Showing posts with label தக்கயாக பரணி. Show all posts
Showing posts with label தக்கயாக பரணி. Show all posts

Friday, October 5, 2012

தக்கயாக பரணி - புலவியா ? கலவியா ?


தக்கயாக பரணி - புலவியா ? கலவியா ?


தக்க யாக பரணி என்ற நூலை எழுதியவர் ஒட்டக் கூத்தர். 

கலிங்கத்துப் பரணி போல், இதிலும், கடை திறப்பு என்ற பகுதி உண்டு. 

கணவனோ, காதலனோ அவர்களின் மனைவியையோ, காதிலியையோ கெஞ்சி கூத்தாடி கதவை திறக்கச்  சொல்லும் பாடல்கள்.

காம நெடி கொஞ்சம் தூக்கலான பாடல்கள்.

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்கையை, குறிப்பாக இல்லற வாழ்கையை அனுபவித்தார்கள் என்பதை விளக்கும் பாடல்கள்.

நீண்ட நாள் கழித்து கணவன் வருகிறான்.

அவனைக் காண வேண்டும் என்று, அவனைக் கட்டி அணைக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறாள் அவன் மனைவி.

அவன் வந்து விட்டான்.

ஓடிச்சென்று அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்.

அவனுக்கும் அவள் மேல் அவ்வளவு ஆசை.

இருவரும் ஒருவரை ஒருவர் ஈருடல் ஓர் உயிராய் இறுகத் தழுவி நின்றார்கள்.

அவர்கள் அப்படி உத்வேகத்துடன் கட்டி கொண்டு இருப்பது, காதலில் அணைந்துகொண்டது மாதிரியும் இருக்கிறது. ஆக்ரோஷமாய் இரண்டு எதிரிகள் ஒருவரை ஒருவர் மல் யுத்தத்தில் கட்டி பிடித்து சண்டை இடுவது போலவும் இருக்கிறது.

அப்படி கட்டி அணைக்கும் பெண்களே, கொஞ்சம் கதவை திறவுங்கள் என்று பாடுகிறான் கணவன்....