Showing posts with label thiru pugazh. Show all posts
Showing posts with label thiru pugazh. Show all posts

Friday, February 28, 2020

திருப்புகழ் - இரகு நாயக வருக - பாகம் 2

திருப்புகழ் - இரகு நாயக வருக - பாகம் 2


இதன் முதல் பாகத்தை இங்கே காணலாம்

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_24.html

இராமனின் குழந்தைப் பருவத்தை மூல நூல் எழுதிய வால் மீகியும் சரி, வழி நூல் எழுதிய கம்பரும் சரி, பாடாமலேயே விட்டு விட்டார்கள். எதை எதையோ விரிவாக எழுதியவர்கள், கதாநாயகனின் இளமை பருவத்தை பாடாமல் விட்டு விட்டார்கள்.

அந்த குறை தீர்க்க ஆழ்வார்களும் , அருணகிரிநாதரும் நிறைய பாடி இருக்கிறார்கள்.

ஒரு தாய், பிள்ளையை பாராட்டி, சீராட்டி, பாலூட்டி வளர்ப்பது என்பது பெரிய அதிசயம் அல்ல.

தன்னை ஒரு தாயக நினைத்துக் கொண்டு, கோசாலையாக நினைத்துக் கொண்டு பாடுகிறார்.



பாடல் (இரண்டாம் பகுதி)




எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.


பொருள் (சீர் பிரித்தாலே பொருள் விளங்கி விடும்)


எந்தை வருக = என் தந்தை போன்றவனே வருக

ரகு நாயக வருக = ரகு நாயகனே வருக

மைந்த வருக = மைந்தனே வருக

மகனே யினிவருக = மகனே வருக

என் கண் வருக = என் கண்ணே வருக

என தாருயிர் வருக = எனது உயிரே வருக

அபிராம இங்கு வருக = அழகிய இராமா வருக

அரசே வருக = என் இராசா வருக

முலை யுண்க வருக = என்னிடம் பால் அருந்த வா

மலர் சூடிட வருக = பூ சூடிக்கொள்ள வருக

என்று = என்று

பரிவினொடு = பாசத்தோடு

கோசலை புகல = கோசலை அழைக்க

வருமாயன் = வரும் மாயன் அவன்


சிந்தை மகிழு மருகா  = அப்படிப்பட்ட திருமாலின் மனம் மகிழும் மருமகனே

குறவரிள = இளமையான குற மகள்

வஞ்சி = பெண்

மருவு மழகா  = அணைக்கும் அழகா

அமரர் சிறை சிந்த = தேவர்களின் சிறை பொடி பொடியாக

அசுரர் கிளை வேரொடு மடிய = அசுரர் குலம் வேரோடு மடிய

அடுதீரா = போர் செய்யும் தீரனே


திங்க ளரவு = திங்கள், பாம்பு (அரவு = பாம்பு)

நதி சூடிய பரமர் = கங்கை இவற்றை சூடிய சிவன்

தந்த குமர = தந்த குமரனே

அலையே கரைபொருத = (கடல்) அலை கரையோடு மோத

செந்தி னகரி லினிதே  = (திரு) செந்தில் நகரில் இனிதே

மருவிவளர் = சேர்ந்து வளரும்

பெருமாளே. = பெருமாளே

என்ன ஒரு இனிமையான பாடல்.

இப்படி எவ்வளவு இருக்கிறது திருப்புகழில்.


டும்முறு டுப்புறு கேட்க நேரம் இருக்கு. இதை வாசிக்க நேரம் இல்லை.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/2.html

Monday, February 24, 2020

திருப்புகழ் - இரகு நாயக வருக

திருப்புகழ் - இரகு நாயக வருக 


ஆண் பிள்ளைகள் பெற்ற தாய்மார்கள், பிள்ளை சின்னஞ் சிறுவனாக இருக்கும் போது, அந்த ஆண் பிள்ளைக்கு, பெண் பிள்ளை போல பாவாடை , சட்டை போட்டு, இருக்கிற கொஞ்சம் முடியில் ஜடை பின்னி, பூ வைத்து, கண் மை போட்டு அழகு பார்ப்பார்கள். சில வீடுகளில் அந்தக் கோலத்தில் போட்டோ கூட இருக்கும்.  அதுவும் ஒரு அழகுதான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தாய்மை என்பது இயற்கையாக வரக் கூடியது. ஒரு பெண், தன் பிள்ளையை கருவில் சுமக்கிறாள். குழந்தை அவளுடலில் ஒரு பாகமாக இருக்கிறது. பிறந்த பின், தன் உதிரத்தை பாலாகத் தருகிறாள். பிள்ளையோடு ஒரு தாய்க்கு இருக்கும் உறவு என்பது மிக மிக இயற்கையானது.

ஆனால், தந்தைக்கு அப்படி ஒன்றும் கிடையாது. பிரசவம் ஆகி கொஞ்ச நேரம் கழித்துத்தான், தந்தை உள்ளே போவார். மனைவி மயக்கத்தில் கூட இருக்கலாம். பிள்ளையை பார்த்தவுடன் உடனே தந்தை பாசம் பீறிட்டுக் கொண்டு வராது. தந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு இயற்கையாக வருவது அல்ல. இந்த சமுதாயம் அதை வலிந்து திணிக்கிறது. தாயக இருப்பது சுலபம். தந்தையாக இருப்பது மிகக் கடினம்.

அதிலும், தந்தை ஒரு தாயாக தன்னை நினைத்து உருகுவது அதனிலும் ரொம்ப கடினம்.

அதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு வயதுக்கு பின், உடம்பு தளர ஆரம்பிக்கும். என்ன உடற் பயிற்சி செய்தாலும், தொப்பை வரும். முடி நரைக்கும். பல்லு ஒவ்வொன்றாக ஆட்டம் காணும். முதுகு வளையும். உதடு தொங்கிப் போய் விடும். ஊன்று கோல் இல்லமால் நடக்க முடியாது. ஒரு கையில் ஊன்று கோல் வேண்டும்.

வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும், "யார் இந்த கிழம்" என்று பேசத் தலைப்படுவார்கள். பதில் சொல்ல நினைத்தால் கிண் கிண் என்று இருமல்தான் வரும். நாக்கு குழறும். கண் மங்கும். காது கேட்காது.

புதுசு புதுசா நோய் வரும். அடிக்கடி மருத்துவரை பார்க்க வேண்டி இருக்கும். பிள்ளைகள் "பணத்தை இதில் போட்டு வச்சிருக்க...யார் கிட்ட எல்லாம் கடன் வாங்கி வச்சிருக்க " என்று சத்தம் போட்டு கேட்பார்கள்.

மலமும் ஜலமும் அது பாட்டுக்கு போகும். ஒரு கட்டுபாடு இருக்காது.  கட்டிய மனைவி கூட நம்மை பார்த்து அழுவாள். அந்த சமயத்தில் முருகா நீ மயில் மேல் வந்து என்னைக் காக்க வேண்டும் என்று உருகுகிறார் அருணகிரி.


பாடல்



தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.


