Showing posts with label pazhamozhi. Show all posts
Showing posts with label pazhamozhi. Show all posts

Friday, January 12, 2024

பழமொழி - பக்கத்து வீட்டு சமையல்

 பழமொழி - பக்கத்து வீட்டு சமையல் 


பக்கத்து வீட்டில் நல்ல நெய் விட்டு ஏதோ பலகாரம் செய்கிறார்கள். மணம் நம் மூக்கைத் துளைக்கிறது. அல்லது பக்கத்து வீட்டில் கருவாடு போன்ற அசைவ உணவு சமைக்கிறார்கள். அதன் வாசம் நம் மூக்கை தாக்கும் அல்லவா? அங்கே போய் பார்க்க வேண்டாம், என்ன நடக்கிறது என்பதை பார்க்காமலேயே நாம் அறிந்து கொள்ள முடியும். 


அது போல ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை அறிய அவன் கூடவே இருந்து, அவன் செய்யும் செயல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவன் யாருடன் கூட்டாக இருக்கிறான் என்று பார்த்தாலே போதும். 


தெருவோர டீ கடையில், புகை பிடித்துக் கொண்டு, போகும் வரும் பெண்களை கிண்டல் அடித்துக் கொண்டு இருக்கும் கூட்டத்தில் இருப்பவனை பற்றி நாம் என்ன நினைப்போம்?


இன்னொருவன் பலருடன் சேர்ந்து ஒரு சமய சொற்பொழிவோ, ஆன்மீக சொற்பொழிவோ கேட்கிறான் என்றால், அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? 


பாடல் 


முயலவோ வேண்டா முனிவரை யானும்

இயல்பினர் என்ப தினத்தால் அறிக

கயலியலும் கண்ணாய் கரியரோ வேண்டா

அயலறியா அட்டூணோ இல்.


பொருள் 


முயலவோ வேண்டா = பெரிய முயற்சி எல்லாம் வேண்டாம் 


முனிவரை யானும் = முனிவர் ஆயினும் 


இயல்பினர் என்ப = அவர்கள் என்ன இயல்பினர் என்பதை 


தினத்தால் அறிக = இனத்தால் அறிக = அவர்கள் கூடியிருக்கும் கூட்டத்தால் அறிந்து கொள்க 

 

கயலியலும் = மீனை போன்ற 


கண்ணாய் = கண்களை உடையவளே 


கரியரோ வேண்டா = கரி என்றால் சாட்சி. சாட்சி எதுவும் வேண்டாம், நிரூபணம் எதுவும் வேண்டாம் 


அயலறியா = பக்கத்து வீட்டுக்காரர் அறியாத 


அட்டூணோ இல் = அடுதல் என்றால் சமைத்தல். ஊன் என்றால் உணவு. பக்கத்து வீட்டுக்காரன் அறியாத சமைத்த உணவு இல்லை. நாம் என்ன சமைக்கிறோம் என்று பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தெரியும். 


நாம்  நினைத்துக் கொண்டிருப்போம் நம்மை பற்றி யாருக்கும் தெரியாது என்று. நாம் யாரோடு பழகுகிறோமோ, அதை வைத்து இந்த உலகம் நம்மை எடை போடும். 


யாரோடு பழகுகிறோம் என்பது முக்கியம். 


(மணக்க மணக்க சமைக்க வேண்டும் என்பதும் முக்கியம்...:))

Wednesday, November 15, 2023

பழமொழி - உப்புக் கடல் போல

பழமொழி - உப்புக் கடல் போல 


ஏன் தீயவர்கள் சகவாசம் கூடாது என்று சொல்லுகிறார்கள்?


தீயவர்களோடு சேர்ந்தால், ஒன்று அவர்கள் நல்லவர்களாக வேண்டும், அல்லது அவர்களோடு சேர்ந்து நாமும் தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு விடுவோம். 


எது நடக்க சாத்தியம் அதிகம்?


மலையின் மேல் உள்ள பனி உருகி, பளிங்கு போல நதி நீர் வரும். வரும் வழியில் உள்ள மூலிகைகள், பூக்களின் நறுமணம் எல்லாம் கொண்டுவரும். அத்தனை சுவையாக இருக்கும் அந்த நதி நீர். 


அதே நீர் கடலில் சேர்ந்து விட்டால், என்ன ஆகும்?


கடல் நீர் நல்ல நீராககுமா அல்லது நதி நீர் உப்புக் கரிக்குமா?


ஆயிரகணக்கான ஆண்டுகள் நதி நீர் கடலில் சேர்ந்த வண்ணமாக இருக்கிறது. இருந்தும், கடல் நீர் மாறவே இல்லை. மாறாக, நதி நீர்தான் உப்பு நீராகிறது. 


அது போல தீயவர்களோடு (கடல்) சேர்ந்த நல்லவர்களும் (நதி) அந்தக் கடல் நீர் போல் மாறிப் போவார்கள் என்கிறது இந்த நாலடியார். 


பாடல் 




 மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்

உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க

இனநலம் நன்குடைய வாயினும் என்றும்

மனநலம் ஆகாவாம் கீழ்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_15.html


(please click the above link to continue reading)


மிக்குப் = மிகுதியாக 


பெருகி = பெருகி வந்து 


மிகுபுனல் = அதிகமான நீர் 


பாய்ந்தாலும் = ஆற்றில் பாய்ந்தாலும் 


உப்பொழிதல் = உப்பு + ஒழிதல் = ஒருகாலும் உப்பை விடாத 


செல்லா ஒலிகடல்போல் = இருக்கின்ற கடல் போல 


மிக்க = நல்ல 


இனநலம் = சேரும் இனத்தின் குணம்  


 நன்குடைய வாயினும் = நல்லதாக இருந்தாலும்


என்றும் = எப்போதும் 



மனநலம் = நல்ல மனம் உடையவாக 


ஆகாவாம் = ஆகாது 


கீழ் = கீழான மனம் உடையவர்கள்.


நம்மைவிட உயர்ந்தவர்களைச் சார்ந்தால், நாமும் உயர்வோம்.


நம்மைவிட தாழ்ந்தவர்களைச் சார்ந்தால், நாமும் தாழ்வோம்.




Thursday, November 2, 2023

பழமொழி - சொல்லவே இல்லை

 பழமொழி - சொல்லவே இல்லை 


நம் நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ சிறிது இடைவெளிக்குப் பின் சந்திக்க நேர்ந்தால், அவர்கள் சிலவற்றைச் சொல்லுவார்கள். நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதெல்லாம் சொல்லவே இல்லையே நம்மிடம் என்று என்று அதிசயப் படுவோம். 


