Showing posts with label நந்தி கலம்பகம். Show all posts
Showing posts with label நந்தி கலம்பகம். Show all posts

Friday, July 27, 2012

நந்திக் கலம்பகம் - தழுவாத போது....


நந்திக் கலம்பகம் - தழுவாத போது....


அவளை விட்டு நீங்கினால் சுடுகிறது, அவ கிட்ட போனால் குளிர்கிறது..இந்த வினோத தீயை இவள் எங்கு பெற்றாள் என்று வியக்கிறார் வள்ளுவர்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள்?

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை விட்டு தனியே கானகம் போகிறேன் என்று சொல்கிறாயே, அந்த ஊழிக் கால தீ கூட உன் பிரிவை விட அதிகமாக சுடாது, "நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?" என்று பிரிவினால் வரும் சூட்டினை சொல்கிறார் கம்பர்.

பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."

நந்திக் கலம்பகத்தில் காதலனை பிரிந்த காதலி, பிரிவின் வெம்மையால் தவிக்கிறாள். அவள் தோழிகள் அவள் மேல் கொஞ்சம் குளிர்ந்த சந்தனத்தை எடுத்து பூசுகிறார்கள். அது என்னவோ அவளுக்கு தீயை அள்ளி பூசிய மாதிரி இருக்கிறதாம்.....

அந்த இனிய பாடல், உங்களுக்காக...

Thursday, July 26, 2012

நந்தி கலம்பகம் - ஓடும் மேகங்களே


நந்தி கலம்பகம் - ஓடும் மேகங்களே


அவன் போர் முடிந்து அவன் காதலியை தேடி வருகிறான்.

அவன் உயிர் எல்லாம், மனம் எல்லாம் அவளிடம் ஏற்கனவே சென்று அடைந்து விட்டது.

அவன் தேர் எவ்வளவு வேகமாக சென்றாலும், அவனுக்கு என்னவோ அது ஓடாமல் ஒரே இடத்தில் நிற்பது மாதிரியே தெரிகிறது.

அவ்வளவு அவசரம்.

மேலே பார்க்கிறான். மேகங்கள் வேகமாக செல்வது போல் தெரிகிறது.

நமக்கு முன்னால் இந்த மேகங்கள் சென்று விடும் போல் இருக்கிறது, இந்த மேகங்களிடம் நாம் வரும் சேதியையை சொல்லி அனுப்பலாம் என்று அவைகளிடம் சொல்கிறான் 

"ஏய், மேகங்களே, ஓடாத தேரில் , ஒரு உயிர் இல்லாத வெறும் உடம்பு மட்டும் வருகிறது என்று என் காதலியிடம் சொல்லுங்கள்" .

அப்புறம் யோசிக்கிறான்.

இந்த மேகங்கள் எங்கே அவளை கண்டு பிடிக்கப் போகின்றன. அதுகளுக்கு ஆயிரம் வேலை, நம்ம வேலயத்தானா செய்யப் போகின்றன என்று ஒரு சந்தேகம் ..."அவளைப் பார்த்தால் சொல்லுங்கள்" என்று முடிக்கிறான். 

அந்த இனிமையான பாடல்....

Monday, May 21, 2012

நந்திக் கலம்பகம் - மழைக் காலம்


நந்திக் கலம்பகம் - மழைக் காலம்


Balcony இல் உட்கார்ந்து வெளியே பார்க்கிறாள்.

அருகில் ஒரு பூங்கா.

மழை லேசாகப் பெய்கிறது.

பூங்காவில் உள்ள மலர்கள் எல்லாம் மழையில் குளித்து பளிச்சென்று இருக்கின்றன.

அங்கு ஒரு மயில் மழையில் நனைந்து தோகை ஈரமாகி, குளிரில் உடல் வெட வெடக்க நிற்கிறது.

அவளுடைய காதலனை நினைக்கிறாள்.

அவன் அருகில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஏங்குகிறாள்.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளை கடந்து நம் மனதில் மழை அடிக்கும் அந்தப் பாடல்....

Sunday, May 20, 2012

நந்தி கலம்பகம் - நெருப்பு நிலா


நந்தி கலம்பகம் - நெருப்பு நிலா


ஒரு நாள் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் (உ.வே.சா.) இரவு உணவு உண்ட பின் மாடியில் காற்றாட அமர்ந்திருந்தார்.

