Sunday, March 2, 2014

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி 


விலை மகளைப் பற்றி கூறும் அதே பாடலில் இறைவனையும் வணங்கும் கலை அருணகிரி நாதருக்கு கை வந்தது.



வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
    தன்னைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
    மயக்கி ஐங்கணை மதனனை ஒருமையினாலேஅரு
   வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
    நகைத்து நண்பொடு வருமிரும் எனவுரை
    வழுத்தி அங்கவரொடுசரு வியுமுடல் தொடுபோதே

விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
    மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மையல்
    விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே
   விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
    மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
    விரைப்பதந்தனில் அருள்பெற நினைகுவ துளதோதான்

குடத்தை வென்றிடு கிரியென எழில்தள
    தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
    குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு வடிவேலா
   குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
    அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
    குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி  மருகோனே

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற்கொ டும்படை விடுசர வணபவ
    திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
   செழித்த தண்டலை தொறுமில கியகுட
    வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
    திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.

கொஞ்சம் பெரிய பாடல் தான்....ஒவ்வொரு பகுதியாக பார்க்கலாம்.

பொருள்

வடத்தை = வடம் என்றால் கயறு. வடம் போல் தடித்த முத்து, பவளம், மலர்களால் ஆன மாலை இவற்றை அணிந்து

மிஞ்சிய = அதையும் மிஞ்சிய

புளகித = ஆண்களை கண்டவுடன் மகிழ்ச்சியால் இன்பம் அடைந்த

வனமுலை = அழாகான, வனப்பான முலைகள்

தன்னைத் = தன்னை (அந்த விலை மகளிரை)

திறந்து = தெரிந்து எடுத்து

எதிர் வரும் = எதிரில் வரும்

 இளைஞர் = இளைய வாலிபர்களின்

உயிர் = உயிரை

மயக்கி = மயக்கி

ஐங்கணை = ஐந்து விதமான மலர்களை கொண்ட அம்பினை எய்யும்

மதனனை = மன்மதனை

ஒருமையினாலேஅரு ருத்தி = ஒப்பற்ற அவனை வரச் செய்து 

வஞ்சக நினைவொடு = வஞ்சக நினைவோடு

மெலமெல = மெல்ல மெல்ல
   
நகைத்து = புன்னகை புரிந்து

நண்பொடு = நட்பு உணர்வோடு

வருமிரும் = வரும், இரும்

எனவுரை வழுத்தி = என்று உரை  செய்து வாழ்த்தி 

அங்கவரொடு = அங்கு அவரோடு

சரு வியுமுடல் தொடுபோதே = பழகி உடல் தொடும் போது


No comments:

Post a Comment