Showing posts with label Thiru Kural. Show all posts
Showing posts with label Thiru Kural. Show all posts

Saturday, October 14, 2023

திருக்குறள் - வறியார்க்கு ஈவதே ஈகை

 திருக்குறள் - வறியார்க்கு ஈவதே ஈகை 


ஈகை என்றால் என்ன என்று ஒரு வரைவிலக்கணம் (definition) தருகிறார் முதலில். 


நம் வீட்டில் ஒரு பண்டிகை என்றால் சில பல பலகாரங்கள் செய்வோம். அண்டை அயல் வீடுகளுக்கும் கொடுப்போம். 


அது ஈகையா?


நாம் இன்று கொடுத்தால் அவர்கள் அடுத்த முறை அவர்கல் வீட்டில் ஒரு விசேடம் வரும் போது நமக்கு பலகாரங்கள் அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 


அப்படி எல்லாம் இல்லை. அதுக்காக ஒன்றும் நான் தருவது இல்லை என்று வாதம் செய்யலாம். ஒவ்வொரு வருடமும் நீங்கள் பலகாரம் அனுப்புகிறீர்கள். அடுத்த வீட்டுக்காரர் பெற்றுக் கொள்கிறார். ஒரு முறை கூட பதிலுக்கு செய்வது இல்லை என்றால் எத்தனை காலம் அனுப்புவீர்கள்? 


அது போல் நம்மை விட பெரிய ஆள்களுக்கு விருந்து கொடுப்பது, அவர்கள் வீட்டு கல்யாணத்துக்கு போய் முறை செய்வது எல்லாம் அவர்களால் பின்னால் நமக்கு ஒரு காரியம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பில். 


இன்றெல்லாம் திருமண வீடுகளில் மொய் எழுதுகிறார்கள்.  எதற்கு? பின்னால் திருப்பிச் செய்ய வேண்டும். பொருளாகக் கொடுத்தாலும் அதை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். இன்னார், இத்தனை பவுனில் நகை அன்பளிப்பாக அளித்தார் என்று. பின்னால் செய்ய வேண்டுமே. 


இதெல்லாம் ஈகை இல்லை.


பின் எதுதான் ஈகை?


ஒன்றும் இல்லாத வறியவர்களுக்கு ஒரு பலனும் எதிர்பார்க்காமல் ஒன்று கொடுப்பதுதான் ஈகை. 


பாடல் 



வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_14.html


(please click the above link to continue reading)


வறியார்க்கொன்று = வறியவர்களுக்கு ஒன்று 


ஈவதே = கொடுப்பதே 


ஈகை = ஈகை 


மற்று எல்லாம் = மற்றவை எல்லாம் 


குறிஎதிர்ப்பை = பிரதி பலனை எதிர்பார்த்து செய்யும் 


நீரது உடைத்து. = தன்மை கொண்டது. 


தெருவில் ஒரு பிச்சைகாரன் போகிறான். அவனுக்கு ஒரு பத்து உரூபாய் தருகிறோம். அது ஈகை. காரணம், அவன் பதிலுக்கு நமக்கு ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கையில் தந்தது அல்ல என்பதால். 


இரண்டு விடயங்கள் சொல்கிறார். 


ஒன்று, வறியவனுக்கு கொடுக்க வேண்டும். உள்ளூர் அரசியல் பெரும் புள்ளிக்கு விருந்து கொடுத்தால் அது ஈகை அல்ல. 


இரண்டாவது, எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுக்க வேண்டும்.  வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு ஒரு பழைய ஆடையை கொடுக்கலாம். அது ஈகை அல்ல. காரணம், நாம் அவளுக்கு இதைச் செய்தால் அவள் நம்மிடம் விசுவாசமாக இருப்பாள், வேலையை விட்டு போய் விட மாட்டாள் என்ற நம்பிக்கையில் கொடுப்பது. 


கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?


"நீரது" என்றால் என்ன?  பொதுவாக நீர்மை என்றால் தன்மை. இயற்கை குணம்.  சரி, புரிகிறது. அது என்ன நீர் + அது?


பகுபத உறுப்பிலக்கணம் என்று ஒன்று இருக்கிறது. ஒரு சொல்லை பகுத்து, அதாவது பிரித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வது. 


ஒரு சொல் மூன்று பகுதிகளைக் கொண்டது. 


பகுதி + இடைநிலை + விகுதி 


பகுதி என்பது முதலில் வருவது. விகுதி எனபது கடைசியில் வருவது. இடைநிலை என்பது நடுவில் வருவது. 


ஒரு வினைச்சொல்லில் (verb), பகுதி என்பது வினையைக் குறிக்கும், விகுதி என்பது யார் செய்தார்கள் என்பதைக் குறிக்கும். இடை நிலை என்பது காலத்தை குறிக்கும். அதாவது அது எப்போது நடந்தது என்று சொல்லும். 


ஒரே சொல்லில் மூன்றும் வரும். 


உதாரணமாக:


வந்தான் என்ற சொல்


வா + த் + த் + ஆன் 


என்று பிரியும். 


வா என்ற பகுதி வருகின்ற செயலைக் குறிக்கும். 


இரண்டாவது வரும் த் என்பது சந்தி, அது ந் என திரிந்தது விகாரம். அது என்ன என்று இன்னொரு நாள் பார்ப்போம். 


அடுத்து வரும் த் காலம் காட்டும் இடை நிலை. அது இறந்த காலத்தைக் குறிக்கும். 


இறுதியில் வரும் ஆன் என்பது ஆண்பால், படர்கை, வினை முற்று விகுதி.


இங்கே, நீரது என்பது நீர்+ அது என்று பிரியும். 


நீர் என்றால் நீர்மை. அது என்ற விகுதி, தனியாக ஒரு பொருளைத் தராமல் பகுதியின் பொருளையே தந்தது என்கிறார் பரிமேலழகர். 


  " 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி."


அதாவது, நீரது என்றால் (என்புழி) அது என்பது பகுதியான நீர்மையையே மீண்டும் குறிக்கும் விகுதி. 


இது தேவையா?...:)


வேலை மெனக்கெட்டு ஒரு வார்த்தைக்கு இவ்வளவு விளக்கம். இலக்கணத்துக்கு அவ்வளவு முக்கியத்வம் கொடுத்து இருக்கிறார்கள். 



Monday, February 27, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்லும் செயலும்

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்லும் செயலும் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


சொல்லா? செயலா ? எதற்கு வலிமை அதிகம்?


நம்மைக் கேட்டால் பெரும்பாலானோர் சொல்லுவது செயல் தான் வலிமை மிக்கது என்று. 



உங்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தர எனக்கு விருப்பம் என்று சொல்லுவதை விட, ஆயிரம் ரூபாய் கொடுக்கும் செயல் உயர்ந்ததுதானே. 


எனக்கு வர்ற கோபத்துக்கு அவனை வெட்டிப் போட்டாலும் பரவாயில்லை என்று சொல்லும்சொல்லை விட, உண்மையாகவே வெட்டிப் போடுவது வலிமை மிக்கது அல்லவா?



நல்லது என்றாலும், கெடுதல் எது என்றாலும் சொல்லை விட செயலே ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. 



ஆனால், சில சமயம் செயலை விட சொல் வலிமை மிக்கதாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். 




அது எப்போது?


பயனற்ற சொற்களை படித்தவர் முன் சொல்வது, நமக்கு வேண்டியவர்களுக்கு அவர்கள் விரும்பத் தகாத செயல்களை செய்வதை விட மோசமானது என்கிறார். 



பாடல் 



பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல


நட்டார்கண் செய்தலின் தீது



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html



(please click the above link to continue reading)



பயன்இல = பயன் இல்லாத சொற்களை 



பல்லார்முன்  = அறிஞர்கள் முன் 



சொல்லல் = சொல்லுவது 



நயன்இல = நன்மை பயக்காத, விருப்பம் இல்லாத 



நட்டார்கண் = நெருங்கியவர்களுக்கு 



செய்தலின் தீது = செய்வதை விட தீமையானது 



அது ஏன் தீமையானது என்று வள்ளுவரும் சொல்லவில்லை. பரிமேலழகரும் சொல்லவில்லை. 



நாம் தான் சிந்திக்க வேண்டும். 



நமக்கு வேண்டியவர்கள், சொந்த, பந்தம் உள்ளவர்கள் முன் நாம் ஒரு வேண்டாத செயலைச் செய்தால் அவர்கள் முகம் சுளிப்பார்கள். நம்மை பற்றி கீழான அபிப்பிராயம் கொள்வார்கள். நம்மை வெறுப்பார்கள். 



அது ஒரு சின்ன வட்டம். 



ஆனால், கற்று அறிந்த பெரியோர் முன் பயனில சொன்னால், அவர்கள் மட்டும் அல்ல, அந்த சொல்லால் எல்லோரும் இகழத் தலைப்படுவார்கள். 


அது ஒரு பெரிய  வட்டம். 




இரண்டாவது,  சுற்றத்தார் இகழ்வது அந்த நேரத்தில் நடக்கும், அல்லது கொஞ்ச நாளைக்கு நடக்கும். ஆனால்,  அறிவுடைய பெரியாரால் இகழப் பட்டால்   அது கால காலத்துக்கும் நிற்கும். 



நெருங்கியோர் ஒருவனை விட்டு விலகிப் போனால் அதனால் வரும் நட்டம் அதிகம் இல்லை. 



அறிவுடையோர் ஒருவனை விட்டு விலகிப் போனால், அதனால் அவன் அடையும் நட்டத்துக்கு அளவில்லை. 



அவர்களிடம் இருந்து அவன் இம்மைக்கும், மறுமைக்கும் பெற்றுக் பயன் பெற வேண்டியவை அனைத்தையும் இழப்பான். 



மேலும், நெருங்கியவர்கள் ஒரு வேளை நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் கூடும். கணவனோ, மனைவியோ தவறு செய்தால் மற்றவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளக் கூடும். பிள்ளை தவறு செய்தால் பெற்றோர் வெறுத்து ஒதுக்கி விட மாட்டார்கள். 



ஆனால், அறிவுடையார், பயனில சொல் சொல்பவனை விட்டு விலகிப் போய் விடுவார்கள். 




எனவே, அந்தச் சொல், நெருங்கியவர்களுக்கு செய்யும் நன்மை தராத செயலை விட தீமையானது என்கிறார். 



இன்றைய சூழ்நிலையில், யார் அறிந்தோர் என்று நமக்குத் தெரியாது. எந்தக் கூட்டத்தில் எந்த அறிஞன் இருக்கிறான் என்று யாருக்குத் தெரியும்?




எனவே, எப்போதும் பயனுள்ள சொற்களையே பேசிப் பழக வேண்டும். 


(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html





Friday, February 17, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - அறன்நோக்கி ஆற்றுங்கொல்

        

 திருக்குறள் - புறங்கூறாமை -  அறன்நோக்கி ஆற்றுங்கொல் 



(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


சில சமயம் நமக்கு பிடிக்காத வேலைகளைக் கூட நாம் "எல்லாம் என் தலை எழுத்து" என்று நொந்துகொண்டே செய்வோம். 


மனதுக்கு பிடிக்காத வேலையாக இருக்கும். வேறு வழியில்லாமல் செய்வோம். ஏதோ முன் பிறவி வினை என்று நினைத்துக் கொண்டு செய்வோம் அல்லவா?


அது போல, 


இந்த பூமியும், புறம் சொல்லுவாரை தாங்குகிறதாம். செய்ய வேண்டியது என்ன என்றால், நிலம் பிளந்து அவர்களை அப்படியே விழுங்கி விட வேண்டும். அப்படிச் செய்யாமல், புறம் கூறுபவர்களை நிலம் தாங்கிக் கொண்டு இருக்கக் காரணம், அது தனக்கு விதித்த அறம்  என்று நிலம் நினைபதால் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொ லுரைப்பான் பொறை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_4.html


(pl click the above link to continue reading)


அறன்நோக்கி = அறம் என்று கருதி 


ஆற்றுங்கொல் = பொறுத்துக் கொண்டு இருக்கிறதோ ?


