Showing posts with label naachiyaar thirumozhi. Show all posts
Showing posts with label naachiyaar thirumozhi. Show all posts

Saturday, February 22, 2014

நாச்சியார் திருமொழி - இது ஒரு பெருமையா ?

நாச்சியார் திருமொழி - இது ஒரு பெருமையா ?

அவனைக் காணாமல் அவளுக்கு துக்கம்  பொங்குகிறது.யாரிடம் சொல்வாள் அவள் ?

மேகத்தினிடம் முறை இடுகிறாள்.

வானிலே கம்பளம் விரித்தது போல இருக்கும் மேகங்களே. என் திருமால் அங்கு வந்தானா ? என் கண்ணீர் என் முலையின் மேல் விழுந்து நான் சோர்ந்து போகின்றேன். நான் அப்படி சோர்ந்து போவது அவனுக்கு ஒரு பெருமையா ?

பாடல்

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

பொருள்

விண்ணீல = விண் + நீல = நீல நிற வானத்தில்

மேலாப்பு = மேல் ஆடை

விரித்தாற்போல் மேகங்காள் = விரித்ததைப் போல உள்ள மேகங்களே

தெண்ணீர் = தெளிந்த தீர்த்தங்கள்

பாய் = பாய்கின்ற

வேங்கடத்து = திருவங்கடத்தில் உள்ள 

என் திருமாலும் போந்தானே = என் திருமாலும் போனானே

கண்ணீர்கள் = கண்ணீர்கள்

முலைக்குவட்டில் = முலையின் நுனியில்

 துளி சோரச் = துளியாக விழ

சோர்வேனை = சோர்ந்து இருக்கும் என்னை

பெண்ணீர்மை யீடழிக்கும் = பெண்ணின் குணங்களை இப்படி அழிப்பது

இதுதமக்கோர் பெருமையே? = இது அவனுக்கு ஒரு பெருமையா ?

Saturday, February 15, 2014

நாச்சியார் திருமொழி - இரண்டில் ஒன்று

நாச்சியார் திருமொழி - இரண்டில் ஒன்று



அவள்: போகணுமா ?

அவன்: ம்ம்ம்ம்...

அவள்: அப்புறம் எப்ப ?

அவன்: சட்டுன்னு வந்துர்றேன்....

அவள்: ம்ம்ம்...

அவன்: திரும்பி வர்ற வரை உன் ஞாபகமா ஏதாவது தாயேன்

அவள்: என்ன வேணும் ? என் கைக் குட்டை ? என்ன வேணும் ?

அவன்: உன் வளையல்ல ஒண்ணு தா...உன் ஞாபகம் வரும் போதெல்லாம் அதை பாத்துக்குறேன்....

அவன் முன்னே தன் இரண்டு கைகளையும்  நீட்டி "நீயே எடுத்துக்கோ " என்றாள் .

அவள் விரல்களைப் பிடித்து, மென்மையாக அவளின் ஒரு வளையலை அவன் எடுத்துச் சென்றான்.

போய் ரொம்ப நாள் ஒண்ணும் ஆகலை. இவளுக்கு அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

குயிலிடம் கொஞ்சுகிறாள் ..."ஏ குயிலே, இந்த காதல் அவஸ்தையை என்னால் தாங்க முடியவில்லை....நீ போய் ஒண்ணு அவனை வரச் சொல், இல்லைனா என்னோட வளையலையாவது வாங்கிட்டு வா ...எனக்கு இரண்டில ஒண்ணு வேணும் "


பாடல்

பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் பாசத் தகப்பட்டி ருந்தேன்
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி லேகுறிக் கொண்டிது நீகேள்
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்.

சீர் பிரித்த பின்

பைங் கிளி வண்ணன் ஸ்ரீதரன் என்பதோர் பாசத்தில் அகப்பட்டு இருந்தேன்

பொங்கும் ஒளி வண்டு இறைக்கும் பொழில் வாழ் குயிலேகுறி கொண்டு இது  நீ கேள்

சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்

இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும்.


