை விட தோன்றாமல் இருப்பதே மேல் என்று குமர குருபரர் நீதி நெறி விளக்கத்தில் கூறுகிறார்.

Tuesday, June 19, 2012

சகலகலாவல்லி மாலை - ஒரு அறிமுகம்

சகலகலாவல்லி மாலை - ஒரு அறிமுகம்

குமர குருபரர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மதுரை கலம்பகம், நான் மணிமாலை, செய்யுட்கோவை, மும்மணிக் கோவை போன்ற சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

அவர் எழுதிய சகலகலாவல்லி மாலை, சரஸ்வதியை பற்றி எழுதியது. 

மிக மிக எளிய தமிழில் எழுதப்பட்ட சுகமான பாடல்கள்.