வையம் = இந்த பூமி 


புறன்நோக்கிப் = மற்றவர்கள் சென்ற பின் அவர்கள் பின்னால் (புறத்தே) 


புன்சொ லுரைப்பான் = தீய சொற்களை சொல்லுபவனின் 


பொறை = சுமை 


அதாவது, அப்படிப்பட்டவர்கள் இந்த உலகிலேயே இருக்கக் கூடாது என்கிறார். இருக்கிறார்களே என்றால், பூ மகள் அறம் நோக்கி அவர்களை தாங்கி நிற்பதால் என்கிறார். அது மட்டும் இல்லை என்றால் இந்த புறம் சொல்பவர்களை நிலம் என்றோ விழுங்கி இருக்கும் என்கிறார். 


அந்த அளவுக்கு புறம் சொல்லுவது குற்றம் என்று சொல்கிறார். 


பலர் அது ஏதோ ஒரு பொழுது போக்கு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 


படிக்க வேண்டும். 


படித்தபின் மாற வேண்டும். 






(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html


பகச் சொல்லி 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html


தூற்றும் மரபினார்



Wednesday, November 9, 2022

திருக்குறள் - திரு சேரும் திறனறிந்து

        

 திருக்குறள் - திரு சேரும் திறனறிந்து  




ஒரு பெரியவர், நல்லவர், உயர் அதிகாரி வீட்டுக்குப் போவது என்றால் காலம் நேரம் அறிந்து போவோம் அல்லவா ? அவருக்கு நேரம் இருக்குமா? நல்ல மூடில் இருப்பாரா, என்பதெல்லாம் அறிந்து கொண்டுதான் போக வேண்டும். 



அது ஒரு புறம் இருக்கட்டும். 



நாம் எல்லாம் செல்வததை சேர்க்க மிகுந்த முயற்சி செய்கிறோம்.  நாம் செல்வத்தை தேடி அலைகிறோம். அதற்குப் பதிலாக, செல்வம் நம்மைத் தேடி வரும் என்றால் எப்படி இருக்கும்? அதற்கு வள்ளுவர் வழி சொல்கிறார். 





"அறத்தினை அறிந்து, அதன் படி பிறர் பொருளை விரும்பாதவர்களை எப்படி சென்று அடைவது என்று திருமகள் காத்துக் கிடப்பாள்"



பாடல் 



அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு



பொருள் 




(please click the above link to continue reading)


அறன்அறிந்து = அறத்தினை அறிந்து 


வெஃகா = பிறன் பொருளை அடைய விரும்பாத 


அறிவுடையார்ச்  = அறிவுடையாரைச் 


சேரும் = சென்று அடையும் 


திறனறிந்து = எப்போது செல்லலாம், எப்படிச் செல்லலாம் என்று 


ஆங்கே திரு = அங்கே, திருமகள் 




சில சமயம் நமக்கு எதிர் பார்க்காமல் சில செல்வம் வந்து சேரும். நாம் முதலீடு செய்த செல்வம் விலை ஏறி பலன் தரும், பதவி உயர்வு, ,போனஸ் போன்றவை வரும். 



நாம் எதிர் பார்த்து இருக்க மாட்டோம். 



வள்ளுவர் சொல்கிறார், திருமகள் காத்துக் கொண்டு இருப்பாளாம். எப்படி இவனைப் போய்ச் சேர்வது என்று. சரியான காலம் பார்த்து நம் வீட்டுக்கு வந்து விடுவாளாம். 



எப்போது என்றால், நாம் மற்றவர் பொருளை விரும்பால் இருக்கும் பொழுது. 




எப்போது வருவாள் என்று தெரியாது. சரியான சமயத்தில் வந்து விடுவாள் 





[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்




வேண்டற்க வெஃகியாம் 


Sunday, March 20, 2022

திருக்குறள் - உள்ளக் கெடும்

திருக்குறள் - உள்ளக் கெடும் 


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 

அன்றே மறப்பது நன்று 


என்று முந்தைய குறளில் கூறினார். 


சொல்லுவது எளிது. எப்படி முடியும். .


ஒருவர் நமக்கு எவ்வளவோ உதவி செய்து இருக்கலாம். ஆனால், அவர் ஒரு தீங்கு செய்தால் அது தானே நமது உள்ளதில் நிற்கிறது. 


"என்னை அப்படிச் சொல்லி விட்டானே"


"நான்னு தெரிஞ்சும் அப்படிஅவன் செய்யலாமா "


ஒரு துரோகம். ஒரு தவறு. ஒரு சுடு சொல். ஒரு முறை தவறிய நடத்தை அது தானே மனத்தை போட்டு அரிக்கிறது. 


ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு போல், அந்த ஒரு வார்த்தை, செயல் முழுவதுமே கெடுத்து விடுகிறது அல்லவா?


ரொம்ப ஒன்றும் போக வேண்டாம், கோபத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏதோ வார்த்தை வந்து விழுந்து விடுகிறது. எவ்வளவு பெரிய விரிசல் வந்து விடுகிறது. மறக்க முடிகிறதா?


ஆனால் வள்ளுவர் எளிமையாக சொல்லிவிட்டார், "நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று. 


எப்படி என்று சொல்ல வேண்டாமா?


அதையும் சொல்லித் தருகிறார் இந்தக் குறளில். 


பாடல் 



 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_20.html


(Pl click the above link to continue reading)


கொன்றன்ன = கொல்வதற்கு ஒப்பான 


இன்னா செயினும் = தீமையைச் செய்யினும் 


அவர்செய்த = அவர் (அந்த தீமையைச் செய்தவர்) செய்த 


ஒன்று நன்று = நல்லது ஒன்றை 


உள்ளக் கெடும் = நினைக்கக் கெடும். 


நமக்கு ஒருவர் மிகப் பெரிய தீமையை செய்தாலும், அவர் நமக்கு முன் செய்த ஒரு நன்மையை மனதில் நினைக்க இந்த தீமையால் வந்த துன்பம், கெட்ட நினைவுகள் அழிந்து போகும் என்கிறார். 


அது எப்படி முடியும்?


சிந்திப்போம். 


முதலாவது, உலகில் எல்லோருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று எது என்று கேட்டால் அவர்கள் உயிர் தான் உயர்ந்தது. "உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்" என்று சொல்லுவதில் என்ன தெரிகிறது. நான் என் உயிரை மிக ஆழமாக நேசிக்கிறேன். அதே போல் உன்னையும் நேசிக்கிறேன் என்பது தானே. 


அந்த உயிருக்கு கேடு விளைவிக்க ஒருவன் நினைத்தால் அவன் மேல் எவ்வளவு கோபம் வரும்? நம்மை கொல்ல வந்தவன் மேல் நமக்கு எவ்வளவு கோபமும், ஆங்காரமும், வெறுப்பும் வரும்? அது தானே அதிக பட்ச கோபமும் வெறுப்பும். 


அப்படிப் பட்ட துன்பம் ஒருவர் செய்தால் கூட. அதாவது எவ்வளவு பெரிய தீமை செய்ய முடியுமோ அதை செய்தால் கூட


இரண்டாவது, "அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும்" என்கிறார். அவர் நமக்கு எவ்வளவோ நன்மை செய்து இருக்கலாம். அதில் ஒன்றை நினைத்தால் போதும், எல்லாவற்றையும் நினைக்க வேண்டும் என்று இல்லை, ஒன்று போதும். அதை நினைத்தால் போதும், இந்த உயிரை எடுக்கும் அளவுக்கு செய்த தீமை மறந்து போகும், அல்லது பெரிதாகத் தெரியாது. 


இப்பவும் நமக்கு குழப்பமாக இருக்கும். 


எப்படி முடியும் என்று. 


பரிமேலழகர் இல்லை என்றால் இதெல்லாம் புரியவே புரியாது. நாம் எவ்வளவு சிந்தித்தாலும் அவர் சொன்ன உரை நம் புத்திக்கு எட்டவே எட்டாது. 


அவர் சொல்கிறார், "முன்னால் என்ன சொன்னார் வள்ளுவர்? திணை துணையாகச் செய்தாலும் பனைத் துணையாக கொள்ள வேண்டும் " என்று சொன்னார் அல்லவா? அதன் படி, உனக்கு தீமை செய்த ஒருவர் உனக்கு முன் செய்த ஒரு உதவியை நினை. அதை பனையளவு நினை. எவ்வளவு பெரிய உதவி என்று நினை. அந்த உதவியின் பலனை நினை. அதனால் நீயும் உன் சந்ததியும் பெற்ற, பெறும், பெற இருக்கும் நன்மைகளை நினை. அப்படி நினைத்தால், இந்தத் தீமையின் அளவு சிறிதாகப் போய் விடும். நீ அந்தத் தீமையை எளிதில் மறக்க முடியும் என்கிறார். 


"தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். "


பரிமேலழகர் உரை. 


பொதுவாக மக்கள் என்ன செய்கிறார்கள்?


நன்மையின் அளவை குறைத்து மதிப்பிடுகிறார்கள். தீமையின் அளவை பெரிதாக நினைக்கிறார்கள். அதனால் என்ன ஆகும், எந்நேரமும் மனதில் ஒரு வெறுப்பும், பகைமையுமே நிலவும். 


அன்பு மலராது. உறவு சிறக்காது. மனதில் அமைதி இருக்காது. 


இல்லறம் பாழ் படும். 


அந்த ஒருவர் என்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்...பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம், அண்டை அயல், ஆசிரியர் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 


நல்லதை பெரிதாக நினைக்க, தீமைகள் மறைந்து போகும். 


"இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது" என்கிறார் பரிமேலழகர். 


அதாவது, அன்றே எப்படி மறப்பது என்பதற்கு ஒரு உபாயம், technique கூறப்பட்டது என்கிறார். 


எப்படி என்பதும் சொல்லியாகி விட்டது. 


அதை கடைப் பிடிப்பதும், படிக்காமல் இருப்பதும் நம் பாடு. 





Thursday, December 30, 2021

திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

திருக்குறள் - பற்றற்றெம் என்பர்


செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என்ற மூன்றையும் திறம்பட செய்பவர்கள் வெகு சிலரேhi.


சிலர் பணம் சம்பாதிப்பதில் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். அதை சரிவர பாதுக்காக, முதலீடு செய்து அதை விருத்தி செய்ய, நல்ல வழியில் செலவழிக்க...அதெல்லாம் தெரியாது.


சிலர் நன்றாக செலவழிப்பார்கள். சில சமயம் கடன் வாங்கிக் கூட செலவழிப்பார்கள். செல்வம் சேர்க்க, முதலீடு செய்யத் தெரியாது. 


அதெல்லாம் சரி, 


வள்ளுவர் சொல்கிறார், " பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து, அதை மேலும் துன்பப்பட்டு காவல் செய்து பின்னால் எனக்கு யாரும் துணை இல்லை என்று வருந்துவார்கள். யார் வருந்துவார்கள்? பணத்தை விருந்தோம்பலில் செல்வழிக்காதவவ்ர்கள்" என்று.


பாடல் 


 பரிந்தோம்பிப் பற்றற்றெம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_30.html


(Please click the above link to continue reading)



பரிந்தோம்பிப்  = வருந்தி, பாதுகாத்து 


பற்றற்றெம் = துணை இல்லை 


என்பர் = என்று சொல்லுவார்கள் 


விருந்தோம்பி = விருந்தைப் போற்றி 


வேள்வி தலைப்படா தார் = விருந்து என்ற அந்த வேள்வியை செய்யாதவர்கள். 


பணம் இருக்கும் போது நண்பர்களையும், சுற்றத்தையும் அழைத்து, அவர்களோடு ஒன்றாகக் கலந்து, அளவளாவி, உண்டு மகிழ்ந்து இருக்கத் தெரியாதவர்கள், இருக்கின்ற பணத்தை எல்லாம் எதெதிலோ முதலீடு செய்து, இறக்கும் தருவாயில், அல்லது இறுதிக் காலத்தில் யாருடைய துணையும் இல்லாமல் தனித்து வருந்துவார்கள். 