உதாரணமாக, "...அங்க ஒரு வீடு வாங்கினேன்...நல்ல விலைக்கு வந்தது" என்பார்கள். "அடப் பாவி, வீடு வாங்கினதைக் கூட என்னிடம் சொல்லவில்லையே. சொல்லி இருந்தால் நானும் கூட அங்கேயே வாங்கி இருப்பேனே..." என்று உள்ளுக்குள் நினைப்போம். 


அதே போல, பெண்ணுக்கோ, பையனுக்கோ வரன் அமைந்து இருக்கும். வெளியே சொல்லாமல் முடித்து இருப்பார்கள். 


இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் பல விடயங்கள் நடக்கும். எல்லாவற்றையும், எல்லோருடமும் சொல்லிக் கொண்டு இருக்கமாட்டார்கள். அவங்களுக்கு எது நல்லதுன்னு படுதோ அதை அவர்கள் செய்வார்கள். எவ்வளவு நெருங்கிய நட்பாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி, அப்படித்தான் செய்வார்கள். 


அதற்காக வருத்தப்படக் கூடாது. 


இப்படி வாழ்வின் எதார்த்தங்களை புட்டு புட்டு வைப்பது பழமொழி என்ற நூல்.  


ஒவ்வொரு செய்யுளும் நாலு அடி, அதில் கடைசி அடி, ஒரு பழமொழியாக இருக்கும். சில பழமொழிகள் நாம் கேட்டு இருக்க மாட்டோம். இருந்தாலும் மிக உபயோகமான பாடல்கள். 



பாடல் 


சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை

அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்

ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்

சீர்ந்தது செய்யாதா ரில்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_2.html


(pl click the above link to continue reading)


சுற்றத்தார் = உறவினர்கள் 


நட்டார் = நண்பர்கள் 


எனச்சென் றொருவரை =  என்று சென்று ஒருவரை 


அற்றத்தால் = மறைத்து செய்யும் காரியங்களைக் கொண்டு


தேறார் = எடை போட மாட்டார் 


அறிவுடையார் = அறிவு உள்ளவர்கள் 


 கொற்றப்புள் = புள் என்றால் பறவை. கொற்றப் புள் என்றால் சிறந்த பறவை, அதாவது கருடன் 


ஊர்ந்துலகம் = மேல் ஏறி உலகம் 


தாவின = தாவி அளந்த 


அண்ணலே யாயினும் = திருமாலே என்றாலும் 


சீர்ந்தது = தனக்கு சிறந்தது என்று நினைப்பதை 


செய்யாதா ரில் = செய்யாதவர்கள் யாரும் இல்லை 


எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு இருக்க மாட்டார்கள். அப்படி சொல்லவில்லையே என்று அவர்கள் மேல் வருத்தம் கொள்ளக் கூடாது. அவங்களுக்கு பிடிச்சதை அவங்க செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 


அதுதான் யதார்த்தம். 


அது மட்டும் அல்ல, உங்கள் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை. சொல்லாமல் செய்தால் அவர்கள் இப்படி நினைப்பார்களோ, தவறாக நினைப்பார்களோ, என்றெல்லாம் நினைக்க வேண்டும். உங்களுக்கு நல்லது என்று படுகிறதா, எதைப் பற்றியும் கவலைப் படாமல் செய்யுங்கள். அது தான் உலக வழக்கு. 





Wednesday, July 26, 2023

பழமொழி - நீரற நீர்ச்சார் வறும்

 பழமொழி - நீரற நீர்ச்சார் வறும்


பிறவித் துன்பம் என்பது பெரும் துன்பம்.  


எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்பார் மணிவாசகர். 


மீண்டு இங்கு வாரா நெறி என்பார் வள்ளுவக் கடவுள். 


இந்தப் பிறவித் தொடரை அறுப்பது எப்படி?


வீட்டில் திரி போட்டு விளக்கு ஏற்றுவதை பார்த்து இருப்போம். விளக்கு என்றால் என்ன என்பதையே அறியாத ஒரு தலைமுறைக்குள் வந்து விட்டோம். 


அந்த விளக்கு எரிய வேண்டும் என்றால், விளக்கு வேண்டும், திரி வேண்டும், எண்ணெய் வேண்டும். இவை இல்லாமல் விளக்கு எரியாது. இன்றைய தலை முறையினருக்கு சொல்லுவது என்றால் லைட் எரிய வேண்டும் என்றால் பல்பு, எலெக்ட்ரிசிட்டி, வயர் இந்த மூன்றும் வேண்டும். 


நம் பிறவி நிகழ வேண்டும் என்றால் அதற்கு வினை வேண்டும். வினைதான் நம் பிறவிக்கு காராணம். 


அந்த வினையை மூன்றாகப் பிரிக்கிறார்கள். நாம் சேர்த்து வைத்த வினை, இப்போது செய்கின்ற வினை, இந்த இரண்டையும் சேர்த்து அதில் இருந்து நாம் அனுபவிக்கும் வினை. இந்த வினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 


இதில் நல் வினையும் அடங்கும், தீ வினையும் அடங்கும். 


வினையை அறுத்தால், பிறவி அறும். 


எப்படி எண்ணெய், திரி இவற்றை நீக்கினால் சுடர் எரிவது நின்று போகுமோ அது போல. 


ஒரு குளத்தில் மீன், தவளை, ஆமை என்று உயிரினங்கள் வசிக்கும். குளத்துக்கு நீர் வருவது நின்று போனால், கொஞ்ச காலத்தில் குளத்தில் உள்ள உயிர்கள் அழிந்து போகும் அல்லவா. அது போல. 


பாடல் 


திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக

எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்

சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்

'நீரற நீர்ச்சார் வறும்'.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_26.html


(click the above link to continue reading)


திரியும் = திரி 


இடிஞ்சிலும் = விளக்கு, அகல் 


நெய்யும் = நெய் 


சார்வாக = அவற்றைச் சார்ந்து 


எரியும் = எரியும் 


சுடரே = சுடர், தீபம் 


அனைத்தாய்த் = அது போல 


 தெரியுங்கால் = ஆராய்ந்து தெளியும் போது 


சார்வற = சார்பு அற்றுப் போக 


ஓடிப் = சென்ற பின் 


பிறப்பறுக்கும் = பிறப்பை அறுக்கும் 


அஃதேபோல் = அதைப் போல 


'நீரற = நீர் வருவது நின்று போனால் 


நீர்ச்சார் வறும் = நீர் + சார்வு + அறும்  = நீரை சார்ந்து வாழ்கின்ற உயிரினங்கள் அற்றுப் போய் விடும். 