பொருள் (சீர் பிரித்தாலே பொருள் விளங்கி விடும்)


தொந்தி சரிய  = வயிறு சரிந்து முன்னால் விழ

மயிரே வெளிற = முடி நரைக்க

நிரை தந்த மசைய = தந்தம் என்றால் பல். வரிசையான பற்கள் ஆட.

 முதுகே வளைய = முதுகு வளைய

இதழ் தொங்க = உதடு தொங்க

வொருகை தடிமேல் வர  = ஒரு கை தடிமேல் (கைத்தடி) வர


மகளிர்  நகையாடி = பெண்கள் எல்லாம் பார்த்து நகைக்கும் படி


தொண்டு கிழவ னிவனா ரென  = தொண்டு கிழவன் இவன் யார் என


இருமல் = இருமல்

கிண் கி ணெனமுன் = கிண் கிண் என்று இருமல் வர

உரையே குழற = பேச்சு குழற

விழி துஞ்சு குருடு படவே = கண் அடைத்து தெரியாமல் போக


செவிடுபடு  செவியாகி = காது கேட்காமல் போக


வந்த பிணியும் = நோய் வந்து

அதிலே மிடையும் = அதற்காக இடையில்

ஒரு = ஒரு

பண்டி தனும் = மருத்துவனும்

உறு வேதனையும் = படுகின்ற வேதனையும்

மிள மைந்தர் = இளமையான பிள்ளைகள்

உடைமை = சொத்து

கடனே தெனமுடுக = கடன் ஏது என கேள்வி மேல் கேள்வி கேட்க

துயர்மேவி = துக்கம் மேலிட


மங்கை யழுது விழவே = மனைவி அழுது விழ

 யமபடர்கள் = எமனின் தூதர்கள்

நின்று சருவ = நின்று உயிரை கவர

மலமே யொழுக = மலம் ஒழுக

வுயிர் மங்கு பொழுது = உயிர் மங்கும் பொழுது

கடிதே = வேகமாக

மயிலின்மிசை  = மயில் மேல்

வரவேணும் = வர வேண்டும்

-------------- மீதி பொருளை நாளை பார்ப்போமா? --------------------------------------

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.



https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_24.html

Friday, January 10, 2020

திருப்புகழ் - அறநாலைப் புகல்வோனே

திருப்புகழ் - அறநாலைப் புகல்வோனே 


மரணத்தை கண்டு அஞ்சாதவர் யார். வாழ்க்கை எவ்வளவுதான் துன்பம் நிறைந்ததாக இருந்தாலும், சாவதற்கு யாருக்கும் மனம் வருவதில்லை. சாகாமல் இருக்க வழி இருக்கிறதா என்றால் இருக்கிறது.

சாகாமல் இருக்க முடியுமா ? முடியும்.

பிறக்காமல் இருந்தால்.

பிறந்தால்தான் சாக முடியும். இறவா வழி வேண்டும் என்றால், பிறவாமல் இருக்க வேண்டும்.

பிறந்தாகி விட்டது. பிறந்த நாள் தொட்டு இறுதி நாள் வரை, அழியக் கூடிய பொருள்களையே தேடி அலைகிறோம். பொம்மை, பென்சில், சாக்லேட், பூ, சைக்கிள், ரிப்பன், கண் மை, சட்டை, பாவாடை,  எதிர் பாலினர்மேல் ஈர்ப்பு, செல்வம், பிள்ளைகள் என்று அனைத்தும் அழியக் கூடியவை. அவை பின்னால் அலைகிறோம். பின் இறுதி நாளில், என்னத்த செய்தோம் இத்தனை நாள் ...வாழ் நாள் எல்லாம் அலைந்து கண்டது என்ன என்று பச்சாதாபம் வருகிறது. அழியாத பொருள் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அருணகிரிநாதர் உருகுகிறார்....

"இறவாமல், பிறவாமல் என்னை ஆட்கொள் குருநாதா. என்றும் நிலைத்து நிற்கும் பெருவாழ்வை எனக்கு அருள்வாய். நான்கு விதமான அறத்தை சொல்லுபவனே, அவிநாசியில் காட்சி தரும் பெருமாளே "

என்று.


பாடல்

இறவாமற் பிறவாமல் எனையாள்சற்  குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத்  தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்  குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.



பொருள்

இறவாமற் = இறவாமல்

பிறவாமல் = பிறவாமல்

எனையாள் = என்னை ஆட்கொண்ட

சற்குருவாகிப் = சத்குருவாகி

பிறவாகித்  = மற்றவை யாவும் ஆகி

திரமான  = ஸ்திரமான, நிலையான

பெருவாழ்வைத் = பெரு வாழ்வைத்

தருவாயே = தருவாயே

குறமாதைப் புணர்வோனே = குறவள்ளியோடு சேர்பவனே

குகனே = குகனே

சொற் = பெருமை வாய்ந்த

குமரேசா = குமரேசா

அறநாலைப்  = நான்கு அறங்களை

புகல்வோனே  = போதிப்பவனே

அவிநாசிப் = அவிநாசியில் வீற்றிருக்கும்

பெருமாளே. = பெருமாளே

அது என்ன நான்கு அறம் ?

அறம் , பொருள், இன்பம் , வீடு என்ற நான்கையும் அறமாக கொள்கிறார் அருணகிரி நாதர்.


நாலுதரம் வாசித்தால் மனதுக்குள் ஒட்டிக் கொள்ளும் பாடல்.

திரமான பெருவாழ்வு என்ன என்று சிந்திக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_10.html

Sunday, November 24, 2019

திருப்புகழ் - ஏது புத்தி

திருப்புகழ் - ஏது புத்தி 


கொஞ்சம் பெரிய பாடல் தான். படிக்கவும் சற்று கடினமான பாடல் தான். பொறுமையாகப் படித்தால் அவ்வளவு சுவை நிரம்பிய பாடல். சீர் பிரித்து பொருள் அறியலாம்.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை, திடீரென்று அருகில் அப்பா அம்மா யாரும் இல்லாததை கண்டு திகைக்கிறது. எங்கு போய் தேடுவது என்று தெரியாமல் குழம்புகிறது. பின், அதுவே நினைக்கிறது. எனக்கு என்ன புத்தியா இருக்கு அப்பா அம்மாவை தேடி கண்டுபிடிக்க என்று நினைத்து ஓ வென்று அழ ஆரம்பிக்கிறது. பிள்ளை அழுதால் அப்பா அல்லது அம்மா யாராவது ஓடி வருவார்கள் தானே. நாம் எதுக்கு போய் தேடணும். அழுதா போதுமே, அவங்களே வந்து தூக்கிக் கொள்வார்கள் அல்லவா என்ற அந்த பிள்ளையின் அறிவு கூட எனக்கு இல்லையே.

இத்தனை காலம் இந்த உலகில் விளையாட்டுப் பிள்ளையாக இருந்து விட்டேன். திடிரென்று உன் ஞாபகம் வந்தது முருகா. உன்னை எங்கே போய் தேடுவேன். எனவே, அழுகிறேன். அழுதால் உன் பிள்ளையான என்னை நீ வந்து தூக்கிக் கொள்வாய் அல்லவா ? எனக்கு வேறு யாரைத் தெரியும்?

நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். பிள்ளை அழும் போது அதை கவனிக்காவிட்டால் ஊரில் அதன் அப்பா அம்மாவைப் பற்றி என்ன சொல்லுவார்கள். பிள்ளையை கவனிக்காம அப்படி என்ன வேலையோ என்று பெற்றோரைத் தானே திட்டுவார்கள்.

முருகா, நீ என்னை கவனிக்காவிட்டால் ஊரில் உன்னைத் தான் எல்லோரும் திட்டுவார்கள். பரிகாசம் பண்ணுவார்கள். பெரிய கடவுளாம், பக்தன் அழும் போது வந்து  கவனிக்கக் கூட தெரியவில்லை என்று.  இது தேவையா உனக்கு?

என்று சொல்லிவிட்டு, முருகனை துதிக்கிறார்.

அற்புதமான பாடல். சந்தம் கருதி கொஞ்சம் வார்த்தைகளை அங்கே இங்கே பிரித்துப் போட்டு இருக்கிறார். நாம் அதை கொஞ்சம் சீர் பிரித்து வாசித்தால் அதன் அழகு தெரியும்.

பாடல்



ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.



பொருள்



ஏது புத்தி = ஏது புத்தி

ஐயா = ஐயா

எ னக்கு = எனக்கு

இனி = இனிமேல்

யாரை = யாரை

நத்திடுவேன் = நாடுவேன்

அவத்தினிலே = வீணாக

இறத்தல்கொ லோ = இறப்பதுதான்

எனக்கு = எனக்கு

நீ = நீ

தந்தைதாயென்று = தந்தை தாய் என்று


இருக்கவும் = இருக்கவும்

நானு மிப்படியே  = நானும் இப்படியே

தவித்திடவோ = தவித்திடவோ

சகத்தவர் = உலகில் உள்ளவர்கள்

ஏசலிற் படவோ = திட்டும் படியாக

நகைத்தவர் = என்னைப் பார்த்து சிரிப்பவர்கள்

கண்கள்காணப் = அவர்கள் கண்கள் என்னை காணும் படி

பாதம் வைத்திடை யா = உன் பாதங்களை வைத்திடு ஐயா

ஆதரித்து எனை = ஆதரித்து எனை

தாளில் வைக்க = உன் திருவடிகள் என் தலைமேல் வைக்க

நி யேம றுத்திடில் = நீயே மறுத்தால்

பார் நகைக்குமை யா  = பார் நகைக்கும் ஐயா

தகப்பன்முன் = தகப்பன் முன்

மைந்தனோடிப் = பிள்ளை ஓடி

பால்மொழி = குழந்தையின் பால் போன்ற மொழியில்

குர லோல மிட்டிடில் = குரல் ஓலம் இட்டிடில்

 யாரெடுப்பதென = யார் எடுப்பது என

நா வெறுத்தழ =நாக்கு வெறுத்து அழ

பார்வி டுப்பர்க ளோ = பாரில் (உலகில்) விட்டு விடுவார்களா

எனக்கிது = என்று இதை

சிந்தியாதோ =  சிந்திக்க மாட்டார்களா?


ஓத முற்றெழு = வெள்ளம் முழுவதுமாக எழுவது போல

பால்கொ தித்தது =பால் கொதித்தது

போல = போல

எட்டிகை = எட்டு திசையில் உள்ள

நீசமுட்டரை = நீசம்முற்ற அசுரர்களை

யோட வெட்டிய = ஓட வெட்டிய

பாநு  = சூரியனை போல் ஒளிவிடும்

சத்திகை = சக்தியான வேலைக் கொண்ட

யெங்கள்கோவே = எங்கள் அரசனே


ஓத மொய் = வெள்ளம் பெருகும்

சடை யாடவும்  = சடை ஆடவும்

உற்ற மான் மழு கரம் ஆட = மானும் மழுவும் கையில் ஆட

பொற்கழ லோசை  = பொன்னால் அணிந்த கழல் ஓசை

பெற்றிடவே நடித்தவர் = தோன்றும்படி நடனமாடியவர்

தந்தவாழ்வே = தந்த எங்கள் வாழ்வான முருகனே


மாதி னை = மாதினை

புன மீதி ருக்கு = புனை மீது இருக்கும்

மை = மை பூசிய

வாள்விழிக் = வாள் போன்ற விழிகளைக் கொண்ட

குற மாதினைத் = குற மாதினை

திருமார்ப ணைத்த = மார்போடு அனைத்துக் கொண்ட

மயூர = மயில் மேல் ஏறும்

அற்புத = அற்புதமான

 கந்தவேளே = கந்தக் கடவுளே

மாரன் வெற்றிகொள் = மன்மதனை வெற்றி கொள்ளும்

பூமு டிக்குழலார்  = பூக்கள் முடிந்த குழலை உடைய பெண்கள்

வியப்புற = வியக்கும்படி

நீடு மெய்த்தவர் = நீண்ட மெய் தவம் செய்பவர்

வாழ் = வாழும்

திருத்தணி  = திருத்தணியில்

மாமலைப் = பெரிய மலை

பதி  தம்பிரானே.= அதிபதியான தம்பிரானே

கொஞ்சம் பொறுமையாக பாடலை வாசித்துப் பாருங்கள். சந்தம் துள்ளும்.

அர்த்தம் தோய்ந்த இனிய பாடல்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_24.html

Saturday, September 19, 2015

திருப் புகழ் - இவன் நம்ம ஆளு

திருப் புகழ் - இவன் நம்ம ஆளு 


ஆளும் கட்சி ஆள் என்றால் காவல் துறை தொடப் பயப்படும். நமக்கு எதுக்கு பெரிய இடத்து வம்பு என்று.

அது போல, முருகனின் பக்தர்கள் என்றால், எமன் தொடப் பயப்படுவான்.

ஆனால், நீங்கள் முருகனின் பக்தர்கள் என்று யார் சொல்வது ? யார் சொன்னால் எமன் கேட்பான் ?

முருகனே வந்து சொன்னால் , அதுக்கு வேற அப்பீல் இல்லை அல்லவா ?

எமன் வரும்போது, முருகன் நேரில் வந்து அவனிடம், "இவன் நம்ம ஆளு" என்று சொல்வானாம்.

எப்ப தெரியுமா ?

கடைசி காலத்தில், நம்மைச் சுற்றி கொஞ்ச பேர் நிற்ப்பார்கள்....அப்போது வருவான்....

யார் எல்லாம் அந்த கொஞ்சப் பேர்?

பசி என்று அறிந்து, பால் தந்து, முதுகு தடவி விட்ட தாயார்,
உடன் பிறந்த தம்பி
வேலை ஆட்கள்
அன்பான தங்கை (அது என்ன தங்கைக்கு மட்டும் அன்பான ?)
மருமக்கள்
பிள்ளைகள்
மனைவி

எல்லோரும் சுத்தி நின்று வருந்தி நிற்கும் போது , மயில் மேல் வலிய ஏறி வந்து, பயப்படாதே என்று ஆறுதல் கூறி, இந்த மனிதன் நம் அன்பன் என்று அந்த எமனிடம் கூறுவாயே,

சிவன் தந்தவனே, திருச்செந்தில் இருப்பவனே....