பணம் இருக்கும் போது சுற்றமும் நட்பும் சூழ வாழாவிட்டால், இறுதிக் காலத்தில் யார் கூட இருப்பார்கள்? 


விருந்தோம்பலில் ஒரு சுயநலமும் இருக்கிறது. 




Thursday, June 17, 2021

திருக்குறள் - வழி அடைக்கும் கல் - பாகம் 2

 

திருக்குறள் - வழி அடைக்கும் கல்  - பாகம் 2 


(இதன் முதல் பகுதியை கீழே உள்ள பதிவில் காணலாம்)

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1.html



பாடல் 



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/2.html


(Please click the above link to continue reading)


வீழ்நாள் = செய்யாது கழியும் நாள் 


படாஅமை  = உளவாகாமல் 


நன்றாற்றின் = நல்லது செய்தால், அறத்தை செய்தால் 


அஃதொருவன் = அந்த செயல் 


வாழ்நாள் = மீண்டும் மீண்டும் வந்து வாழும் நாட்களை 


வழியடைக்கும் கல் = வழி அடைக்கும் கல் 



ஐந்து விதமான குற்றங்களால் வரும் இரண்டு விதமான வினைகளால் உயிர் இந்த உடம்போடு கூடி அந்த அந்த வினைகளது பயனை அனுபவிக்கும். எனவே, அந்தக் காலம் முழுவதும் வாழ் நாள் எனப்பட்டது. 


அது என்ன ஐந்து வித குற்றம், இரண்டு வினை,  வினைப் பயன் ....?


நாளை சிந்திப்போமா?


என்று முந்தைய ப்ளாகில் சிந்தித்த்தோம். 


ஐந்து விதமான குற்றங்கள் என்பன 


அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, மேலும்  வெறுப்பு  என்பவை. 


அவிச்சை என்றால் மயக்கம். நல்லதை தீயவை என்றும் தீயதை நல்லது என்றும் நினைப்பது.  மக்கள் நல்லது எது கெட்டது எது என்று மயங்குகிறார்கள். ரொம்ப போக வேண்டாம், எந்த உணவு நல்லது என்று தேடப் போனால், ஆளாளுக்கு ஒன்று சொல்கிரார்கள். காப்பி குடிப்பது நல்லது என்று கொஞ்ச பேர். இல்லை கெடுதல் என்று கொஞ்சம் பேர். மிதமான அளவு மது குடித்தால் உடம்புக்கு நல்லது என்று சிலர். குடிக்கவே கூடாது என்று சிலர். எது நல்லது, எது தீயது என்று தெரியாமல் குழம்புவது அவிச்சை. 


அகங்காரம் - தான் என்ற செருக்கு. நான் தான் எல்லாம், என்னை விட்டால் ஒன்றும் இல்லை, என்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற மமதை. 


அவா - அவா என்றால் ஆசை இல்லை. ஒரு பொருளை அடைய நினைக்கும் முயற்சிக்கு அவா என்று பெயர். 


விழைவு அல்லது ஆசை - பெற்ற ஒரு பொருளை பிரிய மனம் இல்லாமல் பற்றிக் கொண்டு இருப்பது. ஆசை ஆசையாக கட்டிய வீடு என்று சொல்லும் போது அதை விட முடியாத பற்று. 


இராமன் காடு போன போது கௌசலை உயிரை விடவில்லை, தசரதன் விட்டான். கோசலை கொண்டது அன்பு. தசரதன் கொண்டது ஆசை. இராமனை பிரிய முடியவில்லை. அது ஆசை.  ஆசை கொல்லும். அன்பு கொல்லாது.


வெறுப்பு - பகைமை பற்றி தோன்றும் உணர்வு. 


இந்த ஐந்து குற்றங்களால் நல்வினை, தீவினை செய்கிறோம். 


நல்வினை செய்தால் புண்ணியம் கிடைக்கிறது. 


தீவினை செய்தால் பாவம் வந்து சேர்கிறது. 


புண்ணியம் சேர்ந்தால்  அதை அனுபவிக்க மறு பிறவியில் இன்பம் கிட்டுகிறது. 

பாவம் சேர்ந்தால் அதை அனுபவிக்க மறு பிறவியில் துன்பம் நிகழ்கிறது. 


எனவே

ஐந்து வித குற்றங்கள். அதில் இருந்து 


இரண்டு வித வினைகள் - நல்வினை, தீவினை. அதில் இருந்து 


இரண்டு விளைவுகள் - புண்ணியம், பாவம். அதில் இருந்து 


இரண்டு அனுபவங்கள் - இன்பம், துன்பம்

நல்வினை - புண்ணியம் - இன்பம் 

தீவினை - பாவம் - துன்பம். 


நல்லது செய்தாலும் பிறவி வரும், தீயது செய்தாலும் பிறவி வரும். 


"அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர். இரண்டும் கயிறு தான். இரண்டும் நம்மை இந்த பிறவியோடு கட்டிப் போடும். இதில் இருந்து விடுதலை தராது. 


சரி, அதுக்கு என்னதான் செய்வது? இதில் இருந்து எப்படி மீழ்வது என்றால், அதற்கு ஒரே வழி தொடர்ந்து அறம் செய்வதுதான். 


அந்த அறம் இந்த பிறவி என்ற வழியை அடைக்கும் கல். இதற்கு மேல் போக முடியாது என்று அடைக் கல் வழியை அடைப்பது போல, இனிமேல் பிறக்க முடியாது என்று அறம் உங்கள் பிறவிப் பாதையை அடைக்கும் கல் என்கிறார் வள்ளுவர். 


"வாழ்நாள்" என்ற ஒரு வார்த்தையை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு விரிவாக உரை செய்கிறார் பரிமேலழகர். 


நம்மால் இதை எல்லாம் சிந்திக்கவாவது முடியுமா? 


அவர் உரை இல்லை என்றால் குறள் நமக்கு புரிந்தே இருக்காது. 


யார் செய்த புண்ணியமோ, இதை எல்லாம் படிக்க, இரசிக்க கொடுத்து வைத்து இருக்கிறோம்.





என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

Thursday, June 10, 2021

திருக்குறள் - அறத்தின் இயல்பு

திருக்குறள் - அறத்தின் இயல்பு 


நாம் அற வழியில் செல்கிறோமா அல்லது வேறு ஏதாவது தவறான பாதையில் செல்கிறோமா என்று எப்படித் தெரியும்?


எல்லோரும் செய்வதைப் போலத்தான் நாமும் செய்கிறோம். இருக்கிறோம். சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்வது இல்லை. இதெல்லாம் அறம் இல்லையா? வேறு என்ன செய்ய வேண்டும்? 


எப்போது நாம் அறம் அற்ற பாதையில் செல்கிறோம் என்று தெரிந்து கொள்வது? 


ஒவ்வொரு செயலுக்கு முன்னாலும் யாரிடமாவது போய் கேட்க முடியுமா - இது சரியா, இது அறமா என்று?


ஒண்ணே முக்கால் அடியில் இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார். 


இன்னொரு நூறு பிறவி எடுத்தாலும் நமக்கு அது தோன்றாது. 


பாடல்  


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_10.html


(please click the above link to continue reading)


அழுக்காறு = பொறாமை 

அவா = ஆசை 

வெகுளி = கோபம் 

இன்னாச்சொல் = தீய சொற்கள் 

நான்கும் = என்ற இந்த நான்கையும் 

இழுக்கா = விலக்கி 

இயன்றது = செய்வது 

அறம் = அறம் 


நினைத்துப் பார்க்க முடியமா நம்மால்?


அழுக்காறு - பொறாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமை. 


அவா - புலன்கள் மேல் செல்கின்ற ஆசை என்கிறார் பரிமேலழகர் 


கோபம் - பொறாமையாலும், புலன்கள் மேல் செல்லும் ஆசையாலும் கோபம் வரும். கோபம் எப்போது வரும், நமக்கு வேண்டியது கிடைக்காத போது கோபம் வரும். நாம் எதிர் பார்த்தது கிடைக்காத போது கோபம் வரும். வேண்டியது, எதிர் பார்த்தது எல்லாம் ஆசையால் விளைவது. அல்லது, மற்றவனுக்கு கிடைத்து விட்டதே, எனக்கு கிடைக்கவில்லையே என்று கோபம் வரும். 


இன்னா சொல் = இனிய சொல் என்பதன் எதிர்பதம். நீங்கள் மற்றவர்களிடம் இனிமையாக பேசவில்லையா, நீங்கள் அறம் தவறி நடக்கிறீர்கள் என்று அர்த்தம். துன்பம் தரும் சொல். பயனில்லாத சொல். 


இராமனை காட்டுக்குப் போ என்று தசரதன் சொன்னதாக கைகேயி சொல்லி விடுகிறாள். அதை அறிந்த இலக்குவன் கொந்தளிக்கிறான். 


அப்போது இராமன் சொல்கிறான் 


"மறை தந்த நாவால் இப்படித் எல்லாம் கோபம் கொண்டு பேசலாமா" என்று 


ஆய் தந்து, அவன், அவ் உரை  கூறலும் ‘ஐயன், ‘நின் தன்

வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்?

நீ தந்தது அன்றே நெறியோர்  கண் இலாதது? ஈன்ற

தாய் தந்தை என்றால் அவர்மேல் சலிக்கின்றது என்னோ? ‘


கோபமும் கூடாது. இன்னா சொல்லும் கூடாது என்பது விளங்கும். 


இந்த நான்கையும் விலக்கி, இடைவிடாமல் செய்வது அறம். 


மாதத்திற்கு ஒரு நாள் கோபப் படமாட்டேன் என்றால் அது அறம் அல்ல. எப்போதுமே கோபப் படக் கூடாது. 


வெள்ளி செவ்வாய் தண்ணி அடிக்க மாட்டேன் என்பதெல்லாம் அறத்தில் சேர்த்தி இல்லை. 


வியாழக் கிழமை மாமிசம் உண்பதில்லை. ஜீவ காருண்யம். 


இந்த நான்கில் ஒன்று மனதில் இருக்கும் போது எது செய்தாலும் அது அறம் இல்லை. 


"இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க."


என்கிறார் பரிமேலழகர். 


இதை வைத்துக் கொண்டு செய்வது அறம் அல்ல. 


பக்கத்து வீட்டுக் காரன் நாசாமாகப் போக வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே சாமி கும்பிட்டால் அது அறமாகாது. 


எப்போது இந்த நான்கில் ஏதோ ஒன்று மனதில் இருக்கிறதோ, அப்போதே நாம் அறம் அற்ற வழியில் செல்லப் போகிறோம் என்று அறிந்து கொள்ளலாம். 


நமக்குத் தெரியாதா நம் மனம். 


பொறாமை படுவது சட்டப் படி குற்றம் அல்ல. ஆனால், அது அறம் அல்ல. 


யாரையும் கேட்க வேண்டாம். நமக்கே தெரியும் நம் மன நிலை. அதை வைத்து நாம் அறத்தின் பாதையில் செல்கிறோமா இல்லையா என்று அறிந்து கொள்ளலாம். 

Saturday, January 9, 2021

திருக்குறள் - செய்வன

 திருக்குறள் - செய்வன 

பெரும்பாலும் திருக்குறள் படிக்கும் போது, அறத்துப் பால் படிப்போம். ஒரே அறவுரையாக இருக்கும். சரி கொஞ்சம் மனதை இலகுவாக்குவோம் என்று இன்பத்துப் பால் படிப்போம். நடுவில் உள்ள பொருள் பால் போவதற்கு நேரம் கிடைப்பதில்லை. 


பொருள் பாலில், பொருள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, ஒரு நல்ல குடிமகனாக, சமுதாயத்தில் ஒரு நல்ல அங்கத்தினனாக இருப்பது என்பது பற்றி எல்லாம் வள்ளுவர் சொல்லி இருக்கிறார். 

ஒரு செயலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு அதிகாரம். அது எந்த செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

"தெரிந்து செயல் வகை" 


அதில் ஒரு குறள். 


