Showing posts with label அயோத்தி. Show all posts
Showing posts with label அயோத்தி. Show all posts

Monday, April 9, 2012

கம்ப இராமாயணம் - அயோத்தியின் அழகு


அயோத்தி நகரம் அழகா இருக்கு அப்படின்னு சொல்லணும்.

அதை எப்படி அழகா சொல்லுவது.


சிவனும், விஷ்ணுவும், பிரம்மனும் அயோத்தி போல் வேறொரு நகரம் இருக்கிறதா என்று தேடித் பார்த்தும் காண முடியவில்லையாம்.

அந்த நகரம் போல் அயோத்தி இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு நகரம் எங்கும் இல்லையாம்.

எங்கும் என்றால் இந்த பூமியில் மட்டும் இல்லை, வேறு எந்த உலகத்திலும் இல்லை.

நல்லா தேடி பார்த்தியா என்றால், தேடினது சிவன், விஷ்ணு , பிரம்மன்.

அவர்களுக்கு தெரியாததா எது எங்க இருக்கும் என்று. அவர்களாலேயே கண்டு பிடிக்க முடியவில்லையாம்.

அப்படி என்றால் அயோத்தியை விட சிறந்த நகரம் இல்லை என்பது நம்மகுத் தெரிகிறது.

அது மட்டும் அல்ல, இந்த சூரியனும், சந்திரனும், கண் இமைக்காமல் அப்படி ஒரு நகரம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டே இருக்கிறார்களாம்....

கற்பனையின் உச்சமான அந்தப் பாடல்