என்று பொழிகிறார் அருணகிரிநாதர்.

திருச்செந்தூர் திருப்புகழ்.....

பாடல்

தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

சீர் பிரித்த பின்

தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து
முதுகு தடவிய தாயார்

தம்பி

பணிவிடை செய் தொண்டர்

பிரியமுள தங்கை

மருகருயிர் எனவே சார்

மைந்தர்

மனைவியர்

கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி

பகர் கேடா

வந்து தலை மயிர் அவிழ்த்து தரை புக மயங்க

ஒரு மகிட (எருமை)  .மிசை ஏறி

அந்தகனும் எனை அடர்ந்து  வருகையில்

இனி அஞ்சல் என வலிய மயில் மேல் நீ

அந்த மறலியொடு அந்த மனிதன்
எமது அன்பன் எனது அன்பன் என மொழிய வருவாயே

சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் (மார்பகங்கள்)

சிந்து பய மயிலும் அயில் வீரா (சிந்தும் பாலினை அருந்தும் கூர்மையான வேலினைக் கொண்ட வீரனே) 

திங்கள் அரவு நதி  துன்று சடிலர்  அருள் (நிலவும், பாம்பும், கங்கை நதியும் தலையில் கொண்ட சிவன் அருளிய )

செந்தில் நகரில் உரை பெருமாளே


Wednesday, October 22, 2014

திருப்புகழ் - பெண் என்ற விடுகதை

திருப்புகழ் - பெண் என்ற விடுகதை 


பெண் இன்பம் என்பது புரியாத புதிராய்தான் இருந்து இருக்கிறது. அருணகிரிநாதர் புலம்புகிறார்.



கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு
          கண்கள்குழல் கொண்டல் என்று                  பலகாலும்
 கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
          கங்குல்பகல் என்று நின்று                              விதியாலே
 பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
          பங்கயப தங்கள் தந்து                                      புகழோதும்
 பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு  டன்க  லந்து
          பண்புபெற அஞ்ச லஞ்ச                                  லெனவாராய்
 வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
           வம்பினைய டைந்து சந்தின்                          மிகமூழ்கி
 வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
          வந்தழகு  டன்க  லந்த                                      மணிமார்பா
 திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
          செஞ்சமர்பு னைந்து  துங்க                              மயில்மீதே
 சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
          செந்தில்நகர் வந்த மர்ந்த                                பெருமாளே.


கொஞ்சம் சீர் பிரிப்போம். 


கற் கண்டுமொழி

கொம்பு கொங்கை

வஞ்சியிடை அம்பு

நஞ்சு கண்கள்

குழல் கொண்டல்

என்று

பலகாலும்

கண்டு உளம் வருந்தி நொந்து

மங்கையர் வசம் புரிந்து

கங்குல் பகல் என்று நின்று

விதியாலே

பண்டை வினை  கொண்டு உழன்று

வெந்து விழுகின்றல் கண்டு

பங்கய பதங்கள் தந்து

புகழ் ஓதும்

பண்புடைய சிந்தை அன்பர்  தங்களில் உடன் கலந்து

பண்பு பெற அஞ்சல்  அஞ்சல் என வாராய்

 வண்டு படுகின்ற தொங்கல்

கொண்டு அற நெருங்கி யிண்டு

வம்பினை அடைந்து

சந்தின் மிக மூழ்கி

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை

செங்கை வந்த அழகுடன் கலந்த  மணிமார்பா

திண் திரல் புனைந்த அண்டர் தங்கள் பயங்கள் கண்டு

செஞ் அமர்  புனைந்து  துங்க  மயில்மீதே

சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம் புணர்ந்து

செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே.

Sunday, August 17, 2014

திருப்புகழ் - இன்புற்று அன்புற்று அருள்வாயே

திருப்புகழ் - இன்புற்று அன்புற்று அருள்வாயே 


பெண்ணாசை மனிதனை விடாமல் துரத்துகிறது. 

அருணகிரியானாதர்  பதறுகிறார்.

பெண்களின் மார்புகள்  எமனின் படை என்று பயப்படுகிறார்.

பெண்களின் பின்னால் சென்று மருளும் எனக்கு அருள்புரிவாய்  என்கிறார்.அதுவும், இன்புற்று , அன்புற்று அருள் புரிவாய் என்று  வேண்டுகிறார்.

சந்தனம் பூசிய, மணம் வீசும் பெண்கள். அவர்களின் மார்புகள் எமப் படை. அவர்களின் கண்களில் இருந்து என்னை காப்பாய். அவர்கள் கூந்தலில் மலர்களை சூடி இருக்கிறார்கள். அந்த பூக்களில் வண்டுகள் ரீங்காரம் இடுகின்றன. அந்த கரிய கூந்தலில் மயங்கி விழும் என்னை காப்பாற்றி அருள் புரிவாய்.   

திருமாலின் மருகனே. சிவனின் மகனே எனக்கு அருள் புரிவாய். 

பாடல் 

பரிமள களபசு கந்தச் சந்தத்                  தனமானார்
படையம படையென அந்திக் குங்கட்       கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற்      குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற்         றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற்            றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித்    தெறிவேலா
திரிபுர தகனமு வந்திக் குஞ்சற்               குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப்        பெருமாளே.


சீர் பிரித்த பின் 

பரிமள களப சுகந்த  சந்த தன மானார்
படை எமப்  படையென அந்திக்கும் கண் கடையாலே
வரி அளி  நிரை முரல் கொங்கும் கங்குல் குழலாலே
மறுகிடும்  மருளனை இன்புற்று அன்புற்று  அருள்வாயே
அரி திருமருக கடம்பத் தொங்கல் திருமார்பா
அலை குமு குமு என வெம்பக் கண்டித்து  எறிவேலா
திரிபுர தகனம் வந்திக்கும் சற்  குருநாதா
ஜெய ஜெய ஹர ஹர செந்திற் கந்தப்  பெருமாளே.