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்


பொருள் 

click to continue


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_9.html


செய்தக்க அல்ல = செய்வதற்கு தகுதி இல்லாதவற்றை 

செயக்கெடும் = செய்தால், கெடுதல் விளையும் 

செய்தக்க = செய்யத் தகுந்தவற்றை 

செய்யாமை யானும் கெடும் = செய்யாவிட்டாலும் கெடுதல் வரும் 


எது செய்யக் கூடாதோ, அதைச் செய்தால் கெடுதல் வரும். 


எதைச்  செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல் விட்டாலும் கெடுதல் வரும். 


புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.  


சிந்திப்போம். 


செய்ய வேண்டியவற்றை செய்யாவிட்டால் என்ன கெடுதல் வந்து விடும்? அதனால் வர  வேண்டிய பலன் கிடைக்காமல் போகலாம். கெடுதல் எப்படி வரும்?

ஒவ்வொரு வருடமும், உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று சோதனை செய்ய வேண்டும். (annual medical check up ). அதைச் செய்தால், நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் ஏதாவது இருந்தால், அதை உடனே கண்டு பிடித்து, மருந்து சாப்பிட்டு  குணப் படுத்திக் கொள்ளலாம். ஆண்டு மருத்துவ சோதனை செய்யாமல் விட்டால், நோய் முற்றி , பின்னாளில் எந்த மருந்துக்கும் சரியாகாமல்  துன்பப் பட நேரிடும். 


செய்ய வேண்டியதை, செய்யாமல் விட்டால் வரும் கெடுதல். 

உடற் பயிற்சி செய்ய வேண்டும். அதை செய்யாவிட்டால் கெடுதல் வருமா இல்லையா?


இளமையில் படிக்க வேண்டும். படிக்காவிட்டால்? 

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். செய்ய வேண்டியவற்றை  செய்யாமல் விட்டால்  துன்பம் வரும். 


இதில் முக்கியமான செய்தி என்ன என்றால், செய்ய வேண்டியது எது என்று நமக்குத் தெரியாமல்  இருப்பதுதான். 


பிள்ளைகளை கட்டிக் கொடுத்து, அதுக எல்லாம் செட்டில் ஆகிருச்சு. இனி என்ன இருக்கு செய்ய வேண்டியது என்று   சிலர் நினைக்கலாம். 

படிச்சோம், வேலைக்குப் போனோம்...சம்பாதித்தோம் , இனி என்ன செய்ய வேண்டியது இருக்கிறது , என்று சிலர் நினைக்கலாம். 

குடும்பம் ஒழுங்கா போய்கிட்டு இருக்கு. இதுல என்ன செய்ய வேண்டி இருக்கு என்று கேள்வி எழலாம். 

அதற்கு பதில் சொல்ல முடியும். இருந்தாலும், அவரவர்கள் சிந்தித்து முடிவுக்கு வருதலே நலம். 


அடுத்தது, செய்ய வேண்டாதவற்றை செய்தாலும் கெடுதல் வரும். 


புகை பிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக தூங்குவது, சோம்பேறியாக இருப்பது,  whatsapp ல் நேரத்தை செலவிடுவது,  facebook , youtube  என்று  நேரத்தை விரயம் பண்ணுவது,  கண்ட கண்ட சீரியல்களை பார்ப்பது, அரட்டை அடிப்பது  போன்ற செய்ய வேண்டாத காரியங்களை செய்தாலும் கெடுதல் வரும். 


இரண்டு பட்டியல் போடுங்கள்.


எதை எல்லாம் நிறுத்த வேண்டும் என்று ஒரு பட்டியல். 


எதை ஆரம்பிக்க வேண்டும்/ தொடர வேண்டும் என்று ஒரு பட்டியல். 


இந்தக் குறளை இன்னும் விரித்துச் சொல்லலாம்.  அவ்வளவு இருக்கிறது. இப்போதைக்கு இது போதும். 


பொருட்பாலில், ஒரு அதிகாரத்தில், ஒரு குறளில் இவ்வளவு இருக்கிறது. 


வேறு என்ன சொல்ல?




Tuesday, February 4, 2020

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?


திருமணம் செய்வது  என்னவோ உடல் இன்பத்துக்கும், சம்பாதிக்க ஒருவர், சமைக்க ஒருவர் என்று வைத்துக் கொண்டு நாட்களை ஓட்டவோ அல்ல.  திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? பதினோரு கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்க வேண்டும். அதற்கு உடன்பட்டால் திருமணம் செய்து கொள் என்கிறார் வள்ளுவர்.

அதில் முதல் மூன்று கடமை பற்றி முதல் குறளில் கூறுகிறார்.

பாடல்


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள்

இல்வாழ்வான் = இல்லத்தில் இருந்து வாழ்வான்

என்பான் = எனப்படுபவன்

இயல்பு உடைய = இயற்கையான

மூவர்க்கும் = மூன்று பேருக்கும்

நல்லாற்றின் = நல்ல வழியில்

நின்ற துணை. = துணை நிற்பான்

யார் அந்த மூன்று பேர்? அவர்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? ஏன் உதவி செய்ய வேண்டும் ? நான் திருமணம் செய்து கொள்ள அவர்களுக்கு எதற்கு உதவி செய்டய வேண்டும்?

இப்படி பல கேள்விகள் நம் மனதில் எழும் அல்லவா? எப்படி விடை காண்பது?  குறளில் அவ்வளவுதான் இருக்கிறது.

இதற்கு பரிமேலழகர் எழுதிய உரை இருக்கிறதே, அற்புதம். அந்த உரை இல்லாமல், நம்மால் இந்த குறளை புரிந்து கொள்ளவே முடியாது.

அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

யார் அந்த மூன்று பேர்?

தமிழர்கள் வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்தார்கள்.

பிரம்மச்சரியம்
இல்லறம்
வானப்ரஸ்தம்
துறவறம்

என்ற நாலு நிலைகள்.

இதில் இரண்டாவது நிலை இலவாழ்க்கை. இல்வாழ்வான் ஏனைய மூவருக்கும் உதவி செய்ய வேண்டும்.

புரிகிறதா யார் அந்த மூவர் என்று?

பிரமச்சாரி, வானப்ரஸ்தம் அடைந்தவன், துறவறம் மேற்கொண்டவன். இந்த மூன்று பேருக்கும் இலவாழ்வான் உதவி செய்ய வேண்டும்.


பிரமச்சாரி என்பவன் திருமணம் முடிப்பதற்கு முந்தைய நிலையில் உள்ளவன். படித்துக் கொண்டு இருப்பவன்.

வானப்ரஸ்தம் என்பது, இல்லற வாழ்வில் இருந்து ஓய்வு பெரும் காலம். குடும்பப் பொறுப்பை மகன்/மகளிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு தேவைப் படும் போது உதவி செய்து கொண்டு, தினசரி வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருப்பது. துறவறம் என்பது வீடு வாசலை துறந்து, கானகம் செல்வது.

மூணு பேர் தெரியுது...அது என்ன இயல்புடைய மூவர்?

அப்படினா, இயற்கையாக அந்த நிலைகளில் உள்ளவர்.

அதாவது, படிக்கும் வயதில் பிரம்மச்சாரியாக இருப்பவன். நான் 60 வயது வரையிலும்  கல்யாணம் பண்ணாமல் இருப்பேன் என்று ஒருவன் இருந்தால், அவன்  இயல்பான பிரமச்சாரி அல்ல. அவனுக்கு ஏதோ குழப்பம் இருக்கிறது என்று அர்த்தம்.  அதே போல், கல்யாணம் முடிந்த ஓரிரு வருடங்களில் ஒருவன்  துறவியாகப் போகிறேன் என்று கிளம்பினால் அவன் இயல்பான துறவி  அல்ல. அவர்களைப் போன்றவர்களை விட்டு விட்டு, இயற்கையாக  அந்தந்த  நிலைகளில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

சரி இயல்புடைய மூவர் யார் என்று தெரிகிறது.


இந்த "நல்லாற்றின்" நின்ற துணை என்று சொல்கிறாரே,  அதுக்கு என்ன அர்த்தம்?

ஆறு என்றால் வழி. ஆற்றுப் படுத்துதல் என்றால் வழிப் படுத்துதல் என்று பொருள்.

நல்லாற்றின் என்றால், நல்ல வழியில் நிற்க துணை புரிய வேண்டும் என்கிறார்.

அதாவது, ஒரு பிரமச்சாரி வந்து, எனக்கு பசிக்கிறது, கொஞ்சம் உணவு தாருங்கள்  என்று கேட்டால், இல்லறத்தில் இருப்பவன் தர வேண்டும். மாறாக,  எனக்கு தண்ணி அடிக்க வேண்டும் போல இருக்கு, கொஞ்சம் பணம் தந்தாள் தாருங்கள் என்று கேட்டால் தர வேண்டாம்.  அது நல்ல வழி அல்ல.

நல்ல வழி என்றால் அவர்கள் அற வழியில் செல்ல உதவ வேண்டும். தவறான வழியில் செல்ல அல்ல. அவரவர்களுக்கு உரிய அற வழியில் செல்ல உதவி செய்ய வேண்டும்.

வீட்டில் உள்ள அப்பா/அம்மா/மாமனார்/மாமியார் - வனப்ரஸ்தம் அடைந்தவர்கள்  அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்து, உடை போன்றவை அளிக்க வேண்டும்.  எனக்கு 4 மணி நேரம் டிவி சீரியல் பார்க்க வேண்டும் என்று   கேட்டால், அதற்கு உதவி செய்ய வேண்டியது  இல்லை. அது நல்லாற்றில் வராது.

சரி, யாரோ ஒரு ஏழை மாணவன் வந்து உதவி  கேட்டான், கொஞ்சம் பணம் கொடுத்தோம்...அவ்வளவுதானே என்றால் இல்லை.

அவன் நல்ல வழியில் செல்ல உதவி செய்ய வேண்டும் என்றால், அவன் தவறான வழியில் போவதை கண்டித்து தடுத்து நிறுத்தவும் வேண்டும்.

வீட்டில் வயதில் மூத்தவர்கள் தவறான ஒன்றை செய்வார்கள் என்றால் அதை கண்டித்து நிறுத்தும் அதிகாரம் உதவி செய்யும் இல் வாழ்வானுக்கு உண்டு.

துறவி ஒருவன் பணம் மற்றும் நன்கொடைகளை பெற்றுக் கொண்டு அவற்றை தவறான வழியில் செலவழிப்பான் என்றால், அதை தடுக்கும் கடமையும் இல் வாழ்வானுக்கு உண்டு.  ஏதோ பணம் கொடுத்தோம், அதற்கப்புறம் எக்கேடும் கெட்டு போகட்டும் என்று விடச்சொல்லவில்லை.

சரி, எவ்வளவு உதவி செய்ய வேண்டும் என்று ஏதாவது வரை முறை இருக்கிறதா?

இருக்கிறது. அவர்கள் நோக்கம் நிறைவேற உதவி செய்ய வேண்டும். படிக்க உதவி கேட்டால், படித்து முடிக்க உதவி செய்ய வேண்டும்.


இது முதல் மூன்று கடமை.

மீதியும் வருகிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_4.html

Friday, June 1, 2018

திருக்குறள் - பெருமை வேண்டுமா?

திருக்குறள்  - பெருமை வேண்டுமா?


பெருமையோடு வாழ வேண்டும் என்று விரும்பாதவர் யார்? எல்லோரும் பெருமையோடு, சிறப்பாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். மற்றவர்களை விட செல்வத்தில், அறிவில், பதவியில் என்று ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களை விட சிறந்து விளங்கவே விரும்புகிறார்கள்.

ஆனால், எப்படி அந்தப்  பெருமையை பெறுவது? அதற்கு என்ன வழி?

அதை அறிவதற்கு முன், ஒருமை மகளிர் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

திருமணம் ஆன பின், கணவன் எப்படி இருந்தாலும், பெண்கள் அவனை விட்டு விட்டு இன்னொருவனை மணந்து கொள்ள விரும்புவதில்லை. பெருவாரியான பெண்கள் நிலை அது. விதி விலக்குகள் இருக்கலாம். இருக்கிறது.