'நீரற நீர்ச்சார் வறும்' என்பது பழமொழி. நீர் இல்லாவிட்டால், உயிரினங்கள் அழியும் என்ற பழமொழியை வைத்துக் கொண்டு, ஒரு பாடம் சொல்கிறது இந்தப் பாடல். 


எல்லோருக்கும் தெரிந்த ஒன்று பழமொழி. தெரியாத ஒன்று எப்படி பிறவித் தொடரை அறுப்பது என்பது. எவ்வளவு எளிமையாக விளக்குகிறது இந்தப் பாடல் 


(Some of my readers feel even my simple Tamil is challenging to them. To help them, I am giving a small English version:


A lamp can glow only with the lamp, and the wick. Life will be sustained only if there is water. Same way, our birth - death - rebirth will happen due to our karmas or actions. If we do good things, we will be born to enjoy the fruits of those and if we do bad things, we will be born to suffer those bad acts).







Saturday, October 28, 2017

பழமொழி - தமக்கு மருத்துவர் தாம்

பழமொழி - தமக்கு மருத்துவர் தாம் 


நவீன மருத்துவத்தில் பல சிக்கல்கள் உள்ளன.

ஒரு நோய்க்கு ஒரு மருந்துதான். காய்ச்சல் உங்களுக்கு வந்தாலும் சரி, எனக்கு வந்தாலும் சரி, யாருக்கு வந்தாலும் ஒரே மருந்துதான். இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்று வைத்திருக்கிறார்கள்.  நீங்களும் நானும் ஒன்றா ? என் உடல், என் உணவு, என் சூழ்நிலை, என் வேலை,  என்று எல்லாமே உங்களில் இருந்து மாறுபட்டது. எப்படி இரண்டு பேருக்கும் ஒரே மருந்து சரி வரும்.

இரண்டாவது, நவீன மருத்துவம் , நோய்களுக்குக் காரணம் நுண் கிருமிகள் (germs ) என்று நம்புகிறது. Germ Theory.  பாக்டீரியா, வைரஸ் போன்றவை நோய்களை உண்டாக்குகின்றன என்பது நவீன மருத்துவத்தின் கோட்பாடு. அப்படி என்றால், அந்த கிருமிகள் தாக்கும் எல்லோருக்கும் அந்த நோய் வர வேண்டுமே ? வருவது இல்லை. நோய்க்குக் காரணம் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே.  இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நவீன மருத்துவத்தில் வழி இல்லை. அதாவது, நோய் எதிர்ப்பு இருந்தால் நோயே வராது. ஆரோக்கியமாக இருக்கலாம்.  நவீன மருத்துவம் என்பது நோயை சரிப் படுத்துமே தவிர, நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாது.

மூன்றாவது, நோய் தடுப்பூசி என்று போடுகிறார்கள். அவை முதலில் நோயை உண்டுபண்ணும். அந்த நோயை நமது உடல் போராடி வென்றெடுக்கும். அப்படி நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்குகிறார்கள். நோய் தடுப்பு என்பது , நோயை உண்டாக்குவது. இந்த தடுப்பூசிகளால் பல சிக்கல்கள் வருகின்றன  என்று மேல் நாடுகளில் சொல்கிறார்கள்.

நான்காவது, நவீன மருத்துவத்தில் , நோய்க்கு தரும் ஒவ்வொரு மருந்தும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். Side effects என்று சொல்வார்கள். அதாவது , ஒரு நோயை குணப்படுத்த வேண்டும் என்றால், வேறு பல உபாதைகளுக்கு, நோய்களுக்கு உள்ளாக வேண்டும். பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது.  தலை வலி போய் திருகு வலி வருவதுதான் மிச்சம்.

ஐந்தாவது, ஒரு நோய்க்கு ஒரு மருந்து உண்டு. ஒருவருக்கு , ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருந்தால் , அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் தருவார்கள். இந்த மருந்துகள் உள்ளே சென்று அவை ஒன்றோடு ஒன்று கலந்து என்னென்ன செய்யும் என்று எளிதாக அறிய முடியாது. நோய் சரியாகவில்லை என்றால், மருந்தை மாத்தி கொடுப்பார்கள். அல்லது மருந்தின் அளவை கூட்டி  குறைத்து கொடுப்பார்கள். ஒரு ஊகம் தான்.

ஆறாவது , இன்று எல்லாமே இலாப நோக்கில் செல்வதால், தேவை இல்லாத சோதனைகள் (test ), தேவை இல்லாத அறுவை சிகிச்சை என்று நிகழ்கிறது. இவற்றினால் பணமும், உடல் நலக் குறைவும் உண்டாகிறது.


இப்படி , நவீன மருத்துவத்தில் பல குறைபாடுகள் உண்டு. நிறைகளும் உண்டு. இல்லை என்று சொல்வதற்கு இல்லை.

இருப்பினும், பல சமயங்களில் நாம் மருத்துவர்களை முழுவதுமாக நம்பிக் கொண்டிருக்காமல், நம் உடல் ஆரோக்கியத்தை பற்றி நாம் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எது சரி, எது தவறு என்று சிந்திக்க வேண்டும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது, எவ்வளவு சாப்பிடலாம், எப்போது சாப்பிடலாம்  என்று நம் உடல் நிலையை உன்னிப்பாக கவனித்து நமக்கு நாமே சரியான கட்டுப்பாடுகள், வரைமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் வந்தால் இருக்கவே இருக்கிறார் டாக்டர், ஒரு ஊசி போட்டால் சரியாகி விடும் என்று இருக்கக் கூடாது.

நம் ஆரோக்கியத்திற்கு நாம் தான் பொறுப்பு.

சரியான உணவு, சரியான உடற் பயிற்சி, ஓய்வு, தூக்கம், நல்ல மன ஆரோக்கியம் என்று நம் உடலை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேறு யாரும் நமக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கக் கூடாது.

பாடல்

‘எமக்குத் துணையாவார் யாவர்?’ என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம்.

