Showing posts with label வரம். Show all posts
Showing posts with label வரம். Show all posts

Thursday, July 19, 2012

இராமாயணம் - கேட்ட வரமும் கேட்காத வரமும்


இராமாயணம் - கேட்ட வரமும் கேட்காத வரமும்


ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; ‘ எனப் புகன்று நின்றாள்;
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

அவள் கேட்டது இரண்டு வரங்கள்.

"என் மகன் அரசாள வேண்டும், சீதையின் துணைவன் வனம் ஆள்வது"

கேட்டது இரண்டு வரம். ஆனால் அவள் இராமனிடம் சொன்ன போது, இதில் இல்லாத மேலும் சிலவற்றை சேர்த்துக் கொள்கிறாள்....

இராமாயணம் - தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொல்லவில்லை


 இராமாயணம் - தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொல்லவில்லை


கைகேயி இரண்டு வரம் கேட்டாள். 

தசரதன் முதலில் இரண்டு வரத்தையும் தர மறுக்கிறான். 

கைகேயி பிடிவாதம் பிடிக்கிறாள். 

தசரதன் இறங்கி வருகிறான். "இரண்டாம் வரத்தை கேட்காதே, உன் மகன் பரதன் வேண்டுமானால் அரசாளட்டும், இராமன் காட்டுக்குப் போக வேண்டாம் " என்று கெஞ்சுகிறான்.

"மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
    மற ‘என்றான்."

கைகேயி மறுக்கிறாள். இரண்டு வரமும் வேண்டும் என்கிறாள்.

கடைசியில் தசரதன் "ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்" என்கிறான். இவ்வரங்கள் என்று பன்மையில் சொல்லவில்லை. 

பின்னால், "என் சேய் காடாள" என்று சொல்கிறான். 

அதற்குப் பின் அவன் இறந்து போகிறான். அவன் இராமனை பார்க்கவே இல்லை.

கம்பனோ, வால்மீகியோ அந்த சந்திப்பை நடக்க விடவில்லை.

தசரதன் தன் வாயால் இராமனை கானகம் போகச் சொல்லவில்லை.

கைகேயிக்கும் தசரதனுக்கும் இடையே நடந்தது யாருக்கும் தெரியாது.

எனவே, தசரதன் இராமனை பார்த்து "நீ கானகம் போ" என்று சொல்லவில்லை.

தசரதன் அவன் மந்திரிகளிடமும் சொல்லவில்லை.

எனவே, இராமன் கானகம் போக வேண்டியது ஒரு அரசு ஆணை அல்ல.

கணவன் மனைவிக்கு இடையே நடந்த ஒரு உரையாடல்.

இராமனை, அவனிடமே, நேரடியாக,  கானகம் போகச் சொன்னது கைகேயிதான். தசரதன் அல்ல.

அதுவும் எப்படி சொல்கிறாள்...? ... வாங்கிய வரத்தோடு இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறாள்...

அது என்ன ? வாங்கிய வரம் ? வாங்காத வரம் ?



Sunday, April 15, 2012

கம்ப இராமயாணம் - இராமன் கேட்ட வரம்


கம்ப இராமயாணம் - இராமன் கேட்ட வரம்



இராமன், இராவணனை கொன்றபின், சீதையை சிறை மீட்டு வரும் வழியில் வானுலகில்  இருந்து தசரதன் வருகிறான்.

இராமனை கட்டி அணைக்கிறான்.

அப்போது சொல்கிறான் "இராமா,  அன்று கைகேயி கேட்ட கொடிய வரம் என் மனத்தில் வேல் போல் குத்தி நின்றது.

இன்று உன்னை தழுவிய போது உன் மார்பு என்ற காந்தத்தால் அது இழுக்கப்பட்டு வெளியே வந்து  விட்டது. நான் சந்தோஷமாய் இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்" என்கிறான்.
 .
 இராமனும் இரண்டு வரம் கேட்கிறான்.
 .
 "நீ தீ எனத் துறந்த கைகேயியும் , பரதனையும் உன் மனைவி, மகன் என்று நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று வரம் கேட்கிறான்.
 .

 ----------------------------------------------------------------------------------
 ’ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை’   என, அழகன்
 ”தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
 தாயும் தம்பியும் ஆம்  வரம் தருகஎனத் தாழ்ந்தான்
 வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம்  வழுத்தி
 --------------------------------------------------------------------------------
 
 ஆயினும் = ஆனாலும்
 

 
 உனக்கு அமைந்தது ஒன்று உரை = உனக்கு
 வேண்டியது ஒன்று கேள் என்று தசரதன் இராமனிடம் சொன்னான்.

 
 என, அழகன் = அப்படி சொன்ன உடன், அழகனான இராமன்

 தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் = தீயவள் என்று நீ துறந்த என்
 தெய்வமும் (கைகேயியும்)
 

 மகனும் = மகனாகிய பரதனும்


 தாயும்  தம்பியும் = தாயும், தம்பியும்
 

 ஆம் வரம் தருகஎனத் தாழ்ந்தான் =

ஆகும் வரம் தருக என்று தசரதன் அடி பணிந்து நின்றான்
 

 வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர்
 எலாம் வழுத்தி = அப்படி கேட்டவுடன், உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் வாய் திறந்து இராமன் வாழ்த்தி ஆராவாரம் செய்தன.
 

 ஆர்த்தல் என்றால் ஆரவாரம் செய்தல், நிறைத்தல்
 என்று பொருள்
 

 எவ்வளவு கருணை இருந்தால் இந்த வரம் கேட்கத்  தோன்றும்.

கைகேயியால் பட்ட துன்பம் கொஞ்சம் அல்ல.

பதினாலு வருடம் காட்டில் கஷ்டப்   பட்டான் இராமன்.

மனைவியை பிரிந்தான்.

இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணமான கைகேயியை "என்  தெய்வம்" என்கிறான்.

 நினைத்துக் கூட பார்க்க முடியாத கருணை  உள்ளம்.

Friday, April 13, 2012

கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்


கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்


அசோகவனத்தில் அனுமன் சீதையை கண்டான். அப்போது, அனுமன் மூலம் சீதை இராமனிடம் ஒரு வரம் கேட்கிறாள்.

நான் ஒரு வேளை இந்த அசோகவனத்திலேயே இறந்து விட்டால், மீண்டும் பிறந்து வந்து இராமனின் திரு மேனியை தீண்டும் வரம் சீதை தொழுது வேண்டினாள் என்று இராமனிடம் சொல்லுவாய் என்றாள்.


இராமன் திருமேனி எப்படி பட்டது?....சீதையே சொல்லுகிறாள்....