கணவன் மேல் ஆயிரம் குறைகள்  சொல்லுவார்கள். கணவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது, அப்பாவி, சோம்பேறி, என்றெல்லாம் கூறுவார்கள். இருந்தும், கணவனை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துப் பேச மாட்டார்கள். அவனை விட்டு விட்டு இன்னொருவனை மனதில் நினைக்க மாட்டார்கள். அதுவே கற்பு என்று கூறப் படுகிறது. நமக்கு இவன் தான் என்பதில் மிக உறுதியாக இருப்பார்கள்.

அவர்களை வள்ளுவர் "ஒருமை மகளிர்" என்கிறார். ஒன்றைத் தவிர வேறு எதையும் நினைக்க மாட்டார்கள்.

அது போல, பெருமை வேண்டுபவர்கள், கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். எந்தத் துறையை எடுத்தாலும், அதில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்து மாறக் கூடாது. ஒன்றை செய்யும் போதே, மனம் அதை விட்டு விட்டு இன்னொன்றுக்குத் தாவ விடக் கூடாது.

உயர்ந்த ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும். குறிக்கோளில் உறுதி வேண்டும்.

பாடல்

ஒருமை மகளிரே போலப் பெருமையும் 
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு


பொருள்

ஒருமை மகளிரே போலப் = ஒருமை மகளிரைப் போல

பெருமையும்  = பெருமையானது

தன்னைத்தான் = ஒருவன் தன்னைத் தான்

கொண்டுஒழுகின் = ஒழுக்கத்தோடு வாழ்ந்தால்

 உண்டு = வரும்.

பெருமையை அடைய கொண்ட குறிக்கோளில், ஒழுக்கமான வழியில் இருந்து மாறக் கூடாது.

எவ்வளவு துன்பம் வந்தாலும், கற்புடைய மகளிர் எப்படி தங்கள் கணவனை , அவன் எப்படி இருந்தாலும் விட மாட்டார்களோ, அது போல குறிக்கோளை விடக் கூடாது.

ஒழுகின் - அற வழியில் , இடை விடாமல் முயற்சி செய்தால்

அது படிப்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, பெருமை அடைய இதுவே வழி.

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_1.html




Tuesday, May 29, 2018

திருக்குறள் - தீயும் தீயவையும்

திருக்குறள் - தீயும் தீயவையும் 


பாடல்

தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும் 

பொருள்

தீயவை = தீமையானவை

தீய பயத்தலால் = தீமை தருவதால்

தீயவை = தீயவை

தீயினும் = நெருப்பை விடவும்

அஞ்சப் படும் = பயப்படப்படும்

குறள் என்னவோ சின்னதுதான். பொருள் தெரியாத வார்த்தை ஒன்றும் இல்லை. இருந்தும், மிக மிக ஆழமான பொருள் பொதிந்தது.

தீயவை நமக்குத் தீமை தருவதால், அத்தகைய தீமைகள் தீயை விடவும் அஞ்சப் படும்.

இதில் இன்ன பெரிய ஆழமான அர்த்தம் இருக்கப் போகிறது?


"தீயினும்" = தீ நல்லது தானே. தீயை வைத்துத் தானே சமையல் செய்கிறோம். தீயினால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது. பின் ஏன் தீயவற்றை தீயோடு ஒப்பிடுகிறார்?

தீ நல்லது தான். மிகவும் தேவையான ஒன்று தான். அதற்காக அதை தவறான முறையில்  கையாண்டால் வீட்டையும், நாட்டையும் எரித்து சாம்பலாகி விடும். சமையல் செய்யும் போது , தீ நல்லது தானே என்று அடுப்பை அதிகமாக எரிய விட்டால் , பாத்திரம் அடி பிடித்து , சமையல் புகை நாற்றம் பிடித்து வாயில் வைக்க முடியாது.

தீ நல்லதுதானே என்று நடு வீட்டில் அதை கொண்டு வந்து வைக்க முடியாது.

அளவோடு உபயோகிக்க வேண்டும்.

அது போலத்தான் தீயவைகளும்.

தீயவை என்றால் என்ன ?

கை பேசி நல்லது தான். அதற்காக சதா சர்வ காலமும் whatsap பார்த்துக் கொண்டு இருந்தால், அதே கை பேசி தீமையில் போய் முடியும்.

டிவி நல்லது தான். அதற்காக அதையே எந்நேரமும் பார்த்துக் கொண்டிருந்தால், அது நம் வாழ்வை சிதைத்து விடும்.

உணவு நல்லது தான். அதையே அளவுக்கு அதிகமாக உண்டால் இல்லாத பிரச்சினகைள் எல்லாம் வந்து சேரும். அதுவே நம் உயிர்க்கு உலை வைத்து விடும். அளவுக்கு அதிகமான தீயைப் போல.

நல்லது என்று தான் கைப் பேசி,  laptop எல்லாம் வாங்கித் தருகிறோம். அதுவே தீமையாக  மாறிப் போய் விடுகிறது.

பிள்ளைகளோடு பேச முடிவதில்லை. உறவினர்கள் வந்தால் பேசி சிரித்து மகிழ முடியவில்லை.

அது போகட்டும்.

அது என்ன "தீயினும்" என்ற சொல்லில் ஒரு 'ம்' .

தீயைவிட என்று ஏன் சொன்னார் ?

தீ தொட்டவுடன் சுடும். விலகினால் சுடாது.

ஆனால், தீயவையோ, தொடும் போதும் சுடும். விட்டு விலகிய பின்னும் சுடும், . வருத்தும். அதனால், தீயினும்.

தீ தொட்டவர்களை மட்டும் தான் சுடும். தீயவையோ, சுற்றுப் புறம், அக்கம் பக்கம், குடும்பம், நட்பு என்று எல்லோரையும் சுடும்.

என் வீட்டில் தீ பிடித்தால் அது என் வீட்டை மட்டும் எரிக்காது. மேல் வீடு, கீழ் வீடு என்று அந்த மொத்தம் அபார்ட்மெண்ட் ஏ எரிந்து சாம்பலாகும். அவர்களுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும்  கிடையாது. இருந்தும், என் வீட்டில் பிடித்த  தீ அவர்களையும் எரிக்கும். நம் தீமைகள் நம் அண்டை அயலாரை மட்டும் அல்ல, வெகு தூரத்தில் உள்ளவர்களையும் சுடும்.

தீ தொடுகின்ற நேரத்தில் சுடும். எரிக்கும். தீயவையோ , காலம் கடந்து வந்தும் சுடும். என்றோ செய்த பாவம், பின்னாளில் வந்து சுடும்.

தீயவை என்ற பட்டியலில் எதெல்லாம் வரும் என்று யோசித்துப் பார்போம்.

தீயவர்கள், தீய பழக்கங்கள் (பொறாமை, சோம்பேறித்தனம், மறதி போன்றவை) , தீய பொருள்கள் (மது, சிகரெட், போதைப் பொருள்கள்  போன்றவை)...இவை எல்லாம் தீயவையில் வரும்.

அது நமக்குத் தெளிவாகத் தெரியும்.

சிக்கல் என்ன என்றால், நல்லவை, ஒரு அளவைத் தாண்டும் போது தீயவையாக  மாறிவிடும். எந்த அளவு என்பதில் தான் சிக்கல். அளவைத் தாண்டி விட்டால் அவை தீயவை.

உணவு, ஓய்வு, டிவி, செல் போன், தூக்கம், நண்பர்களோடு அளவளாவுதல் போன்றவை ஒரு கட்டுக்குள் இருந்தால் நல்லவை, அளவு தாண்டினால் தீயவை.

நல்லவை , அவற்றின் அளவைத் தாண்டும் போது , அவற்றையும் தீயவை பட்டியலில் சேர்க்க வேண்டும்.

"அஞ்சப் படும்" என்றார். விலக்கப்படும் என்று சொல்லி இருக்கலாம்.

அஞ்ச வேண்டும்.

அளவுக்கு அதிகமாக உண்பதற்கு அச்சப் பட வேண்டும். பயப்பட வேண்டும். ஐஸ் கிரீம், காரட் அல்வா, என்றால் ஆசைப் படக் கூடாது. அச்சப் பட வேண்டும்.

Whatsapp ஐ கண்டு அஞ்ச வேண்டும். ஐயோ, என் பொன்னான நேரம் எல்லாம் வீணாக்கி விடுமே என்று அஞ்ச வேண்டும்.

வள்ளுவர் காலத்தில் டிவி யும், whatsapp ம் கிடையாது தான். இருந்தும், குறள் என்றும் நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறது. கலங்கரை விளக்காக.

ஆழ்ந்து சிந்தியுங்கள். அசைப் போட்டுப் பாருங்கள். தீயவற்றை விலக்குங்கள். வாழ்வு வசப்படும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_29.html

Friday, May 25, 2018

திருக்குறள் - பாவ மன்னிப்பே இல்லாத பாவம்

திருக்குறள் - பாவ மன்னிப்பே இல்லாத பாவம் 


பாடல்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

பொருள்

எந்நன்றி = எந்த நன்றியை, எந்த அறங்களை

கொன்றார்க்கும் = கெடுத்தவர்களுக்கும்

உய்வுண்டாம் = அந்த பாவத்தில் இருந்து விடுபட வழி உண்டு

உய்வில்லை = உய்வில்லை, வழி இல்லை

செய்ந்நன்றி = ஒருவர் தனக்கு செய்த நன்றியை

கொன்ற மகற்கு = சிதைத்த மக்களுக்கு

ஒருவர் நமக்குச் செய்த நன்மைகளை மறந்தர்வகளுக்கு ஒரு காலும் அந்தப் பாவத்தில் இருந்து விடு பட வழி இல்லை என்கிறார் வள்ளுவர்.

உலகில் எவ்வளவோ பெரிய பெரிய பாவங்கள் இருக்கின்றன. கொலை , கொள்ளை, கற்பழிப்பு, சூது, துரோகம், சூறையாடல், என்று ஆயிரக்கணக்கில் குற்றங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டு, இந்த நன்றி மறந்ததை மட்டும் வள்ளுவர் ஏன் இவ்வளவு பெரிதாகக் கொள்கிறார் ?

பசுவின் முலையை அறுத்தவர், பெண்ணின் கருவை சிதைத்தவர், ஆசிரியரை கொன்றவர் என்றெல்லாம் பெரிய கொடுமையான குற்றங்கள் இருக்கும் போது , நன்றி மறப்பது என்ன பெரிய குற்றமா ? ஏதோ மறந்து விட்டது. அந்த பாவத்துக்கு ஒரு வடிகாலே இல்லை என்கிறார் வள்ளுவர்.

ஏன் ?

நம்மைச் சுற்றிப் பார்ப்போம். என்ன நிகழ்கிறது என்று.

பிள்ளைகள் , பெற்றோரின் துன்பங்களை, தியாகங்களை மதிப்பது இல்லை. "என்ன பெரிதாகச் செய்து விட்டீர்கள். உலகத்தில் இல்லாத ஒன்றையா செய்து விட்டீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கடமை. நானா உங்களை பெறச் சொன்னேன் ?" என்றெல்லாம் பேசுகிறார்கள். ஊன் மறந்து , உறக்கம் மறந்து, தங்கள் இன்பங்களை எல்லாம் தியாகம் செய்த பெற்றோரிடம் ஒரு நன்றி பாராட்டுதல் இல்லை.

மாணவர்கள், ஆசிரியர்களை கேலி செய்கிறார்கள், கேலிப் பெயர் வைத்து அழைக்கிறார்கள். "என்ன பெரிய ஆசிரியர். ஒரு வாரம் கொடுத்தால் அவரை விட நான் அதிகம் தெரிந்து கொள்வேன். இன்டர்நெட்டில் போனால் எல்லாம் கிடைக்கும். மேலும் அவர் என்ன இலவசமாகவா சொல்லித் தருகிறார். பீஸ் கட்டுறோம் இல்ல..." என்று பேசுகிறார்கள்.கல்விக் கண் திறந்த ஆசிரியர்கள் பால் ஒரு நன்றி இல்லை.

