Showing posts with label ஆத்தி சூடி. Show all posts
Showing posts with label ஆத்தி சூடி. Show all posts

Sunday, February 24, 2013

ஆத்தி சூடி - இடம் பட வீடு எடேல்

ஆத்தி சூடி - இடம் பட வீடு எடேல் 


இப்போது எங்கு பார்த்தாலும் விளையும் நிலங்களை பிளாட் போட்டு வீட்டு மனைகளாக மாற்றி அதில் வீடு கட்டி விடுகிறார்கள். இதனால், விவசாயம் நசிகிறது. வீடு எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். பயிர் விளைய நல்ல மண் வேண்டும், நீர் வரும் பாதையில் இருக்க வேண்டும், இப்படி நிறைய தேவைகள் இருக்கின்றன . அப்படி இருக்கும் இடங்களில் வீடு கட்டக் கூடாது. 

இடம் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. பட்டு போதல் என்றால் கருகிப் போதல். பயிர் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. 

எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு   முன், மக்கள் தொகை இவ்வளவு இல்லாத காலத்தில் அவ்வை சொல்லி இருக்கிறாள் ...இடம் பட வீடு எடேல் என்று.

எங்க கேக்கிறோம் ? விவசாய உற்பத்தி குறைந்து, உணவு பொருட்களின் விலை ஏறி திண்டாடுகிறோம். 

பெரியவங்க சொன்னா கேட்கணும். 

சிறுக கட்டி பெருக வாழ் அப்படின்னு தெரியாமையா சொன்னாங்க.

எவ்வளவு தீர்க்க தரிசனம் ? 

காலம் காலமாக ஆத்தி சூடி பள்ளிகளில் சொல்லித் தரப் படுகிறது. ஒழுங்காக சொல்லித் தந்திருந்தால், சொல்லிய படி நடந்திருந்தால் ...


ஹ்ம்ம்ம்ம்ம் 


Saturday, February 16, 2013

ஆத்தி சூடி - எண்ணெழுத்து இகழேல்


ஆத்தி சூடி - எண்ணெழுத்து இகழேல் 


Bless those things you want to have என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 

சிலருக்கு பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும் ஆனால் பணக்காரர்களை   கண்டால் ஒரு வெறுப்பும் கோபமும் இருக்கும். "ஹா..அவனைப் பற்றி தெரியாதா ...அவன் எப்படி பணம் சம்பாதித்தான் என்று என் கிட்ட கேளு .." என்று பணம் சம்பாதித்தவனை பற்றி எப்போதும் ஒரு இளக்காரம், ஒரு கேலி.

உங்களுக்கு எது வேண்டுமோ அதைப் போற்றுங்கள். 

போற்றுதலின் முதல் படி அதை இகழாமல் இருப்பது 

நம் முன்னோர்கள் புத்தகம் தெரியாமல் காலில் பட்டு விட்டால் கூட அதை தொட்டு கண்ணில்   ஒத்திக் கொள்ளச் சொன்னார்கள். ஏன் ? அது வெறும் காகிதம் மற்றும்  இங்க்  அவ்வளவு தானே ...இதில் என்ன இருக்கிறது  என்று நினைக்காமல் அதை மதிக்கச் சொன்னார்கள். 

படிப்பு வர வேண்டுமென்றால் புத்தகத்தை மதிக்க வேண்டும், படிப்பு சொல்லித் தரும் ஆசிரியரை மதிக்க வேண்டும். 

சில மாணவர்கள் சொல்லுவார்கள்...இந்த integration , differentiation ...இது எல்லாம் எவன் கண்டு   பிடிச்சான் ... இந்த graammar  ஐ கண்டு பிடிச்சவனை சுட்டுக் கொல்லனும் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். படிப்பு எப்படி வரும் ?

எண்ணையும் (maths )   எழுத்தையும் (literature ) இரண்டையும் இகழாதீர்கள். அதை போற்றுங்கள். 

எண்ணென்ப   ஏனை  எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்பார் வள்ளுவர் 

சின்ன வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் கொள்ள வேண்டும். அதன் மேல் வெறுப்பு  கொள்ளக் கூடாது.

நாம் எதை வெறுக்கிறோமோ அதை நாம் செய்ய மாட்டோம். நாம் எதை வெறுக்கிறோமோ அதை விட்டு விலகி நிற்போம். படிப்பை விட்டு விலகி நின்றால் வாழ்க்கை சிறக்காது. 

எனவே, எண்  எழுத்து இகழேல்.

இதுவரை எப்படியோ...இதை படித்தபின் எண்ணையும்  எழுத்தையும் இகழ்வதை நிறுத்துவது நலம் பயக்கும்.