பொருள் 

பரிமள = மணம் வீசும் 

களப = கலவை (சந்தனம், ஜவ்வாது போன்ற பொருள்களின் கலவை )

சுகந்த = நறுமணம் வீசும் 

சந்த = அழகிய 

தன = மார்புகள்  

மானார் = பெண்கள் 

படை எமப்  படையென = அவர்கள் கொண்ட படை எமனின் படைப் போல உயிரை வாங்குபவை 

அந்திக்கும் = இணையும் 

கண் கடையாலே = ஓரக் கண்ணாலே 

வரி = வரி உள்ள 

அளி = வண்டுகள் 

நிரை முரல் = ரீங்காரம் இடும் 

கொங்கும் = வாசனை உள்ள 

கங்குல் = கரிய 

குழலாலே = முடியாலே 

மறுகிடும் = உருகிடும் 

மருளனை = மருள் கொண்ட என்னை 

இன்புற்று = இன்பத்துடன் 

அன்புற்று = அன்பு கொண்டு 

அருள்வாயே = அருள் புரிவாயே 

அரி = திருமால் 

திருமருக = மருமகனே 

கடம்பத் தொங்கல் = கடம்ப மாலை அணிந்த 

திருமார்பா = மார்பை உடையவனே 

அலை = கடலில் அலை 

குமு குமு என = குபு குபுவென 

வெம்பக் = கொதிக்க 

கண்டித்து = அதைக் கண்டித்து 

எறிவேலா = வேலை எறிந்தவனே 

திரிபுர = முப்புரங்களை 

தகனம் = எரித்த சிவன் 

வந்திக்கும் = வணங்கும் 

சற்  குருநாதா = குருநாதா 

ஜெய ஜெய ஹர ஹர = வெற்றி வெற்றி 

செந்திற் கந்தப்  பெருமாளே.= திருச்செந்தூரில் வாழும் பெருமாளே 


Saturday, March 22, 2014

திருப்புகழ் - இளமை அழகு - பகுதி 2

திருப்புகழ் - இளமை அழகு   



இளமையும் அழகும் எவ்வளவு நாள் ? வெகு வேகமாக இளமை கரையும். முதுமை வந்து சேரும். அதைத் தொடர்ந்து மரணம் வரும்.

அது வருமுன்னே அவனை நினை என்று அறிவுறுத்துகிறார் அருணகிரி.

ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

வாழ்வின் நிலையாமை புரியும்.


கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
        இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
        கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்         முறையோடே

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ

 பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
        முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
        பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
        நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
        சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை            பெருமாளே.


-----------------------------------------------------------------------------------------------------------

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ
---------------------------------------------------------------------------------------------------------


பொருள்

 வெட்ட விட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென = வெட்ட விட வெட்ட , கிடஞ்சம் கிடஞ்சம் என்று பறைகள் எழுப்பும் ஒலி ஒரு புறம்.

மக்களொரு மிக்கத் = மக்கள் ஒரு மிக்க = மக்கள் ஒன்றாக 

தொடர்ந்தும் = தொடர்ந்து வந்து  

புரண்டும் = வழி எல்லாம் அழுது புரண்டு 

வழி  விட்டு = வழி விட்டு 

வரு மித்தைத் = வரும் இத்தை = வரும் துன்பத்தை  

தவிர்ந்து = விலக்கி 

உன் பதங்களுற வுணர்வேனோ = உன் திருவடிகளை உள்ளுக்குள் உணர்வேனோ?






(தொடரும்)

Thursday, March 20, 2014

திருப்புகழ் - இளமை அழகு - பாகம் 1

திருப்புகழ் - இளமை அழகு   



இளமையும் அழகும் எவ்வளவு நாள் ? வெகு வேகமாக இளமை கரையும். முதுமை வந்து சேரும். அதைத் தொடர்ந்து மரணம் வரும்.

அது வருமுன்னே அவனை நினை என்று அறிவுறுத்துகிறார் அருணகிரி.

ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

வாழ்வின் நிலையாமை புரியும்.


கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
        இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
        கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்         முறையோடே

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ

 பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
        முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
        பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
        நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
        சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை            பெருமாளே.


பொருள்


கட்டழகு விட்டுத் = கட்டழகு விட்டு 

தளர்ந்தங் கிருந்து = தளர்ந்து அங்கு இருந்து.

முனம் = முன்பு

இட்டபொறி தப்பிப் = இருந்த புலன்கள் நம்மை விட்டு தப்பிப் போய்

 பிணங்கொண்ட தின் = பிணம் என்று ஆன பின்

சிலர்கள் = சிலர்

கட்டணமெ டுத்துச் = கட்டணம் எடுத்து. கூலிக்கு

சுமந்தும் = சுமந்து சென்று

பெரும்பறைகள் = பெரிய பறைகள்

முறையோடே = முறைப் படி



(தொடரும்)

Wednesday, March 5, 2014

திருப்புகழ் - திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே.

திருப்புகழ் - திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.


நம்ம திருப்பரங்குன்றம் !

சண்டைக்கு வந்த அசுரர்களை வேல் படையால் அழித்தவனே. திறமை மிக்கவனே. அறிவில் சிறந்தவனே. முத்துக்கள் நிரம்பிய சோலைகள் உள்ள திருப்பரங்குன்றத்தில் எழுந்து அருளிய பெருமாளே

பாடல்

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற்கொ டும்படை விடுசர வணபவ
    திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
   செழித்த தண்டலை தொறுமில கியகுட
    வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
    திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.

சீர் பிரித்த பின்

திடத்து எதிர்த்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற் கொடும் படை விடும் சரவணபவ
    திறல் குகன் குருபரன் என வரும் ஒரு முருகோனே
   செழித்த தண்டலை தோறும் இலகிய  குட
    வளைக் குலம் தரு தரளமும்  மிகு உயர் 
    திருப்பரங் கிரி வளநகர் மருவிய பெருமாளே.


பொருள்

திடத்து = உறுதியுடன்

எதிர்த்திடும் = எதிர்த்து நிற்கும்

அசுரர்கள் பொடிபட = அசுரர்கள் பொடிப் பொடியாகும் படி 

அயிற் = வேல்

கொடும் படை = சக்தி வாயிந்த படையை

விடும் = விடும்

சரவணபவ = சரவண பொய்கையில் அவதரித்தவனே  (பவ என்றால் பிறப்பு. "என் பவம் தீர்பவனே" என்பார் மணிவாசகர் )

 திறல் குகன் = திறமையான குகப் பெருமாளே

குருபரன் = அனைவர்க்கும் ஞான குருவானவனே

என வரும் = என்று வரும்

ஒரு முருகோனே = முருகப் பெருமானே

செழித்த= செழித்து

தண்டலை தோறும் = குளிர்ந்த சோலைகள் தோறும்

 இலகிய = விளங்கும்

 குட வளைக் = வளைந்த 

 குலம் தரு தரளமும் = சங்குகள் தரும் முத்துகள்

மிகு = மிகுந்த

உயர் = உயர்வான

திருப்பரங் கிரி = திருபரங்குன்றம் என்ற மலையில்

வளநகர் =  வளமையான நகரில்

மருவிய பெருமாளே = இருக்கும் பெருமாளே

அடுத்த முறை திருபரங்குன்றம் பக்கம் போகும் போது, அருண கிரி நாதர் அங்கு நடந்திருக்கிறார் என்று நினைத்துப் பாருங்கள்.




Monday, March 3, 2014

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி



குடத்தை வென்றிடு கிரியென எழில்தள
    தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
    குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு வடிவேலா
   குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
    அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
    குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி  மருகோனே

சீர் பிரித்த பின் 

குடத்தை வென்றிடும் கிரியென எழில் தள தளத்த 
கொங்கைகள் மணி வடம் அணி சிறு குறத்தி 
கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடிவேலா 
குரை கருங்கடல் திரு அணை என முன்னம் 
அடைத்து இலங்கையின் அதிபதி நிசி சரர் 
குலத்தோடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே 


வள்ளியை அணைக்கும் போது முருகனுக்கு அவன் தோள்கள் துவளுகிறது. 