தூரத்தில் ஒரு பிச்சைக்காரன்

"ஊரைச் சுடுமோ, உலகம் தனை சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன்"

என்று பாடியது காதில் விழுந்தது.

அடுத்த வரி கேட்பதற்குள் அந்த பிச்சைக்காரன் வேறு தெருவுக்குள் நுழைந்து விட்டான்.

உ.வே. சா யோசிக்கிறார். எது ஊரையும், உலகையும் சுடும் என்று.

செய்த பாவமா ? எது என்று யோசித்தார். விடை கிடைக்கவில்லை.

சரி, அந்த பிச்சைக்காரனை தேடி கண்டு பிடிக்கலாம் என்று கிளம்பி விட்டார்.

அந்த பிச்சைக்காரன் பின்னால் தெரு தெருவாய் அலைந்தார்.

அந்த பிச்சைகாரனோ முதல் இரண்டு வரி தாண்டி பாடுவதாய் இல்லை.

நேரே அவனிடமே கேட்டு விட்டார்...அடுத்த இரண்டு வரிகளை பாடும்படி.

"பாட்டா...பசி உயிர் போகிறது என்றான் அந்த பிச்சைக்காரன்"

அவனுக்கு உணவு வாங்கித் தந்து அடுத்த இரண்டு வரியும் என்ன என்று குறித்துக்கொண்டு வந்தார்.

நந்தி கலம்பகத்தில் வரும் அந்த பாடல்....


காதலனை பிரிந்து தனித்து இருக்கிறாள் காதலி.

தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டிருக்கிறாள்.

நிலவைப் பார்க்கிறாள். அது கொதிக்கிறது.

இந்த நிலவு நம்மை மட்டும் தான் சுடுகிறதா இல்லை எல்லாரையும் சுடுகிறதா என்று யோசிக்கிறாள்...



ஊரைச் சுடுமோ உலகம் தனைச்சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன் -நேரே
பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த
நெருப்புவட்ட மான நிலா.

ஊரைச் சுடுமோ = இந்த ஊர் எல்லாம் சுடுமோ (என்றால் இந்த ஊரில் உள்ள எல்லோரையும் என்று பொருள்)

உலகம் தனைச்சுடுமோ = இந்த ஊர் மட்டும் அல்ல, உலகில் உள்ள எல்லோரையும் சுடுமோ?

யாரைச் சுடுமோ அறிகிலேன் = யார் யாரை எல்லாம் சுடுமோ, தெரியவில்லை

நேரே = நேரில் உள்ள இந்த நிலா

பொருப்பு = மலை முகடு, மலைத் தொடர்ச்சி போன்ற

வட்ட மானமுலைப் =

பூவையரே = பூவை சூடும் பெண்களே

இந்த நெருப்புவட்ட மான நிலா. = இந்த நெருப்பு வட்டமான நிலா


நந்தி கலம்பகம் - கலம்பகத்தில் நகைச்சுவை


நந்தி கலம்பகம் - கலம்பகத்தில் நகைச்சுவை

தமிழ் இலக்கியத்தில் மெல்லியதாக ஓடும் நகைச்சுவை உணர்வு நந்தி கலம்பகத்திலும் காணக் கிடைக்கிறது.

நந்தியின் அரசவையில் பாடும் ஒரு பாடகன் (பாணன் என்று குறிப்பிடுவார்கள்).

அவன் காதலியின் ஊடலைப் போக்க இரவெல்லாம் அவள் வீட்டு வாசலில் நின்று பாடுகிறான்.

அவள் அவனை லந்து பண்ணுகிறாள்.

"ஓ...நீ பாடினியா? எங்க அம்மா அது என்னவோ பேய் தான் அலறுகிறது என்றாள், அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் ஏதோ நரி ஊளையிடுகிறது என்றார்கள், என் தோழியோ நாய்தான் ஏதோ குறைக்கிறது என்றாள், அது எல்லாம் இருக்காது, நீ தான் பாடி இருப்பேன்னு நான் சொன்னேன்..."என்று அவனை கிண்டல் பண்ணுகிறாள்.

