கம்ப இராமாயணம் - அவதாரம் என்றால் என்ன ?
அவதாரம் என்றால் இறங்கி வருவது என்று பொருள்.
இறை நமக்காக இறங்கி வருவது அவதாரம்.
நம்மால் மேலே போக முடியாது. நம்மை ஏற்றி விட அவன் இறங்கி வர வேண்டும்.
இராமாயணம் பாடப் புகுந்த கம்பர், இராமனை இரு கை வேழம் என்கிறார் .
ஏன் ?
யானையின் குணம், தன் காலைப் பிடித்தவர்களை தலைக்கு மேல் தூக்கி விடுவது.
பாற்கடல் விட்டு இந்த மனித குலம் உய்ய மண் மீது வந்தது அந்த மன்.
எனவே இராமனை பற்றி சொல்ல வந்த கம்பர் "இரு கை வேழம்" என்றார்
இராமன் வந்ததின் நோக்கம் நம்மை மேலேற்றி விடுவது. எனவே "வேழம்"....