பொருள்

‘எமக்குத் = எனக்கு

துணையாவார் = துணை செய்பவர்

யாவர்?’  = யார்

என்று எண்ணி = என்று நினைத்துக் கொண்டு

தமக்குத்  = நமக்கு

துணையாவார்த் = துணை செய்பவர்களை

தாம் = நாம்

தெரிதல் வேண்டா = தேடிக் கொண்டிருக்கக் கூடாது

பிறர்க்குப் = மற்றவர்களுக்கு

பிறர் = ஒருவர்

செய்வது ஒன்று உண்டோ? = உதவி செய்வது என்று ஒன்று உண்டோ ?

இல்லை;- = இல்லை

தமக்கு மருத்துவர் தாம் = நமக்கு மருத்துவர் நாம் தான்

நீங்கள் மட்டுமே உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர். வேறு யாரையும் நம்பாதீர்கள் என்கிறது இந்தப் பாடல்.





Wednesday, May 3, 2017

பழமொழி - தாம் தர வாரா நோய்

பழமொழி - தாம் தர வாரா நோய் 


பழமொழி என்பது அனுபவத்தின் சாரம். பட்டு , தெளிந்து சொன்னது. பழைய மொழிதானே , இந்த காலத்துக்கு ஒத்து வருமா என்று நினைத்து ஒதுக்கி விடக் கூடாது. ஆராய்ந்து பார்த்து அதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை அல்லவா.

ஏதாவது துன்பம் வந்தால், எனக்கு மட்டும் ஏன் இப்படி துன்பம் வருகிறது, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கே இந்த மாதிரி துன்பங்கள் ஏன் வருகிறது என்று நொந்து கொள்பவர்கள் பலர்.

ஏதோ தாங்கள் ஏதோ தவறே செய்யாதவர்கள் போல.


"தாஅம் தரவாரா நோய்." என்கிறது பழமொழி.

அப்படினா என்ன ?

நாமே  நமக்கு துன்பம் செய்து கொள்வது அல்லாமல் வேறு யாரும் நமக்கு துன்பம் செய்வது இல்லை

என்று அர்த்தம்.

அது சரியா என்று யோசித்துப் பார்ப்போம்.

பெரியவர்கள், படித்தவர்கள், அறிஞர்கள் சொல்வதை கேட்டிருக்க மாட்டோம். எனக்குத் தெரியாதா என்று மனம் போன வழியில் சென்றிருப்போம். அது எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போய் , இறுதியில் துன்பத்தில் தள்ளி விடும்.

தவறான வழியில் செல்பவர்கள் தங்களுக்கு தாங்களே துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

"வந்திருப்பவன் சாதாரணமான ஆள் இல்லை. அவன் கேட்கும் மூன்றடி நிலத்தை தானமாக கொடுக்காதே " என்று குருவான சுக்கிராச்சாரியார் கூறினார். "நான் எவ்வளவு பெரிய அரசன். எனக்குத் தெரியாத " என்று குரு வார்த்தையை மீறி மூன்றடி நிலம் தானம் கொடுக்க ஒத்துக் கொண்டான் மாவலி சக்ரவர்த்தி. இருந்த சொத்தெல்லாம் இழந்து, பாதாளத்தில் அழுந்தினான் .

பெரியவர் சொல் கேளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவ போக்கில் சென்றதனால் தேடிக் கொண்ட வினை அது.

பாடல்

ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
தாஅம் தரவாரா நோய்.

பொருள்

ஆஅம் = ஆம்

எனக்கெளி தென்றுலகம் = எனக்கு எளிது என்று உலகம்

ஆண்டவன் = ஆண்டவன் (மாவலி)

மேஎந் துணையறியான் = மேவும் துணை அறியான்

மிக்குநீர் = மிகுந்த நீர்

பெய்திழந்தான் = பெய்து இழந்தான்

தோஓ முடைய = குற்றம் உள்ள காரியங்களை

தொடங்குவார்க் கில்லையே = தொடங்குவார்க்கு இல்லையே

தாஅம் = தாமே

தர = தருவதைத் தவிர

வாரா நோய் = (வேறு) நோய் வராது  . (நோய் = துன்பம்)


நல்லவர்களை, படித்தவர்களை , அனுபவம் உள்ளவர்களை துணையாகக் கொள்ள வேண்டும்.

அவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவ போக்கு துன்பத்தில் முடியும்.

பழைய மொழி தான். சிந்தித்துப் பார்ப்போம். சரி என்றால் எடுத்துக் கொள்வோம்.




Monday, October 13, 2014

பழமொழி - நாவிற்கு வறுமை இல்லை

பழமொழி - நாவிற்கு வறுமை இல்லை 


இராமனை மனிதன் மனிதன் என்று சொல்லி அழிந்தான் இராவணன்.

கண்ணனை இடையன் இடையன் என்று சொல்லி அழிந்தான் துரியோதனன்

இராமனுக்கும், கண்ணனுக்கும்  இந்த நிலை என்றால் நம் நிலை என்ன.

பழி சொல்லும் நாவுக்கு வறுமை என்று ஒன்று கிடையாது. எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கும்.

"பசுக் கூட்டங்களை மழையில் இருந்து காப்பாற்றிய கண்ணனை இடையன் என்று இந்த உலகம் கூறிற்று. தீங்கு சொல்லும் நாவுக்கு தேவர்கள், மனிதர்கள் என்று பாகுபாட்டெல்லாம் கிடையாது. நாவுக்கு வறுமை இல்லை".

பாடல்

ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.

சீர் பிரித்த பின்

ஆவிற்கு அரும் பனி  தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்று உலகம்  கூறுமால்
தேவர்க்கு மக்கட்கு எனல் வேண்டா தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.

பொருள்


ஆவிற்கு = பசு கூட்டங்களுக்கு

அரும் பனி  = பெரிய மழையில் இருந்து

தாங்கிய = காப்பாற்றிய

மாலையும் = திருமாலையும்

கோவிற்குக் கோவலன் = மாடு மேய்ப்பவன்

என்று உலகம்  கூறுமால் = என்று உலகம் கூறியது

தேவர்க்கு = தேவர்களுக்கு (உயர்ந்தவர்களுக்கு)

மக்கட்கு = மக்களுக்கு

எனல் வேண்டா = என்ற பாகு பாடு இல்லாமல்

தீங்கு உரைக்கும் = தீங்கு சொல்லும் 

நாவிற்கு = நாக்கிற்கு

நல்குர(வு) இல் = வறுமை என்பது கிடையாது.