பொருள் 


பைங் கிளி = பசுமையான கிளி

வண்ணன் = அதை போன்ற வண்ணம் உள்ளவன்

ஸ்ரீதரன் = வான் பேரு ஸ்ரீதரன்

என்பதோர் = என்ற அவனின்

பாசத்தில் அகப்பட்டு இருந்தேன் = காதலில் நான் அகப்பட்டுக் கொண்டேன்

பொங்கும் ஒளி = ஒளி பொருந்திய 

வண்டு இரைக்கும் = வண்டுகள் இரைச்சலாக சப்தமிடும்

பொழில் = இந்த சோலையில்

வாழ் குயிலே = வாழும் குயிலே

குறி கொண்டு = குறித்துக் கொண்டு, கவனமாக 


 இது  நீ கேள் = இதை நீ கேள்

சங்கொடு சக்கரத்தான் = சங்கையும் சக்கரத்தையும் உள்ள அவன்

வரக் கூவுதல் = வரும்படி கூவு , அது இல்லைனா

பொன்வளை கொண்டு தருதல் = என்னுடைய பொன்னால் ஆன வளையலை கொண்டு தரச் சொல்


இங்குள்ள காவினில் வாழக் கருதில் = இந்தக் காட்டில் நீ வாழ வேண்டும் என்றால்

இரண்டத்து ஒன்றேல் = இரண்டில் ஒன்று

திண்ணம் வேண்டும். = நிச்சயமாக வேண்டும்

அது என்ன, அவன் வேண்டும் இல்லை என்றால் என் வளையல் வேண்டும் என்ற கோரிக்கை?

அவளுக்கு சந்தேகம். ஒரு வேளை தன்னை அவன் மறந்திருப்பானோ என்று. அவனுக்கு இருக்கும் ஆயிரம்  வேலையில் தன்னை நினைக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது. எப்பவாவது ஞாபகம் வந்தால் என்னோட வளையலை எடுத்துப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்வான்.

அந்த வளையலை திருப்பிக் கேட்டால்,

ஒன்று, "அடடா ...அவளை மறந்தே போயிட்டேனே " என்று என் நினைப்பு வந்து உடனே வருவான்

இல்லை என்றால், என் வளையலும் இல்லை என்றால் என் நினைப்பு வரும் போது என்ன செய்வான் ? என்னை பார்க்க நேரில் வந்து தானே ஆக வேண்டும் என்று  அவள் நினைக்கிறாள்.

அவனுக்காவது என் வளையல் இருக்கிறது ....எனக்கு என்ன இருக்கிறது ? அவனையே வரச் சொல்  என்கிறாள்.

இந்த காட்டில் வண்டுகளின் இரைச்சல் ரொம்ப இருக்கிறது. எனவே, குயிலே , நான் சொல்வதை கவனமாக குறித்துக் கொள் என்கிறாள். 

  

Friday, February 14, 2014

நாச்சியார் திருமொழி - அவனை என்ன செய்யறேன் பாரு

நாச்சியார் திருமொழி - அவனை என்ன செய்யறேன் பாரு 



ஆண்டாள் குயிலை தூது போகச் சொல்கிறாள்.

குயில் கேட்கிறது, உனக்காக நான் தூது போனால் எனக்கு என்ன இலாபம் என்று.

ஆண்டாள் சொல்கிறாள், "யாரிடமும் சொல்லாதே, எனக்கும் அவனுக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. அது வேறு யாருக்கும் தெரியாது. நானும் அவனும் மட்டுமே அறிந்த இரகசியம். நீ அவனை இங்கே வரச் சொன்னால், நான் அவனை என்ன செய்கிறேன் என்பதை நீ காணலாம் "

என்ன செய்வாள் கோதை ? அவனோடு சண்டை பிடிப்பாளோ ? ஊடல் கொள்வாளோ? கூடலும் கொள்வாளோ? என்ன செய்வேன் என்று சொல்லவில்லை.

குயிலின் (நமது) கற்பனைக்கு விடுகிறாள்...


பாடல்

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்  அவனைநான் செய்வன காணே

சீர் பிரித்த பின்

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன் 
நாங்கள் எம் இல் இருந்து ஓட்டிய  கச்சங்கம் நானும் அவனும் அறிதும் 
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றி யாகில்  அவனை நான் செய்வன காணே

பொருள்

சார்ங்கம் = சார்ங்கம் என்ற வில்லை

(ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று
அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
)



வளைய = வளையும்படி

வலிக்கும் = நாண்  ஏற்றும்

தடக்கைச் = பெரிய கைகள் 

சதுரன் = திறமையானவன் . அவன் இங்கே வர வேண்டும் என்று நினைத்தால் அது ஒன்றும் பெரிய பிரமாதம் இல்லை அவனுக்கு. பெரிய வீரன். சாமர்தியமானவன் என்று சொல்லாமல் சொல்கிறாள் கோதை.