அந்த வள்ளி எப்படி இருக்கிறாள் ?

குடத்தை வென்றிடும் மலை போன்ற மார்புகள். அதில் மணிகள் கோர்த்த சங்கிலியை  அணிந்து இருக்கிறாள். அவளின் சொல் கரும்பைப் போல இனிக்கிறது. அவளை அணைக்கும் போது தோள்கள் வலுவிழந்து துவளும்  அந்த முருகன் யார் ?

அன்று அலை கடலை அணைகட்டி கடந்த திருமாலின் மருமகனே.

குடத்தை வென்றிடும் = குடத்தை விட எடுப்பாக அழகாக 

கிரியென = மலையை போல 

எழில் = அழகுடன் 

தள தளத்த = தள தள என்று இருக்கும் 
 
கொங்கைகள் = மார்புகள் 

மணி = மணிகள் சேர்ந்த 

வடம் = மாலை 

 அணி = அணியும் 

சிறு குறத்தி = சிறிய குற மகள்
  
கரும்பின் = கரும்பை விட 

மெய் துவள் = மெய் துவள 

புயன் = புயங்களை கொண்ட 

என வரு வடிவேலா = என்று வருகின்ற வடி வேலனே 

குரை = அலை பாயும் 

கருங்கடல் = கடலை 

திரு அணை = பெரிய அணைகட்டி 

என முன்னம் = முன்பு 
 
அடைத்து = அடைந்து 

இலங்கையின் அதிபதி = இராவணனை 

நிசி சரர் = அரக்கர்   (?)
 
குலத்தோடும் பட = குலத்தோடு அழிய 

ஒரு கணை விடும் = ஒரு அம்பை விடும்  

அரி = ஹரி, திருமாலின்  

மருகோனே = மருமகனே 


திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி 


விலை மகளைப் பற்றி கூறும் அதே பாடலில் இறைவனையும் வணங்கும் கலை அருணகிரி நாதருக்கு கை வந்தது.




விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
    மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மையல்
    விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே
   விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
    மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
    விரைப்பதந்தனில் அருள்பெற நினைகுவ துளதோதான்

சீர் பிரித்த பின் :

விடத்தை வென்றிடும் படை விழி கொண்டு உளம் 
மருட்டி வண் பொருள் கவர் பொழுதில் மையல் 
விருப்பு எனும் படி மடி மிசையினில் விழு தொழில் தானே 
விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் 
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை 
விரைப் பதம் தனில் அருள் பெற நினைக்குவது உளதோ தான் 

அப்பாட, கொஞ்சம் மூச்சு  வருகிறது.

பொருள் 

விடத்தை  = விஷத்தை 

வென்றிடும் = வெற்றி கொண்டிடும் 

படை விழி  கொண்டு = படை போன்ற விழிகளை கொண்டு 

உளம் மருட்டி = (நம்) உள்ளத்தை மயக்கி 

வண் பொருள் கவர் பொழுதில் = நம்மிடமுள்ள பொருள்களை கவர்ந்து கொள்ளும் பொழுதில் 

மையல் = ஆசை, காமம் 

விருப்பு = விருப்பம் 

எனும் படி = என்றவற்றில் 

மடி = சோம்பிக் கிடத்தல் 

மிசையினில் விழு தொழில் தானே = கிடந்து அழுந்தி கிடப்பதே வாடிக்கையாய் கொண்ட 
 
விளைத்திடும் = அவற்றை விளைவிக்கும் 

பல கணிகையர் = பல விலை மகளிர் 

தமது பொய் மனத்தை = அவர்களின் பொய்யான மனதை 

நம்பிய = உண்மை என்று நம்பிய 

சிறியனை = அறிவில் சிறியவனை 

வெறியனை = சரி எது தவறு என்று அறியாத வெறி கொண்டவனை 

விரைப் பதம் தனில் = உன்னுடைய திருவடிகளில் 

அருள் பெற நினைக்குவது உளதோ தான் = அருளைப் பெற நினைப்பது எங்கே நடக்கிறது ?


Sunday, March 2, 2014

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி 


விலை மகளைப் பற்றி கூறும் அதே பாடலில் இறைவனையும் வணங்கும் கலை அருணகிரி நாதருக்கு கை வந்தது.



வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
    தன்னைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
    மயக்கி ஐங்கணை மதனனை ஒருமையினாலேஅரு
   வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
    நகைத்து நண்பொடு வருமிரும் எனவுரை
    வழுத்தி அங்கவரொடுசரு வியுமுடல் தொடுபோதே

விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
    மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மையல்
    விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே
   விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
    மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
    விரைப்பதந்தனில் அருள்பெற நினைகுவ துளதோதான்

குடத்தை வென்றிடு கிரியென எழில்தள
    தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
    குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு வடிவேலா
   குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
    அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
    குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி  மருகோனே

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற்கொ டும்படை விடுசர வணபவ
    திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
   செழித்த தண்டலை தொறுமில கியகுட
    வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
    திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.

கொஞ்சம் பெரிய பாடல் தான்....ஒவ்வொரு பகுதியாக பார்க்கலாம்.

பொருள்

வடத்தை = வடம் என்றால் கயறு. வடம் போல் தடித்த முத்து, பவளம், மலர்களால் ஆன மாலை இவற்றை அணிந்து

மிஞ்சிய = அதையும் மிஞ்சிய

புளகித = ஆண்களை கண்டவுடன் மகிழ்ச்சியால் இன்பம் அடைந்த

வனமுலை = அழாகான, வனப்பான முலைகள்

தன்னைத் = தன்னை (அந்த விலை மகளிரை)

திறந்து = தெரிந்து எடுத்து

எதிர் வரும் = எதிரில் வரும்

 இளைஞர் = இளைய வாலிபர்களின்

உயிர் = உயிரை

மயக்கி = மயக்கி

ஐங்கணை = ஐந்து விதமான மலர்களை கொண்ட அம்பினை எய்யும்

மதனனை = மன்மதனை

ஒருமையினாலேஅரு ருத்தி = ஒப்பற்ற அவனை வரச் செய்து 

வஞ்சக நினைவொடு = வஞ்சக நினைவோடு

மெலமெல = மெல்ல மெல்ல
   
நகைத்து = புன்னகை புரிந்து

நண்பொடு = நட்பு உணர்வோடு

வருமிரும் = வரும், இரும்

எனவுரை வழுத்தி = என்று உரை  செய்து வாழ்த்தி 

அங்கவரொடு = அங்கு அவரோடு

சரு வியுமுடல் தொடுபோதே = பழகி உடல் தொடும் போது


Saturday, January 25, 2014

திருப் புகழ் - காகம் முற அருள்

திருப் புகழ் - காகம் முற அருள் 


மனைவியை மற்றவன் பார்த்தால் எவ்வளவு கோபம் வரும் ?

அதிலும், காம இச்சையோடு பார்த்தால் ?