Wednesday, June 4, 2014

பழமொழி - மரம் வெட்டும், மயிர் வெட்டுமா ?

பழமொழி - மரம் வெட்டும், மயிர் வெட்டுமா ?


பிறர் மேல் அன்பு, கருணை, ஏழைகளுக்கு இரங்குதல் , தானம் செய்தல் , பசித்தவர்களுக்கு உதவுதல் போன்றவை படித்து வராது. அது ஒரு இயற்கை குணம்.

இன்னும் சொல்லப் போனால், படிக்க படிக்க , எதிர் காலம் பற்றிய பயமும், எவ்வளவு செல்வம் சேர்த்துவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே போகும். அதனால் தான் பெற்ற செல்வத்தை மற்றவர்களுக்குத்  தர வேண்டும் என்ற எண்ணம் குறைந்து கொண்டே போகும்.

படிக்காதவர்களிடம் இருக்கும் இரக்க உணர்வு படித்தவர்களிடம் இருப்பது இல்லை.

கோடாலி வலிமையான ஆயுதம் தான். அதை வைத்து  பெரிய பெரிய மரங்களை வெட்டி வீழ்த்தி  விடலாம். அவ்வளவு பெரிய மரத்தையே வெட்டுகிறது, இந்த முடியை வெட்டாதா என்று யாரும் கோடாலியால் முடி வெட்டிக் கொள்வது இல்லை.

முடி வெட்ட  சின்ன,  மிகக் கூர்மையான கத்தி வேண்டும்.

அது போல கற்றறிவு பெரிய பிரச்சனைகளை சரி செய்ய  உதவினாலும், இரக்கம் கருணை இதுவெல்லாம்  அதில் இருந்து வராது.

பாடல்

பெற்றாலும் செல்வம்பிறர்க்கீயார் தாந்துவ்வார்
கற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா
வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர!
மரங்குறைப்ப மண்ணா மயிர்.


பொருள்

பெற்றாலும் = செல்வத்தை பெற்றாலும்

செல்வம் = அந்த செல்வத்தை

பிறர்க்கீயார் = பிறருக்குத் தர மாட்டார்கள்

தாந்துவ்வார் = தாங்களும் அனுபவிக்க மாட்டார்கள். வங்கியில்  வைப்பார்கள். கடன் பத்திரம் (Fixed Deposit ) வாங்குவார்கள்.

கற்றாரும் = படித்தவர்கள்

பற்றி இறுகுபவால் = பணத்தை இறுகப் பற்றிக் கொள்வார்கள்

கற்றா = கன்றை ஈன்ற பசு

வரம்பிடைப் = வயல் வரப்பில்

பூமேயும் = பூக்களை உண்ணும்

வண்புனல் ஊர! = நிறைந்த நீர் வளம் கொண்ட ஊரை   உடையவனே

மரங்குறைப்ப = மரத்தை குறைக்க (வெட்ட)  பயன்படும் கோடாலி

மண்ணா மயிர்.= முடி வெட்ட பயன் படாது


Thursday, May 8, 2014

பழ மொழி - சொல்லாக்கால் சொல்லுவது இல்

பழ மொழி - சொல்லாக்கால் சொல்லுவது இல்


சொல் திறம், சொல் வன்மை என்பது மிக மிக இன்றி அமையாதது.

சில பேர் நன்றாகப் படித்து அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். கடுமையாக வேலையும் செய்வார்கள். இருந்தாலும் வாழ்வில் முன்னேற முடியாமல் தவிப்பார்கள். அவர்களை விட அறிவும், அனுபவும் குறைந்தவர்கள் மேலே மேலே சென்று கொண்டே இருப்பார்கள்.

காரணம் - சொல் திறம். எப்படி பேச வேண்டும், யாரிடம் பேச வேண்டும், எதைப் பற்றி பேச வேண்டும் என்ற பேச்சுத் திறன் இன்மையால்.

பெரும் தவம் செய்த முனிவர்களுக்குக் கூட நா வன்மை இல்லை என்றால் அவர்களின் தவத்தால் ஒரு பயனும் இல்லை என்கிறது இந்த பழமொழிப் பாடல்.

பாடல்

கல்லாதான் கண்டகழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு)அடு கிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல்.

பொருள் 

கல்லாதான் = படிக்காதவன்

கண்ட = அறிந்த

கழிநுட்பம் = ஆழ்ந்த நுண்ணிய பொருள்

காட்டரிதால் = மற்றவர்களுக்கு சொல்ல முடியாது

நல்லேம்யாம் = இருப்பினினும், அவன் தான் நல்லவன் அறிஞன் என்று

என்றொருவன் = என்று ஒருவன் தனக்குத் தானே

நன்கு மதித்தலென் = நன்றாக பெருமை பட்டுக் கொண்டால் என்ன பயன்

சொல்லால் = மந்திரங்களால்

வணக்கி = வழிபட்டு

வெகுண்(டு) = சாபம் தரும் அளவுக்கு கோபம் கொண்டு

அடு கிற்பார்க்கும் = செயல்களை செய்யும் முனிவர்களுக்கும்

சொல்லாக்கால் சொல்லுவது இல் = தாங்கள் அறிந்தவற்றை சொல்ல முடியாவிட்டால் , அவர்களைப் பற்றி சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

மற்றவர்களிடத்து எடுத்துச் சொல்ல முடியாவிட்டால், கற்றவனும் கல்லாதவன் போலவே கருதப்  படுவான்.

என்ன படித்து என்ன பயன், பரிட்சையில் ஒழுங்காக எழுதாவிட்டால் குறைந்த மதிப்பெண்கள் தானே கிடைக்கும்.

அறிந்ததை, தெரிந்ததை, செய்ததை மற்றவர்கள் அறியும்படி அழகாகச் சொல்லத் தெரிய வேண்டும்.

நீங்கள் அது மாதிரி சொல்லா விட்டால் உங்களைப் பற்றி மற்றவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.  குடத்தில் இட்ட விளக்காய் இருக்க வேண்டியதுதான்.

பேசப் படியுங்கள்.



Wednesday, May 7, 2014

பழ மொழி - நல்லாரை நல்லாரே உணர்வர்

பழ மொழி - நல்லாரை நல்லாரே உணர்வர் 


உங்களை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, உங்கள் நல்ல மனதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று வருத்தப் பட்டது உண்டா ?