பொருத்தம் உடையன் = எனக்கு நல்ல பொருத்தம் உடையவன்

நாங்கள் = நாங்கள் (நானும் அவனும் )

எம் = எங்களுடைய

இல் = இலத்தில், வீட்டில்

இருந்து = இருந்து

ஓட்டிய = செய்து கொண்ட

கச்சங்கம் = இரகசிய ஒப்பந்தம்

 நானும் அவனும் அறிதும் = நானும் அவனும் மட்டும் அறிவோம்

தேங்கனி = தேன் போல் இனிக்கும் கனிகள்

மாம்பொழில் = மாங்கனிகள் நிறைந்த

செந்தளிர் = மரத்தில் உள்ள சிவந்த தளிர்களை

கோதும் = கொத்தும் (என் அவஸ்தை உனக்கு புரிய மாட்டேன் என்கிறது குயிலே. நீ பாட்டுக்கு மரத்துல உக்காந்துகிட்டு இந்த இலைகளை கோதிக் கொண்டு இருக்கிறாய்)

சிறு குயிலே = சிறு குயிலே

திருமாலை = திருமாலை


ஆங்கு = இங்கு

விரைந்து = உடனே

ஒல்லை = சீக்கிரம். (இராமாயணத்தில் இராமன் மிதிலை வருகிறான். அந்த ஊரின் கோட்டை மேல் உள்ள கொடிகள் எல்லாம் இராமனை சீக்கிரம் சீக்கிரம் வா என்று அழைப்பது போல அசைந்ததாம்.

மையறு மலரின் நீங்கி  யான்செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று  செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்  கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாஎன்று  அழைப்பது போன்ற தம்மா")

கூகிற்றி யாகில் = நீ வரும்படி கூவினால்

அவனை நான் செய்வன காணே = நான் அவனை என்ன செய்வேன் என்று நீ காணலாம்





Wednesday, February 12, 2014

நாச்சியார் திருமொழி - உனக்கு புண்ணியமாய் போகும்

நாச்சியார் திருமொழி - உனக்கு புண்ணியமாய் போகும் 


இந்த ஆண்டாள் ஓயாமல் குயிலை பார்த்து இதைச் செய் , அதைச் செய் என்று சொல்லிக் கொண்டே  இருக்கிராள் . பார்த்தது அந்தக் குயில். அவள் காணாத வண்ணம் மறைந்து கொண்டது. கோதை விடுவதாய் இல்லை.

"ஏய், அழகான குயிலே, அவனோடு சேரும் ஆசையினால் என் கொங்கைகள் கிளர்ந்து எழுந்து, குதுகலமாக இருக்கிறது. அவனைக் காணாமல் என் ஆவியோ சோர்கிறது. அவன் இங்கே வரும்படி நீ கூவினால், உனக்கு ரொம்ப புண்ணியமாகப் போகும் " என்று குயிலிடம் வேண்டுகிறாள்.


பாடல்

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ சாலத் தருமம் பெறுதி

சீர் பிரித்த பின்

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலஞ் செய்யும்
அங் குயிலே.உனக்கென்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ  சாலத் தருமம் பெறுதி


பொருள் 

பொங்கிய பாற்கடல் = பொங்கிய பாற்கடல். பாற்கடல் ஏன் பொங்கிற்று ? ஆண்டாள் மனதில் ஒரே சந்தோஷம். காதல் தரும் பர பரப்பு. அவளுடைய பர பரப்பினால், அவளுக்கு அந்த பால் கடலும் பொங்குவது போலத் தெரிகிறது.

பள்ளி கொள்வானைப் = பள்ளி கொண்டிருப்பவனை

புணர்வதோர் ஆசையினால் = புணரும் ஆசையினால் 

என் கொங்கை = என் மார்புகள் 

கிளர்ந்து = கிளர்ச்சி அடைந்து 

குமைத்துக்   = அடர்ந்து. அதாவது ஒன்றோடு ஒன்று உரசி

குதுகலித்து = ஆனந்தப் பட்டு 

ஆவியை ஆகுலஞ் செய்யும் = உனது உயிரை வருத்தும்


அங் குயிலே = அழகிய குயிலே

உனக்கென்ன = உனக்கு என்ன

மறைந்து உறைவு = மறைந்து உறைகிறாய். மறைந்து வாழ்கிறாய் 

ஆழியும் = சக்கரமும்

சங்கும் = சங்கும்

ஒண் தண்டும் = கையில் கதையும்

தங்கிய கையவனை = எப்போதும் கொண்டு இருப்பவனை

வரக் கூவில் நீ = நீ வரும்படி கூவினால்

சாலத் தருமம் பெறுதி = உனக்கு ரொம்ப புண்ணியமாகப் போகும். 