அதிலும், அவளை தீண்டினால் ?

அதிலும், அவளை அவள் மார்பில் தீண்டினால் ? 

எவ்வளவு கோபம் வரும் ?

இராமாயணத்தில்,  இராமனும் சீதையும் சித்ர கூட மலைக்கு அருகில் மந்தாகினி நதிக் கரையில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். சீதையின் மடியில் இராமன் தலை வைத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே வந்த இந்திரனின் மகன் சயந்தன் சீதை மேல் காமம் கொண்டான். 

தந்தை எவ்வழி , மகன் அவ்வழி. 

சீதையை எப்படியாவது தீண்டி விட வேண்டும் என்று நினைத்தான். 

ஒரு காகத்தின் வடிவை எடுத்து பறந்து வந்து அவள் மார்பை கொத்தினான். 

சீதையின் மார்பில் இருந்து இரத்தம் வந்தது. அசைந்தாலோ, சப்தம் எழுப்பினாலோ இராமனின் தூக்கத்திற்கு இடையுறாக இருக்கும் என்று எண்ணி அவள் அமைதியாக அந்த துன்பத்தை பொறுத்துக் கொண்டாள் . 

கண் விழித்துப் பார்த்த இராமன், சீதையின் மார்பில் இருந்து வழிந்த இரத்தத்தை கண்டு பதறி   காரணம் வினவினான். சீதை காகத்தை காண்பித்து, அந்த காகம் கொத்தியது என்றாள் . 

இராமன் புரிந்து கொண்டான். 

அருகில் இருந்த புல்லை எடுத்து மந்திரம் சொல்லி விடுத்தான். அது இராம பானமாக மாறி சயந்தனை மூவுலகும் துரத்தியது. அவனை காப்பார் யாரும் இல்லை. அவன் இராமனிடமே வந்து அடைக் கலம் புகுந்தான். 

சரண் என்று அடைந்தவனை அவன் எதிரியாக இருந்தால் கூட அவனை மன்னித்து  ஏற்றுக் கொள்ளும் குணம் கொண்டவன் இராமன். 

சயந்தனுக்கு உயிர் பிச்சை அளித்து, "நான் மன்னிப்பேன், என் பாணம் மன்னிக்காது" என்று சொல்லி அந்த பானத்திற்கு சயந்தனின் ஒரு கண்ணை இலக்காக்கி அவனை காப்பாற்றினான்  இராமன்.

அந்த கதையை இரண்டு வரியில் சொல்கிறார் அருணகிரி.....


பாடல் 

காது மொருவிழி காக முற அருள்
                      மாய னரிதிரு                             மருகோனே

பொருள் 

காது =கொல்லென்று விடுத்த 

ஒரு விழி காகம் உற = ஒரு விழியை மட்டும் எடுத்து 
  
அருள் = அவனுக்கு உயிர் பிச்சை தந்து அருள் புரிந்த 

மாயன் = மாயங்கள் செய்ய வல்ல 


அரி = பாவங்களை போக்குபவன் 

திரு = உயர்ந்த, சிறந்த 

மருகோனே = மருமகனே 


இதையே பெரியாழ்வாரும் 

சித்திரகூ டத்திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகுந் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபய மென்றழைப்ப
அத்திரமே யதன்கண்ணை யறுத்ததுமோரடையாளம் 


விருந்தினர்களை உபசரிப்பது ஒரு பண்பு என்றால், அடைக்கலம் என்று வந்தவர்களை  காப்பதும் ஒரு பண்பு தான். ஏனோ அந்த பண்பு வழக்கொழிந்து போய் விட்டது. பழிக்குப் பழி என்று உலகம் புறப்பட்டு விட்டது. 

எவ்வளவு சண்டை. எவ்வளவு சிந்திய இரத்தங்கள். 

மன்னிக்கும் குணம் குறைந்து கொண்டே வருகிறது. 

இராமாயணம் படிப்பது அதன் இலக்கியம் நயம் அறிந்து கொள்ள மட்டும் அல்ல. .....


Saturday, December 21, 2013

திருப் புகழ் - வந்தித்து அணைவோனே

திருப் புகழ் - வந்தித்து அணைவோனே 


அவன்: உன் கிட்ட ஒண்ணு கேட்கலாமா ?

அவள்: ம்ம்..என்ன கேட்கப் போற ?

அவன்: சரின்னு சொல்லணும் ...மாட்டேன்னு  சொல்லக் கூடாது...

அவள்: ஆத்தாடி, அது எல்லாம் முடியாது...நீ பாட்டுக்கு ஏதாவது எசகு பிசகா கேட்டேனா ?

அவன்: அப்படி எல்லாம் கேப்பனா ? கேக்க மாட்டேன்...சரின்னு சொல்லு...

அவள்: ரொம்ப பயமா இருக்கு...

அவன்: சரின்னு சொல்லேன்...என் மேல நம்பிக்கை இல்லையா ? ப்ளீஸ்...என் செல்ல குட்டில, என் கண்ணு குட்டில...சரின்னு சொல்லு

அவள்: ம்ம்ம்...சரி...என்னனு சொல்லு

அவன்: ஒரே ஒரு தடவை உன்னை கட்டி பிடிக்கணும் போல இருக்கு...கட்டிக்கவா ?

அவள்: ம்ம்ம்ம்....

-------------------------------------------------------------------------------------------------

என்னடா ஏதோ திருப்புகழ்னு தலைப்பை போட்டுட்டு ஏதேதோ எழுதிக் கொண்டு போறானே  என்று நினைக்கிறீர்களா "

இல்லை....அருணகிரி நாதர் சொல்கிறார்....

வள்ளியை வணங்கி, பின் அவளை அணைத்துக் கொண்டானாம் முருகன்.

முருகன், வள்ளியை வணங்கினான் என்கிறார் அருணகிரி. வணங்கிய பின் அணைத்துக் கொண்டானாம். எதற்கு வணங்கி இருப்பான் ?

பாடல்

இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே 

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே 

மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
     வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே 

கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே

     கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.

சீர் பிரித்த பின் 

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி 
இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே 

உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி 
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே 

மயில் தகர் கல் இடையர் அந்தத் திணை காவல் 
வனச குற மகளை வந்தித்து அணைவோனே 

கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே 
கரி முகனுக்கு இளைய கந்தப் பெருமாளே 


பொருள் 

இயல் இசையில் = அழகான பேச்சிலும், இனிமையான இசையிலும். இசை என்று சொன்னால் நான் குரல் என்று கொள்வேன். பெண்களின் குரலுக்கே ஒரு இனிமை உண்டு. அவர்கள் பேச்சில் ஒரு வசீகரம் இருக்கும். 

உசித = சிறந்து விளங்கும் 

வஞ்சிக்கு = பெண்களிடம் 

அயர்வாகி = சோர்ந்து 
 
இரவு பகல் = இரவும் பகலும், அவர்களையே நினைத்து மனம் சோர்ந்து போய் . 