நோயாளிகள், மருத்துவரை மதிப்பது இல்லை. கேலி பேசுகிறார்கள். மட்டம் தட்டுகிறார்கள். வலி போக்கி, உயிர் காக்கும் மருத்துவர் மேல் ஒரு நன்றி கிடையாது.

தொழிலாளிகள், மேலதிகாரியை மதிப்பது இல்லை, வேலை செய்யும் நிறுவனத்தை மதிப்பது இல்லை. வேலை தந்து, சம்பளம் தந்து, சமூகத்தில் ஒரு மதிப்பு தந்த நிறுவனம் அதன் அதிக்கரிகளிடம் ஒரு நன்றி பாராட்டுதல் கிடையாது.

பொது மக்கள் அரசாங்கத்தை, அரசு அதிகாரிகள் செய்யும் நன்மைகளை நினைத்துப் பார்ப்பது இல்லை.

கணவன் செய்த நன்மைகளை மனைவி நினைப்பது இல்லை. மனைவி செய்த நன்மைகளை கணவன் நினைப்பது இல்லை.

இப்படி ஒரு சமுதாயமே, ஒரு நாடே நன்றி மறந்து இருந்தால் என்ன ஆகும்.

பெற்றோருக்கு பிள்ளைகள் மேல் உள்ள பாசம் போகும். ஆசிரியருக்கு, மாணவன் மேல் உள்ள அபிமானம் போகும். நோயாளி என்ன ஆனால் என்ன, எனக்கு வர வேண்டிய வருமானம் வந்தால் போதும் என்று மருத்துவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள், தொழிலாளியை நசுக்கி இலாபம் சம்பாதிக்கலாம் என்று முதலாளிகள் நினைக்கிறார்கள்.

இந்தப் பட்டியல் மிக நீளமானது.

ஒரு சமுதாயமே சிதைந்து போகும். யாருக்கும் யார்  மேலும் ஒரு நன்றி இருக்காது.  நன்றி அறிதல் இல்லை என்றால், செய்த உதவிக்கு கை மாறு செய்ய வேண்டும் என்று தோன்றாது.

ஒரு காட்டுமிராண்டி கூட்டம் உருவாகும்.

ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு இது இன்னும் மோசமாக  பரவும்.

உணவு தரும் விவசாயி, ஆடை தரும் நெசவாளி, ஆசிரியர், மருத்துவர், பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர், உறவினர், என்று எல்லோரிடமும் நன்றி பாராட்டி வாழ்ந்தால் வீடும், நாடும் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று  நினைத்துப் பாருங்கள்.

எனவேதான், நன்றி மறப்பதை பெரிய பாவமாக சொல்கிறார் வள்ளுவர்.

யாரெல்லாம் நமக்கு நன்மை செய்தார்கள் என்று நினைத்துப் பார்ப்போம். அந்த நன்மைகளை மறக்காமல் இருப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_25.html

Tuesday, January 16, 2018

திருக்குறள் - பின் நோக்காச் சொல்

திருக்குறள் - பின் நோக்காச் சொல் 


புறங்கூறாமை.

ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது தவறாகப் பேசுவது. அது கூடாது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்இன்று பின்நோக்காச் சொல் 

பொருள்

கண்நின்று = கண் முன்னால் நின்று

கண்ணறச் = கண் அற . கருணை இல்லாமல் சுடு சொல்

சொல்லினும் = சொன்னாலும்

சொல்லற்க  = சொல்லாமல் இருக்க

முன்இன்று = முன்னின்று

பின்நோக்காச் = பின்னால் நோக்க முடியாத

சொல் = சொல்லை

முன் பாதி புரிகிறது.

கண்நின்று கண்ணறச் சொல்லினும்

அது சரி. அது என்ன

முன்இன்று பின்நோக்காச் சொல் ?

முன்னால் சென்ற பின் , அவன் பின்னால் சொல்லக் கூடாது என்று பொருள் சொல்லலாம். ஆனால், "நோக்கா" என்ற சொல் இடிக்கிறது.

நாம் மற்றவர்களைப் பற்றி பிறரிடம் பேசும் போது , ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் இப்போது சொல்வதை , அந்த குறிப்பிட்ட நபரின் முன்னால் சொல்லுவோமா என்று. சொல்ல முடியாது என்றால், அந்த விஷயத்தை வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.

அவரின் முன் நின்று , பின்னால் ஒரு நாளில் சொல்லுவோமா ? இது ஒரு பொருள்.

நாம் ஒருவரை பற்றி மற்றவரிடம் ஏதோ சொல்லி விடுகிறோம். அந்த விஷயம் எப்படியோ கசிந்து கசிந்து அந்த குறிப்பிட்ட நபரின் காதுகளுக்கு சென்று அடைந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

நாம் தான் அதை சொன்னோம் என்பது அவருக்கு தெரிந்து விட்டது. அவருக்கு தெரிந்து விட்டது என்று நமக்கும் தெரிந்து விட்டது.

அதற்குப் பின்னால், அவரை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடியுமா ?

அவர் முன் நின்று , பின்னாளில் முகம் பார்த்து பேச முடியுமா ?

முன்னின்று பின்நோக்கா சொல். பின்னடையக் கூடாது.

 எனவே,ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசும் போது , பேசும் விஷயத்தை அந்த குறிப்பிட்ட நபரின் முகத்துக்கு நேரே கூற முடியுமா ? என்று சிந்திக்க வேண்டும்.

ஒருவேளை நாம் இரகசியமாக சொல்வது அவர் காதுக்குப் போய் சேர்ந்து விட்டால், நாம் அவர் முகத்தில் விழிக்க முடியுமா என்றும் சிந்திக்க வேண்டும்.

இந்த இரண்டு கேள்விக்கும் முடியும் என்று பதில் சொல்ல முடிந்தால் அதைப் பற்றி பேசலாம். இல்லை என்றால் பேசக் கூடாது.

பேசப்படும் விஷயம் உண்மையா பொய்யா எனப்பதல்ல கேள்வி.

அவர் முன்னால் அதை சொல்ல முடியுமா என்பதுதான் கேள்வி.

பொதுவாக , ஒருவரின் குறையை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. அவர்களின் சிறப்பை  மற்றவர்களிடம் சொல்லலாம்.

சிலரை நம்பி நாம் எதையாவது சொல்லுவோம். அவர்கள் , யாரிடம் அதை சொல்லக் கூடாதோ அவர்களிடம் போய் சொல்லி நம்மை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவார்கள். பல உறவுகள் இதனால் முறிந்தது உண்டு. நாள் வாய்ப்புகள் கை நழுவிப்  போனது உண்டு.

மற்றவர்களைப் பற்றி நல்லதையே பேச வேண்டும்.

நல்லது அல்லாததை அவர்கள் முன் , அவர்களிடம் கூற வேண்டும். அதை கூட வள்ளுவர் எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்.

கண்நின்று கண்ணறச் சொல்லினும்

கண்ணற என்றால் கண்ணோட்டம் இல்லாமல் என்று அர்த்தம். கண்ணோட்டம் என்றால் கருணை, இரக்கம் , அன்பு என்று பொருள். அன்பில்லாத சொற்களை சொல்லக் கூடாது.

அப்படியே சொல்ல வேண்டி வந்தால் ....என்று சொல்ல வந்தார் ...

"சொல்லினும்" என்று ஒரு ' ம் ' சேர்க்கிறார்.

சொன்னால் கூட என்ற அர்த்தத்தில்.

கருணை இல்லாத சொற்களை சொன்னால் கூட, முன்னின்று பின் நோக்காச் சொல்லை சொல்லக் கூடாது.

எதைச் சொல்லலாம் என்றால், கண்ணோட்டம் உள்ள சொற்களை கூறலாம்.

மற்றவர்கள் மேல் கருணை கொண்டு, அன்பு கொண்ட நல்ல வார்த்தைகளை மட்டுமே கூற வேண்டும்.

இனிமேல் வேறு யாரையாவது பற்றி பேச வேண்டும் என்றால், இந்தக் குறளை சிந்தித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_62.html


Tuesday, June 20, 2017

திருக்குறள் - கடினமான காரியம் ஒன்றும் இல்லை

திருக்குறள் - கடினமான காரியம் ஒன்றும் இல்லை 


கடினமான காரியம் என்று ஒன்று உள்ளதா ? கருவியோடு காலம் அறிந்து செய்தால் என்று கேட்கிறார் வள்ளுவர்.


பாடல்

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

பொருள்

அருவினை = கடினமான செயல், பெரிய செயல்

என்ப  =  என்று (ஒன்று)

உளவோ = உள்ளதா ?

கருவியான் = கருவியை உடையவன்

காலம் = காலம்

அறிந்து செயின் = அறிந்து செய்தால்


எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க இரண்டு இன்றியமையாதது - ஒன்று தகுந்த கருவிகள். மற்றொன்று செய்யத் தகுந்த காலம். 

காலம் என்பதற்கு தகுந்த காலம் என்று பொருள் சொல்லப் படுகிறது. ஒரு அரசன், தகுந்த காலத்தில் காரியத்தை செய்ய வேண்டும் என்பது பொதுப் பொருள். 

காலத்தை நாம் வேறு விதமாக பார்க்கலாம்.

எந்தக் காலத்தில் செய்ய வேண்டும் என்பது ஒரு பொருள். எவ்வளவு காலம் ஆகும் என்று அறிந்து செயல் பட வேண்டும். 

சில மாணவர்கள், தேர்வுக்கு சில நாள் முன்னால் படிக்கத் தொடங்குவார்கள். இரண்டு அல்லது மூணு நாளில் மொத்த புத்தகத்தையும் படித்து முடித்து விடலாம் என்று காலத்தை தவறாக எடை போடுவார்கள். நன்றாக படிக்கும் மாணவர்கள்  ஆரம்பத்தில் இருந்தே தினம் கொஞ்சம் கொஞ்சம் படித்துக் கொண்டே வருவார்கள். அவர்களுக்குத் தெரியும் உயர்ந்த மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு காலம் , நேரம் படிக்க வேண்டும் என்று. 

அதே போல் விளையாட்டுத் துறை என்று எதை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் வெற்றி பெற எவ்வளவு காலம் வேண்டும் என்று அறிந்து கொண்டு செயல் படவேண்டும். 

கருவியான் காலம் அறிந்து செயின்.....

சில காரியங்களை கருவி இல்லாமல் செய்தால் காலம் அதிகம் ஆகும். 

உதாரணமாக, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நடந்தே போவது என்றால்  காலம் அதிகம் ஆகும். பேருந்து, கார், ஆகாய விமானம் என்ற கருவியின் துணை கொண்டு செய்தால் காலம் மிச்சப்படும். 

எந்த கருவியை உபயோகப் படுத்தலாம், எந்த காலத்தில் செய்யலாம், எவ்வளவு காலம் ஆகும் என்று அறிந்து செயல் படவேண்டும்.

அது மட்டும் அல்ல, ஒவ்வொரு செயலும் , சரியானபடி முடிய ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும். 

சரியான காலம் பார்த்து விதை விதைத்து விட்டோம் என்பதற்காக அந்த விதை உடனே முளைத்து காய் கனி தராது. அது வளர்ந்து பலன் தர காலம் ஆகும். 

உருவத்தால் பருத்து உயர்ந்த மரங்களாயினும் , பருவத்தால் அன்றி பழா . 

அவசரப்பட்டால் வெற்றி கிடைக்காது. 

குழந்தை பத்து மாதம் தாயின் கருவில் இருந்தால்தான் அது ஆரோக்கியமாக பிறக்கும். குறை பிரசவம் என்றால் ஆரோக்கிய குறைவுதான். 

அவசரப் படக்கூடாது. 

சிலர் உடற்பயிற்சி கூடத்திற்கு (gym ) இரண்டு நாள் போவார்கள். மூன்றாம் நாள் எடை குறையவில்லை, தசைகள் நல்ல வடிவில் வரவில்லை என்று நிறுத்தி விடுவார்கள். இது எல்லாம் வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று. 