நாச்சியார் திருமொழி - தலை அல்லால் கைம் மாறிலேனே

நாச்சியார் திருமொழி - தலை அல்லால் கைம்  மாறிலேனே 




எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலயு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மாறி லேனே

 இப்படியும் கூட காதலிக்க முடியுமா என்று வியக்க வைக்கும்  பாடல்.

"அவனை இப்போது வரச் சொல். அவன் வரா விட்டால், நாளடைவில், வயதாகி,  என் சிவந்த இதழ்களும், என் மார்புகளும் அழகு அழிந்து போகும். அப்படி அழகு அழிந்து போனால் அவனுக்குத் தான் நஷ்டம். அதனால் அவனை இப்போதே வரச் சொல்.

அவனுக்கு என்ன கல்  நெஞ்சம்.என்னை வருத்த வேண்டும் என்றே புன் முறுவல் மட்டும் காட்டி விட்டு வரமால்  போகிறான். போகட்டுமே. எனக்கு என்ன. பின்னாடி எப்பவவாவது நான் வேண்டும் என்று வருவான் அல்லவா ...அப்போது இந்த இதழ்களும் என் மார்புகளும் அழகு அழிந்து போய் இருக்கும். யாருக்கு நட்டம் ?

அதனால் அவனை இப்போதே வரக் கூவுவாய் குயிலே...அப்படி நீ அப்படி கூவுவாயாகில் என் தலையையே உனக்கு நான் தருவேன் "

 என்கிறாள்.


பாடல், சீர் பிரித்த பின்

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீ கேசன் வலி செய்ய
முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இல்லேனே 

பொருள்

எத்திசையும் = அனைத்து திசைகளிலும் உள்ள

அமரர் = தேவர்கள்

பணிந்து = பணிந்து

ஏத்தும் = புகழ் பாடும்

இருடீ கேசன் = தன்னைக் கண்டவர்களின் புலன்களை கொள்ளை கொள்ளுபவன்

வலி செய்ய = எனக்கு துன்பம் செய்ய

முத்தன்ன =  முத்துப் போன்ற

வெண் = வெண்மையான

முறுவல் = புன்முறுவல்

செய்ய = செய்துவிட்டுப் போனான், நானோ 

வாயும் = என் சிவந்த இதழ்களும்

முலையும் = முலையும்

அழகு அழிந்தேன் நான் = அழகு அழிந்தேன் நான்

கொத்து = கொத்து கொத்தாக

அலர் = மலர்ந்து இருக்கும்

காவில் = கானகத்தில்

மணித்தடம் = அழகான இடத்தில்

கண் படை கொள்ளும் = கண் மூடித் தூங்கும்

இளம் குயிலே = இளம் குயிலே

என் = என்னுடைய

தத்துவனை = தத்துவனை. தத்துவம் என்பது உண்மை. அதுதான் பொருள். அதுதான் நம்பிக்கை. அவன் தான் அவளுக்கு எல்லா  தத்துவங்களும்,அவற்றின் பொருளும்.

வரக் = வரும்படி

கூகிற்றியாகில் = நீ கூவுவாயானால்

தலை அல்லால் கைம்மாறு இல்லேனே = என் தலையைத் தவிர தருவதற்கு ஒன்றும்  இல்லை  என்னிடம். தலையை தருவேன் என்றால் தலையை வெட்டித் தருவேன் என்று அல்ல. என்னையே தருவேன் என்று ஒரு பொருள். தலை என்பது  அறிவு, அதனால் வரும் அகங்காரம், நான் என்ற அகந்தை இவற்றின்  இருப்பிடம். அவன் வருவது என்றால் இதை எல்லாம் விட்டு விடுவேன் என்கிறாள். மாற்றி யோசித்தால், இதை எல்லாம் விட்டால் தான் அவன் வருவான் என்பது  புலனாகும். அகந்தை போன இடத்தில் அவன் வருவான். இராவணன் மலையைத் தூக்க முடியும் என்று அகந்தை கொண்டான். அது முடியாது என்று அகந்தை போன இடத்தில் அவன் வந்தான்.