மனது சிந்தித்து = எந்நேரமும் அவர்கள் நினைவாகவே இருந்து  

உழலாதே = உழலாமல் 

உயர் கருணை  புரியும் = உயர்ந்த கருணையை புரியும் 

இன்பக் கடல் மூழ்கி = இன்பமாகிய கடலில் மூழ்கி 
 
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே = இறைவன்  என்பவன் வெளியில் இருப்பவன் அல்ல. நமக்குள்ளேயே இருக்கிறான். நாம் அறிவது இல்லை. அந்த அறிவைத் தருவாயே என்று  வேண்டுகிறார்.இறைவனின் அருள் வேண்டாமாம். அன்பு வேண்டுமாம்.  

மயில் = மயில்கள் ஆடும் மலை 

தகர் = ஆடுகள் இருக்கும் மலை 

கல் இடையர் = கல் என்றால் மலை. மயில்களும் ஆடுகளும் இவற்றிற்கு இடையே வாழும் வேடுவர்கள்  

அந்தத் திணை காவல் = அந்தத் திணைக்கு காவல் இருக்கும் 
 
வனச குற மகளை= திருமகள் போல அழகு கொண்ட வள்ளியை 

வந்தித்து  = கும்பிட்டு, வணங்கி 

அணைவோனே = அனைத்துக் கொள்பவனே 

கயிலை மலை அனைய = கயிலை மலை போன்ற 

செந்தில் பதி வாழ்வே = திரு செந்தூரில் வாழும் முருகனே 

கரி = யானை 

முகனுக்கு = முகத்தை உடைய விநாயகருக்கு 

இளைய = தம்பியான 

கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே 

இது எனக்குத் தோன்றிய பொருள். 

இந்த பாடலுக்கு உரை எழுதிய பல பெரியவர்கள், பரமாத்மா கருணை கொண்டு ஜீவாத்மாவை ஏற்றுக் கொண்டது என்று "வனச குற மகளை வந்தித்து அணைவோனே" என்ற வரிக்கு பொருள் தந்திருக்கிறார்கள். 

மகான்களின் பாடல்களுக்கு சிந்தித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். 

உங்கள் சிந்தனைக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள். 
 

Wednesday, May 2, 2012

திருப் புகழ் - அரை நிமிட தியானம்

திருப் புகழ் - அரை நிமிட தியானம்


காற்றில் ஆடும் தீபம் போல மனம் எங்கே ஒரு நொடி அமைதியாய் இருக்கிறது.

மனதை கட்டுப் படுத்த மகான்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கிறார்கள்.

அருணகிரிக்கு முருகன் உபதேசித்தது எல்லாம் இரண்டே வார்த்தை தான்

"சும்மா இரு". அந்த இரண்டு வார்த்தைக்கு பொருள் தெரியாமல் தவிக்கிறார்.


"சும்மா இரு சொல் அர என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே"

எனப்பார் அவர் கந்தர் அனுபூதியில்.

மனதை ஒருமுகப் படுத்தி இறைவனை மனதில் நினைக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். எங்க முடியுது ?


கண்ணை மூடினால் அலுவலகம், மனைவி, கணவன், பிள்ளைகள், மாமியார், நாத்தினார், கடன் என்று ஆயிரம் எண்ணங்கள் வருகிறது.


கடவுளை எங்க நினைக்க முடிகிறது ? இந்த பிரச்சனை இல்லறத்தில் இருக்கும் நமக்கு மட்டும் அல்ல, துறவியான அருணகிரிக்கும் இருந்து இருக்கிறது.


Tuesday, May 1, 2012

திருப்புகழ் - காலன் முதுகில் ஒரு அறை



திருப்புகழ் - காலன் முதுகில் ஒரு அறை

முருகனின் பக்தர்களை காலன் அணுகும் போது, முருகன் அவன் முதுகில் ஒரு அறை வைப்பாராம்.

அதில் அவன் முதுகு இரண்டா விரிந்த மாதிரி ஆயிருமாம்...என்ன ஒரு அழகான கற்பனை.




பாண மலரது தைக்கும் ...... படியாலே
 பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே
 நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே
 நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான்
 சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா
 தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா
 காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா
 காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.


பதம் பிரிக்காமல் அருணகிரிநாதரின் பாடல்களை புரிந்து கொள்ளவது எளிதல்ல....


பாண மலர் அது தைக்கும் படியாலே
பாவி இளமதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே
நானும் மையலில் இளைக்கும் தரமேதான்
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா
தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே




பாண மலர் = மன்மதனின் மலர் அம்புகள் (பாணம் = அம்பு)


அது தைக்கும் படியாலே = அது என் மார்பில் தைக்கும் படியாகவும்


பாவி இளமதி = இரக்கமிலாத அந்த இளைய நிலா

கக்கும் கனலாலே = பொழியும் கனலாலே (வெப்பத்தாலே)

நாணம் அழிய = வெட்கம் போக

உரைக்கும் குயிலாலே = கூவும் குயிலாலே

நானும் = அருணகிரியான நான் (தன்னை ஒரு பெண்ணாக நினைத்து எழுதுகிறார்)

மையலில் இளைக்கும் தரமேதான் =காதலில் இளைக்கும் படியாக

சேணில் அரிவை = சேய்மையில் (விண்ணுலகில்) உள்ள பெண்ணை (தெய்வ நாயகியை) 

அணைக்கும் திரு மார்பா = கட்டி அணைக்கும் திரு மார்பனே

தேவர் மகுடம் = தேவர்களின் மகுடம்

மணக்கும் கழல் வீரா = அவர்கள் எப்போதும் முர்கனின் காலில் விழுந்து வணங்குவதால், 
அவர்கள் மகுடத்தில் உள்ள மணம் (பூ, சந்தனம் போன்ற பொருள்களின் மணம்) முருகனின் காலில் மணக்கிறது

காண = காணக்கூடிய

அருணையில் நிற்கும் கதிர் வேலா = திருவண்ணாமலையில் நிற்கும் கதிர்வேலா

காலன் = காலனின்

முதுகை விரிக்கும் பெருமாளே = முதுகை விரிக்கும் பெருமாளே


Saturday, April 28, 2012

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

கடைசிக் காலத்தில் எமன் வந்து தன்னை இழுத்துக்கொண்டு போகும் போது, நம்முடைய அம்மா, அப்பா, மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்து அழுவார்கள், அப்போது, முருகா, நீ எமனிடம் "பாத்துப்பா, இவர் நம்ம ஆளு, நமது அன்பன்" னு நீ வந்து சொல்லனும்னு அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகோள் வைக்கிறார் இந்தப் பாடலில்.....

Monday, April 23, 2012

திருப் புகழ் - முதுமையின் சோகம்

திருப் புகழ் - முதுமையின் சோகம்


இளமையாய் இருக்கும் போது எல்லாம் இனிமையாய் இருக்கும். முதுமை வரும் போது துன்பங்களும் கூட வரும்.


திருப் புகழ் சந்தக் கவியால் ஆனது. படிக்க சற்று கடினம். சீர் பிரித்தால் தான் அர்த்தம் புரியும்.


கீழ் கண்ட பாடலில், முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி பெருமான்....