Showing posts with label அருணகிரி நாதர். Show all posts
Showing posts with label அருணகிரி நாதர். Show all posts

Sunday, April 29, 2012

கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


இருக்கப் போறதே கொஞ்ச நாள். அதில் படிக்க ஒதுக்கும் நேரம் மிக மிக அற்பமான நேரம். அதிலும் கவிதை படிக்க கிடைக்கும் நேரம் அரிதிலும் அரிது. அந்த சிறிய நேரத்திலாவது நல்ல கவிதை படியுங்கள் என்கிறார் அருணகிரி நாதர்....போகும் வழிக்கு புண்ணியம் தேடுங்கள் என்கிறார் இந்தப் பாடலில்....

Monday, April 23, 2012

திருப் புகழ் - முதுமையின் சோகம்

திருப் புகழ் - முதுமையின் சோகம்


இளமையாய் இருக்கும் போது எல்லாம் இனிமையாய் இருக்கும். முதுமை வரும் போது துன்பங்களும் கூட வரும்.


திருப் புகழ் சந்தக் கவியால் ஆனது. படிக்க சற்று கடினம். சீர் பிரித்தால் தான் அர்த்தம் புரியும்.


கீழ் கண்ட பாடலில், முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி பெருமான்....



Tuesday, April 10, 2012

கந்தர் அலங்காரம் - தலை எழுத்தை அழிக்க



 
இந்த தலை எழுத்து அப்படின்னு சொல்றாங்களே அத அழிக்க எதாவது eraser இருக்கா?

அதை எப்படி அழிப்பது ?
 
இருக்கே ... அதுக்கும் ஒரு eraser இருக்கு அப்படின்னு அருணகிரிநாதர் சொல்றார்

அது .....

கந்தர் அலங்காரம் - Quality Stamp


முருகனுக்கு பல பெயர்கள் உண்டு.

அதில் கந்தன் என்று பெயர் மிகச் சிறப்பு வாய்ந்தது.

ஏறக் குறைய அனைத்து முருகன் பற்றிய இலக்கியங்களும் கந்தன் பெயரிலே அமைந்துள்ளன.

கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் கலி வெண்பா, கந்த புராணம், கந்தர் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், என்று பல நூல்கள் கந்தன் என்ற பெயரிலேயே அமைந்துள்ளன.

கந்தர் அலங்காரம்.

கந்தனை அலங்காரம் பண்ணிப் பார்க்கும் பாடல்கள். அதில் இருந்து ஒரு இனிய பாடல் .....

கந்தர் அலங்காரம் - சேற்றில் ஆடிய குழந்தைகள்


 

நம் குழந்தைகள் எங்காவது விளையாடச் செல்லும்.

சில சமயம் கீழே விழுந்து சேற்றை வாரி பூசிக்கொண்டு வந்து நிற்கும்.

அப்போ, தாய் என்ன செய்வாள்?

நிறைய தண்ணிய விட்டு குளிக்க வைப்பாள்.

அந்த சேறு போக வேண்டும் அல்லவா ?
 
 
ஒரு குழந்தையாய் இருந்தால் பக்கெட்டில் தண்ணி பிடித்து குளிபாட்டிவிடலாம்.

நிறைய இருந்தால் ?
 
இறைவனுக்கு எத்தனை குழந்தைகள் ?

ஒண்ணு மாத்தி ஒண்ணு இப்படி அழுக்கா வந்து நிக்குது.

எனவே அவன் தலையின் மேலேயே ஆற்றை வைத்து கொண்டு இருக்கிறான். நம் சேற்றை கழுவ அவன் ஆற்றை வைத்து கொண்டு இருக்கிறன்.
 
அது என்ன சேறு ? அருணகிரி நாதர் சொல்லுகிறார்....