Showing posts with label thinaimaalai nootraimbadhu. Show all posts
Showing posts with label thinaimaalai nootraimbadhu. Show all posts

Friday, October 5, 2012

திணைமாலை நூற்றைம்பது - மனம் காத்தவள்


திணைமாலை நூற்றைம்பது - மனம் காத்தவள்


டேய், அவ என்ன அவ்வளவு அழகா ? ஏதோ இருக்கா. அதுக்காக இப்படி கிடந்து உருகிற...

போடா, உனக்குத் தெரியாது...அவளோட அழகு...

சரிப்பா, எங்களுக்குத் தெரியாது...நீ தான் சொல்லேன்...

சொல்றேன் கேளு...அவளோட புருவம் இருக்கே, அது நிலவில் இநருந்து இரண்டு கீற்றை வெட்டி எடுத்து வைத்தது மாதிரி இருக்கும். அவ பார்வை இருக்கே, வேல் மாதிரி, அவ்வளவு கூர்மை....

டேய்..உனக்கே இது ரொம்ப ஓவரா படல....

இல்லடா...அவ எங்கேயோ இருக்க வேண்டியவ...அவங்க வீட்டுல அவ அருமை தெரியாம அவளை பள்ளிகூடத்துக்குப் போ, கடைக்குப் போ, வயகாட்டுக்குப் போ என்று அந்த தேவதைய போட்டு வேலை வாங்குறாங்க...பாவம்டா அவ...

ஆனா ஒண்ணுடா, அப்படி அனுப்புனதுலையும் ஒரு நல்லது நடந்துருக்கு...அவளை வயலைப் பாத்துக்க அனுபிச்சாங்க, இப்ப அவ என் மனசப் பாத்துகிரா....

Monday, July 23, 2012

திணைமாலை நூற்றைம்பது - பூச் சூடிய எருமை


திணைமாலை நூற்றைம்பது - பூச் சூடிய எருமை

குழந்தைக்கு பூச் சூடி பார்க்கலாம்...

பெண்கள் பூ சூடி பார்த்து இருக்கிறோம்.

எருமை மாடு பூச் சூடி வந்தால் எப்படி இருக்கும் ?

ஒரு பெரிய கரிய எருமை. நீர் நிறைந்த குட்டையை பார்த்தது. அதுக்கு ஒரே குஷி. "ங்கா...." என்று கத்திக்கொண்டு தண்ணிக்குள் பாய்ந்தது.

சுகமாக தண்ணீரில் கிடந்து ஓய்வு எடுத்தது. மாலை நேரம் வந்தது. வீட்டுக்கு கிளம்பியது. அது வெளியே வரும்போது அதன் மேல் கொஞ்சம் சேறு ஒட்டிக் கொண்டது.
இருக்காதா பின்ன...நாள் எல்லாம் குட்டைல கிடந்தா ? 

அந்த சேற்றின் மேல் ஒரு சில மீன்கள் ஒட்டிக் கொண்டு வந்தன. 

அந்த எருமையின் மேல் ஒரு தவளை ஏறி உட்கார்ந்து கொண்டு வந்தது.

கூடவே சில குவளை மலர்களும் ஒட்டிக்கொண்டு வந்தன. 

அடடா...என்ன ஒரு கண் கொள்ளா காட்சி....!