Showing posts with label puranaanooru. Show all posts
Showing posts with label puranaanooru. Show all posts

Wednesday, February 13, 2019

புறநானுறு - நரை முடி இல்லாமல் இருக்க

புறநானுறு - நரை முடி இல்லாமல் இருக்க 


நரை வந்தால் யாருக்குத்தான் பிடிக்கும்? முதல் நரை கண்டவுடன் நமக்கெல்லாம் தலையில் இடி விழுந்த மாதிரி இருக்கும். அதை யாருக்கும் தெரியாமல் பறித்து எறிந்து விடுவோம். அப்புறமும் அது வந்து கொண்டேதான் இருக்கும். நமக்கு வயதாவதை கட்டியம் கூறும் அது.

கம்பர் நரை முடிக்கு ஒரு பாடலே எழுதி இருக்கிறார். தசரதன் காதின் ஓரம் ஒரு நரை முடி கண்டான். மறு வினாடி , நாட்டை இராமனுக்கு கொடுத்து விட்டு கானகம் போக முடிவு செய்தான். கொஞ்சம் வெட்டி விடுவோம். கொஞ்சம் டை அடித்துக் கொள்வோம் என்று நினைக்கவில்லை. வயதாவதை நாம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பிசிராந்தையார் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு வயது ஆகிக் கொண்டே இருந்தது. இருந்தும், முடி நரைக்கவே இல்லை. அவரிடம் கேட்டார்கள், "எப்படி உங்களுக்கு மட்டும் முடி நரைக்கவே இல்லை" என்று.

அதற்கு அவர் சொன்னார் "என் மனைவியும் பிள்ளைகளும் மாண்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஊரில் உள்ள மற்றவர்களும், அரசனும் அறம் பிறழாமல் வாழ்கிறார்கள். அறிவு நிறைந்த சான்றோர் அடக்கத்துடன் இருக்கிறார்கள் என் ஊரில். எனவே எனக்கு முடி நரைக்கவில்லை" என்றார்

பாடல்

யாண்டுபல  வாக  நரையில  வாகுதல்
யாங்கா  கியரென  வினவுதி  ராயின்
மாண்டவென்  மனைவியொடு  மக்களு  நிரம்பினர்
யாண்கண்  டனையரென்  னிளையரும்  வேந்தனும்
அல்லவை  செய்யான்  காக்கு  மதன்றலை
ஆன்றவிந்  தடங்கிய  கொள்கைச்
சான்றோர்  பலர்யான்  வாழு  மூரே.

கொஞ்சம் கடினமான பாடல் தான்.

சீர் பிரித்தால் எளிமையாக இருக்கும்.

ஆண்டு  பலவாக நரை இல  ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான் கண்ட அனையர் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.


பொருள்

ஆண்டு = வருடங்கள்

பலவாக = பல கழிந்தாலும்

நரை இல = நரை இல்லாமல்

 ஆகுதல் = இருப்பது

யாங்கு = எப்படி

ஆகியர் = ஆகினாய்

என  = என்று

வினவுதிர் = கேட்பீர்கள்

ஆயின் = ஆனால்

மாண்ட = மாட்சிமை பொருந்திய

என் மனைவியோடு = என் மனைவியோடு

மக்களும் = பிள்ளைகளும்

நிரம்பினர் = நிரம்பி இருந்தனர். மாட்சிமை பொருந்தி விளங்கினார்கள்

யான் கண்ட = நான் பார்த்த

அனையர்  = அனைவரும்

இளையரும் = இளையவர்களும்

வேந்தனும் = அரசனும்

அல்லவை = நல்லது அல்லாததை

செய்யான் = செய்யாமல்

காக்க = காப்பாற்றி வந்தார்கள்

அதன்தலை = அது மட்டும் அல்ல

ஆன்று  = நிறைந்து

அவிந்து = பணிவுடன்

அடங்கிய = அடக்கமான

கொள்கைச் = கொள்கையை கொண்ட

சான்றோர் = பெரியவர்கள்

பலர் = பலர்

யான் வாழும் ஊரே = நான் வாழும் ஊரில் இருக்கிறார்கள்

எனவே எனக்கு வயதே ஆகவில்லை என்கிறார்.

மனிதனுக்கு கவலையால் வயதாகிறது.

சிறந்த மனைவி. நல்ல பிள்ளைகள். செங்கோல் செலுத்தும் அரசன். அடாவடி பண்ணாத  ஊர் மக்கள். நல்லதை எடுத்துச் சொல்லும் பெரியவர்கள் இருந்தால் ஏன் கவலை வருகிறது. ஏன் முதுமை வருகிறது.

நமக்கு முதுமை வந்திருக்கலாம். நம்மால் மற்றவர்களுக்கு முதுமை வராமல் இருக்க  என்ன செய்ய முடியும் என்று சிந்திப்போம்.

சிறந்த மனைவியாக, கணவனாக இருக்க முடியுமா ?

நல்ல பிள்ளையாக இருக்கும் முடியுமா ?

நாம் செய்யும் வேலையை (அரசன்) திறம்பட செய்ய முடியுமா ?

நாளும் அறிவைப் பெருக்கி நமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்வை வாழ முடியுமா ?

மண்டை கனம் இல்லாமல், அடக்கமாக இருக்க முடியுமா ?

என்று சிந்திப்போம்.

நல்லது தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_13.html


Saturday, May 27, 2017

புறநானுறு - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்

புறநானுறு - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்


வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் , அந்தப் பெற்றோருக்குத் தெரியும்....

என்னைக்கும் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போகிறவள் தானே, இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும் என்று அந்த பெண் பிள்ளைக்கு கொஞ்சம் அதிகமாகவே அன்பு காட்டுவார்கள். அதிலும் அப்பாக்கள் ரொம்பத் தான் செல்லம் கொடுப்பார்கள்.

ஒரு பக்கம் செல்லம் கொடுத்தாலும், அம்மாவுக்கு கொஞ்சம் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

போகிற இடத்தில் இந்த பெண் எப்படி சமாளிக்கப் போகிறாளோ ?  போகிற இடத்தில் இந்த சௌகரியம் எல்லாம் இருக்குமா ? இவ்வளவு சுதந்திரம் இருக்குமா ?  என்றெல்லாம் கவலைப் படுவாள். அதற்காக இப்போது இருந்தே அந்த பெண்ணை கஷ்டப் படுத்த வேண்டுமா ? அதுவும் முடியாது.

இப்போது உள்ள அம்மாக்களுக்கு இன்னொரு சிக்கலும் உண்டு. இந்த பெண் எப்படி விடுதியில் (ஹாஸ்டல்) தங்கி படிப்பாள் ? பிடித்த உணவு கிடைக்குமா ? எப்படி துணி துவைப்பாள் ? வேலைக்குப் போகிற இடத்தில் எங்கு தங்குவாள் ? எப்படி இந்த உலகை எதிர் கொள்ளுவாள் என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.

இந்த கவலை இன்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டே இருக்கிறது.

செல்லமாக வளர்ந்த ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீடு போகிறாள்.

போன இடம் அவ்வளவு பெரிய இடம் இல்லை. அவளின் பிறந்த வீடோ பெரிய பணக்கார வீடு. பால் சோறு தான், தங்கக் கிண்ணம் தான், பெரிய வீடு, வீட்டை அடுத்த தோட்டம் , தோட்டத்தில் மல்லிகையும், முல்லையும் பூத்து குலுங்குகிறது.

போன இடத்தில் சரியான சாப்பாடு கூட கிடையாது.

கட்டிக் கொடுத்த பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வர செவிலித் தாய் போகிறாள்.

அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

இந்தப் பெண் நம் வீட்டில் இருக்கும் போது தேனும் பாலும் கலந்த உணவை பொற் கிண்ணத்தில் ஏந்தி சாப்பிடு சாப்பிடு என்று பூ சுற்றிய குச்சியை வைத்து அவளை விரட்டிக் கொண்டு சென்றோம், பொற் சிலம்பு ஒலிக்க அங்கும் இங்கும்  பூ பந்தலுக்கு கீழே ஓடுவாள். சரியான விளையாட்டுப் பெண்ணாக இருந்தாள் . நீரோடும் இடத்தில் பரல் கற்கள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் நீர் சோறுதான் இருக்கிறது. அது கூட மூன்று  வேளையும் இல்லை. ஒரு பொழுது விட்டு ஒரு பொழுது உண்கிறாள். அப்போது கூட தந்தை வீட்டில் இருந்த செல்வச் செழுமையை நினைத்து வருந்தவில்லை. இந்த அறிவையும், கற்பையும் இவள் எங்கு கற்றுக் கொண்டாள் என்று அந்த செவிலித் தாய் வியக்கிறாள். பாடல்
   


பாடல்

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று 5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என 10
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

பொருள்

பிரசம் கலந்த = தேன் கலந்த

வெண் சுவை = சிறந்த சுவை உடைய

தீம் பால்  = சிறந்த பாலினால் செய்த உணவை

விரி கதிர் = ஒளி விடும்

பொன் கலத்து = பொன்னால் செய்த ஒரு பாத்திரத்தில்

ஒரு கை ஏந்தி = ஒரு கையில் ஏந்திக் கொண்டு

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் = ஒரு சிறிய குச்சியில், பூவை சுற்றி, அவளை அந்த கோலால் அடிப்பது போல விரட்டி

உண் என்று = சாப்பிடு என்று மிரட்டி

ஓக்குபு பிழைப்ப = ஓங்கி கொண்டு சென்றாலும், தப்பி ஓடிய அவள்

தெண் நீர் = தெளிந்த நீர் போல

முத்து அரி = முத்துக்கள் கொண்ட

பொன் சிலம்பு ஒலிப்ப = பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு ஒலிக்க  

தத்து_உற்று = தத்தி தத்தி ஓடி

அரி நரை கூந்தல் = அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்த கூந்தல்

செம் முது செவிலியர் = சிறந்த செவிலித்தாயார்

பரி மெலிந்து ஒழிய = பற்ற முடியாமல் 

பந்தர் ஓடி = பந்தலின் கீழ் ஓடி

ஏவல் மறுக்கும் = சொன்னதைக் கேட்க மறுக்கும்

சிறு விளையாட்டி = விளையாட்டுப் பெண்

அறிவும் ஒழுக்கமும் = அறிவும் ஒழுக்கமும்

யாண்டு உணர்ந்தனள்-கொல்  = எப்போது பெற்றாள்

கொண்ட கொழுநன் = கொண்ட கணவன்

குடி வறன்_உற்று என = குடும்பம் வறுமையில் உள்ள போது

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் = தன் தந்தை வீட்டில் கிடைத்த சிறந்த உணவினை நினைக்க மாட்டாள்

ஒழுகு நீர்= ஆற்றில் செல்லும் நீரில் (ஒழுங்கு நீர் = ஒழுங்காக செல்லும் நீர்)

நுணங்கு அறல் போல = மெல்லிய சிறு சிறு கூழான் கற்களைப் போல

பொழுது மறுத்து உண்ணும்  = ஒரு வேளை விட்டு மறு வேளை உண்ணும்

சிறு மதுகையளே =சிறிய இனிய    கைகளைக் கொண்டவளே


பெண்ணைப் பெற்ற அம்மாக்களே, கவலைப் படாதீர்கள். உங்கள் பெண்  எந்த சிக்கலையும் எதிர் கொண்டு சமாளிப்பாள். நீங்கள் சமாளிக்கவில்லையா ? வழி வழியாக இப்படித்தானே செய்து கொண்டு  வந்து இருக்கிறீர்கள். கவலைப் படாதீர்கள். விளையாட்டுப் பெண்ணாக இருக்கும் உங்கள் மகள் , அது விடுதியாக இருந்தாலும் சரி, வேலைக்குப் போகும் இடமாக இருந்தாலும் சரி, புகுந்த வீடாக இருந்தாலும் சரி  , நல்ல படி எதிர் கொண்டு சமாளிப்பாள்.

ஐயோ, நான் அவளுக்கு ஒண்ணுமே சொல்லித் தரவில்லையே என்று பயப்படாதீர்கள். 

இந்தப் பாடலில் செவிலி வியக்கிறாள் - அறிவும்,  ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்  என்று.

எப்படி இவற்றை படித்துக் கொண்டாள் ? யார் இவளுக்குச் சொல்லித் தந்தார்கள் ? நானோ அவளின் தாயோ சொல்லித் தரவில்லை. தானே கற்றுக் கொண்டு விட்டாளே என்று வியக்கிறாள்.

அது தான் பெண்.

மகா சக்தி.  அவள் அனைத்தும் நடத்துவாள். கவலையை விடுங்கள். 

Friday, July 12, 2013

புற நானூறு - உயர்ந்ததும் இழிந்ததும்

புற நானூறு - உயர்ந்ததும் இழிந்ததும் 



உலகிலேயே மிக அற்பமான செயல் ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பது. அதை விட அற்பமானது ஒன்று இருக்கிறது. இலட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு, பசிக்கிறது என்று யாசகம் கேட்டு வருபவனுக்கு ஒன்றும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுவது, பிச்சை எடுப்பதை விட கேவலமானது. சில்லறை இல்லை அந்தப் பக்கம் போய் கேளு என்று வயதான பாட்டியை, கை இல்லாத பிச்சை காரனை விரட்டுவது, அந்த பிச்சை எடுப்பதை விட கேவலம்.

உண்மைதானே. அவனிடம் இல்லை. உதவி கேட்க்கிறான். வைத்துக் கொண்டு பொய் சொல்லுவது உயர்ந்ததா தாழ்ந்ததா ?

கேட்காமலே ஒருவருக்கு வலிய சென்று உதவி செய்வது உயர்ந்தது. அதைவிட உயர்ந்தது எது என்றால், அப்படி தந்த உதவியை வேண்டாம் என்று சொல்லுவது.

அப்படிச் சொன்னவர் திருநாவுக்கரசர்.

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறவின் விளங்கினார்

அப்படி எல்லாம் வாழ்ந்த பரம்பரை நம் பரம்பரை.



ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

என்பது புறநானூற்றுப் பாடல்.

இதைப் பாடியவர் கழை தின் யானையார் என்ற புலவர்


Tuesday, April 30, 2013

புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய்


புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய் 


நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டு கொண்டே போகிறோம். ரிடையர் ஆனபிறகு படிக்க, பார்க்க என்று பல விஷயங்களை வைத்திருக்கிறோம்.

அது வரை இருக்க வேண்டுமே ? இறப்பு என்பது நம் கையிலா இருக்கிறது ? அல்லது அது சொல்லிக் கொண்டு வருமா ?

எது செய்ய வேண்டும் என்று நினைகிறீர்களோ, அதை செய்யுங்கள். தள்ளிப் போடாதீர்கள்

பாடல்

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்                   

நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு  

வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும் 

இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.


பொருள் 

Friday, April 19, 2013

புற நானூறு - பரிசு கிடைக்காத சோகம்


புற நானூறு - பரிசு கிடைக்காத சோகம்

அந்த காலத்தில் புலவர்கள் ரொம்ப துன்பப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வரும் ஒரே வருமானம் அரசர்கள் தரும் பரிசு தான். அரசனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நிர்வாகம், போர், வரி வசூல், வாரிசு சண்டைகள், உள்நாட்டு குழப்பங்கள் என்று. இதற்க்கு நடுவில் நேரம் ஒதுக்கி, புலவர் பாடும் பாடல்களை கேட்டு, அதற்க்கு பொருள் புரிந்து, பாராட்டி பரிசு தரவேண்டும்.

இங்கு ஒரு புலவர்....

புலவருக்கு கையில் காசு இல்லை. வறுமை. இதில் இவர் திருமணம் வேறு செய்து கொண்டு, பிள்ளை வேறு. இவரை நம்பி யார் பொண்ணு குடுப்பார்களோ தெரியவில்லை. பாவம் அந்த பெண். பிள்ளை பாலுக்கு அழுகிறது.. அவளிடம் பால் இல்லை தருவதற்கு. புலவர் பரிசு பெற்று வந்தால், உணவு சமைக்கலாம் என்று காத்து இருக்கிறாள். வீட்டில் சாப்பிட ஒன்றும் இல்லை. உணவை தேடி தேடி வீட்டில் உள்ள எலிகள் கூட இறந்து போய்விட்டன. 

அரசன் பரிசு தருவாதாய் இல்லை. பாட்டை மட்டும் கேட்டு இரசித்து விட்டு, கடைசி வரை பரிசு தரவே இல்லை. ஏன் என்று தெரியவில்லை. பரிசை கட்டி இருக்கிறான், ஆனால் தரவில்லை.  அவனுக்கு என்ன பொருளாதார நெருக்கடியோ. அல்லது, வேறு எதுவும் பிரச்சனையில் அவன் மனம் கிடந்து உழன்றதோ தெரியாது.

புலவர் புறப்பட்டுவிட்டார். ...எனக்கு பரிசு தரவில்லையே, உனக்கு வெட்கமே இல்லை என்று போகும் போது நாசுக்காக திட்டிவிட்டு போகிறார்.

பாடல்:


அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
குன்றுதூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்!நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்எனக்
கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்
கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை யானே; வைகலும்
வல்சி இன்மையின், வயின்வயின் மாறி
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே.


பொருள்:

Sunday, February 10, 2013

புற நானூறு - இலையின் கீழ் நத்தை


புற நானூறு - இலையின் கீழ் நத்தை 

எங்கு பார்த்தாலும் பயங்கர வெயில்.  சுட்டு எரிக்கிறது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு கிளை பரப்பி நிற்பதைப் பார்த்தால் மழை வேண்டி வான் நோக்கி கை விரித்து வேண்டுவது போல இருக்கிறது. கோடை மழை வந்த பாடில்லை. 

குளம் குட்டைகளில் நீர் வற்றி சேறும்  சகதியுமாய் இருக்கிறது. அந்த சகதியும் சூடாக இருக்கிறது. 

ஒதுங்க இடம் இல்லை. அந்த குளத்தில் ஒரு நத்தை வசித்து வந்தது வெயில் அதையும் வாட்டியது. வெயிலுக்கு பயந்து அதால் ஓட முடியாது. வெப்பம் தாங்கமால் தவித்தது. 

அந்த குளத்தில் முளைத்து இருந்த ஆம்பல் செடியின் இலையின் கீழ் மெல்ல ஊர்ந்து சென்று வெயிலின் இருந்து தன்னை காத்துக் கொண்டது. 

மன்னா, வறுமை என்னும் வெயில் என்னை வாடுகிறது. என்னால் வேறு எங்கும் செல்லவும் முடியாது. வீட்டுக்கு யாராவது வந்து விட்டால் அவர்களை  எப்படி உபசரிப்பது என்று தெரியாமல் நான் ஒளிந்து கொள்கிறேன் .

உன்னிடம் வந்து என் வறுமையை சொல்கிறேன். நீ என்னை ஆதரிப்பாய் என்று நினைக்கிறேன் 

பாடல்  


பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம்
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசாகு என்னும் பூசல்போல
வல்லே களைமதி அத்தை; உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே.


பொருள் 

பயங்கெழு மாமழை பெய்யாது = பயன் தரும் பெரிய மழை பெய்யாது 

மாறிக் = மாறி 

கயங் = குளம்

களி = குளத்தில் உள்ள சேறு களி  போல் ஆகி 

முளியும் = வேகும் 

கோடை ஆயினும் = கோடை ஆனாலும் 
,
புழற்கால் ஆம்பல் = துளையை உள்ள ஆம்பல் செடியின் 

அகலடை நீழல் =அகன்ற இலையின் நிழலில் 

கதிர் = சூரிய ஒளி 

கோட்டு = கொம்பு உள்ள 

நந்தின் = நத்தையின் 

சுரிமுக ஏற்றை = வளைந்து நெளிந்து செல்லும் ஆண்  நத்தை 

 நாகுஇள வளையொடு = பெண் சங்கொடு பகலில் கூடும் 

நீர்திகழ் கழனி = நீர் உள்ள  கழனிகளை , வயல்களை   

நாடுகெழு = உள்ள நாட்டை கொண்ட 

பெருவிறல் = பெரிய வெற்றிகளை கொண்ட 

வான்தோய் நீள்குடை = வான் வரை நீண்ட அதிகாரம் உள்ள 
,
வயமான் சென்னி = ஆற்றல் உள்ள சென்னி (அரசன் 

சான்றோர் இருந்த அவையத்து = சான்றோ உள்ள அவையில் 

உற்றோன் = உதவி வேண்டி வந்தவன் 

ஆசாகு = பற்றுதல் வேண்டி, உதவி என்று கேட்டு 
 
என்னும் பூசல்போல = பூசல் என்றால் அறிவித்தல். உதவி என்று அவையில் கேட்ட பின் 

வல்லே களை = விரைவாக அவன் துன்பத்தை களைய 

மதி அத்தை = அசை சொற்கள் 

உள்ளிய = நினைத்த 

விருந்துகண்டு = விருந்து வருவதை கண்டு 

ஒளிக்கும் = ஒளிந்து 

திருந்தா வாழ்க்கைப் = தவறு தான் என்றாலும் திருத்த முடியாமல் வாழும் வாழ்க்கை 

பொறிப்புணர் உடம்பில் தோன்றி = என்னுடைய மற்ற அவயங்கள் (பொறி) தோன்றி ஒழுங்காக இருந்தாலும் 
 
என் = என்னுடைய 

அறிவுகெட நின்ற = அறிவு மட்டும் தடுமாறுகிறது 

நல்கூர் மையே = காரணம் என் வறுமையே  (நல்  கூர்மை = வறுமை )

.
பாடல் எழதும் களம் எவ்வளவு முக்கியம் என்று இந்த பாடலில் இருந்து அறிய முடிகிறது.

வெயில் = வறுமை 

நத்தை = போராட வலிமை இல்லாத புலவன் 


ஆம்பல் இலை = அரசனின் இரக்கம் 

கொதிக்கும் குளம் = சுற்றமும் நட்பும்..நீர் இருந்தாலும் உதவி செய்ய முடியாத அவர்களின் வறுமை 

விருந்துக்கு ஒளிந்து கொள்ளுதல் = தமிழ் கலாசாரம். விருந்துக்கே ஒளிந்து கொள்வது என்றால் கடன் காரன் வந்தால் ?

அறிவு கெடுக்கும் வறுமை = யாசகம் கேட்பது தவறு என்று தெரிந்தாலும் அதை செய்ய தூண்டும் வரும் .

கொஞ்சம் கடினமாக இருந்தாலும் - வறட்சி, வறுமை, இவற்றை துல்லியமாக படம் பிடித்து காட்டும் பாடல். 

Tuesday, January 15, 2013

புற நானூறு - இன்றும் வரும் கொல் ?


புற நானூறு - இன்றும் வரும் கொல் ?

இன்னைக்கும் வருவார்களா ?

அவன் பெரிய கொடையாளி. எல்லோருக்கும் இல்லாருக்கும் உதவி செய்பவன். நல்ல வீரனும் கூட. ஒரு நாள், அவன் ஊரில் உள்ள பசுக்களை பக்கத்து நாட்டு அரசனின் படைகள் கவர்ந்து சென்று விட்டன. அதை கேள்விப் பட்டு, இவன் சண்டைக்குப் போனான். சண்டையில் இவன் பக்கம் வெற்றி பெற்றாலும், அவன் சண்டையில் இறந்தான். அவனை அடக்கம் பண்ணி, அடக்கம் பண்ணிய இடத்தில் ஒரு கல்லை நட்டு வைத்தனர். அந்த கல்லை பூவாலும், மயில் சிறகாலும் தடவிக் கொடுத்தனர். அப்போது அங்கே வந்த புலவர் ஒருவர் நினைக்கிறார், இவன் இப்படி இறந்து போனது ஊருக்குள் தெரியுமோ தெரியாதோ...இவனிடம் உதவி பெற இன்னைக்கும் வருவார்களா என்று துக்கம் இதயத்தை நிறைக்க நினைத்துப் பார்க்கிறார்.....

பாடல்


பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே.

பொருள்


Sunday, January 6, 2013

புற நானூறு - வராத குதிரை


புற நானூறு - வராத குதிரை 


இலக்கியங்கள் பொதுவாக அரசர்களையும், அவர்களின் வீர தீர பிரதாபங்களையும், அவர்களின் உறவுகளையும் பற்றியே பேசுகின்றன. அப்படி எழுதுவதால், அரசர்களிடம் இருந்து பரிசு கிடைக்கலாம். அரசியல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாதாரண மக்களை பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள். சொல்லப் போனால், போர்களினால் அதிகம் பாதிக்கப் படுவது சாதாரண மக்கள் தான். குடும்பத் தலைவன் போரில் இறந்து போனால், அந்த குடும்பம் என்ன பாடு படும். இறந்தவனின் மனைவி, அவன் பிள்ளைகள் என்று அவர்களின் துக்கம் சொல்லி மாளாது. 

போரும், அதனால் எப்படி சாதாரண மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் புற நானூறு பேசுகிறது. 

போர் முடிந்து விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் அவர்கள் வீட்டு ஆண்கள் வீடு வந்து சேர்ந்து விட்டார்கள். என் கணவன் இன்னும் வரவில்லை. குட்டி பையன் வேறு அப்பா எங்கே , அப்பா எங்கே என்று கேட்கிறான். இரண்டு பெரிய ஆறுகள் ஒன்றோடு ஒன்று கலக்கும் இடத்தில் உள்ள பெரிய மரம் எப்படி விழுந்து விடுமோ அது போல் அவனும் விழுந்து விட்டானோ ?
 
பாடல் 

Sunday, August 12, 2012

புற நானூறு - நாளாயினும் மாறாத விருந்தோம்பல்


புற நானூறு - நாளாயினும் மாறாத விருந்தோம்பல்


நாம் ஒரு வீட்டிற்கு விருந்தினராய் சென்றால், அவர்கள் உபசரிப்பு முதல் நாள் மாதிரி பின் வரும் நாட்களில் இருக்காது. 

நாள் ஆக ஆக உபசரிப்பின் அளவு குறைந்து கொண்டே வருவது இயற்கை.

அதுவும் நம்மோடு கூட நம் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்.

ஆனால், அதியமான் அரண்மனையில் முதல் நாள் உபசரிப்பு எப்படி இருந்ததோ அப்படியே எல்லா நாளும் இருக்குமாம்.

நாள் ஆக ஆக, பரிசு வாங்க சென்ற புலவர்களுக்கோ கொஞ்சம் பயம்.

எங்கே உபசரிப்போடு அனுப்பிவிடுவானோ ? பரிசு ஒண்ணும் கிடைக்காதோ என்ற சந்தேகம் வருகிறது. 

ஔவையார் சொல்கிறார், "ஒண்ணும் பயப்படாதீங்க...யானை தன் தும்பிக்கையில் எடுத்த உணவு அதன் வாய்க்கு போவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதி நீங்கள் அதியமானிடம் பரிசு பெறுவது..."

Monday, June 25, 2012

புறநானுறு - ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா


புறநானுறு - ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா


நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றதுபோல் ஒரு சில நல்லவர்கள் இருப்பதால் இந்த உலகம் இயங்குகிறது என்கிறது புறநானூறு.

யார் அந்த நல்லவர்கள் ? அவர்கள் என்ன செய்வார்கள்?

அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல், மற்றவர்களோடு பகிர்ந்து உண்பார்கள்.

கோபப்படமாட்டார்கள்.

மற்றவர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவார்கள்.

புகழுக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

பழி வரும் என்றால் உலகமே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.
தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பார்கள்.


Sunday, June 10, 2012

புற நானூறு - உடன் கட்டை ஏறுதல்


புற நானூறு - உடன் கட்டை ஏறுதல்


உடன் கட்டை ஏறுதல் என்ற ஒன்றை இன்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

கலாசாரத்தில், பண்பாட்டில் எவ்வளவோ உயர்ந்த ஒரு இனம் இது போன்ற ஒரு வழக்கத்தை கொண்டு இருந்தது என்று நினைத்து பார்க்கவே கடினமாக இருக்கிறது.

வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு விஷயம்.

பெண்களை ரொம்பவும் படுத்தி இருக்கிறார்கள், அந்த காலத்தில்.

உடன் கட்டை ஏறாத பெண்ணின் வாழ்க்கை ரொம்பவும் கடினமானதாய் இருந்து இருக்கிறது.

அந்த வாழ்க்கைக்கு, உடன் கட்டை எவ்வளவோ மேல் என்று ஒரு பெண்ணே சொல்வது, கொடுமையிலும் கொடுமை.

Friday, April 13, 2012

புறநானூறு - காதலும் வீரமும்




கணவனோ காதலனோ போரில் அடிபட்டு கிடக்கிறான்.

அவனை தேடி அந்தப் பெண் போகிறாள்.

நேரமோ இரவு நேரம்

அவன் அடிபட்டு கிடப்பதை பார்க்கிறாள்.

இறக்கவில்லை. ஆனால் அவனால் எழுந்து நடக்க முடியாது.

அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு துக்கம் பொங்கி பொங்கி வருகிறது. வாய் விட்டு அழ வேண்டும் போல இருக்கிறது. அழுதால் அந்த சத்தம் கேட்டு பக்கத்து காட்டில் இருந்து புலி ஏதும் வந்து விடுமோ
 என்று பயப் படுகிறாள். அவனிடம் சொல்கிறாள் "உன்னை தூக்கி செல்லலாம் என்றாள் நீயோ கனமான ஆளாய் இருக்கிறாய். என்னால் உன்னை தூக்க முடியாது. என் வளையல் அணிந்த கையை பிடித்துக் கொள், மெல்ல நடந்து அந்த மலை அடிவாரம் போய் விடலாம்" என்கிறாள்.

  காதலும் வீரமும் ததும்பும் அந்தப் பாடல்