எனவே,

காலம் என்பது 

- எப்போது செய்ய வேண்டும் என்று அறிவது 
- எவ்வளவு காலம் தேவை என்று அறிவது 
- பலன் கிடைக்க எவ்வளவு காலம் என்று அறிவது 

நல்ல கருவிகள் காலத்தை மிச்சப் படுத்த உதவும். அதையும் அறிந்து செயல் பட வேண்டும். 

ஒரு காரியத்தை மற்றவர்களை விட முன்னால் செய்து முடிக்க வேண்டும் என்றால் எந்த மாதிரி கருவி வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும். 

கருவி இருந்தால் மட்டும் போதாது, அதை சரியான முறையில் கையாளவும் தெரிய வேண்டும். 

ஓட்ட தெரியாமல் கார் வைத்திருந்து என்ன பலன். 


கருவி என்பதை இயந்திரம் என்று மட்டும் கொள்ளாமல் தொழில் நுட்பம் (டெக்னாலஜி) என்று கொள்ள வேண்டும். 

ஒரு காரியத்தை செய்யத் தொடங்கும் முன், எந்த மாதிரி கருவிகள் வேண்டும், எவ்வளவு காலம் வேண்டும், என்று அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்தானே ?











 




Sunday, March 26, 2017

திருக்குறள் - பெண்ணின் காமம்

திருக்குறள் - பெண்ணின் காமம் 


பெண்ணிற்கு காமம் உண்டா ? அவளுக்கும் கூடலில் ஆசை இருக்குமா ? பெண்கள் அதை பெரிதாக வெளிப்படுத்துவது இல்லை. எனவே இந்த சந்தேகம் ஆண்கள் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது.

மனைவி மேல் சந்தேகம் , வருத்தம். "அவளுக்கு என் மேல் ஆசை இல்லை" என்ற முடிவுக்கு வந்து விடுகிறான். அந்த குழப்பத்தில் வேறு இடத்தில் அவன் மனம் செல்கிறது.

பெண் தன்னுடைய காமம் பற்றி வெளிப்படையாக பேசுவதோ அல்லது வேறு விதத்தில் வெளிப்படுத்துவதோ இல்லை.

பெண் கவிஞர்களோ, பெண் எழுத்தாளர்களோ கூட இதைப் பற்றி ஆழமாக எழுதுவது இல்லை.

வள்ளுவர் தெளிவு படுத்துகிறார்.

அந்தக் காலத்தில் ஒரு பெண் மேல் ஒரு ஆடவனுக்கு காதல் வந்த பின், அந்த பெண்ணின் பெற்றோர் அந்த காதலை எதிர்த்தால், அந்த பையன் மடல் ஊர்வான்.

மடல்  ஊர்தல் என்றால் என்ன ?

எந்த பெண்ணை காதலிக்கிறானோ, அந்த பெண்ணின் உருவத்தை ஒரு கொடியில் வரைந்து கொள்வான். இந்த காலம் போல போட்டோ எல்லாம் இல்லாத காலம்.

பனை மரத்தின் குருக்குகளை கொண்டு ஒரு குதிரை செய்து கொள்வான். அந்த குதிரை மேல் ஏறி அமர்ந்து கொண்டு , அந்த கொடியை கையில் பிடித்துக் கொள்வான். அந்த உள்ளில் உள்ள சிறு பையன்கள், அவனுடைய நண்பர்கள் எல்லாம் அந்த குதிரையை ஊருக்குள் இழுத்துக் கொண்டு செல்வார்கள்.

அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்து, ஊர் மக்கள்  , சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் பேசி, அவர்களை திருமணத்துக்கு  சம்மதிக்க வைப்பார்கள்.

இதற்கு மடல் ஊர்தல் என்று பெயர்.

காதலன் சொல்கிறான் "கடல் போல காமம் இருந்தும் மடல் ஏறாத பெண்ணனை விட பெருமையானது எது" என்கிறார்.

பாடல்

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணில் பெருந்தக்கது இல்.


பொருள்

கடல் அன்ன = கடல் போல

காமம் =காமம்

உழந்தும் = விருத்தியும்

மடல் ஏறாப் = மடல் ஏறாமல் இருக்கும்

பெண்ணில் = பெண்ணைவிட

பெருந்தக்கது இல் = பெருமை உடையது ஒன்றும் இல்லை



பெண்ணுக்கு காமம் உண்டு என்று சொல்லிவிட்டார் வள்ளுவர்.

அவ்வளவுதானா ?

இல்லை. குறளில் நுணுக்கமாக சில விஷயங்களை சொல்கிறார்.

கடல் அன்ன .....கடல் போன்ற காமம்.  பெண்ணின் காமம் மிகப் பெரியது. உலகில் மிகப்  பெரியது எது என்று பார்த்தார் வள்ளுவர். மலை போல பெரியது என்று சொல்லலாம். ஆனால், மூன்றில் இரண்டு பங்கு கடல் தான். எனவே, கடலைப் போல பெரியது என்றார். பெண்ணின் காமத்தின் முன்னால்  ஆணின் காமம் ரொம்ப சிறியதாகி விடுகிறது. கடலுக்கும், நிலத்துக்கும் உள்ள விகிதம்.

இரண்டாவது, நிலம் அங்கொன்றும் , இங்கொன்றுமாக இருக்கும். ஒன்று கொஞ்சம் பெரிதாக இருக்கும், இன்னொன்று ஒரு குட்டி தீவாக இருக்கும். கடல் அப்படி  அல்ல. தொடர்ந்து இருப்பது. இடை வெளி இல்லாமல் பரந்து பட்டது. ஆணின் காமம் வரும், போகும். சிறிது நேரம் இருக்கும், அப்புறம் காணாமல் போய் விடும். பெண்ணின் காமம் நிலைத்து நீண்டு கிடப்பது.

மூன்றாவது, கடலின் ஆழம் யார்க்கும் தெரியாது. மேலே பார்க்க எங்கும் சமமாக இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஆயிரம் மேடு பள்ளங்கள் இருக்கும். வெளியே  தெரியாது. பெண்ணின் காமமும் அப்படித்தான், வெளியே ஒன்றும் தெரியாது. ஆயிரம் இரகசியங்களை உள்ளடக்கியது அது.

நான்காவது, கடல் பௌர்ணமி போன்ற தினங்களில் பொங்கும். மற்ற நாட்களில்  அமைதியாக இருக்கும். அது போல பெண்ணின் காமம் தருணம் பார்த்து வெளிப்படும். மற்ற நேரங்களில் ஒன்றும் இல்லாதது போல இருக்கும்.

ஐந்தாவது, கடலுக்குள் முத்து இருக்கும், பவளம் இருக்கும், ஆயிரம் விலை மதிக்க முடியாத செல்வங்கள் இருக்கும். ஆனால், கடல் அதை எல்லாம் கொண்டு வந்து கரையில் கொட்டி விடுவது கிடையாது. அது போல பெண்ணும் தன் காமத்தை மறைந்து வைத்து இருக்கிறாள்.

உழந்தும் ...வருத்தம் தந்தும். காமம் அவளுக்கும் சங்கடம் தான். வருத்தம் இல்லாமல்  இல்லை. அவளையும் அது படுத்துகிறது என்கிறார் வள்ளுவர்.


சரி , பெண் அப்படி இருக்கிறாளே, அது சரிதானா ? வாய விட்டு சொன்னா என்ன ? என்று ஆண் தவிக்கிறான். ஆனால், அப்படி சொல்லாமல் இருப்பதுதான்  மிகப் பெரிய பெருமை என்கிறார் வள்ளுவர்.

அப்படி என்றால், ஒரு பெண் தன் காமத்தை தானே சொல்லுவது அல்லது வெளிப்படுத்துவது என்பது  சிறுமை என்கிறார்.

காமத்தை அடக்க முடியாதுதான். இருந்தும், அதையும் அடக்கி, ஏதோ ஒண்ணும் இல்லாதது போல  இருப்பதுதான் பெண்ணின் பெருமை என்கிறார்.

இன்னும் சொல்லப் போனால், அதை விட பெரிய பெருமை வேறு எதுவும் இல்லை என்று முடிக்கிறார்.

பெருந்தக்கது இல் என்கிறார். கடல் போல காமம் வந்து வருத்தினாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் பெண்மையை போல பெருமை உடையது எதுவும் இல்லை என்கிறார்.

பெண் காதலை, காமத்தை சொல்லவில்லையே என்று ஆண்கள் வருந்தக் கூடாது. அது அவளின் இயற்கை. அது அவளின் பெருமை. அவளை கொண்டாடுவோம்.


Friday, September 30, 2016

திருக்குறள் - உதவியின் அளவு

திருக்குறள் - உதவியின் அளவு 


பாடல்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

பொருள்

தினைத்துணை = தினை அளவு

நன்றி = நல்லது

செயினும் = செய்தாலும்

பனைத்துணையாக் = பனை அளவாகக்

கொள்வர் = கருதுவார்கள்

பயன்தெரி வார் = அந்த உதவியின் பயனை அடைந்தவர்கள்

ஒரு சிறு உதவி செய்தால் கூட, அதை பெரிதாக நினைப்பார்கள் அந்த உதவி அடைந்தவர்கள் என்பது பொருள்.


அவ்வளவுதானா ? அல்லது இதற்கு மேலும் இருக்கிறதா ?

சிந்திப்போம்.

பெரிய அளவு என்று சொல்வதற்கு ஏன் பனையை சொல்கிறார் வள்ளுவர் ? பனை மரத்தை விட தென்னை மரம் உயரமாக வளரக் கூடியது.   பனை மரத்தை விட உயரமானவை வேறு எவ்வளவோ இருக்கின்றன. கோபுரம் என்று சொல்லி இருக்கலாம், வான் அளவு என்று சொல்லி இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டு ஏன் பனை மரத்தை  சொல்கிறார் ?

தென்னை மரம் போன்றவை உயரமாக வளரும். அதிக பலன் தரும். அதன்  தேங்காய், இளநீர், தென்னை மட்டை போன்றவை நமக்கு நிறைய  பயன் பாடு உள்ளவை தான். பனை மரத்தில் இருந்து நுங்கு கிடைக்கும். பனை மட்டை அவ்வளவு சிறப்பானது அல்ல. மேலும் பனை மரம்  தென்னை மரத்தைப் போல பழுத்த மட்டைகளை ஒவ்வொரு வருடம்  உதிர்ப்பது இல்லை.

பின் ஏன் பனை மரம் ?

காரணம் இருக்கிறது.

தென்னை மரத்துக்கு நிறைய நீர் விட வேண்டும். பலன் அதிகம் என்றாலும்  அதற்கு நிறைய நீர் தேவை. நீர் அதிகம் உள்ள கடற்கரை அல்லது  கழிவு நீர் போகும் இடம் என்ற இடங்களில் தான் தென்னை வளரும்.  அது மட்டும் அல்ல, அதற்கு தென்னங்கன்றுகளை நட்டு, அதை மண்ணோடு இன்னொரு இடத்துக்கு மாற்றி, அந்த இடத்தில் குழி தோண்டி, உப்பிட்டு, உரம் இட்டு  நிறைய வேலை செய்ய வேண்டும்.

பனை அப்படி இல்லை.  பனங் கொட்டையை சும்மா அப்படி தூக்கிப் போட்டு, கொஞ்சம் மண்ணை போட்டு மூடினால் போதும். எந்த  கரடு முரடான இடத்திலும் வளரும். வெகு சொற்பமான மழை போதும்.  மிகக் குறைந்த உதவியில் அதிகம் பலன் தருவது பனை.

கொஞ்சம் உதவி செய்தாலும் அதிக பலன் தருவது பனை. எனவேதான் பனை அளவு என்றார்.

மேலும்,

ஒரு குவளை நீர் என்ன மதிப்பு இருக்கும் ? ஒரு பாட்டில் மினரல் நீர்   இருப்பது முப்பது  ரூபாய் இருக்கும்.  அவ்வளவுதானே ?

ஒரு பாலைவனத்தில் நீங்கள் சிக்கி கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  வெயில் சுட்டு பொசுக்குகிறது. கால் சுடுகிறது. நாக்கு வறள்கிறது.  கொஞ்சம் தண்ணீர் வேண்டும். அந்த சமயத்தில் ஒரு குவளை  நீருக்கு நீங்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் ? உங்கள் சொத்து முழுவதையும்  தரச் சொன்னாலும் தந்து விடுவீர்கள் அல்லவா ?