கோவிலில் போய் முடி காணிக்கை செலுத்துகிரோமே எதற்கு ?

முடி ஒரு அழகு. அழகு அழியும். அந்த முடி இல்லாவிட்டால் நம்மை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள். ஒரு நாள் இந்த முடி தாங்க  உதிரும்.அப்போது நம் நிலைமை எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு வெள்ளோட்டம். நம்  ,மரியாதை, மதிப்பு நம் முடியில் இருக்கிறது !

இரண்டாவது, முடியை எடுக்கும் போது நம் சாயலே மாறிப் போகிறது. நான் என்பது யார் ? அந்த முடியா ? முடியில்லாத நானும், முடியுள்ள நானும் வேறு வேறு  ஆட்களா ?

 மூன்றாவது,நம்மால் தலையைத் தர முடியாது...முடியைத் தருகிறோம். ரொம்ப ஒன்றும் தூரம் இல்லை....






Wednesday, May 22, 2013

நாச்சியார் திருமொழி - அவன் நிறத்து பாதகர்களே


நாச்சியார் திருமொழி - அவன் நிறத்து பாதகர்களே 


நீங்கள் யாரையாவது ரொம்ப ரொம்ப ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்...நீங்கள் ஏதோ வேலையாக போய்  கொண்டிருகிறீர்கள்...அந்த வழியில் உங்கள் மனம் கவர்ந்தவரின் பெயர் உள்ள பெயர் பலகையோ, அந்த பெயரை சொல்லி யாரோ அழைத்தாலும் உடனே உங்கள் மனதில் அந்த மனம் கவர்ந்தவரின் முகம் தென்றலாய் வருடி  போகும் அல்லவா ? அவர்களுக்கு பிடித்த ஒரு பூவோ, ஒரு பாடலோ நீங்கள் செல்லும் வழியில் கேட்டால் அவர்கள் நினைவு மனதுக்குள் மழை தூறி போகும் தானே ? அவர்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுமே? இப்போது என்றால், உடனே கை பேசியை தட்டி அவர்களை கூப்பிட்டு பேசி விடலாம்...

ஆண்டாள் காலத்தில் அது எல்லாம் முடியுமா ? அதுவும் அந்த திருமாலுக்கு எந்த எண்ணுக்கு போன் செய்வது.

சும்மா இருக்க மாட்டாமல் இந்த குயிலும், மயிலும்,  களாப் பழங்களும், கருவிளம் பூக்களும் அந்த திருமாலின் நிறத்தில் தோன்றி, அவனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு என்னை பாடாய் படுத்துகின்றன என்று அவற்றின் மேல் செல்ல கோபம் கொள்கிறாள் ஆண்டாள்.

பாடல்



பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 

பொருள்


Tuesday, October 16, 2012

நாச்சியார் திருமொழி - அவன் என்னை நேசிக்க


நாச்சியார் திருமொழி - அவன் என்னை நேசிக்க


கடவுளை நாம் விரும்பினால் போதுமா ? அவன் நம்மை விரும்ப வேண்டாமா ?

நாம் பூஜை, புனஸ்காரம், பஜனை, வேண்டுதல், அர்ச்சனை என்று எல்லாம் செய்கிறோம்.

நம்மால் முடிந்தது அவ்வளவு தான். 

ஆண்டாள் ஒரு படி மேலே போகிறாள். 

மன்மதனே, அந்த கண்ணன் என் மேல் காதல் கொள்ளும்படி அவன் மேல் மலர் கணை தொடு என்று மன்மதனை வேண்டுகிறாள். காதல் வயப் பட்டவர்கள், தங்கள் காதலன் பெயரையோ அல்லது காதலியின் பெயரையோ தங்கள் கைகளில் எழுதி மகிழ்வார்கள். அந்த பெயருக்கு முத்தம் தருவார்கள். காதலன் அல்லது காதலியின் பெயரை எழுதுவது, பார்ப்பது என்பது ஒரு சுகமான விஷயம். ஆண்டாள் சொல்கிறாள், " என் மேல் கடல் வண்ணனின் பெயரை எழுதி, உன் மலர்கனையோடு என்னையும் அவன் மேல் எய்" . 

காதலின் உச்ச கட்டம். 

காதல் கனியும் அந்தப் பாடல்: