கம்ப இராமாயணம் - கூனி அறிமுகம்
முதன் முதலில் கூனி அறிமுகம் ஆகும் இடம்.
அவள் எப்படி தோன்றினாள் ?
இன்னல் செய்யும் இராவணன் இழைத்த தீமை போல் அவள் தோன்றினாள் என்பான் கம்பன்.
இராவணன் என்ற பாத்திரம் அவள் கூனி தோன்றும் இந்த இடம் வரை காப்பியத்தில் அறிமுகபடுத்த படவில்லை.
நேரடியாக சொல்லாவிட்டாலும், கம்பன் ஏதோ சூசகமாக சொல்வதாகப் படுகிறது.
அவன் செய்த தீமைகளுக்கு இணையாக இன்னொரு தீமை புறப்பட்டு விட்டது என்பது போல் ஒரு அர்த்தம் தொனிக்கிறது.
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல், தீமையை தீமையால் எடுக்க கம்பன் ஒரு அச்சாரம் தருவது போல இருக்கிறது.
அவள் எவ்வளவு கொடுமைக்காரி என்பதை நினைத்துக் கூட பார்க்க
முடியாதாம்...அவளளவு கொடுமைகளை மனத்தில் கொண்டவள்...