அந்த நகைச்சுவை ததும்பும் பாடல்....

நந்தி கலம்பகம் - எவ்விடம் செல்வோம்


நந்தி கலம்பகம் - எவ்விடம் செல்வோம்


கலம்பகம் என்பது பலவகை செய்யுள்களால் ஆன ஒரு பிரபந்தவகை.

பாடல் பெறும் தகுதியுள்ள ஒரு தலைவனைப் பற்றிப் பாடுவது மரபு.

50 இல் இருந்து 100 வரை செய்யுள்கள் அமைத்து பாடுவது வழக்கம்.

கலம்பகத்தில் எனக்குப் பிடித்தது நந்தி கலம்பகம்.

நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் எட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்து வந்தான்.

தமிழில் அறம் பாடுதல் என்று ஒன்று உண்டு.

பாட்டுடை தலைவன் மேல் அறம் வைத்து பாடினால், அதை கேட்ட உடன் அவன் இறந்து விடுவான் என்று ஒரு நம்பிக்கை.

நந்தி வர்மனின் எதிரிகள், நந்தியின் மேல் அறம் வைத்து பாட ஒரு புலவரை ஏற்பாடு செய்தார்கள்.

புலவனும், பணத்திற்கு ஆசைப் பட்டு, நந்தி வர்மன் மேல் அறம் வைத்துப் பாடினான்.

பாடிய பின், மனம் மாறி, தனக்கு பணம் கொடுத்தவர்களிடம் பாடல் எழுதவில்லை என்று சொல்லி விட்டான்.

அந்த புலவனுக்கு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது. ஒருநாள் அவளோடு தனித்து இருக்கும் போது நந்தி கலம்பகம் என்ற தான் எழுதிய நூலில் இருந்து சில பாடல்களை பாடினான்

கேட்ட மாத்திரத்தில் அந்த பெண்ணுக்கு சில பாடல்கள் மனப் பாடம் ஆகிவிட்டது.

ஒருநாள் அவள் தெரு வழியே போகும் போது அந்த பாடல்களை பாடிக் கொண்டே போனாள்.

அதை உப்பரிகையில் இருந்து கேட்ட நந்தி வர்மன் அந்த பாடல்களில் மயங்கி, அவளை அழைத்து அந்த பாடல்களின் வரலாறு கேட்டு அறிந்தான். 
அந்தப் புலவனை வரவழைத்தான்.

புலவனும் கண்ணீரோடு உண்மையை ஒப்புகொண்டான்.

நந்தி வர்மன், முழுப் பாடல்களையும் பாடும்படி கேட்டான்.

புலவன் மறுத்து, "மன்னா, இந்தப் பாடல்களை முழுதும் நீங்கள் கேட்டால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னான்.

நந்தி கேட்கவில்லை. இப்படி ஒரு அருமையான பாடல்களுக்காக உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லி அவனைப் பாடச் சொன்னான்.

நூறு பாடல்கள். புலவன் சொன்னான் "மன்னா, நூறு பந்தல்கள் அமையுங்கள். நான் ஒவ்வொரு பாடல் பாடும் போதும், நீங்கள் ஒரு பந்தலில் இருந்து கேட்க்க வேண்டும்....அப்படி நான் நூறாவது பாடல் பாடும் போது, நீங்கள் நூறாவது பந்தலில் இருந்து கேட்பீர்கள். நான் பாடி முடித்தவுடன், உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்றான்.

மன்னனும், சம்மதித்து ஒவ்வொரு பாடாலாய் கேட்டு கொண்டு வந்தான். நூறாவது பாடல் கேட்ட பின், அந்த பந்தல் திடீரென்று தீப் பிடித்து எரிந்து மன்னனும் சாம்பலாய் போனான் என்று ஒரு கதை நிலவுகிறது.

நந்தியின் எதிரிகள் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

தமிழிலில் இந்த கதையை பின்னணியாக வைத்து ஒரு சில வரலாற்று நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. (கோ. வி. மணிசேகரன் என்று ஞாபகம்)

தமிழ் சுவைக்காக உயிர் கொடுத்த அந்த நந்தி கலம்பகத்தில் இருந்து ஒரு பாடல்....