கவலையை விடுங்கள்.

படித்த அறிஞனை இன்னொரு அறிஞனால்தான் அறிய முடியும். முட்டாளால் அறிவாளியை அறிய முடியாது.

அது போல நல்லவர்களை இன்னொரு நல்லவன் தான் அறிய முடியும். மற்றவர்களால் முடியாது.

இரும்பை பிளக்க  வேண்டும் என்றால் அது இன்னொரு இரும்பு அல்லது இரும்பை விட உறுதியான ஒன்றினால்தான் முடியும்.

முட்டாள்களோடு பேசியோ, வாதம் பண்ணியோ புண்ணியம் இல்லை. அவர்கள் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

நல்லவர்கள் தான் நல்லவர்களை அறிவார்கள்.

பாடல்

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
அயிலாலே போழ்ப அயில்.


பொருள் 

நல்லார் = நல்லவர்களின்

நலத்தை = நல்ல குணத்தை

உணரின்= உணர வேண்டும் என்றால்

அவரினும் நல்லார் உணர்ப = அவரை விட நல்லவர்களே அதை உணர்வார்கள்

 பிறருணரார் = பிறர் உணர மாட்டார்கள்

நல்ல = நல்ல

மயிலாடு = மயில் ஆடுகின்ற

மாமலை = பெரிய மலையை

வெற்ப = அரணாகக் கொண்டவனே 

மற்(று) என்றும் = மற்றபடி எப்போதும்

அயிலாலே = இரும்பாலே

போழ்ப = பிளக்க முடியும்

அயில் = இரும்பை

உங்களை விட நல்லவர்களைத்  போங்கள் , அவர்கள் உங்களை அறிந்து கொள்வார்கள்.

உங்களை விட கீழே உள்ளவர்கள் உங்களை ஒரு காலும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.



Tuesday, April 15, 2014

பழமொழி - எப்படி படிக்க வேண்டும்

 பழமொழி - எப்படி படிக்க வேண்டும் 


எப்படி நாம் பல விஷயங்களை அறிந்து கொள்வது ?

புத்தகங்களை படித்து அறிந்து கொள்ளலாம். அது ஒரு வழி. அதை விட சிறந்த வழி, அப்படி புத்தகங்களைப் படித்து அறிந்து, தங்கள் அனுபவமும் கூடச் சேர்த்த அறிஞர்களை கண்டு அவர்கள் பேசுவதை கேட்டு அறிவது.

கற்றலை விட கேட்பது சிறந்தது.

வகுப்பில் ஆசிரியர் சொல்லித்தருவதை கவனமாக கேட்டாலே போதும், பலமுறை படிப்பதை விட அது சிறந்தது.

அது மட்டும் அல்ல,

நாம் வாசித்து அறியும் அறிவு மிக மிக சொற்பமாக இருக்கும். நாம் படித்தது மட்டும் தான் உலகம் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் மொத்தம் ஒரு பத்து பதினைந்து புத்தகங்களை வாசித்து விட்டு, எல்லாம் அறிந்தவர் போல் பேசுவார்கள்.  தாங்கள் அறிந்தது மட்டும்தான் அறிவு. அதைத் தாண்டி வேறு இல்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.

கற்றறிந்த பெரியவர்கள் பேசுவதைக் கேட்கும் போது அறிவின் வீச்சு புரியும்.  நாம்  அறிந்தது  ஒன்றும் இல்லை என்ற பணிவு வரும். அகந்தை அழியும். பேச்சு குறையும். மேலும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

கிணற்றுக்குள் இருக்கும் தவளை, தான் இருக்கும் கிணற்றைத் தவிர உலகில் வேறு தண்ணீர் கிடையாது என்று நினைப்பது போல நாம் படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு அறிவின் அகலம், கல்வியின் கரை இதுதான் என்று நினைக்கக் கூடாது.

அறிஞர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.


பாடல்


உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.


பொருள் 

உணற்(கு) = பருகுவதற்கு

இனிய இன்னீர் = இனிமையான நல்ல நீர்

பிறி(து)உழிஇல் = உலகில் வேறு எங்கும் இல்லை

என்னும் = என்று சொல்லும்

கிணற்(று)  அகத்துத் = கிணற்றின் உள்ளே உள்ள

தேரை போல் = தவளை போல

ஆகார் = ஆக மாட்டார்கள்

கணக்கினை = அற நூல்களை

முற்றப்  = முழுவதும்

பகலும்  = நாள் முழுவதும்

முனியா(து) = சிரமம் பார்க்காமல்

இனிதோதிக் = இன்பத்துடன் கற்று

கற்றலிற் கேட்டலே நன்று = கற்பதை விட கேட்பதே நல்லது

படிப்பு ஒரு இனிமைதான். அதை விட கேட்பது மிக இனிது.

யாரிடம் கேட்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

கல்வி என்பது வெளியே இருந்து உள்ளே போவது.

அறிவு என்பது உள்ளே இருந்து வெளியே வருவது.

சில பேர் பிறவியிலேயே அறிவை கொண்டு வருவார்கள். அவர்கள் படிக்க படிக்க உள்ளிருந்து ஞானம் வெளியே வரும்.

அதை கேளுங்கள்.



Wednesday, April 9, 2014

பழமொழி - பொருள் கொடுத்து கொள்ளார் இருள்

பழமொழி - பொருள் கொடுத்து கொள்ளார் இருள் 


இளமையில் படிக்க வேண்டும் என்று சொல்லியாச்சு.

எப்படி படிக்க வேண்டும் என்றும் விளக்கியாகி விட்டது.

எதைப் படிக்க வேண்டும் ? அதைச் சொல்ல வேண்டும் அல்லவா ?

நாம் எதற்காக ஒரு விளக்கை வாங்குவோம்?

அது நல்ல வெளிச்சம்  தரும்.அந்த வெளிச்சத்தில் நாம் மற்ற பொருள்களைத்   தெளிவாக பார்க்கலாம் என்று தானே விளக்கை வாங்குகிறோம்.

இன்றைய நடை முறையில் சொல்வது என்றால், எதற்க்காக பல்பை, டியூப் லைட்டை வாங்குகிறோம் ?

அந்த விளக்கு வெளிச்சம் தராமால், மங்கலாக எரிந்து, அணைந்து அணைந்து எரிந்து கண்ணுக்கு எரிச்சல் ஊட்டும் என்றால் அதை வாங்குவோமா ? அடிக்கடி கெட்டுப் போய் , நமக்கு வேண்டிய நேரத்தில் வெளிச்சம் தராது என்றால் அதை வாங்குவோமா ?