உதவி என்பது உதவியின் அளவைப் பொறுத்தது அல்ல. அந்த பயனை பெற்றவர்களைப்  பொறுத்தது.

எனவே தான் வள்ளுவர்  "பயன் தெரிவார்" என்றார்.

அது மட்டும் அல்ல, சில உதவிகள் அந்த நேரத்துக்கான உதவியாக இருக்கும். சில உதவிகள் காலம் பூராவும் கூடவே வரும்.

ஒரு ஏழை மாணவனுக்கு பள்ளிக் கூட கட்டணம் காட்டினால் அவன் தொடர்ந்து படிக்க முடியும். அவன் படித்து , பெரிய ஆளாகி விடலாம். அவன் மூலம் இந்த உலகம் பல பலன்களை பெறலாம்.  அன்று அவனுக்கு  கட்டிய கட்டணம் தொடர்ந்து பல நல்ல பலன்களை தருகிறது. காட்டியது என்னவோ ஒரு வருட கட்டணம் தான்.  பலன் வாழ் நாள் பூராவும் வரும்.

ஒரு ஏழை பெண்ணுக்கு திருமணம் நடத்த உதவி செய்தல், சாகும் நிலையில் உள்ள ஒருவருக்கு இரத்தம் தந்து அவர் உயிரை காப்பாற்றுதல்  போன்ற உதவிகள், ஒரு முறை செய்தாலும், அதன்  தொடர் பலன்கள் வந்து கொண்டே இருக்கும்.

"பயன் தெரிவார்" பயனை தெரிந்து கொண்டவர்கள் சின்ன உதவியைக் கூட பெரிதாக நினைப்பார்கள்.


நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு சிறியதாக இருக்கலாம். அந்த
உதவியின் பயனை பெற்றவர்கள் அதை பெரிதாக நினைப்பார்கள். எனவே, சின்ன உதவி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். யாருக்குத் தெரியும், சூப்பிப் போட்டா பனங் கொட்டை பெரிய மரமாக வளர்ந்து பலன் தருவது போல, உங்களுடைய சின்ன உதவி எங்கேனும் பெரிய அளவில் பயன் தரும்.

சின்ன சின்ன உதவி என்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து செய்து கொண்டே  இருங்கள்.

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?









Sunday, November 30, 2014

திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ?

திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ?


எவ்வளவோ படிக்கிறோம் ? எதை  எதையோ   அறிந்து கொள்கிறோம். ? படித்து அறிவது. அனுபவத்தில் அறிவது என்று பல விதங்களில் அறிகிறோம்.

இவையெல்லாம் எதற்காக என்று வள்ளுவர் கேட்கிறார்.

படித்து என்ன செய்யப் போகிறாய் என்பது அவர் கேள்வி.

ஒன்றைச் செய்கிறோம் என்றால் அதற்கு ஒரு பயன் இருக்க வேண்டும். கல்வியின் பயன் என்ன ?

பாடல்

கற்றதனா லாய பயனென்கொல், வாலறிவ

னற்றா டொழாஅ ரெனின்.

சீர் பிரித்த பின்

கற்றதனால் ஆய  பயன் என் கொல், வாலறிவன் 
நற்றாள் தொழார் எனின் 

பொருள்

கற்றதனால் = படித்ததனால்

ஆய  பயன் என் கொல் = கிடைக்கும் பயன் என்ன ?

வாலறிவன் = இறைவன் 

நற்றாள் = நன்மை பயக்கும் திருவடிகளை

தொழார் எனின் = தொழவில்லை என்றால்

வள்ளுவர் இறைவனை  தொழுங்கள் என்று சொல்லவில்லை.

இறைவனை தொழவில்லை என்றால், கற்றதனால் ஆய பயன் என்ன என்ற கேள்வியை  நம் முன் வைக்கிறார்.

அதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதா ?

வாசிப்பதால் என்று சொல்லவில்லை. கற்றதனால் என்கிறார்.

இறைவன் திருவடிகளை தொழுவது என்பது கற்றதனால் வரும் ஒரு பயன்.

அது இல்லை என்றால், வேறு என்ன பயன் இருக்கிறது என்கிறார் ?

ஆணவங்களில் முதலாவது நிற்பது கல்வியினால் வரும் ஆணவம். வித்யா கர்வம் என்று   சொல்வார்கள்.

நாம் எல்லாம் அறிந்து விட்டோம். என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் இந்த உலகில் . எனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்ற கர்வம் வரும்.

அந்த கர்வம் அழிவுக்கு வழி வகுக்கும்.

இறைவனை தொழுவது ஆணவத்தை அழிக்கும்.

நம் அறிவை, ஏதோ மார்கத்தில் தூண்டிச் செலுத்துவது எது ? அந்தத் துறையில் நாம் வெற்றி பெறச் செய்வது எது ?

சிந்திக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் ?

சிந்திப்போம்.



 


Monday, October 13, 2014

திருக்குறள் - சொற்புத்தி, சுயபுத்தி

திருக்குறள்  - சொற்புத்தி, சுயபுத்தி 


வாழ்வில் வெற்றி பெற வள்ளுவர் எளிமையான வழியைச் சொல்கிறார்.

ஒண்ணு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுய புத்தி இருக்க வேண்டும்.

தனக்காக தெரிய வேண்டும்.  இல்லை என்றால் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு அதன் படி நடக்க வேண்டும்.

உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் போவார்கள். அவர் ஒரு மருந்தைத் தருவார். அதை ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது. தனக்கும் தெரியாது, மருத்துவர் சொன்னாலும் கேட்பது இல்லை.

உயர்ந்த நூல்களை படிக்க வேண்டியது. ஆனால் அதில் சொல்லி உள்ளது போல நடப்பது கிடையாது. குதர்க்கம் செய்ய வேண்டியது.

அப்படிப் பட்டவர்களின் உயிர் அவர்களின் உடலுக்கு நோய் என்கிறார் வள்ளுவர்.

எப்படி நோய் உடலை வருத்துமோ  அது போல அந்த மடையர்களுக்கு உயிர் இருக்கும் வரை  துன்பம்தான்.உயிரே துன்பம் தான்.

பாடல்

ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் 
போஒ மளவுமோர் நோய்.

சீர் பிரித்த பின்

வவும் செய்கலான் தான் தேரான் அவ் உயிர் 
போகும் அளவும் ஓர் நோய் 


பொருள்

ஏவவும் செய்கலான் = சொன்னதைச் செய்ய மாட்டான் 

தான் தேரான்  = அவனாகவும் தேர்ந்து அறிய மாட்டன்

அவ் உயிர் = அவன் உயிர்

போகும் அளவும் = உடலை விட்டு போகும் அளவும்

ஓர் நோய் = ஒரு நோய் போன்றதாகும்

நோய் உடலை வருத்தும். அது போல அறிவற்றகளின் உயிர் அவர்களை வருத்தும்.

நோய் யாரிடம் இருக்கிறதோ அவர்களை மட்டும் வருத்தாது. ஒருவரிடம் இருந்து  மற்றவர்களுக்கு பரவி அவர்களையும் வருத்தும். அது போல சொல் புத்தி, சுய புத்தி இரண்டும் இல்லாதவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பார்கள்.

இன்றும் இதை நாம் காண முடியும். முட்டாள்கள் எவ்வளவு துன்பத்தைத் தருகிறார்கள்.  தாங்கள் கெடுவது மட்டும் அல்ல. மற்றவர்களையும் கெடுத்து துன்பத்தை விதைக்கிறார்கள்.


முதலில் மற்றவர்கள் சொல்வதை கேட்டு செயல் பட வேண்டும். நாளடைவில் நமக்கே சொந்த அறிவு வர வேண்டும். எனவேதான் முதலில் சொல் புத்தியையும் பின் சுய புத்தியையும் சொன்னார் வள்ளுவர்.





Monday, August 18, 2014

திருக்குறள் - வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள் - வாழ்க்கைத் துணை நலம்


வாழ்க்கைத் துணை நலம் என்று மனைவியைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

இன்றுள்ள பெண்ணுரிமை போராட்டாக்காரர்கள் "அதெப்படி நாங்கள் என்ன துணை, கணவன் மட்டும் தான் main -ஆ" என்று கொடி பிடிக்கிறார்கள்.

உயர்ந்த நூல்களை படிக்கும் போது, நம் கீழ்மையை அதன் மேல் ஏற்றக் கூடாது. திருக்குறளை விட, திருவள்ளுவரை விட தாங்கள் அறிவில் மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வதால் வரும் வினைகள் இவை.

நாம் யாரைத் துணையாகக் கொள்வோம் ?

நம்மை விட பலசாலியையா அல்லது நம்மை விட பலவீனமானவனையா ?

துணை என்பது நம்மை விட சிறந்ததாக இருக்க  வேண்டும்.

துணையோடு அல்லது நெடு வழி போகேல் என்றாள் அவ்வைப்   பாட்டி. வாழ்க்கை நீண்ட பயணம். அதற்கு ஒரு நல்ல துணை வேண்டாமா ?

அபிராமி பட்டர் ஒரு படி மேலே போய் , துணை என்பது தெய்வம் என்கிறார்.

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்னுடைய துணை அபிராமி என்று அறிந்தேன் என்கிறார்.

பயந்த தனி வழிக்குத் துணை முருகனே என்கிறார் அருணகிரி நாதர்

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!


துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ என்பார் திருநாவுக்கரசர்.

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடை மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒன்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!

இப்படி , துணை என்பது நம்மை விட மிக மிக  உயர்ந்தது.

துணை என்பது தாழ்ந்தது அல்ல.

மனைவி எப்போது வாழ்க்கைத் துணையாவாள் என்றும் வள்ளுவர்  சொல்கிறார்.


மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

 சீர் பிரித்த பின்

மனைக்குத் தக்க மாண்பு உடையள் ஆகி தன்னைக் கொண்டான்
வளத்துக்கு தக்காள் வாழ்க்கைத் துணை

சீர் பிரித்த போது சற்று நீட்டியும் இருக்கிறேன், எளிதாகப் புரிந்து கொள்ள.

பொருள்

மனைக்குத் தக்க மாண்பு உடையள் ஆகி = வீட்டுக்கு ஏற்ற மாண்பு உடையவள் ஆகி

தன்னைக் கொண்டான் = தன்னை மணந்த கணவனின்

வளத்துக்கு தக்காள் = வளத்துக்கு தக்கபடி வாழ்பவள்

வாழ்க்கைத் துணை = வாழ்க்கைத் துணைவி



மனைக்குத் தக்க மாண்பு என்றால் என்ன ?

பரிமேல் அழகர் சொல்கிறார் - துறவிகளுக்கு  உதவுவது, ஏழைகளுக்கு அன்னம்  அளிப்பது,விருந்தினர்களை உபசரிப்பது  போன்றது.

இது எல்லாம்  நல்லதுதான். இருந்தாலும், அதற்க்கு என்று ஒரு அளவு வேண்டாமா ? இருக்கின்ற செல்வத்தை எல்லாம் அள்ளி வழங்கி விட்டு பின் எப்படி குடும்பம்  நடத்துவது ?

எனவே அடுத்த வரியில் சொல்கிறார்

கணவனின் வளத்துக்கு தக்கபடி வாழ வேண்டும் என்று.

வீடு வேணும், கார் வேணும், பங்களா வேணும், நகை நட்டு வேண்டும் என்று நச்சரிக்கக்  கூடாது.

வளம் என்றால் வருமானம் மட்டும் அல்ல - சொத்து, நல்ல  பெயர்,செல்வாக்கு என்று அனைத்தும் அதில்  அடங்கும்.

குடும்பத்தின் நல்ல பெயருக்கு களங்கம் வராமல், வருமானத்திற்கு அதிகாமாக செலவு  செய்யாமல், சொத்துக்கு அதிகமாக கடன் வாங்காமல்...வளத்துக்கு தக்க வாழ்பவள் வாழ்க்கைத் துணை.