கம்ப இராமாயணம் - இராவணன் ஏன் இறந்தான்?
விபீஷணனை தொடர்ந்து மண்டோதரி வருகிறாள்.
இராவணன் மேல் விழுந்து புலம்புகிறாள்.
தாரை புலம்பலும், மண்டோதரி புலம்பலும் மிக மிக அர்த்தம் உள்ள புலம்பல்கள்.
அவர்களின் அறிவு திறம் வெளிப்படும் இடம்.
சோகமும், விரக்தியும், மனச் சோர்வும், கவித்துவமும் நிறைந்த பாடல்கள்.
மடோதரியின் புலம்பலில் இருந்து ஒரு பாடல்.
இராவணன் இறந்ததற்கு எவ்வளவோ காரணங்கள்...
அவன் ஜானகி மேல் கொண்ட காதல்.
ஜானகியின் கற்பு.
சூர்பனகியின் இழந்த மூக்கு
தசரதனின் கட்டளை
அதை ஏற்று வந்த இராமனின் பணிவு
எல்லாவற்றிற்கும் மேலாக இந்திரனின் தவம்
இவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்து இராவணின் உயிரை கொண்டு சென்று விட்டது என்கிறாள்.