அது போல, வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும், அற நூல்களை, நீதி நூல்களை, பொருள் தேடித் தரும் பயனுள்ள நூல்களை படிக்க வேண்டும். கண்ட குப்பைகளை படிக்கக் கூடாது.

பாடல்

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கம்இன்(று) என்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்.

பொருள் 

விளக்கு = விளக்கை

விலைகொடுத்துக் = பொருள் கொடுத்து

கோடல் = வாங்குதல்

விளக்குத் = அந்த விளக்கானது

துளக்கம்இன்(று) = குழப்பம் இன்றி

என்றனைத்தும்  = எப்போதும், அனைத்தையும்

தூக்கி விளக்கு = தெளிவாக விளங்கச் செய்யும்  என்று

மருள் படுவதாயின் =  மயக்கம்,குழப்பம் தருவதாக இருந்தால்

 மலைநாட = மலை நாட்டின் அரசனே

என்னை = எதற்கு

பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் = விலை கொடுத்து   யாராவது இருளை வாங்குவார்களா ?

இது படிப்புக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கு பயனில்லாதவற்றை பொருள் கொடுத்து  வாங்குவது மதியீனம்.

சிகரெட், மது, அளவுக்கு அதிகமான உணவு என்று இப்படி எத்தனையோ தேவையில்லாத , பயன்  இல்லாத,துன்பம் தரக் கூடிய பொருள்களை விலை கொடுத்து வாங்கி துன்பப் படுகிறோம்.

சிந்திப்போம்.



Sunday, April 6, 2014

பழமொழி - கற்றொறுந்தான் கல்லாத வாறு

பழமொழி - கற்றொறுந்தான் கல்லாத வாறு


முந்தைய பாடலில், இளமையில் கற்க வேண்டும் என்று பார்த்தோம்.

எப்படி கற்க வேண்டும் ?

அதை இந்தப் பாடல் விளக்குகிறது.

கற்றவர்கள் முன்னால் ஒன்றைச் சொல்லும் போது நமக்கு ஒரு பயமும், தயக்கமும் (சோர்வு) வரும் அல்லவா ? அந்த சோர்வு வராமல் இருக்க, கற்கும் போது நாம் இது வரை எதுவும் கற்கவில்லை என்று உணர்ந்து,  இதுவரை கற்காமல் விட்ட காலத்திற்காக வருந்தி, ஆழமாக சிந்தித்து, கடினமான முயற்சியுடன், கற்க வேண்டும். கற்கும் போது "இது   தான் எனக்குத் தெரியுமே " என்ற இறுமாப்போடு படிக்கக் கூடாது.

பாடல்

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.


பொருள் 


சொற்றொறும் = சொல் தோறும். ஒவ்வொரு முறை சொல்லும் போதும்

சோர்வு படுதலால் = சோர்வு உண்டாவதால். சரியாக சொன்னோமா, முழுவதுமாகச் சொன்னோமா, விளங்கும் படி சொன்னோமா என்ற சோர்வு

சோர்வின்றிக் = களைப்பு இன்றி

கற்றொறும் = கற்கும் ஒவ்வொரு சமயத்திலும்

கல்லாதேன் = நான் இன்னும் முழுமையாக கற்காதவன்

என்று = என்று

வழியிரங்கி = அதற்காக இரக்கப் பட்டு

உற்றொன்று = உள்ளத்தில் ஒன்றே ஒன்றை (concentration )

சிந்தித்து = சிந்தித்து

உழன்று = சிரமப்பட்டு

ஒன்(று) அறியுமேல் = ஒன்றை அறிய வேண்டும். எப்படி என்றால்

கற்றொறுந்தான்  = கற்கும் தொறும்

கல்லாத வாறு = கல்லாதவன் எப்படி கற்பானோ அப்படி கற்க வேண்டும்.

அடக்கம் வேண்டும். நாம் எல்லாம் அறிந்தவர்கள், இனி அறிய என்ன இருக்கிறது என்று  நினைக்காமல், நாம் ஒன்றும் அறியாதவர்கள் என்ற அடக்க உணர்வோடு கற்க வேண்டும்.



Saturday, April 5, 2014

பழமொழி - அப்புறம் படித்துக் கொள்ளலாம்

பழமொழி - அப்புறம் படித்துக் கொள்ளலாம் 


பதினெண் கீழ் கணக்கு நூல்களில் பழமொழி 400 என்ற நூல் உண்டு.

பழ மொழி என்பது அனுபவங்களின் சாரம். பல பேர் அனுபவித்து,  அதை ஒரு விதி போல சொல்லி, சொல்லி நாளடைவில் அது ஒரு நிரந்தர வாக்கியமாக மாறி விடுகிறது.

பழ மொழிகள் நமக்கு வாழ்க்கையை சொல்லித் தரும் அனுபவ பாடங்கள். யாரோ பட்டு , உணர்ந்து நமக்குச் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.

அப்படிப் பட்ட பழ மொழிகளை கடைசி வரியாக கொண்டு, அந்த பழ மொழி சொல்லும் செய்தியை முன் மூன்று அடிகளில் எடுத்து இயம்புவது பழமொழி 400 என்ற இந்த நூல்.

அதில் இருந்து சில பாடல்கள்....

மரம் போக்கி கூலி கொண்டார் இல்லை என்பது பழ மொழி.

 இதற்கு என்ன அர்த்தம் ?  இது என்ன சொல்ல வருகிறது ?


எவ்வளவோ படிக்க வேண்டியது இருக்கிறது. எங்க நேரம் இருக்கு, அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று நாளும் நாளும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

அப்புறம் எப்போது வருமோ தெரியாது.

இளமையில் படித்து விட வேண்டும். பின்னால் படித்துக் கொள்வோம் என்று எதையும் தள்ளிப் போடக் கூடாது.

நெடுஞ்சாலைகளில் போகும் போது சில இடங்களில் சுங்கம் தீர்வை (Excise  Duty , entry tax , toll charges ) போன்றவை  இருக்கும்.வண்டி அந்த இடத்தை கடக்கும் முன் அவற்றை வசூலித்து விட வேண்டும். வண்டியைப் போக விட்டு பின் வசூலித்துக் கொள்ளலாம் என்றால் நடக்காது.

