ஆத்தி சூடி - இடம் பட வீடு எடேல்
இப்போது எங்கு பார்த்தாலும் விளையும் நிலங்களை பிளாட் போட்டு வீட்டு மனைகளாக மாற்றி அதில் வீடு கட்டி விடுகிறார்கள். இதனால், விவசாயம் நசிகிறது. வீடு எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். பயிர் விளைய நல்ல மண் வேண்டும், நீர் வரும் பாதையில் இருக்க வேண்டும், இப்படி நிறைய தேவைகள் இருக்கின்றன . அப்படி இருக்கும் இடங்களில் வீடு கட்டக் கூடாது.
இடம் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. பட்டு போதல் என்றால் கருகிப் போதல். பயிர் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது.
எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன், மக்கள் தொகை இவ்வளவு இல்லாத காலத்தில் அவ்வை சொல்லி இருக்கிறாள் ...இடம் பட வீடு எடேல் என்று.
எங்க கேக்கிறோம் ? விவசாய உற்பத்தி குறைந்து, உணவு பொருட்களின் விலை ஏறி திண்டாடுகிறோம்.
பெரியவங்க சொன்னா கேட்கணும்.
சிறுக கட்டி பெருக வாழ் அப்படின்னு தெரியாமையா சொன்னாங்க.
எவ்வளவு தீர்க்க தரிசனம் ?
காலம் காலமாக ஆத்தி சூடி பள்ளிகளில் சொல்லித் தரப் படுகிறது. ஒழுங்காக சொல்லித் தந்திருந்தால், சொல்லிய படி நடந்திருந்தால் ...
ஹ்ம்ம்ம்ம்ம்