Thursday, March 20, 2014

நீத்தல் விண்ணப்பம் - மரத்தில் இட்ட தீ

நீத்தல் விண்ணப்பம் - மரத்தில் இட்ட தீ 


மரம் என்னவோ பெரிய மரம் தான்.

தீ என்னவோ சின்ன தீ தான்.

தீயை மரத்தில் வைத்தால் என்ன ஆகும் ? முதலில் மெதுவாக எரியும். நேரம் செல்ல செல்ல அந்த மரமே விறகாக தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த மரத்தை முழுவதும் எரித்து கரியாக்கிவிடும்....அது போல

இந்த புலன் ஆசைகள் என்ற தீ, உடல் என்ற மரத்தை மெல்ல மெல்ல எரித்து சாம்பாலாக்கி விடும்.

புலனாசைகளால் வெந்து நீராவோம்.

அப்படி வெந்து நொந்து இருக்கும் என்னை விட்டு விடாதே என்று பதறுகிறார் மணிவாசகர்.

பாடல்

பொதும்பு உறு தீப்போல் புகைந்து எரிய, புலன் தீக் கதுவ,
வெதும்புறுவேனை விடுதி கண்டாய்? விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று, மந்தம் முரல் வண்டு
அதும்பும், கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே


பொருள் 

பொதும்பு உறு = மரப் பொந்தினை அடைந்த 

தீப்போல் = தீயைப் போல

புகைந்து எரிய = புகை விட்டு எரிய

புலன் தீக் கதுவ = புலன்களாகிய தீ பற்றிக் கொள்ள, பற்றிக் கொள்ள

வெதும்புறுவேனை = வெதும்பி துன்பப் படுபவனான என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

விரை ஆர் = மணம் வீசும் 

நறவம் = தேன்

ததும்பும் = ததும்பும்

மந்தாரத்தில் = மந்தாரம் என்ற மலரில்

தாரம் பயின்று, = இசை பயின்று

மந்தம் = மந்தமாகிய இசையை

முரல் வண்டு = ரீங்காரமிடும் வண்டு

அதும்பும், = அழுந்தும்

கொழும் தேன் = செழுமையான தேன்

அவிர் சடை = விளங்கும் சடையை கொண்ட

வானத்து அடல் அரைசே =  வானில் உள்ள வீரமிக்க அரசே

மரமே தீயை வைத்துக் கொள்வது போல, நமக்கு நாமே தீயை வைத்துக் கொள்கிறோம்.

எரிவது தெரியாமல், அதுவே சுகம் என்று இருக்கிறோம்.





No comments:

Post a Comment