அது போல, படகில் ஏறும்போதே படகு சவாரிக்கான கூலியை வாங்கிவிட வேண்டும். அக்கரையில் கொண்டு சேர்த்தப் பின் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் அக்கறை இல்லாமல் போய் விடுவார்கள் பயணிகள்.

காலாகாலத்தில் படித்து விட வேண்டும்.

பாடல்

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

பொருள் 

ஆற்றும் = வழிப் படுத்தும்

இளமைக்கண் = இளமை காலத்தில்

கற்கலான் = கற்காமல்

மூப்பின்கண் = வயதான காலத்தில்

போற்றும் = படித்துக் கொளல்லாம்

எனவும் புணருமோ = என்று நினைக்கலாமா?

ஆற்றச் = வழியில்

சுரம்போக்கி = செல்ல விட்டு

உல்கு கொண்டார் = தீர்வை (toll , excise ) கொண்டவர்கள்

இல்லையே இல்லை = இல்லவே இல்லை

மரம்போக்கிக் = இங்கே மரம் என்றது மரத்தால் செய்யப்பட்ட படகை. படகில் பயணிகளை அக்கரை சேர்த்த பின் 

கூலிகொண் டார். = கூலி பெற்றவர் யாரும் இல்லை.

தள்ளிப் போடாமல் படியுங்கள்.


இந்த சமுதாயம் படிப்பிற்கு எவ்வளவு முக்கியத்வம் கொடுத்து இருக்கிறது என்று நினைக்கும்  போது பெருமை படாமல் இருக்க முடியவில்லை. 


Monday, July 23, 2012

பழமொழி - அதுக்கு என்ன, செஞ்சுட்டா போச்சு !


பழமொழி - அதுக்கு என்ன, செஞ்சுட்டா போச்சு !


சில சமயம், நம் நண்பர்கள் நம்மிடம் உதவி கேட்கும் போது, நம்மால் முடியாவிட்டால் கூட "அதுக்கென்ன, செஞ்சுட்டா போச்சு" என்று நம்மால் முடியாத விஷயங்களில் கூட நாம் செய்து தருவதாய் உறுதி கூறி விடுவோம்.

அது போல், இல்லாத பொருளை கூட இருப்பதை போல சொல்லி தர்ம சங்கடத்தில் மாட்டி கொள்வது உண்டு.

"எனக்க அவனை தெரியும், இவனை தெரியும்...ஒரு போன் போட்டா போதும், காரியம் உடனே நடந்து விடும்..." என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே சொல்லுவது உண்டு.

நாம் நினைப்போம் அப்படி சொல்வது நம் மதிப்பையும், செல்வாக்கையும் உயர்த்தும் என்று நினைப்போம்.

மாறாக, சொன்ன விஷயங்களை செய்ய முடியாமல் போகும் போது, அது நம் மதிப்பை குறைத்து விடும்.

ஆட்டு இடையன், ஆடு மாட்டிற்கு வேண்டும் என்று மரத்தில் இருந்து கொஞ்சம் இல்லை தழைகளை பறிப்பான். ஏதோ கொஞ்சம் தானே என்று இருக்கும். ஆனால் நாளடைவில், அது முழு மரத்தையும் மொட்டையாக்கி விடும்.

அதுபோல், அளவுக்கு அதிகமாய் உறுதி மொழி தருவது, நாளடைவில் நம் புகழ் மற்றும் செல்வாக்கு அனைத்தையும் அழித்து விடும்.

"இடையன் எறிந்த மரம்"


Wednesday, July 18, 2012

பழமொழி - விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா ?


பழமொழி - விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா ?


நாம் பொருள் செலவழித்து நிறைய விஷயங்களை பெறுகிறோம் - படிப்பு, புத்தகங்கள், சினிமா, club , வெளி இடங்களை சுற்றிப் பார்த்தல், தொலைக்காட்சி,  இத்யாதி, இத்யாதி....

இவற்றால் நமக்கு என்ன பலன்  ? இவை நமக்கு நன்மை தருமா ? அல்லது இவற்றால் நமக்கு தீமையா ? தீமை என்றால் அதை விடுவது அல்லவா புத்திசாலித்தனம்?

பொருள் கொடுத்து இருள் வாங்குவதை பற்றிப் பேசுகிறது இந்த பாடல்...

Monday, July 16, 2012

பழமொழி - சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க


பழமொழி - சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க


பெரிய பலன்களை அடைய வேண்டுமானால் சில சிறிய தியாகங்களை செய்யத்தான் வேண்டும்.

ஒன்றை இழக்காமல் இன்னொன்றைப் பெற முடியாது.

எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு

அதைத்தான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பது என்று சொல்லுவார்கள். 

இந்த பிறவியில் நல்லன செய்து, ஏற்பவர்க்கு இட்டு, அவன் தாள் வணங்குதல் போன்ற சிறய "வினைகளை" செய்தால், வீடு பேறு, மோட்சம் பேன்ற பெரிய பலன்கள் கிடைக்கும் என்கிறது இந்த பழமொழிப் பாடல்

பாடல்:

Thursday, May 17, 2012

பழமொழி - முன்னுரை



பழமொழி - முன்னுரை



மனிதனின் கண்டு பிடிப்புகளில் மிக முதன்மையானது மொழி என்று கூறலாம்.

பொருள்களுக்கும், சம்பவங்களுக்கும், நிகழ்வுக்களுக்கும் பெயரிட்டது, அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளை அறிந்து சொன்னது மிகப் பெரிய விஷயம்.

பழமொழிகள், மொழிக்கு மேல் ஒரு படி. ஆங்கித்தில் meta data என்று சொல்லுவதைப் போல.

பழமொழிகள் மனிதனின் அனுபவத் திரட்டுகள்.

மீண்டும் மீண்டும் மனித வாழ்க்கையில் தோன்றும் சம்பவங்களை ஒரு வரியில் அடக்கிய சாமர்த்தியம்.

முது மொழி என்றும் கூறுவர்.

தொல்காப்பியம் எவ்வளவு புராதனமானது?

அதில், தொல்காப்பியர் முதுமொழி பற்றி கூறுகிறார் என்றால், அந்த முதுமொழிகள் எவ்வளவு பழமையானதாக இருக்க வேண்டும்.

அப்படி பழமொழிகள் வருவதாய் இருந்தால், இந்த தமிழ் மொழி எவ்வளவு தொன்மையானதாக இருக்க வேண்டும் ?